உழைப்பை உறிஞ்சும் ஊர்வலம் - கவிதை - செ.பாஸ்கரன்


.
கிழக்குச் சூரியன் இருள் கிழித்து
மெல்ல எழுந்து வருகிறான்
வழமைபோலவே வானம் செம்பொன்னாய்
கோடுகாட்டி சிரித்து வரவேற்கிறது
வடக்குத்திசை நோக்கி கதிரெறிந்து
மெல்லப் பார்த்த கதிரவன்
திகைத்து நிற்கின்றான்
பூமியெங்கும் செங்கம்பளம் விரித்து
என் வரவிற்காய் காத்துக் கிடக்கிறதா
மணப்பெண்ணின் மனம்போல
குளப்பமும் திகைப்பும்
ஒன்றாய் ஒட்டிக்கொள்ள
விரைந்து மேலெழுந்து மீண்டும் பார்க்கிறான்
செங்கொடிகள் காற்றில் கையசைக்கின்றன
செஞ்சேலை சுற்றிய கட்டிடங்களும்
செங்கம்பளங்கள் விரித்த புல்தரையுமாய்
வடபுலத்தின் யாழ்நகர் சிவந்து கிடக்கிறது
மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும்
பட்டுக்களால் அலங்கரிக்கப்பட
மாற்றுத்துணிகூட இல்லா மனிதக் கூட்டம்
மருட்சியுற்றுப் பார்த்து நிக்கிறது
வறுமையே தேசியமான நாட்டில்
உழைப்பாளர் உதிரம் குடிப்பவரே
ஊர்வலத்தின் முன்னணியில்
உதிரம் குடிக்கும் அடையாளம்தான்
செங்கொடியாய் மாறியிருக்கிறதா?
புரியாத புதிருக்கு விடைதேடி
கதிரவன் மேற்கே விழுந்து
 மறைந்து கொள்கிறான்


புதுமைகள் செய்து புகழ்படைக்கும் புதியபூபாளம் இசைக் கலைஞர்கள்

.
அண்மையில் மெல்பேணிலும் சிட்னியிலும் நடைபெற்ற இளம்துளிர் 2012 இசை நிகழ்ச்சி அவுஸ்திரேலிய தமிழ் இசை நிகழ்சிகளின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லைப் பதித்துள்ளது.      பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



புகழ்பூத்த இளம் இசைக் கலைஞரான நிரோசன் சத்தியமூர்த்தியும் அவரது புதிய பூபாளம் இசைக் குழுவினரும் எத்தகைய மாபெரும் பாடகர்களுக்கும் இசைவழங்கக்கூடிய திறமை படைத்தவர்கள் என்பiதை மீண்டும் நிரூபித்துள்ளனர். பிரபல தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான முகே~;, பிரியதர்சினி, அனித்தா மற்றும் பாடகரும் நடிகருமான சியாம் ஆகியோரும் உள்ளுர்க் கலைஞர்களும் மிகவும் சிரமமான பாடல்களையும் அற்புதமாகப் பாடினார்கள்.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி!

_

1/5/2012

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலியானார்கள். அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர்.

இன்று மட்டும் இரண்டு காட்சிகள் -கானா பிரபா



.
பத்து வருஷங்களுக்கு முன் தொழில் நிமித்தம் சீனாவுக்குப் போனபோது ஒரு மாலைப்பொழுதில், சக வேலையாட்களோடு சென்ற நிகழ்வு சீனர்களின் கலை, பண்பாட்டு அம்சங்களைத் தழுவி அமைக்கப்பட்ட நடனங்களைத் தாங்கியிருந்தது. அந்த இரண்டு மணி நேர நிகழ்வில் சீனர்கள் தங்களின் வரலாற்றை, வாழ்வியலை தம் பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையோடு நடனங்களாகக் கொடுத்த போது சொக்கிப் போனேன் நான். அதற்குப் பின்னான தாய்லாந்து, மலேசிய, கம்போடியப் பயணங்களில் தவறாது அந்த நாட்டின் கலாச்சார நடன நிகழ்வுகளைக் காண வேண்டும் என்ற முனைப்பை அமுல்ப்படுத்திக் கொண்டேன். அவற்றைப் பார்த்ததோடு அந்த நடனங்களின் பரிமாணங்களைப் பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன். நான் சென்று வந்த ஆசிய நாடுகளிலே தத்தமது நாடுகளில் நிரந்தரமாக ஒரு கலாச்சார அமைப்பை நிறுவி நாள் தோறும் இரண்டு காட்சிகளாகத் தம் கலாச்சார நடனங்களை நிதமும் கொடுத்து வருகின்றார்கள். இதன் மூலம் அந்த நாடுகளுக்குச் சுற்றுலான் நோக்கில் சென்று வரும் பயணிகளுக்குக் குறித்த நாடுகளின் பண்பாட்டு விழுமியத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச சார்பான அமைப்புக்கள் மட்டுமன்றி, கம்போடியா போன்ற நாடுகளிலே தனியாரும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அதாவது பெரும் உணவகங்களில் நீண்ட கொட்டில்கள் அமைக்கப்பட்டு முன்னே பாரிய மேடை அமைக்கப்பட்டு அங்கே நடன நிகழ்வு நடந்து கொண்டிருக்க, அந்த நாட்டு இரவு உணவை ரசித்தவாறே பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.



என்னைப் பெற்ற அம்மா - கவிதை

.


இலங்கைச் செய்திகள்




இன, மத, கலாசார சமத்துவமே அவசியத் தேவை

ஜெனீவா தீர்மானத்தின் விளைவுகளை சமாளிக்க சிவில் சமூகத்தைப் பலப்படுத்தலாம்

விதப்புரைகளை நடைமுறைப்படுத்த முடியாதென்றால் ஆணைக்குழுவை ஏன் அரசு நியமித்தது?

இன முரண்பாடுகளால் பல தசாப்தங்களாக துருவமயப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைச் சமூகங்கள் மத்தியில் நல்லுறவையும் சௌஜன்யத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக பிரகடனங்களை விடுத்துவரும் நிலையில் தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலும் அதன் பின்னரான ஆர்ப்பாட்டங்களும் இனங்கள் மத்தியிலான வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக காயங்களை ஊதிப்பெருப்பிக்க வைப்பதற்கான அறிகுறிகளாகவே தென்படுகின்றன. 26 வருடங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தமானது அளவிட முடியாத உயிர், உடமை இழப்புகளை ஏற்படுத்தி மக்களை வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளியிருந்தது. இந்நிலையில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் நாடு துரிதமாக நடைபோடுமென்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டதுடன் உலக நாடுகளும் இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கே முன்னுரிமை கொடுத்து செயற்படுமாறும் அதற்குத் தேவையான அடிப்படைக் காரியங்களை தயக்கமின்றி முன்னெடுக்குமாறும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. 

வானொலி மாமா நா. மகேசனின் குட்டி நாடகம்



குறளில் குறும்பு

“இருக்காது அபிடி இருக்காது”


ஞானா: அப்பா......அப்பா......திருவள்ளுவர் கூடாஒழுக்கம் துறவியளுக்குத்தான் இருக்கக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறார் எண்டால் ஏற்றுக்கொள்வியளே?

அப்பா: அதெப்பிடிச் சொல்லலாம் ஞானா? கூடா ஒழுக்கம் உலகத்திலை உள்ள எல்லாருக்கும் கூடாதுதானே.

ஞானா: அப்பிடியெண்டால் அப்பா திருவள்ளுவர் கூடாவொழுக்கம் எண்ட அதிகாரத்தை ஏன் கொண்டுபோய் துறவறம் எண்ட பகுதியிலை வைச்சிருக்கிறார்?

அப்பா: அது வந்து ஞானா......இல்லறம் நடத்திற மக்களே உங்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லை நீங்கள் நினைச்சபடி நடவுங்கோ துறவியளுக்குத்தான் நல்லோழுக்கம் தேவை. ஆனபடியாலை கூடாவொழுக்ம் எண்;ட அதிகாரத்தைத் துறவறத்திலை கொண்டுபோய் வைக்கிறன் எண்டு சொல்லித்தான் வைச்சிருக்கிறார்.

சுந்தரி:  இதென்ன அப்பா நீங்கள். அவள் பிள்ளை ஞானா குறுக்குக் கேள்வி கேக்கிறாள் நீங்கள் போய் எடக்கு முடக்காய்ப் பதில் சொல்லுறியள்.

அப்பா: பின்னை என்ன சுந்தரி.....திருவள்ளுவர் ஒரு நியாயமும் இல்லாமல் கூடாவொழுக்கம் எண்ட அதிகாரத்தைத் துறவறத்திலை வைச்சிருப்பாரே? இல்வாழ்க்கை வாழிறவை கட்டவிட்டு விட்ட மாடுகள் மாதிரித் திரியலாமே? இல்லறவியலிலை ஒழுக்கமுடைமை எண்ட ஒரு அதிகாரம் வைச்சிருக்கிறார் தானே.

அவுஸ்திரேலியாவில்..........கலை, இலக்கிய ஊடகவியலாளரின் வருடாந்த ஒன்றுகூடல்

.

மெல்பனில் 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

மாலதி முருகபூபதி (செயலாளர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)

அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் அனுபவப்பகிர்வு இலக்கிய சந்திப்புகளை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு மெல்பனில் நடைபெற்றபோது அதன் நடப்பாண்டு தலைவராக எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. பாடும்மீன் சு. சிறிகந்தராசா ஏகமனதாக தெரிவானார்.

அவரது தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல செயற்குழுக்கூட்டங்களில் பேசுபொருளாக இருந்தது சங்கம் வருடாந்தம் நடத்தும் எழுத்தாளர் விழாவாகும்.. தமிழ் கலை, இலக்கிய, ஊடக குடும்பமாக இயங்கும் எமது சங்கம் இம்மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் 12 ஆவது எழுத்தாளர்விழாவை சில அரங்குகளில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சிறிகந்தராசா தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், மெல்பன், சிட்னி, கன்பரா வாழ் கலை, இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் பங்கேற்று கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளவுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல்போன 600 சிறுவர்கள் பற்றிய தகவல் இன்னமும் இல்லை கவலை தெரிவிக்கிறது பிரிட்டன்

Thursday, 03 May 2012

சிuk_flag_றுவர்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு மத்தியிலும் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருவதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது பிந்திய மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் கவலை தெரிவித்திருக்கிறது.

மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.உள்ளூர் ஊடகங்களின் பிரகாரம் 2011 இல் பொலிஸார் சிறுவர் துஷ்பிரயோகம்,வல்லுறவுகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையான விபரங்களை பதிவு செய்திருப்பதை பார்க்கக்கூடியதாக உள்ளது. வர்த்தக ரீதியான பாலியல் நடவடிக்கைகளுக்காக 6 ஆயிரம் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கணிப்பீடுகள் சில தெரிவிக்கின்றன. துஷ்பிரயோகம்,பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட சிறாருக்கு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் பாதுகாப்பை வழங்கியுள்ளது, ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பரந்தளவிலான செயற்பாட்டுத்திட்டங்கள் இல்லை என்று பிரிட்டனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் இடங்களென அடையாளம் காணப்பட்டவை இலங்கையில் உள்ளன.குற்றமிழைப்போர் மீது எப்போதுமே உரிய முறையிலான கண்காணிப்பு இருப்பதில்லை என்று உள்ளூர் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மனச்சாட்சியின் கைதியின் பாராளுமன்றப் பிரவேசம்

.
மியன்மாரின் ஜனநாயக இயக்கத் தலைவி ஆங் சான் சூகி நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் மூலமாக, சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் எதேச்சாதிகார ஆட்சிக்கெதிராக போராட்டத்தை ஆரம்பித்ததற்குப் பிறகு முதற்தடவையாக அரசியல் பதவியொன்றை ஏற்றிருக்கிறார். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இராணுவ கும்பல்களின் கொடுங்கோன்மையின் கீழ் இருந்து வந்த மியன்மாரைப் பொறுத்தவரை சூகியின் பாராளுமன்ற பிரவேசம் புதியதொரு அரசியல் யுகத்தின் ஆரம்பமாக அமைகிறது. ஏப்ரல் முதலாம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 44 தொகுதிகளில் போட்டியிட்ட சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய கழகம் 43 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இடைத் தேர்தல்களுக்குப் பிறகு ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமான போது "அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு' உறுதிமொழியெடுத்து பதவிப் பிரமாணம் செய்ய முடியாதென்று சூகியும் அவரது கட்சி உறுப்பினர்களும் மறுத்துவிட்டனர். அரசியலமைப்பைப் "பாதுகாப்பது' என்ற சொல்லுக்குப் பதிலாக அரசியலமைப்பை "மதிப்பது' என்ற சொல்லைப் பயன்படுத்தி பதவிப் பிரமாணம் செய்யவே அவர்கள் விரும்பினார்கள்.

அவுஸ்திரேலியாவில் 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

.
மாலதி முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 12 ஆவது விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணி வரையில் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

சிறுவர் அரங்கு, மாணவர் அரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு, நூல் வெளியீட்டு அரங்கு, கலையரங்கு உட்பட ஏழு அரங்குகளில் நடைபெறவுள்ள பன்னிரண்டாவது தமிழ் எழுத்தாளர்விழாவில் ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளும் தமிழ் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா?’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு இங்கு வதியும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள அனுபவம் என்று கருதப்படுகிறது.
.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 10வது ஆண்டு நிறைவு விழா
கலையொலி மாலை 2012 (மெல்பேண்  நிகழ்வு)  - கார்த்திகா கணேசர்


ATBC என மக்களால் போற்றப்படும்  வானொலி  தளிர் நடை  போட்டு வாழ்ந்து 10 வயதை எட்டிவிட்டது.பலவிதமான நிகழ்ச்சிகளையும் மனதிற்கு இதமாக வளங்கும் வானொலியின் 10வது ஆண்டு விழா அன்சாக் தினத்தில் மெல்பேணில் கலையொலி மாலை 2012  என கொண்டாடப்பட்டது.
சம்பிரதாய விளக்கேற்றல் தமிழ்வாழ்த்து என்பவற்றை அடுத்து மெல்பேண் கலையக பொறுப்பாளரும் சிட்டுக்குருவி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சாந்தினி புவனேந்திரராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.  ATBC   யின்  நிர்வாக அமைப்பாளரான திரு. வை.ஈழலிங்கம் அவர்கள் வானொலியின் நோக்கம் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறினார்.  ATBC  யின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தோரையும் நினைவு கூர்ந்தார்.


ஏழு நாட்களில் பாகவதம்

         \

ஆச்சாரியர் ஒருவர் புராணம் ஒன்றைச் சொல்ல அதை மக்கள் கேட்டுத் திளைப்பதுதான் மரபுவழி. செவின்ஹில்ஸ் (Seven Hills) பாடசாலை மண்டபத்தில் ஆச்சாரியார் (Acharya) ஸ்ரீ சச்சிதானந்த சாயி பாகவதம் எனும் மதுரமான பெட்டகத்திலிருந்து பகவானுடைய லீலைகளையும் பக்தர்களின் அனுபவங்களையும் ஏழு நாட்களாக, 5-4-2012ம் திகதி தொடக்கம் 12-4-2012ம் திகதி வரை, அள்ளி அள்ளித் தந்தார். நாமும் நு}று பேர் வரையில் பருகிப் பருகித் திளைத்தோம். காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரையும் சில இடைவேளைகளுடன் இறைவனைப் பற்றியும் பக்தர்களைப்பற்றியும் கேட்டுப் பரவசமானோம். ஒருவர் வாழ்க்கையில் இப்படியான அரிய சச்தர்ப்பம் கிடைப்பது அருமையிலும் அருமை. வேதங்கள் உபநிஷத்துக்களான ஒரு அடர்ந்த மிக உயர்ந்த மரமொன்றின் உச்சிக்கிளையில் ஒரு கனிந்த பழமொன்று தொங்கிற்று. பழங்களில் சிறப்பானதை உணரும கிளியொன்று அதனை ஒரு கொத்துக் கொத்திற்றாம். மதுரமான ரசம், பாகவதம், அதிலிருந்து ஒழுக பலரும் அதைப் பருகித்திளைத்தனர் எனக்கூறப்படுகிறது. பாகவத சப்தாகம் (ஏழுநாட்கள்) மிக இனிமையாகத்தானிருந்தது.

உலகச் செய்திகள்

விரைவில் திறப்பு விழா காணும் உலக வர்த்தக மையம்


லெபனான் எல்லையில் சுவர் எழுப்பும் இஸ்ரேல்


சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்

ஒசாமா நினைவு தினத்தில் ஒபாமாவை இலக்குவைத்து ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள்

விரைவில் திறப்பு விழா காணும் உலக வர்த்தக மையம்

Tuesday, 01 May 2012

world_trade_centre_001அமெரிக்காவில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையம் இரட்டைக் கோபுரங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றது.

கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 9ம் திகதி அமெரிக்கா நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோத விட்டு தகர்த்தனர். இந்த சம்பவத்தில் 2500 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் அமெரிக்க மக்களின் மனதில் நீங்காத துயரமாக இச்சம்பவம் இருந்தாலும் அதே இடத்தில் புதிய இரட்டைக் கோபுரங்களை கட்ட அமெரிக்கா தீர்மானித்தது.

விபுலானந்தரின் 120ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு


  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை கல்லடியில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் போது கல்லடியில் அமைந்துள்ள அன்னாரின் சமாதிக்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வியகத்தின் மட்டு. மாவட்டச் செயலாளர் த.கோபாலகிருஷ்ணன், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை சிரேஷ்ட உறுப்பினர் காசிபதி நடராசா, நூற்றாண்டு விழாச் சபை செயலாளர் ஜெயராஜ், ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயச் செயலாளர் என்.ஹரிதாஸ் மற்றும் பெருந்திரளான மாணவ மாணவிகள் மலர் மாலை அணிவித்தனர்.

 நன்றி வீரகேசரி இணையம்

அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக் கொண்ட இலங்கையருக்கு 15 வருடச் சிறை?


 Tuesday, 01 May 2012

ramanan_mylvaganam_இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா

.
கமலின் விஸ்வரூபம் புகைப்படம் வெளியானது

viswaroopam_1சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் புகைப்படம் மற்றும் 30 விநாடிகள் கொண்ட முன்னோட்டக் காட்சி வெளியானது.
கமல் ஹாசன் மிகவும் ரகசியம் காத்து வந்ததால் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் கமல் இந்தப் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார். விஸ்வரூபம் என்ற தலைப்பு உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா. இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதன் எழுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ 30 செக்கன்ட் முன்னோட்ட காட்சியும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது.




 ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்... “முழு நிறைவு பெறும் தறுவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாசன்’ என்று முடிகிறது.இந்த முன்னோட்டக் காட்சியை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தை காட்டுவதாக உள்ளது. எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.



nantri thinakkural