அஞ்சலிக்குறிப்பு: வான் அலைகளில் கலை பரப்பிய அப்பல்லோ சுந்தாவின் துணைவியார் கலாரசிகை பராசக்தி சுந்தரலிங்கம் விடைபெற்றார் ! முருகபூபதி

 இலங்கை வானொலி மற்றும்  லண்டன் பி. பி. சி .  யில்  முன்னர்


சேவையாற்றியவரும் இலங்கை நாடாளுமன்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான   புகழ் பூத்த அறிவிப்பாளர் ( அமரர் )  சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும், சுபத்திராவின்  பாசமிகு   தாயாரும், குலசேகரம்  சஞ்சயனின்  அன்பு மாமியாரும்,   சேந்தன், சேயோன்  ஆகியோரின் பிரியத்திற்குரிய  பேத்தியாருமான

திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  காலையில் அவுஸ்திரேலியா சிட்னியில் அமரத்துவம் எய்திவிட்டார் என்ற துயரச் செய்தியுடன்தான்  அன்றைய நாளின் காலைப்பொழுது  எனக்கு விடிந்தது.

சிட்னியிலிருந்து இலக்கியச் சகோதரன் கானா. பிரபா, காலை


வேளையில்  எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால்,  ஏதோ ஒரு கலை, இலக்கியப் புதினம்தான் சொல்லப்போகிறார் என நினைத்துக்கொள்வேன்.

ஆனால், அவர் அன்று சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தத்  தகவலைத்தான்  இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.

எங்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகக் குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் தற்போது இழந்து நிற்கின்றோம்.

எம்மால் அக்கா   என அன்பு பொங்க அழைக்கப்படும்  பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், எமது அந்த நேசம்  இழையோடும்  உணர்வுபூர்வமான குரலை இனிமேல் கேட்கமாட்டார்கள்.

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிட்னிக்குச் சென்றிருந்தவேளையில்,  என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர்கள் கவிஞர் அம்பியின் புதல்வன் திருக்குமாரனும்,  புதல்வி மருத்துவர் திருமதி உமாதேவி சிவகுமாரனும்தான்.

அன்று அக்கா,  எங்களைக்கண்டதும்  உற்சாகம் பொங்க நீண்டநேரம் உரையாற்றினார்.

சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர், அக்காவையும் அவரது கணவர் சுந்தா அண்ணரையும், இவர்களின் செல்வப்புதல்வி சுபத்ராவையும் முதல் முதலில் சந்தித்த  கொழும்பு – 07 இல் பாமன்கடை வீதியில் அமைந்திருந்த இல்லத்தில் இவர்களுடன் மற்றும் ஒரு பகுதியில் வசித்த, பேராசிரியர்கள் மௌனகுரு – சித்திரலேகா தம்பதியருடன்,  அக்காவை அன்று உரையாடச் செய்வதற்காக  இணைப்பினை ஏற்படுத்திக்கொடுத்தேன்.

ஏழு தசாப்த காலமாக உடன் பயணித்த முருகானந்தனும் விடைபெற்றார். ! தொலைவிலிருந்து கண்ணீர் அஞ்சலி !! முருகபூபதி


பாடசாலைப் பருவம் பசுமை நிறைந்த நினைவுகளை உள்ளடக்கியிருக்கும்.

எனது வாழ்வில், 1954 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரையில்  மூன்று  பாடசாலைகளில் எனது பெரும்பாலான பொழுதுகள் கழிந்திருக்கின்றன.

இக்காலப்பகுதியில் தினமும் என்னோடு பாடசாலைக்கு வந்தவரும், அந்தப்பருவத்தின் அனைத்துக் குழப்படிகளிலும் இணைந்திருந்தவருமான எனது தாய்மாமனார் மகன் முருகானந்தன்,  தமிழ்நாடு கோயம்புத்தூரில்  இம்மாதம் 28 ஆம் திகதி அதிகாலை மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியுடன்  எனக்கு பொழுது விடிந்தது.

மறுமுனையில் மச்சான் முருகானந்தனின் மூத்த புதல்வி நர்மதா


அழுது கதறியவாறு இத்துயரத்தை என்னிடம் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டபோது,  அவருக்கு ஆறுதல் சொல்லித்தேற்றுவதற்கும்  வழிதெரியாமல் கலங்கிப்போனேன்.

இந்த ஜூலை மாதம் ஏன் இவ்வாறு தொடர்ந்தும் துயரச்செய்திகளுடன் கடக்கிறது…? புரியவில்லை. !

அடுத்தடுத்து எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் மனதில் வெறுமை குடிகொள்கிறது.  அந்த வெறுமையை நிரப்புவதற்கு,  மறைந்துகொண்டிருப்பவர்களின் நினைவுகளைத்தான் ஆதாரமாகக் கொள்ளவேண்டுமா..?

நானும் மச்சான் முருகானந்தனும் 1951 ஆம் ஆண்டுதான் நீர்கொழும்பில் பிறந்தோம்.

அவர் ஏப்ரில் மாதமும் நான் ஜூலை மாதமும் பிறந்தோம்.

பூவுலகில் காதல் புனிதமே !

 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
         


               மண்ணிலே நல்ல வண்ணம்
               வாழவே வேண்டு மாயின்
               உண்மையில் காதல் தானே
               உயிராக இருக்கு தன்றோ

                எண்ணிடும் போதே நெஞ்சில்
                இன்பமே ஊற் றெடுக்க
                பண் ணிடும் பாங்கை
                காதல் பண்புடன் தருகுதன்றோ

                உண்ணிடும் சோறு கூட
                உடலுடன் சேர வேண்டில்
                கண்ணிலே காதல் வந்தால்
                கஷ்டமே கழன்றே போகும்

கலகலப்பு தீசன் கதைக்கிறார் ❤️😁













“சிரிக்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்” என்பர்.
நகைச்சுவை என்பது ஒரு கலை என்றால்,

தற்காலச் சூழ்நிலையைக் கண் கொண்டு பார்த்து அதை நகை மொழியில் கொடுப்பது என்பது ஒரு மகத்தான கலை.

அந்த மாதிரியான நுட்பம் கைவரப் பெற்றவர் கலகலப்பு தீசன்.

ஈழத்தமிழரின் அவல வாழ்க்கையை நகை முகம் கொண்டு பார்த்து

அவர் கொடுக்கும் கலகல மொழிகள் யாரையும் முகம் சுழிக்க வைக்காது சிரிப்பில் ஆழ்த்தும்.

ஈழத்தில், இணுவிலில் பிறந்தவர் “கலகலப்பு" என்ற சஞ்சிகையை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் தோழமைகளோடு இணைந்து நடத்தி ஈழம் பூராகவும் வாசக வட்டத்தை விரித்தார்கள்.

விவசாயியின் மகன் என்ற எள்ளலை அவரின் சாதனைக்கான பொறியாக எடுத்துக் கொண்டு விவசாயத்துறையில் உயர் புலமைப்பரிசில் பெற்றுத் தன் இளவயதிலேயே அமெரிக்காவுக்குப் பயணித்தவர்.

ஒரு பக்கம் புலமைத்துவத்திலும், இன்னொரு பக்கம் நகைச்சுவைப் புலத்திலுமாக இரு முகங்கள் கொண்டவர்.

கனேடிய மண்ணில் தன் நீண்ட இருப்பில் தொடர் மேடை நாடக நிகழ்வுகள், திரைப்படங்கள், பத்திரிகை எழுத்து என்று வீச்சோடு பயணிப்பவரின் காலப் பெட்டகமாக இந்தப் பேட்டியைப் பகிர்கிறார்.

கலகலப்பு தீசனின் ஐம்பது ஆண்டு கலைப்பயணத்தின் பதிவாக அமைந்தாலும் இன்னொரு முறை இன்னும் இவரிடம் அள்ள வேண்டும்.

என்னுடைய கால் நூற்றாண்டு வானொலி அனுபவத்தில் ஒரு மணி நேரம் சிரித்துச் சிரித்துப் பேட்டி எடுத்தது இதுவே முதன்முறை.



Spotify இல் கேட்க


கலகலப்பு தீசனோடு கதைத்தவர்
அதே இணுவிலில் இருந்து புலம்பெயர்ந்த


கானா பிரபா

26.07.24



 




கற்பகதரு நூல் விமர்சனம்

 


கற்பகதரு நூல்விமர்சன நிறைவுப்பகுதி

 - சங்கர சுப்பிரமணியன்.



பழந்தமிழ் இலக்கியமான பதிணெண்கீழ்க் கணக்கில் வாழ்வியலுக்கு
வழிவகுத்த இன்னா நாற்பது இனியவை நாற்பதைப்போன்று பனையினை தொடர்பு படுத்தி அதன் பெருமையை நாற்பது சுவைகளாக்கி நயமுடன் இதுவரை யாரும் பனைபற்றி கூறாத  எண்ணற்ற செய்திகளை இயம்பியிருக்கிறார் நூலாசிரியர். இப்போது நிறைவாக முப்பத்தியோராம் சுவை தொடக்கத்திலிருந்து நாற்பதாம் சுவைவரை பதமாக சமைத்தை இதமாக பரிமாறி  விமர்சனத்தை நிறைவு செய்கிறேன்.


சுவை முப்பத்தியொன்றில் பனங்கொட்டை பற்றி மேலும் கூறியுள்ளார். பனங்கொட்டைகளில் சில கிழங்கினைத் தராமல் இருப்பதுண்டு. அந்த கொட்டைகளை உடைத்தால் கட்டியாக திரட்சியான பூரான் என்று அறியப்படும் பொருள் இருக்கும். இனிப்பான சுவையுடன் இருக்கும் இந்த பூரான் சத்துள்ள இயற்கை உணவாகும். இதில் மாச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதுடன் புற்றுநோய் மற்றும் இருதய நோயை தடுக்கும் குணம் கொண்டது என்பதையும் அறியலாம்.

வெள்ளை யர் அளித்த வெள்ளை உணவு - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

சில தினங்களுக்கு முன் அறிந்த செய்தி திடுக்கிட வைத்தது. 2030 இல் உலகம் பெ ரிய அளவில் உணவு பஞ்சத்தை எதிர் கொள்ளப்  போகிறது என்பதே செய்தி. இதற்கு காரணம் மக்களின் மாறிவரும் உணவு உண்ணும் பழக்கம் என கூறினார். முக்கியமாக உலகிலே யே அதிக மக்கள் தொகையை க்  கொண்ட நாடுகளான இந்தியா, சீனா வாழ் மக்கள் தமது பாரம்பரிய உணவு வகைகளை ,பழக்க வழக்கங்களை விடுத்து புதிய வகை உணவுகளை உண்ண பழகிக் கொள்கிறார்கள். குறிப்பாக Mc Donalds  போன்ற Fast food நிலை யங்கள் எதிர்பாராத அளவு பரவுவதே இதற்கு காரணம் என்கிறார்கள். இந்த Fast fòod பிரச்சனை உலக உணவு பற்றாக்குறைக்கு காரணமாகிறது என்பது ஒரு புதிய திடுக்கிடும் செய்தி.

அதே சமயம் அவை மனித சுக வாழ்வுக்கு இழைக்கும் தீங்குகள் என்பவை நாம்அறிந்ததே . இதற்கு இலங்கை யரான நாம் விதிவிலக்கு அல்ல,. மூன்று நான்கு தலை முறை களுக்கு முன் வாழ்ந்த நம்மவர் குரக்கன், வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாக வாழ்ந்தனர். சுகதேகிகளாவும் வாழ்ந்தனர். அப்படியான உணவு இன்று உள்ளவருக்கு இல்லை என பரவலாக பேசப்படுகிறது. ஏன் அதே உணவை பிற்பட்டவர்கள் உண்ணவில்லை . அரிசி விளைச்சல் பெருகி யாவரும் அரிசி உண்டோமா?

இல்லவே இல்லை அரிசி இறக்குமதியான. அரிசி மட்டுமல்ல, கோதுமைமாவுமல்லவா வந்து வந்திறங்கியது. அவ்வாறு வந்த கோதுமை மாவெள்ளை யாகவே இருக்கும். கோதுமை இயற்கை யாக பழுப்பு நிறமாக இருக்கும் அந்த வெளிப்புறமே ஊட்டச்சத்து உள்ள பகுதி, அதை நீக்கி அதை மந்தைகட்கு தீவனமாக கொடுத்து விடுவார்கள், எஞ்சிய வெள்ளை பகுதியைஅரைத்து குறைந்த விலையில் இலங்கைக்கு அனுப்பி விடுவார்கள். அவ்வாறான கோதுமை மா வெள்ளையாக இருக்கும். போஷாக்கு அற்ற மாவாக எமமை வந்தடையும். இதற்கு பிறிதொரு பெயர் அமெரிக்கன் மா. இதை மலிவான விலையில் சங்கக் கடைகளில் வாங்கலாம். அமெ ரிக்காவில் அதிகப்படியாக விளையும் கோதுமையின் விலை , உலக சந்தை யில்சரியாமல் இருப்பதற்காக கோதுமை யை க் கொண்டு போய் கடலில் கொட்டும் காலம் இருந்தது. பசி பட்டினியால் வாழும் நாடுகளுக்கு கொடுக்க மாட்டார்கள். இவை எம் போன்ற நாடுகளில் விற்கப்பட்டது. இறக்குமதியான அரிசியும் தவிடு நீக்கப்பட்டது வெள்ளை அரிசியே .

மரணமும், நெருப்பாக ஒளிரும் புத்தர்களும் (வித்யாசாகர்)

 மரணம் நெருப்பைப்போல கனல்கிறது

தொட்டதும் நம்மை நெருப்பாக்கிக் கொள்கிறது 

நெருப்பானதும் சுடுவதும், நெருப்பானதும் ஒளிர்வதும் 

பத்து மாத பந்தம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அறிஞர் அண்ணாவினால்
பாராட்ட்டப் பெற்றவர் பி .பானுமதி. தமிழ் திரையில் கொடி கட்டி பறந்தவர் சரோஜாதேவி. கவர்ச்சியை காட்டி மயக்கியவர் ராஜஸ்ரீ. அழகு, கவர்ச்சி இரண்டும் ஒருங்கே கொண்டவர் வெண்ணிற ஆடை நிர்மலா. இவர்கள் நால்வரும் 1974ம் ஆண்டு திரைப்பட வாய்ப்புகளை இழந்து ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள். அப்படிப் பட்ட இவர்கள் நால்வரையும் கதாநாயகிகளாகப் போட்டு படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் துணிந்து முன் வந்தார். அதிலும் கலரில் அப் படத்தை உருவாக்க முன் வந்தார். அவர் தான் ஜி . சுப்பிரமணிய ரெட்டியார்.


ஏற்கனவே புகுந்த வீடு, வீட்டு மாப்பிள்ளை ஆகிய இரண்டு
படங்களை தயாரித்து வெற்றி கண்ட இந்த ரெட்டியார் இந்த விஷப் பரீட்சைக்கு ரெடியாக இருந்தார். அப்படி அவர் தயாரித்த படம் பத்து மாத பந்தம். படத்தின் பெயரே இது ஒரு குடும்பப் படம் என்பதை நீருபிப்பதை போல் இருக்குதல்லவா. அது உண்மைதான். நான்கு பெண்களின் வாழ்வில் இடம் பெறும் உணர்ச்சிகரமான சம்பவங்களை கொண்டு படத்தின் கதை அமைக்கப் பட்டது.


தன்னுடைய மாமன் ராஜவேலுவின் தயவில் எம் ஏ படிப்பு படித்து வருகிறாள் வசந்தி. அவனின் அன்பும், அவனின் உதவியும் தன்னலமற்றது என்று எண்ணுகிறாள். ஆனால் ராஜவேலுவோ அவளை இரண்டாம் தாரமாக மணக்க திட்டமிடுகிறான். ஏற்கனவே பிரபல பாடகி கல்யாணியை மணந்து அவளை கொடுமை படுத்தி அதனால் விவாகரத்து பெற்றவன் அவன். அவனின் எண்ணம் அறியாது வக்கீல் சந்திரனை காதலிக்கிறாள் வசந்தி. அவர்களின் உறவு எல்லை மீறி போய் அவள் கர்ப்பம் தரிக்கிறாள். ஆனால் விபத்து ஒன்றில் சிக்கும் சந்திரன் வசந்தியிடம் இருந்து விதி வசத்தால் விலகுகிறான். இதற்கிடையில் வசந்தி நிலையறிந்து அவளை வீட்டை விட்டே துரத்துகிறான் ராஜவேலு. நிர்க்கதியான நிலையில் பாடகி கல்யாணி அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். வசந்திக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை இருந்தும் கணவன் இன்றி, கழுத்தில் தாலி இன்றி நிற்கும் வசந்தி. விவாகரத்து பெற்றும் கணவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமந்து நிற்கும் கல்யாணி வசந்தியின் குழந்தையை தன் குழந்தை என சொல்லி வளர்க்க முன் வருகிறாள்.

கறுப்பு ஜூலையும் ஜனாதிபதி வேட்பாளர்களும்…!

 July 25, 2024


கறுப்பு ஜூலை ஆண்டுதோறும் நினைவு கொள்ளப் படுகின்றது. ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் போட்டிபோட்டுக் கொண்டு இதனை நினைவுகொள்வதுண்டு. இதன்மூலம், தாங்கள் தமிழ்த் தேசிய அரசியலுடன் ஒன்றித்துப் பயணிப்பதாக நிரூபிக்க முடியுமென்று நம்புகின்றனர். 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பதே நினைவுகூரலாகத்தான் சுருங்கிக் கிடக் கின்றது. செயலை விடவும் நினைவுகூரல்களை செய்வதையே தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரும் ஓர் இலகு அரசியலாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால், நினைவுகூரல்களின்போது நினைத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்ன? தமிழ் மக்கள் கடந்த ஒரு நூற் றாண்டாக அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருக் கின்றனர். பின்தங்கியநிலை என்பது அறிவு சம்பந்தப்பட்டதல்ல மாறாக, அடைவு சம்பந்தப்பட்டது. அறிவு அடைவை தரவில் லையாயின், அந்த அறிவால் பயன் என்ன? அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு தொடர் செயல்பாடு. அந்தத் தொடர் செயல்பாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றனர் –

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21; வெளியானது அதி விசேட வர்த்தமானி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர் அறிமுக நிகழ்வு

கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை ஜப்பான் தூதரக அதிகாரிகள் நேரில் பார்வை

கொவிட் - 19 தொற்று பரவல் காலத்தில் கட்டாய உடற் தகனக் கொள்கைக்கு அரசாங்கம் மன்னிப்புக் கோருகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றிகரமாக கறுவா செய்கை

படுகொலை செய்ய சதி முயற்சி; நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21; வெளியானது அதி விசேட வர்த்தமானி 

- தேர்தல்/ வாக்களிப்பு: செப்டெம்பர் 21 (சனிக்கிழமை)

July 26, 2024 8:07 am 

– வேட்புமனு ஏற்பு: ஓகஸ்ட் 15 (வியாழக்கிழமை)
– வேட்புமனு தாக்கல்: தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில்

இவ்வருடம் இடம்பெறுமென எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

 ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ஹாரிஸுக்கு போதுமான ஆதரவு

உக்ரைனின் அமைதி முயற்சிக்கு உதவ இந்தியாவுக்கு அழைப்பு

கான் யூனிஸ் தாக்குதல்களில் 81 பேர் பலி பலஸ்தீன தரப்புகள் இடையே ‘தேசிய ஐக்கிய’ உடன்படிக்கை

தொடர்ந்து பற்றி எரியும் ஹொதைதா துறைமுகம்

காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு

வடக்கு, தெற்கு காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலையில் பலர் பலி



ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ஹாரிஸுக்கு போதுமான ஆதரவு

July 24, 2024 8:51 am 

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெறுவதற்கு போதுமான பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

இசை வேள்வி 03/08/2024

 


இனியவர்களே!  வணக்கம்.

கம்பன் கழக இசை வேள்விக்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
உங்கள் ஒவ்வொருவரதும் வருகையால்தான் இவ் இசை வேள்வி வெற்றி பெறும்.🌻
அவ் வெற்றிதான், நாம் தொண்டுரீதியில் நடாத்திவரும்;

🌞வருடாந்தக் கம்பன் விழாக்கள்,

🌞தொடர் - வாராந்தத் தமிழ் இலக்கிய வகுப்புகள்,

🌞'வெல்லும்சொல்'  திறனாளர் தேர்வுப் பேச்சுப் போட்டிகள்,

🌞'நாநலம்' இலக்கிய நிகழ்வுகள்,

போன்றவற்றைத் தொடர்ந்து உங்களுக்காகவும்,
எம்தமிழ் இளைஞர்களுக்காகவும் தர உதவும்.
பணிவன்போடு உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம்.🌷
இம்முறை நுழைவுச்சீட்டுகளை💯 இணையத்தளத்தினூடாக மட்டுமே பெற்றுக்கொள்ளும்வகை அமைத்துள்ளோம்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஹோமம் - ஆகஸ்ட் 4, 2024 ஞாயிற்றுக்கிழமை

 



திரிபுரா என்றால் மூன்று நகரங்கள் அல்லது மூன்று உலகங்கள், சுந்தரி என்றால் அழகான பெண் என்று பொருள். திரிபுர சுந்தரி என்றால் மூவுலகிலும் அழகான பெண் என்று பொருள். திரிபுரா என்பது மாயாசுரனால் உருவாக்கப்பட்ட மற்றும் திரிபுராந்தகனால் அழிக்கப்பட்ட மூன்று நகரங்களையும் குறிக்கும், இதன் பொருள் "மூன்று நகரங்களை அழிப்பவருக்கு அழகாக இருப்பவள்" என்று பொருள்படும். அவளது மந்திரம் மூன்று எழுத்துக்களைக் கொண்டதால், அவள் திரிபுரா என்றும் அழைக்கப்படுகிறாள். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரில் பிரபஞ்சத்தைப் படைத்தவராகவும், காப்பவராகவும், அழிப்பவராகவும் வெளிப்படுவதால் அவள் திரிபுரா என்று அழைக்கப்படுகிறாள்.

காலை 09.00 மணி: லலிதா சஹஸ்ரநாம ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரி உற்சவமுத்தி ஊர்வலம் நடக்க இருக்கிறது.