சிட்னி (Merrylands) தைப்பொங்கல் திருவிழா

 

சிட்னியில் மாபெரும் பொங்கல் விழா!

 சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா Pendle Hill – Pendle Way எனுமிடத்தில் இன்று ( 19 ஜனவரி-ஞாயிறு) நடந்துகொண்டுள்ளது. அந்த நிகழ்விலிருந்து கிடைத்த புகைப்படங்கள்.















நாநிலம் உன்னை வாழ்த்தியே நிற்கும் !

 



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 



செல்வம் வேண்டும் திருடல் தீமை
ஆசை அவசியம் அழிப்பது ஆகா
உழைப்பு முக்கியம் ஊழல் களை
ஏழ்மை என்பது இழிவு அல்ல


இசைஞானி இளையராஜா வின் ❤️❤️❤️ Symphony No. 1 ❤️❤️❤️

கானா பிரபா

“நாங்கள் இன்னும் இன்னும் சேர்ந்து வேலை செய்யப்


போகிறோம், எனக்கு வயது 82 என்பதையும் சொல்லி வைக்கிறேன்”

அரங்கத்தில் தன் சிம்பொனிப் படைப்பை வாத்தியங்களால் மொழி பெயர்த்த வாத்தியக்காரர்கள் முன்னே பூரிப்போடு சொல்லி நிமிர்ந்து நிற்கின்றார்
நம் காலத்து ராஜாதி ராஜன் இந்த இளையராஜா.

“இளையராஜாவின் புதுவிதமான  நெறிப்படுத்தலில்  வாத்தியங்களைக் கையாண்டது நமக்கெல்லாம் புதிய அனுபவம்,
இம்மட்டுக்கும் இங்கே இசை படைத்த வாத்தியக்காரர்கள் எல்லோருமே நிரம்பிய அனுபவசாலிகள் என்பதையும் சொல்லி வைக்கிறேன்”
என்ற பிரமிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றார் இசை இயக்குநர் (conductor) Mikel Toms.

ஒவ்வொரு வாத்தியங்களைத் திரையிசைப் பாடல் உருவாக்கத்தின்போது கையாளும் போது,

“இதில் இருந்து  இப்படி வரலாமே?”

“ஏன் இந்த இசைக் கருவியில் இருந்து
நான் நினைத்த மாதிரி எடுக்க முடியாதுள்ளது?
இன்னும் முயன்று நான் எது கேட்டேனோ அதை இது வழியாகத் தர வேண்டும்”
என்ற ஒரு கறார்த்தனம் மிகுந்த இளையராஜா என்ற இசையமைப்பாளரிடம் ஆண்டாண்டு காலம் அனுபவபட்ட நம் வாத்தியக் கலைஞர்கள் எல்லாம் சொல்லக் கேட்டதால் இதெல்லாம் ஆச்சரியமில்லாமல் நமக்குள் ஒரு குறுஞ் சிரிப்பையும், பெருமையையும் கொண்டு வருகிறது. நம்மாள் அருமை இன்னொரு தேசத்தவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்ற பெருமையின் வெளிப்பாடு அது.

Symphony No. 1 இசை உருவாகத்தின் பின்னணிப் படத்தைப் பார்க்கும் போது இன்னொன்றை அவதானித்திருப்பீர்கள்.
தான் எதை எழுதினாரோ அதை அச்சொட்டாக வாங்கி விடும் ஆளுமைத் திறன்.

தியானத்தின் மகிமை

 

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

(வாழ்நாள் சாதனையாளர்)

சிட்னி -அவுஸ்திரேலியா


 



உடலுக்கு உரமளிக்க உடற்ப யிற்சி! - எங்கள்

உயிருக்;கு உயர்வுதரும் சிவத்தி யானம்!

சடப்பொருளாய் அழிந்திடுமே மனிதரின் உறுப்பு!   - உயிர்

தான்செயும்;  வினையாலே எடுத்திடும் பிறப்பு!









ஆறறிவு மனிதர்களும் பக்குவம் என்று - வாழ்வில்

ஆற்றிடுவர் அரன்பணியை அறவழி நின்று 

பேரறிவை  நோக்கியவர் எடுத்திடும் பயணம் - ஈற்றில்

பெரும்பயனைத் தரவைக்கும் சிவத்தி யானம்.

  

தியானத்தின் மூலதனம் உளத்தின் தூய்மை - புறத்

தேகத்தின் சுத்தங்கூடப் பலனைக் கூட்டும்!

மயானத்தின் அமைதிநிலை சூழலிற் தேவை - பின்

மனதும்ஒரு முகமாகிpப் பாதையைக் காட்டும்!

ஊரோடு ஒன்றி வாழ்வாய்! --- அன்பு ஜெயா, சிட்னி பா வகை: சந்தக் கலி மண்டிலம் (விருத்தம்)

 

 

அடுத்திங்குமே வாழ்வோரையே அடியோடுநீ அறியாய்

கெடுதல்வரும் காலத்திலே கேட்டற்குமே யாரோ?

விடுப்பாயினி தனித்திங்குமே வீணாக்கிடும் வாழ்வை

அடுத்தோரிடம் இணைந்தேவாழ் அதிலேபயன் உண்டே! (1)

 

என்றென்றுமே நல்லோருடன் இணைந்திங்குமே வாழ்வாய்!

நன்றென்றுமே ஆன்றோருமே நயமாகவே உரைத்தார்!

பொன்றும்துணை என்றேயவர் புரிவார்களே உதவி!

அன்றேஉணர் வாய்நீயுமே ஆன்றோருரை உயர்வாய்!  (2)

 

பறக்கின்றதோர் பறவைக்குழு படையாகவே திரியும்,

உறவுக்கென ஓர்நாளிலே உன்னுள்ளமும் விரியும்;

உறவென்பதன் உயரின்பமே உன்வாழ்வினில் பெருக்கு!

உறவாகவே மற்றோரையும் உணர்ந்தால்பல மிருக்கு!  (3)

 

வேர்விட்டவோர் ஆல்போலநீ விழுதோடுமே வாழ்வாய்!

ஊர்போற்றநீ எப்போதுமே ஒன்றாகவே வாழ்வாய்!

நீர்போலவே தெளிவானதோர் நெஞ்சத்துடன் வாழ்வாய்!

பார்போற்றுமே, பகைநீக்கியே பார்தன்னிலே வாழ்வாய்! (4)

-------------------------------

 

 

 

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள். இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும் நான்கு எழுத்தாளர்கள். நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட  நூல்களில்   சங்கத்தின் இந்த  பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு தலா. 50, 000 இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் வருமாறு:

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்களும்: .

 நாவல்: ஒரு நாள் பாவம்

நூலாசிரியர்: சீமான பத்திநாதர் பர்ணாந்து .

ஜீவநதி வெளியீடு  - அல்வாய்.

 சிறுகதைத்தொகுதி:  தைலாப்பெட்டி

நூலாசிரியர்: ஏ பீர் முகம்மது 

கஸல் பதிப்பகம் ஏறாவூர்

கட்டுரை: நாட்டார் வழக்காறுகள் 

நூலாசிரியர்: நாராயணபிள்ளை நாகேந்திரன்

கவிதை

மோகனம் - மருதூர்க்கொத்தன் கவிதைகள்

நூலாசிரியர்: மருதூர்க்கொத்தன்.

திருவிளையாடல் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 புராண, பக்திப் படங்களில் இருந்து தமிழ் சினிமா விலகி சமூகப்


படங்களில் அக்கறை காட்டிக் கொண்டிருந்த அறுபதாம் ஆண்டு நடுப் பகுதியில் ட்ரெண்ட் சேன்ஜ் என்பது போல் ஒரு பக்திப் படம் வந்து தமிழ் திரையுலகையே வியந்து அண்ணாந்து பார்க்க வைத்தது . அந்தப் படம்தான் திருவிளையாடல். அன்றைய கால கட்டத்தில் இப்படி ஒரு படம் வந்ததே ஈசன் திருவிளையாடல் தானோ என்பது போல் இப் படம் வந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது.

 
நாடகத் துறையிலும், பின்னர் திரைத் துறையிலும் நீண்ட கால

அனுபவம் கொண்ட ஏ பி நாகராஜன் கதை வசனம் எழுதி இப் படத்தை இயக்கியிருந்தார். திருவிளையாடல் புராணத்தில் இருந்து சில சம்பவங்களை எடுத்து அவற்றை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் ஜனரஞ்சக ரீதியில் படத்தை படைத்திருந்தார் அவர். படத்தின் ஒவ்வொரு காட்சியும், அவரின் திறமையை நிரூபிப்பதை போல் இருந்தது.
 
சிவாஜியின் நூறாவது படமான , நூறு நாட்கள் ஓடிய நவராத்திரி படத்தை எடுத்த ஏ பி என் அதே சிவாஜி, சாவித்திரி ஜோடியை வைத்து இந்தப் படத்தையும் எடுத்தார். ஆனால் நவராத்திரி போல அன்றி மிகுந்த பொருட் செலவில் , பிரம்மாண்டமான அரங்க அமைப்பில், கண்ணுக்கு இனிமையான வண்ணத்தில் படத்தை உருவாக்கி அசத்தி இருந்தார் ஏ பி என்.  மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் முருகன் மலை ஏறுவது, தன் கட்டளையை மீறி பார்வதி தட்சனின் யாகத்துக்கு சென்றதால் சிவன் அவளை எரித்து பின் உயிர்ப்பிப்பது, ஏழை புலவன் தருமிக்கு ஆயிரம் பொற் காசுகள் கிடைக்க கவிதை எழுதி கொடுத்து அது நக்கீரனால் சவாலுக்கு உட்படுத்தப் பட்டதும் அவரை மூர்ச்சையாகி பின்னர் தெளியவைப்பது , மீனவனாக வந்து பயங்கர சுறாவிடம் இருந்து மீனவர்களை காப்பாற்றி மீனவப் பெண்ணை மணப்பது, கர்வம் மிக்க ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க விறகு வெட்டியாக வந்து ஆடிப் பாடி அவரின் கர்வத்தை அடக்குவது என்று சில கதைகளை தெரிவு செய்து படமாக்கி இருந்தார் ஏ பி என்.

படத்தின் கதா பாத்திரங்களுக்கு ஏ பி என் தேர்ந்தெடுத்த நடிகர்கள் அனைவரும் அப் பாத்திரங்களுக்கு கண கச்சிதமாக பொருந்தினார்கள். இதனால் அப் பாத்திரங்கள் மிக இயல்பாக ரசிகர்களை கவர்ந்தன. இதற்கு முன்னரும் பலர் சிவனின் பாத்திரத்தில் தோன்றிய போதிலும் சிவாஜியை போல் எவரும் அதற்கு அச்சொட்டாகப் பொருந்தவில்லை. சிவா என்றால் சிவாஜி என்பது போல் வேடப் பொருத்தம் பொருந்தியது. சக்தியாக வரும் சாவித்திரியும் அதற்கு ஈடு கொடுத்து குறை வைக்காது நிறைவாக நடித்திருந்தார்.

அடிமறி மண்டில ஆசிரியப்பா: (ஒவ்வொரு அடியும் தனித்தனியாய் பொருள் முடிந்து ஓசை கெடாது அளவடிகளாக இயற்றப் பட்டுள்ளது.) சுவரோவிய காட்சியும் சிந்திக்க வைக்குதே!


-சங்கர சுப்பிரமணியன்.






ஆலையிலா ஊரில் இலுப்பை பூவினிப்பே
பாலைவனமதில் தனி மரமும் சோலையே
காலையில் மலர்கின்ற தாமரையும் அழகே
மாலையில் மயக்குகிற பொழுதும் இனிதே

பல்லக்கு தூக்குவர் பல்லக்கில் ஏறாரே
சொல்லுக்கு பொருள் தெரியாரும் உளரே
மல்லுக்கு நிற்பதில் மாற்றம் வந்திடாதே
எல்லைக்குள் நின்றால் எதுவும் சிறப்பே

தற்பெருமை கொள்வர் தரணியில் சிலரே
அற்பரும் ஒருநாள் கயமை களைவாரே
கற்றவர் எந்நாளும் அடக்கத்தால் அமரரே
சிற்றோர் என்றுமே சிறப்பின்றி யிருப்பரே

எவரும் வெறுத்திடா மாந்தருமி ங்குண்டே
உவப்ப தலைகூடி உள்ளப்பிரிவர் புலவரே
அவரிவரென குறைகூறா நிற்றலும் பண்பே
சுவரோவிய காட்சி சிந்திக்க வைக்குதே!

நின்றேனும் கொல்லும் தீங்கு (06) - (திகில் தொடர்) - சங்கர சுப்பிரமணியன்.

 


"ஊர்மிளாநீ எப்படி இங்கு வந்தாய்நீ தான் அரளி

விதையை அரைத்துக் குடித்து இறந்து விட்டாயே?நீ உயிருடன்தான் இருக்கிறாயா?" என்று கேட்டுக் 

கோண்டிருந்தபோதே அவள்அந்த யூகலிப்டஸ் 

மரத்தினடியில் பார்த்ததைப் போலவெள்ளை நிற 

புடவையுடனும் விரித்த தலைமுடியுடனும் கண்களில் 

பிரகாசமான ஒளியுடனும் மாறி விகாரமாய்ச் சிரித்தாள்.

 

அப்போது அதிர்ச்சியில் பெரிதாகத் திறந்த எனது வாய்,

 

"ஊர்மிளா......ஊர்மிள்....... ............" என்றபடியே நின்றதுகண்கள் மிரண்டு அந்த மிரட்சியுடனேயே 

நின்றனமூச்சுதிணற மூக்கிலிருந்து தோ வடிய எனது

உடலிருந்து உயிர்விடை பெற்று செல்வதை என்னால் உணர முடிகிறதுன்று ஊர்மிளாவுக்கு 

தீங்கிழைத்தேன்அதற்கு தண்டனை கிடைத்து

விட்டது. இன்று ஒன்றுமறியா கற்பகத்தையும் அல்லவா ஏமாற்றிச் செல்கிறேன் என்று நினைக்கும் போதே என்கண்ககளில் இருந்து நீர் வடிய... எங்கோ..................…..

எங்கோ................................தொலைவாக........................................எங்கேயோ..............................................போய்க்கொண்டே...............................................................

 

(முற்றும்)

 

-சங்கர சுப்பிரமணியன்.

பொங்கல் Pongal @ NSW Parliament

 .