நாம் உணர்ந்து செயற்படுவோம் ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா



      பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை
      பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை
      பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால்
      பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !

      இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது
      இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது
       நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால்
       நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !

      விஞ்ஞானம் எனச்சொல்லி விவரீதம் வந்திருக்கு
      விளைச்சிலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை
      பொய்யில்லா வகையினிலே விளைச்சல்கண்ட பூமியெலாம்
      பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !

     காய்கறியைப் பெருக்குதற்கு கண்டுவிட்ட விஞ்ஞானம்
     காய்பெருக்க வைத்துவிட்டு கால்பறித்து நிற்கிறதே
     நோய்நொடிகள் பலதந்து நொய்யும்படி செய்யுமிந்த
     வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் அரங்கேற்றிய நாநலம் நிகழ்வு

அண்மையில் (16.07.16) சிறப்பாக அரங்கேறிய நாநலம் நிகழ்வு பற்றியதம் கண்ணோட்டத்தை தஞ்சைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அம்மையார் அவர்களும் சிந்தனையாளர் திரு. ம. தனபாலசிங்கம் அவர்களும் அளித்திருந்தார்கள். உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.


இளைஞர் நாநலத்தை வியந்து வாழ்த்துகின்றேன்! - பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன். 

இலங்கைச் செய்திகள்


'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது'

பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

 தமிழரின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் : யாழில் ஜனாதிபதி

சுவிஸ் குமாரின் தாயார் சிறைச்சாலையில் மரணம்

நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறப்பு

யாழ். பல்கலைக்கழக மோதல் : திசிதரன் பிணையில் விடுதலை

 பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகிய 15 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.!

 யாழில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

 ரவிராஜ் படுகொலை : கடற்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட அறுவருக்கு  எதிராக  மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்




Sri Lalitha Sahasranama Homam and GURU Peyarchi 2016 at Sri Venkateswara Temple, Helensburg.




திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார்



மேகத்திற்கு   மீண்டும்  செல்லும்  கொட்டும்பனி போன்று அற்பாயுளில்   மறைந்த   ஆளுமையின்    நாட்குறிப்பும் தொலைந்தது.
                                                                                      முருகபூபதி

" செ.கதிர்காமநாதன்  பட்டப்படிப்பு  முடிந்ததும்  இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை   நிறுவனம்  ஒன்றில்  சில  ஆண்டுகள் பணிபுரிந்தார்.    இக்காலம்  மிக  இக்கட்டான  காலம்.  தக்க  ஊதியமே இவருக்கு    கிட்டவில்லை.   எழுத்தாளரான  இவருக்குக் கிடைத்த மாதச்சம்பளத்தையே    சொல்லத்தயங்கினார்.   தன்  உழைப்பிற்கேற்ற ஊதியம்   கிடைக்கவில்லை  என்று  வருந்தினார்.  மனம் நொந்தார். கூடிய   ஊதியம்  கிடைக்கத்தக்க  இடங்களிலெல்லாம்  வேலைக்காக முயன்றுகொண்டேயிருந்தார்.
பத்திரிகையில்    பணியாற்றியவேளை  ஒரு  நாவலையும்  அதே இதழில்  தொடராக  எழுதினார்.   அதற்குத்தனியாக  பணம் கிடைத்ததா ?  என்று  கேட்டேன்.   கிடைத்த  தொகையை வேதனையோடுதான்  கூறினார்.
வழமையான   லாப நோக்காகவா ?  அவரது  உழைப்பிற்கு நன்றிக்கடனாகவா ?   இலக்கிய  ஆர்வத்தினாலேயா ?  தெரியவில்லை. அவரது    மொழிபெயர்ப்புக்கதை  ஒன்றையும்  முன்னர்  வெளியிட்ட மூன்று   சிறுகதைகளையும்  சேர்த்து  இன்று   நூலாக வெளியிட்டுள்ளனர்,    அவர்  பணியாற்றிய  நிறுவனத்தினர்.
113   பக்கம்.    கிரவுன் 1/8 மடித்தாளில்  நியுஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட   இந்நூலின்   விலை  ரூ.2/25.
மலிவுப்பதிப்பு   நூல்களை  வெளியிட்டு  வெற்றி  (இலாபத்தில்) பெற்றுவிட்டதாகக்கூறும்   இவர்கள்  தந்த  நூல்களில்  இதுவே முதன்மைபெறுகிறது.

உலகச் செய்திகள்


அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் மற்றும் 34 இராணுவ தளபதிகள் கைது

கஜகஸ்தானின் அடுத்தடுத்து தாக்குதல்: 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)

ஜேர்மனி புகையிரதத்தில் கோடரி வெட்டு சம்பவம் ;ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு

சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி

உக்ரைனில் கார் குண்டு தாக்குதல்

 துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, 21 பேர் காயம் , ஐ.எஸ். கொண்டாட்டம்



தமிழ் சினிமா


சுல்தான்

சுல்தான் - Cineulagam





பாக்ஸ் ஆபிஸின் சூறாவளி என்றால் அது சல்மான் கான் தான். படம் நன்றாக இருக்கிறதா? இல்லை மொக்கையாக இருக்கிறதா? என்று ஒருவரும் பார்ப்பது கிடையாது, கிங் கானின் சாதனையை முறியடிக்க முதல் நாளே அனைத்து திரையரங்குகளையும் நிரப்பி விடுவார்கள் சல்லு பாய்ஸ்.
பஜிரங்கி பைஜான் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சல்மான் அடுத்து ப்ரேம் ரதன் தான் பாயோ என்ற தோல்வி படத்தை கொடுத்தார். ஆனால், அந்த படமும் ரூ 400 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்பதை நிரூபிக்க சுல்தானாக களம் இறங்கியுள்ளார்.

கதைக்களம்

டெல்லியில் ஒரு முரட்டுத்தனமான சண்டை ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்தியாவில் இருந்து யாருமே இதற்கு சண்டைப்போட வரவில்லை, இந்த போட்டியை நடத்தும் இளைஞர் ஒருவருக்கு சுல்தான் என்பவர் ஹரியானா மாநிலத்தில் இருக்கிறார், அவர் தான் இதற்கு சரியான ஆள் என்று தெரிய வருகிறது.
ஆனால், சுல்தானை போய் பார்த்தால் அங்கு பேர் அதிர்ச்சி அவருக்கு, ஏனெனில் இனி மல்யுத்தமே செய்வதில்லை என சுல்தான் முடிவு செய்துள்ளார், சில குடும்ப பிரச்சனைகளால்.
இதன் பிறகு சுல்தான் இந்த போட்டியில் விளையாட ஒரு வழியாக சம்மதிக்க, அவருக்கு முற்றிலும் வேறுபட்ட தளமான, இந்த முரட்டுத்தனமான சண்டையில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கும் படம் தான் சுல்தான்.

படத்தை பற்றிய அலசல்

சுல்தானான சல்மான் கான், இவரை தவிர வேறு யாரும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை செய்ய முடியுமா? என்று தெரியவில்லை. இந்தியன் ஹல்க் போல உள்ளார், போட்டியை நடத்தும் இளைஞர் இவரை பார்க்க வரும் போது இவனா? அந்த சுல்தான் என கேலியாக பார்க்கும் இடத்தில், குழியில் மாட்டிய ட்ராக்ட்ரை வெளியே எடுத்துவிடும் இடத்திலேயே சல்லு பாய் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
இத்தனை பெரிய உருவமாக இருந்தாலும் அப்பாவியாக நடிப்பதில் சல்மானை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அனுஷ்கா ஷர்மாவை பார்த்தவுடன் காதல், அவருக்காக மல்யுத்த போட்டியில் இறங்குவது, பின் வெற்றி பெற்று திமிருடன் பேசுவது என ஒன் மேன் ஷோ.
அனுஷ்கா ஷர்மா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம், அவரும் ஒரு மல்யுத்த வீராங்கனையாக கலக்கியிருக்கிறார். தன் கணவனிடம் சண்டைப்போட்டு பேசாத இடத்திலும், அவர் போட்டியை டிவியில் கூட பார்க்காமல் இருந்தாலும் சல்மானுக்காக அவர் உருகும் காட்சி சூப்பர்.
இப்படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் இதுவரை 3 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இதில் இரண்டுமே வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து எடுத்துள்ளார். மூன்றாவது படமே கபாலி ரஞ்சித் ஸ்டைலில் ஒரு இமாலய நடிகன் கிடைத்துள்ளார், அவரை எப்படி ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என ஒவ்வொரு நொடியும் யோசித்து திரைக்கதை அமைத்துள்ளார் போல.
விஷால் சேகரின் இசையில் ஓப்பனிங் சாங் மட்டுமே ரசிக்க வைக்கின்றது, அதுவே படம் முழுவதும் பின்னணியிலும் ஒலிப்பது சூப்பர்.

க்ளாப்ஸ்

சல்மான் ஒன் மேன் ஆர்மி, படம் முழுவதையும் தாங்கி செல்கிறார். சல்மான் - அனுஷ்கா காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை, மல்யுத்த போட்டிகள் யதார்த்தம் மீறாமல் எடுத்தது. படத்தின் வசனம் கவணிக்க வைக்கின்றது, ”ஒரு ஆணின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே பெண் தான் கூட இருப்பாள், அதை வெற்றியாக்குவதும், தோல்வியாக்குவதும் உன் கையில்” போன்ற வசனம் கவர்கிறது.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், என்ன தான் சல்மான் ஹீரோ என்றாலும் இப்படியா எல்லோரையும் அடித்து தும்சம் செய்துக்கொண்டே போய்கிட்டே இருப்பார்.
இயக்குனர் தென்னிந்திய சினிமாவின் ரசிகர் போல, பல தென்னிந்திய சினிமாவை ஒரு கலவையாக பார்த்த அனுபவம்.
மொத்தத்தில் சுல்தான் எவனாலும் வெல்ல முடியாதவன் என நிரூபித்து விட்டான்.

ரேட்டிங்- 2.75/5   நன்றி   cineulagam