தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்

.


பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார், சிகிச்சை பலனிற்றி இன்று காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற நோக்குடன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்து, சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் முத்துக்குமார். இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக 2012-ஆம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார். கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, புதுப்பேட்டை, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி, காக்காமுட்டை, தெறி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வரும் பாடல்கள் எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.

நா.முத்துக்குமாருக்கு துயரோடு ஆழ்ந்த அனுதாபங்கள் - செ.பாஸ்கரன்

.
Image may contain: 1 person , beard and closeup
ஆனந்த யாழை மீட்டிய அந்தக் கவிஞன் மறைந்து விட்டான்
அழகிய கவியாய் உலவிய அவனை இறைவன்பறித்துவிட்டான்
பூக்களின்நறுமணம், சுவாசமாய் தந்தவன்
மூச்சை நிறுத்திவிட்டான்
உயிர்க் கூட்டினை விட்டுவிடுதலையாகி
கூவிப் பறந்துவிட்டான்


மரணம் பற்றிய வதந்தி ( நா.மு வின் கவிவரிகள் )

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!
நா.முத்துக்குமார

கோடுகளும் சித்திரங்களே | கவிதை | கவிஞர் வைரமுத்து

.


என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

சிட்னி முருகன் கோவிலில் வரலச்சுமி விரதம் 12.08.16 வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

.

சிட்னி முருகன் கோவிலில் வரலச்சுமி விரதம் 12.08.16 வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அடியார்கள்சூழ்ந்திருக்கநூற்றுக்கணக்கான அடியார்கள்திருமகள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கெடுத்திருந்தனர்.


நூல்கள் அறிமுகம் 20/08/2016



ஜேக்கப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம் (மலையாளம்) - கானா பிரபா

.
ஜேக்கப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம் (மலையாளம்) - மகன் தந்தைக்காற்றும் உதவி

இந்த வார இறுதியில் நான் இரண்டு படங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இது வழமைக்கு மாறான செயல். ஒரு படத்தையே பொறுதியாகக் பார்க்கும் வல்லமை வீட்டில் இருக்கும் போது வாய்க்காது எனக்கு. 

இரண்டு படமுமே திருக்குறளை முன்னுதாரணமாகக் காட்டக்கூடியவை. "தந்தை மகற்காற்றும் உதவி" என்ற திருக்குறளை முதலில் பார்த்த "அப்பா" படத்துக்கும், "மகன் தந்தைக்காற்றும் உதவி" என்ற குறளை "ஜோசபின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" (மலையாளம்) பொருத்தக்கூடியது.

 "அப்பா" சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம். ஆம்பள ஜோதிகா என்று சொல்லக்கூடிய நடிகர் தம்பி ராமைய்யா, ரசிகனே கையாலாகாத் தனத்தோடு தொலைக்காட்சியைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்குமளவுக்கு லோடு லோடாக இறைப்பவர் என்று பார்த்தால் இந்தப் படத்தில் அவரின் தொற்று சமுத்திரக்கனி முதற்கொண்டு காய்ச்சி எடுத்து விட்டது.
உயரப் பறக்க நினைக்கும் நம்மவர் தம் பிள்ளைகளைப் பகடைக்காயாக்கிக் காய்ச்சும் அருமையான கதைக் கருவை வைத்துக் கொண்டு அடித்து ஆடவேண்டாமா? ஆங்காங்கே முத்திரை பதிக்கும் சின்னச் சின்ன யதார்த்தபூர்வமான காட்சிகளில் மட்டுமே உழைப்புத் தெரிகிறது. இந்தப் படக் கதைக்கரு புலம்பெயர் சூழலில் இருக்கும் நம்மவருக்கும் ஏகமாகப் பொருந்தக் கூடியது என்ற திருப்தி மட்டுமே மிஞ்சியது. முக்கால்வாசிப் படத்தோடு நிறுத்திக் கொண்டேன். ஆனால் இலக்கியா அம்மா அதிசயத்திலும் அதிசயமாக இரண்டாவது தடவை போட்டுப் பார்த்தார்.

குவின்ஸ்லாந்து - கோல்ட்கோஸ்டில் தமிழ் எழுத்தாளர் விழா 27 08 2016

.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு 
27 - 08 - 2016 இல் கோல்ட்கோஸ்டில் நடைபெறும்.
நடைபெறும்  இடம்:     Auditorium,   Helensvale  Library,  Helensvale  Plaza
                                           Helensvale 4212, Gold coast, QLD
இவ்விழாவில்  கண்காட்சிகள்,  கவியரங்கு,  கருத்தரங்கு,  பட்டி மன்றம், வாசிப்பு  அனுபவப்பகிர்வு,  மற்றும்  கலை  நிகழ்ச்சிகள்  இடம்பெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில்   பங்குபற்றவிரும்பும்  உறுப்பினர்கள்,  இம்மாதம் 30 ஆம் (30-06-2016) திகதிக்கு  முன்னர்  எம்முடன்  தொடர்புகொண்டு  மேலதிக விபரங்களை   அறிந்துகொள்வதற்கு  ஆவன  செய்யவும். வருகைதரவிருப்பவர்கள்  குவின்ஸ்லாந்தில்  தமக்கான தங்குமிட வசதிகளை  விழா  நடைபெறும்  மண்டபத்திற்கு  சமீபமாக தெரிவுசெய்துகொள்வதன்  அவசியத்தையும்  குறிப்பிடுகின்றோம்.
தங்கள்   கருத்துக்களும்  வரவேற்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:
 பேராசிரியர் ஆசி. கந்தராஜா (தலைவர்)     (02) 9838 4378  (NSW)
டொக்டர் நடேசன்:  செயலாளர்        0452 63 19 54 (VIC)
திரு. எஸ்.அறவேந்தன்     நிதிச்செயலாளர்  :  0431 36 93 27 (VIC)
திரு. முருகபூபதி:  (துணைத்தலைவர்)                      0416 625 766  (VIC)  
திரு. எம். முகுந்தராஜ் :   ( செயற்குழு உறுப்பினர்)  0423 730 122  (QLD)
திருமதி வாசுகி  சித்திரசேனன்( நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)  0448 958 194  (QLD)

தென் ஆப்ரிக்காவில் மூன்றாவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2016

.
மூன்றாவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2016 கடந்த 5-7 நாட்களில் தென் ஆப்ரிக்கா , டர்பன். மா நகரில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.


மலேசிய திருமுருக திருவாக்கு திருபீடம் , தென் ஆபிரிக்கா. முருக பக்தி மையத்துடன் இணைந்து பல் நோக்குப் பார்வையில் முருக தத்துவம் என்ற பரந்த தலைப்பின் கீழ் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான  முருக பக்தர்கள் , அறிஞர்கள்,கல்வியாளர்கள் மற்றும் சான்றோர்களும் ஆன்றோர்களும் கலந்து கொண்டு கட்டுரை படைத்தும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் , ஆன்மீக உரையாற்றியும் சிறப்பித்தனர்.

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 17

.
                                                                       -நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


   எமது விடுமுறையைக் கழிக்க சென்னை சென்றிருந்தோம், வழமையாக தங்கும் தமிழ் புத்தகாலய அதிபர் கண.முத்தையா அவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். அவரின் மருமகன் அகிலன் கண்ணன் (எழுத்தாளர் அகிலனின் மகன்) கோரஸ் இசை கேட்போம் வாங்கோ எனக் கூட்டிப்போனார். ஆழ்வார்பேட்டை ரஞ்சன் தெருவை அடையும் பொழுதே இசை காற்றில் மிதந்துவந்தது. இசை கேட்டுக்கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்ததும் ஆஜானுபாகுவான ஒரு 60 வயது மதிக்கத்தக்கவர் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். இளம் வயதினரான ஆண்களும் பெண்களுமாக பாடிக்கொண்டிருந்தனர். கண்ணன் இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த M.B. ஸ்ரீனிவாசனிடம் சென்று, நாம் இலங்கையில் இருந்து வந்துள்ளோம் எமக்காக பாரதி பாடல்களைப் பாடமுடியுமா எனக் கேட்டார். அந்த இசைக்குழு பாரதத்தின்  செப்புமொழி 18-இலும் பாடும் திறமை படைத்தவர்கள், எமக்காக பாரதி பாடல்களைப் பாடினார்கள்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

ஆளுமைகளின்   உள்ளத்துணர்வுகளை  பதிவுசெய்த கடித  இலக்கியம்
இயல்புகளை  இனம்காண்பித்த  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கணேஷ்
   
                                                                 

மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி,   கைப்பேசி,  ஸ்கைப்,  டுவிட்டர்,  வைபர்,  வாட்ஸ்அப்  முதலான   சாதனங்கள்  விஞ்ஞானம்  எமக்களித்த வரப்பிரசாதமாயிருந்தபோதிலும் , அந்நாட்களில்  பேனையால் எழுதப்பட்ட   கடிதங்கள்  தொடர்பாடலை  ஆரோக்கியமாக  வளர்த்து மனித   நெஞ்சங்களிடையே  உணர்வுபூர்வமான  நெருக்கத்தையே வழங்கிவந்தன.
உலகம்  கிராமமாகச் சுருங்கிவரும்  அதே  சமயம்  மனித  மனங்களும் இந்த   அவசர  யுகத்தில்  சுருங்கிவருகின்றன.
இலக்கியங்கள்   மனிதர்களை  செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன.    அவ்வாறே  கடித  இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே    அறிவுபூர்வமாகவும்  உணர்வு  பூர்வமாகவும் நெருக்கத்தையும்    தேடலையும்   வளர்த்து வந்துள்ளன.
இலங்கையில்   மலையகம்  தலாத்துஓயாவில்  வாழ்ந்து  மறைந்த இனிய   இலக்கிய   நண்பர்  கே.கணேஷ் -  சுவாமி விபுலானந்தர், சிங்கள  இலக்கிய  மேதை  மார்டின்  விக்கிரமசிங்கா   ஆகியோருடன் இணைந்து   ஒருகாலத்தில்  அகில  இலங்கை எழுத்தாளர்   சங்கத்தை ஸ்தாபித்தவர்.   பின்னர்  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை 1950 களில்  உருவாக்கியவர்.



அப்பபொழுது   நான்  இந்த  உலகத்தையே  எட்டிப்பார்க்கவில்லை.   கே. கணேஷ்   ஈழத்து  தமிழ்  இலக்கிய  முன்னோடி,   படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர்.
எனக்கும்   அவருக்கும்  இடையே  மலர்ந்த  உறவு  தந்தை -  மகனுக்குரிய   நேசத்தை  உருவாக்கியிருந்தது.   இதுபற்றி  விரிவாக முன்னர்   எழுதிய  காலமும்  கணங்களும்  என்ற  தொடர்பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.


அஞ்சலி: வியட்நாம் வீடு சுந்தரம் - காவிரியின் மைந்தன்

.

அழுத்தமான கதைகளும் மறக்க முடியாத வசனங்களும் கோலோச்சிய அந்தக் காலத்துத் திரைப்படங்களில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். தமிழ் சினிமா நாடகத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடாத அந்தக் காலகட்டத்தில் நாடக அரங்கிலிருந்து சினிமாவுக்கு வந்த திறமைசாலிகளில் ஒருவர் சுந்தரம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் 1970-ல் வெளியான ‘வியட்நாம் வீடு’ படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர். இவர் பி.கே.சிவசாமி, தர்மாம்பாள் இணையரின் மகனாக 1943-ம் ஆண்டு ஜூலை 31 அன்று தஞ்சாவூரில் பிறந்தார்.
தாயாரின் ஊரான தஞ்சையில் தொடக்கக் கல்வி பயின்ற சுந்தரம் தந்தையின் ஊரான திருச்சியில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலையில் சேர்ந்தார்.
சென்னையில் டன்லப் டயர் கம்பெனியில் 18 வயதில் மெஷின் மேனாக வேலைக்குச் சேர்ந்த இவரைச் சமூக நாடகங்கள் ஈர்த்துக்கொண்டன. வேலை முடிந்ததும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த ‘யூனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ நாடகக் குழு அலுவலகத்துக்குச் சென்றுவிடுவார்.
அந்த நாடகக் குழுவின் நிறுவனர் ஒய்.ஜி. பார்த்தசாரதியின் அன்பைப் பெற்று அனைவரது தேவைகளையும் கவனித்துக்கொள்ளும் புரொடக்‌ஷன் பாயாகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கியவர் பிறகு காஸ்டியூம் கண்ட்ரோலராக உயர்ந்தார். ஆனால் அவரது எண்ணம் நாடகத்துக்கும் திரைக்கும் எழுத வேண்டும் என்பதே. இதனால் இரவில் கண் விழித்து நீண்ட நேரம் நாடகங்களை எழுத ஆரம்பித்தார். என்றாலும் டயர் கம்பெனி வேலையை அவர் விடவில்லை.
எம்.ஜி.ஆரின் ஆசி சிவாஜியின் அரவணைப்பு

உலகச் செய்திகள்


ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

பாக்தாத் வைத்தியசாலையில் பயங்கர தீ ; 11 குழந்தைகள் பலி

குலென் விவகாரம்: அமெரிக்காவுக்கு துருக்கி எச்சரிக்கை: புதின் - எர்டோகன் சந்திப்பு

ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

09/08/2016 சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன

திரையுலக ஆளுமை பஞ்சு அருணாசலம் நினைவில் - கானா பிரபா


நான் எடுத்த காரியம் எல்லாத்துலையும் வெற்றி அடைஞ்சேனா என்றால் இல்லை ஆனால் என்னால் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை - பஞ்சு அருணாசலம்

மதிப்புக்குரிய பஞ்சு அருணாசலம் அவர்கள் சில மணி நேரம் முன்னர் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சி கொண்டேன்.  தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாக, இயக்கு நராக விளங்கிய இவர் மனித உருக் கொண்ட சினிமாத் தொழிற்சாலை. கண்ணதாசனின் உதவியாளராக இருந்து சிறு முதலீட்டுப் படங்களில் ஆரம்பித்து பெரும் பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளிவர். இசைஞானி இளையராஜாவுக்கு அறிமுகம் கொடுத்தவர் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு மாபெரும் வர்த்தகச் சந்தையைக் காட்டியவர்.
 பஞ்சு அருணாசலம் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்குக் கடந்த மூன்று மாதங்களாக பேஸ்புக் வழியான நட்புப் பாலம் கிட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த உறவுப் பாலத்தை ஏற்படுத்தியது இந்தப் பதிவு

வன்னியில் வலை விரிக்கும் நிதி நிறுவனங்கள்! அவலப்படும் அப்பாவிகள்!

கடந்த காலப் போர், பொருளாதார நெருக்கடிகள், அதன் பின்னரான இடப்பெயர்வுகள், இழப்புகள் என்பவற்றால் போரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வாழ்விட வசதிகளை ஏற்படுத்த வேண்டியமை, வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியமை என பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு இடங்களிலும் கடன்களைப் பெற்று அவற்றை மீளச்செலுத்த முடியாமல் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளிலும் தனியார் கம்பனிகளிலும் நுண்கடன் நிதிநிறுவனங்களிடமிருந்தும் பல்வேறு வட்டி வீதங்களில் தொழில் தேவைகள் கருதி பெற்றுக் கொள்ளும் கடன்கள் அந்த நோக்கத்திற்காக செலவிடப்படாமல் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை மீளச் செலுத்த முடியாமல் பல குடும்பங்கள் உள்ளன.
இதனை விடவும் தேவை கருதி வங்கிகளில் கடன் பெற்று அந்தத் தேவைகளுக்கு அப்பணம் பயன்படுத்தப்பட்ட போதும் அதனால் போதிய வருமானம் கிடைக்காமையினால் கடன்களை மீளச்செலுத்த முடியாமலும் அவர்கள் காணப்படுகின்றனர்.

தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம்.

.
தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்
கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்...
பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவி லட்சுமி....
ஃபேஸ்புக்கில் தன்னை ஆபாசமாய்ச் சித்தரித்ததைத் தடுக்க முயன்று, காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா...
வாழத் தொடங்கும் முன்னரே மரணத்தின் வாசலைத் தட்டிய இளம்வயதினரின் சமீபத்திய‌ தற்கொலை நிகழ்வுகள், அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர நகரத்தை உலுக்கிச் சற்றே கவனத்தைத் திசைத் திருப்புகிற நிகழ்வாய் அமைந்திருக்கின்றன‌.
2014-ல் பல்கலைகழக மானியக் குழு உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (96 கல்லூரிகள், 4646 மாணவர்கள்) 12.20 சதவீத மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், 15.45 சதவீதத்தினர் தங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகக் கூறியதும் பதிவாகியுள்ளது.
இவ்வாறான‌ தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், பிரச்சினைகளைக் கையாளும் திறன் இல்லாமல் போவது, அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று பூசி மெழுகப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா?
உயிர்- உள்ளம்- சமூகம் ஆகிய மூன்று கோணங்களிலிருந்து நாம் ஆய்வு செய்தால் மட்டுமே தற்கொலைகள் பற்றிய சரியான புரிதலும், அதைத் தடுப்பதற்குச் சரியான‌ வழிமுறையும் கிடைக்கும்.

இலங்கைச் செய்திகள்


நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று (08/08/2016)

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

தயா மாஸ்டர் சற்றுமுன்னர் கைது.!

மூன்று  இலட்சம் டொலர்களை வைப்பிலிடும்  வெளிநாட்டவருக்கு  10 வருட கால வதிவிட வீசா  : அரசாங்கம் அறிவிப்பு

யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்


ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!

.

எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு.

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.
குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது.
இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.

வாழ்வை எழுதுதல் - முருகபூபதி


உறவுகளைத்தேடவும்  இணைக்கவும்  பாதை  திறக்கும் ஊடகங்கள்
பெறுமதியானவர்களை   வாழும்பொழுதே கௌரவிக்காமல்,  மறைந்த  பின்னர்  நடத்தும்  சடங்குகள்   சுயதிருப்தியன்றி   வேறில்லை
                                                                     

தமிழ்நாட்டில்   1967  இல்  நடந்த  சட்டசபைத்தேர்தலில்  எம்.ஜீ.ஆர். படுத்துக்கொண்டே   ஜெயித்தவர்  என்று  இன்றும்  சொல்லப்படுகிறது. அக்காலப்பகுதியில்  அவர்  நடிகவேள்  எம்.ஆர்.ராதாவினால்  சுடப்பட்டு,  சிகிச்சைக்காக  மருத்துவமனையில்  இருந்தவேளையில் பறங்கிமலைத்தொகுதியில்   வெற்றியடைந்தார்.
அதற்குப்பிறகு,    பல  வருடங்களின்  பின்னர்  அவர்,  அமெரிக்காவில் சிகிச்சை   பெற்றவேளையிலும்  நடந்த  ஒரு  தேர்தலில் வெற்றிபெற்றார்.
இந்தச்சம்பவங்கள்   அண்மையில்  எனது  நினைவுக்கு வந்தமைக்குக்காரணம்,   அவுஸ்திரேலியா  சிட்னியில்  ஒரு  முதியோர் இல்லத்தில்   அமைதியாக  படுத்திருக்கும்  தகைமைசார்  பேராசிரியர் பூலோகசிங்கம்   குறித்து  எழுதப்பட்ட  பதிவுதான்.


ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் - பேராசிரியர் சி.மௌனகுரு

ஈழத்து  மரபுவழி  நாடக  உலகில்  பெரும்  மாற்றங்கள் நடந்து   கொண்டிருந்த   காலப்பகுதியில்   கம்பீரமான  நடிகர்


ஈழம் தமிழ் நாடக மரபுக்கு நீண்டதோர் செழுமையான பாரம்பரியம் உண்டு,பல்லாயிரக்கணக்கான நாடகர்களின்  பங்களிப்பினாலேயே இம்மரபு  உருவானது.வரலாறு சிலரைப் பதிவு செய்து வைத்துள்ளது.சிலரைப் பதிவு செய்யவில்லை.அப்படிப் பதிவு செய்யக் கூடியவர்களுள் முக்கியமான ஒருவர் நண்பர் பாலதாஸ்70 வயது தாண்டியுள்ள அவர் செயற்பாடுகள் பற்றிவரும் இம்மலர் இக்குறையைப்போக்கும் விதத்தில் அமையும் என எதிர் பார்க்கிறேன்ஈழத்துத் தமிழ் நாடக மரபு  மரபுவழி நாடகம்,நவீன நாடகம் என இருகிளைப்பட்டு வளர்ந்து வந்துள்ளது
இவ்விரு மரபுகளைலும்  நடிகராக,எழுத்தாளராக,இசை அமைப்பாளராக,நெறியாளராக பலர் அறியப்பட்டுள்ளனர்
பாலதாஸ் இதில் எங்கு வருகிறார்?
1950,60 களில்யாழ்ப்பாணக் கூத்துகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுபாடி நடித்த ஓர் இளைஞன் அனைவரையும் கவர்கிறான்.அவனது உச்சஸ்தாயிக் குரலும்,மிடுக்கான நடிப்பும்,கம்பீரமான உடல் அசைவுகளும் பார்த்தோரைக் கவர்கின்றன.
மரபுவழிக் கூத்துகளில் பாடி நடித்த பாலதாஸ் கூத்தை எல்லோரையும் போல அப்படியேஆற்றுகை செய்யாமல் காலப் புதுமைக்கு ஏற்ப மாற்றி அளித்தல் மூலம் மேலும் அதற்கொரு ஜனரஞ்சகக் கவர்ச்சியை அளிக்கலாம் என எண்ணிணான்
1960 களின் நடுப்பகுதியில்யாழ்ப்பாணத்தில்  பாஸையூரில்  அண்ணாவியார் இராஜேந்திரத்தைத்  தலைவராகவும்,  அன்டர்ஸனை   செயலாளரகவும் பாலதாசை   உபதலைவராகவும்  கொண்ட பாஸையூர்  வளர்பிறைக் கலா மன்றம்  நிறுவப்படுகிறதுபடுகிறது.

ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக நடனமாடி அசத்தல்: சீனாவில் கின்னஸ் சாதனை -வீடியோ இணைப்பு

.
ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக நடனமாடி அசத்தல்: சீனாவில் கின்னஸ் சாதனை -வீடியோ இணைப்பு

சீனாவில் ரோபோட்களை வைத்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 1,007 ரோபோட்களை ஒன்றாக நடனமாட வைத்து சாதனை புரிந்துள்ளனர்.
முந்தையை சாதனையை விட இருமடங்கு அதிகமாக ரோபோட்களை வைத்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரோபோட்டும் 43.8 செ.மீ உயரம் கொண்டவை. ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக இணைந்து நடனமாடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சீனாவின் கியுண்டாவ் நகரில் நடைபெற்ற பீர் திருவிழாவின் போது இந்த சாதனை நிகழ்த்தி காட்டப்பட்டது.
இந்த ரோபோட் இயந்திரங்கள் ஒரே ஒரு செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நடனமாடி அசத்தியது.



உறவினுள் பாலியல் வன்முறை எனும் பயங்கரம் - லலிதா ப்ரூடி (Lalitha Brodie)

INCEST & SEXUAL ABUSE 

ஐந்து வயது முதல் தனது சொந்த தந்தையின் பாலியல் வன்முறைக்குள் அகப்பட்டு திண்டாடிய தமிழீழப் பெண், பதின்மப்பிராயத்தில் வெளியேறி தனது பெயரை  Jenny Starke என மாற்றி, தனது கதையை 2015ம் ஆண்டு இணையத்தளத்தில் DIARY OF A MAD TAMIL WOMAN என்ற தலைப்பில் பிரசுரித்து சரித்திரம் படைத்தார். (இதை Google பண்ணி வாசிக்கவும்) Jenny Starke M.S.W., R.S.W. தன் நண்பி தர்ஷினி இளாங்கீரன் M.A RP உடன் இணைந்து 10 - 04 - 2016 நடாத்திய கருத்தரங்கிற்கு நான் சென்றிருந்தேன்.    மிக்க ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்ட இரு இளம் யுவதிகளின், கருத்தரங்கிற்கு சுமார் நூறு தமிழீழப் பெண்கள் சில வாலிபர்கள், சில வேற்றின மக்களும் வந்திருந்தினர். வந்தவர்கள் அனைவரும் மிக்க ஆர்வத்துடன் பங்குபற்றி    Jennyம் தர்ஷினியும் உருவாக்கிய அன்பு ANBU = ABUSE NEVER BECOMES US, எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.
முன்பு ஒருவராலும் பேசப்படாத இந்த INCEST உறவினுள் பாலியல் வன்முறையைப் பற்றி, தற்போது உலகளாவிய ரீதியில் சகல சமுதாயங்களும் வெளிப்படையாகப் பேசவும் எழுதவும், ஊடகங்களைப் பயன்படுத்தி வருமுன் தடுப்பதைப் பற்றி ஆராயவும் ஆரம்பித்திருக்கின்றது. ஒரு நல்ல மாற்றம்.

உலகை உருக வைத்த அழுகை!

.

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.
நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை பகிர்ந்து கொண்ட கனடா நீச்சல் வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது.
சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது...
கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. பொதுக்குளங்கள், ஏரிகளிலும் குளிக்க முடியாது.
ஏதாவது நீச்சல் குளத்தில் கறுப்பின மக்கள் குளித்துக் கொண்டிருந்தால், அங்கு வரும் மற்றவர்கள் முதலில் அவர்களை வெளியேறச் சொல்வார்கள்.
கறுப்பின பிரபலங்களும் கூட அத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்! - பாமரன்


Astonishing Era and few questions on Emperor Raja Raja Chozhan - Tamil Literature Ilakkiyam Papers
நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக "சோழர் வரலாறு" படித்ததோடு சரி.
சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள "ராஜராஜ சோழன்" படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான். பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.
பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?

சிட்னி சைவமன்றம் முகநூல்

நம் பண்டைய முனிவர்களின் அதிசயப் பேரறிவு: - செல்வத்துரை சந்திரகாசன்

.


மனிதர் யாவரும் ஐந்தறிவு உடையோர் என்பது யாவரும் அறிந்ததே. எமது புலன்களால், தற்போதைய ஆற்றலுடன் உணரப்பட முடியாத பல பொருட்கள், காட்சிகள், நிகழ்வுகள் என்பன எம்மைச் சூழ இருக்கின்றன. இவை யாவும் எமக்குப் புலப்படாமல்  விட்டாலும், இவற்றை எல்லாம் நம் பழங்கால முனிவர்கள் முழுவதும் அறியக் கூடிய ஆற்றல் கொண்டு  இருந்தார்கள் என்று நம்புவதற்கு, அவர்கள்  விட்டுச் சென்ற, மதிநுட்பம் மிக்க ஆக்கங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.

அவற்றில் தற்போதைய விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

*தியானம்:
தியானமே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாய்  விளங்குகிறது. மனிதனுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் சக்தியினை கூரிய, ஆழ்ந்த தியானம் மூலம் வெளிக்கொணர்ந்து, அதன் பயனால் பேரானந்தமான வாழ்க்கை வாழலாம். மனம் குவிந்த  தியானம் மூலம், பிணி, திரை, மூப்பு,  மன அழுத்தம், ஏக்கம், கவலை, இரத்த அழுத்தம், கொழுப்பு, உஷ்ணம், சோர்வு முதலியவை நீங்கி, புத்துணர்ச்சி, அமைதி, சந்தோசம் அதிகரித்து, தூங்கிக்கொண்டிருக்கும் மூளைக் கலங்கள் விழித்தெழுந்து , புதிய கலங்கள் உருவாகி,  அக, புற அறிவுஞானம்  பெருகி, நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழலாம் என்று எழுதி வைத்தார்கள்.