பவளவிழா நாயகன் மாவை நித்தியானந்தன் கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம் முருகபூபதி


( கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும்,  சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா நேற்றைய தினம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து  கொண்டாடினர்.

மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின்  சிறப்பியல்புகளை கூறும் நித்தியம் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

இம்மலரில் இடம்பெற்ற எழுத்தாளர் முருகபூபதியின் ஆக்கம் )

 

னிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே


ஊற்றெடுப்பது.  அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில்  நதியாக்குவதில்தான்  அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.

தனது ஆரம்ப  பாடசாலைக் காலத்திலிருந்தும் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வாழ்க்கை முதல், கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின் தொழில் சார் பயிற்சிக் காலத்திலும் தன்னிடம் சுரந்துகொண்டிருந்த கலை, இலக்கிய தாகத்தை சமூகத்தை நோக்கி பயன்படுத்தியவர்தான் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும்,  சமூகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன்.

இவரை கடந்த ஐம்பது வருடகாலமாக அவதானித்து வருகின்றேன். 1970 காலப்பகுதியில் மாவை நித்தி, மேற்சொன்ன கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் மேற்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் அங்கு நீண்ட காலம் இயங்கி வந்த தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நடத்தி வந்த கலைவிழாவில்தான் முதல் முதலில் சந்தித்தேன்.

அந்தச்சங்கம் நுட்பம் என்ற சிறந்த கலை, இலக்கிய, விஞ்ஞான ஆய்வு மலரையும் வெளியிட்டு வந்தது. அதிலும் மாவை நித்தியின் ஆக்கங்கள் வெளிவந்தன.

நித்தி,  தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி என  பரவலாக அறியப்பட்ட அம்பிகை பாகரின் மாணாக்கர்.

பாட நேரங்களையடுத்து வரும் இடைவேளையின்போது,   தான் எழுதிய கவிதைகளை அம்பி மாஸ்டருக்கு காண்பித்து, அவரது செம்மைப்படுத்தலின் பின்னர் இதழ்களுக்கு அனுப்பினார்.  அதனால், அம்பி மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவராகவும் பின்னாளில் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.

சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மெல்பனில் மாவை நித்தி,  பாரதி பள்ளியின் வளாகத்தை தொடக்கியபோது சிட்னியில் வதியும் அம்பி அவர்களை அழைத்து பாரதி பள்ளியை அங்குரார்ப்பணம் செய்ய வைத்தார்.

மாவை நித்தி கவிஞராகவும் நாடக எழுத்தாளராகவும் இயக்குநராகவும்  நன்கு அறியப்பட்டிருந்தாலும், சிறுகதைகளும்,  புனைவு சாரா பத்தி எழுத்துக்களும் எழுதி வந்திருப்பவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியன மல்லிகை இதழில் ஒரு சில சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதில் லண்டன்காரன் என்ற சிறுகதை அக்காலப்பகுதியில் சிலாகித்து பேசப்பட்டது.  அதேசமயம் இலங்கையில் புகழ்பூத்த சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை நேரில் சந்தித்து நித்தி எழுதிய நேர்காணல் கட்டுரை மல்லிகையில் வெளிவந்தது.  அந்த சந்திப்புக்கு இவருடன் சென்றவர்தான் மெல்பனில் வதியும் இவரது பல்கலைக்கழக நண்பர் தில்லைக்கூத்தன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட சிவசுப்பிரமணியம்.

பொற்புடை இறையினைப் பற்றியே பிடித்திடு !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா




தர்மத்தின் வாழ்வுதனைச்
சூது கவ்வும்
தர்மமே தலைநிமிர்ந்து
சூது மாழும்
நல்லவைகள் நல்லவர்கள்
யாரும் நோக்கார்
நாளாகும் வேளையவர்
உணர்ந்தே  கொள்வார்

கொள்வார்கள் பலருள்ளும்
சிலரே வாழ்வில்
தெள்ளியராய் உள்ளமுடன்
சிறந்தே நிற்பார்
கள்ளமுடை நினைப்பதனை
மனத்தில் கொள்வார்
பள்ளமதை நோக்கியே
பார்த்தே நிற்பார்

நிற்பார்கள் பலபேரும்
நிலைத்தே நில்லார்
நெஞ்சமெலாம் இருளாக்கி
கரந்தே நிற்பார்
கற்பதையும் கருத்தாக
கணக்கிற் கொள்ளார்
கயமையினை முதலெனவே
வரவில் வைப்பார்

வைப்பதனை மனமிருத்தி
மகிழ்வு கொள்வார்
மற்றவரின் துயரெதையும்
நினைவில் வையார்
கண்ணீரின் நிலையதையும்
கருத்திற் கொள்ளார்
கருணையதை இருப்பதையும்
நினைத்தே பாரார்

பாராமல் பலவற்றைப்
பார்த்தே நிற்பார்
பாதகமாய் இருக்குதென்று
மனத்தே கொள்ளார்
நீதியற்ற செயலென்று
நினைக்க மாட்டார்
நிட்டூரம் நெஞ்சத்தில்
நிறைத்தே நிற்பார் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 40 எழுத்துலகில் அடையாளமும் அங்கீகாரமும் ! முருகபூபதி


எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) தொடரில் கடந்த வாரம் வெளியான 39 ஆவது அங்கத்தை ஏராளமானவர்கள்  பார்த்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

அந்த எண்ணிக்கை  அறுநூறையும் கடந்திருப்பது ஆச்சரிமானது என்று, இந்தத் தொடரை பதிவேற்றுபவர்களிடம் சொன்னபோது, தங்கள் முகநூலின் ஊடாகவும் இந்தத் தொடர் வெளியே பரவுகிறது எனச்சொன்னார்கள்.

என்னிடம் முகநூல் இல்லை !

கனடாவிலிருக்கும் மூத்த வானொலி - தொலைக்காட்சி


 ஊடகவியலாளர்,  எனது இனிய நண்பர் வி. என். மதியழகன், எனது அந்தப் பதிவை தனது முகநூலில் வெளியிட்டு  “ மூன்று  தலைமுறை ஒலிபரப்பாளர்களைக் கண்ட புகழ்பெற்ற எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நினைவலைகள்  “ என்ற குறிப்பினையும் பதிவேற்றியிருந்தாராம்.

இந்தத்  தகவலும்  சிட்னியில் வதியும் இலக்கியச்  சகோதரி வசுந்தரா பகீரதன் எனக்குச்சொல்லித்தான் தெரியும். இவர்  வீரகேசரியில் எம்மோடு பணியாற்றியவர்.

இறுதியாக சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்விலும் தனது கணவருடன் வருகை தந்து சிறப்பித்தவர்.

முகநூலில் எத்தனை  “ லைக்  “ கிடைக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் முகநூல் எழுத்தாளர்கள் பலரை அறிவேன்.  பார்ப்பவர்கள், பார்ப்பதோடு மாத்திரம் நின்றுவிடுகிறார்களா..? அல்லது படிக்கவும் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை.

மதியழகனின் குறிப்பினை எனக்கு அனுப்பியிருந்த வசுந்தரா, எனக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்திருந்தார்.

எம்மோடு வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய கீதா அந்தோனிப்பிள்ளை கடந்த மார்ச் மாதம் கொழும்பில் மறைந்துவிட்டார் என்பதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி.

கீதா 1960 ஆம் ஆண்டு பிறந்தவர். வவுனியா இறம்பைக்குளத்திலிருந்து வீரகேசரி பத்திரிகைக்கு பிரவேசித்தார்.  எனது மேசைக்கு அருகில் அமர்ந்து புன்னகை தவழ்ந்த முகத்தோடு பேசும் அவர்,  நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் கடிதத் தொடர்பிலிருந்தார்.

அவருக்கு திருமணம் நடந்தது. அத்துடன் ஆசிரியர் பணியிலும் இணைந்தார்.  ஆற்றல் மிக்க கீதா. அற்பாயுளில் மறைந்துவிட்டார்.

கீதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொண்டே இந்த 40 ஆவது அங்கத்திற்குள் பிரவேசிக்கின்றேன்.

நண்பர் வி. என். மதியழகன் குறிப்பிட்டிருக்கும்  “ புகழ் பெற்ற  “ என்ற சொற்பதம்தான் கொஞ்சம் நெருடுகிறது.

நாம் புகழுக்காக இந்தத் துறைக்குள் வந்தவர்கள் அல்ல.  எமக்குத் தெரிந்த தொழிலைச்செய்ய வந்தவர்கள்.  அண்மையில் ஒரு அரச  வானொலி  ஊடகத்தின் ஊடகவியலாளர் என்னை நேர்காணல் செய்தபோது,  கேட்ட  ஒரு கேள்வியும் நெருடலாகவே இருந்தது.

அவர்,  “ நான் அவுஸ்திரேலியாவில் அங்கம் வகித்திருக்கும் அமைப்புகளின் பெயர் பட்டியலை சொல்லிவிட்டு, இத்தனை அமைப்புகளில் இருந்திருக்கிறீர்கள், ஓடி ஓடி இலக்கியம் பேசியவாறு பொதுப்பணிகளில் ஈடுபடுகிறீர்கள்.  இருந்தும் உங்களுக்குரிய சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்ததுண்டா..? “  எனக்கேட்டார்.

முதல் சந்திப்பு யாழ். சிறையில் அடைபட்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன் முருகபூபதி


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஊடாக பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிந்துகொண்டேன்.

அத்துடன் தமிழக முற்போக்கு இலக்கிய இதழ்கள் சரஸ்வதி, தாமரை முதலானவற்றில் எழுதிய படைப்பாளிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன்.

அவர்களில் ஒருவரான எச். எம். பி. மொஹிதீன் பற்றி ஜீவா சொன்ன செய்திகள் வியப்பூட்டுவதாக இருந்தது.

இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர் எனவும், 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சியையடுத்து  கைதாகி சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் ஜீவா சொன்னார்.

யாழ்ப்பாணம் சிறையில் அக்காலப்பகுதியிலிருந்தவர்களில்


ஒருவர்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான ரோகண விஜேவீரா.  மற்றவர் எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன்.

ரோகண விஜேவீரா, தென்னிலங்கையில்  சிங்கள இளைஞர்களை எழுச்சிகொள்ளச்செய்து ஆயுதக்கிளர்ச்சியை மேற்கொண்டமைக்காக கைதானவர்.

ஆனால், மொஹிதீன் எழுத்தாயுதம் ஏந்தியமையால் கைதானவர் என்பதை தெரிந்துகொண்டேன்.

வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை மொஹிதீனும்  அவர் மூலமாக அவரது நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர்.

1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு  வடகொரியாவின் சித்தாந்தங்களும் காரணமாக இருக்கலாம் என அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசின் புலனாய்வுப்பிரிவு தீர்மானித்ததன் விளைவுதான் எச். எம். பி. மொஹிதீனின் சிறைவாசம்.

எச்.எம்.பி. கைதானதும் பல வதந்திகள் உலாவத் தொடங்கின. அவரது விரல் நகங்களில் ஊசிகள் ஏற்றப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து அவர் திடீரென விடுதலையானதுமே முதலில் அவர்  யாழ். கஸ்தூரியார் வீதியில் இயங்கிக்கொண்டிருந்த மல்லிகை காரியாலயத்தில் டொமினிக் ஜீவாவை தேடிச் சென்றார். பின்னர் கொழும்பில் வசித்த தனது மனைவி பிள்ளைகளுக்காக யாழ்ப்பாணம் மாம்பழம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

காசேதான் கடவுளடா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து புகழ் பெற்ற ஏ வி எம்


புரடக்சன்ஸ் நிறுவனம் 1972ம் வருடம் நகைச்சுவை படம் ஒன்றை தயாரித்தது.ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மேடை நாடகங்களை படமாக்கி வெற்றி பெறுவதில் திறமை பெற்றிருந்த ஏவி மெய்யப்ப செட்டியார்,நாடகமாக நடிக்கப் பட்ட காசேதான் கடவுளடா நாடகத்தை அதே பெயரில் படமாக தயாரித்தார்.நாடகத்தை எழுதிய சித்ராலயா கோபு படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் வசனகர்த்தாவாகவும் உதவி டைரக்டராகவும் நீண்ட காலம் பணியாற்றிய கோபுவுக்கு இப் படத்தின் மூலம் முதல் முதலாக டைரக்டராகும் வாய்ப்பு கிட்டியது.


செல்வந்தரான சிவசாமியின் இரண்டாவது மனைவியான லஷ்மி தன்

கணவனையும் , மூத்த தாரத்தின் பிள்ளைகளையும் அடக்கி ஆள்கிறாள்.அதே சமயம் தன்னுடைய ஆடம்பர செலவுக்கு பணத்தை வாரி இறைக்கிறாள்.செலவுக்கு பணம் இல்லாமல் தடுமாறும் சிவசாமி,மகன் ராமு,மாலி,ஆகியோர் அப்பாசாமி என்ற போக்கிரியை ,போலி சாமியாராக்கி அவன் உதவியுடன் லக்ஷ்மியின் பணத்தை கொள்ளையிட திட்டமிடுகிறார்கள்.இதற்கிடையில் லக்ஷ்மிக்கு காரியதரிசியாக வரும் ரமாவுக்கும் ராமுவுக்கு இடையே காதல் உருவாகிறது. அதே சமயம் மனநலம் குன்றிய ரமா என்ற பெண்ணும் தன் தந்தையுடன் சிவசாமியின் வீட்டிற்கு வந்து சேர்கிறாள்.


பொதுவாக ஒரு படத்தில் ஏதாவது ஒன்றோ இரண்டோ கதாபாத்திரங்கள் அசடுகளாக வருவதுண்டு.ஆனால் இந்தப் படத்தில் வரும் எல்லா பாத்திரங்களும் அசடுகளாகவும்,பித்துக்குளிகளாகவும் வருகிறார்கள்.நகைச்சுவை என்ற பெயரில் அனைவரும் கிறுக்குத்தனமாக இயங்குகிறார்கள்.ஓரளவு நிதானமாக வருபவர் லட்சுமியாக வரும் மனோரமாத்தான்.அழகாகவும் இளமையாகவும் காட்டியளிக்கும் மனோரமா இந்தப் படத்தினில் மிடுக்காக நடிக்கிறார்.கதாநாயகி லஷ்மியின் நடிப்பு கூட மனோரமாவுக்கு பிறகுதான்.

மவுஸ் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்


காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.

செய்தி இதுதான்.

|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|

எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

 

ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

 

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ? அவதானி

இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சிறந்த கதை சொல்லி.


அவர் சொன்ன கதைதான் இது:-

ஒரு  காட்டில் வாழ்ந்த முனிவர்,  தனது சீடரான மற்றும் ஒரு முனிவரிடம் ஆசிரமத்தை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது அந்த சீடர் ஒரு சிறிய கோவணத்துண்டுடன்தான் இருந்தார். ஒரு நாள் அந்தக்  கோவணத்துண்டை  எலி கடித்துவிட்டது.  அந்தக் காட்டில் வாழ்ந்த காட்டு வாசிகள் அவரது நிலையை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு,  எலியை பிடிப்பதற்காக ஒரு பூனையை கொண்டுவந்து கொடுத்தார்கள்.

அதற்கு தினமும் பால் தேவைப்பட்டது. அந்தச்  சீடர் மக்களிடம்


சொன்னார். அவர்கள் ஒரு பசுவையும் கன்றையும் அவருக்கு வழங்கினார்கள்.  அவர் பசுவிலிருந்து பால் கறந்து பூனைக்குத் தந்தார்.

பசுவுக்கு தினமும் புல்லும் புண்ணாக்கும் தேவைப்பட்டது. அத்துடன் அதனை பராமரிக்க ஆளும் தேவை என்றார் சீடர்.

உடனே மக்கள் அவருக்கு ஒரு வேலையாளை நியமித்தார்கள். அவனோ தனக்கு பசியெடுத்தால்  உணவு வேண்டும் என்றான்.


அவனுக்கு சமைத்துப் போடுவதற்காக ஒரு பெண்ணை அந்த மக்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தத்  தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன.

நாட்கள்,  வாரமாக மாதமாக வருடங்களாக கடந்த பின்னர், வெளியூர் சென்றிருந்த முனிவர் திரும்பி வந்தார். தனது சீடருடன் ஒரு பூனை, ஒரு பசுமாடு கன்றுக்குட்டி, அவற்றை பராமரிக்க ஒரு குடும்பம், அவர்களுக்கு பிள்ளை குட்டிகள். இத்தனை பரிவாரங்களை பார்த்ததும்,  முனிவர் கேட்டார்,       என்ன சீடரே… நான் உம்மை இங்கே விட்டுச்செல்லும் போது நீர் மாத்திரம்தானே இருந்தீர்.. இப்போது என்ன நடந்தது…?  

   சுவாமி எல்லாமே இந்த கோவணத் துண்டுக்காகத்தான்.  என்றார் சீடர்.

எங்கள் நாட்டில் தமிழ் மக்களுக்காக அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் அந்த சீடரின் நிலையில்தான் இருக்கிறார்கள் போலத்தெரிகிறது.

இவர்களின் தலைவர்கள் எனச்சொல்லப்பட்டவர்கள் பலர் இன்றில்லை. அவர்கள் மேல் உலகம் சென்றுவிட்டனர். அவர்களும் அந்த பெரிய முனிவர்போன்று திரும்பி வந்தால், தங்கள் சீடர்களைப்பார்த்து -  ஏன் இவ்வாறு ஆட்களை கூட்டிவைத்துக்கொண்டு, ஆளையாள் கடித்து குதறிக்கொண்டிருக்கிறீர்கள்…? என்றுதான் கேட்பார்கள்.

சிலவேளை நீங்கள் காட்டிய வழியில்தான் நாமும் செல்கின்றோம். ஆனால், என்ன வித்தியாசம் என்றால் நாம் வார்த்தைகளை மோசமாக அள்ளி வீசுகின்றோம் என்பார்கள்.

ஒரு தமிழ்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி, தமிழ் தேசியக்கூட்டமைப்பினை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார்.

இது விபசாரத் தொழில் செய்பவர்களை மேன்மைப்படுத்துகிறதா..? அல்லது சிறுமைப்படுத்துகிறதா..? என்பது புரியவில்லை.

மேலைத்தேய நாடுகளில் விபசாரத் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டு, அந்த விடுதிகளில் வேலை செய்பவர்களை Sex Workers என அழைக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வாழும் நாட்டின் அரசுக்கு வரியும் செலுத்துகிறார்கள்.

அதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கள் பங்கில் உதவுகிறார்கள்.

ஆனால்,  எங்கள் அரசியல்வாதிகளான பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் எவரேனும் எங்காவது தொழிற்சாலைகளில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்களா..?

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 39 வானொலி – தொலைக்காட்சி ஊடகங்களும் நேர்காணல்களும் ! முருகபூபதி

பத்திரிகை ஊடகத்தில் பணியாற்றியிருக்கும் எனக்கு வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அவ்வாறு கிடைத்திருந்தாலும், அந்த வேலையை நான் சரியாகச்  செய்திருக்கமாட்டேன். எனக்குத்  தொழில் நுட்ப அறிவு பூஜ்யம். எனது அப்பா லெட்சுமணன் எனக்கு அடிக்கடி சொல்லும் வசனம்:  “ தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்  இது அவரது பட்டறிவு.

எழுத்தூழியத்தில் ஈடுபடத் தொடங்கிய நான் பெற்ற பட்டறிவினால், எக்காலத்திலும் இலக்கிய இதழ்கள் நடத்தப்போவதில்லை.  வானொலி – தொலைக்காட்சி ஊடகத்துறையில் வேலை செய்யப்போவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்.

எழுத்துத்தானே எனது தொழில். அத்துடன் நின்றுகொள்வோம் என்ற தீர்மானத்திற்கு எனது எழுத்துப்பணியின் தொடக்க காலத்திலேயே வந்துவிட்டேன்.

எனினும்,  எனது குரல் வானொலிகளில்  ஒலித்தது. எனது முகம் தொலைக்காட்சியில் தெரியவந்தது.

இலங்கை வானொலியில் எனது குரலை முதல் முதலில் ஒலிக்கச்செய்தவர் நண்பர் – இலக்கியத் திறனாய்வாளர்                          ( அமரர் ) கே. எஸ். சிவகுமாரன். இவர் எனக்கு வி. என். மதியழகனை அறிமுகப்படுத்தியதனால்தான்,  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வானொலி கலையகத்தின் படிக்கட்டில் நான் ஏறினேன்.

மதியழகன் என்னை அங்கே அழைத்து தலையில் Head phone ஐ பொருத்தியபோது,  அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.  அவர் இளைஞர்களுக்காக நடத்தி வந்த சங்கநாதம் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து பேசவைத்தார்.

எனது குரல் அன்று வானொலியில் ஒலித்தபோது, வீட்டிலே வானொலிப்பெட்டியும் இல்லை.  பக்கத்து வீட்டுக்குச்சென்றுதான்  கேட்டேன்.

எனக்கு 1976 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய விருது கிடைத்த செய்தியையும் அவ்வாறுதான், பக்கத்து வீட்டு வானொலியில் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன்.

பின்னாளில், இலங்கை வானொலியில் நண்பர் சண்முகநாதன்  வாசுதேவன், குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது,  அவரது அழைப்பில் சென்று பேசியிருக்கின்றேன். வீரகேசரி அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கிய பின்னர், வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி எழுதிக்கொண்டிருந்தபோது,  இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் வி. ஏ. திருஞானசுந்தரத்தை , கே. எஸ். சிவகுமாரன் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

இலங்கைச் செய்திகள்

பலாலி விமான நிலைய சேவை இவ்வருட இறுதிக்குள் உறுதி

'தாமரைக் கோபுரம்' பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி

 புலம்பெயர் இலங்கையருக்கான விசேட பணியகம் டிசம்பரில் திறப்பு

கொழும்பு - திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

பிணையில் இருக்கும் தனுஷ்கவுக்கு ஆஸி. இலங்கை செல்வந்தர் உதவி

அனைவராலும் ஏற்கக்கூடிய தீர்வை வடக்கிற்கு பெற்றுத்தர நடவடிக்கை

வட மாகாண காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு


பலாலி விமான நிலைய சேவை இவ்வருட இறுதிக்குள் உறுதி 

- யாழ். சென்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலைய சேவைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேக்கர தெரிவித்தார். 

உலகச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு 

'சீனாவுடன் பனிப்போர் இல்லை' ஷியை சந்தித்த பைடன் உறுதி

குடியேற்றங்களை அதிகரிக்க இஸ்ரேலிய கூட்டணி திட்டம்

விமானம் வீழ்த்தப்பட்டதற்கு மூவருக்கு ஆயுள் தண்டனை

ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் இருளில்

போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்து உக்ரைன் விசாரணை


ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு 

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்–அ–லாகோ எஸ்டேட்டில் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன், தான் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 24 “மொழிபெயர்ப்பெனும் மொழி விளையாட்டு”


நாள்:
         சனிக்கிழமை 26-11-2022       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

 “தமிழில்  பிரஞ்சு மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள்- ஒரு பார்வை –சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

 

“மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப்பிரச்சனைகள்” – க.பஞ்சாங்கம்

 

“தமிழில் மொழிபெயர்ப்புகளின் காலம் – ச.சத்தியதேவன்


“தமிழில் மொழிபெயர்ப்புகள்” - இராம.குருநாதன்

 

 ஒருங்கிணைப்பு: பா.இரவிக்குமார்

 

மேலதிக விபரங்களுக்கு:  - அகில்  001416-822-6316