இயேசு கீர்த்தனை


 



கிறிஸ்மஸ் குடில் விடுக்கும் அழைப்பு

கிறிஸ்மஸ் குடில் அமைக்கும்போது பெத்லெகேமில் நடந்தவை நம் முன்னே வருகின்றன. உணர்ச்சிகளைக் கிளருகின்றன. நம் மனதைத் தொடுகின்றன. என்னே எளிமை, என்னே ஏழ்மை! தாழ்ச்சியை, ஏழ்மையை, தன்னல மறுப்பை ஏற்க இது நம்மைத் தூண்டுகிறது.

பெத்லெகேமில் இருந்து சிலுவை வரை. நம் சகோதரர்களில் துன்புறுவோர்க்கு இரக்கம் காட்டி இயேசுவைப் பார்க்கவும் அவருக்குப் பணிவிடை செய்யவும் இக்குடில் அழைப்பு விடுக்கிறது. ( மத். 25:31-46 இச்சிறியோரில் ஒருவருக்கு நீங்கள் பணிவிடைச் செய்தபோதெல்லாம் எனக்கே பணிவிடை செய்தீர்கள்.)

பற்றாதே என்கிறது ஞானம் பற்றுவேன் என்கிறது மோகம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

 

வெட்டாதே என்கிறது மரம்
 வெட்டுங்கள் என்கிறது குளம்
 தட்டாதே என்கிறது மனம்
 தட்டுவேன் என்கிறது குணம் 
 முட்டாதே என்கிறது மூப்பு
 முட்டுவேன் என்கிறது கொழுப்பு
 பற்றாதே என்கிறது ஞானம்
 பற்றுவேன் என்கிறது  மோகம்  !

 கெடுக்காதே என்கிறது தருமம்
  கெடுத்திடு என்கிறது அதர்மம்
  நடிக்காதே என்கிறது நட்பு
  நடித்திடு என்கிறது துரோகம்
  குடிக்காதே என்கிறது சிறப்பு
  குடித்திடு என்பது வெறுப்பு
  படிக்காதே என்பது இழப்பு
  படித்திடு என்பது மதிப்பு  !

அப்துல் ஜப்பார் என்ற ஊடக அடையாளம் மறைந்தது


கானா பிரபா



இன்று பெருமதிப்புக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது சக தமிழர்கள் எல்லோரும் தம்
 டும்பத்தில் ஒரு நெருங்கிய சொந்தத்தை இழந்த சோகத்தில் இருக்கின்றார்கள்.


இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற வேறுபாடுகளை அப்துல் ஜாபர் போன்ற மிகச் சிலரே களைந்து தமிழர் என்ற பொதுமையோடு இயங்குகிறார்கள்.

அறுபது ஆண்டுகளைக் கடந்த ஊடகப் பணி, அதைத் தாண்டி மனித நேயராக எம் தமிழ் உறவுகளின் சுதந்தர வேட்கையை தன் உணர்வாகக் கொண்டு இயங்கியவர்.

இணையில்லாத் திருவடியை எளியேனைப் பற்றவிடு !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
    



அந்தஸ்து ஆடம்பரம் அவருக்குச் சுவைக்கவில்லை
ஆதியந்தம் இல்லாத அரும்பொருளே இனித்ததுவே  
மண்ணகத்து பிறந்திறந்து வாழ்வதனை விரும்பாமல்
கண்ணிறைந்த கடவுளது கழல்பற்ற விழைந்தனரே 

ஏகனாய் கண்டார் அநேகனாய் கண்டார்
பாசமாய் கண்டார் பரஞ்சோதியாய் கண்டார் 
வேதமாய் கண்டார் வித்தகனாய் கண்டார்
ஆதியே என்றார் அவனடியினைப் பற்றினார் 

நமச்சிவாய வென்று நாதனைப் பணிந்தார் 
இமைப்பொழுதும் என்னை நீங்காதான் நீயென்றார்
கோகழியாண்ட குருவென்றார் ஆகமும் நீயெயென்றார்
அவனதுதாழ் பணிந்தார் அடைக்கல மவர்புகுந்தார் 

மாசற்ற சோதியே மயக்கமிலாப் பேரறிவே
மாசுடைய மனமதனை மாற்றிவிடு எனப்புகன்றார்
பாசமெனும் வலையினிலே கட்டுண்ட நாயேனை 
பரம்பொருளே காத்துவிடு பதம்பணிந்தேன் எனவுரைத்தார் 

இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் அங்கம் -03 முருகபூபதி

பேராசிரியர்  கைலாசபதியின்  அன்றைய   தினகரன் பத்திரிகை பணி குறித்து வெளியான ஒரு பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

 

  


இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம்,  பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

 

தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சினைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்களாயின. அந்தவகையில் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரிகையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு முக்கிய பங்குண்டு.

 

பேராசிரியர் தினகரன் வாரப் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக


பதவியேற்ற காலத்தில்

பலதரப்பட்டோரை தன்னோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன் மாத்திரமின்றி  மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தார். 

 

செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா, சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி சரவணபவன்,  தேவன், அ. முத்துலிங்கம், , என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்ற்பாலன், நீர்வை பென்னையன்,                   ஏ. இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

சி.வி. வேலுப்பிள்ளையின்  வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலியன தொடர்கதையாக வெளிவந்தன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.

இருளில் இருந்து மக்களுக்கு பேரொளி

இயேசுவின் பிறப்பு இருளில் இருந்த மக்களுக்கு பேரொளி. மரணத்தின் நிழல் சூழ்ந்துள்ள மக்களுக்கு உயிர்ப்பின் ஒளி. அமைதியற்ற மக்களுக்கு அமைதியின் தூதுவனாக பிறந்தவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இறைசாயலிலே படைக்கப்பட்ட மனுக்குலம் தீமையின் பிடிக்குள்ளும் கொடிய நோய்க்குள்ளும் ஆட்கொள்ளப்பட்டு துன்புற்ற போது, தீமையும் கொடுங்கோன்மையும் தலைவிரித்தாடிய போது அதிலிருந்து மனுக்குலத்தினை விடுவிக்க கடவுள் மனிதனாக வந்த அதி உன்னத நிகழ்வே கிறிஸ்து பிறப்பு.

கடவுள் மானிடரை தேடி வந்து மனிடராக பிறந்து தன்னை முழுதுமாக தியாகம் செய்து மனுக்குலத்தை தீமையின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான தியாகத் திருநாளாகவும் கிறிஸ்மஸ் திகழ்கிறது.

உலகில் பதியும் ஒரு குழந்தையின் பிஞ்சுப் பாதம்

* நத்தார்  உணர்த்தும் பொருள்

உலகெங்கும் உள்ள மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ந்து கொண்டாடும் நத்தார் பண்டிகை இன்றாகும். இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக் குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த குழந்தை இன்றும் உலக மக்களுக்கு அன்பையும் அமைதியையும் சமாதானத்தையும் நினைவுபடுத்துகின்றது.

'நாமெல்லாம் செல்வந்தர்கள்'. 'அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (2கொரி 8:9).

இறைவனின் பாதப் பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் இந்நாள். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேயத்திற்குள் நுழைந்த இரவு இன்றைய இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள்.

பெரும்பொருளை நினைக்கவைக்கும் பீடுடைய மார்கழி !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

          

மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி - 

சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்." பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானதுஉயர்வானது என்பது பொருளாகும்.

மக்களின் துன்பங்கள் நீங்குவதற்கு உலக இரட்சகரைப் பிரார்த்திப்போம்

கிறிஸ்தவ மக்கள் உலக இரட்சகரான இயேசு நாதரின் பிறப்பின் திருநாளான 'நத்தார் பெருநாளை' இன்று அமைதியுடன் கொண்டாடுகின்றனர். வழமையாக இந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியின் மாதமாகும். ஆனால் இன்று உலகெங்கிலும் மகிழ்ச்சி, மனஅமைதி இல்லை. கொரோனா காரணமாக மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ பழைய ஏற்பாடு வரலாற்றின்படி உலகைப் படைத்த இறைவன் ஆறு நாட்களில் நிலம்,நீர், புல் பூண்டு, செடிகொடி, பிராணிகள், நிலத்தில் ஊர்வன வகைகளை படைத்து ஆறாம் நாளன்று இவற்றை அனுபவிக்க ஆதாம்-ஏவாள் என்ற ஆண்-பெண் இருவரையும் படைத்து ஏழாவது நாளான ஞாயிறு ஓய்வாக இருந்தார்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 46 – கின்னரம்/கின்னாரம் – சரவண பிரபு ராமமூர்த்தி கின்னரம்/கின்னாரம் – நரம்புக்கருவி

கின்னாரம் ஒரு பழந்தமிழர் இசைக்கருவி. திருமுறைகளில்


கின்னாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. கின்னாரம் முற்றிலும் தமிழ்நாட்டில் இருந்து அழிந்து விட்டது என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் கின்னாரம் இன்னும் அழியவில்லை என்று இன்ப அதிர்சி கொடுத்தார் வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு க. பொன்னுசாமி அவர்கள். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனப்பகுதியில் வசிக்கும் திரு அருணாச்சலம் அவர்களிடம் இந்த கின்னாரம் இசைக்கருவி இருப்பதாகச் சொன்னார். அதைப் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்தார்.

 

திரு அருணாச்சலம் அவர்கள் கூறுகையில் ”இந்த கின்னாரம் செய்ய கின்னார சுரைக்காயத்தான் பயன்படுத்துவோம். கூட ஓடை மூங்கிலு. தலமுறை


தலமுறையா எங்க குடிசை ஓரத்துல கின்னார சுரையைப் பயிரிடுவோம். அந்த சுரையை வச்சுதான் புதுசா கின்னாரம் செய்வோம்." கின்னாரம் ஒரு நரம்பிசைக்கருவி. ஒற்றை நரம்பு இருக்கும். கின்னார சுரைக்காயின் உட்புற சோற்றை நீக்கி நன்கு உலர்த்தி, ஒடை மூங்கில் எனப்படும் மூங்கில் கட்டையுடன் பொறுத்தி, நரம்பு சேர்த்து கட்ட கின்னாரம் இசைக்கருவி தயார். இது அமைப்பில் துந்தினா என்கிற வட இந்திய இசைக்கருவியை ஒத்து இருக்கும்.

இலங்கைச் செய்திகள்

கொரோனா மரணம்: உடலை எரிப்பதற்கு காலி மேலதிக நீதவான் தடை உத்தரவு 

டிசம்பர் 26 முதல் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடைமுறையில் மாற்றம்

நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே

பிரித்தானிய விமானங்களுக்கு அதிகாலை முதல் தடை

கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறப்பு

ஜனாஸா எரிப்பு: தனது செயற்பாடுகளை விளக்குகிறது ஜம்இய்யத்துல் உலமா


கொரோனா மரணம்: உடலை எரிப்பதற்கு காலி மேலதிக நீதவான் தடை உத்தரவு 

காலி, தெத்துகொட பகுதியில், கொரோனா காரணமாக உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸாவை தகனம் செய்யாது, அதி குளிரூட்டியில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலகச் செய்திகள்

பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல் 

அரசியல் இழுபறிக்கு மத்தியில் நேபாள பாராளுமன்றம் கலைப்பு

அமெரிக்காவில் 9 மில்லியன் தடுப்பு மருந்துகள் விநியோகம்

தஞ்சக் கோரிக்கையாளர் படகு மூழ்கி 20 பேர் பலி

புதிய வகை கொரோனா ஜேர்மனியிலும் அடையாளம்


பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல் 

ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகைக் கொவிட்–19 நோய் நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்கொக் எச்சரித்துள்ளார்.

தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கும் வரை நேற்று விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

சிட்னி துர்க்கா கோவில் புது வருட பூசை 2021


எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 21 நந்திவாக்கியம்: சொல்லச்சொல்ல சோதிடம் எழுதி கிடைத்த சன்மானம் ! அரசியல் அதிகாரம் படைத்தவர்களும் மந்திரித்த நூலுக்குள்ளே அடக்கம் !! முருகபூபதி


னது  எழுத்துலகப்பிரவேசத்தின்   தொடக்க காலப்பகுதியிலிருந்து  1977 ஆம் ஆண்டு  நடந்த கலவரம் வரையில்  இலங்கையில் பல அரசியல், பொருளாதார மாற்றங்களும்  நிகழ்ந்தன.

1965 இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு  தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரஸும்  வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதும், 1970 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில்  லங்கா சமசமாஜக்கட்சி, மற்றும் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும்  இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தது.

அதனையடுத்து நிதியமைச்சரான கலாநிதி என். எம். பெரேரா இரவோடு இரவாக புழக்கத்திலிருந்த ஐம்பது ரூபா, நூறுரூபா நாணயத்தாள்களை இரத்துச்செய்துவிட்டு, புதிய நாணயத்தாள்களை


அறிமுகப்படுத்தினார்.

நானும் அப்பாவுடன் சென்று அவர் கைவசம் இருந்த பழைய தாள்களை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்னால் அதிகாலையே வரிசையிலும் நின்றிருக்கின்றேன்.  அப்பாவிடம் இருந்ததோ இருநூறு ரூபாதான்.  ஒருவரால் அந்தத் தொகையை மாற்றமுடியாதுபோகலாம் என்பதற்காக  ஒரு தாளை நானும் மற்றும் ஒரு தாளை  அவரும்  மாற்றுவதற்காக  என்னையும் அழைத்துச்சென்றார்.

இவ்வாறு  நீண்ட  வரிசையில் நின்று மக்கள்  தமது தேவைகளை மேற்கொள்ளவேண்டிய நடைமுறையை அன்றைய அம்மையாரின் கூட்டரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

பின்னாளில் அதே அரசில்தான் மக்கள் பேக்கரி வாசல்களில்  பாண் வாங்குவதற்கும்  நீண்ட  வரிசையில் நின்றனர்.

1970 முதல்  1977 வரையான காலப்பகுதியில்தான்  அதுவரையில்  பிரித்தானியாவின் ஆளுகைக்குள்ளிருந்த  இலங்கைக்கு   புதிய அரசியலமைப்பு வந்தது.  அத்துடன் செனட் சபை ஒழிக்கப்பட்டது.  இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் வந்தன.

இது யாழ்பாணமா ?அல்லதுகேரளவா ?  அல்லது  தமிழ்  நாட்டு  பொள்ளச்சியா?

 

வலைந்து  ஓடும் நீ நிரம்பிய வாய்க்கால் . அதில் துள்ளி குதிக்கும் மீன்கள் . வாய்க்கால்  அருகே  பசுமை நிறைந்த  வயல்கள் . வாய்க்காலின் இரு பக்கத்திலும் ஓங்கி வளர்ந்த சடைத்த    பல  வருட  வயசு உள்ள மரங்கள்  வாய்காலுக்கு அருகே ஒரு கோவிலும். A9  பெரும்  பாதையும்     அமைந்த தென்மராட்சி சாவகச்சேரியில்  உள்ள  இல்வாரை பகுதி புதிய சுற்றுலா மையமாக உருமாற்றம்  அடைகிறது என்றால் நம்புவீர்களா? ஒரு காலத்தில் யாவகர் தேசத்து  மன்னன்  சந்திரபானுஆட்சி செய்து யாவகர் வாழ்ந்த இடம் இது .மருவி  யாவகர் சேரி சாவகச்சேரி ஆயிற்று மகாவம்சத்தில் ,குறிப்பிட்டப்படி   ஜாவானிய ஆட்சியாளரான சந்திரபானுவின் படைகள் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் திருகோமலை  ஊடாக உள்ளே நுழைந்தன. மற்றும் அடி குழாய்கள் மற்றும் விஷ அம்புகளைப் பயன்படுத்தியாழ்ப்பாணத்தை  கைப்பற்றி ஆட்சி செய்தான்.

  சொடுக்கி பாருங்கள் 




அந்தகாரம் திரைவிமர்சனம்


தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது OTT யில் வெளிவந்துள்ள படைப்பு அந்தகாரம். இது ரசிகர்களை திருப்திப்படுத்தியதா, பார்ப்போம்.

கதைக்களம்

அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.

அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடுகிறார் வினோத்.இதை காட்டும் அதே நேரத்தில் ஒரு மனநல மருத்துவர் தன் ஒரு பேஷண்டால் தன் குடும்பத்தை இழந்து, மீண்டும் தன் புதிய பேஷண்டுகளை ஏதோ செய்ய முயற்சிக்கிறார்.

இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் எப்படி சந்திக்கிறது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்..

அர்ஜுன் தாஸ் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்லா வரவு, தன் கனத்த குரலில் மிரட்டியும், அதே வேளையில் பயந்தும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

வினோத்தும் கண் தெரியாத இளைஞராக பேய் ஓட்டும் நபராக அவர் செய்யும் விஷயங்கள் நம்மை திகிலடைய செய்கிறது.

டெக்னீக்களாக படம் செம்ம வலுவாக உள்ளது, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்ன அனைத்தும் பிரமாதம்.

இயக்குனருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் எல்லோருக்கும் இது புரியுமா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு

டெக்னீக்கள் விஷயங்கள்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட்

பல்ப்ஸ்

படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம்.

மொத்தத்தில் அந்தகாரம் முழுதிருப்தி சினிமா ரசிகர்களுக்கு.

நன்றி CineUlagam 

 


நியூ சவுத் வேல்ஸ் மாநில HSC தமிழ்ப் பாடநெறியில் சிகரம் தொட்ட ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்கள்



கானா பிரபா




நியூ சவுத் வேல்ஸ் மாநில HSC தமிழ்ப் பாடநெறியில் சிகரம் தொட்ட ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்கள் ATBC வானொலியில் வழங்கிய சிறப்புக் கலந்துரையாடல்

 


வாழ் வெல்லாம் தொடர்வதற்கு வழி வகுப்போம் வாருங்கள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 






தமிழன்னை எனை ஈன்றாள்
தமிழ்ப்பாலை ஊட்டி நின்றாள்
தாலாட்டும் போதும் அவள்
தமிமிழினிலே பாடி நின்றாள்
தடுக்கி நான் விழுந்தாலும்
தமிழ் வார்த்தை எழுந்ததுவே
அமிழ்தாக நான் நினைத்தேன்
அதை எண்ணி மகிழுகிறேன் !

ஊட்டி வளர்த்த தமிழ்
உவந்து பாட்டி உரைத்ததமிழ்
நாட்டுப் புற இசையை
நன்றாகச் சொல்லுந் தமிழ்
போட்டி என வந்தார்க்கு
சாட்டை என நின்றதமிழ்
நாட்டையே ஆண்ட தமிழ்
நந்தமிழே என மகிழ்வேன்  !

இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் அங்கம் -02 முருகபூபதி


லங்கைத்தலைநகரை எடுத்துக்கொண்டால், அங்கிருந்து வெளியான அனைத்து தமிழ், சிங்கள, ஆங்கில நாளேடுகள் மற்றும் வார இதழ்கள் அனைத்துக்கும் பின்னால் அரசியல் இருந்தது.

லேக்வுஸ், ரைம்ஸ் ஒஃப் சிலோன், தவஸ குரூப், வீரகேசரி, ஐலண்ட், விஜய  முதலான அனைத்துக்கும் பின்னால் அரசியலும் அரசியல் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் இருந்தனர்.

கொழும்பு கிரேண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்திலிருந்து வெளிவரத்தொடங்கிய  வீரகேசரி பத்திரிகை அமைந்த இல்லத்தில்தான் முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா, 1906 ஆம் ஆண்டு பிறந்தார்.  பின்னாளில் அவரும் அவரது சகாவான டட்லி


சேனாநாயக்காவும் அதனை வாங்கி ஆங்கில – சிங்கள பத்திரிகைகளும் வெளியிட்டனர்.

அதே ஜே. ஆர். ஜெயவர்தனாவின் நெருங்கிய உறவினரான அவருக்கு முன்னர்   1886 ஆம் ஆண்டு பிறந்த டொன் ரிச்சர்ட் விஜேவர்தனாதான் 1909 இல் ஆரம்பிக்கப்பட்ட தினமின தினசரி பத்திரிக்கையை 1914 இல் சொந்தமாக வாங்கி அதனை அவரே விநியோகிக்கத் திட்டமிட்டார். 1918 ஆம் ஆண்டில் Ceylonese என்ற ஆங்கில பத்திரிக்கையை வாங்கி அதனை Daily News  என்று பெயர் மாற்றி நாட்டின் மிகவும் பிரபலமான ஆங்கில செய்தித்தாளாக உருவாக்கினார். 1923 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான  Observer பத்திரிக்கையை வாங்குவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது.


Ceylonese
என்ற பத்திரிகையை சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களிடம் இருந்து அப்போது என்ன விலைக்கு அவர் வாங்கினார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 அன்றைய அதன் விலை பதினாறாயிரம் ரூபாதான்.

லேக்வுஸின் நிறுவனர், டீ. ஆர். விஜயவர்தனாவின் நெருங்கிய இரத்த உறவினர்தான் மூத்த பத்திரிகையாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா.

இவரது மகன்தான் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா.

The Island – திவயின,  சித்ரமித்ர  முதலான பத்திரிகைகளை ஆரம்பித்த உபாலி விஜேவர்தனாவும் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் மருமகன் முறையானவர்தான்.

தவஸ, SUN , தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி  உட்பட 16 இற்கும் அதிகமான பத்திரிகைகளை வெளியிட்ட எம். டீ. குணசேனா நிறுவனர் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் நெருங்கிய நண்பர்தான்.

'நன்றே நமக்குமோர் காலம்வரும்' என்று நறுந்தமிழ் வளர்த்திடக் காத்திருப்பீர்!.

 .


.................. பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்



('தங்கத் தாத்தா'வின் 'கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா? -- நித்தம்

காவல் புரிகின்ற சேவகா! ' ...என்ற பாடலின் மெட்டு) 












தாத்தா:- 

பள்ளிக் குச்சென்றிடும் பாப்பாவிடம் நானும்

       'படிக்கவா தமிழ்'என வரிந்தழைத்தேன்- தமிழ்

       'படிக்கவா தமிழ்'என வரிந்தழைத்தேன் 

துள்ளி நின்றேயவள் ஆங்கிலமொழி தன்னில்

       சொன்னசொல் நெஞ்;சினிற் சுட்டதம்மா!- பதில்

       சொன்னசொல் நெஞ்சினிற் சுட்டதம்மா!









சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர் அணியினரால் கொவிட்19 விழிப்புணர்வு செயற்றிட்டம்

 


சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர் அணியினரால் கொவிட்19 விழிப்புணர்வு செயற்றிட்டம்


வருமுன்  காத்து சமூகத்தை பாதுகாப்போம் கொவிட் 19 விழிப்புணர்வு
செயற்றிட்டம் சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர்களால் இன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமத்துவ கட்சியின் இளைஞர் அணியினரால் இக் குறித்த கொரோனா வழிப்புணர்வு
செயற்றிட்டமும், முககவசம் வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில்  கல்வியங்காடு சந்தை, நாவாந்துறை

சந்தை, கொட்டடி
சந்தை, உள்ளிட்ட பல இடங்களில் இவ் விழிப்புணர்வு செயற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம், சமூகத்தை பாதுகாப்போம் எனும் தொணிப் பொருளில்
மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையின் போது பொது
மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் கொரோனா தொடர்பான
தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.


பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி – நூல் நயப்பு இலங்கை வானொலிக்கு வயது 95

 

கானா பிரபா


இதே தினம் டிசெம்பர் 16, 1925 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று 95 வயதைப் பிடித்திருக்கின்றது.

ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையோடு, ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலி யுகம் என்று ஈழம் தாண்டி இந்தியா வரை கடல் கடந்து புகழோச்சியது வரலாறு.

இலங்கை வானொலி உலக ஜாம்பவான்கள் ஒரு பக்கம், இந்த வானொலி படைத்திட்ட நிகழ்ச்சிகள் இன்னொரு பக்கம் என்று “றேடியோ சிலோன்” காலத்துப் பசுமை நினைவுகளோடு வாழ்பவர்கள் பலர் இன்னும் அவற்றைச் சிலிர்ப்போடு அசை போடுவர்.

“நான் கண்ட சொர்க்கம்” படத்தில் நடிகர் கே.ஏ.தங்கவேலு எமலோகம் செல்லும் காட்சியில் “ரேடியோ சிலோன் மயில்வாகனன் இங்கேயும் வந்துவிட்டாரா?” என்று குறிப்பிடுவார்.
காணொளி


எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 20 சமயம் சார்ந்து இயங்கிய அமைப்பை சமூகம் சார்ந்து இயக்கவைக்க நடத்திய போராட்டம் ! விளையும் பயிர்களை முளையிலேயே உணர்த்திய அரும்புகள் !! முருகபூபதி



ணர்ச்சிக்கவிஞர் காசி. ஆனந்தனின் வருகைக்கு எதிராக எங்கள் ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதனால் எழுந்த அதிர்வலைகளின் பின்னர்,  இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபையின் 03 ஆம் வட்டாரத்தின் உறுப்பினருமான ( அமரர் ) ஜெயம் விஜயரத்தினமும் செயலாளர் ( அமரர் ) மருத்துவர் பாலசுப்பிரமணியமும்  என்னையும் சங்கத்தில் அங்கத்தவனாக இணைந்துகொள்ளுமாறு உறுப்பினர் விண்ணப்ப படிவம் தந்து சேர்த்துக்கொண்டனர்.

அப்போது எனக்கு 21 வயது.  என்னைப்போன்ற இளைஞர்களை


சங்கம் அக்காலப்பகுதியில் உள்வாங்கியதற்கு காரணமும் இருந்தது.

ஒரு அமைப்பினை நடத்தும்போது தோன்றும் சிக்கல்கள்,  வரும் கருத்துமுரண்பாடுகளை அதில் இணையும் இளம்தலைமுறையும் தெரிந்துகொண்டு  கூட்டுப்பொறுப்பினையும் உணரும்.

அவ்வாறு இணையாமல் வெளியே நின்றால்,  தங்களுக்கும் பிரச்சினை மற்றவர்களுக்கும் பிரச்சினை என்பதை உணர்ந்த மூத்த தலைமுறையினர், தம்மைக் குடைந்து கும்மியடிப்பவர்களை அழைத்து பதவி கொடுத்து  “ செய்து பார்… உள்ளே வந்து சொல்லவேண்டியதை சொல்  “  என்று பொதுப்பணிகளில் இழுத்துவிடுவார்கள்.

 “இலக்கியத்தில், அது என்ன சோஷலிஸ யதார்ப்பார்வை ?   “  என்று ஒரு நாள் நான்,  என்னை  படைப்பு இலக்கியத்திற்குள்


அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம் கேட்டதன் விளைவுதான், அவர் என்னை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அறிமுகப்படுத்தி இணைத்துவிட்டதன் தாற்பரியம்.

 “ நீ… என்ன தெருவில் நின்றா ஆர்ப்பாட்டம் செய்கிறாய். வா  உள்ளே , உள்ளே வந்து பார் அதன்பிறகு தெரியும் எங்களது நிலைமை  “ என்ற எண்ணத்துடன் வாலிபர் சங்கத்தின் தலைமைப்பீடம்  என்னை உள்ளிழுத்தது.

நான்  உறுப்பினராகி   கலந்துகொண்ட முதலாவது ஆண்டுப்பொதுக்கூட்டத்திலேயே எனது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சங்கம் அமைந்துள்ள அதே கடற்கரை வீதியில் ஶ்ரீ சிங்கமாகாளி அம்மன் கோயிலுக்கு பக்கத்தில்  தென்னோலையால் வேயப்பட்ட சிறிய வீட்டில் வசித்தாள் எனது  ஆரம்ப பாடசாலையில் என்னுடன் அரிவரி ( பாலர் ) வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரையில் படித்த அன்னம்மா என்ற தோழி.   அவளுக்கு தந்தை இல்லை.  தாயார் இராசாத்தி தோசை சுட்டு விற்று அவளை படிக்கவைத்தார்.