ஹோம்புஷ் தமிழ்க கல்வி நிலையத்தின் 37 வது ஆண்டுக் கலை விழா

 .

ஹோம்புஷ் தமிழ்க கல்வி நிலையத்தின்  37 வது  ஆண்டுக் கலை விழா சனிக்கிழமை 01.06.2023 அன்று இடம் பெற்றது. நிர்வாக குழுத்தலைவியாக கார்த்திகா ஜெயகனேஷ் அதிபராக  திருமதி புவனேஸ்வரி புருசோத்தமர் இவ்வருடம் இந்நிகழ்வை நிர்வாகக் குழு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் 

உதவியுடன் சிறப்பாக நடத்தி இருந்தார்கள். கொட்டும் மழையிலும் விழா சிறப்பாக அமைந்ததிற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இன்றி அமையாததாக இருந்தது.

நிகழ்வில்  எடுக்கப்பட்ட சில படங்கள் மட்டும் கீழே உள்ளது. கல்வி நிலையத்தால். புகைப்படமும் தகவலும் வரும்போது பின்னர் தரப்படும்.  


அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளரும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முன்னாள் அதிபருமான கதிர் பாலசுந்தரம் விடைபெற்றார் ! யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாற்றை ஆவணப்படுத்தியவர் !! முருகபூபதி


எழுத்தாளரும் ,  தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபரும், சமூகச்செயற்பாட்டாளருமான கதிர். பாலசுந்தரம் அவர்கள் கனடாவில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை  கனடா பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான வ. ந. கிரிதரன் மூலம் தெரிந்துகொண்டேன்.

இதே கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கவிஞர் அம்பி அவர்களும் கடந்த ஏப்ரில் மாதம் இறுதியில் சிட்னியில் மறைந்துவிட்ட துயரத்தினையடுத்து, நாம் சந்திக்கும் மற்றும் ஒரு துயர்  நிகழ்வுதான் கதிர். பாலசுந்தரம் அவர்களின் மறைவு.

எனினும், இவர்கள் இருவரும் வாழும் காலத்திலேயே இவர்கள் பற்றிய


பதிவுகளை எழுதியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன்  இவர்களின் நினைவுகளை மனதில் போற்றி வருகின்றேன்.

ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில் தோன்றிய இருபாலாரும் கல்விச்  செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பளையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை நூலை உருவாக்கியவர்தான் கதிர். பாலசுந்தரம்.

இந்த ஆவணம், எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது. மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களையும்  கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

 "எல்லாம் கடந்துபோகும்" என்பது வாழ்வின் தத்துவம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன்.

 கதிர் பாலசுந்தரம் அவர்கள் எழுதிய  தங்கத்தாரகை  எமது தமிழ் மக்கள் சந்தித்த ஐந்து காலகட்டங்களையும் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்கு பின்னர் வந்த காலமும், போர்க்காலமும், அதற்குப்பிற்பட்ட சமகாலமும், மக்கள் அந்நியம் புலம் பெயர்ந்த காலமும் அதன் பின்னர் தொடரும் காலமும் சித்திரிக்கப்படுகிறது. 425 பங்கங்களில் இக்காலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் அவற்றை ஆவணப்படுத்தியுமிருக்கிறது.

மண்குடிசை மக்களன்றோ மாடிவீட்டின் அத்திவாரம் !

 








மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

 

 ஓலைக் குடிசைக்குள் 

        உட்கார்ந்து இருந்தாலும்

 காலுக்குச் செருப்புமின்றி

      கல்லுமுள்ளில் நடந்தாலும்

ஆளுக்கு ஆள்நல்லாய்

     அன்புகாட்டும் பண்பெல்லாம்

மாடிக்குள் வந்திடுமா

     மனதிலெழும் கேள்வியது



கூழையே குடிப்பார்கள்

   குதூகலமாய் இருப்பார்கள்

நாலுகாசு கிடைத்தாலும்

    நல்லாத்தான் மகிழ்வார்கள்

காரென்றும் வீடென்றும்

     கணக்கின்றி வைத்திருப்பர்

மாடிவீட்டு ஏழைகளாய்

     வாழ்ந்திடுவார் என்னாளும்

பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே !


 










மகாதேவஐயர் 
 ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 


     ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து

     நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்

     ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே

     வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்


     எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்

     எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே

     நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை

     எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்


     நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது

     நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்

     பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக

     நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

தமிழ் தேசம் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைக்குள்" கலம் மெக்ரே அவர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின செய்தி

 https://youtu.be/HK_WAZkqjfg



15 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லைகுற்றங்கள் இன்று வரை தொடர்கின்றதுஇதனால் உயிர் பிழைத்தோருக்கும்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் பெரும் மன உளைச்சலை கொடுக்கின்றது.

இவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றதுதமிழ் மக்களின் தாயகம்அரச பயங்கரவாத பாதுகாப்பு படையினரால் கொடூர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுஉண்மை கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன் .நா.மனித உரிமை கழகத்தில் நாம் ஆவணப் படம் ஒன்றினை வெளியிட்டிருந்தோம். 2009இல் இடம்பெற்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு பொறுப்பு கூறல்மனித உரிமைகள்நீதியை நிலைநாட்டல் என்ற அடிப்படைகளைக் கொண்ட நிலையான அமைதிக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறியிருந்தோம்.

2009 இல் நடந்த குற்றங்கள் போன்று இப்போது காசாவிலும் நடைபெறுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றோம்.

மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் "மீண்டும் ஒருமுறை வேண்டாம்" (Never again), நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கூறிய கலம் மெக்ரே அவர்களின் முள்ளிவாய்க்கால் உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.






மணல் திரைப்படம் அமைதியாக இருந்து ஆழமான விடயத்தை சொல்லிய தமிழ் திரைப்படம்- செ பாஸ்கரன்

 .

மணல் திரைப்படம் அமைதியாக இருந்து ஆழமான விடயத்தை சொல்லி சென்ற இலங்கை தமிழ்த் திரைப்படம்


இன்று சிட்னி ரீடிங் சினிமாவில் திரையிடப்பட்ட மணல் திரைப்படத்தை பார்க்கக்

கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இயக்குனர், திரைக்கதை  எழுத்தாளரான விசாகேச சந்திரசேகரத்தின் தயாரிப்பில், விசாகேச சந்திரசேககர் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் நடிகர், நடிகைகளால் குறிப்பாக யாழ்ப்பாணத்து நடிகர்களையும், பின்னணி கலைஞர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம், பல விருதுகளை குறிப்பாக நெதர்லாந்து ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விசேட ஜூரி விருதினையும் வேறு பல விருதுகளையும் பெற்றிருந்த இத்திரைப்படம் என்பதாலும் இலங்கை தமிழ் திரைப் படங்களை தவறாது பார்ப்பவன் என்பதாலும் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டிருந்தது.


 திரைப்படத்தின் கதை ஒரு இலங்கையின் போர்க்காலத்துக்கு பின்பான ஒரு

கதையாகும். போராட்டத்திற்கு உதவிய ஒருவருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின்

கீழ் குற்றம் சாட்டப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய காணாமல்

ஆக்கப்பட்ட காதலியை தேடுகின்ற ஒரு கதையாக தான் இந்த கதை

அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கத்தியின் மேல் நடப்பது போல் மிக அழகாக

திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருந்தார் நெறியாளர்.


 பல பாத்திரங்கள் மவுனமாக பேசியது. மௌனம் பேச்சை விட மிகப்பெரிய ஆயுதம்

என்பார்கள் அது மிக அழகாக கையாளப்பட்டிருந்தது. இங்கே குறிப்பாக சொல்வதாக

இருந்தால். அவன் தேடிய தன் காதலியை கண்டு அவளுடன் கதைப்பதற்கு

எவ்வளவோ முயன்று பின்பு கதைக்கும் போது அவள் மௌனமாக விழிகளாலும்

உதடுகளாலும் மட்டுமே பேசுகின்ற காட்சி, அவளுக்கு ஏற்பட்ட கொடுமைகள்

எப்படி இருந்திருக்கும் என்பதற்கு அவள் எந்த மொழியையும் பேசாமல்,

கற்பழிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை

அந்த மொழி மூலமும், அவளுடைய கையில் அவன் வளையல்களை அணிவிக்கின்ற

போது காட்டப்பட்ட வெட்டு காயம் மூலமும், மிகப்பெரிய விடயத்தை பேசியிருக்

கின்றார் நெறியாளர் என்று தான் கூற வேண்டும்.


அதேபோல் இன்னொரு பக்கமாக துரோகி என்று அழைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக

காட்டப்பட்ட ஒரு காட்சி எந்த இடத்திலும் கொல்லப்பட்டதாகவோ அல்லது

காட்சியாகவோ காட்டப்படாமல் மிகப்பெரிய விடயத்தை ஒரு பிளாஸ்டிக் பை என்ற

பையை வைத்துக்கொண்டு குறிப்பிடுகின்றார், இது எல்லாம் மனித நேயம்

உள்ளவர்களால் மாத்திரம் தான் இப்படியாக கொடுமைகளை மிக நாசுக்காக

சொல்ல முடியும். பார்ப்பவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது

நெறியாளருடைய நெறியாள்கையில் தெரிகின்றது. இப்படி ஒவ்வொரு விடயமும்

மிக அழகாக நகர்த்திச் செல்லப்படுகின்றது.

பூம்புகார் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழகத்தின் முதலமைச்சராகவும், தி மு காவின் தலைவராகும்,


பிரபல திரைப்பட வசனகர்த்தாவாகவும் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3ம் தேதியாகும். இளம் வயதிலேயே வசனகர்த்தாவாகி புகழ் பெற்ற இவர் வசனம் எழுதி தயாரித்து வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் பூம்புகார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழில்

இரண்டு முறை படமாக்கப்பட்டுள்ளது. 1944ல் ஜுபிடர் பிக்சர்ஸ் கண்ணகி என்ற பேரில் பி யு சின்னப்பா, கண்ணாம்பா நடிப்பில் இதனை தயாரித்தார்கள். இப் படத்துக்கு இளங்கோவன் எழுதிய வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி கண்ணாம்பா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஆரம்பம் முதலே சிலப்பதிகாரம் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி மீண்டும் இக் காவியம் திரைப்படமானால் அதற்கு தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என்று நாட்டம் கொண்டிருந்தார். 50ம் ஆண்டுகளின் இறுதியில் ஏவி எம் செட்டியார் இதனை படமாக்க தீர்மானித்து அதற்கு கருணாநிதி வசனம் எழுதுவதென முடிவானது. அவரும் அவ்வாறே வசனம் எழுதி தயாராக இருந்தார். இந்த சமயத்தில் தான் கண்ணகி, கோவலன் கதையை அடிப்படையாக கொண்டு சிவாஜி, பத்மினி நடிப்பில் ஜுபிடர் பிக்சர்ஸ் தங்கப்பதுமை படத்தை தயாரிப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. அது தெரிய வந்தவுடன் ஏவி எம் சிலப்பதிகாரத்தை படமாக்குவதை கை விட்டார். ஆனாலும் கருணாநிதியை பொறுத்த வரை தனது முயற்சியை அவர் கைவிடுவதாக இல்லை.

திரை வசனத்தில் சிகரம் தொட்ட கலைஞர் கருணாநிதி!


 சுந்தரதாஸ்

ஆஸ்திரேலியா


பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் படங்களின் ரசனை மாறிக்


கொண்டே இருக்கும் என்பது கண்கூடு. அப்படியான ஒரு ரசனை மாற்றத்துக்கு 70வது ஆண்டுகளுக்கு முன்னர்

வழி கோலியவர் என்ற பெருமையை பெறுபவர் நூற்றாண்டு விழா நாயகனான கலைஞர் மு .கருணாநிதி. 1924ம் ஆண்டில் ஜூன் மாதம் 3 ம் தேதி திருவாரூர் , திருக்குவளை என்ற சிறு கிராமத்தில் பிறந்த கருணாநிதி நாடகத்துறையிலும், சினிமாத் துறையிலும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

தனது இருபத்து மூன்றாவது வயதிலேயே திரைப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லமை பெற்ற அவருக்கு முதல் வாய்ப்பு 1947ம் ஆண்டு தயாரான ராஜகுமாரி படம் மூலம் கிட்டியது. திரையுலகில் நுழைவதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த கருணாநிதிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு மாயாஜால கதையை கொண்ட ஒரு படத்துக்கு எழுதுவது தான். ஆனால் அதனை ஏற்க அவர் தயங்கவில்லை. மாயாஜால படத்தில் தன்னுடைய மாயாஜால எழுத்து திறனை வெளிப்படுத்தவே அவர் முனைந்தார். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ராஜகுமாரி அடைந்த வெற்றி தொடர்ந்து புராணப் படமான அபிமன்யுவுக்கு எழுதும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.


பிற் காலத்தில் கவிஞர் கண்ணதாசனே வியந்து குறிப்பிட்டது போல் , “அபிமன்யு படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்க முடியாத இன்பத் தமிழாகும்.ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள் , அண்ணன் செய்த முடிவைக் கண்ணன் மாற்றுவதற்கில்லை , கண்ணன் மனமும் கல்மனமோ, அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்கர வியூகத்தை அபிமன்யு துளைத்து விட்டான் என்றால் அங்கே தான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை போன்ற வீச்சான வசனங்களை எழுதி பலரையும் பரவசப்படுத்தினார் கருணாநிதி. தான் கொண்டிருந்த அரசியல் கொள்கைகள் எதுவாக இருந்த போதும் கிருஷ்ண பகவானுக்கும் வசனம் எழுத ஆரம்ப காலங்களில் அவர் தயங்கவில்லை. ஆனால் 1952ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரிகுமாரி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. படத்தின் கதாநாயகன் பார்த்திபன் கொள்ளையடிப்பதை நியாயப் படுத்தி வசனம் பேசினான். கொள்ளையடிப்பது ஒரு கலை , புலி ஆட்டைக் கொல்லாதிருந்தால், கொக்கு மீனை கொத்தாமல் இருந்தால் , பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருக்கலாம் என்று எஸ் ஏ நடராஜன் பேசும் கருணாநிதியின் வசனம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வசனங்களுக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்கள் புதிய ரசனைக்கு , மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்பதை கருணாநிதிக்கு உணர்த்தியது.

மும்முனை போட்டியில் தமிழரின் வாக்குகள்?

 May 30, 2024


தென்பகுதி தேர்தல் களம் கொதிநிலையடைந்து வருகின்றது. மும்முனை போட்டிக்கான வாய்ப்பே அதிகம் தென்படுகின்றது. இவ் வாறானதொரு சூழலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸ வுக்கும் இடையிலான கூட்டிணைவு தொடர்பிலும் உரையாடல்கள் நடைபெறுகின்றன என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதன் சாத்தியமின்மை தொடர்பான தகவல்களும் சமநிலை யில் வெளிவருகின்றன. எவ்வாறெனினும், தேசிய மக்கள் சக்தியின் செல் வாக்கு அதிகரித்துவரும் நிலையில் பிரதான இரண்டு போட்டியாளர்க ளின் ஒன்றிணைவு கட்டாயம் என்றும் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் கூற்று உண்டு. அதற்கு அமையவே விடயங்கள் இடம்பெறும். தற்போதைய நிலையில் சஜித் மற்றும் அநுரவே பிரதான போட்டி யாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், ரணிலின் வியூகங்கள் எவ்வாறு அமையும் என்பதே கேள்வியாகும். ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் அவரின் திறமை தொடர்பில் அனைவருமே அறிவர்.
எனினும், அவரின் அரசியல் வாழ்வில் ஒருமுறைகூட, மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக முடியவில்லை. 2005இல் அதற்கான வாய்ப்பு கிடைத்த போதிலும்கூட தமிழ் மக்க ளின் தேர்தல் பகிஷ்கரிப்பால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது. இவ்வாறானதொரு சூழலில் இது அவருக்கான கடைசி சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் எவ்வாறான உத்திகளையும் கையாளக்கூடும்.

இலங்கைச் செய்திகள்

யாழில். புகைத்தலுக்கு எதிராக போராட்டம்

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனி விசா தேவையில்லை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முடிவினை தரும் வரைக்கும் போராட்டம் தொடரும்

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு; 3 நிறுவனங்கள் விலைமனு கோரல்

ரூ. 3,329 மில்: வவுனியாவில் புதிய இருதய, சிறுநீரக நோய்ப் பிரிவு திறப்பு


யாழில். புகைத்தலுக்கு எதிராக போராட்டம்

May 31, 2024 2:28 pm 

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று (31) சங்கானை பஸ் நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

உலகச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல்: தாக்குதல்கள் உக்கிரம்

காசாவில் இஸ்ரேல்: இன்னும் ஏழு மாதங்கள் போரை தொடர திட்டம்

இஸ்ரேலுக்கெதிராக ட்ரெண்ட் செய்யப்படும் ‘All eyes on Rafah’ ஹேஷ்டேக்

 பப்புவா நியூ கினி நிலச்சரிவு; புதையுண்டோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது ரபாவில் உக்கிரம்: ஜபலியாவிலிருந்து வாபஸ்


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

- ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்கள் வெளியிடப்படும்

May 31, 2024 12:00 pm 

அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமி சன்னிதானம் பிரதிஷ்டை


 






சிட்னி இசை விழா 2024


 























சிட்னியில் நூல் வெளியீட்டு விழா - 09.06.2024


 



இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 39 “குரு அரவிந்தனின் படைப்புக்கள்”


 நாள்:         சனிக்கிழமை 15-06-2024       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

சிறப்புப் பேச்சாளர்கள்:

கலாநிதி மைதிலி தயாநிதி

வைத்திய கலாநிதி மேரி கியூரி போல்

கலாநிதி சு.குணேஸ்வரன்

திறனாய்வாளர் சி.ரமேஷ்

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316