சமூகப்பணியாளர் சொக்கநாதன் யோகநாதன் நேற்று யாழ்ப்பாணத்தில் மறைந்தார்.



05/07/2021

யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக  இயக்குநர்

சொக்கநாதன் யோகநாதன்  இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றினால் மறைந்தார் என்ற செய்தி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.


நீண்டகாலமாக  சமூகப்பணியாற்றி வந்திருக்கும் திரு. யோகநாதன்  ( வயது 73 ) அவர்களின் திடீர் மறைவினால்  ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும்  யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின்  பணியாளர்களுக்கும் மற்றும்  யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு மாவட்ட  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமரர் யோகநாதன் அவர்கள்  யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா முதலான மாவட்டங்களில் வதியும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர்  அமைப்புகளின் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.

அன்னாரின் திடீர் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று


அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளது.

அமரர் யோகநாதனின் குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் பங்கேற்பதுடன், அன்னாரின் ஆத்மா  சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம் எனவும் அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3-30 மணிக்கு மறைந்த யோகநாதனின் இறுதி நிகழ்வுகள் இன்று முற்பகல் 11-30 மணிக்கு நடைபெற்றது.  சமூக இடைவெளிபேணலுடன் நிகழ்ந்த இந்த இறுதி நிகழ்வில் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாகப் பணியாளர் செல்வி காயத்திரி தங்கராசா மற்றும் கணக்காளர் திரு. பொன்னம்பலம் தினேஷ் ஆகியோர் மாத்திரம் கலந்துகொண்டனர்.  

தகவல்: லெ. முருகபூபதி ( தலைவர் )

இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா  

அவர்கண்ட பாதையிலே அனைவருமே பயணிப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ....அவுஸ்திரேலியா


                              
        
வேதாந்த வித்தாக வெளிக்கிளம்பி வந்தாரே
பூதலத்தில் ஆன்மீகம் பொங்கிவிடச் செய்தாரே
பாரதத்தாய் மடிவந்த பாங்கான புத்திரராய்
வீரநிறை துறவியாய் வெளிப்பட்டார் விவேகானந்தர்

புதுக்கருத்து புத்தூக்கம் உளமுழுக்க நிறைத்தாரே
தருக்கமுடன் நோக்குவதை தன்கருத்தாய் கொண்டாரே
விருப்பமுற்று தத்துவத்தை வேகமாய் கற்றாரே
விவேகநிறை பிள்ளையாய் வேதாந்தம் நாடினரே

அறிவோடு அணுகுவதை அவரேற்று நின்றாரே
அலசிநின்று பார்ப்பதிலே ஆசையவர் கொண்டாரே
ஆண்டவனின்  நிலையவர்க்கு அதிசயமாய் ஆகியதே
ஆண்டவனைக் கண்டவரை அவர்காண விழைந்தாரே

 கண்டாலே உண்மையெனும் கருத்தையவர் கொண்டாரே
 காணாத நிலையினிலே கருத்திருத்த வெறுத்தாரே
 கடவுள்பற்றி பலருரைத்தும் கருத்திலவர் கொள்ளாமல்
 காத்திருந்தார் காத்திருந்தார் காந்தத்தைக் காண்பதற்கு

தூய்மைநிறை மிக்கவராய் துறவிகளைக் கண்டார்
தாய்மையுடன் அவர்க்குதவி தானவரும் மகிழ்ந்தார்
வாய்மையினை வளர்ப்பதிலே வாஞ்சையவர் கொண்டார்
வார்த்தைஜாலம் விரும்பாமல் மனத்தெளிவில் நின்றார்

மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்விநிலைய மாணவர்களின் காணொளி நிகழ்வுகள் இணையதளத்தில் ----------------------------- பரமபுத்திரன்


 


 

மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் முப்பது ஆண்டுகள் நிறைவினைக்  கொண்டாடும் முகமாக மாணவர்களின் கலையுணர்வுடன் கூடிய தமிழ் நிகழ்வுகளை இணைய வெளியில் உலா வரச்   செய்துள்ளனர்  மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தினர். இந்நிகழ்வுகள் யாவும்  2020 ம் ஆண்டு மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்விப்  பள்ளியில் தமிழ்கற்ற முன்பள்ளி முதல் உயர் வகுப்பு வரையான மாணவர்களின்  திறன்களை வெளிக்காட்டும் அதேவேளை, பள்ளியின் பழைய மாணவர்களையும் இணைத்து   இணையத்தில் வலம் வரச்செய்துள்ளனர்.

 

எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் – 48 இடதுசாரி இலக்கியவாதிகள் இணைந்த இலங்கை – தமிழக உறவு ! இலக்கிய ஆய்வுக்கு மாமனாரை தெரிவுசெய்த மருமகள் !! முருகபூபதி



சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன்  மூன்று திரைப்படங்கள் பார்க்கச்சென்றேன்.

அதில்  ஒரு தமிழ்ப்படத்தை  பார்க்குமாறு எனக்கு பரிந்துரை செய்தவர் அறந்தை நாராயணன். அது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர் தோழர் தா. பாண்டியனின் சங்கநாதம்.

மற்றது, சுஜாதாவும் கவிஞர் அக்கினிபுத்திரனும் குறிப்பிட்ட ஓம்பூரி நடித்த அர்த்சத்யா திரைப்படம்.

எவரது சிபாரிசுகளும் இன்றி நானே தெரிவுசெய்து நண்பர்களை அழைத்துச்சென்ற படம் மணிவண்ணனின் நூறாவது நாள்.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் சென்னையை கலக்கிய ஓட்டோ சங்கர்,  பல கொலைகளை செய்து புதைத்திருப்பதாக பின்னர் செய்திகள் வந்தன. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவனது இறுதித்தருணம் குறித்து ஒரு விவரணப்படமும்  வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அர்த்சத்யா பற்றி எனது சினிமா சம்பந்தப்பட்ட பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்.

வாசகர் முற்றம் – அங்கம் 14 வாசகியாக வளர்ந்து, விமர்சகியாக மாறிய சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதன் தாயகத்தில் நாலாதிசையிலும் வாழ்ந்துவிட்டு துபாய் சென்ற இலக்கியவாதி ! முருகபூபதி



இலங்கையில் வடமராட்சியில் 
பருத்தித்துறையைச்சேர்ந்த  மருத்துவர் பஞ்சநாதன் – அன்னலட்சுமி தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர் சூரியகுமாரி.

குடும்பத்தில் அஞ்சாவது பெண் குழந்தை கெஞ்சினாலும் கிடைக்காது என்று எமது முன்னோர்கள் சொல்வதை கேட்டுள்ளேன்.

இந்த செல்லக்குழந்தைக்கு வீட்டிலே செல்லப்பெயர் பபா.   எனது  அம்மாவுக்கும் குடும்பத்தில் செல்லப்பெயர் பபா.  அம்மா  பபாவும் இந்த சூரியகுமாரி பபாவும் இணைந்ததுதான் எமது  பெரிய குடும்பம் என்பது மற்றும் ஒரு கிளைக்கதை.

சூரியகுமாரி பிறந்தது மாத்தளையில்.   தந்தையார் வடமராட்சி
பருத்தித்துறையிலிருந்து மருத்துவராக ஊர் ஊராக மாற்றலாகிச்செல்ல நேர்ந்தமையால்  சூரியகுமாரி பிறந்த ஊர் நோர்த் மாத்தளை.

புத்தளம் மாம்புரி – மினுவாங்கொடை – ஆண்டிஅம்பலம் – நீர்கொழும்பு – நயினா மடம் – பருத்தித்துறை என தாயகத்தின் நாலா திக்கிலும் தந்தையார் மருத்துவத் தொழில் நிமித்தம் செல்ல நேர்ந்தமையால்,  சூரியகுமாரியும்  இங்கெல்லாம்  பயணித்து படிக்க நேர்ந்தது.

அதனால் சகோதர மொழியான சிங்களமும் இவருக்கு பரிச்சியமானது.  மூத்த அக்கா பத்மினி , இரண்டாவது அக்கா நந்தினி, மூன்றாவது அக்கா மாலதி , அண்ணன் விக்னேஸ்வரன் ஆகியோரும் பெற்றோரும்  தீவிரமாக வாசிப்பவர்கள்.

அதனால் அந்தப்பழக்கம் இவரையும் தொற்றிக்கொண்டது.  பத்மினி மணம் முடித்து சிங்கப்பூர் வாசியாகி, சிறிது காலம் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றிலும் பணியாற்றியவர். அத்துடன் சமையல் கலை தொடர்பாகவும் நூல் எழுதியவர். அதனை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.

எங்கள் ஊர் கோவூர் ( சிறுகதை ) முருகபூபதி

                                                                    


ங்களுக்கு இலங்கையிலிருந்த ஆபிராகாம் கோவூரைத் தெரியுமா…? 70 -80 காலப்பகுதியில் பகுத்தறிவாளராகவும் அதிரடியாக கருத்துச்சொல்பவராகவும் விளங்கியவர்.

அவரை கொழும்பில் பாமன்கடை வீதியில்  வசித்த ஒரு இலக்கிய நண்பரை பார்க்கச்செல்லும் வேளைகளில் கண்டிருக்கின்றேன்.  அவரது  வீட்டு முற்றத்தில்  வளர்க்கப்பட்ட  பூமரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். ஆனால், ஒருநாளும் பேசியதில்லை. அவரது மேடைப்பேச்சைக் கேட்டு ரசித்திருக்கின்றேன்.

கட்டுப்பெத்தை  பல்கலைக்கழக வளாகத்தின் தமிழ்மாணவர்


மன்றம் ஒருதடவை  இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்திய கலைவிழாவில், அவரும் வந்து உரையாற்றியிருக்கிறார்.

 “ மழைவேண்டி யாகம் வளர்க்கிறார்கள். அவ்வாறான யாகங்களுக்காகவே ஒரு அமைச்சகத்தை உருவாக்குவார்களா..?  “   என்று கேலியாக அவர் அன்று சொன்னபோது சபை சிரித்தது.

அவரது மனைவி இறந்ததும், சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்போகும் செய்தியையே மரண அறிவித்தலாக இலங்கை வானொலிக்கு  அவர் வழங்கியபோது ஶ்ரீமா அம்மையாரின் அன்றைய அரசு அதற்கு தடைவிதித்தது.

பின்னாளில் ஆபிரகாம்கோவூரின் உடலும் மருத்துவக்கல்லூரிக்குத்தான் வழங்கப்பட்டது. அவருடைய எலும்புக்கூட்டையும் படம் எடுத்து ஒரு ஊடகம் வெளியிட்டதும் நினைவிருக்கிறது.

ஆபிராகாம் கோவூரின் அனுபவங்களை வீரகேசரி பத்திரிகையாளர் தனரத்தினம் தொடர்ந்து எழுதினார். அது புத்தகமாகவும் வந்ததும்  உங்களுக்கு  நினைவிருக்கிறதா..?

சரி, போகட்டும் அவரது நம்பிக்கை என்ற அனுபவப்பதிவைத் தழுவி கொழும்பில் எங்கள் தமிழ்க்கலைஞர்கள் ஒரு நாடகத்தை மேடையேற்றினார்களே…! அதில் ஆபிரகாம் கோவூராக இலங்கை வானொலி கலைஞர் ஜோர்ஜ் சந்திரசேகரன் நடித்தாரே…?  இதுவெல்லம் உங்களில் எத்தனைபேருக்கு நினைவில் தங்கியிருக்கிறது…!

வருடங்கள் தசாப்தங்களாக ஓடிவிட்டன. மறந்திருப்பீர்கள். நான் அன்று கண்ட ஆபிராகாம் கோவூரின் தோற்றத்திலேயே ஒருவரை நான் தற்போது வாழும் ஊரில் பார்த்திருக்கின்றேன். பேசியிருக்கின்றேன்.

காக்கைச் சிறகினிலே… பொன் குலேந்திரன் – கனடா

 .

அன்று புரட்டாசி சனிக்கிழமை. அம்மாவும் அப்பாவும் புரட்டாசிக் சனிக்கிழமைக்கு விரதம். இருவரும் காலை, வண்ணார்பண்ணை வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போய் நல்லெண்ணை எரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்து போட்டு வந்தார்கள். அவர்கள் தங்களோடு என்னையும் வரும்படி கூப்பிட்ட போது நான் சாக்கப் போக்கு சொல்லி கடத்திவிட்டேன். அப்பாவுக்கு ஏழரைச் சனி கடைக்கூறாம அம்மா சொன்னாள.; முதற் கூறில் அக்சிடென்ட் பட்டவர் நல்லகாலம் தன்றை மாங்கல்யப் பாக்கியத்தால் அவர் உயிர் தப்பியது என்பாள் அவள் அடிக்கடி. நடுக் கூறு நடக்கும் போது காணியில் பங்கு கேட்டு  அவர் போட்ட கேஸில் தோர்த்து போனார். நடுக் கூறு நடக்கும் போது தான் அப்பாவுக்கு புரமோசன் கிடைத்தது. அக்காவுக்கு திருமணம் நடந்தது .கனடா மாப்பிள்ளை வேறு. அந்த நல்ல காரியங்களைப் பற்றி அம்மா பேசமாட்டாள். அம்மா பயப்பட்டாள கடைக் கூறில் என்ன நடக்குமோ என்று. இதுக்கெல்லாம் காரணம் ஊர் சாஸதிரி சதாசிவம் தான். ஒரு மாதத்துக்கு ஒரு தடவை அவரிடம் இருபது ரூபாய் கொடுத்து ஆலோசனை கேட்காவிட்டால் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவர் சொன்ன படி சனிக்கிழமை விரதப் பயித்தியம் அவளைப் பீடித்துக் கொண்டது. அது தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவள் விரதம் இருந்தாள். எனக்கு தான் வயிற்றில் அடி. சனிக்கிழமையில் தான் மார்க்கண்டன் கிடாய் வெட்டி கூறு போடுகிறவன். பனை ஓலையிலை கொழுப்போடை கட்டித் தரும் அந்த இறச்சியை ருசித்த சாப்பிடாமல் இந்த சனிக்கிழமை விரதம் தடுத்துவிட்டது. ஒரே ஒரு சனிக்கிழமை சித்தப்பா வீட்டை போய் அம்மாவுக்கு தெரியாமல் அந்த இறச்சியை சாப்பிட்டு வந்தனான். அம்மாவுக்கு தெரிந்திருந்தால் வீட்டுக்குள்ளை விட்டிருக்கமாட்டா. 


பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - சுமதி என் சுந்தரி - ச. சுந்தரதாஸ் - பகுதி 5

 .


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பெயரில் உருவாக்கப்பட்ட ராம்குமார் பிலிம்ஸ் கலரில் தயாரித்த படம் சுமதி என் சுந்தரி . ஏற்கனவே இவர்கள் தயாரித்த கலாட்டா கல்யாணம் படம் வெற்றி பெறவே அடுத்து இப்படம் தயாரானது. முந்திய படத்தில் இடம்பெற்ற சிவாஜி ,ஜெயலலிதா, நாகேஷ் தங்கவேலு, சச்சு இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். கலர் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் குளு குளு கலரில் ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப் பட்டிருந்தன. பிரபல ஒளிப்பதிவாளர் தம்பு தன் கைவண்ணத்தை கலர் வண்ணமாக படமாக்கியிருந்தார் .

பிரபல திரைப்பட நடிகை சுமதி படாடோபம் இன்றி எளிமையான வாழ்வு வாழ விரும்புகின்றாள் , அதற்கு அவளுடைய நட்சத்திர அந்தஸ்து தடையாக நிற்கின்றது படப்பிடிப்பிற்காக ரயிலில் செல்லும் சுமதி நடுவழியில் இறங்கி விடுகிறாள் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் மது என்ற இளைஞனின் அறிமுகம் அவளுக்கு கிட்டுகிறது. சினிமா வாசனையே இல்லாத மது சுமதியை சாதாரண பெண்ணாக கருதுகிறான். சுமதி தன் பெயரை சுந்தரி என்று கூறி விடுகிறாள். இதற்கிடையில் சுமதியை தேடி படப்பிடிப்பு குழுவினர் அலைகிறார்கள் .

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இப்படத்தின் கதை வசனத்தை சித்ராலயா கோபு எழுதியிருந்தார். நகைச்சுவை வசனங்களை எழுதி தேர்ச்சி பெற்ற அவர் எதிலும் குறை வைக்கவில்லை. ஆனாலும் சிவாஜி இடமும் ஜெயலலிதாவிடமம் அந்த நகைச்சுவை சற்று குறைவாகவே காணப்பட்டது.

தூங்காநகர நினைவுகள் - 24: எல்லா நாளும் கொண்டாட்டம்! - அ.முத்துக்கிருஷ்ணன்

 .



ஒரு சமூகம் எவ்வளவு முற்பட்டதோ அத்தனை திருவிழாக்களை அது தன்னகத்தே கொண்டிருக்கும், ஓர் ஊரும் நகரமும் எவ்வளவு தொன்மையானதோ அங்கே அத்தனை திருவிழாக்கள் இருக்கும்தானே.

பரிணாம வளர்ச்சியில் மனித சமூகங்கள் குகைகளில் வசித்த போதே நெருப்பு மூட்டி அதனைச் சுற்றி நடனமாடியிருக்கிறார்கள். ஒன்றுகூடுதல், ஒரு வேட்டையைக் கூடிப் பகிர்தல், கூடி உண்ணுதல் என இந்தச் சமூகம் ஒரு கூட்டு வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறது என்பதை மானிடவியல் ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. எந்தவொரு மகிழ்ச்சியும் ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது, ஒவ்வொரு கணமும் பகிர்தலின் கணங்களாகவே இருந்துள்ளது.

நம் சமூகம் மெல்ல மெல்ல சமதளங்களுக்கு வந்து வேளாண்மையை மையப்படுத்திய உற்பத்தி முறையைத் தனதாக்கிக்கொண்ட பிறகு, தனிச்சொத்து என்கிற புதிய உபரி உருவாகிறது. இந்த உபரி வந்த பிறகு நம் கூட்டு வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. சொத்தும் உபரியும் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளை நம் மத்தியில் கற்பிக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை மதங்கள் இன்னும் துல்லியமாக வரையறுக்கின்றன. இருப்பினும் இந்தச் சமூகம் முன்னகர அது மீண்டும் மீண்டும் ஒன்றுகூடுவது அவசியம் என்பதைப் பல படிப்பினைகள் மூலம் அறிந்துகொள்கிறது.


இலங்கையில் எரிபொருள் விலையேற்றமும் எதிரணியின் ஆர்ப்பாட்டமும் ? ! அவதானி



தமிழ்நாட்டில்  ஒரு முதலமைச்சர் இருந்தார்.

அவரது பெயர் காமராஜர். 

இலங்கையில் ஒரு பிரதமர் இருந்தார்.

அவரது பெயர் தகநாயக்கா.

இவர்கள் இருவரையும் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா..? சமகால அரசின் அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியிலிருப்பவர்களுக்காவது தெரியுமா..?  இந்த இரண்டு பெயர்களுக்குப்பின்னாலிருந்த எளிமையுமாவது தெரியுமா..?

எப்பொழுதும் மக்களுக்கு நினைவு மறதி இருக்கவேண்டும் என நினைப்பவர்கள்தான் அரசியல்வாதிகள். தேர்தல் காலங்களில் மேடைகளில்  தாம் வழங்கும் வாக்குறுதிளை மக்கள் மறந்துவிடல் வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.

காமராஜர் தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவர் பயணித்த அரசாங்க வாகனத்திற்கு முன்னாலும் பின்னாலும்  வாகனங்கள் பாதுகாப்பு சமிக்ஞை ஒலி எழுப்பிக்கொண்டு வந்திருக்கின்றன.

அந்தத்  தொடர் ஒலியினால் எரிச்சலடைந்த காமராஜர் தான் வந்த காரை நிறுத்தச்சொல்லி வெளியே இறங்கி,  “ அது என்ன சத்தம்..? நீங்கள் எல்லாம் யார்…?  “  எனக்கேட்டுள்ளார்.

வெள்ளம் - மலையாளத் திரை - கானா பிரபா


“சொந்தத் தொழிலா?  நானா?
“டாக்டர் ! நான் எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்து விட்டேன், யாரும் வேலை தரமாட்டேன் என்கிறார்கள் 
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
 
“முரளி !  நீ ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கூடாது?”

பணத்துக்கு எங்கே போவேன்?”

“உன்னிடம் இல்லாத முதலீடா?
  என்ன புரியவில்லையா?
  அவமானம்
  எத்தனை அவமானங்களைச் சேமித்து வைத்திருக்கிறாய்
  அது போதாதா?”

இலங்கைச் செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை 262 பில். ரூபா செலவு

இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியில் கூட்டு நாடுகள்

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மையல்ல

மட்டு. மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா 300 மில்லியன் ரூபா நிதி

யாழ். மக்களுக்காக இன்று மேலும் 50,000 தடுப்பூசிகள்


 கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை 262 பில். ரூபா செலவு

2020 முதல் இதுவரை  அரசின் செலவீடு  குறித்து பிரதமர் விளக்கம்

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (30) அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உலகச் செய்திகள்

 சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சீனா- ரஷ்யா: நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு

தொடக்க விழாவில் ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார்

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஜனாதிபதிக்கு 15 மாத சிறை

டெல்டா வகை கொரோனா 90இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கை

கொரோனாவைக் கட்டுப்படுத்த செப்டெம்பருக்குள் ஒவ்வொரு நாடும் 10 % மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்


சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் இராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

ஆசிரியர் க்கம்


பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தபாயா ராஜபக்க்ஷவின் பொதுமன்னிப்பு அடிப்படையில் நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில், அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும், யாழ். சிறையிலிருந்து ஒருவருமாக 16 பேர் 24-06-2021 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக தமிழர் தரப்பில் பேசப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்க வேண்டும், பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் 1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதச் சட்டம் ஒரு ஜனனாயக விரோதச் செயலாகக் கருதப்படுகிறது. சிறுபான்மையினர் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழக்கூடாது, வாய் திறக்கக் கூடாது என்பதே அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஞானம் நடாத்தும் இலக்கியப் போட்டிகளின் முடிவுத்திகதிகள் 31-08-2021

 



"பெண்" நகைச்சுவை குடும்ப நாடகம் - 11/07/2021