இன்று புனித வெள்ளி தினம் 03 04 2015

.

புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூருமுகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் கிறிஸ்தவர் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூரும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுபது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.
 இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது. இயேசு மரித்த நாள்   விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாக கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 14 அல்லது 15 ஆம் நாள் மரித்ததாக கூறப்பட்டுள்ளது. டைபிரியஸ் சீசரின் காலம் என்பதை விட ஆண்டு பற்றிய குறிப்பேதும் இல்லை. அனால் நான்கு நற்செய்திகளின் படியும் இயேசு மரித்தது ஆயத்தப்படுத்தல் நாளிலாகும். (ஓய்வுநாளுக்கு முதல் நாளாகும்) இதன் படி இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்பிரல் 3 ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23 க்கும் மே 7 க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.

குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. வித்யாசாகர்

.

நான் குட்டையானவன்
குட்டையான கால்கள் எனது கால்கள்
நடந்து நடந்தே –
பாதி குட்டையாகிப் போனேன் நான்,
அந்தத் தெருவிற்குத் தான்
தெரியும் – எனது
நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும்
ஒரு வரலாறு இருக்கிறதென்று;
அப்போதெல்லாம் அங்கே
பனைமரம் அதிகம்
வேலமுள் காடுதான் எங்கும்..
நாங்கள் மாடு ஓட்டி
பனைமரப் பக்கம் கட்டிவிட்டு
நொங்கறுத்துத் தின்போம்
ஆடுஓட்டி
வேலங்காய் உலுக்கிப்போட்டு
கொடுக்காப்புளி பறிக்கப்போவோம்
உச்சிவெயில்
மண்டையில் இறங்கி
வயிற்றைக் கிள்ளினாலும்
கண்களுக்கு மாடு தின்னும் பச்சைப்பசேல்

திருமுறை முற்றோதல் 05 04 2015

.திருமுறை முற்றோதல்












அடிலெய்டில் தமிழர் ”ஆட்டம்”

.


அடிலெய்டில் தமிழர் ஆட்டம்
கலைகள் சிதறினகால்கள் ஆடின
கண்கள் நிலைத்தன கரங்கள் ஒலித்தன
 அரங்கம் விதிர்ந்ததுஅடிலெய்ட் அதிர்ந்தது
அனைவரும் கூடினர் அமைச்சர் ஆடினர்.
மார்ச் 27 ஆம் தேதி அடிலெய்ட் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டம் கலை நிகழ்ச்சி அடிலெய்டில் சிறப்பாக நடந்தது.விழாவுக்கு சார்ல்ஸ் ஸ்டூவர்ட் நகர மேயர் தலைமை வகித்தார். பல்லின கலாச்சார அமைச்சர் ஸோ பெட்டிசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சிட்னி வழக்கறிஞர்  கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன்  சிறப்புரை ஆற்றினார். விழாவினை ஏற்பாடு செய்திருந்த அடிலெய்ட் தமிழ் சங்கத் தலைவர் லாரன்ஸ் அண்ணாதுரை அறிமுக உரை ஆற்றினார்.

ஸ்ரீமத் பாகவத சப்தாக ஞான யக்ஞம் 02/ 04 /2015 முதல் 09/04/2015 வரை


ஈஸ்டர் விடுமுறை காலத்தில் ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்கள் பாகவத்தையும் அதில் அடங்கிய ரகஸ்ய தத்துவங்களையும் தமிழில் விளக்குவதை கேட்டு அனுபவிக்க உங்கள் எல்லோரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இடம் : St Joseph's Centre for Reflective Living

64 Mackillop Drive, Baulkham Hills NSW 2153

அனுமதி இலவசம் !!!
  .

மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க விளையாட்டு போட்டி

.
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் - சிட்னி-கன்பரா கிளை
மறைந்த அதிபர் திரு பொன் கனகசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தும் அவரது நினைவு தினமும் விளையாட்டு போட்டிகளும்.

இந்த நிகழ்வு ஏப்பிரல் மாதம் 6ம் திகதி காலை 9.00மணியிலிந்து பி.ப 5மணிவரை ஹோம்புஷ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் நடைபெறும். 

இலக்கியப் பதிவுகளினூடாக நீர்கொழும்பூர் நினைவுகள்

   என்.செல்வராஜா -   நூலகவியலாளர்,
  (தொகுப்பாசிரியர்,   நூல்தேட்டம்:   ஈழத்துத்  தமிழ்  நூல்விபரப்பட்டியல் )

நீர்கொழும்பு,  தென்னிலங்கையின்  ஒரு  கடலோரத்  தமிழ்க்கிராமமாக,   தனித்துவமான  மொழி  வழக்குடன்  திகழும்  ஒரு வாழிடம்.    அதுவே   என்  இளமைக்காலத்தின்  வசிப்பிடம்.   தந்தையார் அமரர்   வ.நடராஜா -  அந்நாட்களில்  இந்து  வாலிபர்  சங்கத்துடன் தன்னை  இணைத்துத்  தமிழ்ப்பணியாற்றிய  ஒரு  பொது வேலைப்பகுதி     ஓவசியர்.     கடற்கரைத்தெருவில்,   தமிழகம்  என்ற பெயர் கொண்ட  எமதில்லத்திலேயே   எனது   இளமைக்காலம் கழிந்தது.     அன்றைய    விவேகானந்த   மகா   வித்தியாலயத்தில்   எனது பள்ளிக்காலம்  கழிந்து.    1970  இல்  எமது  தந்தையாரின்   மறைவின் பின்னர்  அந்த   மண்ணைவிட்டு,    பதினாறு    வயதில் யாழ்ப்பாணத்திற்குப்  புலம் பெயர்ந்து  செல்ல   நேர்ந்தது. அன்னையாரின்   ஊரான  ஆனைக்கோட்டையில்    எனது   எஞ்சிய பாடசாலை    வாழ்வு  தொடர்ந்ததும்    கடந்து  போன வரலாறு. அங்கிருந்து   திருநெல்வேலி,   கொழும்பு    என்றாகி  இன்று   லண்டன் வரையில்  தொடர்கின்றது    எனது  புலப்பெயர்வு.

அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் ‘ரேடியோத்தோன்”

.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் 13ஆவது ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு.

இந்த  ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு ஏப்பிரல் மாதம் 3ம் திகதி இன்பத்தமிழ் வானொலி ஊடாகவும், மெல்போர்ன் 3CR தமிழ்க் குரல் வானொலி ஊடாகவும் காலை 9மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெறும்.

14 வருடமாக இயங்கி வருகின்ற அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம், உங்கள் நிதியுதவியுடன் 4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் மருத்துவ, பல் வைத்திய மற்றும் சுகாதாரத் தி;ட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.


சிட்னி முருகன் ஆலய கொடியேற்றத்திருவிழா Vidio 25.03.2015

.

சங்க இலக்கியக் காட்சிகள் 44- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

என்னை மறந்துவிடு, அவளோடாவது இருந்துவிடு!

வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதநிலத்து மக்கள் உளவுத்தொழிலில் உயர்ந்து விளங்கினார்கள். போதிய வருமானம், பொழுது போக்குதற்கு கிடைத்த அளவற்ற நேரம் என்பவற்றால் நிறைவான வாழ்க்கையிலே அவர்கள் மகிழ்ந்தார்கள். கலைகளிலே சிறந்தார்கள். களியாட்டங்களிலே மிதந்தார்கள். அத்தகையதொரு மருதநிலத்திலே காதல்வயப்பட்டு அவளும் அவனும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். அளவற்ற வசதியும் வாய்ப்பும் அவனுக்கு வீட்டுச் சாப்பாட்டைவிட வெளிச் சாப்பாட்டில் விருப்பத்தை உண்டாக்கின. பரத்தையரை நாடினான். அவர்களோடு கூடினான். மனைவியை மறந்தான். வீட்டைத் துறந்தான்.
அவன் பரத்தையரோடு இன்புறுகின்ற செய்தியை ஊர்மக்கள் கண்டகண்ட இடங்களில் எல்லாம் கதைக்கத் தொடங்கினார்கள்.

உலகச் செய்திகள்


'சிங்கப்பூரின் தந்தை" லீ க்வான் யூ மரணம்

பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

விமான விபத்து: கருப்பு பெட்டி மீட்பு, தீவிரவாத தாக்குதல் இல்லையாம், 6000 அடி உயரத்தில் மீட்பு பணிகள்

நைஜீரிய நகரிலிருந்து போகோ ஹராம் போராளிகளால் 500 சிறுவர்கள் கடத்தல்

கொக்பிட்டில் இருந்து வெளியேவந்த விமானி, மீண்டும் உள்ளே செல்ல முடியவில்லை, கொக்பிட் உள்ளே பூட்டப்பட்டிருந்தது :வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்



'சிங்கப்பூரின் தந்தை" லீ க்வான் யூ மரணம்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ, தனது 91 வயதில் இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் காலமானார். 
நவீன சிங்கப்பூரை உருவாக்கி,  பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 

விழுதல் என்பது எழுதலே - பகுதி 44 எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்

. 
திரு.மதுவதனன் மௌனசாமி அவர்களின் கலை இலக்கிய ஈடுபாடு கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர்.
கதை தொடர்கிறது.........
"நேற்றோ முந்தநாளோ கனடாவில இருந்து ஒரு போன் வந்திருந்து. திருப்பி எடுக்க காசு இருக்கேல. காசு போட்டுட்டு எடுக்கோணும் எண்டு யோசிச்சானான். மறந்துபோனன். அதுக்கும் கலாவுக்கு ஏதும் சம்மந்தம் இருக்குமோ… சீ.. என்னை உப்பிடி கேவலமா யோசிசவளைப்பற்றி நானெதுக்கு யோசிக்கவேணும்… உவள்தான் தலையிடிக்கு காரணமா இருக்கும்" சீலன் ஏதேதோவெல்லாம் யோசித்தான்.

வீட்டுக்கு வந்து விவேக் அங்கிளிடம் வைத்தியரைச் சந்தித்தது பற்றியும் நடந்தவற்றையும் கூறினான்.

"ஓம் சீலன்இ தலையில ஸ்கான் பண்ணுறது நல்லதில்லை எண்டும் ஆக்கள் சொல்லுறவையள். உந்த யோசினைகளை குறைத்துப் பார்த்தால் தெரியும் தலையிடி குறையுதோ எண்டு."

"அங்கிள் உந்த ஸ்கானில வேற வேற வகையள் இருக்கு. எம்ஆர்ஐ ஸ்கான் பிரச்சினை குடுக்குறதில்லை. சீ.ரீ ஸ்கான் கொஞ்சம் அதிகமான கதிரியக்கத்தை தலைக்குள்ள செலுத்தும் அதுவும் கனதரம் தலையைக் கொண்டே குடுத்தாத்தான் பிரச்சினை" தான் படித்தவற்றில் தெரிந்ததைக் கூறினான்.

"சரிதான் சீலன்இ பேசாம தலையைக் கொண்டே குடுக்காம இருக்கிறது நல்லம். விசாவும் கிடைச்சுட்டுத்தானே. கொஞ்சம் யோசனைகளைக் குறைத்து தலையிடியையும் குறைத்துப் பார்க்கலாம்தானே."

தமிழ்முரசுஅவுஸ்திரேலியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது


.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூ உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை 23.03.2015  அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் அதிகாலை 3.18 அளவில் பிரிந்ததாக அந்நாட்டு பிரதமர் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் தெரிவித்தார். லீ, கடந்த மாதம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்முரசுஅவுஸ்திரேலியா  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது 

மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலகத்துக்கு...‏

.

ஒரு தலைமுறைக்குள்ளாகவே தனது நாடு மூன்றாம் உலக நாடு என்ற நிலையிலிருந்து முதல் உலக நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு அதை சாதிக்கவும் செய்தார் லீ குவான் யூ.
லீ குவான் யூ குறைந்தபட்சம் 97 வயது வரையாவது வாழ்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியராக எனது விருப்பம். அப்படி வாய்ப்பிருந்தால், அதாவது 2020-ல், இந்தியாவைப் பற்றி சற்று நல்ல விதத்திலான கருத்து லீக்கு ஏற்பட்டிருக்கலாம். 2007-ல் ‘இந்தியாவின் அமைதியான எழுச்சி’யைப் பற்றி எழுதி இந்தியர்களின் அன்புக்குப் பாத்திரமானார் லீ. ஆனால், 2012-ல் ‘மேன்மையை அடைய முடியாமல் போன தேசம்’ என்று இந்தியாவை விமர்சித்தார்.
இந்தியாவைப் பற்றி அவரிடமிருந்து கடைசியாக நாம் அறிந்துகொண்ட கருத்து இதுதான் என்பது துரதிர்ஷ்ட வசமானது. அதற்குப் பிறகு உடல்நலக் குறைவினால் அவர் முடங்கிவிட்டார். இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில்லிடம் இந்தியாவைப் பற்றி லீ தெரிவித்த கருத்துக்கள் இவை: “சீனத்திலும் இந்தியாவிலும் உள்ள கட்டுமானத் தொழில்துறைகளைப் பாருங்கள்! ஒரு நாடு காரியங்களைக் கனக்கச்சிதமாக முடிக்கும் நாடு; இன்னொரு நாடு காரியத்தில் அப்படிக் கிடையாது என்றாலும் பேச்சு மட்டும் எப்போதும் பெரியதாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.” இந்தியாவைப் பற்றி அவர் சொன்னது எவ்வளவு உண்மை!

தென்னிந்திய சினிமாவில் சாதனை படைக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்

.


விஜய் ஆண்டனியின் இசையிலும் நடிப்பிலும் வெளிவந்து வெற்றி பெற்ற ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை’ என்ற பாடலை எழுதி தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் பொத்துவில் அஸ்மின். அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த பாடலின் மூலம் தென்னிந்திய திரை உலகை இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தவர் இவர்.
இந்த வாய்ப்பு இலகுவாக கிடைத்ததொன்றல்ல பாடலாசிரியர் ஒருவரை அறிமுகம் செய்யும் நோக்கோடு விஜய் ஆண்டனியினால் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட கதைச்சூழலுக்கும் இசைக்கும் ஏற்ப பாடல் எழுதி அதில் சுமார் 20,000 போட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று ‘நான்’ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை இவர் பெற்றார்.

இலங்கைச் செய்திகள்


தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் : யாழில் ஜனாதிபதி

 உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு.வில் ஆர்ப்பாட்டம்      

பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு

ஜனாதிபதி சீனா விஜயம்

'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?": யாழில் ஆர்ப்பாட்டம்

இரட்டை பிரஜா உரிமை வழங்கும் திட்டம் மீண்டும் நேற்று முதல் ஆரம்பம்

கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு

பஷிலை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை


தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் : யாழில் ஜனாதிபதி

23/03/2015 தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


"தி அல்கெமிஸ்ற்" (தமிழ்: "ரசவாதி")

.

அமெரிக்காவில் பிரபலமான "சிபோற்லே" (Chipotle) எனும் மெக்சிகோ நாட்டு உணவகம் கனடாவில் பரவலாக இல்லையென அண்மையில் விஜயம் செய்த கனேடிய உறவுகளிடமிருந்து அறிந்து கொண்டேன். சோறு, இறைச்சி, கறுப்பு பீன்ஸ், அவகாடோப் பழம் என்பவற்றைக் குழைத்து ஒரு ரோரிலாவில் சுற்றித் தரும் "புறிற்றோ" (Burrito) தான் இந்த உணவகங்களின் விசேட தயாரிப்பு. இந்த உணவகத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம், உணவை வாங்கி எடுத்துச் செல்லும் கடதாசிப் பைகளில் சுவாரசியமான தகவல்களைப் பதிப்பித்திருப்பார்கள். சில சமயங்களில் மனதுக்குப் புத்துயிர் தரும் கதைகளும் வந்து சேர்ந்து அந்த நாளைத் திசை மாற்றி விடும். அப்படி என் ஒரு நாளை வெளிச்சமாக்கிய கதை ஒன்று இதோ: 
"ஒரு கிராமவாசி தினமும் நீண்ட தூரம் சென்று குடி தண்ணீர் அள்ளி வருவான். இதற்காக இரண்டு தண்ணீர்க் குடங்கள் அவனிடம் இருந்தன. ஒன்று பள பளக்கும் புதிய குடம். இரண்டாவது சிறிய ஓட்டைகளால் தண்ணீர் வழிந்து விடும் பழைய குடம். இரண்டு குடங்களையும் தன் தோளில் ஒரு குறுக்குத் தடியின் முனைகளில் கட்டித் 

நெய்வேலி அருகே பழைமையான கதாயுதம் கண்டுபிடிப்பு

.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான கல் ஆயுதத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள்  கண்டறிந்துள்ளனர்.

இரும்புக்காலப் பண்பாடு: மருங்கூர்  கிராமத்தில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு வடக்கே  உள்ள  பகுதியில் கிழக்கு மேற்காக 5.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு  முன்பு இப்பகுதியில்  வாழ்ந்த இரும்புக்காலத்தை சார்ந்த மக்கள் இறந்தவர்களை  புதைக்கப் பயன்படுத்தப்பட்டமுதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. கடந்த 2009 ஆண்டு இவ்வூரை சார்ந்த ராமலிங்கம் என்பவர் தமது நிலத்தை கனரக எந்திரம் மூலம் சீர் செய்யும் போது நான்கு  அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள் மற்றும் அதன் மூடுகற்களும் வெளிப்பட்டன . அப்பகுதியில் இருந்து  தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள்  கிடைத்தது.

நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் Devils and Demons

.
முற்போக்கு எழுத்தாளரான திரு நீர்வை பொன்னையன் ஈழத்து இலக்கியப் பரப்பில் மிக முக்கிய எழுத்தாளர் ஆவார். 1960 முதல் கடந்த 55 வருடங்களாக தடம் பிரளாது எழுதி வருபவர் ஆவார்.

இவரது முதல் தொகுப்பான மேடும் பள்ளமும் 1961 ல் வெளியானது. இதைத் தொடர்ந்து மொத்தம் எட்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

உலகத்து நாட்டார் கதைகள் பலவற்றைத்  தமிழ் வடிவத்தில் தந்தார். இது நூலக வந்தபோது பெரு வரவேற்பைப் பெற்றது.

சிறுகதை - சாமி கழுவின காரும்; என் பையன் பார்க்கும் உலகமும் - வித்யாசாகர்!

.
ரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது.

பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம் போட்டு மிக அழகாக வைத்துக்கொள்வதுண்டு. அதையும் தாண்டி எனது காரிடம் நான் அடிக்கடி பேசுவதுமுண்டு. எங்கே போவது, யாரைப் பார்ப்பது, எண்ண செய்வது என்றெல்லாம் மௌன மொழியில் பேசி எனது காரோடு சிலாகித்துக்கொள்வதுண்டு.

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 24 03 15



.

Sydney Music Festival 2015 (9th year)


06 - 06 - 2015   Sat    
Series of events by most popular artistes from overseas

07 - 06 - 2015   Sun   
Series of events by most popular artistes from overseas

08 - 06 - 2015   Mon   
Series of events by most popular artistes from overseas

இடம் : Parramatta Riverside Theatre

விபரம் பின்னர் தரப்படும் 

தமிழ் சினிமா


கள்ளப்படம்


தமிழ் சினிமா சில நாட்களாக சிறிய பட்ஜெட் நல்ல படங்களின் வருகையால் சிறப்பாகவே உள்ளது. அந்த வகையில் தரமான இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் கள்ளப்படம்.
சினிமாவில் மெட்டா என்று ஒரு வகை திரைக்கதை ஜாலம் உள்ளது. அப்படியென்றால், சினிமாவிற்குள் சினிமாவை பற்றி எடுக்கும் ஒரு வகை ஜானர் தான் இந்த மெட்டா பிலிம். உதாரணமாக வெள்ளித்திரை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய படங்களை சொல்லலாம். அந்த வகை கதையம்சம் கொண்டது தான் இந்த படமும்.

கதை

படத்தின் கதையாக பார்த்தால் ஹீரோ தன் நல்ல தரமான கதையை முதல் படமாக எடுக்க வேண்டும், எந்த ஒரு கமர்ஷியலுக்கும் விலை போக கூடாது என்பதே ஒன் லைன். படத்தின் இயக்குனர் வடிவேல், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சந்தோஷ், எடிட்டர் காகின் ஆகியோர் கள்ளப்படத்திற்கு வெளியில் மட்டும் இல்லை, படத்திலும் இவர்களே அந்தந்த கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்
வடிவேல் தன் அப்பா கூத்து கலையை நடத்தி வந்து காலப்போக்கில், அது அழிவதை கண்டு இறந்து விடுகிறார். இதையே நான் படமாக எடுத்தால் என்ன? என்று ஒவ்வொரு தயாரிப்பாளர் வீட்டிற்கும் ஏறி இறங்குகிறார்.ஆனால், அனைவரும் விரும்புவது கமர்ஷியல் கதையை தான்.
இதில் ஒரு கட்டத்தில் தயாரிப்பளாராக வரும் நரேன், வடிவேலுவை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் வயது ஆக ஆக, 4 இளைஞர்களுக்கும் பயம் வர, நரேன் வீட்டிலேயே கொள்ளையடித்து படம் எடுத்தால் என்ன? என்று யோசித்து ப்ளான் போடுகிறார்கள்.
அதேபோல் நரேனின் மனைவியும் ஒரு முன்னாள் ஹீரோயின், அவருக்கும் வீட்டில் மரியாதை இல்லை, அவரும் கொள்ளையடித்து தன் காதலனுடன் செட்டில் ஆக ப்ளான் போட, அந்த பணத்தை வடிவேல் அன்கோ கைப்பற்றுகிறது. ஆனால், திருட வந்த இடத்தில் தன் பெண்ட்ரைவை விட்டு செல்கிறார் கே. இதை தொடர்ந்து போலிஸ் இவர்களை கண்டிப்பிடித்ததா?, படத்தை எடுத்து வெற்றி பெற்றார்களா? என்பது தான் மீதிக்கதை.

நடிகர், நடிகை, டெக்னிஷியன் பங்களிப்பு

படத்தில் மெயினாக வரும் வடிவேல், கே, சந்தோஷ், காகின் இவர்களின் உண்மையான பணியை தான் திரையிலும் செய்துள்ளதால் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அட நீண்ட இடைவேளைக்கு பிறகு நம்ம செந்தில் கலக்கியிருக்கிறார். 2 காட்சிகளில் தான் வருகிறார், ஆனால், அந்த இளைஞர்களுக்கு ஒரு தேவ தூதனாக, ஐ ஓப்பனராக வந்து செல்கிறார்.
சிங்கம் புலி தன் வழக்கமான நகைச்சுவையால் சிரிக்க வைத்து விட்டு, ஒரு சில போதனைகளையும் சொல்லி செல்கிறார். நரேன், அவரின் மனைவியாக வரும் முன்னாள் ஹீரோயின், இவர்களை கண்டுபிடிக்க வரும் போலிஸ் என அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். ஆனால், மிஷ்கின் டச் ரொம்ப ஓவர் வடிவேல். இதற்கு மஞ்ச சேலை பாட்டு வேறயா??

க்ளாப்ஸ்

படத்தின் கதை, திரைக்கதை, வசனம். அனைத்திலும் சிக்ஸர் அடிக்கிறார் வடிவேலு, சந்தோஷின் ஒளிப்பதிவு மிகவும் லைவாக உள்ளது. கே தன் பங்கிற்கு படத்தில் கதாபாத்திரமாக கலக்கியது மட்டுமில்லாமல், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.
வசனத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும், இங்க எப்படி ஜெயிக்கிறோம்ன்னு முக்கியமில்லை, ஜெயிக்கனும், மாமரத்துல மாங்காய் இருக்கும், பணம் மரத்துல பணம் இருக்குமா? நான் இப்போ பணமரமா நிக்கிறேன் போன்ற வசனங்கள் யோசிக்க வைக்கின்றது. மேலும், கிளைமேக்ஸ் காட்சி எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் ஏதோ திரைக்கதை கொஞ்சம் தடுமாறினாலும், நல்ல கதை தான் என்பதால் பல்ப்ஸ் சொல்ல மனமில்லை.
மொத்தத்தில் இது கள்ளப்படம் இல்லைங்க ரொம்ப நல்லப்படம்.

ரேட்டிங்-3.25/5



 நன்றி  cineulagam