.
மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி 11/5/2013 அன்று கொலிற்றன் பாடசாலையில் இடம்பெற்றது .ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து ,தலைவர் பெருமாள் குமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் Ed Husic அவர்கள் உரையாற்றிய பின்பு பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகின .
யாமறிந்த மொழிகளிலே இனிதான தெங்கும் காணோம் எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய பூக்கள் போன்ற மழலைகள் பூவிதழ்களை மெல்ல விரித்து பூக்களைப் பற்றி பேசும்போது அக்குழந்தைகளின் முகங்கள் மட்டும் பூக்கள் போல் இல்லை ,குவளை போன்ற கண்களும் சிந்தனைக்கேற்றாற் போல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டு அழகைச் சொரியும் வேளை ,கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா ,உன்கண்ணில் நான்கண்டேன் ,உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன் எனும் கவிஞரின் பாடல் வரிகள் நினைவில் வந்து மணம் வீச பூக்களே பூக்கள் பற்றிப் பேசும் விந்தையில் என் சிந்தை மகிழ்ந்தேன் .
மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி 11/5/2013 அன்று கொலிற்றன் பாடசாலையில் இடம்பெற்றது .ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து ,தலைவர் பெருமாள் குமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் Ed Husic அவர்கள் உரையாற்றிய பின்பு பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகின .
யாமறிந்த மொழிகளிலே இனிதான தெங்கும் காணோம் எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய பூக்கள் போன்ற மழலைகள் பூவிதழ்களை மெல்ல விரித்து பூக்களைப் பற்றி பேசும்போது அக்குழந்தைகளின் முகங்கள் மட்டும் பூக்கள் போல் இல்லை ,குவளை போன்ற கண்களும் சிந்தனைக்கேற்றாற் போல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டு அழகைச் சொரியும் வேளை ,கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா ,உன்கண்ணில் நான்கண்டேன் ,உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன் எனும் கவிஞரின் பாடல் வரிகள் நினைவில் வந்து மணம் வீச பூக்களே பூக்கள் பற்றிப் பேசும் விந்தையில் என் சிந்தை மகிழ்ந்தேன் .