சிட்னியில் சித்திரைத் திருவிழா



பண்டைத் தமிழருக்குச் சித்திரை மாதம் சிறப்பான மாதமாக இருந்தது.  இந்த மாதத்தில் தான் அவர்கள் பெருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருந்தார்கள்.  சிலப்பதிகாரத்தில் சித்திரை மாதத்தில் நடந்த விழாக்களைப் பற்றி இளங்கோ அடிகளார் ஒரு நேர்முக வர்ணனையே தந்திருக்கின்றார். 

சித்திரை மாதப் பிறப்பைப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அவர்கள் கொண்டாடி வந்திருக்கின்றார்கள். 

அந்த வகையில் சிட்னியின் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சித்திரை


மாதத்தில் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவைச் சென்ற பதினொரு ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தி வருவது மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது.

புலம்பெயர்ந்த எந்தவொரு இனமும் தனது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.  தனது அடையாளத்தை இழந்துவிட்ட இனம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ முடியாமற் போய்விட்டதை உலகெங்கும் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  அப்படி அடையாளத்தைக் காப்பாற்றுவதில் புலம்பெயர்ந்த முதலாவது சந்ததியினருக்குப் பெரும் பொறுப்பு இருக்கின்றது!

இவற்றை எல்லாம் உணர்ந்து ஒரு தொலைநோக்குப் பார்வையோடு சித்திரைத் திருவிழாவைத் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடாத்தி வருவதைச் சென்ற 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்குச் சென்ற போது கண்டு மகிழ்ந்தோம்.

இந்த விழாவை ஒரு கலை நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல் நாள் முழுவதுமான தமிழர் கொண்டாடமாக, வர்த்தகமும், பிள்ளைகள் விளையாடத் தளமும் சேர்த்து நடாத்தி, நிகழ்ச்சிக்கு வருகின்ற முழுக் குடும்பத்தினருமே பங்கு கொண்டு மகிழ்ச்சி அடையக் கூடிய நிகழ்ச்சியாக இதனை அமைத்திருந்தமை பாராட்டுதற்குரியது.

அது மட்டுமல்ல.  இந்த நிகழ்ச்சிக்குத் தேசிய அமைச்சர், மாநில அமைச்சர், தேசிய, மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மூத்த சமூகத் தலைவர்கள் என்று பலரையும் அழைத்துக் கௌரவித்து அவர்களுக்கு எமது கலை வண்ணத்தைக் காட்டியமையும் சிறப்பாக இருந்தது.   வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியற் பிரமுகர்களை ஒரே நேரத்தில் வரச்செய்து ஒரே மேடையில் கௌரவித்ததே ஒரு மிகப் பெரிய சாதனை தான்.  அதனைப் பார்த்த எமக்குப் பெரும் பிரமிப்பாகத்தான் இருந்தது!

நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ....... அவுஸ்திரேலியா

   

தமிழ்மொழி மற்றைய மொழிகளிலும் சிறப்பான மொழியாக


விள ங்குவதற்குக் காரணம் மற்றைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழியில் இருப்பதேயாகும் என்பது அறிஞர்கள் கருத்தாக      இருக்கிறது. அந்தத் தனிச்சிறப்பு எது தெரியுமா அதுதான் " பக்தி இல க்கியம் " ஆகும். உலகின் எந்த மொழியிலும் பக்தி என்பது இலக்கியமாகக் கொள்ளப்படவே இல்லை. ஆனால் தமிழ் மட்டும் தனக்கெனப் பக்தியை இலக்கியம் ஆக் கியே இருக்கிறது. இதனால் தமிழ் பக்தியை அரவணைத்தபடியே பயணப்படு கிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும்.பக்தியை இலக்கியம் ஆக்கும் வகையில் தமிழுக்கு வந்து வாய்த்தவர்கள்தான் ஆண்டவனது அடியார்கள் ஆவர். அந்த அடியார்களில் முன்னுக்கு வந்து நிற்பவர் களில் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவரின் பின்  பக்திப் பெருவெளியில் பயணப்பட இம்மாநில த்தில் வந்தவர்களாய் அப்பரும் சம்பந்தரும் விளங்குகிறார் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே காலத் தவராக இருக்கின்ற பொழுதும் - அப்பர் மூத்தவராகவும் சம்பந்தர் இவரின் இளையவராகவும் ஆகி நிற்கி றார்கள்.

   அப்பரும் சம்பந்தரும் கி.பி ஏழாம் நூற்றைண்டைச் சேர்ந்தவர்களாய்


இருந்தாலும் இருவர் வாழ்வும்அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களும் வேறு பட்டனவாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத் தக்கது,அப்பர் குடும்பச் சூழல் வேறாயும் சம்பந்தர் குடும்பச் சூழல் வேறாயும் அமைந்தே காணப்பட்டது. ஆனால் பக்தி என்னும் நிலையில் இருவரும் ஒருமித்தே பயணப்பட்டார்கள். அப்படிப் பயணப்பட்ட நிலை யிலும் அப்பரின் சிந்தனைசெயற்பாடுகள்சம்பந்தரிலும் வேறுபட்டதாகவே அமைகின்ற ஒரு நிலை தோற் றம் பெற்றது. அதற்கு உரிய காரணம் தான் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.

  மருள் நீக்கியார் சைவத்தில் பிறந்து சைவத்தைத்துறந்து சமணம் என்னும் சமயத்தைத் தழுவுகின் றார்.மருள் நீக்கியாரின் இளம் மனத்தில் சமணத்தின் கொள்கைகள் சிறந்தனவாகப் பதிகின்றன. சமணரும் இவரை அணைக்கின் றனர்.சமண மடத்தின் தலைவராய் ஆகும் அளவுக்கு மருள் நீக்கியார் ஆளுமை வளர்கிறது. மருள் நீக்கியார் என்னும் பெயர் மறைந்து சமண மடத்தி ன் தலைவராய் " தருமசேனர் " என்னும் புதுப் பெயர் வாய்க்கிறது.நாட்டில் சமணமே அரசபீடத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.மருள் நீக்கியாரின் மனம் மாறுகிறது. சமணத்தின் தலைமயைத் தூக்கி எறிந்துவிட்டு தான் பிறந்த சைவத்தில் அவர் சங்கமம் ஆகிறார். சங்கமம் ஆகும் நிலையில் அவர் நெஞ்சம் தமிழைக் கொட்டுகிறது. அதுவும் கவியாய்பக்தியாய் ,இசையாய் கொட்டுகிறது. எம்பெருமான் சிவனே வியந்து " நாவுக்கரசு " என்று விளிக் கும் அளவுக்கு தமிழ் ஆக்கி நிற்கிறது. மருள் நீங்கியதால் அருள் கிடைக்கிடைக்கிறது. தருமசேனர் சைவம் தளைக்க தொண்டுகள் சிறக்கநாவுக்கக்கரசாய் வலம் வருகிறார்.வலம் வருகின்ற நாவுக்கரசரை இளையவரான சம்பந்தப் பெருமான் கண்டவுடன் " அப்பரே " என்று அழை க்கின்றார். இறைவன் அழைத்த நாவுக்கரசர் என்னும் பெயரும் சம்பந்தப் பெருமான் அழைத்த அப்பரே என்னும் பெயரும் - சைவத் தமிழ் உலகில் நிலையான உறுதியான பெயராக நிலைத்தே விட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

    அப்பர் பெருமான் வரலாற்றை நோக்கும் பொழுது - அவர் சமயத்தின் வழியிலும் பயணப்பட்டிருக்கிறார். சமூகநீதியின் வழியிலும்  பயணப்பட்டி ருக்கிறார் என்றுதான் மனங்கொள்ள வைக்கிறது. சம்பந்தப் பெரு மானின் சமகாலத்தவராக இருந்த பொழுதும் அப்பரின் வாழ்வியல் அனுபங்களும் அவரின் வயதின் முதிர்ச்சியும் அவருக்கென்று தனியான ஒரு இடத்தி னையே வழங்கி இருக்கிறது எனலாம்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 64 சிங்கப்பூர் கடற்கரைச்சாலை கவிதா மாலை தென்னங்கீற்றும் வாழை இலையும் சரசமாடிய இடத்தில் ஆலயமும் விகாரையும் ! முருகபூபதி


கோலாலம்பூரின் வளர்ச்சியையும் வனப்பையும் சுற்றிக்காண்பித்த நண்பர் பீர்முகம்மது, மலேசியா மக்கள் ஓசை பத்திரிகையை எனக்கு காண்பித்தார்.

முதல்நாள் அவர் என்னை அதன் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றபோது அங்கிருந்த ஒரு பத்திரிகையாளர் என்னை பேட்டி கண்டிருந்தார்.

அந்தப்பேட்டி வெளியான மக்கள் ஓசையைத்தான் நண்பர் எனக்கு காண்பித்தார். அப்போது நான் மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தேன்.

அந்த பேட்டி எனக்கு ஏமாற்றமாகவிருந்தது. அதில் எனக்குத் திருப்தியில்லை. நான் ஏதோ சொல்ல,  அவர்கள் ஏதோ எழுதியிருந்தனர். சமகால பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி தேவை என்று எனது ஆதங்கத்தை நண்பரிடம் சொல்லிவிட்டு, சிங்கப்பூர் புறப்படும் பேரூந்தில் ஏறினேன்.

சிங்கப்பூர் வந்ததும்,  குறிப்பிட்ட பேட்டிக்கான எனது எதிர்வினையை


எழுதி, தொலைநகல் மூலம் அந்தப்பத்திரிகைக்கு அனுப்பினேன்.

சுமார் ஆறு மணிநேரத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும், அடுத்தடுத்து நண்பர்கள் கண்ணபிரானும், மூர்த்தியும் என்னைப்பார்க்க வந்தார்கள்.

கண்ணபிரான் சிங்கப்பூர் பத்திரிகை தமிழ்முரசு இதழுடன்                 ( 2006 ஏப்ரில் 26 ஆம் திகதி வெளியானது ) வந்தார். அதில் இரண்டாம் பக்கத்தில் அங்கு மாதந்தோறும் நடைபெறும் கடற்கரைச்சாலை கவிமாலை நிகழ்ச்சியில் தமிழக கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான அய்யப்பமாதவனும், நானும் விருந்தினர்களாக கலந்துகொள்ளும் செய்தி வெளியாகியிருந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்லவே கண்ணபிரான் வந்திருந்தார். இந்த கவிமாலை நிகழ்ச்சியின் அமைப்பாளர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழக அரசின் வேளாண்மைத்துறையிலும், திருச்சி அகில இந்திய வானொலியிலும் சிங்கப்பூர் ஒலிபரப்பு கழகத்திலும் பணியாற்றியவர்.

வீரமும் ஈரமும், முதல் ஓசை, உயிர்த்தடை, இரவின் நரை முதலான கவிதைத் தொகுப்புகளையும் தோரணம் என்ற இருவட்டையும் வெளியிட்டிருப்பவர்.

தமிழ்நாட்டில் சிறுபத்திரிகை வட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களுடன் தொடர்பிலிருப்பவர்.

அன்றைய தினம் கண்ணபிரான் அழைத்துச்சென்ற அந்த கவிமாலை நிகழ்ச்சியில் பல இளம் கவிஞர்கள் கலந்து சிறப்பித்தனர். அவர்கள் தத்தமது கவிதைகளை வாசித்து சமர்பித்தனர்.

அவர்களை பிச்சினிக்காடு இளங்கோ அறிமுகப்படுத்தினார்.

அவுஸ்திரேலியாவில் அந்த 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில்  நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவிற்குப்பின்னர், நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சி அது.

பிலிப்பைன்ஸ், மலேசியா பயண அலுப்பை அந்த கவிமாலை நிகழ்ச்சி போக்கிவிட்டது. வீரியமிக்க கவிஞர்கள் குழாம் அங்கே உருவாகி வருவதை அந்த நிகழ்வு உணர்த்திற்று. அந்தக்கவிஞர்களில் சிலர் தமது இளமைக்காதலை தமது கவிதைகளில் வெளிப்படுத்தினர்.

முதல் சந்திப்பு இலக்கியத்திலிருந்து நிருவாக சேவைக்கு பிரவேசித்த உடுவை தில்லை நடராசா முருகபூபதி


இலங்கையில்  அரசுக்கும் மக்களுக்கும் நடுவிலிருந்து  நிருவாக சேவையாற்றுவதற்கு  தனித்திறமை வேண்டும்.  பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு, முன்யோசனை, தீர்க்கதரிசனம், செயலூக்கம், மக்கள் நலன்  சார்ந்த இராஜதந்திரம்.

இவையனைத்தும் மாத்திரமல்ல, உள்ளார்ந்த விழிப்புணர்வும்


வேண்டும்.  ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, வறுமையின் இலட்சணம் எவ்வாறிருக்கும் என்பதையும் அனுபவித்து, அதனையும் கடந்து வந்து, பட்டதாரியாகி நிருவாக சேவைப் பரீட்சையிலும் சித்தியடைந்து அரச உயர்பதவியை அலங்கரித்து மக்களுக்கு சேவையாற்றிய ஒருவர் பற்றித்தான் இந்த அங்கத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

வட இலங்கையில் உடுப்பிட்டி கிராமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியின் புதல்வனாகப் பிறந்து  நாட்டின்  சில பாகங்களில் நிருவாக சேவையாளராகவும் வவுனியா மாவட்டத்தின் அரச அதிபராகவும், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்து ஓய்வுபெற்றிருக்கும் எழுத்தாளர், கலை, இலக்கிய ஆர்வலர், நாடக நடிகர் உடுவை தில்லை நடராசாவை நான் இலங்கையில்  முதலில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

எம்மிருவரையும் இணைத்தது இலக்கியம்தான்.


இலங்கையில் நீடித்துக்கொண்டிருந்த போரினால் தந்தைமாரை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன்  1988 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில்  நாம் ஆரம்பித்திருந்த, தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு  வவுனியா மாவட்டத்தில் எமக்கு ஒரு மாணவர் கண்காணிப்பு தொடர்பாளர் தேவைப்பட்டிருந்தார்.

வடமராட்சியில் எழுத்தாளர் தெணியானும் வலிகாமத்தில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரனும் கிடைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஆசிரியர்கள். அத்துடன் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தவர்கள்.

வவுனியாவிலும் ஒருவர் தேவைப்பட்டபோது எனது மனக்கண்ணில் தோன்றியவர்தான் இந்த இலக்கியவாதி உடுவை தில்லை நடராசா. 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர் வெளியிட்ட நிர்வாணம் என்ற கதைத் தொகுதி எனது பார்வைக்கு கிடைத்தது.  இதனை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டிருந்தது. இந்த நூலை அக்காலப்பகுதியில் நெல்லியடியில் நடந்த விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலில் தனது முழுக்குடும்பத்துடனே பலியாகிப்போயிருந்த எமது இனிய நண்பர் நெல்லை. க. பேரனுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார் உடுவை தில்லை நடராசா.

இந்த நூலுக்கு அட்டைப்படம் வரைந்திருந்தவரும் எனது இனிய நண்பர், பாடகர், கலைஞர் ஶ்ரீதர் பிச்சையப்பாதான். பின்னாளில் இவரும் அற்பாயுளில் மறைந்தார். இந்நூலின் பின்புற அட்டையில் உடுவை தில்லை நடராசா பற்றி கவித்துவமான ஒரு குறிப்பினை எழுதியிருந்தவர் மற்றும் ஒரு இலக்கிய நண்பர் வி. மைக்கல் கொலின்.

குறிப்பிட்ட நூலே என்னை எழுத்தாளர் உடுவை தில்லை நடராசாவை நெருங்கச்செய்தது.

வவுனியா மாவட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு  நாம் அனுப்பிய நிதிக்கொடுப்பனவுகளை நேரில் சென்று வழங்குவதற்கு முன்வந்தவர்தான் உடுவை தில்லை நடராசா.

தனது ஊரின் பெயரை முன்னிருத்தி எழுதிய பல எழுத்தாளர்களை நாம் பின்னர் அந்த ஊரின் பெயரைச்சொல்லியே விளிப்பதும் வழக்கமாகியது. அவ்வாறு எமது ஈழத்து கலை, இலக்கியப்பரப்பில் புகழ்பெற்ற ஊர்களின் பட்டியலையும் இந்தப்பதிவில் தருகின்றேன்.

திக்குவல்லை, மாவை, வதிரி,  வரணி, மருதூர், சில்லையூர், காவலூர், திக்கவயல்,  நீர்கொழும்பூர், உடப்பூர், வாகரை, தில்லையடி, யாழுர், நீர்வை, நெல்லை, வடகோவை, குப்பிழான், கிண்ணையடி, கல்வயல்….

தில்லை நடராசா தமது பூர்வீக ஊரான உடுவிலை தமது பெயரின் முன்பாக இணைத்துக்கொண்டமையால்  உடுவை என்றே இவரை அழைக்கத்தொடங்கிவிட்டோம்.

ஏழைப் பங்காளன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 காதல் மன்னன் என்று ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட ஜெமினி

கணேசன் திடீர் என்று ஏழைப் பங்காளனாக தன்னை அடையாளப்படுத்த விரும்பியதன் பலனாக 1963ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் ஏழைப் பங்காளன். இசையமைப்பாளர் கே வி மகாதேவனின் இசைக் குழுவில் இருந்த வயலின் கே வி மகாதேவன் , ஜெமினியின் அனுசரணையோடு இந்தப் படத்தை தயாரித்தார்.


அமெரிக்கா சென்று படித்து பட்டம் பெற்று தமிழகம் திரும்பும் ரகு

இங்கே ஏழை எளியவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து கலங்குகிறான். அவர்களுக்கு உதவத் துடிக்கிறான். ஆனால் கோடீஸ்வரரான அவனது வளர்ப்புத் தந்தை அதனை எதிர்க்கிறார். வேலைக்கு தான் ஊதியமே தவிர அவர்களின் தேவைகளுக்கு அல்ல என்று வலியுறுத்துகிறார். இதனால் மனமுடைந்த ரகு வீட்டை விட்டு வெளியேறி சேரிப் பகுதிக்கு சென்று ஏழை , பாளைகளுடன் வசிக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். ஆனால் படிப்பறிவு இல்லாமல் அறியாமையில் வாழும் அவர்களினால் தாக்கப்படுகிறான். ஆனாலும் மன்னிக்கும் மனப்பான்மையுடன் அவர்களை திருத்த முயலுகிறான். இதற்கிடையில் அங்கே ஆப்பம் விற்கும் சின்னப்பொண்ணுவின் காதலும் கிடைக்கிறது. ஏழைப் பங்காளனான ரகு தன் முயற்சிகளில் வெற்றி பெற்றானா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் கதையை சொன்னவுடனே இது யார் நடித்திருக்க வேண்டிய படம் என்பது புரிந்திருக்கும். இந்த படத்தின் விளம்பரம் வெளிவந்தவுடன் , படத்தின் கதாசிரியர் மா . லக்ஷ்மணனை அழைத்த எம் ஜி ஆர் படத்தின் தலைப்பை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் விளம்பரம் செய்தாகி விட்டது இனி முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் மறுத்து விட்டார். ஆனாலும் ஜெமினி நடித்த இந்தப் படத்தைப் பார்த்த பெரும் தலைவர் காமராஜ் , படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஏழைப் பங்காளன் என்ற பேரில் எம் ஜி ஆர் நடித்தால் தான் ஜனங்க ஒத்துக்குவாங்க என்று அபிப்ராயம் சொன்னார்!

படத்தில் ஜெமினிக்கு ஜோடி ராகினி. லலிதா , பத்மினி சகோதரிகளில் இளையவரான ராகினிக்கு கதாநாயகியாக நடிக்கும் சான்ஸ் இதில் கிடைத்தது. நடிப்போடு நன்றாக நடனமும் ஆடி ரசிகர்களை கவருகிறார் ராகினி. ஜெமினி தன் பங்கிற்று உணர்ச்சிகரமாகவும் , இதமாகவும் நடிக்கிறார். வழக்கமாக காதலிக்காக உருகுபவர் இதில் ஏழைகளுக்காக உருகுகிறார். நாகேஷ், மனோரமா நகைச்சுவை , நாகேஷ் படத்தில் விற்கும் சாயா போல் சுவையாக இருக்கிறது.

ஆணவம் மிஞ்சினால்…. ! இறுதியில் என்னதான் எஞ்சும்…? அவதானி

 “ நாம் எமது எண்ணங்களை மேம்படுத்தாவிட்டால்,  எமது வாழ்க்கை


முன்னோக்கிச்  செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது  “ என்ற கூற்றையே  கௌதம புத்தர்,  " நமது எண்ணங்களே நாம் " என்று  இரத்தினச்சுருக்கமாகக்  கூறினார்.

இவ்வாறு சொன்ன புத்தர் பெருமானின் உருவச்சிலையை வைத்துக்கொண்டு இலங்கையில் அரசியல் ஏட்டிக்குப்போட்டியாக நடக்கிறது.

இரண்டு மொழிகளை பிரதானமாகப் பேசும் எமது நாட்டில்  மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள்,  பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யாமல்,  மதத்தை வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பினர்.

அன்று 1957  இல்  தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக


பண்டாரநாயக்காவும் தந்தை செல்வாவும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியபோது, அதனை எதிர்த்து, களனியிலிருந்து கடும்போக்காளர்களையும் பௌத்த பிக்குகளையும் திரட்டிக்கொண்டு, கண்டி தலதா மாளிகை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டவர் ஜே. ஆர். ஜெயவர்தனா.

அவரது கட்சியினர்,  “ பண்டாரநாயகம் – செல்வநாயகம்… ஐயா… தோசே மசாலவடே  “ என்று பாடிக்கொண்டு ஊர்வலமும் சென்றனர்.

இத்தகைய அழுத்தங்களையடுத்து பண்டாரநாயக்கா,  கடும்போக்காளர்கள், பௌத்த பிக்குகளின் முன்னிலையிலேயே அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார்.

அவ்வாறிருந்தும் அந்த கடும்போக்காளர்கள் மனம் மாறவில்லை. அவர்களின் பிரதிநிதிகளே பண்டாரநாயக்காவை கொலை செய்வதற்கு சதித்திட்டமும்  தீட்டினர்.

இறுதியில் ஒரு பௌத்த பிக்குவான சோமராமதேரோ என்ற பிக்குவால் பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தச் சதியில் சம்பந்தப்பட்ட  மாப்பிட்டிகம புத்தரகித்த தேரோ, கைதாகி ஆயுள் சிறைத்தண்டனை பெற்று, சிறையிலேயே இறந்தார்.  சோமராம தேரோவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வரலாற்றை நன்கு தெரிந்திருப்பவர்கள்தான், இன்றும் தங்கள் மதத்தை பிரதானப்படுத்தி தமிழ்ப் பிரதேசங்களில்  பௌத்த விகாரைகளை அமைப்பதில் தீவிரம் காண்பிக்கின்றர்.

இதுவிடயத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் சிலரும்  கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்ப்பிரதேசமான தையிட்டியில் விகாரை அமைப்பதை நிறுத்தமாட்டோம் என்று  சூளுரைக்கின்றார் படைகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா.

வேற்று இனத்தவர்களுக்கு காணிகளை விற்கவேண்டாம் என்று வடபிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் சொல்கிறார்.

இலங்கைச் செய்திகள்

வெடுக்குநாறி மலை சிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

நுவரெலியா நகரில் கேபிள் கார் திட்டம்

இலங்கையர், வெளிநாட்டவருக்கு அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி

 195 நாடுகளின் தலைநகரங்களை 4 நிமிடத்தில் காண்பித்து சாதனை

வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி


வெடுக்குநாறி மலை சிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விடுவிப்பு

பொலிஸரால் கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (11) விடுவிக்கப்பட்டனர்.

உலகச் செய்திகள்

 இந்தியா – ரஷ்யா உறுதி

கைது செய்தமை சட்டவிரோதம்; இம்ரான் கானை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 இஸ்ரேல் தாக்குதல்கள் நீடிப்பு: காசாவில் பலி 30 ஆக உயர்வு

அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைக்க முடிவு

பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த இராணுவம் விரைவு


இந்தியா – ரஷ்யா உறுதி

ரஷ்யாவும் இந்தியாவும் தங்களுக்கிடையிலான இரு தரப்பு நல்லுறவை பல தளங்களிலும் ஒத்துழைப்புடன் வலுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளன.