5.83x8.ma-frontpng‘மானிடம் வென்றதம்மா’ என்றான் கம்பன். அது உடோபியா. நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது டைஸ்டோபியா. தீக்கனவு. நைட்மேர். சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள் சமூகவியலாளர்கள். ஆனால் சமூகத்தை அழித்தும் தான் மட்டும் செல்வம் சேர்த்து வளமாக வாழும் சுயநலமியாக மனிதன் மாறிவிட்டான். டார்வினின் தத்துவம் வென்றுவிடும்போல் இருக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மதங்களும், கோட்பாடு களும் மனிதத்தன்மையை வலியுறுத்தியபோதும், ‘நான் ஒரு மிருகம்தான்’ என்று மறுபடி மறுபடி நிலைநாட்டிக்கொண்டிருக்கிறான் மனிதன். அதிலும் அவன் சிங்கம் போன்ற உயர்நிலை மிருகம்கூட அல்ல. தேள்போலத் தன் இனத்தையே கொன்று தின்னும் கீழ்நிலை மிருகம்.