காற்றுக்கு வந்த சோகம் --சு.வில்வரெட்னம்.

.

முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.
வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

வட, கிழக்கில் 90,000 விதவைகள்



.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த விதவைகள் சுமார் 90,000 பேர் உள்ளனர் என விழுது ஆற்றல் பேரவை மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள விதவைகளின் குடும்பங்களுக்கு தலைமைதாங்கும் பெண்களின் மாநாடு௨013 மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இன்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட எண்பது விதவைகள் செயலணியின் தலைவிகள் பங்குகொண்ட மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு விதவைகள் அமைப்புடன் விழுது அமைப்பு தொடர்பு வைத்துள்ளதினால் விதவைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இலவச சட்ட உதவி, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.

சர்வதேச விதவைகள் தினம் ஜூன் 23ம் திகதி என பிரகடனப்படுத்திய நிலையில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் அரச புள்ளி விபரம் இதுவரையில் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.

திரும்பிப்பார்க்கின்றேன் 16 --முருகபூபதி

.

பனைமரத்துப்பாளையெல்லாம்       நில     மட்டத்தில்      வெளிவந்தால்.....
மேடையில்       உயிர்       நீத்த       தோழர்         வி.பொன்னம்பலம்


பனைமரத்துப்பாளை        எல்லாம்     நில      மட்டத்தில்     வெளியாகியிருந்தால்       சாதி      பேசும்       உயர்குடிமக்களும்   கள்ளுச்சீவியிருப்பார்கள் -         இவ்வாறு       சுவாரஸ்யமாகவும்  கருத்தாழத்துடனும்        பேசவல்ல       ஒருவர்       எம்மத்தியிலிருந்தார்.
சிறந்த      பேச்சாளர்      மொழிபெயர்ப்பாளர்        கல்வித்துறையில்       பலருக்கும்  கலங்கரைவிளக்கமாக        ஒளிதந்த      ஆசான்      கொள்கைப்பற்றாளர்   பதவிகளுக்காக        சோரம்போகாதவர்        தமிழ்மக்களின்       சுயநிர்ணய  உரிமைக்காகவே          மரணிக்கும்வரையில்        குரல்      கொடுத்தவர்  மாற்றுக்கருத்துள்ளவர்களையும்         அரவணைத்தவர்....       இவ்வாறு       பல  சிறப்பியல்புகளையும்        கொண்டிருந்த       ஆளுமையுள்ள     தலைவர்  தோழர்  வி. பொன்னம்பலம்      பற்றி      தெரிந்திருப்பவர்கள்      இன்றும்   எம்மிடையே      இருக்கிறார்கள்.
ஏறக்குறைய       இருபது        வருடங்களுக்கு       முன்னர்      ஒரு      நாள்  நள்ளிரவு.       ஆழ்ந்த     நித்திரையில்      இருந்தேன்.
    தொலைபேசி        அழைப்பு       வந்து      திடுக்கிட்டு       விழித்தேன்.  மறுமுனையில்       கனடாவிலிருந்து      மறைந்த      தோழர் வி.பொன்னம்பலத்தின்     மகன்      நமுனகுலன்.
   தோழர்  வி.பி. யின்       மறைவுச்செய்தி       அறிந்து       யார்      மூலம்   அனுதாபம்       சொல்வது     எனத்தெரியாமல்       தவித்துக்கொண்டிருந்த   எனக்கு        நமுனகுலனின்        அழைப்பு       சிலிர்ப்பைத்தந்தது.

மாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு

.
அவுஸ்திரேலியா விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2013 ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் விக்டோரிய மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு விக்ரோறியா மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பத்தினரின் விபரங்களைத் திரட்டும் பணியை விக்ரோறியா மாநிலத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டுள்ளது.

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:-

கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:-

Bookmark and Share

நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் ராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது:- வரமுடியவில்லை அம்மா - கவிதை இணைப்பு:-

நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது.

A GUN & A RING 30/11, 01/12 - 2013

.

இலங்கைச் செய்திகள்

யாழில் அருட்தந்தை, மக்கள் தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்

நிந்தவூர் அசாதாராண சூழ்நிலை: கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை அவசியம் :சீனா

ஜனாதிபதியின் பதாதை யாழில் தீக்கிரை

தமிழர் என்ற அடையாளத்துடன் முரளிக்கு கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்


நிந்தவூரில் கைதானவர்களில் 7 பேர் பிணையில் விடுவிப்பு: மர்ம நபர்களினால் தொடர்ந்தும் பதற்றம்

பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்


======================================================================

யாழில் அருட்தந்தை, மக்கள் தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்

 
19/11/2013   யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட 
மக்கள் மீதும் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மீதும் படைத்தரப்பினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தாம்  வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Trinco X,Mas Celebrations - 30.11.2013

.


உலகச் செய்திகள்

பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல்

இந்தோனேசியாவை உளவுபார்த்த அவுஸ்திரேலியா?

பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல்

19/11/2013   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவராலய பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்  குறைந்தபட்சம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் தூதுவராலய வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

கண்டி அரசன் நாட்டுக் கூத்து 01.12.2013

.


குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக

.


நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! 


இது கண்கலங்க வைத்துவிடும் google விளம்பரம்

.
இது google  விளம்பரம்தான் ஆனால் இறுதியில் கண்கலங்க வைத்து விடுகிறது விளம்பரத்தால் அல்ல நட்பின் ஆழத்தால்

.
சுயநலம்
சி. ஜெயபாரதன், கனடா
சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை !
பறி போவது !
பற்றியும் பற்றாமல் ஆவது !
புலி வருது ! புலி வருது !
புலிக்குப் பயந்தவர் என்மேல்
தலை வைப்பீர் !
கடவுள் படைப்பில்
பெண் சுயநலம் !
ஆண் பொதுநலம் !
சுயநலம் இல்லையேல்
பொதுநலம் இல்லை !
அன்னை தெரேஸா
அநாதை இல்லம் பொதுநலமா ?
தனித்துவச் சுயநலம்
மனச் சாந்தி !
சுயநலம் வளர்பிறை !
பொது நலம் தேய்பிறை !
சுயநலத்தின்
நிழல் தான் பொதுநலம் !
நீர்க் குமிழியாய்
மேல் எழுவது சுயநலம் !
நுனி தெரிய
பனிப் பாறையாய்
மூழ்கிப் போவது பொதுநலம் !
முதல் அமைச்சர்
தையல் மெஷின் அளிப்பார்
தரித்திரம் போக்க !
பொதுநலத்தைப் பிளந்துள்ளே
பார்த்தேன்
பதுங்கிக் கிடந்தது
சுயநலம் !
பொதுநலம் ஓர் ஆல‌மரம்
சுயநலம் விழுது !
மேடையில்
தன் வாடை மணக்க
பொன்னாடை போர்த்துவார்
முன்னோடி யாக‌ !
சுயநலம் ஒரு செங்கல் !
பொதுநலம் கட்டிய கோபுரம் !
வியப்பான
தாஜ்மகாலைக் கட்டியது
ஷாஜஹானின் சுய நலமா ?
பொது நலமா ?