நெஞ்சுக்குள் நிறைத்தாளே ! - ( எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


image1.JPG       வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்  
          கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்
      நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள்
           எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் !

      அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே
          அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை
      அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே
           அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே ! 

       தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே
           தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள்
      கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து இணைந்துவிட்டால்
           வெறுப்புடனே ஒதுக்கியவள் விலகியே நடந்திடுவாள் !

        எல்லோர்க்கும்  திருமணம்  நடந்துவிட்ட  போதிலுமே
            இவளுக்கு திருமணம் நடக்கவில்லை எனுமேக்கம்
       அப்பாவின் மனதையே அறுத்துக்கொண்டு இருந்தாலும் 
            அவளெண்ணம் நிறைவேற அலையாக அலைந்தாரே ! 

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த திருவிழா 14 06 2018

.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின்  வருடாந்த பெருந்திருவிழா  14.06.2018  வியாழன்  அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
 நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத்தினை கண்டு மகிழ ஆயிரக்கணக்கான பக்தர்கள்- இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும்  ஆலையத்திற்கு வந்திருந்ததாக தெரிய வருகின்றது. 
பக்தர்களின் நலன்கருதி-  யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார்  பஸ் சேவையும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - ச. சுந்தரதாஸ் - பகுதி 4


படத்திற்கு அச்சாணியாகத் திகழ்பவர் இயக்குனர். அவரே படத்திலிருந்து ஒதுங்கிவிட்டால் என்னதான் செய்வது? தயாரிப்பாளர் தாஸ் முஹம்மத்தின் நிலை நெருக்கலுக்குள்ளானது. படத்திற்கு உடனடியாக இயக்குனர் தேவை என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் ஒளிப்பதிவோடு சேர்த்து படத்தையும் டைரக்ட் செய்யுங்கள் என்று தாஸ்முஹம்மத் வாமதேவனிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வாமதேவன் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.

என்னுடைய கவனம் முழுவதையும் ஒளிப்பதிவிலேயே செலுத்திவருகிறேன். அதில் வெற்றி காணவே விரும்புகிறேன். டைரக்ட் செய்ய எனக்கு விரும்பமில்லை என்று வாமதேவன் நட்புன் மறுத்து விட்டார்.

ஆனால் அப்படி மறுத்தவர் பிரச்னைக்கு தீர்வையும் சொன்னார். என்னுடைய நண்பன் லெனின் கமெராவிலும் டைரக்ஷனிலும் திறமையோடு செயலாற்றி வருகிறார். ஏற்கனவே சுதுதுவ படத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்டும் செய்துள்ளார். படமும் வெற்றிபெற்றுள்ளது. அவருக்கே இந்த வாய்ப்பைக் கொடுங்கள் வெற்றி நிச்சயம் என்று வாமதேவன் தாஸ்முஹமத்திடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டன. இதை நினைவுக்கு கொண்டு வந்த வாமதேவன் மேலும் சொன்னார்.

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 05 கீரைப்பயிர்களுக்கு பாலூட்டும் தாய்க்கு கோபம் வந்தால் என்ன நடக்கும்...? களனிகங்கை தீரத்தில் கீரைத்தோட்டங்களின் கதை இது! - ரஸஞானி





"கீரை இல்லா ஊரும், கிழவன் இல்லா ஊரும் ஒன்றுதான்" என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள். கீரை ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்தது. கிழவன் அனுபவங்களின் உறைவிடம்.
கீரைக்குப்பேசத்தெரியாது. ஆனால், உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் நீண்ட ஆயுளையும், நல்ல நினைவாற்றலையும் தரும்! வயது முதிர்ந்த கிழவர்,  வாழ்க்கைப்பாதையில் தான் கற்றதையும் பெற்றதையும் படிப்பினையாக சொல்லி நல்வழி காட்டுவார்.
கிழவர்களை தாத்தா எனவும் கிழவிகளை பாட்டி என்றும் அழைப்பதுடன் எமது தமிழ் சமூகத்தில் மாத்திரமன்றி இலங்கையில் சிங்கள, இஸ்லாமிய சமூகத்தவர்கள் மத்தியில் மதிப்பிற்குரிய பெரியவர்கள் எனவும் கருதப்படுபவர்கள்.
அக்காலத்தில் பாட்டி வைத்தியம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. முக்கியமாக பாட்டிமார் இயற்கை மருத்துவத்தை எமக்கு அறிமுகப்படுத்தியவர்கள். மூலிகைகளின் மூலம் பல நோய்களை குணப்படுத்தியவர்கள்.

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள் வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி - முருகபூபதி


யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம்.  இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள்.
தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும்  அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம்.
1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில்  அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு,  ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில்,  அதற்கு  முதல் நாள்  இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார்.
வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, " தரையிலிருந்து பேசுவோம்" என்றேன்.
அவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல்  நாம் காணமுடியாது.
அன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில்  அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார்.
புத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின? என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது ? என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு  இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே!
நாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும்  ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ - பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்




அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும்
ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு
7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive,
Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்
நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள
இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை
விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் " தமிழ் -
முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம் - எழுத்தாளர்களின் பங்களிப்பும்
பணிகளும்" என்னும் தொனிப்பொருளில் உரையாற்றுவார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சமூகங்களிடையில் ஏற்படுத்தப்படவேண்டிய நல்லிணக்கம்
தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
செயற்குழுவினர் - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.




ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்



.

தொழில்நுட்ப உலகில் மிக அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்தியர் நிகேஷ் அரோரா. சாஃப்ட் பேங்க், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர் அரோரா.


படத்தின் காப்புரிமைREUTERS

தற்போது பாலோ ஆல்டோ நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள நிகேஷ் அரோராவின் ஆண்டு ஊதியம் 12.8 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 857 கோடி ரூபாய். இணைய குற்றங்களை கண்காணிக்கும் நிறுவனம் பாலோ ஆல்டோ சைபர் செக்யூரிட்டியில் தலைமை பொறுப்பேற்றுள்ள நிக்கேஷ் அரோரா, தொழில்நுட்ப துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்.


படத்தின் காப்புரிமை@NIKESHARORA

2011 ஆண்டு முதல் பாலோ ஆல்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மார்க் மைக்கல்கோலினுக்கு பதிலாக நிகிஷ் அரோரா இந்த பதவிக்கு வந்துள்ளார். நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவராக பதவியில் தொடர்வார் மார்க். அதே நேரத்தில் நிகேஷ் அரோரா இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பார்.

இயல் விருது விழா- செய்தி

.

இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 யூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் திரு கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான இயல் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  ’வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவலுக்கான புனைவுப் பரிசு தமிழ்மகனுக்கு வழங்கப்பட்டது. அபுனைவுப் பரிசு ’கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும்’ என்ற நூலுக்காக பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களுக்கும், கவிதைப் பரிசு ’அம்மை’ கவிதை தொகுப்புக்காக பா. அகிலன் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பு பரிசு ’பாலசரஸ்வதி ; அவர் கலையும் வாழ்வும்’ நூலுக்காக டி.ஐ. அரவிந்தனுக்கும், ஆங்கில இலக்கியப் பரிசு The Story of a Brief Marriage நாவலுக்காக அனுக் அருட்பிரகாசத்துக்கும் வழங்கப்பட்டன.

ஞான பரம்பரையினூடாக இணுவிற் சமயநிலையும் தியாகராசா சுவாமிகளும்.

.
கடந்த மே மாதம் பத்தொன்பதாம் திகதி இணுவைய10ர் தியாகராஜ சுவாமிகளின் நூற்றாண்டு தினமாகும். அதனை நினைவு கூரும் வகையில் அந்த நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய கட்டுரை

 ஞான பரம்பரையினூடாக இணுவிற் சமயநிலையும் தியாகராசா        
                    சுவாமிகளும்.

 இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்

சீராரும் கன்னல் செறி வாழை கமுகு புடைசூழ் கழனி துன்னும் இணுவில்” எனக் கைலாயமாலையிற் சிறப்பித்துக் கூறப்பட்ட,வரலாற்றுச் சிறப்புப் பொருந்திய இணுவில்,முத்தமிழின் உறைவிடமாகக் கலைகளின் இருப்பிடமாகக் கற்றோரும்,கலைவாணரும்,தெய்வச் சால்புடையவர்களும் வாழும் ஊராக மட்டுமன்றி,சைவத்தின் உறைவிடமாகவும் திகழ்கின்றது. இதற்குச் சான்று பகரும் வண்ணம்,ஆரியச்சக்கரவர்த்திகளின் சிம்மாசனப் பெயர்களைக் கொண்ட இணுவிற் பரராசசேகரப்பிள்ளையார் கோயில்,செகராசசேகரப்பிள்ளையார் கோயில் ஆகியனவும் அவர்கள் காலத்திலேயே வழிபாட்டுத் தலங்களாக இருந்த இணுவிற் சிவகாமியம்மன் கோயில்,இணுவில் கிழக்கு எல்லையிலுள்ள கருணாகரத் தொண்டமானாற் கட்டப்பட்ட கருணாகரப்பிள்ளையார் கோயில் ஆகியனவும்,அவர்கள் காலத்தில் வாழ்ந்த கைலாயநாதன் இறை நிலை எய்திய பின் எழுந்த இணுவில் இளந்தாரி கோயில்

இலங்கைச் செய்திகள்


15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு

எமது அலுவலக நோக்கம்  குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும்-கணபதிபிள்ளை வேந்தன்

வைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல்

900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்மையால் பாதிப்பு

ரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்

மீன்வள ஆய்வுக்காக வருகிறது நோர்வே கப்பல்

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறை 

வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம் 

பதவி விலகினார் மஸ்தான்


15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு

11/06/2018  15 ஆவது பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடானது இன்று முதல் நாளை மறுதினம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

உலகச் செய்திகள்


'கிம் மிகவும் திற­மை­யானவர்': ட்ரம்ப் புகழாரம்

எரிமலை வெடிப்பில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

முன்னாள் ஜனாதிபதிக்கு 19 மாத விளக்கமறியல்

ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் பதவி விலகினார்

வட கொரியா மீதான தடைகள் தொடரும்: அமெரிக்கா




'கிம் மிகவும் திற­மை­யானவர்': ட்ரம்ப் புகழாரம்

13/06/2018 வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் மிகவும் திற­மை­யான ஒருவர் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். சிங்­கப்­பூரின் செந்­தோஸா தீவில் வட கொரியத் தலை­வ­ருடன் உடன்­ப­டிக்கை ஆவ­ண­மொன்றில் கைச்­சாத்­திட்­ட­தை­ய­டுத்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே ட்ரம்ப்  இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

தமிழ் சினிமா - கோலி சோடா 2 திரை விமர்சனம்



`விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர். கோலிசோடா என்றாலே எளியவரை வலியவர் மிதிக்க, அவர்களை ஒரு கட்டத்தில் எளியவர் எப்படி திரும்பி அடிக்கின்றார் என்பதே கதை. இதே பார்முலா தான் கோலிசோடா-2வில் என்றாலும், இது எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது பார்ப்போம்.

கதைக்களம்

சமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.
இதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.
ஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.
ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல் இந்த எளியவர்கள் வலியவர்களை எப்படி எதிர்த்தார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கோலிசோடா என்றாலே ஒரு வகை யதார்த்தம் படத்தில் இருக்கும். சிறுவர்கள் பெரிய ரவுடிகளை எதிர்க்கின்றார்கள் என்றாலும், 4 பேர் ஒருவரை அடிப்பார்கள். ஆனால், இதில் 3 பேர் 300 பேரை கூட அடிப்பார்கள் போல, அந்த அளவிற்கு படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் அடிதடி தான்.
முதல் பாதி கதைக்குள் படம் வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கின்றது. மாறனின் காதல், நல்ல வேலை, ஒளியின் பேஸ்கெட் பால் ப்ளேயர் ஆசை மற்றும் காதல், ஆட்டோ சிவாவின் கார் ஆசை என மூன்று இளைஞர்கள் கனவு எப்படி ஒரு புள்ளியில் சந்தித்து பிறகு எப்படி அது சிதைகின்றது என்பதை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் சூப்பர் விஜய் மில்டன்.
அதைவிட மூன்று வில்லன்கள் அவர்களை ஒரே ஜாதி என்ற புள்ளியில் இணைக்கும் இடம் சூப்பர். தற்போது மூவருக்குமே பொது எதிரி என்பது போல் கொண்டு வந்து இளைஞர்கள் எப்படி அந்த பெரும் சக்தியை எதிர்க்கின்றார்கள் என்பதையும் தெளிவாக காட்டியுள்ளார்.
ஆனால், இத்தனை தெளிவு இருந்தும் கோலிசோடா முதல் பாகத்தில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் கொஞ்சம் கூட எங்கும் இல்லை. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இருந்தது.
முதல் பாதியில் அடி வாங்கினால், இரண்டாம் பாதியில் திருப்பி அடிக்கத்தான் போகின்றார்கள் என்று ஆடியன்ஸ் மைண்ட் செட் முன்னாடியே செட் ஆனதால், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும், யூகிக்க கூடிய காட்சிகளாகவே அடுத்தடுத்து வந்தது. அதிலும் கிளைமேக்ஸில் சமுத்திரக்கனி ப்ளேஷ்பேக் ஓபன் செய்யும் போதே இது தான் நடந்திருக்கும் என தெரிகின்றது.
அச்சு ராஜமணியின் இசை பாடல்களை விட பின்னணியில் கலக்கியுள்ளார். அதே நேரத்தில் சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் இரைச்சலையும் தருகின்றது. தானே ஒளிப்பதிவு என்பதால் கேமராவை கையில் கட்டி ஓடியிருப்பார் போல விஜய் மில்டன்.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கின்றது.
படத்தின் வசனம் குறிப்பாக பேங்க் மேனேஜர் ஒருவர் இந்த உலகமே ஒரு மிஷின் தான், உங்களை போல சிறிய சக்கரத்தினால் தான் ஓடுகின்றது நீங்கள் முன்னேறி விட்டால் பிறகு நாங்க எப்படி பிழைப்பது என்று கேட்கும் இடத்தில் நம் அரசாங்கம் மீதே நமக்கு சந்தேகம் வருகின்றது.
நடிகர், நடிகைகளின் நடிப்பு, குறிப்பாக சமுத்திரக்கனி.

பல்ப்ஸ்

கோலிசோடாவில் இருந்த யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்.
படத்தின் முதல் பாதி ஒரு சில நிமிடம் படம் எதை நோக்கி போகின்றது என்றே தெரியவில்லை.
மொத்தத்தில் கோலிசோடா 2 முதல் பாகம் அளவிற்கு பொங்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு தாகத்தை தணிக்கும். நன்றி CineUlagam