மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்

.
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை 
எத்தனை தடவை சொன்னேன்,
அந்த கறுப்புப் பை கவனம் என்று  
மனைவி கவலைப்பட்டாள்,
அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே...
காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் 
அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள்
இன்னும் 10 நாட்கள்  கடற்கரையில்
உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ...
இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு
தொலைபேசி செய்தியில் மூழ்கிப்  போனான்
நாளைய நாள் கண் முன்னே நடமாடியது,
அலுவலகத்தில் முக்கிய மூன்று  சந்திப்பு,
நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும்
அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ...     
முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார்,
நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் 
மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்,
பேரக் குழந்தைகளை கவனிப்பதே  அவள் வேலை
அடுத்த வாரம்  அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும்,
உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ...
  

சிட்னி சைவமன்ற நிதி உதவி இராபோசன நிகழ்வு

.

படப்பிடிப்பு ஞானி 



திரும்பிப்பார்க்கின்றேன் -- முருகபூபதி

.
ஞாயிற்றுக்கிழமை  போய்விடுவேன்  என்றார்   
கலா. பரமேஸ்வரன்   அவ்வாறே  போய்விட்டார்
ஒரு    குடும்பத்தில்          ஆழமாகவே  பதிந்த   அந்த       கறுப்பு   ஜூலை

            
  முப்பத்தியொரு  ஆண்டுகளுக்கு    முன்னர்    இதே    ஜூலை   மாதம்   22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு    யாழ்ப்பாணம்    பலாலி   வீதியில் பரமேஸ்வரா சந்தியில்    வந்துகொண்டிருந்த     இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணிவெடித்தாக்குதல்    நடந்தது.
அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர்    கொல்லப்பட்டதன்    எதிரொலியை  தமிழர்கள்    இன்றும்    கறுப்பு   ஜூலை  என்று அனுட்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையின்   அரசியலிலும்    அங்கு வாழ்ந்த   பூர்வகுடி   தமிழ்    மக்களினதும்    வாழ்வில்    பெரும்    மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட   அந்த  1983   ஜூலை   மாதத்தில்     யாழ்ப்பாணம் பலாலிவீதியில்    ஒரு   இல்லத்தில்    அந்த    கறுப்புஜூலை   ஆழமாகவே பதிந்துவிட்டது.
அந்தவீட்டிலிருந்த   முதியவர்    மற்றும்    குடும்பத்தலைவர்    தவிர்ந்த ஏனையவர்களை    வேரோடு    பிடுங்கி    எறிந்து    தேசாந்தரிகளாக்கியது.
அப்படியென்றால்  -  அந்த    முதியவரும்    குடும்பத்தலைவரும்    என்ன ஆனார்கள்?    அவர்களின்    உடல்களை    குண்டுகள்    துளைத்து    அவர்கள் பரலோகம்    பயணித்தார்கள்.
எனது   இனிய    நண்பர்   கலா. பரமேஸ்வரன்   இன்று (24-07-1983)    யாழ்ப்பாணம்   பலாலிவீதியில்    கொல்லப்பட்ட   31    ஆவது    ஆண்டு நினைவு  தினம்.  
அந்தத்துயரமே  இந்தக்கறுப்பு ஜூலையில்    இன்றைய  நாளில்    எனது துயர்பகிர்வு.
அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை - போயாதினம்.    தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள்    அனைவரும்   சில்   அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.

சங்க இலக்கியக் காட்சிகள் 17- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


விரைந்து வா! அவளை மணந்து வாழ்!

சோழநாட்டிலே ஆர்க்காடு என்று ஒரு பேரூர் இருந்தது. சோழமன்னனின் அட்சிக்குட்பட்ட அந்த ஊரிலே வீதிகளில் குடங்களிலே வைத்து கள் விற்பார்கள். கள்ளின் சுவையைப் பருகக் குடங்களிலே மொய்த்த வண்டுகள் அந்த இடத்தை விட்டு அகலாது எப்போதும் ரீங்காரமிட்டபடி குடத்தைச்சுற்றியே பறந்து கொண்டிருக்கும் அல்லது குடத்திலேயே அமர்ந்து கொண்டிருக்கும். கள் குடிப்பவர்கள் போதையில் எப்போதும் சத்தம்போட்டு ஆரவாரம் செய்துகொண்டேயிருப்பார்கள். வீதிகளிலே தொடர்ந்து தேர்வண்டிகள் சென்றுகொண்டிருக்கும். அவற்றிலிருந்தும் இரைச்சல் ஒலி எழுந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆர்க்காடு என்னும் ஊரிலேää அவனும் அவளும் கருத்தொருமித்த காதலர்கள்.

ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் ஊருக்கு அயலில் உள்ள புன்னைமரச்சோலைக்கு வரும்படி அவளை அவன் அழைத்தான். அவள் மறுத்தாள். அவன் வற்புறுத்தினான். அவள் தயங்கினாள். தோழியையும் அழைத்துக்கொண்டு வரலாம் என்று தன் கோரிக்கையில் சற்று இறங்கினான். அவள் மயங்கினாள். பின்னர் இணங்கினாள். ஆரம்பத்தில் சிலநாட்கள் தோழியுடன் வந்த சோலையிலே அவனைச் சந்தித்தாள். அவர்களைத் தனிமையில் விட்டுவிட்டுத் தோழி நழுவிக்கொள்வாள்.

இலங்கைச் செய்திகள்


இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு பதில் மனு

ஜி.ஏ.சந்திரசிறி மீண்டும் வட மாகாண ஆளுநராக பதவியேற்றார்

நாய் குரைத்து சேவல் கூவியதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த அமெரிக்கர்: யாழில் சம்பவம்

பெண் மீது அசிட் வீச்சு

டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள்


'மாருதி' விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் 10.08.14

.
அன்பான தமிழ் முரசு நண்பர்களுக்கு எம் பணிவான வணக்கங்கள்,

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி' விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.

தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக,
அவுஸ்திரேலிய மண்ணில் தன்னலமற்ற சேவையாற்றிய ஒருவரை,
தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்து, அவுஸ்திரேலியக் கம்பன் கழக
உயர் விருதான 'மாருதி' விருதினை, 2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் கம்பன் விழாக்களில் வழங்கி வருகின்றோம்.

மேற்படி விருதுக்கான பரிந்துரைகள், அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடமிருந்து எதிர்வரும் 10-08-2014ஆம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கப்படுகின்றன.
பரிந்துரைகளை அனுப்பி வைக்குமாறு உங்கள் உதவியையும் நாடி நிற்கின்றோம்.

அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூக அமைப்புகளோ அல்லது தனிநபரோ பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். பரிந்துரைக்கப்படுபவர் தெரிவிற்கான வரையறைகளை பெரிதும் திருப்திப்படுத்தக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
தயவு செய்து பரிந்துரைப்பிற்கான வரையறைகளுக்கும், பரிந்துரைப் படிவத்திற்கும் கீழ்காணும் ‘தமிழ் அவுஸ்திரேலியன்’ இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்க:www.tamilaustralian.com.au/maruthi/maruthi.pdf

மேலதிக விபரங்களுக்கு:
மின்னஞ்சல் - kambanaustralia@kambankazhagam.org
செல்லிடப்பேசி இல - 0430 176 547 | 0432 796 424 | 0430 173 918

எம் கழகத்திற்காக உங்கள் தொடர்ச்சியான ஆதரவை நாடி நிற்கின்றோம். 
இச்சந்தர்ப்பத்திற்கு எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து அமைகின்றோம்.

-அவுஸ்திரேலிய
க் கம்பன் கழகத்தினர்-
"கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்"

தாயகத்தைப் பிரிந்த நாள் முதல் கதியற்றவர்களாகி ..........

.

தாயகத்தைப் பிரிந்த நாள் முதல் கதியற்றவர்களாகி அகதி எனும் பெயரோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேற்குலகம் எமைக் கை நீட்டி அழைத்து நேசக் கரத்துடன் தம் வாசற் கதவுகளை எமக்காகத் திறந்து வைத்திருந்தாலும் நாம் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள் எண்ணில் அடங்காது. தாயகத்தையும், எம் தாய் மண்ணையும் பிரிந்த நாள் முதல் என்றும் நெஞ்சில் ஊர் நினைப்பது வாட்ட எம் நாட்களை நகர்த்துகின்றோம். 

புலம் பெயர்ந்தாலும், நிலம் மறவாத இளையவர்களின் படைப்பாக... எம் கடந்த காலத்தையும். இக் காலத்தில் அவலப்படும் அகதித் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கையினையும் உரைக்கும் வகையில் "Boat Beat' எனும் Single's இசைத் தொகுப்பினைஅவுஸ்திரேலியாவில் இருந்து இப் படைப்பினை உங்கள் முன் சமர்பிக்கின்றோம். . 
இப் படைப்பின் தேவை உணர்ந்து... இதனை ஒவ்வோர் தமிழனும் அறிந்து கொள்ளும் வண்ணம் தங்களின் ஊடகங்களில் பிரசுரித்து எமக்கு நல்லாதரவு நல்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.  

இங்கே அழுத்தி பாடலைக் கேளுங்கள்



மகேந்திரன் பிறந்தநாள்: ஜூலை 25 - யதார்த்த சினிமாவின் ஆசான்

.

“இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன்.
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன் (1965), ஆலயம் (1967), புன்னகை (1971) எனச் சில. 1978-ல் முள்ளும் மலரும் என்ற மிகச் சிறந்த படைப்பின் மூலம், யதார்த்தப் படங்களுக்கு ஒரு சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இன்று பிறந்தநாள் காணும் அவரை யதார்த்த சினிமாவின் ஆசான் என்று வாழ்த்துவது தகும்.
டைரக்டர் எரி வான் ஸ்ட்ரோஹிம் 1920-களில் (படம்: தி கிரீடு, 1923) தொடங்கிவைத்த பாணி, ஒரு கற்பனைக் கதையை, யதார்த்தப் பாணியில் படமாக்குவது. ஏறத்தாழ 55 வருடங்களுக்குப் பிறகு, அதைத் தமிழ் சினிமாவில் கடைப்பிடித்து, தொடர்ந்து 12 படங்களை அதே பாணியில் தந்தவர் மகேந்திரன்.
மகேந்திரன் 1977வரை கதை-திரைக்கதை-வசனகர்த்தாவாகப் பல படங்களில் பணியாற்றியவர். தங்கப்பதக்கம் (1974), வாழ்ந்து காட்டுகிறேன் (1975), வாழ்வு என் பக்கம் (1976) போன்ற வெற்றிப் படங்கள் இதற்கு உதாரணங்கள். பெயர் பெற்ற வசனகர்த்தாவான அவர் இயக்கிய முதல் படத்தில் வசனங்களே குறைவு என்பதே அவர் எப்படிப்பட்ட படம் எடுக்க ஆசைப்பட்டார் என்பதை விளக்குகிறது.

ராஜேந்திர சோழனோடு சிலமணித்துளிகள்

.
நினைவு தெரிந்து, முதன்முதலில் கங்கைகொண்ட சோழபுரம் பற்றி கேள்விப்பட்டது அத்தை சொல்லிதான். தஞ்சாவூர் கோவிலைவிடவும், அவரை ஈர்த்தது, கங்கை கொண்ட சோழபுரம்தான். அவருக்கு மட்டுமில்லை, மாமா, ஆயா என்று  பெரும்பாலும் , கங்கைகொண்ட சோழபுரம் ‍ கோவில் மட்டுமில்லை, ஊரும் அழகு என்றே சொல்வார்கள்.  'அமைதியான இடம், தஞ்சாவூரை விட பெரிய கோவில், ரொம்ப அழகான கோவில்' என்பதே அபிப்ராயம். அவர்களை பொருத்தவரை, பொதுவான எண்ணம்.
 'ராஜேந்திர  சோழன் ' பெரிதும் பேசப்படவில்லை என்பதே!
அதுவும் உண்மைதான்....தஞ்சை பெரியகோவிலை பற்றியும், ராஜ ராஜ சோழனைப்பற்றியும்தான், நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் பற்றியெல்லாம் வரலாறு பாடத்தில் வந்தாலும் ஒரு சிறு பத்தி அளவுக்குத்தான். அதில், அவர்களது பிறபெயர்கள், போர்கள் பற்றிதான். ராஜேந்திர சோழனின் இன்னொரு பெயர்  'கடாரம் வென்றான்' என்று மட்டும் தெரியும். ஏனென்றால், ஒருவேளை தேர்வில், 'கடாரம் வென்றான் பற்றி குறிப்பு வரைக'  என்று வரலாம் என்பதால்!

உலகச் செய்திகள்


பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்

விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களது புகைப்படங்கள் வெளியீடு

இஸ்ரேல் - காஸா பிராந்தியத்தில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு - மோதல்களில் பலியானவர்கள் தொகை 500 ஆக உயர்வு

விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கருதப்படும் 'பக் ஏவுகனை" ரஷ்யாவுக்கு கடத்தும் புகைப்படங்கள் வெளியீடு

விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

இஸ்ரேலியர்களால் சுட்டுக் கொல்லப்படும் பாலஸ்தீனத்தின் அப்பாவி இளைஞன்...

தாய்வானில் கோர விமான விபத்து: 51 பேர் பலி

நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்

அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி

உக்ரேனிய பிரதமர் பதவி விலகல்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1 =எஸ்.எல்.வி. மூர்த்தி

.
அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி?


நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன?

கி.மு. 1700 – 1100 காலகட்டத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ரிக் வேதம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது தெரியுமா?

படைப்பு எப்படி, எப்போது, எங்கே வந்தது என்று யாரால் சொல்லமுடியும்?
கடவுள்களே சிருஷ்டிக்கு அப்புறம்தானே உருவானார்கள்?
சிருஷ்டி எப்போது, எப்படித் தொடங்கியது என்று யாருக்குத் தெரியும்?
யாரால் நிச்சயமாகச் சொல்லமுடியும்?

பட்டுகோட்டையில் இடம்பெற்ற "இதுவரை" புத்தக வெளியீட்டு விழா

.
கனடாவில் இருந்து வெளி வரும் கனடா உதயன்  வார இதழின்  ஆசிரியர் திரு ஆர்.எ ன். லோகேந்திர லிங்கம் அவர்கள் தொகுத்து வழங்கிய  இதுவரை  என்னும் நூல் வெளயீட்டு 
விழா சென்னை ,மதுரையை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் நடைபெற்றது .பேராசிரியர் தி. உதயகுமார் தலைமை ஏற்க டாக்டர் .மு.செல்லப்பன் நூலை வெளியீட கனடா உதயன் ஆசிரியர் ஆர்.எ ன்.லோகேந்திரலிங்கம் 
ஏற்புரை நிகழ்த்தினார். பட்டி மன்ற பேச்சாளர் அரங்க. நெடுமாறன்,ரவி.தமிழ்வாணன் ,கோவி.ராஜேந்திரன் ,ந.மணிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .நிகழ்ச்சி  நிறைவில் 
 திரு.ச. சுந்தர பெருமாள்  நன்றி உரை வழங்கினார் .
                                         
குறிப்பு;  இந்த புத்தகம் இலங்கையில் நடை பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
 புத்தகம் வேண்டும்  எனில் தொடர்பு கொள்ளவும் .  +91 99 76 88 67 37  
ச. சுந்தர பெருமாள் 

நமது ஊட்ட உணவு- தேங்காய் நல்லதா? கெட்டதா?

.

தேங்காய்க்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த எத்தனையோ விஷயங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால், அதில் சிறிதளவுகூட ஆதாரபூர்வமானது இல்லை என்பது நிதர்சனம்.
பாரம்பரிய உணவு சார்ந்த அறிவைத் துறந்துவிட்டு, சந்தை பிரபலப்படுத்தும் உணவுக்கு மாறுவதால் பல்வேறு வகைகளில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, ஊட்டச்சத்து போதாமல் இருப்பது மட்டுமல்ல, ஊட்டச்சத்து என்ற போர்வையில் விற்பனை செய்யப்பட்டு இவற்றை உட்கொள்வதும்கூடத்தான். பதப்படுத்தப்பட்ட (Processed) பாலிஅன்சாச்சுரேடட் எண்ணெய் வகைகளை ஆரோக்கியமான கொழுப்பு, ஆரோக்கியமான எண்ணெய் என்ற அடையாளத்துடன் திணிப்பது என்று உணவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துவிட்ட பிறகு, குற்றவாளிக் கூண்டில் அதிகம் நிறுத்தப்பட்டது தேங்காய் எண்ணெய்தான்.
இருந்தபோதும் தென்னிந்தியா, தெற்கு - தென்கிழக்கு ஆசியா, பாலினேசியத் தீவுகள் ஆகிய உணவுப் பண்பாடுகளில் காலங்காலமாகத் தேங்காயும் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றைப் பெருமளவு பயன்படுத்தியபோது, அந்த மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினைகள் எதுவும் எழவில்லை.

தேங்காயின் தாயகம்

பாரிஸ் மாநகரில்'அனலைத் தென்றல்" விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!

.

'சிறுவர் இலக்கியம் படைப்பது மகத்தான பணியாகும். புலம்பெயர்ந்த மண்ணில் எம் சிறார்களின் மொழி ஆளுமைக்கு உதவத் தமிழ்மொழியில் சிறுவர் இலக்கியம் அதிகமாகப் படைக்கப்பட வேண்டியது அவசியமாகும். சிறுவர்க்கான மனநிலையிலிருந்து அவர்களுக்கான பாடல்களைப் படைப்பதில் சில பெருங்கவிஞர்களே தோற்றுவிடுகிறார்கள். ஆசிரியராக அனுபவம் பெற்றவரும் பாலர்கல்வியில் விசேட பயிற்சிபெற்றவருமான பத்மா இளங்கோவன் சிறுவர் பாடல்கள் குழந்தைப் பாடல்கள் படைப்பதில் வெற்றிபெற்றுள்ளார். அவர் படைத்துள்ள பாடல்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் தமிழகத்தில் சிறந்த பரிசான 'சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின்" சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசினையும் அவர் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியதாகும். அவர் மேலும் இலக்கியத்துறையில் சாதனை படைக்க எமது வாழ்த்துக்கள்..!"

தமிழ் சினிமா வேலையில்லா பட்டதாரி

.


நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு 'லட்டு' மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.
Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி

Tamil shooting spotவேலையில்லா பட்டதாரி

நன்றி தினமலர் 

வாலி நீ போட்ட வேலி - எம்.ஜெயராமசர்மா ..... மெல்பேண்

.


 வாலி  நீ போட்ட வேலி
    ( எம்.ஜெயராமசர்மா ..... மெல்பேண் )

கண்ணதாசன் பாடல் கேட்டு
கையைக்கட்டி நின்ற வாலி
கட்டவிழ்த்து வந்து நின்று
கவிதைமழை பொழிந்து நின்றார்

வாலி பாடி நின்றபோது
போலிஅல்ல என்று சொல்லி
தோழ் கொடுத்து நின்றவரே
 தோழமையில் கண்ண தாசன்

கண்ண தாசன் பாடலோடு
கைகுலுக்கி வாலி பாடல்
வண்ணமாக வந்த போதும்
வைரமாக நின்ற தங்கே

பக்தியோடு பாடி நின்றார்
பருவத்தார்க்கும் பாடி நின்றார்
நித்தமே நினிவில் நிற்க
தத்துவமும் பாடி வைத்தார்

வெற்றிலை போட்ட வாலி
வெற்றிகள் பலதைப் பெற்றார்
நெற்றியில் பொட்டு இன்றி
நின்றதே இல்லை நாளும்

மெட்டுக்காய் எழுதி நின்றார்
துட்டுக்காய் எழுதி நின்றார்
பொட்டுவைத்த நெற்றி ஓடு
பொறிபறக்க எழுதி நின்றார்