உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 




உழைத்துமே உயர்ந்திடு வோமே 


உதிரமே உழைப்பவர் பலமே 
உலகமே ஏத்திடு தினமே
உயர்வுடை மே தினமே 

உண்ணும் உணவும் உழைப்பே
ஓடும் காரும் உழைப்பே
விண்ணில் பறக்கும் யாவும்
எண்ணி லடங்கா உழைப்பே 

விருந்தும் மருந்தும் உழைப்பே
விளக்கின் வரவும் உழைப்பே 
அருந்தும் அனைத்தும் உழைப்பே 
அனைவரும் மதிப்போம் உழைப்பை 

வானுயர் கட்டடங்கள் உழைப்பே


வான்வெளிப் பயணங்கள் உழைப்பே 
நீள்கடல் ஆராய்ச்சி உழைப்பே
நிம்மதி தருவதும் உழைப்பே 

முத்தினை எடுப்பதும் உழைப்பே
முடியினில் வைப்பதும் உழைப்பே 
சொத்தினைக் குவிப்பதும் உழைப்பே
சுகத்தினைக் கொடுப்பதும் உழைப்பே 

ஆடைகள் அனைத்தும் உழைப்பே
ஆலைகள் பெருக்கம்  உழைப்பே 
வீடுகள் அனைத்தும் உழைப்பே
வீதிகள் பெருக்கம் உழைப்பே 

அஞ்சலிக்குறிப்பு: சிறுகதை இலக்கியத்தில் அழகியலை ஆராதித்த குப்பிழான் ஐ. சண்முகன் முருகபூபதி



அண்மைக்காலமாக , காலை விடியும்போது இன்று என்ன செய்தி வரப்போகிறதோ? என்ற யோசனையுடன்தான் துயில் எழுகின்றேன்.

இந்த யோசனை கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்திலிருந்து தொடருகின்றது.

அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய குடும்பத்திலிருந்து பலரும் விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே மரண பயமும் வருகின்றது.

கடந்த 24 ஆம் திகதி காலை விடிந்தபோது, சிட்னியில் வதியும்


எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான இலக்கிய நண்பர் கானா. பிரபாவிடமிருந்து  வந்த குறுஞ்செய்தியில், எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் முதல் நாள் 23 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  என்ன நடந்தது? என நான் தொலைபேசி ஊடாக கேட்பதற்கு முன்பே, அவர்  என்னைத் தொடர்புகொண்டு  இந்த  துயரச் செய்தியை மேலும் ஊர்ஜிதப்படுத்திச் சொன்னார்.

இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சிக்கு சென்றிருந்தபோது,  இலக்கிய நண்பர் தெணியானுடன், குப்பிழான் ஐ. சண்முகனை பார்க்கச்சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

இருவரும் இல்லாத வடமராட்சிக்குத்தான் இனிவரும் காலங்களில் வரப்போகின்றேன் என்பதை நினைக்கும்போது சோகம் மனதை அழுத்துகிறது.

தனது பெயரின் தொடக்கத்தில்  குப்பிழான் என்ற  பூர்வீக ஊரின் பெயரை சண்முகன் பதிவுசெய்துகொண்டிருந்தாலும், அவரது வாழ்க்கை பெரும்பாலும் கழிந்தது, கரணவாயில்தான்.

1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தில்  எழுதுவினைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.  அதே வீதியில் அமைந்திருந்த  இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நான் சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தபோது குப்பிழான் சண்முகனை அடிக்கடி சென்று பார்ப்பேன்.

அக்காலப்பகுதியில் செளந்தர்ய உபாசகர் என வர்ணிக்கப்பட்ட தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எழுத்துக்களை படிக்குமாறு என்னைத் தூண்டியவர்தான் குப்பிழான் ஐ. சண்முகன்.

அதனால், தி. ஜா. வின் உயிர்த்தேன்,  அக்பர் சாஸ்திரி,  மலர் மஞ்சம், யாதும் ஊரே , அம்மா வந்தாள், மரப்பசு முதலானவற்றை அக்காலப்பகுதியிலேயே படித்தேன். நானும் தி. ஜா.வின் தீவிர வாசகனானேன்.

சண்முகன், கொழும்பில் அப்போது இயங்கிய கலை, இலக்கிய நண்பர்கள் கழகத்திலும் இணைந்திருந்தார்.  அவரும் கவிஞர் என அறிந்து எங்கள் நீர்கொழும்பூர் விஜயரத்தினம் கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் நடத்திய  நாமகள் விழா கவியரங்கிற்கும் அவரை அழைத்திருந்தேன்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 62 சிங்கப்பூர் பொது நூலகத்தை தரிசிக்க வாருங்கள் ! தர்மிஷ்டரின் ஆட்சியில் எரிந்த யாழ். பொது நூலகமும், கொழும்பில் எரிந்த ரணிலின் நூலகமும் ! ? முருகபூபதி


சிங்கப்பூர் பொது நூலகம் பற்றி,  அந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் தெரிந்துகொண்ட செய்திகளை சொல்லாமல்  இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை கடந்து செல்ல முடியாது.

சிங்கப்பூரில் பொதுமக்கள், அரச துறையினர், தகவல் தொடர்பூடகத்துறையினர், மாணவர்கள், ஆய்வாளர்கள் உட்பட அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் இந்த நூலகம் சிறந்த தகவல் மையமாக விளங்குகிறது.

நண்பர்கள் மூர்த்தியும் புஷ்பலதா நாயுடுவும் என்னை அந்த


பிரமண்டமான கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்திற்கு அழைத்து வந்தார்கள். அங்கே சீன, மலாய், தமிழ் பிரிவுகள் இருந்தன. தமிழ்ப்பகுதியில் ஆயிரக்கணக்கான நூல்களும் ஏராளமான இதழ்களும் காணப்பட்டன.

தமிழ்ப்பிரிவில் மொழி, கலை, இலக்கியம் என மூன்று பகுதிகளை வகுத்திருந்தார்கள். மொழிப்பகுதியில் தமிழின் வரலாறு, சுவடிகள், இலக்கண நூல்கள் அகராதிகள் என்பனவும்,

 கலைப்பகுதியில் நாட்டுப்புறக்கலைகள்,  நாட்டுப்புற பாடல்கள், தெருக்கூத்துக்கள், நாடக வரலாறு, மேடை நாடகத்துறை சம்பந்தமான நூல்கள், கர்நாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துறையினரின் நினைவுகள் சார்ந்த ஆவணங்கள், திரையிசைக் கலைஞர்கள் வரலாறு என்பனவும்,

இலக்கியப்பகுதியில் சங்ககால இலக்கியம் முதல், இன்றைய நவீன இலக்கியம் வரையிலான இலக்கியத்தின் பல கூறுகளும் இடம்பெற்றிருந்தன.

வார, மாத இதழ்களுக்கென ஒரு தனிப்பிரிவு இயங்குகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளிலிருந்தும் இதழ்கள் தருவிக்கப்படுகின்றன.

ஒரு பல்லூடக மையமும்  ( Multimedia Centre )  இங்கு இயங்குகிறது.

சிங்கப்பூர் பொது நூலகத்தை முழுமையாக பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. இங்கு என்னை பெரிதும் கவர்ந்த ஒரு தளம்தான் சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகளின் காட்சியகம். இதன் தமிழ்ப்பிரிவை உருவாக்குவதில் புஷ்பலதா நாயுடு வழங்கிய ஆத்மார்த்திகமான பங்களிப்பு மகத்தானது. இந்த காட்சியகம் ஏனைய நூலகங்களுக்கு முன்னோடியாகவும் திகழக்கூடும் என்பது எனது சிற்றறிவு.

சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிலரது பெரிய அளவிலான அழகிய உருவப்படங்களும் அவர்கள் பெற்ற விருதுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அருகிலே – சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, நூலகம் இயங்கும் நேரங்களில் தொடர்ச்சியாக இந்த இலக்கிய முன்னோடிகளைப்பற்றி காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இக்காட்சியகம் ஆவணகமாகவே திகழுகிறது.

அவுஸ்திரேலிய நிகழ்வுகள் 2023

 

சிட்னி

 திகதி

 விபரங்கள்

 07/05/2023

Sun

சிட்னியில் சித்திரை திருவிழா  - தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் 

 27/05/2023

Sat

  சிலப்பதிகார விழா சிட்னி துர்க்கை அம்மன் கோயில்   மண்டபம்

 

 

முதியோர் தொழில்நுட்ப நடைமுறைக் கல்வி – தமிழ் (இலவச வகுப்புகள்)


ஸ்ட்ராத்ஃபீல்ட் நகராட்சி நூலகம் மற்றும் புதுமை மையம் இணைந்து வழங்கும் முதியோர்களுக்கான இலவச தொழில்நுட்ப நடைமுறைக் கல்வி வகுப்புகள்

தலைப்புகள்:

திறன்பேசியை எப்படி பயன்படுத்துவது

இணைய பாதுகாப்பு

இணையத்தில் பொருட்களை வாங்குதல்

மிகவும் குறைவான இடங்கலே இருப்பதால் உங்களுக்கு விருப்பமான வகுப்புகளையோ அல்லது அணைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்வது அவசியம்

ஸ்ட்ராத்ஃபீல்ட் நகராட்சியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

கணினி வழங்கப்படும் ஆனால் திறன்பேசியை நீங்கள் கொண்டுவரவேண்டும்

வகுப்புகள் நடைபெறும் தேதிகள்:

12/05/2023 – காலை 10 – 12 வரை திறன்பேசி அறிமுகம்

19/05/2023 – காலை 10 – 12 வரை இணைய பாதுகாப்பு அறிமுகம்

26/05/2023 – காலை 10 – 12 வரை இணையத்தில் பொருட்களை வாங்குதல் பாகம் – 1 அறிமுகம்

2/06/2023 – காலை 10 – 12 வரை இணையத்தில் பொருட்களை வாங்குதல் பாகம் – 2 அறிமுகம்

 

காஞ்சித் தலைவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழில் சிறந்த சரித்திர நாவல்களை எழுதி பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவை பெற்றவர் அமரர் கல்கி. இவர் எழுதிய பார்த்திபன் கனவு திரைப்படமாக அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. இப்போது அவரின் மற்றைய மகோன்னதமான நாவலான பொன்னியின் செல்வன் படமாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று பெற்றுள்ளது. கல்கி எழுதிய மற்றும்மொரு சரித்திர நாவலான சிவகாமியின் சபதம் வாசகர்களின் ஆதரவை பெற்ற போதும் அது படமாக்கப்படவில்லை. 



ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன் சிவகாமியின் சபதத்தின் நாயகனான காஞ்சியை ஆண்ட பல்லவ சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவனின் கதையை ஆதாரமாகக் கொண்டு கலைஞர் கருணாநிதி ஒரு கதையை எழுதி அதற்கு வசனங்களையும் தீட்டினார். அந்த படம் தான் காஞ்சித் தலைவன். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரை காஞ்சித் தலைவன் என்றால் அது அக்கட்சியின் தலைவரான அறிஞர் அண்ணாதான். அவரை போற்றும் வண்ணம் படத்துக்கு காஞ்சித் தலைவன் என்று கருணாநிதி பேர் சூட்டினார். ஆனால் படத்தில் காஞ்சித் தலைவன் வேறு யாருமல்ல , புரட்சி நடிகர் எம் ஜி ஆர்தான்! நரசிம்ம பல்லவர் வேடத்தில் அவர் நடித்திருந்தார்.

கற்பனைப் பாத்திரமான சிவகாமி என்ற நடனப் பெண்ணை

உருவாக்கி அவள் மீது நரசிம்மருக்கு காதல் ஏற்பட்டு அவள் பொருட்டு வாதாபி மீது போர் தொடுத்து அவர் வெற்றி வாகை சூடுவதாவாக கல்கியின் நாவல் அமைந்திருந்தது. ஆனால் கருணாநிதி வேறு வகையில் படத்தின் கதையை அமைத்திருந்தார். பல்லவ நாட்டின் மீது போர் தொடுக்க சமயம் பார்த்து காத்திருக்கும் வாதாபி அரசன் புலிகேசி தனது சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக சோழ குமாரியை பல்லவ நாட்டிற்கு அனுப்புகிறான். பல்லவ நாட்டில் கலகம் உண்டாக்க வரும் சோழ குமாரி பல்லவனின் அழகு,ஆற்றல், வீரம் எல்லாவற்றையும் கண்டு மயங்கி அவன் மீது காதல் வசப்படுகிறாள். இதனை பல்லவனின் மந்திரி பரஞ்சோதி எதிர்க்கிறான் . இதனால் அவனுக்கும், பல்லவனின் தங்கை பூங்குழலிக்கும் இடையிலான காதல் முறிகிறது. அதே சமயம் இலங்கை அரசன் மானா இலங்கையில் எல்லாவற்றையும் இழந்து பல்லவனிடம் அடைக்கலம் கேட்டு வருகிறான். இவ்வாறு பலவித அரசியல், குடும்ப சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் நரசிம்மன் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதே கதை.

நரசிம்ம பல்லவராக வரும் எம் ஜி ஆர் அலட்டலில்லாத நடிப்பை வழங்குகிறார் . தங்கையின் துயர் கண்டு வேதனைப் படும் போது சோகரசத்தையும் வெளிப்படுத்துகிறார். சோழகுமரியாக வரும் பி பானுமதி பாத்திரத்துடன் ஓட்ட மறுக்கிறார். யாருடைய சிபாரிசில் அவர் படத்தில் இடம் பெற்றாரோ தெரியவில்லை. ஆனாலும் எம் ஜி ஆருடன் அவர் இணைந்து நடித்த கடைசிப் படம் இதுவாகும். பரம்ஜோதியாக வரும் எஸ் எஸ் ராஜேந்திரன் கலைஞரின் அடுக்கு மொழி வசங்களை பேசி பாராட்டைப் பெறுகிறார். அவருக்கு ஜோடி விஜயகுமாரி. எம் ஆர் ராதா ஒற்றனாக வந்து சதி செய்கிறார். புலிகேசியாக வரும் அசோகன் ஏனோ மிகை நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இவர்களுடன் வளையாபதி முத்துகிருஷ்ணன், மனோரமா, எஸ் ராமராவ், டி ஏ மதுரம், ஜி சகுந்தலா, செந்தாமரை ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தை ஜி துரை ஒளிப்பதிவு செய்திருந்தார். எம் ஜி ஆர் போடும் மல்யுத்தம் நன்றாக படமாக்கப்பட்டது. பிற்காலத்தில் சிறந்த இயக்குனராக அறியப்பட்ட மகேந்திரன் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

படத்துக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன். அண்ணன் , தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த ஆலங்குடி சோமுவின் ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. எம் ஜி ஆர் , விஜயகுமரி இருவரும் உருக்கமாக பாடலுக்கு நடித்திருந்தார்கள். கே டி சந்தானத்தின் கண் கவரும் சிலையே மென்மையாக ஒலித்தது. வானத்தில் வருவது ஒரு நிலவு என்ற டூயட் பாடல் எஸ் எஸ் ஆர் , விஜயகுமாரி நடிப்பில் இனிமையாக அமைந்தது.

அவுஸ்திரேலியா படைப்பாளிகளின் கதைத் தொகுதி “ தைலம் “ புகலிட வாழ்வியலை சித்திரிக்கும் கதைகள் சியாமளா யோகேஸ்வரன் - குவின்ஸ்லாந்து


அவுஸ்திரேலியச் சூழலையும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் மையப்படுத்தி மெல்பனில் வதியும்  எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின்  தெரிவிலிருந்து  வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே ‘தைலம்’ நூல்.

யூகலிப்டஸ் மரங்கள் அவுஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் மரமாகவும்,  இந்நாட்டுக்கே பிரத்தியேகமான குவாலா கரடிகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. அந்த மரங்களில் இருந்து சாரமாகப் பெறப்படும் தைலத்தைப் போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு தைலம் என்று பெயரிடப்பட்டமை சாலப் பொருத்தமாகவே காணப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையையும்


அவர்களின் இழப்பையும், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் அடையாளத்தைக் கட்டிக் காக்க எண்ணும் தமிழ் மக்களின் மனப்பாங்கையும், புகுந்த இடத்துக்கேற்ப முற்றிலுமாய் தம்மைத் தொலைக்கத் தயாராக உள்ளவர்களின் மனப்பாங்கையும், நவீன தொழில் நுட்பத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் தமது  எழுத்துக்களில் எழுத்தாளர்கள் அற்புதமாக வடித்திருக்கின்றார்கள் என்றேதான் கூற வேண்டும்.

முதலாவது கதை தென் துருவத்தேவதை கன்பரா யோகன் எழுதியது.  புகலிடம் தேடி வந்து தனிமையை மட்டுமே அறிந்திருந்த கதிர் என்கின்ற இளைஞன், தந்தையார் தென்துருவத்தில் வேலை செய்த போது பிறந்த ஒரு வெள்ளையினப் பெண்ணின் உருவத்தில் தேவதையைக் காண்கின்றான். கதையோடு சோப்புத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையைக் கற்பனைக்கு கொண்டு வந்திருந்த விதமும் அருமை.

சரளமாக ஆங்கிலம் பேச முடியாத தயக்கத்துடன், தானாக வலிந்து சென்று நட்பு கொள்ள முடியாத ஒதுக்கமும் சேர்ந்து கொள்ள ஒடுங்கி வாழப் பழகும் ஒருவனுக்கு வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொடுக்கின்றாள் ஒரு தேவதை. உயரத்தில் ஏறி நின்று உலக இயற்கையை ஆராதிக்கவும், தன் கூட்டில் இருந்து மெல்ல வெளியே வந்து உலகோடு ஒன்றவும் கற்றுக் கொடுத்தவள்,  சொல்ல முடியாத சோகத்தைத் தனக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றாள். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொடுத்த அவளுக்குள் பெரும் சோகமொன்று ஒளிந்திருந்தது என்பதை அவளது மரணத்தின் பின்தான் தெரிந்து கொள்கின்றான் கதிர். 

கருவைத் தாங்கியிருந்த ஒரு தேவதையைக் கண்ணுக்குள் வைத்துக் காக்க வேண்டியவனே போதையின் போதனையில் அவள் கழுத்தைத் திருகிக் கொன்றிருக்கின்றான் என்ற அதிர்ச்சிச் செய்தி கதிரை நிலை குலைய வைக்கின்றது. அவளுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத போதும் காற்றோடு கலந்து விட்டவளுக்கு, அதே காற்றினில் தனது சோகத்தைச் சேதியாகச் சொல்லி முடித்த விதம் சிறப்பு.

தெய்வீகன் எழுதிய பொதுச்சுடர் என்ற சிறுகதை, போராளி ஒருவர் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எதிர் நோக்கியிருந்திருக்கக் கூடிய மனஉளைச்சல்களைப் படம் போட்டுக்காட்டியிருந்தது.  மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய போராளி ஒருவரின் விழுப்புண் கூடக் காட்சிப்பொருளாக்கப்பட்ட விதமும் மனசாட்சியே இல்லாமல் அந்த நினைவுகளைக் கிளறி மனதைப்புண்ணாக்கும் விதத்தில் நம்மவர் நடந்து கொள்ளும் விதமும் வேதனை தருவதொன்றே. மரியாதை கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை அதனை ஆய்வுப் பொருளாக்கி ஆதாரம் தேட முயற்சித்து அவமானப் படுத்தாமல் விடுவதே போராளிகளுக்கு கொடுகக் கூடிய மிகக் குறைந்த பட்ச மரியாதை.

மக்களுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து நின்றவர்களின் அத்தனை தியாகமும் அர்த்தமின்றிப் போனதான மனநிலையிலும், அத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருந்திருந்தும் பலனற்றுப் போனது ஆறாக்காயமாகப் படிந்திருக்கும் நிலையிலும் அதைக் கிளறி விட்டு பூராயம் தேட முயற்சிப்பது,  உயிருடன் வைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கொப்பானது என்பதை இச்சிறுகதை சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. போராட்டதுக்கு ஆதரவு கொடுக்கக் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தில், பதவிக்காக ஒரு போராளியின் மானத்தை அடகு வைக்க நினைப்பது நடைமுறையில் இல்லாமல் இல்லை. அது வலியைத் தராமலும் இல்லை. பெண்மையை பேசும் விதத்தை கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் எனக்குள் தோன்றியது.

“முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்”


கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில்ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் வியாழக்-கிழமையில் இந்த நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.

 

இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி


எடுக்கப்பட்டுதமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும்சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும்இந்நாட்களில்  நினைவேந்தி வணக்கமும்அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில்அனைவரும் ஒற்றுமையாகஎந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில்பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போனதுன்பகரமான இந்நாட்களைஆடம்பரகளையும்/ களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடுகொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின்சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும். 

 

மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல்உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்துஇறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும்சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும்உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள்தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள்தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள்தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவைசார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலைபுலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும்அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காகநீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும். 

 

நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய்உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!!

இலங்கைச் செய்திகள்

 வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்த்தினருக்கு அமெரிக்கா நுழைய தடை

வெடுக்குநாறி மலையில் மீண்டும் திருவுருவச்சிலைகள் பிரதிஷ்டை

கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டது

இந்திய சுற்றுலா பயணிகள் இனி இந்திய ரூபாவை பயன்படுத்தலாம்

நுவரெலியா சீதையம்மன் ஆலய சிறப்பை குறிக்கும் விசேட தபாலுறை வெளியீடு


வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்த்தினருக்கு அமெரிக்கா நுழைய தடை

- இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு கவலை
- நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இவ்வேளையில் இம்முடிவு துரதிஷ்டவசமானது
- நல்லிணக்கம், பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்வது தொடர்ந்தும் இடம்பெறும்

கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில், அட்மிரல் ஒப் தி ப்லீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

 அமெரிக்கா–தென் கொரியா இடையே அணு உடன்பாடு

உண்ணாவிரத வழிபாட்டில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு

சூடானிலிருந்து 1,687 பேரை வெளியேற்றியது சவூதி

உலக மக்கள் தொகையில் இந்த வாரம் சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம்

நோர்வேயில் விழுந்த சுவீடனின் ரொக்கெட்


அமெரிக்கா–தென் கொரியா இடையே அணு உடன்பாடு


அமெரிக்காவும் தென்கொரியாவும் புதிய விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி உடன்பாட்டை அறிவித்துள்ளன. வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் தொடரும் வேளையில் இரு நாடுகளும் புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன.

திரு. அங்கஜன் வருகை

 



சிவஞானத்தமிழ் பேரவை வாரந்தோறும் இணைய வழியாக நடாத்தும் திருத்தலத் திருமுறை முற்றோதல்

 


சிட்னியில் சித்திரை திருவிழா - 7.05 2023 - தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்

.
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் 11 வது ஆண்டாக நடாத்தும் 
 சிட்னியில் சித்திரை திருவிழா  - நாள் முழுக்க கொண்டாட் டம்.