தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு"
விடைபெற்ற எங்கள் விமல் அண்ணா ! 🎙️கானா பிரபா
விமல் சொக்கநாதனின் கம்பீரக்குரல் ஓய்ந்தது!
August 3, 2023 6:00 am
இலங்கை வானொலி ஊடாக தமிழ் பேசும் மக்களை வசீகரித்த மாபெரும் கலைஞனின் மறைவினால் அபிமானிகள் பெருந்துயர்!
உலகப் புகழ்பெற்ற லண்டன் பி.பி.சி வானொலியின் ஒலிபரப்பாளரும், தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும், சட்டத்தரணியுமான விமல் சொக்கநாதன் லண்டன் மாநகரில் அகால மரணத்தைத் தழுவினார் என்ற செய்தி ஏராளமான மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் எண்பதுகளில் போர் உக்கிரமடைந்த காலத்தில் பி.பி.சி தமிழோசை பிரபல்யம் மிக்கதாக விளங்கியது. போரின் நெருக்கடிகளிலும், மின்சாரமின்மை, மின்கலங்களுக்கு (பற்றரி) தடை என்பனவற்றுக்கு மத்தியிலும் சைக்கிள் டைனமோக்கள் மூலம் வானொலியை இயக்கி பி.பி.சி வானொலியை தமிழ் மக்கள் கேட்டுவந்தனர்.
தமிழோசையின் அப்போதைய பொறுப்பாளர் ‘சங்கர் அண்ணா’ என அன்பாக அழைக்கப்படும் சங்கரமூர்த்தி, ‘ஆனந்தி அக்கா’ என அன்பாக அழைக்கப்படும் மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் மற்றும் விமல் சொக்கநாதன் ஆகியோர் அக்காலத்தில் மக்களின் பேரபிமானம் பெற்ற ஒலிபரப்பாளர்களாக இருந்தார்கள். இவர்களது குரலைக் கேட்க இரவு 9 மணிக்கு வானொலியை சிற்றலை வரிசைக்கு திருப்புவது இலங்கைத் தமிழர்களது வழக்கமாகவிருந்தது.
மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேர்ண் ….அவுஸ்திரேலியா
உயிரினுக் குள்ளே உயிரினைத் தாங்கும்
உயரிய பிறப்பே பெண்ணவள் ஆவாள்
உணவினை மறப்பாள் உறக்கத்தை துறப்பாள்
கனிவெனும் உணர்வை உளமதில் கொள்வாள்
நினைவெலாம் பாசம் நிறைத்துமே நிற்பாள்
உலகிலே என்றும் உன்னதம் பெண்ணே
பூமியும் பெண்ணே சாமியும் பெண்ணே
ஓடிடும் நதியெலாம் பெண்ணே என்போம்
சக்தியும் பெண்ணே சித்தியும் பெண்ணே
எத்திசை பார்க்கினும் பெண்ணே தெரிவாள்
சாமியாய் பார்க்கும் பெண்ணைச் சமூகம்
சகதியில் வீழ்த்துதல் முறையே அல்ல
தாலியைக் கட்டி தர்மத்தை உடைத்து
மாதர்க்கு மாவலி கொடுப்பது முறையா
கட்டிய மனைவியை எட்டியே உதைப்பதும்
வீட்டினை விட்டு விரட்டியே விடுவதும்
வீதியில் வைத்து வைதுமே நிற்பது
சாதனை அல்ல சண்டாளம் ஆகும்
உலகில் பெற்றவள் பெண்ணே ஆவாள்
அவளால் பிறந்து அவளால் வளர்ந்து
அவளுக்கே துன்பம் கொடுப்பது அடுக்குமா
தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்
நோயில் எமக்கு மருந்துமாய் மாறுவாள்
வேராய் இருப்பாள் நீராய் இருப்பாள்
வீழ்ந்து விடாமல் தாங்கியும் நிற்பாள்
எங்கே காணோம் - கண்ணன் செல்வராஜ்
.
மாடி வீட்டு தோட்டமுண்டு
மாசகற்ற ஆட்கள் உண்டு
மதிய விருந்து படையலுண்டு
மந்திரி போல் வாழ்க்கையுண்டு
கஷ்டம் வந்து கதறி அழுது
கண்ணீர் வெள்ளம் வருகையிலே
கை பிடித்து கண் துடைத்த
கந்தல் சேலை எங்கே காணோம்
கட்டிலுண்டு மெத்தையுண்டு
கஸ்டமில்லா வாழ்க்கையுண்டு
பஞ்சு மெத்தை விரிப்புமுண்டு
பால் சோறோ நிதமுமுண்டு
ஆழ்மனதில் யாரும் அற்ற
அச்ச எண்ணம் தோனையிலே
அள்ளி தூக்கி அரவணைத்த
அப்பாவின் கை எங்கே காணோம்
தங்கமுண்டு வெள்ளியுண்டு
டைட்டன் வாட்சும் கையிலுண்டு
ஐந்து பென்ஸ் காருமுண்டு
ஆடி காரோ அருகிலுண்டு
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 75 பிரான்ஸிலிருந்து எழுதப்படும் பதிவு ! இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு சிறுகதை ! ! முருகபூபதி
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.
எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இந்த 75 ஆவது அங்கத்தை பாரிஸ் மாநகரில் அமைந்த B & B Hotel அறையிலிருந்து எழுதுகின்றேன்.
கனடா – கட்டார் – இலங்கை
பயணங்களை நிறைவுசெய்துகொண்டு, வந்த களைப்பு
நீங்குவதற்கு முன்னர் மற்றும் ஒரு நீண்ட பயணத்திற்கு
தயாராகிய நிலையில் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாரிஸ் வந்து சேர்ந்திருக்கின்றேன்.
வென்மேரி அறக்கட்டளையின்
இரண்டாவது சர்வதேச விருது விழாவுக்காக வரநேர்ந்திருக்கிறது.
இந்த அறக்கட்டளையின் நிருவாக
இயக்குநர் வென்ஸிலாஸ் அநுராவும் எனது பால்ய கால தமிழ் ஆசான் ( அமரர் ) பண்டிதர் க.
மயில்வாகனன் அவர்களின் மகன் மகேசானந்தனும் பாரிஸ் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்று
அழைத்துச்சென்று மேற்குறித்த B
& B Hotel இல் தங்க வைத்தனர்.
எங்கேயிருந்தாலும் இந்தத்
தொடரை எழுதவேண்டிய கடப்பாடு எனக்கிருக்கின்றமையால், மீண்டும் உங்களை இந்த 75 ஆவது அங்கத்தின் ஊடாக சந்திக்கின்றேன்.
கடந்த 74 ஆவது அங்கத்தில் கிழக்கு பல்கலைக்கழக
தமிழ்த் துறை மாணவர்களுடனான சந்திப்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தப் பதிவு தொடர்பாக சிலர் தங்கள் முகநூலில் கருத்துக்களை
தெரிவித்திருந்ததாக தகவல் வந்தது.
மாணவர் மத்தியில் வாசிக்கும்
பழக்கத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும், அவர்களிடத்தில் சுயமாக சிந்தித்து கேள்வி கேட்கும் துணிவை வளர்க்கவேண்டும் என்பது
பற்றியும் சிலர் சொன்னார்கள்.
நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருந்த கிழக்கு பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஒரு மாணவி மாத்திரம் விரிவுரையாளர்களின் வற்புறுத்தலையடுத்து எழுந்துவந்து அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் பணிகள் – தமிழ்க்கல்வி பற்றிக் கேட்டார். அவருடைய கேள்விக்கு விரிவாக பதில் சொன்னேன் எனவும், அதுபற்றி அடுத்த அங்கத்தில் குறிப்பிடுவேன் எனவும் சொல்லியிருந்தேன் அல்லவா..?
இலங்கைச் செய்திகள்
‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும்
வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு பெற முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு
பல்வேறு துறைகளிலும் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா உறுதியளிப்பு
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்
பொலிஸ் அதிகாரப் பகிர்வு விடயம் பாரதூரமானது
‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும்
கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் ‘யாழ்நிலா’ விசேட குளிரூட்டப்பட்ட சுற்றுலா ரயில் இன்று 04 ஆம் திகதி முதல் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கட்டுரை இப்படியும் நடக்கிறது July 31, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு
தெரியும்.
உலகச் செய்திகள்
தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி: ட்ரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு
பாகிஸ்தான் அரசியல் பேரணியில் குண்டுத் தாக்குதல்: 44 பேர் பலி
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும் ஜப்பானும் திருப்தி
பிரதமரை பதவி விலகுமாறு பங்களாதேஷில் கடும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்
உக்ரைனுடன் அமைதிப் பேச்சு பற்றி ரஷ்ய ஜனாதிபதி சூசகம்
இம்ரான் கானுக்கு 3 வருட சிறை; 5 வருட அரசியல் தடை
தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி: ட்ரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு
2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக, முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரை இப்படியும் நடக்கிறது August 1, 2023
சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் ஆளும்தரப்பு எம்.பி.
சுரேன் ராகவன் உரையாற்றியபோது, தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்பவில்லை என்றும் வடக்கில் ஆளுநராக இருந்தவன் என்றவகையில் தான் இதனை கூறுவதாகவும் தெரிவித்திருந்தது வாசகர்கள் அறிந்ததுதான்.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 74 கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களுடன் ஒரு பொழுது ! இலங்கையில் கேள்வி கேட்கும் கல்வித்திட்டம் எப்போது தோன்றும்..?! முருகபூபதி
எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, கனடா பயணம் குறுக்கே வந்தமையால், அந்தப் பயண அனுபவங்களையும் எழுத நேர்ந்தது.
எனினும், கனடா அனுபவங்களை முழுமையாக நான் எழுதவில்லை. கனடாவில்
நண்பர் மூர்த்தி Tamil
Entertainment Television இற்காக என்னுடன்
நடத்திய கலந்துரையாடல் நேர்காணல் காணொளிப்பதிவு,
அவுஸ்திரேலியாவுக்கு நான் திரும்பிய பின்னர்தான் கிடைத்தது.
கடந்த ஐம்பது வருடகால எழுத்துலக அனுபவத்திலிருந்து நான் சில
புத்திக்கொள்முதல்களை பெற்றிருக்கின்றேன்.
வானொலிகள் – தொலைக்காட்சிகள்
– பத்திரிகைகள் – இதழ்கள் ஆகியன பேட்டி காணும்போது எச்சரிக்கையுடன்தான் இருக்கவேண்டும்
என்பது மிகவும் முக்கியமானது. முடிந்தவரையில் எம்மை, எமது பணிகளை நன்கு தெரிந்தவர்கள் எம்மிடம் கேள்வி கேட்டால், பதில்
சொல்வதற்கும் எளிதாக இருக்கும். உள்நோக்கங்களுடன்
கேள்வி கேட்பவர்களிடமிருந்து சாதுரியமாக தப்பிக்கொள்ளவேண்டும்.
சிண்டு முடிந்துவிடும்
கேள்விகள் குறித்து எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.
இலங்கையை விட்டு புறப்படுவதற்கு
முதல்நாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு
வந்தது. தற்போது இலங்கையில் எத்தனை வானொலிகள் ஒலிக்கின்றன என்பது எனக்குத் தெரியாது.
நான் இலங்கையில் நின்ற
சமயம் சில வீடுகளில் வானொலிகள் ஒலிப்பதைக் கேட்டேன். பல வீடுகளில் தமிழகத்தின் தொலைக்காட்சி
நாடகங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தன.
அவற்றின் தரத்திற்கும்
தகுதிக்கும், சிங்கள மொழியிலும் Sub
Title ஓடுகிறது. அதற்காக தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள்
உழைப்பினையும் நேரத்தையும் செலவிடுவது ஆச்சரியமாக இருந்தது.
மாமியார் – மருமகள் சண்டை சச்சரவு – பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை
- ஆளுக்கு ஆள் துரோகம் முதலான சின்னத்தனமானதும் சில்லறைத்தனமானதுமான தமிழக தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே சிங்கள
Sub Title எழுதி பதிவேற்றுகிறார்களே என்று ஆச்சரியமடைந்தேன்.
இலங்கையில் முன்னர் நான் இருந்த காலப்பகுதியில் பல தரமான சிங்கள தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து ரசித்திருக்கின்றேன். அவற்றைப்பார்த்து தமது ரசனையை வளர்த்துக்கொண்ட சிங்கள மக்களுக்கு தமிழக தமிழ் தொலைக்காட்சி நாடகங்கள் ஏன் இவ்வாறு வஞ்சனை செய்யவேண்டும் என்பதுதான் தெரியவில்லை.
சொல்லத்தான் நினைக்கிறன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
நாவலாசிரியராகவும்,பயணக் கட்டுரையாளராகவும் தமிழ் வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவர் இதயம் பேசுகிறது மணியன். கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் , ஜோதிடராகவும் திகழ்ந்தவர் வித்துவான் வே . லக்ஷ்மணன். இவர்கள் இருவரும் எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமாக இருந்ததினால் திடிரென்று படத்தயாரிப்பாளர் ஆகும் யோகம் இவர்களுக்கு கிட்டியது. எம் ஜி ஆர் நடிப்பில் இதய வீணை படத்தை தயாரித்து நாலு காசு பார்த்த இவர்கள் அடுத்து கே பாலசந்தர் டைரக்சனில் படம் ஒன்றை தயாரித்தார்கள். மணியன் ஆனந்த விகடனில் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே படமானது. படத்துக்கு சொல்லத்தான் நினைக்கிறன் என்று பெயரிடப்பட்டது.
வயதில் மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் சிவராமன். அவருடைய மூத்த மகளின் வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது. சிவராமன் வேலை செய்த அலுவலகத்திற்கு புதிய மானேஜராக வருகிறான் ராகவன். சிவராமன் குடும்பத்துடன் அவனுக்கு ஏற்படும் அறிமுகத்தைத் தொடர்ந்து தனது வீட்டின் ஒரு பகுதியில் அவர்களை வாடகைக்கு குடியமர்த்துகிறான் அவன். மூத்த இரு பெண்களும் அவனை மானசீகமாக காதலிக்க, இளைய பெண் புஷ்பாவை மானசீகமாக காதலிக்கிறான் ராகவன். இதனிடையே ராகவனின் பணக்கார நண்பன் கமல் கண்களில் காணும் இளம் பெண்களை எல்லாம் தன் படுக்கையறைக்கு விருந்தாக அழைப்பவன் . அவனுக்கும் புஷ்பாவுக்கு ஏற்படும் மோதல் சவாலாக உருமாறுகிறது. கமலை திருத்துவதாக சவால் விடும் அவளை தன் படுக்கைக்கு விருந்தாக்குவதாக சபதம் செய்கிறான் கமல். அதே சமயம் ராகவன் உதவியுடன் மூன்று பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முனைகிறார் சிவராமன். காதலை வெளியே சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் இவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் மீதிக் கதை.
கட்டுரை இப்படியும் நடக்கிறது August 2, 2023
தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
இப்போதெல்லாம் ஒருவரையொருவர் விமர்சிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.
கட்டுரை இப்படியும் நடக்கிறது August 3, 2023
இலங்கையில் தமிழர்கள் ஆதிக் குடிகள் என்பதை தனது
எழுத்துக்களாலும் ஆய்வுகளின் சான்றாதாரங்களாலும் நிறுவிய பெருமைக்குரியவர் பேராசிரியர் பத்மநாதன்.
கட்டுரை இப்படியும் நடக்கிறது August 4, 2023
பொதுஜன பெரமுனவிலிருந்து ஓர் அணியை பிரித்து எடுத்து
அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள ரணில் தயாராகிவருவது குறித்து இந்தப்பத்தியில் சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
கட்டுரை இப்படியும் நடக்கிறது August 5, 2023
குதிரை பந்தயத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க
வாய்ப்பிருப்பதையறிந்த இரு நண்பர்கள் ஆளுக்கு ஒரு ‘ரேஸ்’ குதிரையை வாங்கினர்.
சினிமா ‘கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’
August 4, 2023
அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் நடிகை கயல் ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்க, நடிகரும், தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
வி. இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோகன் ஷெவனேஷ் இசையமைத்திருக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ரஞ்சனி தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மை சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம்.
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண பெண் இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் சிக்கிக் கொண்டு பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார். என்பதை உச்சகட்ட காட்சி வரை பல எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய சைக்காலஜிக்கல் திரில்லராக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார். நன்றி ஈழநாடு
கட்டுரை இப்படியும் நடக்கிறது August 6, 2023
நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள அதற்காக
தனியாக படிக்கவேண்டும் போல இருக்கின்றது.