. தொங்கும் உறவு - நோர்வே நக்கீரா

.
தொங்கும் உறவு

தன்னை அறியாமலே
தந்தையில்-பின்
அன்னையில்
தொங்கித் தூங்கினாள்.

தில்லை என்னும் திருத்தலம் - அன்பு ஜெயா

.


தில்லை என்னும் திருத்தலம்
- அன்பு ஜெயா




சிதம்பரத்தின் ஆன்மீக, அணுவியல், கலை அம்சங்களை உலகுணரச் செய்யும் நூல் க. நீலகண்டன் . கொழும்பு இந்து மாமன்றம், பாராட்டு.
ஆஸ்திரேலிய வழக்குரைஞரும், தமிழ் அவுஸ்திரேலியன் ஆசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதியுள்ளதில்லை என்னும் திருத்தலம்”நூல் வெளியீடு, சிதம்பரம் குடமுழுக்கை ஒட்டி, இறைவன் திரு உளம் கொண்டருளி, மே மாதம் முதலாம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்றது. இந் நூலை தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி சிதம்பரத்தில் தருமை ஆதீன மடத்தில் மக்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். மலேசியா திருப்பீடம், தவத்திரு பால யோகி சுவாமிகளின் ஆசியுரையுடன் வெளியிடப்பட்டது. சென்னை, கண்ணதாசன் பதிப்பகம் அச்சிட்டு முதல் பிரதி இரண்டாயிரம் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு பிரதிகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலில் பன்னிரு திருமுறைகளைக் குறிக்கும் முகமாக பன்னிரெண்டு அத்தியாயங்கள் உள்ளடக்கமாகி உள்ளன.தில்லை தலவரலாறு, மூர்த்தி சிறப்பு, தீர்த்த விசேடம் தவிரஅணுவியலும் ஆடல் வல்லானும்என்ற சிறப்புத் தலைப்பும், ஆடற்கலையும் ஆனந்தக் கூத்தனும் என்ற தலைப்பில் நூற்றெட்டுக் கரணங்கள் குறித்து படங்களுடன் குறிப்புக்கள் எழுதப்பட்டு உள்ளது. 16 பக்க வண்ணப்படங்களுடன் சிதம்பரம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஒரே இடத்தில் காணக் கூடியதாக உள்ளது

பாரதி பள்ளியின் பெருவிழா - ரஸஞானி

.
மெல்பனில்  குளிரையும்   பொருட்படுத்தாமல்  ஆயிரக்கணக்கானோர்

ஒன்றுகூடிய  பாரதி  பள்ளியின்  பெருவிழா.

மகாகவி  பாரதியின்  கனவை  நனவாக்கும்  புகலிடத்தின்

தமிழ்க்குழந்தைகள்.

                                        ரஸஞானி

மெல்பன்  பாரதி  பள்ளியின்  20  வருட  நிறைவுவிழா  பலதரப்பட்ட

நிகழ்ச்சிகளுடன்   குழந்தைகள்,  பெற்றோர்,  ஆசிரியர்,  பொதுமக்கள்,

கலைஞர்கள்,  எழுத்தாளர்களின்  மாபெரும்  ஒன்று கூடலாக  கடந்த

26  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை  காலை  10   மணி  முதல்  மாலை

6  மணி வரையில்  நடைபெற்றது.

கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு -

.
கன்பராவில்  கலை,  இலக்கிய  சந்திப்பு
                 


 அவுஸ்திரேலியா  கன்பரா  மாநிலத்தில்  எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி

சனிக்கிழமை   நடைபெறவுள்ள   கலை,  இலக்கிய  சந்திப்பில்  நூல்களின்

அறிமுகம்,   கூத்து ஒளிப்படக்காட்சி  நிகழ்ச்சிகளுடன்  கலந்துரையாடலும்  

இடம்பெறும்.

கீரை வகைகள்

.
     கீரை வகைகள்


குப்பைமேனிக்கீரை

  குப்பை மேட்டிலும், வழியோரங்களிலும், தோட்டங்களிலும் மானாவாரியாக வளர்ந்திருப்பதை காணலாம். பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுவதில்லை. கலவைக்கீரையில் சிறிதளவு இக்கீரையை சேர்ப்பார்கள்.
சரும வியாதிகள் நீங்க :

  பலருக்கு தோலில் சொறி, சிரங்கு, புண் போன்றவைகளால் வடுவடுவாய் கறுத்து தேகம் அழகற்று காணப்படும். இப்படிப்பட்டவர்கள் விலையுயர்ந்த லோஷன்களை தடவியும் தோல் பழைய நிலைக்கு வருவதில்லை.

இலங்கைச் செய்திகள்


நிறைவேறியது...!

பசிலுக்கு 3 மாதம் விடுமுறை

பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்

சீகிரியா சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விடுதலை

புதிய கடவுச் சீட்டு, அடை­யாள அட்­டைகள் இரு வரு­டங்­க­ளுக்குள் பாவ­னைக்கு வரும்


நிறைவேறியது...!

உலகச் செய்திகள்


பூகம்­பத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

இந்­தோ­னே­சிய மர­ண­தண்­டனை கைதி அன்ட்றூ சானை திரு­மணம் செய்த பெண் மதபோதகராக சேவை­யாற்­றிய இள­வ­ரசி

மத்தியதரைக் கடலில் தீப்பற்றி எரிந்த படகு

பூகம்­பத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

வில்லியம் -கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை

தமிழ் சினிமா


காஞ்சனா-2



ரயில் மணிரத்னத்தின் செண்டிமெண்ட், மைக் பிடித்து கேள்வி கேட்பது ஷங்கரின் செண்டிமெண்ட், அதேபோல் பேய், பிசாசு என்பது ராகவா லாரன்ஸின் செண்டிமெண்ட் போல. முனியில் ஆரம்பித்து, பழிவாங்கும் பார்முலாவை திருப்பி திருப்பி போட்டு இதன் மூன்றாவது பாகமாக காஞ்சனா-2 வை இயக்கியுள்ளார்.
லாரன்ஸ் படத்திற்கு வரும் பி, சி செண்டர் ரசிகர்களின் பல்ஸை கெட்டியாக பிடித்துள்ளார் போல, எந்த இடங்களில் எப்படி எப்படி காட்சி வைத்தார் வயிறு குலுங்க சிரிப்பார்கள், அதே நேரத்தில் திகிலுடன் சிரிக்க வைப்பதில் கில்லாடி, அதையே இந்த முறையும் கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்.
கதைக்களம்
முனி படத்தில் என்ன கதை? காஞ்சனா படத்தில் என்ன கதை? அதே தான் இந்த காஞ்சனா-2 விலும். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளராக லாரன்ஸ், அதே டிவியில் நிகழ்ச்சி இயக்குனராக டாப்ஸி. போட்டிகள் காரணமாக தாங்கள் வேலை செய்யும் தொலைக்காட்சியின் TRP 2ம் இடத்திற்கு வர, இதை முதல் இடத்திற்கு கொண்டு வர டாப்ஸி ஒரு யோசனை சொல்கிறார்.
பேய் இருக்கா? இல்லையா? கான்செப்ட் தான், ஒரு பாழடைந்த பங்களாவிற்கு இவர்கள் சென்று பேய் சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியை உருவாக்குகிறார்கள், இதில் எதார்த்தமாக டாப்ஸி அந்த இடத்திலிருந்து ஒரு தாலியை எடுக்க, பேய் அவர் மேல் ஏறுகிறது, அதிலிருந்து லாரன்ஸை சிவா சிவா என்று கூப்பிட்டு, அடி பின்னி எடுக்கிறார்.
சில நிமிடங்களிலேயே சிவா என்கின்ற ஆத்மா லாரன்ஸ் உடம்பில் ஏற, அவர் கோவை சரளாவை டார்ச்சர் செய்து நம்மை வயிறு புண்ணாகும் படி சிரிக்க வைக்கிறார். கோவை சரளா, பயந்து ஒரு பாதிரியாரிடம் சொல்ல, வழக்கம் போல் இந்த ஆத்மாக்களை வரவழைத்து, அதன் குறைகளை கேட்க, விரிகிறது ஒரு ப்ளாஷ்பேக்.
இதில் மொட்டை சிவாவாக லாரன்ஸ், ஊனமாக இருக்கும் நித்யா மேனனை காதலிக்கிறார். இவர்கள் எப்படி இறந்தார்கள், இதற்கு எப்படி பழிவாங்கினார்கள் என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு
லாரன்ஸ் படத்தின் இரண்டாம் பாதியில் பேய் புகுந்து செய்வார் பாருங்க ஒரு கலாட்டா, அந்த ஒரு காட்சி போதும் இவரின் நடிப்பிற்கு ஒரு சிவப்பு கம்பளம் வரவேற்கலாம். டாப்ஸி கிளாமர்+ஆக்டிங் என கிடைத்த வாய்ப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.
யார் என்ன செய்தால் என்ன? எப்படி நடித்தால் என்ன? நான் தான் முனி தொடரின் முதல் ஹீரோ என்று சில காட்சிகளில் வரும் கோவை சரளா நிரூபித்து விடுகிறார். லாரன்ஸுக்கு கவுண்டர் கொடுக்கும் போதும் சரி, அடி வாங்கி பயந்து ஓடும் நேரத்திலும் சரி, இவரை மட்டும் வைத்து இன்னும் எத்தனை முனி வேண்டுமானாலும் எடுக்கலாம். காமெடி குயின் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது, 4 இசையமைப்பாளர் இருந்தும், பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை, தமனின் பின்னணி இசை மிரட்டல், ஆனால், சில காட்சிகளில் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ள வேண்டும்.
க்ளாப்ஸ்
லாரன்ஸ் கையில் எடுத்த திகில்+நகைச்சுவை கான்செப்ட் இதிலும் டபூள் ஓகே ஆகியுள்ளது. இதில் கூடுதல் திகில் சேர்த்தது மிரட்டல். கோவை சரளா வரும் காட்சிகள் படத்திற்கு எக்ஸ்ட்ரா போனஸ் தான். இவரை லாரன்ஸை போல் அனைத்து இயக்குனர்களும் பயன்படுத்தினால், இனி ஆண் காமெடி நடிகர்களுக்கு கஷ்டம் தான்.
முந்தைய பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் ஏதோ ஒரு காட்சியில் எட்டிப்பார்க்கிறார்கள், எல்லோரும் பயந்து நம்மை சிரிக்க வைத்து செல்கின்றனர்கள். இதில் ஸ்ரீமன், மயில்சாமி, மனோபாலா செய்யும் கலாட்டாக்கள் சிரித்து சிரித்து முன் சீட்டை முட்ட வைக்கிறது.
பல்ப்ஸ்
லாரன்ஸ் எப்போதும் தன் படங்களை குடும்பமாக தான் பார்க்கும் படி எடுப்பார், அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாதியில் ஏன் முகத்தை சுழிக்கும் ஒரு சில வசனங்கள்?.
ப்ளாஷ்பேக் காஞ்சனா அளவிற்கு அழுத்தமாக இல்லை, இதை தொடர்ந்து வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என்ன பணப்பிரச்சனை என்று தெரியவில்லை, ப்ளே ஸ்டேஷன் கேம் மாதிரி உள்ளது.
மொத்தத்தில் எப்படியோ திகில்+நகைச்சுவையுடன் கலாட்டா செய்து ‘லாரன்ஸ் எப்போது முனி-4 இயக்குவீர்கள்’ என்று ரசிகர்களை கேட்க வைத்து விட்டார்.
ரேட்டிங்-3/5 நன்றி cineulagam