பூத்த நெருப்பு - அறிவுமதி

.

என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று
கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று
சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்
பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்


முதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழா

.
குவின்ஸ்லாந்து பொற்கரையில் சங்கத்தமிழும் நவீன இலக்கியமும் சங்கமித்த எழுத்தாளர் - கலைஞர் ஒன்றுகூடல்
.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய  கலைச்சங்கத்தின் வருடாந்த  தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக  குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில்  கடந்த    27-08-2016 ஆம்                          திகதி  பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில்     Auditorium,   Helensvale  Library   மண்டபத்தில்     நடைபெற்றது.
இவ்விழாவை  இலங்கையிலிருந்து  வருகை    தந்த  மூத்த  எழுத்தாளர்  திருமதி.  தாமரைச்செல்வி மங்கல  விளக்கேற்றி  தொடக்கிவைத்தார்.  திரு. பவனேந்திரகுமாரின்   வரவேற்புரையுடன் ஆரம்பமான விழா  நிகழ்ச்சிகளில்,   மறைந்த   படைப்பாளிகள்,  கலைஞர்களின்  ஒளிப்படக்  கண்காட்சி,   கவியரங்கு,  கருத்தரங்கு,  பட்டி மன்றம், வாசிப்பு   அனுபவப்பகிர்வு,  மற்றும்  கலை  நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன.


மண(ன) முறிவு - Gett: The Trial of Viviane Amsalem

.

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?"
"வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை."
"மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?"
"இது விவாதத்திற்குரியது"
"என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?"
"இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்."
"கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று ஏதேனும்?"
"இல்லை"
"கணவர் ஏதாவது ஒரு வகையில் அவரது மனைவியை அச்சுறுத்துகிறாரா?"
"இல்லை"
"இவரால் இந்தப் பெண்ணின் வாழ்வில் ஆபத்து உண்டு என்று நம்புகிறாரா? "
"பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக் கொள்வதுமில்லை."
கணவன் இடைமறித்து: "நான் பேச விரும்புகிறேன். அவளுக்குத் தான் என்னுடன் பேச விருப்பமில்லை."
"எல்லாம் சரியாகத்தானே இருக்கு பிறகு விவாகரத்திற்கான காரணம்தான் என்ன?"
"அவள் தன் கணவரை விரும்பவில்லை."
-இப்படி நீதிமன்ற விசாரணையோடு துவங்குகிறது இஸ்ரேலிய திரைப்படமான Gett: The Trial of Viviane Amsalem.

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் "Melodic Rhythms" 04 09. 2016

.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு செப்டெம்பர் மாதம்
4ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெறுகின்றது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .

" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் " - முருகபூபதி

.
புகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு  கவிஞர்  அம்பித்தாத்தா  வழங்கும்  கொஞ்சும்தமிழ்
ஓடிடும்   தமிழருக்கு  அறைகூவல்  விடுக்கும்  மூத்த கவிஞர்

ஓடிடும்  தமிழா  நில்,  நீ  ஒரு  கணம்  மனதைத்தட்டு
 வீடு நின்னூருள்  சொந்தம்,  விளைநிலம்  நாடு  விட்டாய்
தேடியதெல்லாம்   விட்டுத்திசைபல  செல்லும்  வேளை
 பாடிய   தமிழை  மட்டும்  பாதையில்  விட்டிடாதே
ஓர்தலைமுறையின்  பின்னே  உன்னடி  உறவென்றேனும்
 ஊரிலே   அறியாப்பிள்ளை   உலகரங்கினில்  யாரோ
தாரணி மீதில்  நானோர்  தமிழனென்றுறுதி  செய்யின்
 ஊர்பெயர்   உடைகள்  அல்ல  ஒண்டமிழ்  மொழியே  சாட்சி

சாட்சியாய்  அமையுஞ்  சொந்தச்  செந்தமிழ்  மொழியே  முன்னோர்
 ஈட்டிய   செல்வம்  எங்கள்  இனவழிச் சீட்டாம்
ஏந்த  நாட்டிலே  வாழ்ந்தபோதும்  நடைமுறைவாழ்வில்  என்றும்
 வீட்டிலே   தமிழைப்பேணும்  விதிசெயல்  கடமை  ஐய !
வீட்டிலே  தமிழைப்பேசும்  விதி  செயல்  கடமை  ஆமாம்
 பாட்டனாய்  வந்து  பேரன்  பரம்பரை  திரிதல்  கண்டே
ஈட்டிய   செல்வம்  போச்சே,   இனவழி  போச்சே   என்று
 வாட்டு   நெஞ்சுணர்வை  வெல்ல  வழி   பிறிதொன்றுமில்லை.
                                                                                                      --   கவிஞர்  அம்பி

உலகச் செய்திகள்


சோமா­லி­யாவில் அர­சாங்கத் தலை­மை­ய­கத்தை இலக்­கு­வைத்து கார் குண்டுத் தாக்­கு­தல்கள்

இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் விபத்துள்ளானது

சோமா­லி­யாவில் அர­சாங்கத் தலை­மை­ய­கத்தை இலக்­கு­வைத்து கார் குண்டுத் தாக்­கு­தல்கள்

22/08/2016 சோமா­லி­யாவில் பகு­தி­யாக தன்­னாட்சி நிலவும் புன்ட்லாண்ட் பிராந்­தி­யத்தில் கலக்­கயோ நக­ரி­லுள்ள உள்ளூர் அர­சாங்கத் தலை­மை­ய­கத்தை இலக்குவைத்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தப்­பட்ட கார் குண்டுத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 10 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காயமடைந்­ துள்­ளனர்.

சிட்னி - சைவ மன்றம் - சமயச் சொற்பொழிவுகள் 3 & 4/09/2016



தமிழரின் தோற்றுவாய் - பகுதி 2 - கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

.
 
இந்த நவீன காலத்தில், பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை/வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], திராவிடர்கள் இந்தியா முழுவதும், அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது. சில பன்மொழியறிஞர்கள்,இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு திராவிடர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள்.

திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. உலகெங்கும் 85 திராவிட மொழிகள் தற்சமயம் உள்ளன. பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள். 


நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் அன்னை தெரசா

.


*உலகம் முழுவதும் அன்பு, கருணையை வாரி வழங்கிய முன்னுதாரண சமூக சேவகரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான அன்னை தெரசா (Mother Teresa) பிறந்த தினம் ஆகஸ்ட் 26. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*யூகோஸ்லேவியாவில், ஸ்கோப்ஜே என்ற நகரில் பிறந்தவர் (1910). ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பது இவரது இயற்பெயர். 8 வயதில் தந்தையை இழந்தார்.

*இவரது அம்மா மிகவும் தர்ம சிந்தனை கொண்டவர். இவர்கள் வீட்டில் எப்போதுமே குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிறைய பேர் சேர்ந்து உண்பார்கள். ‘மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு வாய் உணவைக்கூட உண்ணக்கூடாது’ என்பது அம்மா சொல்லிக்கொடுத்த பாலபாடம்.

இலங்கைச் செய்திகள்


ஜேர்மனியிலிருந்து கொழும்பு வர 15 மணிநேர தாமதம் விமானி பணி இடைநிறுத்தம்

நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதனை பல்கழைக்கழகத்தின் 10 மாணவர்ளுக்கு வகுப்புத் தடை  

நலன்புரி முகாம்களில் 1033  குடும்பங்களை   விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை  

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 

வடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை

கருப்பையா முத்துமணி ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்!--BY சி.கண்ணன்

.
கருப்பையா முத்துமணி (51)--மருந்து ஆராய்ச்சியில் அபார வெற்றி கண்டவர்: ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்!--BY சி.கண்ணன்

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த சாதனையாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மதுரைக்காரரான கருப்பையா முத்துமணி. உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ள இவரை மருத்துவ உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பையா முத்துமணி (51). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் ‘தி விஸ்டர் இன்ஸ்டிடியூட்’ என்ற மருத்துவ ஆராய்ச்சி கல்வி மையத்தின் தடுப்பு மருந்து மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சயாம் பர்மா மரண ரயில்பாதை - ஆவணப்பட திரையிடல் - வெளியீடு

.
தமிழினத்தின் அறியப்படாத மற்றுமொரு துயர்சார்ந்த வரலாற்று நிகழ்வின் ஆவணப்படத்தினை ’நிமிர்’ வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்விற்கான ஒத்துழைப்பினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் , புலம்பெயர் ஆய்வு மையம் வழங்கி இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, தொல்லியல், மொழியாய்வு, சூழலியல், கலை, இலக்கியம், படைப்புலகம் என விரிவான தளங்களில் தொடர் பங்களிப்பினை ’நிமிர்’ செய்யும்.

தனது ஆய்வுப்பணியின் நிமித்தம் துவங்கிய பயணத்தினை ஒரு ஆவணப்படம் மூலமாக கடுமையான உழைப்பின் ஊடாக நமக்கு கொடுத்திருக்கிறார், இயக்குனர் தோழர்.குறிஞ்சிவேந்தன் அவர்கள். கிட்டதட்ட 10 ஆண்டுகால உழைப்பினை இதன் ஆய்விற்காக அர்ப்பணித்திருக்கிறார்.

”...தமிழுலகம் அதிகம் அறிந்திடாதத் துயரம் தான், சயாம்(தாய்லாந்து)- பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர்-மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம், அங்கிருந்து ந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டிஷ்-ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை லட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.

எளிய தமிழில் Selenium – மின்னூல்

.

மென்பொருள் சோதனைத் துறையில், கட்டற்ற மென்பொருளான Selenium பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. பெருகி வரும் இணைய தளங்களை தானியக்கமாக சோதிக்க இதைப் பயன்படுத்தலாம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-selenium-in-tamil-ebook   என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.


JCC Old Boys Association Dinner Dance 29 .10. 2016


தமிழ் சினிமா - தர்மதுரை




Dharma Durai Movie Stills

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தர்மதுரை. அந்த படத்தின் டைட்டிலுடன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் தர்மதுரை.
ஏற்கனவே விஜய் சேதுபதி- சீனுராமசாமி கூட்டணியில் இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வராமல் இருக்க, பாசிட்டிவாக அடுத்த படத்தை தொடங்கி அதை இன்று வெளியே கொண்டு வர, படம் எப்படி வந்துள்ளது என்பதை பார்ப்போம்.


கதைக்களம்

விஜய் சேதுபதி ஊரில் குடித்துவிட்டு, குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி என அனைவரிடமும் திட்டு வாங்கி தன் அம்மா(ராதிகா)வின் அன்பை மட்டும் பெற்றுக்கொண்டு சுற்றி வருகிறார்.
ஒருக்கட்டத்தில் இவரை ஏதாவது செய்தால் தான் நாம் நன்றாக இருப்போம் என அண்ணன், தம்பிகள் முடிவெடுக்க, ராதிகா, விஜய் சேதுபதியை எங்காவது போய் பிழைத்துக்கொள்ள சொல்கிறார்.
அவரும் தனக்கு பிடித்த இடங்கள், பிடித்த நபர்களை பார்க்க செல்ல, இவரின் கடந்த கால வாழ்க்கையில் என்ன நடந்தது, ஏன் இப்படி ஆனார், யார் எல்லாம் இவர் வாழ்க்கையில் வந்தார்கள், எதை நோக்கி செல்கிறார் என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் சீனுராமசாமி.



படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி ஒன் மேன் ஷோ என்றுக்கூட கூறிவிடலாம், எங்கிருந்து தான் இப்படி ஒரு நடிப்பு வருகின்றதோ, சென்னை பையனோ, தேனி பையனோ, மதுரை பையனோ அப்படியே கதாபாத்திரத்தில் பொருந்துகிறார், அதிலும் குடித்துவிட்டு செய்யும் கலாட்டா, ஸ்டைலாக இங்கிலிஷ் பேசுதல் என செம்ம ஸ்கோர் செய்கிறார். தன் காதலை இழந்து அழும் இடத்தில் உருக வைக்கின்றார்.
தமன்னா, ஸ்ருஷ்டி என இருவரும் விஜய் சேதுபதியின் கல்லூரி நண்பர்களாக வருகிறார்கள், அவர்கள் விஜய் சேதுபதி வாழ்க்கையில் யார் என்பதை இயக்குனர் மிக நேர்மையாக காட்டியுள்ளார். எந்த இடத்திலும் பெண்களை குறைத்து பேசுவது போல காட்சிகளே இல்லை, ஒரு பெண்ணால் தான் ஆண்களின் வெற்றி உருவாகிறது என்பதை அழகாக காட்டியுள்ளார்.
ராதிகாவின் யதார்த்தமான நடிப்பு, சீனியர் நடிகை என்பதை அழுத்தமாக பதிக்கின்றார், எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் ஏதோ ஒரு பிள்ளை மீது அம்மாவிற்கு அதிக பாசம் இருக்கத்தான் செய்யும், அதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறார், மற்ற 3 பிள்ளைகள் கஷ்டப்படும் நேரத்தில் கூட விஜய் சேதுபதிக்காக அவர் அழும் காட்சிகள் எல்லாம் சிரிப்பை தாண்டிய யதார்த்தம்.
ஐஸ்வர்யா இந்த பொண்ணு என்னம்மா நடிக்குது என படம் பார்த்தவர்கள் அனைவரும் பேசிய வார்த்தைகள், சுருக்கமாக கூறவேண்டுமானால் லேடி விஜய் சேதுபதி. படத்தின் முதல் பாதி காமெடி, கலாட்டா, கல்லூரி பருவம் என ஜாலியாக செல்கிறது.
இரண்டாம் பாதி மிகவும் எமோஷ்னலாக செல்வதால் ஒரு சில இடங்கள் கொஞ்சம் படம் நீளமாக இருப்பதாக எண்ண தோன்றுகின்றது, யுவனின் இசையில் மக்க கலங்குதுப்பா செம்ம குத்து, ஆண்டிப்பட்டி பாடல் ரசிக்கும் ரகம், பின்னணி இசையிலும் கிராமிய மணம்.
சுகுமாரின் ஒளிப்பதிவில் அத்தனை யதார்த்தம், ஒவ்வொரு ஊரும் நம் கண்முன் வந்து செல்கின்றது, இயக்குனராக சீனுராமசாமி இதிலும் தன் பதிவை அழுத்தமாகவே பதித்துள்ளார்.

க்ளாப்ஸ்

விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி, ஐஸ்வர்யா, ராதிகா என படத்தில் நடித்தவர்கள் அனைவரின் யதார்த்தமான நடிப்பு.
பெண்களை உயர்த்தி காட்டியதற்காகவே பாராட்டலாம், எந்த ஒரு இடத்திலும் தவறாக சித்தரிக்கப்படவில்லை.
யுவனின் இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு, படத்தின் முதல் பாதி. படத்தின் வசனங்கள்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று இருக்கலாம், என்ன தான் விஜய் சேதுபதி தெரியாமல் அந்த பணத்தை தூக்கி வந்தாலும் இத்தனை நாட்கள் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என்ன லாஜிக் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் அது சூப்பர் ஸ்டாரின் மாஸ் தர்மதுரை, இது சீனுராமசாமி- விஜய் சேதுபதியின் கிளாஸ் தர்மதுரை. கண்டிப்பாக விஜய் சேதுபதி பயணத்தில் நாம் பங்கு பெறலாம்.
நன்றி cineulagam.