சிட்னியில் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டுவிழா




.                                                                                                                    ரகுபரன்
                                              
சென்ற சனிக்கிழமை 16.04.2011 அன்று உரும்பிராய் வாழ் சிட்னி மக்கள் சிட்னியில் லிட்கத்தில்  ஒன்றுகூடி கொண்டாடிய நிகழ்வு இடம் பெற்றிருந்தது. மங்கல விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. திரு திருமதி சோமசுந்தரம், திரு திருமதி சிவகுருநாதன், திரு திருமதி ஈஸ்வரலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கை ஏற்றிவைக்க செல்வன் சரவணன் சிவகுமார் தமிழ்வாழ்த்தையும் ஒஸ்ரேலிய கீதத்தையும் பாடினார். அதனைத்தொடர்ந்து உரும்பிராய் இந்துக்கல்லூரியின் கீதத்தை திருமதி கலா இளங்கோ, திருமதி குமுதினி அன்ரனிப்பிள்ளை, திருமதி சாந்தி பாஸ்கரன், திருமதி வாசுகி ஈஸ்வரலிங்கம் திரு சிவகுமார் சிவகுருநாதன் ஆகியோர் இசைத்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்பு கல்லூரி கீதத்தை சிட்னில் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

பாமரனுக்காகப் பாட்டெழுதிய பட்டுக்கோட்டையார்


.
.
                                              
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை மக்கள் கவிஞர் என்றழைத்தார்கள். பாமர மக்களுக்காக எளிய பேச்சு வழக்கிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் அவர். அவருடைய பாடல்கள் மக்களின் அறியாமையைச் சாடி முன்னேற்றப் பாதையில் அவர்களை முடுக்கி விடும் வல்லமை படைத்ததாக இருந்தன.
இன்றும் பாமர மக்களைக் கவரும் வகையில் தமிழில் பேச்சு வழக்கில் தாங்களும் பாடுவதாக எண்ணிக்கொண்டு குப்பைகளைத் திரைப்பாடல்கள் என்ற பெயரில் பலரும் பல சத்தங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் அந்தந்த கால கட்டங்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்து போய் விடுகின்றன. ஆனால் பட்டுக்கோட்டையாருடைய பாடல்களோ காலத்தை வென்று இன்றும் பேசப்படுவதே அந்த மக்கள் கவிஞரின் பாடல்களின் தரத்திற்குத் தரப்படும் சான்றிதழ்.

துர்க்கை அம்மன் கோவில் அடிக்கல் நாட்டு விழா



                                                                                                                                                                   


சிட்னி துர்க்கை அம்மன்  கோவில் அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் மாதம் 3ம் திகதி காலை 11:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது . இவ்வைபத்தில் கலந்துகொண்டு சிறப்பளித்த அடியார்களை  கீழேயுள்ள படங்களில் பார்க்கலாம்

ATBC யின் கலை ஒலி மாலை 2011

அபயகரம் அளிக்கும் இசை நிகழ்ச்சி

.
சென்னையில் இருந்து பாரம்பரிய(Classical)  மற்றும் சங்கம இசை (Fusion Music) வழங்கிப் பிரசித்தி பெற்ற சங்கீதக் குழுவின் இசை நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவில் முதல்முதலாக வருகிற ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி மாலை 6மணிக்கு UWS, Rydalmere, Parramatta Campus y; Sir Ian and Nancy Turbot அரங்கில் நடைபெறவுள்ளது. வரையறுக்கப் படாத இசையை இரசித்து மகிழ்வதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து “இராஜ நர்த்தகி” என்னும் நாட்டிய நடனத்தை கார்த்திகா நடனக் குழுவினர் அளிக்கவுள்ளனர்.



“மூன்று …சங்கீதத்திற்கே” …ஓர் அறிமுகம்!
(தமிழாக்கம்: கலாநிதி இளமுருகனார் பாரதி)

ஈழத்துச் சிறுகதைகள் எனது பார்வை -முல்லைஅமுதன்


.
ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை.
ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும்.
குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை.

இலங்கைச் செய்திகள்

.
ரியூசன் கலாசாரம்
கிரிக்கெட்டும் அரசியலும்
வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் கிளிநொச்சி சிறுவர்கள் 
பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு
 

தனியார் ரியூசன் வகுப்புகளுக்குச் செல்வதில் மாணவர்கள் அதீத ஆர்வம் காட்டுவதைத் தவிர்க்க எமது பாடசாலைகளுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் போதியளவில் தேவைப்படுகிறார்கள் என்றும் திறமையும் தகுதியுமுடைய ஆசிரியர்களைப் பாடசாலைக்கு வழங்குவதன் மூலமும் மாணவர்களுக்கு அவர்களின் பாடங்கள் பற்றிய அறிவை அளவு கடந்து அளிப்பதன் மூலமும் ரியூசன் யுகத்துக்கு இலகுவாக முடிவைக் கட்டக் கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தென்பகுதியில் மாத்தறை பாடசாலை வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது குறிப்பிட்டிருக்கும் கருத்து எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கம்பன் பணியில் ஐந்தாவது அகவை காணும் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் பெருமையுடன் வழங்கும் இலக்கிய நிகழ்வு.

.
காகுத்தன் கழற்றுணையும், அனுமன் அருளும், கம்பன் ஆசியும், தமிழ் ஆர்வலர்களான உங்கள் ஆதரவும் எமக்கிருக்க, எமது இவ்வாண்டுச் செயற்பாடுகளின் முதல் முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மனம் மகிழ்கின்றோம்.

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!

.
இருவரும், என்னருகில் வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றேன். அப்படியா விமானச் சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ பேசிக் கொண்டனர்.

நான் ஒன்றும் புரியாதவனாய் அவர்களையே பார்க்க, பையில் என்ன வைத்திருக்கிறாய் பிரி என்றார்கள், பிரித்து உள்ளே வைத்திருந்த மடிக் கணினியினை காட்டினேன். சரி சரி போ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, முகத்தை சற்று சந்தேக தொனியோடு வைத்துக் கொண்டு என்னைப் பார்க்க, நான் எங்கும் போக விரும்பவில்லை, என் விமானம் புறப்பட இன்னும் அவகாசங்கள் உள்ளன என்றேன்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.


46. இரண்டும் கிளிகளும் சூழ்நிலையும்
ஒரு மரத்தில் இரண்டு கிளிகள் இருந்தன: சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டும் இரட்டைக் கிளிகள்! ஒரு வேடன் அவற்றைக் கண்ணி வைத்துப் பிடித்தான்: பிடித்தவன் அதனை விற்றுவிட்டான். ஒரு கிளியை கீழ்மைக் குணம் நிறைந்த, கொடூரமான கசப்புக் கடைக்காரனுக்கும், மற்றொரு கிளியை வேதங்களைக் கற்பிக்கும் ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும்

முனிவர் ஒருவருக்கும்
விற்றுவிட்டான்.

உலகச் செய்திகள்


ஜப்பானில் திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 ம் திகதி  மீண்டும் நிலநடுக்கம்! 7.1 ரிச்டர் அளவு பதிவாகியுள்ளது


 ஜப்பானை பயங்கர பூகம்பமும் சுனாமியும் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி  ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், திங்கட்கிழமை காலையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 புள்ளிகளாகப் பதிவானது.

இதையடுத்து 1 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால்,  சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

இந் நிலையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன் சுனாமி தாக்கியதன் நினைவாக ஜப்பான் முழுவதும் திங்கட்கிழமை அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன



பயம் - என். கணேசன்

.

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.

AUSTRALIAN MEDICAL AID FOUNDATION

நிதி சேகரிப்பு நிகழ்வு 22/04/2011

இலங்கைக்கும் தாமிரபரணி நதிக்குமான வரலாற்றுத் தொடர்பு ஒரு நோக்கு

 .
பொங்கி வழிந்து ஒரு காலத்தில் பெருக்கெடுத்து, ஓடிய தாமிரபரணி
இன்று ஒரு கால்வாயைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று
தாமிரபரணியும், தாமிரபரணி வளர்த்த திருநெல்வேலி நகரமும், பிளாஸ்டிக்
குப்பைகளுக்கிடையே தேக்கி வைக்கப்பட்ட சாக்கடை நீரில்
மூழ்கிப்போகுமோ என்ற அச்ச உணர்வு நகரத்தைப் பார்க்கும் போதெல்லாம்
தோன்றிவிடுகிறது.
தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான உறவுகள், வரலாற்றின் ஆதிப்
பக்கங்களில், இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது. இலங்கை - கிரேக்க,
அரேபிய, சீன பயணக் குறிப்புகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஓவியக் குறியீடுகள், வேறு பல தொன்ம அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் இதன் பதிவை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளல் இயலும்.
இந்தப் பதிவுகள் அனைத்திலும்,
இலங்கை என்னும் பெயரைக் காண முடியவில்லை.

பேர்த் பால முருகன் கோவில் வருடாந்த திருவிழா



தமிழ் சினிமா

.
1. பொன்னர் சங்கர்
2. நஞ்சுபுரம்
3. அப்பாவி
1. பொன்னர் சங்கர்

மம்பட்டியான் படம்தானே என்ற அலட்சிய பார்வையோடு தியேட்டருக்குள் போனால், அந்த பார்வையை 'சம்மட்டி' அடி கொடுத்து தகர்க்கிறார் தியாகராஜன். விளையாட்டாக இழுக்க இது பொம்மை தேர் அல்ல. திருவாரூர் தேர் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் இந்த பிரமாண்ட டைரக்டர். படம் நகரும் ஒவ்வொரு நிமிஷமும் கோடிகள் ஸ்வாகா ஆகியிருக்கிறது சர்வ சாதாரணமாக! கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இந்த அண்ணன்மார்கள், மார்தட்ட வைக்கிறார்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே!

கிரிக்கெட் போட்டி


.
அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் மைக்கேல் கிளார்க்கின் அபார சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது.

பங்களாதேஷ் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.முதல் போட்டி  திங்கட்கிழமை  ஏப்ரல்  மாதம் 11  ம் திகதி  மிர்பூரில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் கப்டன் சாகிப் அல் ஹசன் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அவுஸ்திரேலிய அணிக்கு வற்சன்,ஹாடின் ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. ஹாடின் (10), வற்சன் (37) விரைவில் திரும்பினர். பொண்டிங் 34 ஓட்டங்கள் எடுத்தார். கமரோன் வைற் (20),மைக்கேல் ஹசி (33),நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் புதிய கப்டன் மைக்கேல் கிளார்க் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மனதை அமைதியாக வையுங்கள் - காவிரிமைந்தன்

.
1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.

உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

“சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக்கப்பட வேண்டும்!



.
பாராளுமன்றத்தில் 55 வருடங்களுக்கு முன்பே முழங்கிய பொன்.கந்தையா
1956ல் பதவிக்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் அரசாங்கம், ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை
பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, தமிழர்களின் வரலாற்றில் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரே கம்யூனிஸ்ட்
பாராளுமன்ற உறுப்பினரான (1956 - பருத்தித்துறை தொகுதி) தோழர் பொன்.கந்தையா, அந்த மசோதா மீது ஆற்றிய
உரையின் சில பகுதிகள், அதன் முக்கியத்துவம் கருதி கீழே தரப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு எதிராக
எனது கருத்துக்களைச் சொல்ல நான் இப்பொழுது
எழுகின்றேன்.
இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் எமது கருத்தாகும்.
“நிச்சயமாக சிங்கள மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று ஒரு கம்யூனிஸ்ட்
கட்சி உறுப்பினர் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது.
அதனாற்தான் “தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டுமானால்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று
பருத்தித்துறையில் நானே கூறியுள்ளேன். ஏன்? ஏனென்றால்,
எமது கம்யூனிஸ்ட் கட்சி தான், இறுதியில் எமது நாட்டின்
சுயபாசைகளையும் பண்பாடுகளையும் பாதுகாக்கக் கூடிய
பாதுகாவலனாக இருக்கப் போகின்றது என்பது எங்களுக்குத்
தெரியும்.