நிம்மதியும் கிடைத்துவிடும் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா .

.


image1.JPG
                         நித்திரையத்  தொலைக்கின்றோம்  
                               நிம்மதியை  இழக்கின்றோம் 
                         முத்தமிட   குழந்தைவந்தால் 
                                மூர்க்கமாய் நோக்குகிறோம் 
                         எத்தனையோ வழிகளிலே 
                                  சொத்துச்சேர்க்க விளைகின்றோம் 
                         என்றாலும் எம்மனதை 
                                  ஏன்மாற்ற விரும்பவில்லை 

                       பொய்பேசும்  கூட்டத்தை
                             மெய்யென்று  நம்புகிறோம்
                       பொறுப்பற்றார் நட்புதனை 
                               புகழென்றே எண்ணுகிறோம் 
                       புத்திசொல்லும் பெரியோரின்
                               பக்கம்செல்ல மறுக்கின்றோம்
                        இத்தனையும் பிழையென்று
                                 ஏன்மனது சொல்லவில்லை 

                      இறைபக்தி  மனமிருத்தி 
                           எம்மனதை  மாற்றிடுவோம்
                      நிறைவான குணமுடையார்
                              நெருக்கமதை ஏற்றிடுவோம்
                      குறைவான விடயங்களை
                              குழிதோண்டி புதைத்திடுவோம் 
                     நெறியுடனே நாம்வாழும்
                               நிம்மதியும் கிடைத்துவிடும் 
                             

சைவ மன்றம் - சனி பிரதோஷம் 19/01/2019









யாழ் இந்துக்கல்லூரியின் பொங்கல் விழா

.
யாழ் இந்துக்கல்லூரியின் பொங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பெண்டலகில்  civik  park இல் இடம்பெற்றது . பலபாடசாலைகள் இங்கு இணைத்து இந்த பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்

படப்பிடிப்பு அலோசியஸ் ஜெயச்சந்திரா 



பேட்டை பார்த்தேன். - செ .பாஸ்கரன்


Image may contain: 1 person, smiling, closeup

.

நேற்று நானும் பெட்டை பார்த்தேன் மன்னிக்கவும் பேட்டை பார்த்தேன். ரஜனியின் படம் என்றாலே திரை அரங்கிற்கு காசைக் கொடுத்து தலையிடியை வாங்க விரும்பாமல் போவதை தவித்துக் கொள்வேன். இம்முறை மிக ஆவலாக போனதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் என்ற இயக்குனர்.
முன்பெல்லாம் நடிகருக்காக இல்லாமல் இயக்குனர்களுக்காக படம் பார்த்த காலம் இருந்தது. பீம்சிங், ஸ்ரீதர் , பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் என்று. இப்ப இயக்குனர் மார் கூடி குப்பை கொட்டிக்கொண்டிருக்கினம் . அண்மைகால வரவுகளில கார்த்திக் சுப்புராஜ் , மிஸ்கின், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள். சின்ன நம்பிக்கை காட்டினார்கள்.
அதால தம்பி கார்த்திக் சுப்புராஜ் அண்ணா ரஜனிய என்ன ஆட்டு ஆட்டப் போறார் எண்டு நினைச்சுக்கொண்டு போனான் மனசில பாரதிராஜா சிவாஜிய முதல் மரியாதையில புளிஞ்சது போல இவரும் ரஜனிய புளிஞ்செடுத்துப் போடுவார், சிலவேள கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜனியோட இதுதான் கடைசிப் படமாக இருக்கும் எண்டு கன்னா பின்னா எண்டெல்லாம் கற்பனையை ஓடவிட்டுக் கொண்டு போகேக்க காரையும் ரோட் சைடில ஏத்திப்போட்டன்.
ரஜனி அருமையான நடிகன் , முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி இப்பிடி பல படங்களைச் சொல்லெல்லாம் .
அங்க போனா அனிருத்தின்ர அடியில காது கீதெல்லாம் அதிர்த்து போச்சு. சரி காதுக்க அடைப்பானப் போட்டு பார்க்க தொடங்கினான். அண்ணன் ரஜனியை ரோபோவால இறக்கி துப்பாக்கியோடை அலைய விட்டான் பொடியன் இந்தியன் ஆமி தோத்துப்போம், ரெண்டுகையால துவக்க சுழட்டிக்கொண்டு பொறி பறந்ததில மண்ட விறச்சுப்போச்சு.
கொஞ்ச நேரமாவது காளியா விடடிருந்தா பரவாயில்ல படம் இல்லாட்டியும் பகிடியாய் இருந்திருக்கும். பேட்டைய கொண்டுவந்து கொல்லத்துவங்கீற்றான்கள்
அமிதாப்பச்சன் எண்ட ஒரு நடிகன் இவற்ற வயதுதானிருக்கும் அவற்ற வசுக்கேற்ற மாரி அருமையான படங்கள் தாறார். குறிப்பா பிளாக். இவருக்கு பார்க்க நேரமிருக்காதுதானே அரசியல்லையும் சொதப்பவேணும்.
ரெண்டு வடிவான பெட்டையளின்ர பேர் டைடடில்ல போட்டிருந்தது. வந்தத கண்டனான் பிறகு காணேல்ல சரியா நடிக்க தெரியாதாக்கும் அனுப்பிப் போட்டினம்.
போனதே இயக்குநருக்காக நான் அவர விட்டுப்போட்டு அங்கால போயிற்றன். ஒரு நப்பிகையை தந்தவர் இந்த கார்த்திக் சுப்புராஜ்
பீட்சா, ஜிகர்தண்டா , இறைவி போல படங்களால அந்த நம்பிக்க தமிழ் மக்களுக்கு இருந்தது. கமலஹாசன் கூட இவர் மேல அந்த நப்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். வசூல் குவியுதாம் அதால இனி பல படங்கள் இவருக்கு கிடைக்கும் என்பது உறுதி . சங்கருக்கு அடுத்த இடம் கிடைக்கலாம் . ஆனா நெறியாள்கையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் துலைந்துவிட்டது எண்டதுதான் என்வருத்தம் .
படம் முழுக்க தேடிப்பார்த்தான் கார்த்திக் சுப்புராஜ காணயில்ல கண்டா சொல்லுங்கோ.
நடித்திருக்கிறவர் வில்லனாக வந்த நவாசுதீன் சித்திக் பாராட்டுக்கள்.
இது என்பார்வை மட்டுமே.

ஆன்மீக நூல்கள் வெளியீடு 24.01.2019

.

Counting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல் - கானா பிரபா

.


“நான் 1992 ஆம் ஆண்டில் பிறந்தவள், நான் பிறந்த நாள் தொட்டு தமிழர் என்றாலே புலிகள் அவர்கள் நமக்கு எதிரிகள் என்றே ஊட்டி வளர்க்கப்பட்டேன். ஆனால் இந்த நாடகத்தின் மேடைப் பிரதியைப் படித்ததும் என்னுள் இருந்த கருத்துருவாக்கம் மாறி விட்டது. வீணானதொரு அரசியல் கொள்கையால் இவ்வளவு அழிவுகளும், அனர்த்தங்களும் நிகழ்த்தப்பட்டுவிட்டனவே என்ற கவலை எழுகிறது, எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கோ, மகளுக்கோ நாம் ஒரு சிங்களவர் என்பதை விட இலங்கையர் என்ற பொதுமை நோக்கிலேயே வளர்ப்பேன்”
Count & Cracking நாடகம் முடிந்து பார்வையாளர் கேள்வி நேரத்தில் மேற் கண்டதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழுது விட்டார் இலங்கையில் இருந்து இந்த நாடகத்தில் பங்கேற்ற நடிகை நிபுணி ஷாரதா என்ற பெண்.
இந்தப் போர் நமக்கான எத்தனை வாய்ப்புகளை இழக்க வைத்து விட்டது என்று நடி கம்மல்லவீர என்ற மற்றோர் சிங்கள நாடகர் ஆதங்கப்பட்டார்.

டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் காலமானார்.

.

டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் நல்லடக்கம் நாளை (20.01.2019) காலை 10. 00 மணி அளவில். 99/7 Station Lane
Near Jaffna Railway Station
Jaffna எனும் விலாசத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள
St Konchachi Matha Cemeteryயில் நடைபெறும் என அவரது மகன் திலீபன் டொமினிக் ஜீவா அறிவித்துள்ளார். அன்னாரின் மறைவையினையிட்டு டொமினிக் ஜீவா அவர்களுடன், அவரது உடல் நலத்தை மனங்கொண்டு நண்பர்கள் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என் வேண்டப்படுகிறார்கள்.


படித்தோம் சொல்கின்றோம் : - முருகபூபதி

.


 நடேசனின் "எக்ஸைல்"  குறித்து ஒரு பார்வை
சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்
   
                                                                                        
" ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும்  தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்"
இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன.
அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் - பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்!
அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.
இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.  வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.
அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த  திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன்.

ஆஸ்திரேலியா சிட்னி மாநகரில் கும்பாபிஷேகம் 27/01/2019








பறை - நம் பாரம்பரியத்தில் அதற்கு நாம் கொடுத்த இடம் -- நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

.



இந்தப்பாடல் கோபாலகிருஷ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெறுகிறது.

நந்தனன் ஒரு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவன் என்ற சமூகத்தில் இருந்து வந்தவன். இவனுக்கோ சிதம்பரம் போக வேண்டும்; தில்லை, சிதம்பர நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. தாழ்த்தப்பட்டவர்கள் சிதம்பரம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத கால கட்டம் அது.

பேயாண்டி, மாயாண்டி, சின்னக்கறுப்பன் போன்ற காவல் தெய்வங்களையே தாழ்த்தப்பட்டவர்கலள் வணங்கிய காலம். இவன் வேலை செய்த பண்ணையாரோ ‘சிதம்பரமோ உனக்குச் சிதம்பரம்?’ எனத் திட்டுவார். தாழ்த்தப்பட்டவர்களின் எளிமையான ஆசைகளின் வெளிப்பாடாக இந்த நந்தனார் கதை கோபால கிருஷ்ண பாரதியால் எழுதப்பட்டது.

புலவர்களும் கவிஞர்களும் அக்காலத்தில் ஆதிக்கத்தில் இருந்த அரசனையோ அல்லது அதற்கு நிகராக வாழ்ந்த பெருங்குடியினரையோ பாடிப் பரிசில்களைப் பெறுவது வழக்கம். அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்களை; அவர்களது உனர்வுகளை தன்னையே அவனாகப் பாவித்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கோபால கிருஷ்ண பாரதி.

மகள் - சிறுகதை -- பிச்சினிக்காடு இளங்கோ

.




சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம்.
உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது.
என்னசொல்லியும் கேட்கவில்லை மனம்.
தீவு விரைவுச்சாலையில் வேகமாய் பயணிக்கும்போது மனம்மட்டும் தாவிச்சென்றுவிட்டது.
சாலை இருபுறமும் இருக்கும் செடிகள், வீடுகள், முன்னே போய்கொண்டிருக்கும் வாகனங்களனைத்தையும் கண்கள் நோட்டமிட்டாலும் மனம் பார்க்கச்சென்றது அம்மாவை.
 அம்மாவுக்கு வயது 90த்தாண்டியிருக்கும்.
தன்னம்பிக்கையும் தைரியமும்  அம்மாவின் அடையாளங்கள்.
அவை அம்மாவின் பலம்.
இந்த வயதிலும் தன்னைப்பார்த்துக்கொள்வதில், தனக்கு வேண்டியதைத் தானே செய்துகொள்வதில்  அம்மாவுக்கு தனி அக்கறை உண்டு
.அம்மாவுக்கு இப்போது காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவதில்லை.
 கிட்டே சென்று சைகைகாட்டினால் புரிந்துகொள்ளும்.
இல்லையென்றால் அம்மாவின் விருப்பப்படி பேச்சு தொடரும். வேண்டியவர்களின் பெயர்களையெல்லாம் சொல்லும் கண்முன்னே இருப்பவர்களைத்தவிர.
திசையைக்காட்டினால் அத்திசையில் உள்ளவர்களையெல்லாம் சொல்லும். திசையை அருகிலும் தொலைவிலும் சைகையால் காட்ட அதற்கு ஏற்றாற்போல் நினைவில் இருப்பவர்களையெல்லாம் சொல்லும்.
எதிரே இருப்பவரைமட்டும் எளிதில் சொன்னதில்லை.
இறுதியாக எதிரே இருப்பவரைச்சொல்லிமுடிக்கும்போது ஒரு நாடகம் நடந்து முடிந்ததுபோல் ஆகிவிடும்.
அப்புறம்தான் ஒரு நிம்மதி. தொடர்ந்து விசாரிப்பும் விசாரணையும் நிகழும். எவ்வளவுதான் மருமகள் கவனித்தாலும் ஒரு குறையைச்சொல்லிவிட  அம்மா மறந்ததில்லை.  மூத்தமருமகளின்  கவனிப்பில்தான் அம்மாவின் ஆயுள் நீடிப்பது உண்மை. இது அம்மாவின் அடிமனத்தில் இருக்கும் ரகசியம்.
ஆனால், இதை அம்மா எளிதாக வெளிக்காட்டியதில்லை.
 அவ்வப்போது உறவினர் வீட்டு நிகழ்வுகளில் ஒருநாள் இருநாள் தங்கும்போதுதான் மூத்த மருமகளின் கவனிப்பும் உணவும் அம்மாவின் நினைவுக்கு வரும்.

இலக்கிய அறிவு 2 - படித்ததில் பிடித்தது - கலைஞானி


siragu-nedunalvaadai1

.

நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !! வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி 

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினியகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து!

பத்துப்பாட்டில் ஏழாவதாக திகழும் நூல் நெடுநல்வாடை. இது தலைவன் போர்ப் பாசறையில் இருக்கும்போது தலைவி அவன் வரவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நூலில் அகப்பொருள் பற்றிய செய்திகள் நிறையாக இருப்பினும் இது புறப்பொருள் நூலாயிற்று. ஏனெனில் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்பொருள் நூலாயிற்று.
இந்த நூலை இயற்றியவர் நக்கீரனார் எனும் நல்லிசைப் புலவர். இவரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர். இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்தயவர் என்று அறியப்படுகின்றது.
பதித்துப்பாட்டில் முதலாவதாக வைத்துக் கூறப்படும் திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. மேலும் அகநானூறு, முதலிய தொகை நூல்களுள்ளும் இவர் இயற்றிய செய்யுள்கள் பல உள்ளன. கைலைபாதி காளத்திபாத்தியந்தாதி, இறையனார் அகப் பொருளுரை, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், நாலடி நாற்பது என்னும் நூல்களும் இவர் இயற்றிய நூல்களே.

வாசகர் முற்றம் - அங்கம் - 02 - முருகபூபதி

.



"தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்"

 மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்

                                                                                             
கன்னட இலக்கியம் அறிமுகம்

பழங்காலம் (600 - 1200)
கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.
இடைக்காலம் (1200 - 1700)
போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை  வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம்,  விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.
தற்காலம் (1700 - இன்று)
18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இயக்கம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. (ஆதாரம்: தமிழ் விக்கிபீடியா)