இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!

 January 26, 2024


இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.

அவரது மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். அவர் தற்போது திடீரெனெ மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.

திருமதி. பவதாரிணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 47 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.   

பவதாரிணி மறைவு ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

நன்றி ஈழநாடு 


ராஜா மகள் பவதாரிணி ஒளியிலே தெரிவது நீ இல்லையா....? - கானா பிரபா

 ராஜா மகள் பவதாரிணி

ஒளியிலே தெரிவது நீ இல்லையா....?


b3.jpg


 

“பல்லாக்கு வந்திருக்கு

 ராணி மகராணிக்கு

 நில்லாம சுத்தும் கண்ணு

 தேடுதவ சோடிக்கு”

 

https://www.youtube.com/watch?v=wH4pDX05nck



 

மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் ஆசிரியர் மாநாடு 2024 - சிறப்புக் கலந்துரையாடல்

அவுஸ்திரேலியத் தமிழ் ஆசிரியர் மாநாடு 2024 மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 

பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி (11/02/2024) ஞாயிற்றுக்கிழமை அன்று 
ஒரு முழுநாள் நிகழ்வாக நியூசவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பினர் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, 
கல்வியாளரும் நிகழ்வின் ஒருங்கமைப்பாளருமான திரு.திருநந்தகுமார், மற்றும்  
நியூசவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்புத் தலைவர் திரு. சதீஸ்கரன் கொலின் தேவராஜா ஆகியோரும் 
இணைந்து சிறப்பித்த சிறப்புக் கலந்துரையாடல்.








நயப்புரை : அவுஸ்திரேலியா பூமராங் மின்னிதழ் 01 ஞா.டிலோசினி ( சேனையூர் )


வுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காலாண்டு மின்னிதழாக தமிழ்ப் புத்தாண்டு  2024 (தைத்திருநாள்) தினத்தை முன்னிட்டு ‘பூமராங்’ மின்னிதழ் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. 

இவ்விதழானது ஆசிரியத் தலையங்கம் உட்பட கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் வெளியீடுகள், நூல் நயவுரை, பாராட்டு விழாக்கள், மூத்த எழுத்தாளர்களின் பிறந்த தினம் முதலான விடயங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் ‘பூமராங்’ முதலாவது இதழின் ஆசிரியத்


தலையங்கம், ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்’ பற்றிய தகவலை முன்வைக்கின்றது. ‘கவிஞர் அம்பிக்கு பெப்ரவரி மாதம் 95 வயது’ என்ற பகுதி,  பெப்ரவரி 29ஆம் திகதி பிறந்த தினத்தைக் கொண்டாடவிருக்கும்  கவிஞர் அம்பியை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. 

எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் 70 ஆவது பிறந்த தினம் மெல்பனில் கொண்டாடப்பட்ட தவலும் இடம்பெற்றுள்ளது. முருகபூபதியின் ‘வாசிப்பு அனுபவமும் வாசகர் வட்டங்களும்’ என்ற கட்டுரை, வாசிப்பின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைகளிடம் அதிகரிக்கும் நோக்கில் வாசகர் வட்டங்களை உருவாக்கி வாசகர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.  

நூல் வெளியீடு என்ற வகையில் அண்மையில் வெளிவந்த, வெளிவரவிருக்கும் நூல்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் ஜெயராமசர்மாவின் ‘ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சி’ கலாநிதி லயனல் போப்பகேயின் ‘வாழ்க்கைச்சரிதம் பேசும் ஆங்கில – சிங்கள நூல்கள், ஜேகேயின் ‘வெள்ளி’(நாவல்) ஜங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்த ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’  நூல், தாமரைச்செல்வியின் இலக்கியப் பணியை பாராட்டி கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாய்வீடு’ சிறப்பிதழ் ஆகியவை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 92 நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா..?! முருகபூபதி

    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா..?  பழகத்  தெரிந்த உயிரே உனக்கு விலகத்  தெரியாதா…?  


1963 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தஜோதி என்ற திரைப்படத்திற்காக  கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடலை, அவரது ஏனைய பல பாடல்களைப்போன்று  என்னால் மறக்கவே முடியாது. 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது மாமா மகன் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போதைய கனகரத்தினம் மத்திய கல்லூரி ) ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து  படித்த காலத்தில், அந்த விடுதிக்கு முன்னால் அமைந்திருந்த விளையாட்டுத்திடலில் நாம் மாலை வேளைகளில் விளையாடுவோம்.

தாச்சி மறிப்பு ( கிளித்தட்டு ) கிரிக்கட், உதைபந்தாட்டம் என்பன எமது பிரியத்திற்குரிய விளையாட்டுக்கள்.

அந்த மைதானத்திற்கு அருகிலிருந்த ஒரு வீட்டிலிருக்கும் வானொலியிலிருந்து  குறிப்பிட்ட நினைக்கத் தெரிந்த மனமே பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும். 

அந்தத்திரைப்படத்தில் தோன்றும்   நாயகி தேவிகா                                    ( பின்னணிக் குரல் பி. சுசீலா ) , தனது


காதலனை                                ( எம்.ஜி.ஆர் ) நினைத்துப்பாடும் பாடல் அது.

  கமல்ஹாசன்  இந்தப்படத்தில்  நடிக்கும்போது அவருக்கு  ஒன்பது வயதுதான்!  அந்தக்குழந்தை நட்சத்திரம் தற்போது உலகநாயகனாக பிக்பொஸ் நடத்திக்கொண்டிருக்கிறார் !

அந்தப்பாடல் என்னை அக்காலப்பகுதியிலேயே கவர்ந்தமைக்கு காரணம் இருக்கிறது.

தொலைதூரத்திலிருந்து ( நீர்கொழும்பிலிருந்து ) சொந்த பந்தங்கள் ஏதுமற்ற வடபுலத்திற்கு படிக்க வந்திருந்தமையால்,  எனக்கும் மாமா மகன் முருகானந்தனுக்கும் எப்போதும் வீட்டு யோசனைதான். அதனை Homesick என அழைக்கத் தெரியாத பருவம் அது.

அடிக்கடி எங்கள் பூர்வீக ஊரும்,  குடும்பமும்,  பழைய நண்பர்களும் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.  எமது வீட்டுக்கவலையை கடிதங்களில் எழுதி எழுதி,   அடுத்து வந்த வருடங்களில்  ஊர்போய்ச்சேர்ந்துவிட்டோம்.

குறிப்பிட்ட பாடல் பற்றி இந்த 92 ஆவது அங்கத்தில் நினைவூட்டுவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை  கன்பரா மாநிலத்தில் தினகரன் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) ஆர். சிவகுருநாதன் அவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் அவரது நினைவுகளை பதிவேற்றிய இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகமும் நடைபெற்றது.

இந்த நூலை தொகுத்திருக்கும் எழுத்தாளர் ஐங்கரன் விக்னேஸ்வராவும், அமரர் சிவகுருநாதனின் மருமகன்  மயூரன் சின்னத்துரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு என்னையும் அழைத்திருந்தார்கள்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கன்பராவில், அமரர் சிவகுருநாதனின் அன்புத்துணைவியார், சகோதரன்,  மகள், மகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் அன்னாரின் உறவினர்களையெல்லாம் இந்த நிகழ்வில் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கன்பரா மாநிலத்திற்கு சிட்னி, பேர்த், மெல்பன் மாநகரங்களிலிருந்தெல்லாம் அன்பர்கள் வந்திருந்தனர். கன்பரா தமிழ் மூத்த பிஜைகள் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது.

கொவிட் பெருந்தொற்றுக்குப்பின்னர், எனது நீண்டகால நண்பர்கள் சிலரையும் கன்பராவில் சந்தித்தேன். அவர்களுடன் பசுமையான பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

கலை, இலக்கிய ஆர்வலரும் சமூகப்பணியாளருமான நண்பர் நித்தி துரைராஜா,  என்னை தனது இல்லத்தில் தங்கவைத்து நன்கு உபசரித்தார்.  அவரது சகோதர வாஞ்சையான உபசரிப்பினால் நெகிழ்ந்துபோனேன்.

தாயகத்தில் விடுபட்ட படைப்பிலக்கியத்தை புலம்பெயர் வாழ்வில் மீண்டும் தொடங்கிய அ. முத்துலிங்கம் ! ஜனவரி 19 பிறந்த தினம் முருகபூபதி

“ ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது


கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது.  “ இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப் பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல!

 ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போன ஒருவர் திடுதிப்பென இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்பிறகு  விந்தையான இயல்புகளுடன்  திரும்பிவந்து ,   இதோ நான் இன்னமும் இருக்கின்றேன்!  எனச்சொல்லும்போது அந்தக்குடும்பத்தினரிடம் தோன்றும் பரவசம் இருக்கிறதே,  அது போன்றதுதான் எழுத்தாளர்  .முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம்.  

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1973 காலப்பகுதியில்


கொள்ளுப்பிட்டி தேயிலைப்பிரசார சபை மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியநிகழ்வில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைச்சுட்டிக்காட்டி  அவர்தான் அக்கா கதைத்தொகுதி எழுதிய .முத்துலிங்கம் ”  என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார்.

 அன்று அவருடன் பேசும் வாய்ப்புக்கிடைக்கவில்லை.

 அக்கா தொகுதியும் படிக்கக் கிடைக்கவில்லை.

 அதன் பின்னர் முத்துலிங்கம் பற்றிய எந்தத்தகவலும் இல்லை. அவரையும் அவரது அக்காவையும் தேடினேன்.  கண்களுக்குத்தென்படாமல் மறைந்து விட்டார்கள்.

 நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பின்னர் ஒருநாள்  எனது வீட்டு முகவரிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு புத்தகப்பார்சல் வந்தது. அனுப்பியிருந்தவர். முத்துலிங்கம். புத்தகம் திகடசக்கரம் கதைத்தொகுதி. திகைத்துவிட்டேன்.

 உடனே பதில் எழுதினேன். அவரிடமிருந்து பதில் இல்லை. திகடசக்கரத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் தேடுதல் படலம். .நா. அதிகாரியாக அவர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாக நான் விசாரிப்பவர்களெல்லாம் சொன்னார்களே தவிர, சரியான தகவலைத் தரவில்லை. என்னாலும் அவரது சரியான இருப்பிடத்தையோ முகவரியையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

 அவர் தமது உத்தியோகத்திலிருந்து நிரந்தரமாக ஓய்வுபெறும் வரையில் காத்திருக்கவேண்டியிருந்தது. எனினும், என்னைப்போன்ற வாசகர்களை காத்திருக்கச்செய்யாமல் தமது கதைகள், கட்டுரைகள் மூலம் இலக்கிய மறுபிரவேசத்துடன் அறிமுகமாகிக்கொண்டிருந்தார்.

 கனடாவிலிருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு வரையில் காத்திருந்தேன் எனச்சொன்னால் நம்பமாட்டீர்கள். அந்த ஆண்டு கனடாவுக்குச்சென்றும் அவரைச்சந்திக்கமுடியாமல் போய்விட்டது. அமெரிக்காவிலிருந்து எனக்கு 2008 ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்ததும் முதல் வாழ்த்தும் நீண்ட உரையாடலையும் தந்தவர் முத்துலிங்கம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள்


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும்  வருடாந்த இலக்கியப்போட்டியில்  இம்முறை,  2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம்   சிறந்தனவற்றை  பரிசுக்குத்  தெரிவு செய்துள்ளது.

 சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட போட்டி தொடர்பான அறிவித்தலை வெளியிட்ட இலங்கை மற்றும் புகலிட  தேசத்து ஊடகங்களுக்கும்  இந்தப்போட்டிக்கு


சங்கத்தின் போட்டி  விதிமுறையின் பிரகாரம் நூல்களை தபாலில் அனுப்பி வைத்த எழுத்தாளர்களுக்கும்  சங்கத்தின் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

போட்டி விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இம்முறை,  கட்டுரை இலக்கியத்துறையில் நூல்கள்  எவையும் சங்கத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.

சிறுகதைத்துறையில்  நான்கு  நூல்களும்,  நாவல் இலக்கியத் துறையில் மூன்று  நூல்களும்,  கவிதை இலக்கியத்துறையில் நான்கு  நூல்களும்  இம்முறை  இந்தப் போட்டிக்காக கிடைக்கப்பெற்றன.

இவற்றுள் சிறந்த  நூல்களாக ஒரு  சிறுகதைத் தொகுப்பும்,  ஒரு நாவலும், ஒரு கவிதைத் தொகுப்பும்  தெரிவாகியுள்ளன.

இவற்றுக்கு இலங்கை நாணயத்தில் தலா ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

 

 

 

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தேர்வில் பரிசு பெற்ற 2023 இலங்கைத் தமிழ் நூல்கள்

 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. இவற்றுக்கு இலங்கை நாணயத்தில் தலா ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.


இது குறித்துச் சங்கத்தின் செயலாளர், எழுத்தாளர் லெ.முருகபூபதி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கிய செவ்வி.

அம்மா எங்கே - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழில் நூற்றுக்கும் அதிகமான படங்களை தயாரித்து புகழ் பெற்ற


நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். எல்லாவிதமான படங்களையும் திட்டமிட்டு தயாரித்து வெற்றி கண்ட இவர்கள் 1964ம் ஆண்டு தயாரித்த படம் அம்மா எங்கே. அன்றைய கால கட்டத்தில் வெளி வந்த ஒரு சில மர்ம படங்களுக்குள் இப்படமும் ஒன்றாகும். செண்டிமெண்டல், சஸ்பென்ஸ் இரண்டையும் கலந்து படத்தை எடுத்திருந்தார்கள்.


கோடீஸ்வரன் ரவியின் ஒரே மகள் குழந்தை அமுதா . காதல்

திருமணம் செய்து கொண்ட ரவியின் மனைவி தேவகி திடீர் என்று ஒருநாள் காணாமல் போய் விடுகிறாள். ஊரார் அவள் எங்கோ ஓடி போய் விட்டதாக புரளி பேசுகிறார்கள். இதனால் அவமானத்தால் துடிக்கும் ரவி அவளை பற்றி பேச்செடுத்தாலே ஆத்திரப்படுகிறான். அது மட்டுமன்றி அமுதா மீதும் வெறுப்பை காட்டுகிறான். ரவியின் முறைப் பெண் சுகுணாவை ரவிக்கு கல்யாணம் செய்து வைக்க அவளின் தாயார் விரும்புகிறாள். ஆனால் ரவிக்கோ அதில் விருப்பம் இல்லை. அமுதாவை பராமரிக்க வரும் ரஞ்சிதம் அவனை கவர்கிறாள். இதனிடையே ரவியின் பங்களாவில் அவ்வப்போது சில திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. அமுதாவின் அம்மா எங்கே என்ற சஸ்பென்ஸும் படம் முழுவதும் நீடிக்கிறது.

இப்படி அம்மா, மகள் செண்டிமெண்ட், அம்மா எங்கே என்ற சஸ்பென்ஸ் இரண்டும் கலந்து படம் தயாரானது. ஆங்கிலப் படங்களைத் தழுவி அமைந்த படத்தின் வசனங்களை ஏ எல் நாராயணன் எழுதினார். பாடல்களை கண்ணதாசன் , வாலி, பஞ்சு அருணாசலம், நல்லதம்பி இயற்ற வேதா இசையமைத்தார். சஸ்பென்ஸ் படம் என்றாலே வேதா தான் இசையமைக்க வேண்டும் என்பது போல் இந்தப் படத்தில் தன் இசைத்த திறனை வெளிப்படுத்தியிருந்தார் அவர். பாடல்களுக்கான மெட்டு ஹிந்தி தழுவல் என்றாலும் அதனை தமிழில் இனிமையாக வழங்கியிருந்தார். அதே போல் பின்னணி இசையிலும் வேதாவின் மேதாவிலாசம் வெளிப்பட்டது. S

பாப்பா பாப்பா கதை கேளு, நான் வணங்கும் தெய்வமே, நெஞ்சுக்கு தெரியும், ஆகாய பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் , தொட்டுப் பார் தொடும் போது இன்பம் ஆகிய பாடல்கள் வித விதமான ரசனையில் ஒலித்தன. பி சுசிலாவின் குரலும் , பி பி ஸ்ரீனிவாஸ் , எல் ஆர் ஈஸ்வரி, ஏ எல் ராகவன், எம் எஸ் ராஜேஸ்வரி ஆகியோரின் குரல்களும் பாடல்களுக்கு மெருகூட்டின. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்றாலே சண்டைக்கு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். இப் படத்தில் சண்டை உண்டு , ஆனால் விறு விறுப்பு மிஸ்ஸிங்!

இலங்கைச் செய்திகள்

அதிகாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி

படகை கடத்தி 3 பேர் கொலை; 7 பேருக்கு மரண தண்டனை 

தமிழர்களின் உரிமை, தேசியத்துக்காக ஜனநாயக செயற்பாடுகள் துரிதமாக்கப்படும்

கொழும்பில் இடம்பெற்ற 75ஆவது இந்திய குடியரசு தின விழா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணி


அதிகாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி 

- முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்தில் மோதி பாரிய விபத்து

January 25, 2024 8:34 am 

இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

உலகச் செய்திகள்

 ஜனாதிபதி வேட்பாளர்: ட்ரம்ப் மீண்டும் வெற்றி

காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி: மோதல்கள் உக்கிரம்

கான் யூனிஸை சுற்றிவளைத்து இஸ்ரேல் படை கடும் தாக்குதல்: புதிய வெளியேற்ற உத்தரவு

இந்தியா – ரஷ்யா உறவில் புதிய திருப்பம்: சவால்களுக்கு மத்தியில் ஒத்துழைப்புடன் செயற்பாடு

இனப்படுகொலை நடவடிக்கையை தடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவு


ஜனாதிபதி வேட்பாளர்: ட்ரம்ப் மீண்டும் வெற்றி

January 25, 2024 9:14 am 0 comment

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தீர்க்கமான நியூ ஹம்ப்ஷயர் வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளார்.

வன்னி நம்பிக்கை ஆடைகள் விநியோகம் அறக்கட்டளையின் குட்னஸ் கிராமத்தின் இதய துடிப்பு வலுவூட்டல் மையம் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு நவம்பர் 2023 & பளை NP ஜனவரி 2024

 வன்னி ஹோப் ஆடைகள் விநியோகம் FoG கிராமத்தின் இதய துடிப்பு


வலுவூட்டல் மையம்

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு நவம்பர் 2023 & பளை NP ஜனவரி 2024.

இந்த ஆடைகளையும் வன்னியர்களையும் நன்கொடையாக வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி

நம்பிக்கை மூட்டை கட்டல் குழு தொண்டர்கள்.

நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் நமது பயணத்தைத் தொடரும்போது இணைந்திருப்போம்.

எங்கள் இலக்கை அடைய உதவுவதில் உங்கள் ஆதரவு முக்கியமானது. இருந்ததற்கு நன்றி

வன்னி நம்பிக்கையின் ஒரு அங்கம். ஒன்றாக, நாம் தொடர்ந்து உருவாக்க முடியும் வேறுபாடு.

வன்னி நம்பிக்கை 🚨🌊 தம்பலகாமம், திருகோணமலை வெள்ள நிவாரண முயற்சி 🌊🚨 ஜனவரி 2024

 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"

வன்னி ஹோப்பில், திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் தீவிரமாக உதவி செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களை ஆதரிப்பதற்கான முக்கியமான உணவுப் பொதிகளை எங்கள் குழு வழங்கியுள்ளது.

🥘அத்தியாவசிய உதவிகளை வழங்குதல்

இந்த சவாலான காலங்களில் தேவைப்படுபவர்கள் வாழ்வாதாரத்தைப் பெறுவதை உறுதிசெய்து, உடனடி உதவியை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சமூகங்களை ஆதரிக்கும் எங்கள் பணியில் எங்களுடன் சேருங்கள். ஒவ்வொரு உதவியும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 கீழே உள்ள வீடியோ இணைப்பைப் பார்க்கவும்.


பொங்கல் (பிரத்யேக அழைப்பிதழ் மட்டுமே நிகழ்வு)

 

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு பாராளுமன்றத்தில் பொங்கல்





















RSVP:  அழைப்பிதழ் பெற்றவர்கள் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் செயலாளருக்கு மின்னஞ்சல் செய்யவும்


கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பொங்கல்























RSVP:  அழைப்பிதழ் பெற்றவர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் செயலாளருக்கு மின்னஞ்சல் செய்யவும்