முத்தமிழைத் துறக்காத முழுப்பேராளுமை விபுலானந்தத் துறவி !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

  ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி


தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய்கல்லூரி ஆசிரியராய்,   அதிபராய்தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து - 

 

"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல  உற்றுப் பெற்ற

பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "

என்னும் மனப்பாங்கினைப் பெற்று - என்கடன் பணி செய்து கிடப் பதே என்னும் விசாலித்த நோக்குடன் இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி  இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

நனவிடை தோய்தல்: 1983 கறுப்பு ஜூலையும் ஊடக வாழ்வு அனுபவமும் முருகபூபதி

தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு

இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள


மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப் படித்தார்களா..? என்பது தெரியவில்லை !

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச் சேர்ந்தேன்.


1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவரது பதவிக்காலத்தில்தான் 1958 இன்பின்னர்  மற்றும் ஒரு  கலவரம் வந்தது, அதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும்  அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது.

கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது.  அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர்,  “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால்   சமாதானம்   “  என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளி முரசறைந்தார். ஜே.ஆரின்  பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன.  அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும்  கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்கநேர்ந்தது.

திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..?

ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச்  சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான்.

ஜே.ஆர். அரசியலில் பழுத்த அனுபவசாலி.  சட்டம் படித்த பரீஸ்டர்.  அமைச்சராக -  ராஜாங்க  அமைச்சராக  - பிரதமராகவிருந்து ஜனாதிபதியானவர்.  அரசியலில் இராஜதந்திரி.

நினைவுகளில் வாழும் எழுத்தாளர் அருண் விஜயராணி நலிவுற்ற பெண்களின் குரலாக ஒலித்த ஆளுமை தாமரைச்செல்வி

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )


ஒருவர் வாழும் காலங்களில் எப்படி நடந்து கொண்டார்கள்?  அவர்களின் செயற்பாடுகள் எப்படி இருந்திருக்கிறன?  என்பதை வைத்தே அவர்கள் மறைந்த பின் நினைவு கூரப்படுவார்கள். அவர்களின் நினைவு என்பது அவர்கள் வாழ்ந்த காலத்தின் சாதனைப் பதிவாகவே கொள்கிறோம்.


அருண் விஜயராணியைப் பொறுத்த வரையில் அவர் பல்துறை

சார்ந்த ஆளுமை மிக்கவர். இனிய மனமும் இரக்க குணமும் சமூகத்தை நேசிக்கும் இனிய பண்பும் நிறைந்தவர். அவரைப்பற்றியும் அவர் அவுஸ்திரேலியாவில் செய்த இலக்கிய சமூக செயற்பாடுகளைப் பற்றியும் இங்குள்ளவர்கள் அனைவரும் அறிந்தே இருப்பார்கள். இலக்கிய உலகிலும் சமூக சேவைகளிலும் அவர் பதித்துச் சென்ற தடம் தனித்துவமானது
.

அவர் 1990  ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியத்  தமிழர்  ஒன்றியத்தின் கலாசாரச் செயலாளராக அங்கம் வகித்ததுடன் அவுஸ்திரேலிய முரசின் ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். இவருடைய படைப்புகள் மெல்பேர்ண், சிட்னி, பிரிஸ்பேர்ண் தமிழ் வானொலிகளிலும் ஒலி பரப்பாகியிருக்கின்றன.


2000  ஆம் ஆண்டு மல்லிகை இதழ் அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியிட்டபோது,  அதில் இவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதில் எழுதிய தொத்து வியாதிகள் என்ற சிறுகதையைத் தமிழகத்தின் கவிஞர் தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மட்டுமின்றி,  தான் விரிவுரையாளராக பணியாற்றிய சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் இக்கதை பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

இவருடைய கன்னிகாதானங்கள் என்ற சிறுகதைத்தொகுதி தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்த அட்டைப்பட ஓவியத்துடன் 1991 இல் மெல்பேர்ணில் வெளியீடு செய்யப்பட்டது.   குறிப்பிட்ட  கன்னிகாதானங்கள் தொகுப்பில் உள்ள கதைகளை கனடாவில் இருக்கும் சியாமளா நவரத்தினம் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

'காலம் அது மாற, கருத்ததுவும் மாறிடுமாம்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-


 

2018

உள்ளே வாராதே! உறுமித்தான் கடுகடுப்பாய் 
வள்ளென்று பாய்ந்திட்டார் வாத்தியார் - வல்லவனும்
பள்ளிக்கு வாராமல் நின்றதனால் பலர் அறிய
எள்ளித்தான் தண்டித்தார் இகழ்ந்து.

கையில் 'செல்' போனைக் கண்டதுமே ஆசிரியர்
தைதையெனக் குதித்தார் தணலெனவே- பையனவன்
காதைப்பிடித்துக் கடுகடுத்தார்  இனிக் கண்டால்
பாதையிலே போட்டுடைப்பேன் பார்!

முகம் மூடி வந்திட்ட முஸ்லீம் பெண் ஜஸ்மின்னை
அகம் நோக ஆசிரியர் அதட்டித்தான் - செகந்தன்னில்
வகுப்புக்கு வரும்போது வாசலிலே 'பர்தாவை'
உகுத்திட்டு வா! என்றார் உறுத்து!

முருகபூபதியின் “ கணங்கள் “ சிறுகதை விமர்சனக் குறிப்பு கலாநிதி செல்லத்துரை சுதர்சன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.



ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் முகத்தாற் சொல்கிறது, முருகபூபதியின் கணங்கள் என்ற சிறுகதை.

 

இதில், கணவன் அரச ஆயுததாரிகளால் காணாமலாக்கப்படுகிறான்


. கணவனை இழந்த குடும்பப்பெண், தன் கதையைச் சொல்கிறாள். கணவன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாது,  உளத் தேய்வுற்று, பின்னர் இறந்ததாக எண்ணி, கணவனை மகனில் கண்டு, அவனை வளர்க்கவே வாழ்வை ஓட்டுகிறாள் அவள். 

சொந்த உறவுகள் நிழல் தராதுபோக, மகனைத் தனக்கு அரண் ஆக்குகிறாள். மகனுக்காக வாழ்வுத் துயர் சுமந்து பயணிக்கிறாள். உறவுகளற்ற தன் மகனுக்கு, அப்பாவை இழந்த சிங்களச் சிறுவன் ஒருவன் உறுதுணையாக, அவள் மகிழ்கிறாள். அந்தச் சிங்களச் சிறுவனுக்கும் இவளே தாயாகிறாள். அவனும் அதை ஏற்கிறான். இதுதான் ‘கணங்கள்’ கதைச் சுருக்கம்.

 

இக்கதையில் மூன்று கருத்தியல்கள் முக்கியமானவை.

கோவிட் தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட விசேட பிரார்த்தனை - மூன்று நாட்கள்


 

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 51 சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ! “ எழுத்து சோறுபோடுமா…? “ எனக்கேட்ட தாத்தாவும், மகளை சினிமா நடிகருக்கு கொடுத்த ஆசிரியரும் !! முருகபூபதி


தமிழ்நாடு  திருநெல்வேலி மாவட்டத்தில் சாத்தூரில் ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய எனது அப்பாவின் அக்கா மகனான ஆண்டபெருமாள் மச்சான், என்னை அந்த மாவட்டத்தில் வதியும் எமது உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் சொன்ன செய்தி வேடிக்கையாகவும் இருந்தது.


உறவினர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது,  “ எங்கட கட்டியப்பாவின் மூத்த மகன்.  தாத்தாமாரைப்போல இவனும் ஒரு எழுத்தாளன்.  சிலோனிலிருந்து வந்திருக்கும் எங்க மாப்பிள்ளை    என்றார்.

எனக்கு யாவும் புரிந்தது. ஆனால், அது என்ன  “ கட்டியப்பா 

மச்சானும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தியவர்களும் சொன்ன கதை சுவாரசியமானது.

எங்கள் அப்பா, தனது தாயாரின் வயிற்றில் கருவாகியிருந்தபோது,   அறிகுறி தெரிந்தோ  தெரியாமலோ   அந்தப்பாட்டி,  தனக்கு வயிற்றில் ஏதோ கட்டி வந்திருக்கிறது  என்று சொல்லியிருக்கிறார்.  அப்பாவுக்கு முதல் ஒரு மகனும் மகளும்  அடுத்தடுத்து பிறந்திருக்கிறார்கள்.  மூன்றாவதும் வயிற்றில் வந்துவிட்டது என்று வெளியே சொல்ல     வெட்கப்பட்ட வர், முடிந்தவரையில்  மறைக்க முயன்றிருக்கிறார்.

பின்னர் உறவினர்கள்,  “ அடி பயித்தியமே… பிள்ளைப் பாக்கியத்தை ஏனடி மறைக்கிறாய்.  இப்படி நீ சொல்லிக்கொண்டிருந்தால், பிறக்கப்போவது ஆணா – பெண்ணா என்று பார்த்து கட்டியப்பா – கட்டியம்மா என்றுதான் உனது  பிள்ளையை அழைப்பார்கள்  “ என்றார்களாம்.

அப்பா பிறந்தவுடன் அந்தக்  கிராமமே ஐயம்பெருமாளுக்கு கட்டியப்பா பிறந்துவிட்டான் என்று சொல்லிச்சிரித்ததாம்.  அப்பாவின் தந்தை பெயர் ஐயம்பெருமாள் தொண்டமான்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம்


 

32-வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஆரம்பம்

 Saturday, July 24, 2021 - 6:00am

 33 விளையாட்டுகள்: மொத்தம் 339 தங்கப்பதக்கம்

ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் கடந்த 17ஆம் திகதி முதல் டோக்கியோவை சென்றடைந்த வண்ணம் உள்ளதுடன், பெரும்பாலான வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளான இன்று 24ஆம் திகதி சனிக்கிழமை பெரும்பாலான இலங்கை வீரர்கள் தமது முதல் சுற்றுப் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். இதற்கான போட்டி அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன, நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர் மற்றும் துப்பாகி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல ஆகிய மூவரும் தமது முதல் சுற்று போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

டெஹானி எகொடவெல

பெண்களுக்கான 10 மீற்றர் எயார் ரைபல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் முறையாக ஒலிம்பிக் வரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள டெஹானி எகொடவெல, இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக போட்டிகளில் களமிறங்கும் முதலாவது வீரர் ஆவார். இவரது போட்டி 24ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனிக்கா கபூர்

இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள மிகவும் வயது குறைந்த (17 வயது) வீராங்கனையான அனிக்கா கபூர், போட்டிகளின் முதல் நாளில் பெண்களுக்கான வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு தெரிவாகியுள்ள அனிக்கா கபூரின் போட்டியானது இலங்கை நேரப்படி 24ஆம் திகதி மாலை 3.55 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 2 பதக்கங்களை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடிமையாக வைத்திருந்த மெல்போர்ன் தம்பதியினர் சிறையில் அடைக்கப்பட்டனர்


ஒரு மெல்போர்ன் தம்பதியினர் ஒரு அடிமையை தங்கள் வீட்டில் மறைத்து வைத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் "அழுக்கு ரகசியம்" என்று விவரிக்கப்பட்டது.  குமுதினி கண்ணன் மற்றும் அவரது கணவர் கந்தசாமி ஆகியோருக்கு விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தண்டனை வழங்கப்பட்டது, அந்த பெண்ணை தங்கள் மவுண்ட் வேவர்லி வீட்டில் அடிமையாக வைத்திருந்ததற்காக.  திரு கண்ணன் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டபோது கண்ணனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைச்சாலையில் கழிக்க உத்தரவிடப்பட்டது.  2007 மற்றும் 2015 க்கு இடையில் ஒரு அடிமை மீது உரிமையின் உரிமையை வேண்டுமென்றே வைத்திருந்த மற்றும் பயன்படுத்தியதாக 53 வயதான பெண்ணும் அவரது 57 வயது கணவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். 

JOHN LOGIE BAIRD - - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணே சர்.

 .

இன்று நாம் வீட்டுக்கு வீடு வைத்திருக்கும் தொலைக்காட்சி மூலம் பல விந்தைகளைக் கண்டு வியக்கிறோம். எமது வாழ்வின் அன்றாட விஷயங்களில் இருந்து பிரிக்க முடியாததாக தொலைக்காட்சி இன்று அமைந்து விட்டது.ஆனால் இதை ஆக்கிய தந்தையான Logie Baird தனது ஆக்கங்களைப் பார்த்து வியப்பதற்கு உயிரோடு இருக்கவில்லை.

Logie Baird Scotland 
நாட்டின் Helensburgh  கைச் சேர்ந்த இளைஞர். இந்த இளைஞனின் கல்வி, பொழுது போக்கு, கனவு யாவும் ஒலி அலைகளை Radio Waves மூலம் வெகு தூரத்துக்கு அனுப்புவது எவ்வாறு என்பது பற்றியதாகவே இருந்தது. அலைகளை வெகு தூரத்துக்கு அனுப்பி அதனைப் பார்க்கவும் கூடியதாக ஆக்க முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

இரவு பகலாக இவன் இதற்காக உழைத்தான். மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது இதற்காகக் கடுமையாக உழைத்தான் Logie.

ஒரு நாள் ஓர் உயர்ந்த கம்பத்தின் மேலேறி சில சோதனைகளைச் செய்ய முற்பட்ட போது, பலத்த மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டான். இதன் பயனாக நோய்வாய்ப்பட்டு ஆறு மாதங்கள் வரையில் படுக்கையில் இருக்க நேர்ந்தது. இதன் போது அவனது கனவெல்லாம் தவிடுபொடியாகியது. இதனால் மிகவும் வருந்திப் புலம்பினான்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - இரு துருவம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 7

இந்தி திரையுலகில் முதலாவது சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டவர் நடிகர் திலீப் குமார் பிரிட்டிஷ் இந்தியாவின் பின்னால் துண்டாடப்பட்ட பாகிஸ்தானில் 1922ஆம் ஆண்டு பிறந்த இவர் 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்பப்பகுதியில் இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்து நட்சத்திர நடிகராக 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி னார். யூசுப்கான் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக திலீப்குமார் ஆனார். பிரபல நடிகையான மதுபாலாவை காதலித்த திலீப்குமார் அக்காதல் நிறைவேறாமல் போகவே தன்னைவிட 22 வயது குறைந்த சைராபானுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை 7ம் திகதி தனது 98வது வயதில் காலமான திலீப்குமார் தமிழில் உருவான மலைக்கள்ளன், எங்கவீட்டுப்பிள்ளை இரும்புத்திரை போன்ற படங்கள் இந்தியில் உருவான போது அவற்றில் நடித்து அப்படங்கள் வெற்றி பெற்றன.

இந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா தமிழில் தயாரித்த ஆலயமணி வெற்றிப்படத்தை திலிப் குமார் நடிப்பில் ஆத்மி என்ற பெயரில் தயாரித்தார். ஆனால் படம் வெற்றி பெறாததால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். இதனால் தான் கதை எழுதி தயாரித்து வெற்றிபெற்ற கங்கா ஜமுனா என்ற படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை இலவசமாக வீரப்பாவுக்கு வழங்கினார் திலீப்குமார். வைஜந்திமாலா நடித்த இந்தி படத்தை தமிழில் பிரபல ஜோடியாக அங்கீகரிக்கப்பட்ட சிவாஜி, பதமினி நடிப்பில் படமாக்கினார் வீரப்பா .

அவ்வாறு 1971 இல் தயாரான படம்தான் இருதுருவம். சிவாஜி பத்மினி இவர்களுடன் முத்துராமன், நாகேஷ், நாகையா, பண்டரிபாய் ஆகியோரும் நடித்தனர். படத்தை தயாரித்ததுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடித்தார் வீரப்பா

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள தமிழ்மொழியுரிமை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?

 Saturday, July 24, 2021 - 3:10pm

இந்நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம் இலங்கை அரசின் விருப்புடனோ அல்லது பாதிப்புக்குள்ளான தமிழர் தரப்பின் கோரிக்கைக்கமையவோ உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிவின்றித் தொடர்ந்த இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு காண இந்தியா தன்னிச்சையாக மேற்கொண்ட தீர்மானமே இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின்படியான பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமாகும்.

இலங்கைச் செய்திகள்

வலுவிழக்க செய்ய ஹிருணிக்கா மனு

நாடு கொரோனா வைரஸின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது

கெபிட்டல் மஹாராஜா குழும தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்

இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்


வலுவிழக்க செய்ய ஹிருணிக்கா மனு

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வாவின் விடுதலை உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றத்தில் நேற்று (21) மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 04 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் 11 ஆவது குற்றவாளி , மரணதண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.