மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் யாழ். பாஸ்கர் மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார்


மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட  எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70  ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும்  கதைத் தொகுப்பின் கதை    ( சிறுகதை )    நடந்தாய் வாழி களனி கங்கை  ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள்                      ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு  இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 )    ஞாயிற்றுக்கிழமை மாலை  4-00  மணிக்கு அவுஸ்திரேலியா   மெல்பனில்  Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806மண்டபத்தில் நடைபெறும்.   

மகாகவி பாரதியின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும்.

மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு,  திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.

திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ் வாழ்த்து பாடுவார்.

மூன்று பகுதிகளாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்றினால் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவின் உருவப்படத்திற்கு  விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரைப்பற்றிய நினைவுரை நிகழ்த்தப்படும்.

வாழ்த்தியே நிற்பதுதான் மாண்புடைய வாழ்வாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



வாழுகின்ற காலமோ யாருக்கும் தெரியாது
வீழுகின்ற காலமோ யாருக்கும் தெரியாது
வாழுகின்ற காலமதை வரமாக மனமெண்ணி
வாழ்த்தியே நிற்பதுதான் மாண்புடைய வாழ்வாகும் !

மனமுடைய வைப்பதற்கு வாழ்வெமக்கு வரவில்லை
மற்றவரைக் குழப்பதற்கும் வாழ்வெமக்குச் சொல்லவில்லை
குறைபார்த்து குழப்புதற்கும் வாழ்வெமக்கு புகட்டவில்லை
குறைகாணா நிறைகாண வாழ்வெமக்கு வாய்த்துளது  !

மற்றவரின் கண்ணீரால் வாழ்வெமக்கு வாய்க்காது
வம்புதும்பு பெருகிவிடும் வாழ்வெமக்குச் சுவைக்காது
உற்றநட்பை உருக்குலைக்க வாழ்வெமக்குச் சொன்னதில்லை
உண்மையுடன் வாழ்வென்று உணர்த்துவதே வாழ்வாகும் !

ஆசானை அவமதிக்க வாழ்வெமக்கு சொல்லவில்லை
அறமிழந்து அவதிப்பட வாழ்வெமக்கு வாய்க்கவில்லை
பேசாத மொழிபேசி பெருங்கலக்கம் உருவாக்க 
வாழ்வெமக்குச் சொல்லவில்லை மனமிருத்தல் அவசியமே ! 

பால்வெளிப் பாதையில் - சுரேஷ் ராஜகோபால்

 .



பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன்

முதலில் கதிரவன் ஒளி

கொஞ்சம் துரத்தியது

உற்சாகம் தாங்கவில்லை

உத்வேகம் குறையவில்லை

 

சில பொழுது கடந்த பின்னே

கூட வந்ததோ கும்மிருட்டு

அச்சம் தலைதூக்க

மிச்சமும் கரைந்தோட

பயணம் மட்டும் தொடர்ந்து

 

வழியிலே இரவு பகல் கிடையாது

போகுமிடமும் தெரியாது

கடக்குமிடமும் புரியாது

போகும் வேகமும் குறையாது

தாகம் பசி கிடையாது

 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 71 யாழ். பல்கலைக்கழகமும் இனவிடுதலைப்போரும் ? ! பல்கலைக்கழக மாணவர் கடத்தலிலும் முரண்நகை ! செய்திகள் எழுதி செய்தியாகிப்போனவர்கள் ! முருகபூபதி


எனது எழுத்துலக வாழ்வு பற்றிய இந்தத் தொடரை எழுதும்போது, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தை பற்றிச்சொல்லாமல் கடந்து செல்லமுடியாது.

நான் பல்கலைக்கழகங்களில் படித்தவனல்ல. ஆனால், அவற்றின் படிகளில் ஏறி இறங்கியிருக்கின்றேன். சிலவற்றில் மாணவர் மத்தியில் இலக்கிய உரையாற்றியிருக்கின்றேன்.

எனது பல நண்பர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து  பட்டதாரிகளாக வெளியேறி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களாகவும் மிளிர்ந்தார்கள்.

மேலும் பல நண்பர்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும்


பணியாற்றினார்கள். தற்போதும் அவ்வாறு பணியாற்றுபவர்களுடன் நெருக்கமான நட்பையும்  உறவையும் பேணுகின்றேன்.

ஒரு காலத்தில் சேர். பொன். இராமநாதன் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட யாழ். பரமேஸ்வராக் கல்லூரிக்கு 1964 ஆம் ஆண்டு முதல் தடவையாக சென்றிருக்கின்றேன்.

அப்போது எனக்கு 13 வயது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எனக்கும் எனது தாய் மாமனார் மகன் முருகானந்தனுக்கும் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியில்தான் அனுமதி கிடைத்தது. அச்சமயம் மாமாவின் மூத்த மகன் ஶ்ரீஸ்கந்தராஜா யாழ். இந்துக்கல்லூரியிலும், எங்கள் குடும்ப நண்பர் நடராஜா என்பவரது மகன் சண்முகநாதன் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் ஆண்கள் விடுதிகளில் தங்கிப்படித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் விடுமுறைக்கு வந்து திரும்பியவேளையில் நானும் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லிக்கல்லூரிக்கு செல்லத்தயாராகியிருந்தோம்.

எங்கள் அப்பா லெட்சுமணன் ஒரு கம்பனியின் பிரதேச விற்பனை பிரதிநிதி       ( Sales Representative ) . அவர் எங்கள் நால்வரையும் தனது வாகனத்தில் அழைத்துச்சென்றார்.

பாரதி தரிசனம் - அங்கம் 12 பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் ! குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி


 “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது   “ என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக
துணைவேந்தர் மருத்துவர் சுதா ஷேசய்யன் தெரிவித்திருப்பதாக அண்மையில் சென்னை தினமணி இணைய இதழில் படிக்க நேர்ந்தது.

அந்த இணைப்பினை ஒரு இலக்கிய சகோதரி எனக்கு அனுப்பியிருந்தார்.


சென்னை ரயில்வேயில் முக்கிய பதவியிலிருக்கும் பூமா வீரவல்லி , பாரதியின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதன் தொகுப்பின் வெளியீட்டு அரங்கில்தான் மருத்துவர் சுதா ஷேசய்யன் மொழிபெயர்ப்பிலிருக்கக்கூடிய சவால்கள் பற்றி பேசியிருக்கிறார்.

பாரதி, பொருள் மயக்கம் தரக்கூடிய கவிதைகளையும் எழுதியிருப்பவர் என்பதை கடந்த அங்கத்தில் பார்த்தோம்.

அவ்வாறிருந்தும்,  தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத பலர் பாரதியின் கவிதைகளை தமது மொழிக்கு மாற்றியிருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு பொதுவான ஊடகமொழியாக இருந்திருப்பது ஆங்கிலம்தான்.

சோவியத் நாட்டில் உக்ரேயினை தாய்மொழியாகக்கொண்டிருந்தவர் கட்டிடத் தொழிலாளி விதாலி ஃபுர்ணிக்கா.  இவர் வேலை நேரத்தில் கிடைத்த மதிய உணவு வேளையில்,  அருகிலிருந்த நூலகம் சென்று படித்த புத்தகம் பாரதியின் கவிதைகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

நாவலரின் சிந்தனையில் மலர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் சேர்.பொன்னம்பலம் இராமநாதன்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா   
                                   

 

 கனவு காண்பது என்பது யாவருக்கும்

விருப்பமானதுதான்.அந்தக் கனவுக ளும் நல்ல கனவாக அமை ந்துவிட்டால் அதுவே பேரானந்தமாகிவிடும்.  " கனவு காணுங்கள் " என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அண்மையில் மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் " கனவு காணுங்கள் " என் பதை வலியுறுத்திச் சொல்லி நின்றார்.கனவு என்பது உண்மையா ? பொ ய்யா ? என்று ஆராய்ச்சிக்குள் போகவே வேண்டாம். நல்ல கனவுகளைக் கண்டால் அது நல்லதுதானே ! நல்லவர்கள் , வல்லவர்கள், ஞானிகள், கனவு கண்டார்கள். அவர் களின் கனவு தங்களின் நலன் சார்ந்தாக அமையாமல் சமூக நலன் சார்ந்ததாகவே காணப்பட்டது.அப்படி அவர்கள் கண்ட கனவுகள் , கனவாகமட்டுமே அமைந்துவிடாது நனவாயும் ஆகியே விட்டிருக்கிறது என்பது தான் முக்கியமாகும். அவர்களின் கனவுகள் பலித்து அதனால் மக்களின் வாழ்வில் நல்ல பல விளைவுகள் பெருகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

 நல்லைநகர் நாவலர் பெருமானை நாம் மறந்துவிட


முடியாது.அவரின் வருகை சமூகத்துக்குப் பெருவெ ளிச்சத்தைக் காட்டியது எனலாம். குறிப்பாகச் சைவ உலகுக்கும் , தமிழ்ப் பாரம்பரியத்துக்கும்உரமாய் , வரமாய் வாய்த்தது என்பதை எவருமே மறுத்துரைத்திட முடியாது. அந்த அளவுக்கு இம்மண்ணில் வாழ்ந் தகாலம் முழுவதும் அப்பெருமகனார் அளப்பரிய பணிகளை ஆற்றி நின்றார்.அதனால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே பார்க்கப்படுகிறார். அவரால் ஒரு புதுப்பாண்பாடு, ஒரு புதுக்கலாசாரமே தோற்றம் பெற்றிரு க்கிறது. அவராற்றிய பணிகள் வரலாற்றில் பெரும் பொக்கிஷமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

“ காலம் கடந்து பேசப்படும் மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனம் காலத்தையும் முந்தியது “ மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வில் எழுத்தாளர் முருகபூபதி கருத்துரை

 “ சமகாலத்தில் பாரதி, பாரெங்கும் பேசப்படுகிறார். தொடர்ந்தும்


பேசப்படுவார்.  எனினும் அவர் மறைந்த 1921 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், அதன்பின்னர் பல வருடங்களும் இவ்வாறு பேசப்படவில்லை என்பது பாரதி இயல் ஆய்வாளர்களின் முடிவாக இருக்கிறது. பாரதி மறைந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரே இந்தியா சுதந்திரமடைகிறது. குறிப்பிட்ட கால் நூற்றாண்டு காலத்திலும் பாரதி பெரிதாக பேசப்படாதமைக்கு அன்றிருந்த பிரித்தானிய ஆட்சி அதிகார சூழல் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கலாம்.


ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது ஏறக்குறைய இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பே,

 “ எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு

சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே  “ என்று கிடைக்கவிருக்கும் சுதந்திரம் குறித்து தீர்க்கதரிசனத்துடன் பாரதி பாடிவிட்டார். “

இவ்வாறு நேற்று முன்தினம்  11 ஆம் திகதி  பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை தமிழ்ச்சங்கம் ஆரம்பித்திருக்கும்  மகாகவி  பாரதி பன்னாட்டு கருத்தரங்கத்தின்  தொடக்க நாள் அரங்கில் உரையாற்றிய அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. முருகபூபதி கருத்துரை வழங்கும்போது தெரிவித்தார்.

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் லலிதா தலைமையில் மெய்நிகரில் நடந்த இந்த தொடக்கவிழாவில் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் முனைவர்  மன்னர்  மன்னர்  கோ. பாரதி ஆகியோரும் உரையாற்றினர்.

கற்கண்டு - Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்

 .



அம்மம்மா மறிச்சுக் கேட்டதுக்கு “ இப்பிடியே நேர போய் இடது பக்கம் திரும்பினா வரும், 20 ம் வாட்டு எண்டு கேட்டாக் காட்டுவினம்“ எண்டு ஒரு வெள்ளை உடுப்புக்காரர் சொல்ல , நான் இவரும் டொக்டரோ எண்டு கேட்டன். 

“பறையாம வா அது ஓடலி” எண்ட படி அம்மம்மா இழுத்துக்கொண்டு போனா. ஆஸ்பத்திரியில வெள்ளை உடுப்போட திரியிற பொம்பிளை எண்டால் நேர்ஸ் , ஆம்பிளை எண்டால் டொக்டர் எண்டு தான் நான் நெச்சிருந்தனான். 

முந்தி மூண்டு தலைமுறைக்கு Dr.கங்கம்மா தான் இணுவிலில பிள்ளைப் பெறு பாத்தவ எண்டு சொல்லிறவை. எழுவதுகளில தான் பெரியாசுபத்திரிக்கு பிள்ளைப்பெறுக்கு கூட ஆக்கள் வாறது. ஊரில அப்ப பொலீஸ் ஸ்டேசன் போனாலும் பெரியாசுப்பத்திரிக்குப் போனாலும் ஏதோ கதை முடிஞ்சிது எண்டு மாதிரித்தான் சனம் பயப்பிடிறது. அப்பப்ப நான் சண்டை பிடிச்சால் அம்மா கொண்ணனை பெத்தது , உன்னை வாங்கினது எண்டு பேசேக்க , ஆஸ்பத்தரீல பிள்ளை விக்கறதோ எண்ட சந்தேகம் வந்து போனது . 

“தண்ணியைப் பாத்து நட “ எண்டு சொன்ன அம்மம்மாவை நிமிந்து பாத்தன் ஏனெண்டால் நடக்கிற எல்லா இடமும் தண்ணியாத்தான் இருந்தது. ஒவ்வொரு வாட்டையும் தாண்டி நடக்க ஏதோ மூக்குக்க துளைக்கும் , பாத்துரூம் நாத்தம் கிட்டப்போகாமலே மணக்கும். 

நெப்போலியனின் போர்வாள் 2.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம்

 .


மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியவர் ஆவார். பல்வேறு ஐரொப்பிய பிரதேசங்கள் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர். 

கடந்த 1799-ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி, பிரெஞ்ச் கடற்கரையில் இருந்து ஆங்கிலேய கப்பல்கள் வெளியேறிய போது, நெப்போலியன் தனது படைகளுடன் முன்னேறிச் சென்று ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:-

“தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார்” என்றார்.

நெப்போலியனின் இந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது. பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது. ஆனால் ஜெனரல் மனைவி தனது கடனை அடைப்பதற்காக வாளை விற்றுள்ளார் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் ! கண்துடைப்பு மாத்திரம் பரிகாரமா…? அவதானி

 இம்மாதம் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் 


குரூரமாகக் கொல்லப்பட்ட பிரியந்த குமார ( வயது 48 ) தொடர்பான செய்தி இலங்கை நாடாளுமன்றிலும் ஒலித்திருப்பதுடன், ஊடகங்களிலும் பேசப்படுகிறது.

செய்தி வெளியானதும், இலங்கை அரசும், எதிரணி தரப்பும் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும், இச்சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசுக்கு உறுதிமொழி அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு.  அவர்களின் புனிதமான ஒரு நாள்தான் வெள்ளிக்கிழமை. அத்தகைய


ஒரு நாளில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இலங்கையரான பிரியந்த குமார என்பவர் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்பெற்ற பொறியியலாளர்.  தொழில் நிமித்தம் அவரைப்போன்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாகிஸ்தான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் தத்தமது குடும்பங்களை தாயகத்தில் விட்டுவிட்டுச்சென்று,  உழைத்துவருபவர்கள். அவர்கள் அனுப்பும் பணத்தை நம்பி வாழும் அக்குடும்பங்கள், குறிப்பாக பெற்றோர், மனைவி மக்கள், கணவன் பிள்ளைகள், தங்கள் குடும்பத்தின் மூல உழைப்பாளிக்கு எப்போது விடுமுறை கிடைக்கும்..? எப்போது நாடு திரும்புவார் ..? என்றே காத்திருப்பார்கள்.

குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற குடும்பத் தலைவியும் தலைவனும் கூட தாயகம்வரும் நாளுக்காக பல கனவுகளை சுமந்தவாறு காத்திருப்பர்.

இந்நிலையில், பணிக்குச்சென்றவிடத்தில் உயிரிழந்து சடலமாகவோ, உடல்பாகங்களாகவோ திரும்பநேர்ந்தால், அதன் வலியை தாங்குவது சுலபமல்ல. அந்த இழப்பின் துயரத்தை கடந்து செல்வதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - குமரிக்கோட்டம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 23

 .

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னணிப் பிரமுகர்களாகத் திகழ்ந்தவர்கள் புரட்சி நடிகர் எம் ஜீ ஆர் , கோவை செழியன் ,கே சொர்ணம், அமிர்தம் போன்றவர்கள். இவர்களில் கோவை செழியன் கட்சியின் தொழில் சங்கத் தலைவராகவும் அதே சமயம் படத் தயாரிப்பாளராகவும் விளங்கினார். இவரின் தயாரிப்பில் வெளிவந்த சுமைதாங்கி,ஊட்டி வரை உறவு படங்கள் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து எம் ஜீ ஆரின் நடிப்பில் ஒரு படத்தை தன் பட நிறுவனமான கே சி பிலிம்ஸ் சார்பில் 1971ல் தயாரித்தார்.அந்தப் படம் குமரிக்கோட்டம் என்ற பெயரில் தயாரானது.


தமிழக முதல்வராக அன்று பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் உறவினரான சொர்ணம் படத்தின் வசனங்களை எழுதினார்.கருணாநிதியின் மற்றுமொரு உறவினரான அமிர்தம் ஒளிப்பதிவை மேற்கொண்டார் இப்படி தி மு ககாரர்கள் இணைந்து உருவாக்கிய படத்தின் கதையை யாழ்ப்பாணம் புங்குடூத் தீவைச் சேர்ந்த குகநாதன் எழுதினார்.ஏற்கனவே எம் ஜீ ஆரின் புதிய பூமி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த குகநாதனுக்கு தனது இந்த படத்துக்கும் கதையை எழுதும் வாய்ப்பை வழங்கினார் எம் ஜீ ஆர்.சென்னை பச்சயப்பா கல்லூரி மாணவனாக இருந்த குகநாதனை கல்லூரிக்கே சென்று சந்தித்து கதையைக் கேட்டார் கோவை செழியன்.

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும் (வித்யாசாகர்) குவைத்

 னக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது 

மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல 

உள்ளே உயிர் சொட்டுசொட்டாக 
கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை, 
உன்மயில், இந்த வாழ்க்கை ஒரு வதை
பிரிவு பிரிவென எல்லோரையும் 
நேசித்து நேசித்து பிரியும் வதை,
உயிர் போவது கூட விடுதலைதான் போல் 
ஆனால் யாரோ இறப்பதை சகிப்பது 
இறக்கும்வரை வலிக்கும் வதை,
மனம் சகிப்பதேயில்லை பிரிவை
மனதிற்கு அன்பு காட்ட மட்டுமே தெரிகிறது 
அன்பில்லாத இடத்தில் மனம் பாவம் 
சிறுபிள்ளையைப்போல அழுது விடுகிறது,
முன்பெல்லாம் இப்படி எதையேனும் கிறுக்கினால் கூட 
அதை அம்மா படித்துவிட்டு நல்ல கவிதை என்பாள் 
இன்று அவளில்லாத இடத்தில் நிரம்பி நிரம்பி
எனது எழுத்துக்களும் அழுகிறது;
என்ன சிரித்து, எதைச் சம்பாதித்து 
எவ்வளவு சாதித்து என்ன பயன் ?
அம்மா இல்லாத வாழ்க்கை அரை வாழ்க்கை
அவளில்லாத பொழுதுகள் என்னை அனாதையாக்கி விடுகிறது 
எதற்கோ பெற்று எதற்கோ விட்டு 
ஏன் போனாளவள்? அவளிடம் நானினி பேசவேமாட்டேன் 
ஆனால் பாவம் அம்மா

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

    காரோட்டும் சாரதிக்குக் இருப்பிடமாகிக் கைகொடுக்கும் நார் 
இருந்து களைப்பாற நாற்காலியில்சாய்மானைக் கதிரையில் இடம் பெறும் நார்;  சந்தைக்குக் கொண்டு செல்லும் கூடையாய்உல்லாச இருக்கைகளாய்மாறியிருக்கும் பனை நார் - குப்பைகளைத் தாங்கும் கூடைக ளாயும் வந்து நிற்கிறது. அது மட்டுல்ல சைக்கிள் கூடையாகவும் வருகிறது.அழகிய கைப்பைகளாகவும் அமைந்து நிற்கிறது பனை நார். 

இப்படிப் பயன்பட்டு நிற்பதுதான் முதல் நிலையில் எடுக்கப்படுகின்ற அகணிநாராகும்.

  அடுத்த நிலையில் இருப்பதுதான் புறணிநார்.புறணிநாரும் பயனு டையதாகவே இருக்கிறது. பெட்டிகளின் விளிம்பு கட்டுவதற்கு இந்த நார் உதவி நிற்கிறது. சுளகு பெட்டிகளுக்கு வாய்கட்ட இந்தநார் பயனாகி நிற் கிறது.கடகங்கள் கூடைகள் பொத்தவும் புறணிநார் வந்து நிற்கிறது.

  அகணிநார்புறணிநார் எடுத்தபின் வந்து அமைவதுதான் சோத்தி நார். இந்த நாரை தட்டி எடுத்து அதனைக் கொண்டு கயிறும் திரிக்கப்படுகிறது.இப்படி வரும் கயிற்றினால் மாடுகளைக் கட்டலாம். ஊஞ்சல் ஆடு வதற்கும் பயன்படுத்தலாம்.

இலங்கைச் செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டம்

பாகிஸ்தானில் இன்று விசேட கண்டன தினம்

கவிஞர் அஹ்னாபின் பிணைக்கு எதிர்ப்பில்லை

அரசுக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம்

நாட்டில் இதுவரை 458 Gas வெடிப்பு சம்பவங்கள்

பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று; யாழில் சிலை திறந்து வைப்பு


சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டம்

 Friday, December 10, 2021 - 3:18pm

யாழ்ப்பாணத்தில்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை வேண்டி யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

உலகச் செய்திகள்

பீஜிங் ஒலிம்பிக்: புறக்கணிப்பு நாடுகளுக்கு சீனா கண்டனம்

ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர் மூவர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு

அடுத்த தலைமுறையினருக்கு நியூசிலாந்தில் சிகரெட் தடை

பீஜிங் ஒலிம்பிக்: அவுஸ்திரேலியாவும் இராஜதந்திர புறக்கணிப்பு

பங்களாதேஷில் 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மரண தண்டனை

தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் உச்சம்

தஹ்ரீக்கே லப்பைக்கின் செல்வாக்கு அதிகரிப்பு

சூக்கியின் தண்டனை பாதியாக குறைப்பு

முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்! நடந்தது என்ன? புறப்பட்டது முதல் விபத்தில் சிக்கிய வரை


பீஜிங் ஒலிம்பிக்: புறக்கணிப்பு நாடுகளுக்கு சீனா கண்டனம்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இராஜதந்திர ரீதியில் புறக்கணிக்க தீர்மானித்திருக்கும் நாடுகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள போட்டிகளில் தனது அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று கனடா அண்மையில் தெரிவித்தது. அதுபோன்ற அறிவிப்பை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே வெளியிட்டிருந்தன.

சிட்னி துர்கா தேவி திருவெம்பாவை

 


சிட்னி முருகன் திருவெம்பாவை

 


பேர்த் பால முருகன் திருவெம்பாவை