மெல்பனில் 1992 ஆம் ஆண்டில் ஒத்த கருத்துடைய பலர் இணைந்து தொடங்கப்பட்ட விக்டோரியா தமிழ் கலாச்சார கழகம் வெள்ளிவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடிய பெருமையுடையது. திரு. விக்கிரமசிங்கம், திரு. சச்சிதானந்தன், திரு. சுந்தர், திரு. நவநீதராஜா போன்றோருடன் நானும் இணைந்து தொடங்கப்பட்ட இக்கழகம் பொங்கல்விழாவினை கொண்டாடி வருகிறது.
தைத்திருநாள் தமிழர் திருநாள் கொண்டாட்டம்!
இவர்கள் மகாத்மாக்கள் வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
இவர்கள் மகாத்மாக்கள்
இறையினைக் காண இயம்புவோம் மந்திரம் !
செந்தமிழ் (கவிதை) நடை – அன்று தொட்டு இன்றுவரை! இயற்றியவர் பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்
சென்றபல நூற்றாண்டாய் மரபுக் கவிதை
செந்தமிழுக் கணிசேர்த்த
திறத்தை ஆய்ந்தும்
வென்றேபுதுக்; கவிதையெனப் புதுமைப்
சொட்ட
விதைப்பவரின்; படைப்புகளை மெல்ல
முகர்ந்தும்
நன்றெனவே மலரவரும் நாளைய சந்ததி;
நமக்குத்தர விருப்பவற்றைக்
கனவாய்ப் பார்த்தும்
இன்றெனக்குப் பட்டதினைக் கவியிற் தருவேன்;
என்கருத்திற் பிழையுண்டேல்; பொறுப்பீர் தானே!
கவிதைகளின் பரிணாமக் கதைதனைக் கவியிலே
கச்சிதமாய்ச் சுருக்கியென்றன்
கருத்தைத் தருவேன்
புவியிலன்று பூத்திட்ட கவிவகை என்னே!
புதுமையெனப் பொலிகின்ற
புதுக்கவி என்னே!
தவிப்புடனே சொல்கின்றேன் நாளைவருஞ்
சந்ததி
தமிழைத்தான் நலிவடையச் செய்யுமோ அன்றித்
துவிமொழியாய் ஆங்கிலமும் தமிழும் கலந்த
தூனமிகு மொழிக்கவிதை படைக்குமோ அறியேன்!
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 11…..சங்கர சுப்பிரமணியன்.
சந்துக்களில் இருப்பதைக் காணமுடிந்தது. பீஜிங்கில் இப்படி ஒரு இடமா என்று நம்பவே முடியாமல் இருந்தது. பழமையைப் பாதுகாக்கத்தான் இந்த ஏற்பாடு. அதுமட்டுமல்ல ஹுட்டாங் சுற்றுலா பட்டியலில் சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளதும் அவற்றைப் பாதுகாக்க ஒரு காரணம். சீனா முழுக்க இதுபோன்ற ஹுட்டாங்கை சில இடங்களில் பாதுகாத்து வைத்துள்ளனர்.
பெயரை மாற்றி அழைப்பதால் வரும் மன உளைச்சல்! - சங்கர சுப்பிரமணியன்.
பெங்களூரு நண்பர்கள் வட்டம் பெங்களூரிலுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் சில நண்பர்கள் இணைந்து நடத்தும் ஒரு அமைப்பு. அதில் நண்பர்கள் வைத்திருக்கும் வைப்புத்தொகை மூலம் அவசர தேவைக்கு நண்பர்களுக்குள் பணத்தை கடனாக கொடுத்து உதவுவார்கள். அந்த அமைப்பில் ஒவ்வொருமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு உணவகத்தில் நண்பர்கள் கூடி மதிய உணவு உண்பதுடன் அமைப்பு சம்பந்தமான கணக்கு வழக்குகளைப் பார்ப்பது வழக்கம்.
அன்பே வா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
இந்திய சினிமாவில் புகழ் பெற்று விளங்கிய நிறுவனம் ஏவி எம் புரொடக்ஷன்ஸ் . இதன் அதிபர் ஏவி மெய்யப்ப செட்டியார் தனது கடின உழைப்பாலும், திட்டமிடலாலும் இந்த நிறுவனத்தை உன்னத நிலைக்கு உருவாக்கி இருந்தார். இவர் தயாரித்த படங்கள் தென் இந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் , குறிப்பாக ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
தயாரிப்பாளர்கள் தவம் இருக்க எம் ஜி ஆர் சில தயாரிப்பாளர்களின் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற அஜெண்டாவை உருவாக்கி வைத்திருந்தார்.
இலங்கைச் செய்திகள்
தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகை தாக்கல்!
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு
வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி
காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்! ; அறிவித்தல்களும் ஒட்டப்பட்டன! ; களத்தில் இறங்கிய ரவிகரன்
தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
Published By: Vishnu
17 Jan, 2026 | 04:02 AM
(எம்.மனோசித்ரா)
தித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிட்டுள்ளார்.
தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, தனது அறிக்கையை புதனன்று தன்னிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் - ஈரான் அரசுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு
ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்
கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்
இராணுவ சட்டம் அமுல்படுத்திய விவகாரம் : தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறை
போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் - ஈரான் அரசுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
14 Jan, 2026 | 02:48 PM
ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அதற்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (13) சிபிஎஸ் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்தபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் கொடூரமான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்து வருவதை இதன்போது சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஈரான் நாட்டின் சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார்.
“போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால், அதற்குப் பிறகு நடக்கப்போகும் சில விடயங்களை நிச்சயமாக நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.


.jpeg)





.png)

.png)
.jpg)
