இலங்கைச் செய்திகள்


உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை

தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன்; எனக்கு வாக்களிக்க வேண்டாம்

தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவது நாமே வெளிநாடுகள் தருமென எவரும் நம்பக்கூடாது

கிழக்கில் இன, மத வேறுபாடின்றி தொல்பொருட்கள் பாதுகாக்கப்படும்

சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸாரால் முற்றுகை

திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05, புதன்கிழமை

நாடு முழுவதும் வாக்களிப்பு ஒத்திகை

வரைபடங்களுடன் 25 வருடங்கள் போராட்டத்தை நடத்தியவன் நான்

அரசுடன் பேச்சு நடத்த TNA தயார்



உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை




உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை-53 FSP Members Including Kumar Gunaratnam Granted Bail
அமெரிக்க தூதரகமும் அறிக்கை
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான குமார் குணரத்னம், துமிந்த நாகமுவ உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை-53 FSP Members Including Kumar Gunaratnam Granted Bail
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று (09) ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முயன்றபோது அங்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததுடன் 53 பேரை கைது செய்திருந்தனர்.
உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை-53 FSP Members Including Kumar Gunaratnam Granted Bail
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை-53 FSP Members Including Kumar Gunaratnam Granted Bail
இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு, இலங்கையர் உள்ளிட்ட அனைவருக்கும் காணப்படும் உரிமைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அது ஜனநாயக நடைமுறைக்கு அமைவானதெனவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை-53 FSP Members Including Kumar Gunaratnam Granted Bail

No comments: