பாறையும் நதியும் - விழி மைந்தன்

.

நெடிதுயர்ந்த பாறை ஒன்று நின்றது.
சூரியன் ஒளியில்  இலங்கும் வெண் மஞ்சள் நிறமும்,  பளபளப்பான பக்கங்களும்,உயர்ந்த அழகிய உருவமுமாய்க் கம்பீரமாகவே நின்றது.
நதி ஒன்று ஓடி வந்தது.
சேறும்,  இலை தழைகளும்கடப்பம் பூக்களும்முல்லை மொட்டுகளும்பசுவின் கோமயமும்பச்சைப் புல்லின் வாசனையும் அள்ளி வரும் சிற்றாறு.
பாறையின் காலடியில்  வந்து இழைந்தது.
'வருகிறாயா என்னோடுதொலை தூரம் போகலாம்" என்றது.
பாறை சிரித்தது.
"பார்க்கவில்லையா என் உயரமும் கம்பீரமும்என் காலடியில் நெளியும் சிற்றாறு நீ! மூக்கைப் பொத்திக் கொள்ளத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால். நிற்பதானால்  என் காலடியில் நின்று நிமிர்ந்து பார்க்க உன்னை அனுமதிக்கிறேன். நான் உன்னோடு வருதல் நடக்காது" என்றது.
நதி புன்னகை செய்தது.
"இன்று நான் சிறு நதி தான். என்றாலும்என்றும் ஓடிக் கொண்டே இருப்பேன் -  தேங்குவதில்லை. அசைவே வாழ்க்கை. அசைவே பலம். அசைவே சக்தி. மாற்றம் ஒன்றே மாறாதது. வருகிறேன் பாறையே!"
நதி நகர்ந்தது.
மேலும் மேலும் தண்ணீர் சேர வேகம் பிடித்தது.
வெள்ளை நுரைகள் மின்னித் தெறித்திட  விரிவும் வலிமையும் கொண்டது.
பச்சை வயல்களை வழியெங்கும் பாய்ச்சிச் சென்றது.
பகலவன் ஒளியில் பாறை பளபளத்து மின்னிப் பகட்டாய் நின்றது.
ஆயிரம் ஆண்டுகள் சென்றன.
வெப்பமும் காற்றும் மழையும் தாக்கப் பாறை மண்ணோடு மண்ணாகி விட்டது.
நதியோ இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாதை வேறு. படுகை வேறு. பாசனம் செய்யும் வயல்கள் வேறு.  ஆனால் இன்னும் அசைகிறது. வாழ்கிறது.
வரலாற்றில் பல விதமாய் வாழலாம்.
பாறை மீது சிற்றுளி கொண்டு சிலையும் எழுத்தும் கல் வெட்டுமாகச்  சிற்பி செதுக்குவது ஒரு வரலாறு.
மாற்றம் ஒன்றே மாற்றம் இலாததாய், எதிலும்  எதனாலும் கட்டப் படாததாய், எவரின் காலிலும் தேங்கி நிற்காததாய், நெல்லுக்கும் புல்லுக்கும் நீரைத் தருவதாய் ஓடும் நதி ஒரு வரலாறு.
பாறையாய் இருப்போமாஇல்லை நதியாய் நடப்போமா?

முடிவுறாத முகாரி வெளியீட்டு விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

கடந்த 17 ம் திகதி (17.10.2015) சனிக்கிழமை செ.பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி என்ற கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா Homebush பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது. இந்த விழாவிற்கு எமக்கெல்லாம் பழக்கப்பட்ட இளைஞன் கிருஷ்ணா சத்தியமூர்த்தி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்து வரவேற்றார். வழமையாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் கிருஷ்ணா அன்று தனது சித்தப்பா செ.பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு தொகுப்பாளராக கடமையாற்றினார்.

விஜயாள் விஜேய், அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் அழகாக தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்ரேலிய தேசிய கீதமும் இசைத்தார்கள் 

திரு திருநந்தகுமார் தலைமையில் அரங்கம் ஆரம்பமானது மண்டபம் நிறைந்த கூட்டம். மேடைப் பேச்சாளரான திருநந்தகுமார் தனகிட்ட பணியை அழகாக திறமையாக கையாள்பவர். அன்றும் தனக்கும் திரு செ.பாஸ்கரனுக்கும் உள்ள உறவைக் கூறி பன்முகம் கொண்ட பாஸ்கரன் ஒரு கவிஞர் நாடக இயக்குனர் நடிகர் பத்திரிகையாளர் வானொலி தயாரிப்பாளர் அறிவிப்பாளர் என்று பாஸ்கரனைப் பற்றி கூறி விழாவை ஆரம்பித்தார்.

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 5- நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.
யோகினி இரத்தினசபாபதி , உஷா நாதன் 

எனது முதல் நாட்டிய நாடகமான இராமாயணத்தை பேராசிரியர் மௌனகுருவுடன் இணைந்து தயாரித்த அனுபவத்தை எழுதிய போது திரு மௌனகுரு ஒரு குறிப்பு எழுதியிருந்தார் "கார்த்திகாவின் பணி முக்கியமானவை கார்த்திகாவோடு இணைந்தது பணி புரிந்த அந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கார்த்திகா தொடக்கி வைத்த மரபு தொடராமைக்குரிய காரணம் ஆராயப் பட வேண்டியது". நான் 1974 ஆம் ஆண்டு வடமோடி ஆடலின் வலுவை உணர்ந்து அதை பார்த்தவுடன் பரதத்துடன் இணைத்து இராமாயண நாட்டிய நாடகமாக்கி இன்று 41 வருடங்கள் கடந்து விட்டன. இராமாயண நாட்டிய நாடகம் பெற்ற வெற்றி பற்றி இன்னும் பேசப்படுகிறது. பலதடவை மேடை ஏறி இலங்கையில் பிரபலமானது. பின் சென்னையிலும் ஆஸ்திரேலியாவில் இரு தடவை மேடை ஏறி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன் எனது தங்கை உஷா நாதனால் இலங்கையில் தொடர்ந்து இருதடவை மேடையேற்றப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் எமது சொத்தான வடமோடி ஆடலின் வலுவை அழகை எம்மவர் உணரவில்லை. தாமாடும் பரதத்துடன் இணைக்க விரும்பவில்லை. ஏன்? இதற்கான விடை நான் எதற்க்காக வடமோடியை கையாண்டேன் என்பதில் தான் உண்டு.

யார் அந்த தேவதை Auburn Reading Cinima வில்

.எதிர் வரும் 31 ம் 1 ம் திகதிகளில் யார் அந்த தேவதை Auburn Reading Cinima வில்


திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
தாமரைக்கு  ஒரு  செல்வி  -  வன்னிமக்களுக்கு  ஒரு வன்னியாச்சி.
ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியில்  போர்க்கால இடப்பெயர்வு  வாழ்வை   அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை
' முள்ளும்  மலரும் ' மகேந்திரனின்  இயக்கத்திலும் தாமரைச்செல்வியின்   படைப்பு  குறும்படமாகியது.


 எங்கள்    நீர்கொழும்பில்  நான்  அறிந்தவரையில்  இற்றைக்கு  70 ஆண்டுகளுக்கு  முன்னர்  தோன்றிய  முதலாவது  சைவஉணவகம் கணேசன்  கபேதான்  நீர்கொழும்பில்  வீரகேசரி  பத்திரிகையின் முதலாவது   ஏஜன்ட்.   வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே   இன்றும்   இருக்குமானால்  அதன் வயது  75.
இந்த கணேசன்  கபேயில்தான்   ஆளுமையும்   ஆற்றலும்  நிரம்பப்பெற்ற  சாதனைப்பெண்மணி      தாமரைச்செல்வியின்  முதல்  நாவல் -  வீரகேசரி  பிரசுரம்  சுமைகள்  எனக்குக்  கிடைத்ததுஅதனை தாமரைச்செல்வி   எழுதியகாலத்தில்   அவருக்கு 24  வயதுதான்  என்ற தகவல்   நண்பர்  புலோலியூர்   ரத்தினவேலோன்  எழுதிய குறிப்பிலிருந்து   தெரிகிறது.
சுமைகள்   நாவலுக்கு   பின்னாலும்  ஒரு  கதை  இருக்கிறது. அதனைப்பின்னர்  சொல்கின்றேன்.
1970 களில்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்தபொழுது , இந்தியாவிலிருந்து புற்றீசலாக   வந்து  குவிந்த  தரமற்ற  வணிக  இதழ்கள்  மீது கட்டுப்பாடு  வந்ததை  வீரகேசரி  நிறுவனம்தான்  தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டு  வீரகேசரி  பிரசுரங்களை  வெளியிட்டது.
முதலில்  திருகோணமலையிலிருந்து  எழுதிக்கொண்டிருந்த  நா. பாலேஸ்வரியின்  பூஜைக்கு  வந்த  மலர்  வெளியானதாக  நினைவு. அதனைத்தொடர்ந்து  இலங்கையின்  முன்னணி  எழுத்தாளர்கள் பலரின்  நாவல்கள்  வீரகேசரி  பிரசுரமாக  வந்தன.   செங்கை ஆழியான்,   டானியல்,  பால மனோகரன்  (நிலக்கிளி)  தெணியான், அருள். சுப்பிரமணியம்,   செ. கதிர்காமநாதன்,  ..இராசரத்தினம், யாழ்நங்கை,  செம்பியன் செல்வன்,   தெளிவத்தை ஜோசப்.... இவ்வாறு சுமார் 60  இற்கும்  மேற்பட்ட  படைப்பாளிகளின்  நாவல்கள் வெளியானது.

யாழ் மத்திய கல்லூரியின் இரவு உணவு நடன நிகழ்வு 31 10 15

.












தன்னிகரமற்ற தனி லயம் - அம்ஷன் குமார்

.

தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணப்படத்தை இயக்கியவர்‏

ஈழத் தமிழர்களிடையே முதன்மையான செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர் என்று சொல்ல வேண்டுமென்றால் அவர் பிரபாகரன் தான். பிரபாகரனை வழிபடுபவர்கள் அவரது செயல்களை நடுநிலையுடன் அவதானிப் பவர்கள் மட்டுமின்றி அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட அவர் தங்களுக்கான போராட்டத்தை எதிரிகளால் தவிர்க்கவியலாத வண்ணம் தோற்றுவித்தவர் என்பதில் மாறுபாடான கருத்துகள் கொள்வதில்லை. அவருக்கு அடுத்தாற்போல் ஈழத்தமிழர்களின் பேரபிமானத்திற்குரிய மனிதர் யார்? உடனடியாக அவர்களுக்குப் பதில் தட்டுப்பட்டாலும் சற்று நேரம் எடுத்துக்கொண்டு பல ஆளுமைகளை மனதில் கொண்டுவந்து நிறுத்தி அசைபோட்ட பின்னரும் முதலில் யாரை நினைத்தார்களோ அவரையே மொழிவார்கள். அவர் அரசியல் தலைவர் அல்லர். மாபெரும் கவிஞரோ எழுத்தாளரோ அல்லர். சினிமா, நாடகப்பிரபலமும் அல்லர். மதகுருவும் அல்லர். அவர் தவில் இசைக்கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி.
ஒரு தவில் இசைக்கலைஞர்மீது இவ்வளவு அன்பையும் ஈடுபாட்டையும் காட்ட முடியுமா என்று வியக்கும்வண்ணம் உள்ள ஈழத் தமிழர்களின் செயல்கள் பிரமிப்பை ஊட்டுகின்றன. இவ்வள விற்கும் அவர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். ஈழத்தமிழர்களிடையே மட்டுமல்ல தமிழக கர்நாடக இசைப் பிரியர்களும் அவருக்குத் தனிப்பட்டதொரு இடத்தை அளித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அது எத்துறை யாகினும் சரி. தங்களுக்கு ஈடானவர்கள் அல்லது தங்களை விட சாதனை புரிந்தவர்கள் என்று ஒரு சில 

வெங்கட் சாமிநாதன் - அஞ்சலி. - முருகபூபதி

.
இலக்கிய   முகாம்களில்   பேசுபொருளான   அந்த ஆளுமையின்  மதிப்பீடுகள்    காலத்தையும் வென்றுவாழும்.
   
  இந்தப்பதிவு   எனது  வழக்கமான  திரும்பிப்பார்க்கின்றேன் தொடருக்குள்  வருகிறதா...? அல்லது  எழுத  மறந்த  குறிப்புகளுக்குள் வருகிறதா ....?  அப்படியும்  இல்லையென்றால்  வெ.சா.வுக்குரிய அஞ்சலியா....?  என்பதும்  தெரியாமல்   எழுதுகின்றேன்.
" வாழ்க்கையில்  தனக்கும்  மற்றவர்களுக்கும்  பயனுள்ளவாறு  வாழ்ந்த  ஆளுமைகளின்  மறைவை   கண்ணீர்விட்டு  கதறி  அழுது துயரம்  பகிராமல்,  அவர்களை   மனதிலிருத்தி  அவர்தம் நினைவுகளை   நாம்  கொண்டாடவேண்டும் "  என்று   எனது  நண்பர் மாவை  நித்தியானந்தன்   ஒரு  தடவை   சொன்னார்,
ஆம்.... வெங்கட்  சாமிநாதன்  என்ற  ஆளுமையும் கொண்டாப்படவேண்டியவர்.
இலங்கையில் 1970 - 1975  காலகட்டம்  அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையும்   இனநெருக்கடிக்கானதும்  சிங்கள   இளைஞர்களின் கிளர்ச்சிக்கானதுமான   அதிமுக்கியத்துவம்   பெற்றிருந்தது.

திருவெம்பாவையின் முக்கியத்துவம் - எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்

.

மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி -
சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்." பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.
     மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதிவரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும்.இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்பதால் அக்காலங்களில் காலை யில் எழுந்து குளித்து,அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

மலரும் முகம் பார்க்கும் காலம் 18 - தொடர் கவிதை

.

இலங்கை வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் திரு. மதுரகன் செல்வராஜா அவர்கள். இவர் கொழும்பில் மருத்துவ ஆராய்சி – ஆய்வுப் பிரிவில் பணி செய்து வருகிறார்.


எத்திப் பிழைக்கிறது வானம்
ஏதோ ஒரு நாள் வரப்போகும் மழை எண்ணி
பொத்தி மனதுள் பதுக்கும் புன்னகைகள் விரட்டியபடி
இன்னுமோர் தலைமுறையையும் இவ்வாறே
எத்தியே பிழைக்கிறது வானம்

வரண்டுபோய்ப் புழுதி சேர்ந்த வயல்களின் ஓரங்களில்
காய்ந்து போனதில் மீந்திருந்த கடைசி முட்புதர்கள்
எல்லா வளங்களும் இழந்து நின்ற நிலங்களுள்ளும்
என்றோ வரும் மழை எண்ணிப் புதைந்திருக்கும் மண்புழுக்கள்

விளக்குகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்காய்
விட்டில்கள் தேர்தல் நடத்தின..
பறந்து பறந்து கருகி வீழ்ந்து
விளக்கின் வீரியத்தை விளக்கின சில
இன்னும் பறப்பதற்காய் இளைய குஞ்சுகளை
தயார் செய்து கொண்டன பல

கருகும் தலைமுறைகள் விடுதலை ஆகும் நாளொன்றில்
என் மலரும் முகம் பார்க்கும் காலம் வரும் - அதுவரை
கனவுகளுடன் கதைகளுடன் புழுகுகளுடன்
பொய்யான புன்னகைகளுடன்
வீணாகிப்போகும் எம்வாழ்வும் எம்சாவும்..


அந்த நாட்களின் ஆத்மாவே வேறுதான்!‏

.
மூத்த இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘காந்தி’ கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது. அக்டோபர் 21 அன்று காலமான வெங்கட் சாமிநாதனை நினைவுகூரும் விதமாக வெளியிடப்படுகிறது.

பிற்காலத்தில் சொல்லிப் பெருமைப்பட வேண்டிய விஷயம், மகாத்மா காந்தியைப் பார்க்கப்போவது.
எனக்குச் சரியாக ஞாபகமில்லை. 1944-ம் வருடமாக இருக்க வேண்டும். அக்கால ஞாபகங்கள் கொண்ட காந்தியவாதிகள்தான் சரியாகச் சொல்ல முடியும். நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சின்ன ஊர், நிலக்கோட்டையில் படித்துவந்தேன்.
காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில்தான் மதுரை செல்லப்போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள். ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பூங்காவில் ஒரு ரேடியோ பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்குச் செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாகப் பரவியிருக்கவில்லை. அந்தப் பூங்காவில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ்ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோ பெட்டி இருந்தது. அதில் பாட்டுகளுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதைச் சொல்லிச் சிரித்துவிட்டுப் போவார்.
காந்தியும் யோசனைகளும்

சிங்கப்பூரில் காண்டவதகனம் - - ஹாஜா முகைதீன் - சிங்கப்பூர்

" இந்தோனேசியாவின்  காட்டுத்தீயின்  புகைமண்டலம்   சிங்கப்பூரையும்  மலேசியாவையும்  வந்தடைகிறது.
இலங்கைப்பேராசிரியர்   மௌனகுருவின்  காண்டவ  தகனம்   மகாபாரதக்காட்டுதீயின்  சுவாலையை  கூத்தாக காண்பிக்கிறது."
சிங்கப்பூரில்  காண்டவதகனம்   காணொளிக்  காட்சியில் கலாரசிகர் பட்டாபிராமன் உரை.
                                                          



" இந்தோ. (இந்தோனேசியாகலிமந்தானில்   எரியும்  தீ,   சிங்கப்பூரிலும், மலேசியாவிலும்  புகை மூட்டத்தை  கிளப்பிவிட,   நாம்  அரசாங்க  இலவச மருத்துவ    சிகிச்சையும்  பெற்று  , முகக்  கவசம்  அணிந்து  உலா  வந்து கொண்டிருக்கிறோம்.   இந்தோனேசியாவின்  முகவாய்க்  கட்டையைப் பிடித்து " செல்லக் குழந்தாய்  உங்கள்  காட்டைக்  கொளுத்தாதே.... எங்களுக்கு  இங்கே  மூச்சு முட்டுகிறது"    அயல்நாடுகளும்   கெஞ்சிப் பொழுதைப் போக்குகின்றன.   ஆனாலும்  என்ன  பெரியண்ணனுடன்  மோதக்கூடாது என்ற  தயக்கம்தான்  அந்தக்கெஞ்சல்.
ஆனால்  - இலங்கைப் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம்   இன்று   நேற்று  அல்ல,   மகாபாரதக்காலத்திலேயே  தொடங்கிவிட்டது என்று   தமது  கூத்து  ஆற்றுகையின்  மூலம்  எமக்கு  காண்பிக்கின்றார். அத்துடன்   எமக்கு  ஒரு  செய்தியையும்  தருகின்றார்.
தானும்   பேசி   மக்களையும்  பேசவைப்பவன்தான்   கலைஞன். அக்கலைஞனுக்குரிய  தார்மீகப்பணியை   இலங்கைப்  பேராசிரியர் மௌனகுரு  நீண்டகாலமாக  மேற்கொண்டு  வருகிறார். "