உனக்கு நான் வழங்குவது - ஆஸாங் வாங்கடெ

.

உனக்கு நான் வழங்குவது - ஆஸாங் வாங்கடெ (Jun 8)

சென்ற வாரம் உத்தரப்பிரதேசக் கிராமங்கள் சிலவற்றுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றபோது, அவரைப் பார்ப்பதற்கு முன் அங்குள்ள தலித்துகள் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு அந்த  மாநில அரசாங்கம் சோப்பையும் ஷாம்பூவையும் வழங்கிய செயல்  நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அரசாங்கத்தின் அந்த ஈனச்செயலுக்கு எதிர்வினையாக  எழுதப்பட்ட கவிதையின் ஆங்கில மொழியாக்கம் 'thewire.in' இணையதள ஏட்டில் வெளிவந்துள்ளது. தலித் கவிஞரும் வழக்குரைஞருமான ஆஸாங் வாங்கடெ, டெல்லியிலுள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் - புலே ஆய்வு வட்டத்தை நிறுவியவர்களிலொருவர்.

 ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா 

மனு எங்களைச் சுத்தமற்றவனாக்கினான்
உனது காழ்ப்பேறிய மனம் காரணமாக
சாதிப் பெயர்கள், ஒதுக்குதல்
ஆகியவற்றின் வாடை என் உடம்பில்.
புண்களின் நாற்றத்தில் நான் ஒளிர்கிறேன்
நான் நாறுவது என் மீதான  ஒடுக்குமுறையால், 
உனது மலத்தால் அல்ல.

உனது எசமானனைத் திருப்திப்படுத்த
நீ எனக்கு சோப்பும்  ஷாம்பூம் இன்று  வழங்கினாய்
நாற்றமடிக்கும் அந்த நாக்குகளை
சிறுபான்மை மக்களைப் பாலியல் வன்முறை செய்வோம், 
வெட்டுவோம் என்று
கூறும் அந்த நாக்குகளைக் கழுவவோ
மனுவாதத்தையும் வருணதர்மத்தையும் போதிக்கும்
 அந்த மூளைகளைச் சுத்தம் செய்யவோ
அவற்றை என்றைக்கேனும் பயன்படுத்தியுள்ளாயா?
  

போட்டோ - சிறுகதை - யோகன்

.
                                                                      

எட்டு மணியாகி விட்டது. இன்னும் அரியம் என்று அவர் கூப்பிடும் அவர் மனைவி அரியமலர் எழுந்திருக்கவில்லை.. யன்னல் திரையை விலக்கி வெய்யில் வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு  உள்ளே போக திரும்பியபோதுதான் பிள்ளைக்கு கார்ப்பெட்டில் விழுந்து கிடந்த போட்டொ எதேச்சையாக கண்ணில் பட்டது. கண்ணாடி குறுக்காக உடைந்து பிரேமும் படமும் மட்டும் தப்பியது..

அரியத்துக்குத் சொல்லாமல்  கண்ணாடித் துண்டுகளை குப்பைத் தொட்டிக்குள்; போட்டு விட்டு படத்தையும் பிரேமையும் அலுமாரிக்கு மேலே வைத்தார். கண்ணாடிப்   படம் உடைந்தால் வீட்டுக்கு கூடாது என்பாள் அரியம். தமிழ்ப் படங்களில் வருமல்லவா பூவை சாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும். அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும் காற்றினால் விளக்கு ஒன்று அணையும் இதுவும் அந்தக் கேஸ்தானோ ?  பிள்ளைக்கு மனம் பதறியது.

கொஞ்ச நாட்களாக ஒன்று மாறி ஒன்றாக வருத்தப் படுக்கையில் கிடக்கும் அரியத்துக்குத்தான் எதேனும் நடந்து விடுமோ.? போட்டோ உடைந்ததை அரியத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் யோசித்து இன்னும் வருத்தம் கூடிவிடும்.

பயணியின் பார்வையில் --- 01 - இலங்கையிலிருந்து முருகபூபதி

.
கோடையில்  ஒரு  நாள் மழை  வரலாம்
 
                     

" எமது தாயகத்தில் டெங்கு - வைரஸ் காய்ச்சல் அத்துடன் கடுமையான வரட்சி, கடும்கோடை வெயில். இத்தனைக்கும் மத்தியில் அவுஸ்திரேலியாவின் குளிர்கால சுகத்தை துறந்துவிட்டுச்சென்று சிரமப்படப்போகிறீர்களா...? " என்று வீட்டில் குடும்பத்தினர் எச்சரித்துக்கொண்டிருந்தனர்.
" இத்தனைக்கும் மத்தியில்தானே அங்கு வெசாக் பண்டிகை நடக்கிறது. பாரதப்பிரதமர் நரேந்திரமோடியும் வருகிறார்." என்று திருப்பிக்கேட்டேன்.
" எதற்கும் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு செல்லவும்" வீட்டில் அக்கறையான ஆலோசனை.  அதன் விலையோ 125  ($125) வெள்ளிகளுக்கும் மேல்.


பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி

.

இவ்வாரம்முடிவடைந்த பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில்  மொத்தமுள்ள 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில்  ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 319 இடங்களிலும் தொழிலாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றியீட்டியுள்ளது.  இன்னும் ஒரு இடத்தின் முடிவு இதுவரை வெளியாகவில்லை.
பிரித்தானியாவில்  ஆட்சி அமைக்கும் கட்சி குறைந்தபட்சம் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில்  கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பானமையினை பெறவில்லை.  என்பதனால் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்து தேசியவாத கட்சி 35, ஜனநாயக ஒன்றியக் கட்சி 10 இடங்களையும் , ஜனநாயக ஒருமைப்பாட்டு கட்சி 23 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. புpரித்தானிய  அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்ற தேர்தல்களில் அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் ராணி எலிசபத்திடம் முன் அனுமதி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
அதன் அடிப்படையில், பிரதமர் தெரசா மே இன்று பகல் சுமார் 12.30மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று  ராணி எலிசபத்தை சந்தித்து  ஜனநாயக ஒன்றியக் கட்சியை சேர்ந்த 10  நாடாளுமன்ற உறுப்பி;னர்கள்  தங்களுக்கு ஆதரவு அளித்து  கடிதங்களை ராணியிடம் கையளித்துள்ள நிலையில் புதிய அரசை அமைக்க இங்கிலாந்து ராணி எலிசபத் அனுமதி அளித்துள்ளார்.

அறிவோம் இஸ்லாம் -- பாத்திமா மைந்தன்

.
81. மனிதனும்  உணவும்


உலகில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மாமிசம் உண்ணும் வகையைச் சார்ந்தது. இவை 'மாமிச உண்ணிகள்' என்று அழைக்கப்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் தாவர வகைகளை உண்ணக்கூடியவை. இவை 'தாவர உண்ணிகள்' எனப்படும். மாமிச உண்ணிகள் தாவரத்தை உண்பதில்லை. தாவர உண்ணிகள், மாமிசத்தை சாப்பிடுவதில்லை. ஆனால் இருவகை உணவுகளையும் உண்ணும் வகையில் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். 
தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால், அவை அத்தகைய உணவை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களைப் பெற்றுள்ளன. 
மனிதர்களைப் பொறுத்தவரையில் மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களும், தாவர வகை உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களும் அமைந்துள்ளன. 
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு, தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு, மாமிச வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஆனால் மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச வகை உணவுகளையும், தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. 
மனிதன் தாவர உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணி இருந்தால், மனிதனுக்குத் தட்டையான பற்களை மட்டுமே கொடுத்திருப்பான். கூரிய பற்களைக் கொடுத்திருக்கமாட்டான். மேலும் இருவகை உணவுகளும் ஜீரணமாகும் வகையில், செரிமான அமைப்புகளை அமைத்திருக்க மாட்டான்.

ஈழன் இளங்கோவின் witness in Heaven

.

உலகச் செய்திகள்


கட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் நான்கு மத்தியகிழக்கு நாடுகள்..!

லொறியுடன் பஸ் மோதியதால் 22 பேர் உடல்கருகி பலி : உத்தரபிரதேசத்தில் சம்பவம்

120 பேருடன் மாயமான விமானத்தின் பாகங்கள் அந்தமானில் கண்டுபிடிப்பு : ஏனைய பயணிகளின் நிலை குறித்து அச்சம்

 "உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு



அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் ஊக்குவிப்புப் போட்டி

.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் ஊக்குவிப்புப் போட்டிகளின் இவ்வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் “தமிழ் எங்கள் மூச்சு”. 2017 ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து வெளிவந்துவிட்டது. இவ்வாண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக்கான விபரங்கள், விண்ணப்பப் படிவம், மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து விபரங்களும் எமது இணையத்தளத்திலிருந்து (www.tamilcompetition.org)பெற்றுக்கொள்ளலாம். தமிழ் ஊக்குவிப்பு  போட்டிக்கான விண்ணப்பப்படிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்  தொடர்பான முக்கிய திகதிகள்:

16 ஜூலை 2017       => விண்ணப்ப முடிவு திகதி
6 ஆகஸ்ட் 2017       => எழுத்தறிவுப் போட்டிகள்
6, 13, 20, 27 ஆகஸ்ட் 2017 => மற்றய  போட்டிகள்
30 செப்டம்பர் 2017    => தேசிய   போட்டிகள் (மெல்பேணில்)
1 ஓக்டோபர் 2017     => தேசிய போட்டிகளிற்கான பரிசளிப்புவிழா
 (மெல்பேணில்)
15 ஓக்டோபர் 2017    => பரிசளிப்புவிழா (மெல்பேணில்)

தமிழ் சிறார்கள்இளையோர்களை இந்தப் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளைக் காண்பிக்க எமது வாழ்த்துக்கள். 

நீங்கள் மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் மின்னஞ்சல் (asogt.tc@gmail.com) அல்லது தொலைபேசி வழியாக எம்மை தொடர்புகொள்ளவும்.

பாகற்காய்

.

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

புள்ளிகளும் கோலங்களும் ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.

                        
   வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால்
   வினையாவும் குடிபுகுந்து விட்டதென  நாம்நினைப்போம்
    புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால்
    நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயற்சி செய்துநிற்போம் !

   புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும்
   புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும்
   புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின்
   நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் !

   நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம்
   வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார்
   சொல்லவல்ல விஷயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும்
   நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் !

  எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும்
  இழுக்குடைய செயல்செய்தால் மெய்மையங்கே அழிந்துவிடும்
  புள்ளிவைத்த மானைத்தான் யாவருமே விரும்பிடுவார்
  கள்ளநிறை நரியதனை காதலிப்பார் யாருமுண்டோ !

இங்கிலாந்து தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 பேர் எம்.பி.க்களாக தேர்வு.

.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 பேர், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில், இந்திய வம்சாவளியினர் 12 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்களில் ஒருவர் சீக்கிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல், அலோக் சர்மா, சுயல்லா பெர்னான்டஸ், ரிஷிசுனக், சைலேஷ்வாரா ஆகிய 5 பேர் கன்சர்வேடிக் கட்சி சார்பிலும், கெய்த்வாஸ், விரேந்திர சர்மா, லிசா நான்டி, சீமா மலகோத்ரா வலரிவாஸ், தன்மன்ஜித்சிங், பிரீத் ககூர்சில் ஆகிய 7 பேர் தொழிலாளர் கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சீக்கிய பெண்ணான பிரீத் ககூர்சில் எட்ஜ்பஸ்டன் தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரத்து 917 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். இதில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக இருந்தனர்.

திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து -- மு.இளங்கோவன்

.


     நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் அகவை முதிர்ந்த ஐயாஒருவர் திருக்குறள் நூலினைச் சுமந்தபடி, அனைவருக்கும்அன்பளிப்பாக வழங்கியவாறுஅவரவரின் முகவரியையும்பெற்றவண்ணம் இருந்தார்எனக்கும் திருக்குறள் நூல் ஒன்று கிடைத்தது. அவர் பெயர் கரு. பேச்சிமுத்து என்பதாகும். அந்தப் பெரியாரின் திருக்குறள் பணியினை அருகிலிருந்த திருக்குறள் செம்மல் பேராசிரியர் பா. வளன் அரசு, முனைவர் கடவூர் மணிமாறன், இராம.மாணிக்கம் ஆகியோரிடம் விதந்து பேசிக்கொண்டிருந்தேன். இவர்களைப் போலும் தன்னார்வலர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்துகொண்டு திருக்குறள் தொண்டூழியம் புரிவதை அறிவேன். கல்விப்புலத்தில் இருப்பவர்கள் இத்தகு இலக்கியத் தொண்டில் ஈடுபடுவது அரிதாகவே என் கண்ணில் தென்படும். தமிழறியாத, கல்லா மக்கள் தமிழ்ப்போர்வையில் நுழைந்துகொண்டு, புளியம்பழம்போல் தமிழோடு ஒட்டாமல் உறவு இல்லாமல் கல்விப்புலங்களில் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொண்டு, பணியாற்றுவதை(!) அனைவரும் நாடெங்கும் காண்கின்றோம். அத்தகையோரை நாளும்  கண்ட கண்ணுக்கு,  இயந்திரப் பொறியியல் துறையில் பயின்ற ஒருவர் திருக்குறள் தொண்டராகப் பார்வையில் தென்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இலங்கைச் செய்திகள்


தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி

தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

மூதூர் மாணவிகள் துஷ்பிரயோகத்தை கண்டித்து வித்தியானந்தா கல்லூரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் !

வடக்கின் காங்கேசன்துறையிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம்

தெற்கில் அனாதரவாகியுள்ள மக்களுக்கு வடக்கிலிருந்து நிவாரணங்கள்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உட்பட 5 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.!

நாமலுக்கு பிணை




தமிழ் சினிமா


SACHIN: A BILLION DREAMS

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின். இந்தியா மட்டுமின்றி உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு சரித்திர நாயகன் சச்சின். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிரிக்கெட் என்ற ஒரு சொல் தெரியும் என்றால் அதற்கு பெரும்பங்கு சச்சின் என்ற பெயருக்கே உள்ளது. சாதனைகளே அசந்துவிடும் இவரின் சாதனைகளை அறிந்தால், அவரின் வாழ்க்கையை நாம் அறிய சரியான தருணம் தான் இந்த சச்சின் திரைப்படம்.
Sachin: A Billion Dreams
சச்சின் பல கோடி கனவுகள் இப்படத்தின் கதை, படத்தை பற்றிய அலசல் என்பதை எல்லாம் தாண்டி சச்சின் என்ற ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த சாதனைகள் மற்றும் சோதனைகள் என்ன என்பதன் ஒரு டாக்குமெண்ட்ரி என கூறிவிடலாம்.

இந்தியா 1983-ம் ஆண்டு உலக கோப்பை வெற்றி பெற்ற போது கிரிக்கெட் மீது ஒரு சிறுவனுக்கு ஆர்வம் வர, அதன் பின் தன் அண்ணன் அஜித்தின் மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாட தொடங்குகின்றார்.
இதை அனைத்தும் 10-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் நாம் படித்தே தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், இதில் என்ன புதியதை காட்டப்போகிறார்கள் என்றால், கிரிக்கெட் என்றாலே நமக்கு சச்சின் என்று தெரியும். ஆனால், சச்சினுக்கு கிரிக்கெட் எத்தனை முக்கியத்துவம் என்பதை இயக்குனர் James Erskine அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.
சச்சின் என்றாலே அமைதி என்று நமக்கு தெரிந்த முகம். இதற்கு அப்படியே எதிர்மறையாக தன் சிறுவயதில் செம்ம கலாட்டா செய்யும் சுட்டி. அந்த தருணத்தில் அவரை கிரிக்கெட் எப்படி நல்வழிப்படுத்துகின்றது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கின்றது.
அவரை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்து வந்த நமக்கு, சச்சின் தன் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துக்கொள்வார், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவாரா? தன் நண்பர்களுடன் எப்படி நேரத்தை செலவிடுவார் என நமக்கு தெரியாத பல முகங்களை படம்பிடித்து காட்டியுள்ளனர்.
அதிலும் யாருமே பார்த்திராத, தன் குழந்தைகளுடன் சச்சின் விளையாடுவது, அர்ஜுனிடம் அடிவாங்குவது, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் கலாட்டா செய்வது என சச்சின் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விஷயங்கள் அடங்கியிருக்கும்.
அதேபோல் தனக்கு கேப்டன் பதவி எத்தனை பாரமாக இருந்தது. இதனால், தன் அணிக்கு வந்த பிளவுகள் என பல விஷயங்களை தைரியமாக காட்டியுள்ளனர். கிரேக் சாப்பலின் கோச்சிங் நேரம் தான் இந்தியாவின் மிக மோசமான தருணம்.
அவரின் குண நலன்கள் குறித்தும், சீனியர் வீரர்களை அவர் ஒதுக்கியது குறித்தும் பலருக்கும் தெரியாத தகவல்களை காட்டியுள்ளனர். ஆனால், தோனியை கேப்டன் ஆக்கியதே சச்சின் தான்.
இவை தோனி படத்தில் வரவில்லை, ஒருவேளை சச்சின் படத்தில் வரும் என்று நினைத்தால், இதிலும் அதைப்பற்றி ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. 24 வருட கனவாக சச்சின் உலககோப்பையை கையில் ஏந்துவதுடன் படம் நிறைவடைகின்றது.
சச்சினின் கிரிக்கெட் மட்டுமின்றி அவருடைய வாழ்க்கையையும் மிக அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு. இப்படி பல சாதனைகளை இந்தியாவிற்காக படைத்த ஒரு ஜாம்பவானின் படம், தோனி படத்தை போல் கொஞ்சம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி எடுத்திருக்கலாம். டாக்குமெண்ட்ரி போல் எடுத்தது வருத்தம் தான். இதன் காரணமாகவே ரகுமான் இசையும் பெரிதும் கவரவில்லை.
எது எப்படியோ மைதானம் மட்டுமின்றி அரங்கமும் அதிர்கின்றது சச்சின்...சச்சின் என்ற வார்த்தையால். மார்க் (Rating) மொத்தத்தில் இந்த படம் என்ன என்பதை எல்லாம் தாண்டி சாதனை நாயகனை கொண்டாட இதுவே சரியான தருணம், கண்டிப்பாக சச்சினின் வாழ்க்கை பயணத்தில் நீங்களும் பங்கு பெறலாம்.
Music:

நன்றி   Cineulagam