இந்த உலகில், மிகச்சிறிய சவப்பெட்டிகளே சுமப்பதற்கு மிகவும் கனமானவை...
தாஜ் முகமது, பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய இடுகாட்டில் (ரஹ்மான் பாபா இடுகாடு) பிதாமகனாக இருக்கிறார்.
அன்றைக்கு அவர் மிக பரபரப்பாக, பதற்றமாக இருந்தார். ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு தேநீர் அருந்தும்போது நம்மிடம் பேசினார். அவருக்கு வயது 43. அவரது இரண்டு மகன்களுமே அவருக்கு உதவியாக அதே இடுகாட்டில்தான் பணியில் உள்ளனர். ஒரேநாளில் அதிக அளவில் குழிதோண்டியதால் அவரது உடையில் மணல் படிந்திருந்தது. உடையில் புழுதியும், முகத்தில் கவலையுமாக காட்சியளித்தார்.
அப்போது அவர் பேசியது, "இதுவரை நூறாயிரம் சவங்களை புதைத்துள்ளேன். ஆனால், ஒருபோதும் கண்ணீர் சிந்தியதில்லை. ஏனென்றால் அது விதிமுறைகளுக்கு புரம்பானது. ஆனால், விதிமுறைகளை தகர்த்தெரிந்து இன்று அடக்க முடியாமல் அழுது விசும்பினேன். இன்னும் அழுது கொண்டிருக்கிறேன். காரணம், நான் அடக்கம் செய்தது நூற்றுக்கணக்கான குழந்தைகளை.