பேசாதவர் பேசினார் பெரு வெளிச்சமாகினார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

 


ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும்


வியப்புத்தான்.
 அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.

  அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி


வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகி றார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந் தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது.அழகான ஆண்பிள்ளை அ
 ம்மாஅப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள் ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின் றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தை யைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி  " நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான்.அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம் " என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.

  வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா ! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடி யாரின் வேண்டுதல் வீணாகி விடுமா? குரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான்.பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந் தனை அகமிருத்தி " திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா " என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளை யின் குரல் காதில் கேட்டதும் அள விட முடியா ஆனந்தத்தத்துக்கும் ஆச்சரியத்துக்கும் ஆட்பட்ட பெற்ற வர் கள் தங்கருத்தை மாற்றி சன்னிதானதுக்கு ஓடோடோடி வந்தார்கள். கந்தப் பெருமான் " குருபரா " எனவழைத்தார் என்பதைக் கேள்வியுற்ற பெற்ற வர்கள் அந்தக் குருபரனோடு சேர்த்து குமரனருளால் பேசுந்திறன் வாய்த் தமையால் " குமரகுருபரன் " என்றே தமது பிள்ளைக்கும் பெயரினைச் சூட்டி பேரானந்தம் அடைந்தார்கள் என்று அறிந்திட முடிகி றது. திருச் செந்தூர் பதியில்த்தான் இந்த அற்புதம் நிகழ்ந்ததாய் குமரகுருபரர் வரலாற்றால் பார்க்க க்கூடியதாக இருக்கிறது. ஐந்து வயதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்த பிள்ளை கந்தர் கலி வெண்பா என்னும் தத்துவ நூலினை எப்படித் தந்திருக்க முடியும் என்று ஒரு ஐயம் எல்லோரிடமும் எழத்தான் செய்யும் அல்லவா ?

ஈழத்தின் சமூகப் போராளி, முதுபெரும் எழுத்தாளர் விடைபெற்றார்

 தெணியான் பேசுகிறார்




படம் மற்றும் ஆவணம் நன்றி :
நூலகம்




செல்வி காயத்ரி செல்வ குமாரின் நடன அரங்கேற்றம்

 யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலை  அகடமி பட்டதாரியான


திருமதி பத்மரஞ்சனி உமாசங்கரின் மாணவியான  செல்வி காயத்ரி செல்வ குமாரின்அரங்கேற்றம் அண்மையில் சிட்னி பரமாட்டா ரிவர்சைடு அரங்கில் நிகழ்ந்தது. திருமதி சாந்தா பொன்னுத்துரையின் வழிகாட்டலின் கீழ் ராமநாதன் அகடமியில் பயின்ற பத்மரஞ்சனி உமாசங்கர் , இவரது மகள் திருமதி வைஷ்ணவி கவுசிகன் ஆகிய நடன ஆசிரியர்களின் வழிகாட்டலில் இந்த அரங்கேற்றம் இனிதே நிகழ்ந்தது. நடன வடிவமைப்பு,  மற்றும்   நட்டுவாங்கத்தை  திருமதி பத்மா ஷங்கரும் ,திருமதி வைஷ்ணவி கவுசிகன் இணைந்து நடத்தினர். நிகழ்ச்சிக்கு அகிலன் சிவானந்தனின் ,குரலோசையும்,  ஜனகன் சுதந்திர ராஜாவின்  மிருதங்கமும்   கிரந்திகிரண் முடிகொண்டாவின்  வயலினும்   இணைந்து சுவை கூட்டின.

எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை நினைவுப்பேருரை “ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில் “

 


எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர்

                        சண்முகம் சபேசன் ( 1954 – 2020 )

                இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

                        29-05-2022 ஞாயிற்றுக்கிழமை

                                நினைவுப்பேருரை

   ஏட்டுச்சுவடி  முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில்   

                                                சிறப்புரை :

                 மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன்

                 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  கன்பரா  தமிழ் அரங்கம்

                     வரவேற்புரை :  திரு.  தாமோ. பிரமேந்திரன்

                                தொடக்கவுரை:  திரு.  முருகபூபதி

                          நன்றியுரை:  திருமதி சிவமலர் சபேசன்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 14

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…!

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (1988 - 2022)

தோற்றமும் வளர்ச்சியும் !

                                                               முருகபூபதி


திரும்பிப் பார்ப்பதும் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்த அனுபவம். அதனால்தான் " நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று  கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் திரும்பிப் பார்க்கும் இயல்புகொண்டிருப்பவர்கள். அவர்களின் எழுத்துலகத்திற்கும் கலையுலகத்திற்கும் ஆய்வுலகத்திற்கும்  திரும்பிப் பார்த்தல் அவசியமானது. பிரதானமானது. ஆதாரங்களைப் பெற்றுத்தருவது.


இந்தப்புலம்பெயர் தேசத்து வாழ்க்கைக்கு நான் பிரவேசித்தபோது அவ்வாறு என்னையும் திரும்பிப் பார்க்கவைத்த பால்யகால சம்பவம் நினைவுக்கு வந்தது. எனது பாட்டி, அதாவது எனது தாயாரின் தாயார். அவரது பெயர் தையலம்மா.  பாடசாலைக்குச் செல்லாதவர். கையெழுத்தும் போடத்தெரியாதவர். கைநாட்டுப்போடும் அந்த மூதாட்டி,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ் சார்ஜன்டாக இருந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவேளையில்  பதிவுத்திருமணம் செய்யாதிருந்தமையால் தாத்தா கார்த்திகேசு இறந்த பின்னரும் அவரது ஓய்வூதியம் பெறமுடியாமல் அவதிப்பட்டவர். அவருக்கு பள்ளிப்படிப்பு இல்லையென்றாலும் பாட்டி வைத்தியத்தில் கைதேர்ந்தவர்.

எங்கள் குடும்பம் ஏழ்மையோடு போராடிய காலத்தில் (1956 இல் ) பாடசாலைக்கொப்பி புத்தகம் வாங்குவதற்கும் சிரமப்பட்டவேளையில், எங்கள் பாட்டி கடலைவிற்று பெற்ற பணத்தில் எனக்கு அவற்றை வாங்கித்தந்து பாடசாலைக்கு அனுப்பியவர். அதிகாலையே எழுந்து அம்மா சுட்டுத்தரும் தோசையை வட்டிலில் சுமந்துசென்று விற்றுவந்து எங்கள் பசிபோக்கியவர்.  அவர் எனக்கு என்றைக்கும் ஆதர்சமானவர். அவரது முயற்சியினால் நான் ஆறாம் தரப்புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்றிருக்கின்றேன்.

அந்தப்பாட்டி இரவுவேளையில் உறங்கும்போது தனது மடியில் என்னைக்கிடத்தி சொல்லித்தந்த கதைகளே, பின்னாளில் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரை எழுதவும் அதனை நூலாக்கவும்  என்னைத்தூண்டியிருக்கிறது.

ஸ்வீட் சிக்ஸ்டி 15 - முத்து மண்டபம் - ச சுந்தரதாஸ்

 .

எம் ஜீ ஆரும்,சிவாஜியும் நட்சத்திர நடிகர்களான திகழ்ந்த கால கட்டத்தில் திரையுலகிலும்,அரசியலிலும் மிளிர்ந்து கொண்டிருந்தவர் இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.தமிழக சட்டசபைக்கு அங்கத்தவராக முதன் முறையாக சென்ற நடிகர் என்ற பெருமை இவரையே சேரும்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளரான இவர் அறிஞர் அண்ணாவின் அன்பிற்கு பாத்திரமானவரும் கூட! எம் ஜீ ஆர் சொந்தப் படம் தயாரித்ததைத் தொடர்ந்து இவரும் ராஜேந்திரன் பிக்சர்ஸ் என்ற தனது பட நிறுவனத்தை ஆரம்பித்து சொந்தமாகப் படம் தயாரித்தார்.அப்படி தயாரித்த படம் தான் முத்து மண்டபம்.


எஸ் எஸ் ஆர் படம் என்றால் பொதுவில் குடும்பக் கதை,சமூக சீர்திருத்தம் என்றுதான் கதை அமையும்.ஆனால் தனது சொந்தப் படத்தை ஒரு மர்மப் படமாக தயாரித்தார் எஸ் எஸ் ஆர்.இது அன்றைய கால கட்டத்தில் பலருக்கு வியப்பை அளித்தது.

முத்து மண்டபத்தின் அதிபதியான ஜமீந்தார் முத்துராஜாவின் மகன் கண்ணன் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நீலமணியை காதலிக்கிறான்.நீலமணியும் அவனை காதலிக்கவே திருமணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.திருமண அழைப்பை தன் பாட்டு வாத்தியாராக பரந்தாமனுக்கு கொடுக்க அவனின் வீட்டுக்கு செல்கிறாள் அவள். பரந்தாமனோ அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயல அவனிடம் இருந்து தப்பி வருகிறாள் நீலமணி. கண்ணன்,நீலமணி திருமணம் நடக்கிறது.அதே சமயம் பரந்தாமன் கொல்லப் பட்டான் என்ற செய்தியும் எட்டுகிறது.போலீசாரும், பரந்தாமனின் மனைவியும்,கண்ணனும் நீலமணி மீது சந்தேகப் படுகிறார்கள்.கண்ணன்,நீலமணி தாம்பத்தியத்தில் விரிசல் உருவாகிறது.அதே சமயம் பரந்தாமனின் மனைவியின் தங்கை கண்ணனுக்கு காதல் வலை வீசுகிறாள்.

மூன்று மாதங்களையும் கடந்து செல்லும் மூவின மக்களின் போராட்டம் ! அவதானி


இலங்கையில் விலைவாசி உயர்வையடுத்து, எரிபொருளுக்கு நேர்ந்த பற்றாக் குறையையடுத்து  மக்களின் கடுமையான எதிர்ப்பினை எதிர்நோக்கிய இராஜபக்‌ஷ குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த அரசு திக்குமுக்காடியது.

அரசில் செல்வாக்கு செலுத்திய சில அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்.  நிதியமைச்சர் பதவியே கேலிக்குரியதாகியது.  பிரதி சபாநாயகர் தெரிவும் அவ்வாறே அமைந்தது.  இராஜிநாமாவின் அடையாளம்தான் இராஜபக்‌ஷவினரின் இலட்சணம் எனச்சொல்லும் அளவுக்கு இலங்கையை சர்வதேசத்தின் முன்னால் தலைகுனிய வைத்துவிட்டனர்.

காலிமுகத்திடலில் தொடங்கிய ஆர்ப்பாட்டம்,  நாற்பது நாட்களையும் கடந்து தணிந்துவிடாமல் தொடருகின்றது. அதனை அடக்குவதற்கு முன்னாள் பிரதமரின் கைக்கூலிகள் மேற்கொண்ட முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில் அதில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபரும் உத்தரவிட்டுவிட்டார்.  பலருக்கு நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்க்ஷேக்களின் குடும்ப ஆட்சியில்  கடந்த இரண்டு வருடகாலமாக பல போராட்டங்கள் நடந்தன.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா கோரி போராட்டங்களை தொடர்ந்தனர்.

சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - மெல்பேர்ண்

 சிறீலங்கா பேரினவாத அரசபடைகளால் காலத்திற்குக்காலம்


இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும், இறுதி யுத்தத்தின்போது 2009-ம் ஆண்டு மேத்திங்களில் முள்ளிவாய்க்காலில் பேரினவாதப்படைகளால் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழமக்களையும் நினைவுகூருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 13-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18-05-2022 புதன்கிழமை மாலை 7.00மணியளவில் மெல்பேர்ண் கங்கேரியன் சமூகமண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


இளையசெயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. இறுதியுத்தத்தின்போது அரசபடைகளின் எறிகணைத்தாக்குதலில் தனது தந்தையை இழந்து முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலங்கள் அனைத்தையுத் கடந்துவந்த திருமதி.தேனுகா அச்சுதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.


அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மருத்துவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சிறுவயதிலேயே முள்ளிவாய்க்கால் பேரவலங்களையும் கடந்துவந்து அரசபடையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள தனது தந்தையை தேடிக்கொண்டிருக்கும் செல்வி.காநிலா ஜெயக்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுப் பீடத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இதனை முள்ளிவாய்க்கால் இறுதிநாள்வரையிலும் அந்த அவலங்களோடு பயணித்து அந்த அவலங்களிலிருந்து மீண்டு வந்தவர்களில் ஒருவரான திருமதி. சுகன்ஜா பரந்தாமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் [ சுவை முப்பத்து ஏழு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 

 

  சுவையினைத் தருகின்ற பதனீரைக் காய்ச்சுவதன் மூலமாக


இன் னும் சுவையினைப் பயக்கும் பல கிடை க்கின்றன என்பது மனமிருத்த வேண் டிய முக்கிய கருத்தாகும். பனையிலிருந்து இறக்கிய நிலையில் குளி ர்மையாக இருந்து குடிக்கும் சுவையான பானமாக அமைகின்ற பதனீர் அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து ஆறவிட்ட நிலையிலும் யாவருக்கும் நல்ல இனிப்பான சுவையினை வழங்கியே வருகிறது என்ப தும் நோக்கத்தக்கதாகும்.பதனீர் என்னும் பெய ரினினுக்கு ஏற்றாற் போன்று அது என்றுமே நல்ல பதமாக வும் இதமாகவுமே ஆகியே அமைகிறது.

  பனங்கட்டி என்று சொல்லும் பொழுதே
நாவெல்லாம் ஊறுகிறதல்லவா 
பனங்கட்டிதான் எங்களின் சொந்தமான இனிப்பாக விளங்கி இருக்கிறது. எங்களின் வாழ்வியலோடு இணைந்து நிற்கும் கற்பகதரு வாம் பனையின் கொடைகளில் பனங்கட்டியும் முக்கிய இடத்தினை வகிக்கிறது என்பதை மறுத்துரைத்து விடவே முடியாது எனலாம்.பனங்கட்டியாய்பனை வெல்ல மாய்பனஞ்சீனியாய்பனங்கற் கண்டாய்பனங் காடியாய் என்றெல்லாம் கற்

 பகதரு எமக்கெல்லாம் வழங்கும் நிலையில் பதனீர் என்னும் மூலத்தையே அளித்து நிற்ப தைக் கட்டாயம் மனத்திலிருத்துதல் வேண்டும்.

  பதனீரானது இனிப்பாய் பதமாய் இருப்பதற்குத்தான் அதனை எடுக் கும் பாத்திரங்களுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்டது. அந்தச் சுண்ணாம்பு பூசப்படு வதால்த்தான் பதனீர் புளிக்காமல் இருக்கிறது. பாதுகாப்பதற்குப் பூசப்படும் சுண்ணாம்பினைத் தரமற்றதாகப் பூசிவிடும் நிலை யில் பதனீர் கெட்டுப் போய் விடுகிறது என் றும் அறிய முடிகிறது. அதேநேரம் சுண்ணாப்பினை அளவுக்கு அதிகமாகப் பூசுவதாலும் பதனீர் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டாகிறதாம் என்றும் அறிந்திடக்கூடியதாக இருக்கிறது.சுண்ணாம்பு பூசுவதால் த்தான் பதனீர் பக்குவமாய் கிடைக்கிறது. ஆனால் அந்தச் சுண்ணா ம்பே பதனீரி னைக் காய்ச்சிப் பனங் கட்டி செய்யும் வேளை - பனங்கட்டி யில் காரத்தன்மையினையும்கருநிறத்தையும் கொடுப்பதோடு சுவை யினையும் கெடுத்து விடவும் கூடியதாக இருக்கிறதாம் என்பது முக்கிய கருத்தாகும். இதனால் பதனீரில் இருக்கும் சுண்ணாம்புத் தன்மையினை நீக்குவது - பனங்கட்டி உருவாக்கத்தில் முக்கியமாகிறது. அதனால் பதனீ ரைக் காய்ச்சும் பொழுது சுண்ணாம்பின் தாக்கத்தை அகற்றுவதற்காக பொஸ்போரிக் அமிலம் அல் லது சிற்றிக் அமிலம் பயன்படுதப்படும் நிலை ஏற்படுகிறது.

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் : ஓர் உரையாடல்

இலக்கியவெளி  நடத்திய 20வது இணைய வழி  கலந்துரையாடல் நிகழ்வான  "அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் : ஓர் உரையாடல்” நிகழ்வைப் பார்க்க  பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.



 

 



 


அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்: புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ்

 Sunday, May 22, 2022 - 12:44pm

- அவுஸ்திரேலிய பாராளுமன்றிற்கு முதன்முறை இலங்கையில் பிறந்த பெண்
- ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்துத் தெரிவிப்பு
- ஸ்கொட் மொரிசன் கூட்டணி தோல்வி

அவுஸ்திரேலியாவில் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரிசனுக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பனிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அந்நாட்டின் மொத்தமாகவுள்ள 151 தொகுதிகளில் லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், தொழிலாளர் கட்சி 72 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. வெற்றிப் பெற 76 இடங்கள் தேவை என்ற நிலையில், 72 இடங்களை பெற்ற தொழிலாளர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

லிபரல் கட்சி தலைவரும் அந்நாட்டின் பிரதமருமான ஸ்கொட் மொரிசன் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.

தனது தோல்வியை ஸ்கொட் மொரிசன் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைச் செய்திகள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

பவித்ரா, கணவர் CIDயில் சுமார் 05 மணிநேர வாக்குமூலம்

ஆகஸ்ட் முதல் இலங்கையில் கடும் உணவு நெருக்கடி நிலை

LIOC: எரிபொருள் தாங்கிக்கு மாத்திரம் பெற்றோல் விநியோகம்

தமிழகத்திலிருந்து நாளை வந்தடையும் இந்திய மக்களின் முதற் கட்ட ரூ. 2 பில். பெறுமதியான உதவிப் பொருட்கள்

அவசரகால சட்டம் நீக்கம்



சர்வகட்சி அரசாங்கத்தில் 9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

- இதுவரை பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் 13 அமைச்சர்கள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று (20) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

உலகச் செய்திகள்

 ரஷ்யத் தாக்குதலால் உக்ரைனின் டொன்பாஸ் பகுதி முற்றாக அழிவு

மரியுபோலில் மேலும் 700 உக்ரைன் வீரர்கள் சரண்

பைடனின் ஆசிய பயணம் ஆரம்பம்

அணு ஆயுதச் சோதனை நடத்த வடகொரியா தயார்

பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணைவதில் நேட்டோ உறுதி

அமெரிக்கா, ஐரோப்பா, கனடாவில் குரங்கம்மை நோய் சம்பவம் பதிவு



ரஷ்யத் தாக்குதலால் உக்ரைனின் டொன்பாஸ் பகுதி முற்றாக அழிவு

உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் புதிய தாக்குதல்கள் அந்தக் கிழக்குப் பிராந்தியத்தை நரகமாக மாற்றி இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா அர்த்தமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 21 “தமிழ்த் திறனாய்வு உலகில் பஞ்சாங்கத்தின் இடம்”

 


நாள்:         ஞாயிற்றுக்கிழமை 29-05-2022       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM, Facebook

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09            

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

பேச்சாளர்கள்:

‘தொல் இலக்கிய ஆய்வுகளில் புதிய ஒளி- பேராசிரியர் பஞ்சாங்கத்தின் திறனாய்வுகள்

- முனைவர் கி.பார்த்திபராஜா

‘நவீன இலக்கியத் திறனாய்வுகள்- பஞ்சுவின் நெடும் பயணம்
- முனைவர் பா.இரவிக்குமார்

‘க.பஞ்சாங்கம் அவர்களின் பெண்ணியத் திறனாய்வு...’ 
- முனைவர் இரா.ஸ்ரீவித்தியா

'தமிழ் இலக்கியப் புலத்தில் பேராசிரியர் பஞ்சாங்கத்தின் இடமும்  இருப்பும்' 

- திரு.சி.ரமேஷ்

மேலதிக விபரங்களுக்கு:  - அகில் - 001416-822-6316