இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

.
தமிழ்முரசுஅவுஸ்ரேலியா நேயர்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 



கவிதைக்காரர்கள்

.

கலகக்காரர்களைவிடவும் அபாயகரமானவர்கள்
கவிதைக்காரர்கள்.
தங்களுக்கான சூத்திரங்களில்
சிக்குப் பிடித்தலைகிறார்கள் அவர்கள்.

சூழ்நிலைகள் எதானால் என்ன.
போகட்டும் என்று எவற்றையும் விடுவதில்லை அவர்கள்.
இறப்பை அவமானத்தை ஒழுங்கீனத்தை
ருசித்துப் பரிமாறுபவர்கள் அவர்கள்.

காதலென்றும் காமமென்றும்
கதறுபவர்களைக் கூட மன்னித்துவிடலாம்
புரட்சி என்று பிதற்றுபவர்களை
ஒரு போதும் மன்னிக்காதீர்கள்.

தங்களுக்கான கத்திகளை அவர்கள்
அதிலேயே தீட்டிக் கொள்கிறார்கள்.
குப்பைகளாக திருப்பிக் கொட்டப்படும் விருதுகளில்
ரத்த முகத்தை வரைந்து கொள்கிறார்கள்.

நிம்மதி சூழுந்த இடத்தில்
குண்டு வைப்பவர்களைக் கூட கருணைமனுவில் கிடத்திவிடலாம்.
தங்களுக்கான ஆப்புகளையும் மயானத்தையும்
நிர்ணயித்தும் வடிவமைத்தும் கொள்பவர்கள் அவர்கள்.

மாஞ்சா தேய்த்த பட்டங்களோடு கடக்கிறார்கள்
அவர்களுக்கான போட்டி என நினைத்துவிடவேண்டாம்
சமயத்தில் அவை
உங்கள் கழுத்தை அறுப்பதற்காகவும் இருக்கக்கூடும்.
nantri www.blogger.com

எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “ எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்

.
புது திண்ணை  இதழில் வெளியான  பகிர்வை இங்கு நன்றியுடன் மீள்  பிரசுரம்  செய்கிறோம்      http://puthu.thinnai.com/?p=31415
Baskaran-Book-Cover

” ஓலைதேடி எழுத்தாணி தேடி ஆளோய்ந்திருக்கும் மூலதேடி
மூக்குக் கண்ணாடி முகத்திற் பொருத்தி வேளைவருமட்டும்
காத்திருப்பார் ” கவிதையெழுத முற்படுபவர் என்று சொல்லப்
படும் நிலையில் நம் கவிஞர் பாஸ்கரன் இல்லை என்றுதான் எண்ணுகின்றேன்.
பாஸ்கரன் அவர்களுக்குக் கவிதை இயல்பாக வருகின்றது.அவரால் மரபாயும் பாடமுடிகிறது. நவீனமாயும் பாடமுடிகிறது. சந்தம்வந்து சிந்தும்
விளையாடுகிறது.வசனம்கூட வண்ணக் கவிதையாகி நிற்கிறது.
கற்பனைகள் சிறகடித்தும் அவர்கவிதைகள் வருகின்றன.கருத்துக் குவியல்
களாகவும் அவர்கவிதைகள் கதைசொல்லி நிற்கின்றன.தத்துவமும் அதனூடே
தனைக்காட்டியும் நிற்கிறது.
அண்மையில் பாஸ்கரன் அவர்களது ” முடிவுறாத முகாரி ” என்னும் கவிதை
நூல் வெளியீடுசெய்யப்பட்டது. அத்தருணம் எனது கையிலும் அக்கவிதை நூல்
வந்து சேர்ந்தது.
பாஸ்கரன் அவர்களை நான் எனது வாழ்நாளில் கண்டதேயில்லை. அன்று
தான் முதன் முதலாகக் கண்டேன்.அவுஸ்த்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்
சங்கத்தின் பதினைந்தாவது எழுத்தாளர் மாநாட்டில் கலந்து பேசுவதற்காக
சிட்னியில் இருந்து துணைவியாருடன் மெல்பேண் வந்திருந்தார். அவரிடம்
நான் பேசியது கூட ஒருசில நிமிடங்கள் என்றே நினைக்கின்றேன்.
அவரின் நீண்ட நெடுந்தோற்றமும் , தீட்சண்யமான கண்களும் என்னை அவர்பால் ஈர்த்துக் கொண்டுவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது.
தனது கவிதை நூலினை தனது கையொப்பத்தோடு எனக்கு அன்புடன்
தந்தார்.
அப்போது அவர்பற்றிய எந்த அவிப்பிராயமும் என்னுள் எழவில்லை. விழாவும்
நிறைவு பெற்றது. வீட்டில் வந்தபின்பு எப்படி இருக்கிறது ? என்னதான் எழுதி
இருக்கிறார் என அவரது கவிதை நூலைப் பார்க்க முற்பட்டேன்.
” படிப்பறியா மிகஏழைக் கிழவனேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக்கொட்டி
துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக்கட்டி
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமைவாழ்வை
இப்பொழுதே இக்கணமே என்றென் றார்த்திங்கு
அடித்துரைத்து ஆவேசம் கொள்வானென்றால்
அப்பாட்டின் பெருமைசொல யாரோவல்லார் “ எனப் பாரதியின் கவிதா
சக்தி பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பாடிய பாடல் தான் என்னுள்
புகுந்து நின்றது.

புது வெளிச்சம் ! " இலக்கியப் பூக்கள் 2016 "

.
   
                                                   

 
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டால் யாவருக்கும் புது வெளிச்சம் வரும்
என்றொரு நம்பிக்கை மனதில் வருவது இயல்புதானே ? எந்த வருடம் ஆனாலும் அந்த வருடம் நன்மைகளை அள்ளிக் கொண்டு வரவேண்டும் என்பதில் யாவருமே ஒரே அணியில்தானே இருப்போம் ! அந்த வகையில்
தமிழ் அன்பரும் எழுத்தாளருமான ஆவூரான் என்னும் சந்திரனின் முயற்சி
யினால் யாவரது மனமும் புதுவருடத்தில் மகிழ்ச்சி அடையும் நோக்கத்தோடு
தமிழ் இலக்கியப் பாதையில் ஒரு " புது வெளிச்சம் " ஏற்பட வழிவகுத்திருக்
கிறது.
      " இலக்கியப் பூக்கள் 2016 " என்னும் ஒரு புது நிகழ்ச்சியினை அவர் 
நிகழ்த்தி யாவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கின்றார்.03ஃ01ஃ2016
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு லின்புறூக் கொம்யூனிற்றி
மண்டபத்தில் புது வெளிச்சமாக இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப் பட்டது.
    அடக்கமான மண்டபம். மண்டபம் நிறைந்த தமிழ் அன்பர்கள்.குழந்தை
கள் கூட நிறையப் பேர் குதூகலமாகக் கலந்து கொண்டார்கள்.
        மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.மெளன அஞ்சலியைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர் பட்டாளத்தால் தமிழ் வாழ்த்து
பாடப்பட்டது.வாழ்த்து வழமையான வாழ்த்தினை விடச் சிறப்பானதாக 
இருந்தது. பாடிய அத்தனைபேருமே இனிமை ததும்பப் பாடி சபையினரை
தம்வசப் படுத்திவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
        வரவேற்புரையினை திரு. ராஜேஸ் அவர்கள் மிகவும்சுருக்கமாகவும் அதேவேளை  அனைவரையும் கவரும் வண்ணம் தனது கம்பீரமான குரலில்
வழங்கி நின்றார்.வரவேற்புரையினைத் தொடர்ந்து தலைமை உரையினை
திரு. ஜெயராமசர்மா அவர்கள் வழங்கினார்.

தை பொங்கல் விழா 16 01 2016

.




திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
மருத்துவ கலாநிதியாகியிருக்;கவிருந்தவர்,   இலக்கிய மருத்துவ  நிபுணரான  அதிசயம்
தெல்லிப்பழை  மகாஜனாவின்  புதல்வர்களின் வரிசையில்   வந்த    விழிசைக்குயில் கோகிலா மகேந்திரன்

                                       
எல்லாமே  நேற்று  நடந்தது போலிருக்கிறது.   காலம்  என்னதான் விரைந்து  ஓடினாலும்,  நினைவுச்சிறைக்குள்  அடைபட்டுத்தான் வாழ்கிறது.    அவ்வப்போது  விடுதலையாகி  வெளியே  வந்தாலும்  அந்தக்கூட்டுக்குள்   மீண்டு விடுகிறது  பறவையைப்போன்று.
திசை  மாறிய  பறவைகள் பற்றி அறிவோம்.  ஒரு  மருத்துவ கலாநிதியாக  வந்திருக்கவேண்டியவர்,  எவ்வாறு  திசைமாறி இலக்கிய  மருத்துவரானார்....?   தெல்லிப்பழை   விழிசிட்டி  என்ற கிராமத்திலிருந்து   கூவத்தொடங்கிய  ஒரு   விழிசைக்குயில் பற்றியதுதான்   இந்தப்பதிவு.
1972 ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம்  13  ஆம்  திகதியன்று  மதியம் எனது   வீட்டுக்கு  தபாலில்  வந்த  மல்லிகையின்  அந்த மாதத்திற்குரிய  இதழை   என்னால்   மறக்கமுடியாது.   அன்றுதான் எனது  பிறந்த  தினம்.
அந்த  மல்லிகையின்  அட்டையை   அலங்கரித்தவர்  பாவலர் துரையப்பாபிள்ளை.   அவர்  பற்றி  நான்  அதிகம்  அறிந்திராத  காலம்.   அவர்தான்  யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை  மகாஜனா கல்லூரியின்   ஸ்தாபகர்  என்ற  தகவலையும்,  தொலைவில்   வாழ்ந்த நான் மல்லிகையிலிருந்து   தெரிந்துகொண்டேன்.  அந்த  இதழில்தான் எனது   முதல்  சிறுகதை  கனவுகள்  ஆயிரம்  வெளியாகியிருந்தது.  அந்த   இதழை  தபால் ஊழியர்  தரும்பொழுது, "  மொக்கத்த  பொத்த...?" (" என்ன  புத்தகம்...? " ) எனச்சிங்களத்தில்  கேட்டார். "  மல்லிகை " என்றேன்.    அவருக்குப்புரியவில்லை.   வீட்டின்  முற்றத்தில் படர்ந்திருந்த   மல்லிகைக் கொடியையும்,  பூத்திருந்த  மல்லிகை மலர்களையும்   காண்பித்தேன்.

கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா -2016 17 01 2015

.
தைப்பொங்கலின் சிறப்புக்களை -- தாயகத்தில் ஒவ்வொரு வீடும் விழாக்கோலம் கொண்டு குதூகலிக்கும் பொங்கலை, எம் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டுவதாய் , விக்டோரியா  வாழ்  தமிழர்கள் எம்மின் ஒன்றுகூடலாய்   அமைகின்ற கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா -2016 வருகின்ற 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.



கிழே உள்ள இணைப்பில், மேலதிக விபரங்கள் உள்ளன.

இந்நிகழ்வில் தமிழர் கலாச்சாரப்படி பொங்கல் பொங்கி புத்தாண்டை வரவேற்பதுடன் , பொங்கலைத் தொடர்ந்து பிற்பகல் 4:00 மணி வரைக்கும் திறந்த வெளியரங்க நிகழ்ச்சிகள், வணிக அங்காடிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.

உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாய் , எம் தமிழ் கலாச்சார உடைகளை அணிந்து வந்து, இக்கொண்டாட்டத்தில் இணைந்து சிறப்பித்து பொங்கலையும் நிகழ்வுகளையும் கண்டு களித்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்விழா குறித்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களையும் இவ்விழாவில் பங்குபற்ற ஊக்குவிக்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

இனிக்கும் எங்கள் தைப்பொங்கல் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் )

.
         வாசலிலே கோலமிட்டு வடிவாகக் கல்லடுக்கி
         நேசமுடன் சேர்ந்தங்கே நினைவெல்லாம் இனிப்பாக்கி
         பாலோடுசர்க்கரையும் பக்குவமாய் சேர்த்தங்கே
         அரிசிகொண்டு பொங்கலிட்டு அகமகிழ்ந்து நிற்போமே !

        புத்தாடை உடுத்திடுவோம் மத்தாப்பும் கொழுத்திடுவோம்
        சொத்தாக மனத்தெண்ணி சுற்றமெலாம் தழுவிநிற்போம்
        அத்தனைக்கும் மேலாக அனைத்துப் பெரியோர்களையும்
        ஆசையுடன் அரவணைத்து அவராசி பெற்றுநிற்போம் !

        பட்டாசு வெடித்திடுவோம் பட்சணங்கள் செய்திடுவோம்
        இட்டமுடன் சேர்ந்தங்கே எல்லோர்க்கும் கொடுத்திடுவோம்
        நட்டநடு முற்றத்தில் நாமெல்லாம் சேர்ந்திருந்து
        கஷ்டமெலாம் போகவெண்ணி கடவுளிடம் வேண்டிநிற்போம் !

        இப்படிநாம் பொங்குவது இங்கல்ல எமதூரில்
        இங்குவந்த பின்னாலே எல்லாமே மாறியாச்சு
        பொங்கல்வந்து போனபின்பே பொங்கலையே தேடிடுவார்
        இங்குள்ளார் வாழ்க்கையிலே இதுவியல்பாய் இருக்கிறது !

அப்பையா - சோபாசக்தி

.
(பாரிஸில் ,04 சனவரி 2015 ல் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணிநடத்திய ‘எஸ்.பொநிழலில் சிந்திக்கும் தினத்தில்‘ நிகழ்த்திய உரையின் எழுத்துவடிவம்.)
இந்த நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர்களே,நினைவுரைகளையும் ஆய்வுரைகளையும் நிகழ்த்திய தோழர்களே, நண்பர்களே உங்கள்அனைவரையும் பணிவுடன் வணங்குகின்றேன்.
ஆறுமுகம் சண்முகம் பொன்னுத்துரை என்ற எஸ்.பொ. அவர்கள் ஈழ இலக்கியத்தில்மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் மிக முதன்மையானஎழுத்தாளுமை என்பதில் யாருக்கும் அய்யப்பாடு இருக்க முடியாது. அவ்வாறு யாருக்காவதுஅய்யப்பாடுகள் இருப்பின் அவர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் அரிச்சுவடியைக் கூடஅறியாதவர்கள், அவர்கள் வெறும் கலை இலக்கியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்தவாதிகள்என்பதை என்னால் அய்யப்பாடற்ற வகையில் கூறமுடியும். அவசியமானால் நிறுவவும் ஏலும்.


அமரர் திருமதி அருண் விஜயராணி - அஞ்சலி நினவுப்பகிர்வு

.


           
கடந்த  13-12-2015 ஆம் திகதி அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் நினைவாக நடைபெறும் அஞ்சலி நிகழ்வு  -  நினவுப்பகிர்வு நடைபெறும் இடம்:
              PRESTON CITY HALL
 (284, Gower Street, Preston, Victoria - 3072, Australia)
       காலம்: 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை
 மாலை 4.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையில்.
  தங்கள் வரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
திரு. அருணகிரி ( கணவர் )     0416 25 5363

                arun16354@gmail.com

மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில்

.
மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில் - 17 Jan 2015 Sunday காலை 7.30

அனுமதி இலவசம்

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா பெண்டில் ஹில் சிவிக் பூங்காவில் 17 திகதி நடைபெற உள்ளது. தமிழரின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை அழிந்து விடாது காக்கவும் அதனை ஞாபகப்படுத்தவும் இந்த விழா வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் பாரம்பரியத்தினை தழுவிய கலை கலாச்சார நிகழ்வுகள் பல இடம்பெறும். அத்துடன் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன.தாயாக நினைவுகளை பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகள் மற்றும் செயற்பாடுகளும் ஒருங்கமைக்கபட்டுள்ளது.

அமரர் திருமதி அருண் விஜயராணி - அஞ்சலி நினவுப்பகிர்வு

.


           
கடந்த  13-12-2015 ஆம் திகதி அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் நினைவாக நடைபெறும் அஞ்சலி நிகழ்வு  -  நினவுப்பகிர்வு நடைபெறும் இடம்:
              PRESTON CITY HALL
 (284, Gower Street, Preston, Victoria - 3072, Australia)
       காலம்: 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை
 மாலை 4.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையில்.
  தங்கள் வரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
திரு. அருணகிரி ( கணவர் )     0416 25 5363

                arun16354@gmail.com

உலகச் செய்திகள்

சவுதி ஈரான் இராஜதந்திர உறவு முறிவு

ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையில் வட கொரியா வெற்றி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் : கண் கலங்கிய ஒபாமா

சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்

சவுதி ஈரான் இராஜதந்திர உறவு முறிவு

04/01/2016 ஷியா இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவுகள் மோசமடைந்தன


இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் அகதிகளாக ஒரு இலட்சம் இலங்கையர்கள் 

அட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவையை நிறுத்துமாறு அச்சுறுத்தல்

இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர்

''ஐ.எஸ்.அமை­ப்பில்36 இலங்­கை­யர்கள் ' புல­னாய்வு தக­வ­லுக்கு அமைய விசா­ரணை 

இலங்கையை வந்தடைந்தது  எயார்பஸ் A340..!

பரராஜசிங்கம், எக்னெலிகொட விவகாரம்  இரு இராணுவ புலனாய்வாளர் கைது

வவுனியாவில் 27 பேர் இடம்பெயர்வு

மட்டு. மாவட்டத்தில் கடும் மழை

பஷில் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றப்பிரிவில் ஆஜர்

இலங்கையை வந்தடைந்தார் போர்ஜ் 

மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

1966 – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் ஜனவரி 6

.


இந்திய திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 1966-ம் வருடம்  6 ம் திகதி சென்னையில் பிறந்தார். இவருடைய அப்பா சேகர் மலையாள திரைப்படத் துறையில இசையமைப்பாளராக பணியாற்றியவர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் ஆகிய கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக்கொண்டார். தனது 11-வது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாச்சிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015

.


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். 

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.  


ஒரே நாளில் 120 மாணவர்கள் மேடையேறினர், நாடகம் செய்தனர், தம் திறன் காட்டினர்

.
மாணவர்களின்   பல்வேறு  திறன்களையும்  வளர்த்து ஆளுமையுடயோராக   ஆக்கும்   அரங்கியல்  கல்வி


மட்டக்களப்பு கல்வித்திணக்களத்தின் அழகியல் பிரிவு ஒரு பெரும் திட்டமொன்றை   அமுல்படுத்துகிறது.  இதற்குப்பொறுப்பாளராக அழ்கியல் கல்விப்பணிப்பாளர் ஜெயசிறிபவன்  மட்டக்களப்புக் கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆலோசனையுடன் செயற்படுகிறார்.
 நாடகக் கல்வி மூலம் மாணவர்களின் ஆழுமையை வளர்த்தெடுத்தலே இதன் பிரதான நோக்கம் ஆகும்
இப்பயிற்சி நெறியை நடத்தும் பொறுப்பு அனுபவம் மிக்க  பேராசிரியர் மௌனகுருவிடம் கையளிக்கப் பட்டுள்ளது. அவர் தனது மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் துணையுடன்  இதனை நடத்துகிறார்

இப்பயிற்சி நெறிபற்றி பேராசிரியர் மௌன்குருவிடம் நாம் உரையாடிய போது அவர் பின்வருமாறு கூறினார்
.”நாடகக்கல்வியானது1.மனதைஒருநிலைப்படுத்தல்,2.அவதானித்தல்,3.,கற்பனை செய்தல்4.தெளிவாக உச்ச்சரித்தல்,5.ஏற்ற இறக்கங்களோடு பேசல்,6.கம்பீரமாக நிற்றல்7.கம்பீரமாக,நடத்தல்.8.கம்பீரமாக அசைதல்,9.பிரச்ச்சனைகளை தைரியமாக
எதிர்கொள்ளல் 10.சபைப்பயமின்மை 11.சமூகமயமாதல்,12.பிரச்சனைகளை எதிர் கொள்ளல்13.தலை மைதாங்குதல்14.நிர்வகித்தல்15.மற்றவர்களின் நடத்தைகளை அவர்கள் உடல் மொழிமூலம் புரிந்து கொள்லல், 16.மற்றவர்களின் குணாம்சங்களை அவர்கள் பேச்சுகள் மூலம் புரிந்து கொள்ளல், 17.கூட்டாச் செயற்படல், 18மற்றவர்க்கும் இடம் கொடுத்தல்,19.அழ்கியலுணர்வு20.தெரிவு செய்தல்  21.இனம்காணுதல்  22.ஓவியம்,சிற்பம் ,இலக்கியம் ஆகியகலைகளூடனான பரிட்சயம்  23.ஒலி ஒளி பற்றிய ஞானம் 24.நேரம் காலம் தவறாமை25ஒழுங்கு முதலான 40க்கு மேற்பட்ட    திறன்களை  வளர்க்கிறது