அசோகமித்திரன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.

.
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 86.

HINDU TAMIL
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார்.
எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.
நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை.
பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.
பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர்.


மெல்பேர்ணில் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா

.
            

கடந்த வாரம் சனிக்கிழமை (18/03/17) வெலிங்டன் பாடசாலை மண்டபதில் பாவேந்தர் பாரதிதாசன் விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது  மனம் நிறைந்த சந்தோசத்தோடு மக்கள் வீடு சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது. மெல்பேர்ணில் முதல் முதலாக கேசி தமிழ் மன்றம் மற்றும் சுடரொளி ஆகிய அமைப்புக்களுனடன் இணைந்து பன்னிரண்டு அமைப்புக்கள் விழாவை ஒழுங்கமைத்திருதார்கள். மாலை 5.30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன். ஆரம்பித்த நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்தினை ஒளவை தமிழ் பள்ளி மாணவகளும், தமிழ் பள்ளி மாணவர்களும் மிக அழகாக சுருதியோடு பாடி சபையோரை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார்கள். வரவேற்பு நடனத்தை நர்த்தனாலயா இந்தியன் இசைக் கல்லூரி ஆசிரியை சிறிமதி றூபினி கனகசபை அவர்களின் மாணவர்கள் பாவேந்தர் பாரதிதாசனின்  சங்கே முழங்கு அழகிய நடனத்தை தந்தார்கள். நடன ஆசிரியரையும் மாணவிகளையும் கரகோசத்தால் மகிழ்வித்தார்கள் சபையோர்.அடுத்து இரண்டு பாவேந்தரின் பாடல்கள் முதலாவது பாடலை தமிழ் பள்ளி மாணவர்களும் இரண்டாவது பாடலை ஒளவை தமிழ் பள்ளி மாணவர்களும் இசைத்துப் போக  மக்கள் கரகோசம் செய்து பாராட்டினார்கள் பாவேந்தர் விழாவில் ஒரு புதிய நிகழ்வு மேடை ஏறியது அதை சொல்லியே ஆகவேண்டும்

தமிழ்முரசுஅவுஸ்ரேலியா இன்று தனது 8 வது ஆண்டில்

.


அன்பு வாசக நெஞ்சங்களே தமிழ்முரசுஅவுஸ்ரேலியா இன்று தனது 8 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

சென்ற வாரம் தொழில் நுட்ப பிரச்சினைகளால் வெளியிட முடியாமல் போனதற்கு வருத்தம் கொள்கிறோம் . 

கவியெழுதி வடியும் - பிச்சினிக்காடு இளங்கோ




.
    
Image result for beautiful bird on a tree at early morning  இலையிருளில் இருந்தவண்ணம்
  எனையழைத்து ஒருபறவை பேசும்
  இதயத்தின் கனத்தையெல்லாம்
  இதமாகச் செவியறையில் பூசும்
  குரலொலியில் மனவெளியைத்
  தூண்டிலென ஆவலுடன் தூவும்
  குரலினிமை குழலினிமை
  கொஞ்சும்மொழித் தேனாக மேவும்
  
  துயில்கின்ற மனமானோ
  துள்ளலுடன் கனவாடை கலையும்
  கனவாடை கலைந்தாலும்
  கவிவாடை தானாக விளையும்
  பொருள்புரியா  மொழிகேட்டு
  புலர்காலை ஏக்கமுடன் விடியும்
  புள்ளினத்தின் மனமறியாப்
  பொங்குமனம் கவியெழுதி வடியும்


 (அதிகாலையில் ஒருபறவையொலிகேட்டு எழுதியது. தொடங்கியது 26.02.2017 முடித்தது 1.03.2017)

சிட்னியிலே நடைபெற்ற வீணை - மிருதங்க அரங்கேற்றம்!

.

சிட்னியிலே நடைபெற்ற வீணை - மிருதங்க அற்புத அரங்கேற்றம்!
திரு இரவீந்திரன் கலாநிதி சாந்தினி இரவீந்திரன் தம்பதியினரின் பிள்ளைகளான செல்வி விஷ்ணி அவர்களின் வீணை அரங்கேற்றமும்  செல்வன் ஹரிஷ் கோபிகன்  அவர்களின் மிருதங்க அரங்கேற்றமும் பங்குனி மாதம் சனிக்கிழமை நாலாம் திகதி பரமற்றாவில் அமைந்துள்ள 'றிவர்சைட்'அரங்கிலே மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.. அரங்கின் அலங்காரம் பிரமாதமாகக் காணப்பட்டது. ஐங்கரத்து விநாயக விக்கிரகத்தி;ன் அருளொளி எல்லோரையும் ஈர்க்க,   மாலை ஆறு மணிக்கு அரங்கு  , வீணை - மிருதங்க இசை இரசிகர்களாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நிரம்பிக் காணப்பட்டது.  குறிப்பிட்ட நேரத்திற்குத் திருமதி சுகந்தினி சிவா சுவாமிநாதனின் சுருக்கமான வரவேற்புரையுடன் அரங்கேற்ற விழா ஆரம்பமாகியது.  புன்னகை ததும்பும் முகத்துடன் மேடையின் நடுவிலே வீணையை இலாவகமாக ஏந்தியவண்ணம் விழாவின் கதாநாயகி செல்வி விஷ்ணி அமர்ந்திருக்க செல்வன் ஹரிஷ் கோபிகனும்; ஏனைய பக்கவாத்தியக் குழுவினரும் சூழஅமர்ந்திருந்து அரங்கை அலங்கரித்தனர்.


பண்ணிசை கச்சேரி 02.04.2017

.














அசோகமித்திரன் நினைவுகள் - முருகபூபதி

.
தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
                                                                       

                   சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை,
 " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது.
உடனே  தகப்பன், " அது ரிஷ்க்கா இல்லையம்மா.... ரிக்‌ஷா" என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது.
தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார்.
" ரி... க்...ஷா..."
குழந்தையும் அவ்வாறே, " ரி...க்...ஷா..." எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா" என்கிறது.  தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார்.
ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் "ரிஷ்க்கா" என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார்.
ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது.


இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி

.

நான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளை கட்டியுள்ளார்.
சுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர் விக்கேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் சம்பந்தன், லண்டனைச் சேர்ந்த எம்.பி. ஜேம்ஸ் பெர்ரி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் நானும் அவ்விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளிக்கு வீட்டுச் சாவி கொடுப்பதாகவும், ஜாஃப்னா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி கட்டிட நிதி கொடுப்பதாகவும் திட்டம்.

மறுநாள் ஏப்ரல் 10-ம் தேது வவுனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டம், அதன் பிறகு முல்லைத்தீவு, கிளி நொச்சி, புது குடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தேன். காரியம்: அந்த வீடுகளை திறந்து வைப்பது, காரணம்: காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கவுரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும். மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.

இலங்கைச் செய்திகள்



கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது.!

முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!

பஷில் பிணையில் விடுதலை.!

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள சந்­தேக நபரை சர்­வ­தேச பொலிஸார் மூலம் கைது செய்­யவும் ; கிளிநொச்சி நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

ஆசிரியர் நியமனம்  1029 பேருக்கு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்...



கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது.!

15/03/2017 கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


ரஜனிக்கு ஒரு மடல் ப . தெய்வீகன்

.
அன்புள்ள ரஜினி அவர்களுக்கு
"தலைவா தலைவா" என்று உங்கள் படம் வெளியாகும்போதெல்லாம் கட் - அவுட்டுக்கு பாலூற்றும் 'உயிரிலும் மேலான' ரசிகர்களை கொண்ட தமிழினத்தில் பிறந்த ஈனப்பிறவி ஒன்று எழுதிக்கொள்வது.
நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வரப்போவதாக அண்மையில் வெளியான செய்தி கிட்டத்தட்ட உங்களது அடுத்த படத்துக்கான அறிவிப்புபோலவே ஏக பரபரப்புடன் எல்லா திசையிலும் அதிரத்தொடங்கியது. நானும் ஏதோ நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் "எந்திரன் - 2" படத்தின் கிளைமக்ஸ் காட்சியைத்தான் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்போகிறார்களோ என்று நினைத்தேன். ஆனால், கிட்டத்தட்ட அதேபோன்றதொரு ஸ்டண்ட் விளையாட்டை காட்டுவதற்காக லைக்கா நிறுவனத்தின் வீடுகளை கையளிப்பதற்குத்தான் யாழ்ப்பாணத்துக்கு வருகிறீர்கள் என்று பின்னர் அறிந்துகொண்டேன். பரவாயில்லை. நீங்கள் ஒரு நடிகர். எல்லா விடயத்திலும் அதை கைக்கொள்வதில் எங்களுக்கெல்லாம் பரம திருப்தி. அவை உங்கள் சம்பந்தப்பட்ட விடயம். நாங்கள் தலையிடமாட்டோம்.
ஆனால், திடீரென்று பயணத்தை ரத்து செய்யப்போவதாக நீங்கள் அறிவித்த கையோடு உங்கள் கைச்சாத்திடப்பட்ட கடிதம் ஒன்றை ஊடகங்களில் காணப்பெற்றேன். "சிவாஜி" படத்தில் நீங்கள் அமெரிக்காவிருந்து வந்து ஆஸ்பத்திரி கட்டுவதற்கு முயுற்சிக்கும்போது லஞ்சம் கேட்க நீங்கள் கொடுப்பீர்களே ஒரு ஜெர்க் மூவ்மென்ற். அதுபோல ஷாக் ஆகிவிட்டேன். ஆனால், பயணம் ரத்தானதைவிட நீங்கள் அந்த கடிதத்தில் எழுதியிருக்கும் விடயங்கள்தான் நான் இந்த கடிதத்தை எழுதுவதற்கே காரணம்.


இலங்கையில் பாரதி - அங்கம் 13 -- முருகபூபதி

.
                                             
மாணவர் மாத இதழாக 15-01-1971 முதல் கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய குமரன், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மாக்ஸீய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத்தொடங்கியது.
தமது குமரன் இதழுக்கெனவே ஒரு வாசகர் குழாமை உருவாக்கிய ஆசிரியர் செ. கணேசலிங்கன் ஈழத்து இலக்கிய உலகில் மூத்த படைப்பாளியாவார். பல நூல்களின் ஆசிரியர். இவற்றுள் நாவல்களே அதிகம்.
கைலாசபதியின் தோழரான கணேசலிங்கனும் அவரைப்போன்றே மாக்ஸீய சிந்தனையாளராவார். கணேசலிங்கனின் செவ்வானம் நாவலுக்கு நீண்ட முன்னுரை எழுதியிருக்கும் கைலாசபதி, அதனை மேலும் விரிவாக்கி தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் எழுதினார். 
இந்த நாவலுக்கு  எதிர்வினையாற்றியவர் தமிழகத்தைச்சேர்ந்த இலக்கிய விமர்சனத்துறையில் மிகுந்த கவனிப்புப்பெற்ற வெங்கட் சாமிநாதன். " மாக்ஸீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல்"  என்ற எதிர்வினை விமர்சனத்தை இவர் நடை இதழில் எழுதி சர்ச்சையை உருவாக்கினார்.

உலகச் செய்திகள்


அவுஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கையர்கள் நாடு கடத்தல்..!

தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல் மீது தாக்குதல்: 42 பேர் பலி: சிரியாவில் சம்பவம்..!

பிரித்தானிய மகாராணியின் ஒப்புதலுடன் சட்டமாகிறது பிரெக்ஸிட்..! 


அவுஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கையர்கள் நாடு கடத்தல்..!

15/03/2017 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் 25 பேரை அவுஸ்திரேலிய குடியகழ்வு திணைக்களம் நாடுகடத்தியுள்ளது.

சிட்னி தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2017

.
சிட்னி தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2017 கடந்த March மாதம் 19 ம் திகதி இடம் பெற்றது. அதிலிருந்து ஒரு சில படங்களை கீழே பார்க்கலாம் .



ஆண்கள் அபார்ட்மன்ட் - சொலமன் யோகனந்தன்


Image result for drinking group people

.

"அரசு இதிலை ஏறேல்லையோ?" முன்னே நின்ற குமார் கத்தினான்.

"நிச்சயமாக" என்றபடி இராட்சத றோலர் கோஸ்டரை நோக்கி முன்னேறினார் அரசு.

“நிச்சயமாக” என்பது அரசு அடிக்கடி பாவிக்கும் ஒரு சொல். கூட்டத்தினிடையே நீந்தியபடி அவரைப் பின் தொடர்ந்தோம். இருதய வியாதி உள்ளவர்கள் இதில் ஏறக்கூடாது என்ற எச்சரிப்புப் பலகை வழமை போலவே இங்கும் வைக்கப்பட்டிருந்தது அரசுவுக்குச் சினத்தை கிளப்பியது.

“ஹாட் அட்டாக்காவது கத்தரிக்காயாவது” சொல்லிக்கொண்டே றோலர் கோஸ்டர் சவாரி புறப்படும் இடத்திற்கு போகும் படிகளிலேறியவரை நாங்கள் தொடர்ந்தோம்.
அரசுவுக்கு முன்பு ஏதோ இருதய வியாதி வந்திருக்க வேண்டும் அல்லது பரம்பரை வியாதியாயிருக்கக்கூடும். அவரோ அதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
போகாதே போகாதே என்ற பாணியில் கீழே நின்றிருந்த மனைவி கமலத்தின் பேச்சையும் கேட்காமல் இதில் ஏறத் துணிந்த அரசுவை என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை. இருபது மீற்றருக்கு உயர்த்தி செங்குத்தாக கீழ் விழுத்தி பிறகு இரண்டு முறை தலை கீழாகத்தொங்கும் லூப் அடித்து கூட்டத்தை அலற வைக்கும் கோல்ட் கோஸ்டிலுள்ள பிசாசுகளில் ஒன்றுதான் இந்த றோலர் கோஸ்டர்.
இதற்கு சூறாவளி என்று பெயர் வேறு. நாங்கள் டிக்கெட் வரிசையில் நிற்கையில் தலை கீழாகத்தொங்கியபடி ஒரு கூட்டம் அலறியபடி கடந்து சென்றது.

ரஜினி எதிர்ப்போ, லைக்கா எதிர்ப்போ எங்கள் நோக்கம் அல்ல: திருமாவளவன் விளக்கம்

.

எங்கள் நோக்கம் ரஜினி எதிர்ப்போ, லைக்கா எதிர்ப்போ, அரசியல் ஆதாயமோ, விளம்பர நாட்டமோ அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தற்போதைய அரசியல் சூழலில், இலங்கையிலுள்ள வவுனியா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை நடிகர் ரஜினிகாந்த், நேர்மறையான வகையில், சரியான கோணத்தில் புரிந்து கொண்டு தனது பயணத்தைத் தவிர்த்திருக்கிறார். இது அவரது பக்குவமான பண்புநலன்கள்களை வெளிப்படுத்துகிறது.
இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் பெயரால் வெளியாகியுள்ள அறிக்கையில், 'அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர், இதனை அரசியலாக்குகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளனர். இதிலென்ன ஆதாய நோக்கம் இருக்க முடியுமென்று விளங்கவில்லை.
ரஜினியின் பயணத்தையும் லைக்கா நிறுவனத்தின் செயற்பாடுகளையும் எதிர்ப்பதால், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்றுவிட முடியுமென்று நான் நம்பினால், இதைவிட நகைப்புக்குரியது வேறென்ன இருக்கமுடியும்?


மூலிகை பேசுகின்றன - 2. -நெல்லிக்கனி

.

கடையெழு வள்ளல்களில் கருணைமிகு தொண்டைமான்
       கனிவோடு அவ்வைக்குத் தந்தது நெல்லிக்கனி!
மடையிலா வெள்ளமென மானிடரின் நலமதை
       மாறாமல் மலர்த்திடும் மருத்துவ தேன்கனி
தடையிலா உயிர்ச்சத்து தந்திடும் தினந்தோறும்
       தாயினும் மேலாகத் தன்னிகர் கொண்டிடும்!
விடையிலா மூப்பினை விரட்டியே அடித்திட
       வைரமாய் ஒளிர்ந்திட வைட்டமின் தந்திடும்!

ஊணோடு சேர்த்திட உயரிய அறுசுவை
       உள்ளங்கை நெல்லியென உடலுக்கு நலமூட்டும்!
தேனோடு ஊறிய தித்திக்கும் நெல்லியால்
       தேகத்தை சீராக்கி தீர்க்கமாய் வளமூட்டும்!
வானோரின் அமுதென வைத்தியம் போற்றிட
       வளமான ஆரோக்கியம் வழங்கியே பலமூட்டும்!
வீனென நினைத்தே வீசிடும் கொட்டையால்
       வைத்திடும் தேனீர் வைத்திய சுகமூட்டும்!

தினமொரு நெல்லியை தொடர்ந்துநீ உண்டிட
       தீர்ந்திடும் மலச்சிக்கல் தெரிந்திடு பலனாகும்!
பணமேதும் இல்லாது பறந்திடும் புற்றுநோய்
       பயன்படுத்து நெல்லியை பக்குவமாய் குணமாகும்!
உணவோடு நாள்தோறும் ஊறுகாய் சேர்த்திட
       உடலுக்குள் கல்லீரல் ஒழுங்கெனப் பணியாற்றும்!
மனதினில் உறுதியாய் மனைக்கொரு நெல்லிமரம்
        மண்மீது வைத்திட மாறாது வளம்சேர்க்கும்!

ப.கண்ணன்சேகர். திமிரி

பெண்ணியத்தின் புதியபோக்குகள் -- கௌரி அனந்தன்

.
   ( அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய  அனைத்துலக பெண்கள் தினவிழாவில், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த படைப்பாளி கௌரி அனந்தன் நிகழ்த்திய உரை. )


ஆன்றோர்கள் சான்றோர்கள் நிறைந்த இந்த சபைக்கு என்னை சிறப்புரையாற்ற அழைத்தமைக்கு தெய்வீகனுக்கும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்துக்கும் முதலில் எனது நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.
இங்கே  எனக்கு  கொடுக்கப்பட்ட  தலைப்பு பெண்ணியத்தின் புதிய போக்குகள் என்பதாகும்.
" முதலில் பெண்ணியம் என்றால் என்ன...? " என்பதைப் பார்த்தோமானால்..
பெண்ணியம் என்ற வார்த்தைப் பிரயோகமானது, வெகுவாகவே மலினப்பட்டுப் போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதன் உண்மையான அர்த்தமானது பல தரப்பினராலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுவாகவே, பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதை பிரதான நோக்காகக் கொண்ட கருத்தியல் பெண்ணிலைவாத கருத்தியல் என அழைக்கப்படுகிறது.


தமிழ் சினிமா

மாநகரம்


Maanagaram தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும். அதிலும் குறும்படம் எடுக்கும் இளைஞர்கள் தமிழ் சினிமாவில் தலையை காட்டிய பிறகு தான் கோலிவுட் வேறு ஒரு தளத்தில் பயணிக்க தொடங்கியது. தற்போது முழுக்க முழுக்க இளைஞர்களே ஒன்றிணைந்து ஒரு தரமான கதைக்களத்துடன் களம் இறங்கியிருக்கும் படம் தான் மாநகரம்.

கதைக்களம்

Maanagaramசென்னைக்கு வேலைக்கு வரும் ஸ்ரீ, ஆரம்பத்திலேயே வேறு ஒருவரை(சந்தீப்) தாக்க வரும் கும்பலிடம் தெரியாமல் மாட்டி, அந்த கும்பலிடம் தன் பணம், சான்றிதழ் அனைத்தையும் இழக்கின்றார்.
அதே நேரம் சந்தீப் தன் காதலிக்காக ஒருவரை தாக்க, போலிஸில் மாட்டுகிறார். போலிஸ் அவருடைய சித்தப்பா என்பதால் வெளியே விட, தாக்கப்பட்ட கும்பல் சந்தீப்பை தாக்க திட்டம் போடுகின்றது.
இதற்கிடையில் சென்னையையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு டானின் பையனை தெரியாமல் ஒரு கும்பல் கடத்துகின்றது. இந்த மூன்று கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது. இவர்கள் என்ன ஆனார்கள் என்பதை ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

படத்தை பற்றிய அலசல்

சில வருடங்களுக்கு முன் நேரம் என்ற படத்தை பார்த்திருப்போம், கிட்டத்தட்ட அதேபாணி திரைக்கதை தான் இந்த மாநகரம். நான் லீனியராக திரைக்கதையை நகர்த்தி ஒரு கட்டத்தில் அனைத்தையும் இணைத்து ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கின்றது மாநகரம்.
ஸ்ரீ, சந்தீப், சார்லீ, ரெஜினா, முனிஷ்காந்த், இன்னும் பெயர் தெரியாத பல நடிகர்கள் அத்தனை யதார்த்தமாக நடித்துள்ளனர். அதிலும் குழந்தையை கடத்த முனிஷ்காந்தை தேர்ந்தெடுக்கும் ஒரு கும்பல், தவறான குழந்தையை அவர் கடத்திவிட்டு கிளைமேக்ஸ் வரை அவர் படும்பாடு திரையரங்கே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது.
படத்தின் நிறைய இடத்தில் சிம்பாளிக் ஷாட் எட்டிப்பார்க்கின்றது. போகிற போக்கில் இயக்குனர் பல விஷயங்களை சொல்லிவிட்டார். BPO உங்கள் பேஷனா என்று ரெஜினா, ஸ்ரீயிடம் கேட்க, இன்ஜினியரிங் சான்றிதழை காட்டுவது, இன்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாருமே படித்த வேலையில் இல்லை என்பது ஒரு நொடியில் சொல்லிவிடுகின்றது.
அதேபோல் கிளைமேக்ஸில் ஸ்ரீ அனைவரையும் அடித்துவிட்டு எழுந்து நிற்கும் போது அவருக்கு பின்னால், கதம் கதம் போஸ்டர் இருப்பது எல்லாம் செம்ம ஐடியா சார். மேலும் ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடித்தவன் என ஒருவன் கர்வமாக சொல்ல, அடுத்த காட்சியிலேயே அவனுடைய (சென்ஸார்) இடத்தில் சந்தீப் ஆசிட் அடிப்பது என பல காட்சிகள் ரசிக்க வைக்கும்.
ஆனால், படம் ஆரம்பித்து ஒரு கட்டத்திற்கு மேல்... அட என்ன தான்பா சொல்ல வறீங்க, என்றும் சில குரல்கள் எழுகின்றது. இருந்தாலும் கிளைமேக்ஸில் அத்தனை முடிச்சுகளையும் ஒன்று சேர்க்கும் இடம் லோகேஷை தமிழ் சினிமாவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

க்ளாப்ஸ்

திரைக்கதை, ஒரு இடத்தில் கூட நம்மை நகரவிடவில்லை.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்துமே செம்ம ஸ்ட்ராங்காக உள்ளது. டெக்னிக்கல் டீமை தனியாகவே பாராட்டலாம்.
மேலும், பெயர் தெரியாதவர்கள் கூட உதவி செய்வார்கள் என்பது போல் படத்தில் பலரின் பெயரை சொல்லவே மாட்டார்கள்.
படத்தின் வசனங்கள் குறிப்பாக சென்னையில் இருந்துக்கொண்டே நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டே சென்னையை திட்டுபவர்களுக்கு செம்ம சவுக்கடி.

பல்ப்ஸ்

ஒரு சிலருக்கு (மசால பட விரும்பிகள்) மட்டும் கதை எங்கு போகின்றது என தெரியாமல் முழிக்க வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் மாநகரத்தை அனைவரும் தவிர்க்காமல் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.

நன்றி cineulagam.