சிட்னியில் ஒளிர்ந்த "வைர(த்தில்) முத்து(க்கள்)

கானா பிரபா

திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய "வைரத்தில் முத்துக்கள்". இந்த நிகழ்வு  சனிக்கிழமை யூலை 3 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகள்

.

ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகள்; தீர்மானம் எடுக்கப்படும்- ஜூலியா கில்லார்ட்

அரசியல் புகலிடம் கோரிச் செல்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பதிவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார்.
இதற்கான தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

இந்தியமருத்துவருக்கு 7 வருட சிறை

.
மூன்று நோயளிகளை கொன்ற குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 7 வருட சிறைத்தண்டனை.


இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்கா பிரஜையான மருத்துவர் ஜெயன்ற் பற்றேல் அவர்களுக்கு அவரது கவனிப்பில் கீழிருந்த 3 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டில் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
குயிள்சிலாந்து மாநிலம் இவரை மூன்றரை வருடத்திற்கு பின்னர் விடுவிக்கப்படலாம்.

ஆண் என்ற அகங்காரம் - கவிதை

                                                         -செ.பாஸ்கரன்

நான் ஆண் என்ற
அகங்காரம்
உன்னில்மட்டுமல்ல ...
காலம் காலமாய் நீ
விரும்பியபடி
அவள் இருப்பதை எதிர்பார்த்தாய்
தலை குனிந்து தரை பார்த்தல்
அவளுக்கு அழகென்றாய்
நாற்குணம்களையும்
அவள் நம்பிக்கையின்
தூண்களாக்கினாய்
சிறை வைக்கிறாய் என்றவளுக்கு
பலப்படுத்தும் வேலி என்று
அழகான விளக்கம் கொடுத்தாய்
அத்தனை பாதுகாப்பையும்
நீயே எடுத்துக் கொண்டாய்
அவளுக்காக அல்ல
உனக்காக
உறங்கும் போது கூட
உன் அணைப்பில் இருத்தினாய்
கனவில் கூட அவள்
உன் கட்டுப்பாட்டில்
எல்லாவற்றிலும்
நீயே அவளுக்காய்
நெருங்கி வந்தாய்
அது அவள் குரல்வளையை
இறுக்குவது போல்
இருப்பதையும்
நீ உணராதிருந்தாய்
நான் ஆண் என்ற
அகங்காரம்
உன்னில்மட்டுமல்ல

10 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பலவந்த குளியல்

மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.

புருஷோத்தமா மாதம் - நிறைவு பகுதி

.


ஹரே கிருஷ்ணா! பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தமா மாதத்தின் புகழின் நிறைவு பகுதியினை இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.

பிரமண பெண்ணின் இந்த வார்த்தையை கேட்ட துருவாச முனி மிக்க கோபம் கொண்டார்,அவரது உடல் கொதித்தது, அவரது கண்கள் சிவந்தன.ஆனால் இந்த பெண்ணின் உதவியற்ற நிலையை மனதில் கொண்டு தன்னை கட்டுபடுத்திக் கொண்டார்.

ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள்

.


பச்சை மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தது இவைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகம்.
விட்டமின் ஏ யில் பீட்டா கரோட்டின் உள்ளது இது ஒரு ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட். புற்று நோய் வராமல் தடுக்கும் குணம் கொண்டது.

கேரட், தக்காளி பீட்ரூட், மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, நெல்லி, திராட்சை இவைகளில் இந்த சத்து அதிகம் அவைகளை அடிக்கடி சாப்பிட்டால் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.

போதி மரம் - சிறுகதை

.
எம்.ரிஷான் ஷெரீப்,

கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த அமாவாசை இரவில் இருட்டைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. கண்கள் பீதியில் மருண்டன. கறுப்பு மையை யாரோ வானிலிருந்து கொட்டிவிட்டதுபோல மேலும் இருள். விழிகளை மூடி மூடித் திறந்தான். கால்கள் சீவனற்றுப் போய் உதறலெடுக்க பற்களும் நடுங்கத் தொடங்கின.

அது முச்சந்தி. பகலெல்லாம் இருக்கும் சனநடமாட்டத்தின் சத்தங்களையும்,

50 மாணவர்களுக்கான நிதி உதவி

ஈழத் தமிழ் அன்பர்களே!
50 பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதி உதவி

மேலதிகமாக 50 பல்கலைக்கழக மாணவர்களுக்கான அவசர நிதி உதவி கோரல்:

இந்த வருடம் ஏப்பிரல், மே மாதங்களில் 116 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது தாய் தந்தையினருடன் சென்று தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

அழகுக் குறிப்பு -

 .


பற்கள் பளபளப்பாக இருக்க: எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்

முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க: கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். அதன் பின் காய்ந்ததும் கழுவவும்.

சன்மானம் எவ்வளவு?

                                                                                                     அ. முத்துலிங்கம் 


இப்பொழுதுதான் பனிக்காலம் முடிவுக்கு வந்தது. அதற்கிடையில் கோடைகாலம் வந்துவிட்டதுபோல வீடு சூடு பிடிக்கத் தொடங்கியது. வெப்பம் ஒருநாள் 29 டிகிரி செண்டிகிரேட் காட்டியது.

சரி, ஏசியை போடவேண்டியதுதான் என்று நினைத்து சுவிட்சை போட்டேன். ஏசி வேலை செய்யவில்லை. திரும்பவும் சுவிட்சை போட்டேன். நான் சுவிட்ச் போட்ட விசயத்தையே அது கண்டுகொள்ளவில்லை. ஐந்து மாதமாக ஓய்வெடுத்ததோ என்னவோ அது மீண்டும் உயிர்கொள்ள மறுத்தது.

செம்மொழி மாநாட்டு நிறைவு விழா

.
தமிழ்த்தாய் தலை நிமிர்ந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நிறைவு விழா

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு  கோலாகலமாக நிறைவு பெற்றது. கோவை நகரில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான இந்த விழா ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்றது. நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு வைத்தார்.

6 வயது இந்திய சிறுமி தீவிரவாதியா?

.

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இந்நிலையில் குறித்த சிறுமி விமானங்களில் பயணிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பூரணம் - படித்து சுவைத்த ஆன்மீகம்

.
ரா.கோபிநாதன்

பல வருடங்களுக்கு முன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு தமிழ்ப் பத்திரிகையில், ஒரு சமஸ்கிருத சுலோகமும் அதற்கான விளக்கமும் கண்டேன். சுலோகம் மறந்துவிட்டது. ஆனால் அதன் விளக்கம் மட்டும் நினைவில் உள்ளது - 'தோற்றதுக்கு வராமலிருப்பது பூரணம். தோற்றதுக்கு வந்திருப்பதும் பூரணமே. பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்னும் பூரணம் பூரணமாகவேயிருக்கிறது. '
தமிழர்களின் புராதன பாரம்பரியத்தை பாதுகாக்கும் மலேசிய நிபுணர்


தமிழர்களின் புராதன பாரம்பரியத்தை பாதுகாக்கும் மலேசிய நிபுணர்தமிழர்களின் புராதன பாரம்பரியங்களை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம்பேணிப் பாதுகாக்கும் முன்முயற்சியை மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டதகவல் தொழில்நுட்ப ஆலோசகர் மேற்கொண்டுள்ளார். சுபாஷினி றிம்னல் என்றஇப்பெண்மணி தற்போது ஜேர்மனியில் வசித்து வருகிறார். உலகளாவிய ரீதியில்விலைமதிக்க முடியாத இந்தப் புராதன தொல்பொருள் சின்னங்களுக்கான ஆதாரங்களைஅவர் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2010

Australian Society of Graduate Tamils (ASOGT) அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்

16 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ், கன்பரா மாநிலங்களில் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. 10 வது ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் ஊக்குவிப்புப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பதாகும். தாயகங்களிலும் புலம் பெயர் தேசங்களிலும் எம்மவர் இன்னல்கள் நீங்க நம்பிக்கை தரும் வகையில் புதியதோர் உலகம் செய்யவண்டிய தேவை உள்ளது என்ற கருத்தை மையமாக வைத்தே இந்த ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.

சில முக்கியமான மாற்றங்களை இங்கு தருகின்றோம்:

தள்ளி நின்றால் போதும் - அ . முத்துலிங்கம்

.


சமீபத்தில் இக்வடோர் நாட்டுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒரு கதை கூறினார். அந்த நாட்டு அரச கரும மொழி ஸ்பானிஷ். அவர்களுடைய மக்கள் மொழியான குவெச்சா அழிந்து வருகிறது. அதை பேசுவோரும் குறைந்து விட்டார்கள். தென் அமெரிக்காவின் ஆதிவாசிகளான இன்கா இனத்தவர் பேசிய மொழி அது. அதை அழிவிலிருந்து காப்பாற பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இப்பொழுது மைக்ரோசொஃப்ட் நிறுவனம் குவெச்சா மொழி கம்புயூட்டரில் இடம் பெறும் தகுதி பெற்றுவிட்டது என அறிவித்திருக்கிறது.

காலசுவட்டின் நூல் வெளியீடு

உலகமயமாதல் சூழலில் தமிழ்

.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஜூன் 24 அன்று, ‘உலகமயமாதல் சூழலில் தமிழ்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பொழிவரங்கத்தில் பேராசிரியர் தமுஎகச மாநிலத் தலைவர் அருணன் ஆற்றிய உரை வருமாறு:-உலகமயமாதல் என்கிற சிந்த னையை தமிழன் சட்டென்று எதிர்க்க மாட்டான். அவன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சங்க காலத்திலேயே உலகளாவிய சிந்தனையை- அப்படி யொரு உலகமயச் சிந்தனையை- தந்தவன். இப்போதும் கூட அப்படியொரு உலகமயமாதல் நடந்தால் ஏற்றுக்கொள்வான். அதாவது, சகல நாடுகளும் சமத்துவமாகக் கூடிப்பேசி, சகல நாடுகளுக்கும் ஏற்ற கொள்கைகள், நடைமுறைகள் என்றால் ஏற்றுக்கொள்வான்.