கடல் ஏறி வந்த ஈழக்குயில் - பா.சுசி -

.
பேர்த்  தடுப்பு முகாமிலிருந்து இந்த கவிதையை அனுப்பியிருக்கிறார் இந்த இளையன் முழுப்பெயர் போடப்படவில்லை



கடலில் உயிரை இரை போட்டு 
கிடைத்த பயணப் பரிசொன்று 
கரையைக் கண்டு மகிழ்வுற்றோம் 
தாய்  நாட்டில் வாழ முடியாமல் 
அச்சம் உறைந்து வாழ்ந்த நாங்கள் 
மிச்சம் இருந்த உயிரை மட்டும் 
துச்சம் என்று மதிக்காது 
கடலே சாவு என்றறிந்தும் 
துணிந்தே கடலில் கால் பதித்தோம் 

வயித்தைக் கட்டி வாயடக்கி 
வாழ்விற்கான நோய் சுமந்து 
நிமிடம் தோறும் சாவோசை 
கேட்டே கடலில் எம்பயணம் 

அன்னை பிள்ளை உறவிளந்தோம் 
அன்பு மனையாள் நினைவிளந்தோம் 
நாங்கள் பெற்ற பிள்ளைகளை 
நடுத் தெருவில் விட்டு வந்தோம் 

உயிர் இருந்தால் போதுமென 
என் மனையாள் விடை கொடுத்தாள் 
உயிரே பிள்ளை போரையோ 
என்றே தாயும் அடம் பிடித்தாள் 

சிட்னி முருகன் கோவிலில் ஆடிப் பூரம் 09-08-2013

படப்பிடிப்பு ஞானி


வ யலின் கச்சேரி - திருமதி அமுலா சத்தியவதி - 10/08/2013

படப்பிடிப்பு ஞானி


கஜறாகோ – Khajuraho - கார்த்திகா கணேஷர்

.
இளம் Saint உம் Julia வும் U.S - Bosten இல் இருந்து வந்து இந்திய Khajuraho யோகினி ஆலயத்தில் தமது திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினார். அதன் பிரகாரம் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, புரோகிதர் வேதம் ஓத, அக்கினி சாட்சியாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, சபையோர் சாட்சியாக Saint Julia வின் கழுத்திலே மூன்று முடிச்சுப்போட்டு  Julia வை மனைவியாக்கினான்.

இந்த Khajuraho கோயிலை தேர்ந்தெடுத்ததற்கு அங்கு காணப்படும் அழகிய சிற்பங்களே காரணம் எனவும் கூறினார். கி.பி 10 நூற்றாண்டில் பாதிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் காமசூத்திரத்தில் காணப்பட்ட ஆண் பெண் புணர்ச்சி நிலைகள் பலவும் அழகிய சிலை வடிவமாக அமைந்துள்ளது. தெய்வத்தை வணங்கும் ஆலயத்தில் இத்தனை இத்தனை ஆபாசமா என பலர் முகத்தை சுளிப்பதும் உண்டு. மகாத்மா காந்தியோ தமது  40தாவது வயதில் மனைவியுடன் வாழ்ந்தபோதும் பிரம்மச்சாரியத்தை அனுட்டித்தார். இந்த கோயிலை பார்வையிட்ட மகாத்மா காந்தி கொதிப்படைந்து இதை தகர்த்தெறிய வேண்டும் என கூறினாராம். மகாத்மா காந்தி இவ்வாறு கூறியபோதும் UNESCO ஸ்தாபனம் இந்த கோயிலை World Heritage Site   ஆக அதாவது வருங்கால சந்ததியினருக்காக காப்பாற்ற படவேண்டிய முக்கிய இடமாக பாதுகாக்கிறது.

இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்


.

இலங்கையில்  நீடித்த  போரினால்  பெற்றவர்களை  இழந்து,  ஏழ்மை  நிலையினால்   கல்வியை  தொடரமுடியாமல்  சிரமப்படும்  தமிழ்  மாணவர்களுக்கு  அவுஸ்திரேலியா உட்பட  பல  நாடுகளிலிருந்தும்  அன்பர்களின்  ஆதரவுடன்  உதவிவரும்  இலங்கை மாணவர்  கல்விநிதியம்   இரக்கமுள்ள  அன்பர்களுக்கு  இந்த  அறிக்கையின்  ஊடாக உருக்கமான   வேண்டுகோளை   முன்வைக்கின்றது.
அவுஸ்திரேலியா   மெல்பனை  தலைமையகமாகக்   கொண்டியங்கும்  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  கடந்த  1989 ஆம்  ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவில்  விக்ரோரியா  மாநிலத்தில்  பதிவு செய்யப்பட்ட  அமைப்பாக  இயங்கும்  இந்தத்  தொண்டு   நிறுவனம்,   இலங்கையில்  வடக்கு, கிழக்கு, மாகாணங்களில்   யாழ்ப்பாணம்,   கிளிநொச்சி,   முல்லைத்தீவு,   திருகோணமலை, மட்டக்களப்பு,   அம்பாறை   ஆகிய   மாவட்டங்களில்   போரினால்  தாய்,   தந்தை  மற்றும்  குடும்பத்தின்  மூல  உழைப்பாளிகளை  இழந்த   ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு   தொடர்ச்சியாக    உதவி   வருகிறது.
முதலாம்  வகுப்பிலிருந்து  பல்கலைக்கழக  புகுமுக  வகுப்பு  ( க.பொ.த.  உயர் தரம்)  வரையில்   கல்வி  பயிலும்   மாணவர்கள்  பலர்   இந்த   உதவித்திட்டத்தினால்  நல்ல  பலனையும்  பயனையும்  அடைந்துள்ளனர்.
கடந்த   ஆண்டுகளில்  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின்  உதவியினைப்பெற்ற  நூற்றுக்கணக்கான   மாணவர்கள்   பல்கலைக்கழகங்களுக்கு  பிரவேசித்துள்ளனர்.  மேலும்  பல  மாணவர்கள்  தமது  பல்கலைக்கழக   கல்வியை  நிறைவு செய்து, பட்டமும்   பெற்று   தொழில்  வாய்ப்புகளும்  பெற்றுள்ளனர்.
போரில்  தமது  கால்  இழந்த  சில  மாணவர்களும்  இந்நிதியத்தின்  ஆதரவுடன்  தமது  கல்வியை  தொடருகின்றனர்.
ஒரு  மாணவருக்கு  உதவ விரும்பும்  அன்பர்  மாதாந்தம்  கூ 21 அவுஸ்திரேலியன்  வெள்ளிகளை   வழங்குவதன்   மூலம்  ஒரு  மாணவர்,   தனது கல்வியை  நிறைவு செய்யும்   வரையில்    உதவமுடியும்.
உதவி   பெறும்  மாணவரின்  பூரணவிபரங்கள்  உதவும்  அன்பருக்கு  தரப்படுவதுடன்,  மாணவரின்  கல்வி   முன்னேற்றச்சான்றிதழ்   மற்றும்  உதவி  பெற்றதை  அத்தாட்சிப்படுத்தும்  கடிதங்கள்  முதலானவற்றையும்  நிதியம்  அன்பர்களுக்கு  அனுப்பிவைக்கும்.

நோவா’வின் படகு (Ship of Theseus)

.


பிரச்சார நெடியின்றி சொல்ல வந்ததை,அழுத்தமான வசனங்களாலும், இயல்பாகவே அமைந்து விட்ட காட்சிகளைக்கொண்டும்,காட்சிகளுக்கு பொருந்தும் அளவான இசையோடும் என இவ்வளவையும் வைத்துக்கொண்டு கூடவே ஒரு செய்தியும் சொல்லவேண்டும் என நினைத்து எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் காந்தி. செண்ட்டிமெண்ட்டலாக K Series-ல் ஆரம்பிக்கும் ‘ஏக்தா கபூரின்’ டீவி சீரியல்களுக்கென வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரிடமிருந்து இப்படி ஒரு நம் மனதில் அழுந்தப் பதியவைக்கும் படம், முதலில் ஒரு சபாஷ் போட்டுவிட்டுத்தான் விமர்சனம் எல்லாம்.


தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறான் அந்தப் பையன் சார்வாகா.( வினய் ஷுக்லா) நீதிமன்றத் தாழ்வாரத்தில் எப்படி இங்கு வந்தது எனத்தெரியாமல் ஒரு ரயில் பூச்சி ஊறிக் கொண்டேயிருக்கிறது. அத்தனை தரையோடு தரையாக வைத்த ஆங்கிள் இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். எத்தனையோ பேர் நடந்து செல்கின்றனர். காலை கோர்ட் ஆரம்பிக்கும் நேரம் அத்தனை பரபரப்புக்குமிடையில் அந்த ரயில் பூச்சி தனது அத்தனை கால்களையும் ஒருசேர முன்னோக்கித் தள்ளிக்கொண்டு பயணிக்கிறது. யாருடைய காலில் எப்போது மிதிபடுமோ என்று நமக்குள்ளே ஒரு துடிப்பு. ஜெயின் துறவி மைத்ரேயா ( நீரஜ் கபி ) யாரோ தம் கையில் இருக்கும் அந்தக்காகிதத்தை தரையின் அடியோடு ஒட்டிவைத்து பூச்சியை அதன் மீதேறி பயணிக்கவைத்து பின் அருகிலிருக்கும் ஒரு செடியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார். சார்வாகா’வின் கால்களேயில்லாத கேள்விக்கணைகள் மைத்ரேயரை நோக்கி “இப்ப அந்தப்பூச்சியை கொண்டுபோய் செடியில விட்டுட்டீங்க, அது தற்கொலை மூலமா நிர்வாணத்தை அடைவதற்கு தாழ்வாரத்துக்கு வந்திருக்கலாமில்லயா..? இப்படி அதனின் சைக்கிள் முழுமையாகாமல் ஏன் தடுத்து விட்டீர்கள் , ஹ்ம்..இப்ப அது மறுபடி இங்க எப்டி வர்றதுன்னு தெரியாம எத்தன மணி நேரம் எத்தன நாளாகுமோன்னு சுத்திக்கிட்டு இருக்கும் ?“.மெலிதான புன்முறுவல் துறவியின் முகத்தில்.

உலகச் செய்திகள்


அல்-கொய்தா தாக்குதல் அச்சுறுத்தலால் 25 அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இரானுவத்தினர் மோதல்

நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்

சிரி­யாவில் படை­யினர் தாக்­குதல் 62 பேர் உயி­ரி­ழப்பு; தொடரும் மோதல்கள் 

 கலிபோர்னியாவில் காட்டுத் தீ
======================================================================
அல்-கொய்தா தாக்குதல் அச்சுறுத்தலால் 25 அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன

5/8/2013  அமெ­ரிக்­கா­வா­னது அல் - கொய்தா போரா­ளி­களால் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்ற அச்­சத்தில் மத்­திய கிழக்கு உள்­ள­டங்­க­லான நாடு­க­ளி­லுள்ள தனது 25 தூத­ர­கங்கள் மற்றும் பிர­தி­நி­திகள் அலு­வ­ல­கங்­களை ஞாயிற்றுக்கிழமை தற்­கா­லி­க­மாக மூடி­யுள்­ளது.
அதே­ச­மயம் அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிறப்­பிக்­கப்­பட்ட உலக பயண எச்­ச­ரிக்­கை­யா­னது இந்த மாத இறுதி வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
குறிப்­பாக மத்­திய கிழக்கு மற்றும் வட ஆபி­ரிக்­காவில் அல் - கொய்தா போரா­ளி­களால் தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.

கலை வாணர் சொன்ன "மை" கள் -

.
    

                
    ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.
    “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
    “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.
    அதைக்கேட்டதும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
    “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“யாகவும், உரி“மை“யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
   கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.

பிடித்ததைப் பகிர்ந்தேன்.
அருணா செல்வம்.

நன்றி arouna-selvame.blogspot.

அருணாசல அற்புதம் 2: கிரிவலம் தரும் பெருநலம்


ரமணாச்ரமத்திலிருந்து அண்ணாமலை தரிசனம்

சென்ற ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று ஆருத்திரா தரிசனம் என்னும் திருவாதிரை நாள் வந்தது. அது சிவபெருமானுக்கு விசேடமான நாட்களில் ஒன்று. மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதையே!என்றுதான் சிவபக்த சிரோமணியான நந்தனார் சிதம்பரத்துக்குப் போய்த் திருச்சிற்றம்பலவனைத் தரிசிக்க ஆசைகொண்டு பாடினார்.
ஆனால் 1879ஆம் ஆண்டில் ஆருத்திரா தரிசனம் டிசம்பர் 29ஆம் தேதியன்று வந்தது. அன்றிரவு மணி ஒன்று இருக்கும். திருச்சுழி என்ற ஊரில் அழகம்மாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும் அவ்வூர்க் கோவிலுக்குள் பூமிநாதர் நுழையவும் சரியாக இருந்தது. இப்போதுபோல மகப்பேறு வசதிகள் இல்லாத காலத்தில் அவருடன் இருந்தவர் கண் தெரியாத ஒரு பெண்மணி. ஆனால், என்ன ஆச்சரியம்! குழந்தை பிறந்த அதே நேரத்தில் அவள் கண்முன்னே ஒரு மின்னல்வெட்டு தோன்றி மறைந்தது. அழகம்மை, இவன் தெய்வீகப் பிறவியாக இருக்கவேண்டும்என்றாள் அந்த முதியவள்.

இலங்கைச் செய்திகள்


வெலிவேரிய சம்பவத்தில் இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும், மக்கள் சேவைக்கு முதலிடம்: பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

ஊடக சுதந்­திரம் குறித்து வெறும் உதட்­ட­ளவில் மட்டும் செயற்­பட வேண்­டா­ம் : பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் கண்­டனம்

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்

பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி

வெலிவேரிய சம்பவத்தை கண்டித்து எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறியோர் ஆர்ப்பாட்டம்

=========================================================================
வெலிவேரிய சம்பவத்தில் இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

5/8/2013    ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உயிரிழந்த அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன.

திரும்பிப்பார்க்கின்றேன் - 02 முருகபூபதி

.
வாழ்வில்  எது எஞ்சும்? எது மிஞ்சும்? பயணத்தை    திசை  திருப்பிய ‘மாணிக்ஸ்’ மாணிக்கவாசகர் -

 “ இவர்  ஓர்  எழுத்தாளர்  அல்லர்.  ஆனால்,  எப்பொழுதுமே  எழுத்தாளர்களுக்கு மத்தியிலே  காணப்படுபவர்.   எழுத்தாளர்களுக்காக  எதையும்  செய்யத்துணிபவரும் கூட. குறிப்பாக  முற்போக்கு  எழுத்தாளர்களால்  நன்கு  அறியப்பட்டவர்.  மாணிக்கவாசகர்தான் அவரது  பெயர்.” - இவ்வாறு  மல்லிகை 2010 அக்டோபர் இதழில், தமது வாழும் நினைவுகள்  தொடரில்  பதிவு  செய்கிறார்  நண்பர்  திக்குவல்லை கமால்.
 கமாலின்  வார்த்தைகளை  நான்  மட்டுமல்ல மாணிக்கவாசகரை நன்கு தெரிந்த அனைவருமே  அங்கீகரிப்பார்கள்.
 எனது  வாழ்வை  ஒருகட்டத்தில்  திசை  திருப்பியவர்தான்  இந்த மாணிக்கவாசகர். 1973-1976  காலப்பகுதியில்  நிரந்தரமான  வேலை  எதுவும்  இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன்.
காலிமுகத்திடலில்  வீதி  அகலமாக்கும்  நிர்மாணப்பணியில்  ஒப்பந்த  அடிப்படையில் அங்கு  வேலை  செய்த  தொழிலாளர்களை ‘மேய்க்கும்’ ஓவர்ஸீயர்  வேலையையும் ஒப்பந்தம்  முடிந்ததும்   இழக்கநேர்ந்தது. எனது  நிலைமையைப்பார்த்து  பரிதாபப்பட்ட  பிரேம்ஜியும்  சோமகாந்தனும்  எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக  வேலைகளுக்காக  என்னை உள்வாங்கி  மாதம் 150 ரூபா அலவன்ஸ்  தந்தார்கள். நானும்  நீர்கொழும்பு – கொழும்பு என  தினசரி  பஸ்ஸ_க்கு  செலவழித்து  பயணித்துக்கொண்டிருந்தேன். முற்போக்கு எழுத்தாளர்  சங்கம்  மற்றும்  கூட்டுறவுப்பதிப்பகத்தின்  பணிகளின்போதுதான்  மாணிக்ஸ் அறிமுகமானார்.  அவருடன்  அறிமுகமான  மற்றுமொருவர்  சிவராசா  மாஸ்டர். இருவருமே கம்யூனிஸ்ட்  கட்சியின் (மாஸ்கோ)  ஆதரவாளர்கள்.  அத்துடன்  இருவரும் ஆசிரியர்களாக  கொழும்பில்  பணியிலிருந்தவர்கள். எங்களுடன்  இணைந்து அலைந்துகொண்டிருக்கையில்  ஒருநாள்  திடீரென்று  மாணிக்ஸ்  சொன்னார்:
 “பூபதி… கொழும்பில்  கல்வி  அமைச்சு அமைந்திருக்கும் மலே வீதியில் எங்களது தொழிற்சங்கமான  இலங்கை ஆசிரியர்  சங்கம்  இயங்குகிறது.  மாலையில்  அங்கே வாரும்  உமக்கு  ஒரு  வேலை காத்திருக்கிறது.”
 அவர்  சொன்னவாறு  அங்கே  சென்றேன்.  ஆசிரியர்  சங்கத்தின்  அப்போதைய தலைவர் எச். என். பெர்னாண்டோ,  செயலாளர்  சித்ரால் ஆகியோரை மாணிக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார்.  எனக்கு மொழிபெயர்ப்பு  வேலைகளும் ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ  வெளியீடான  ஆசிரியர் குரல் இதழை  Pசழழக   பார்த்து  நுனவை   செய்யும் வேலையும்  தரப்பட்டது.  மாதாந்தம் 150 ரூபா அலவன்ஸ் தருவதாகச்சொன்னார்கள். வேலையை  ஏற்றுக்கொண்டேன்.  தினமும் கொழும்பு சென்று ஆசிரியர் சங்கத்தினதும் முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தினதும்  வேலைகளைச்செய்தேன்.
 கொழும்புக்கு  தனது  மகன் வேலைக்குப்போகிறான்  என்ற  மகிழ்ச்சியில் அம்மா தினமும்  எனக்கு  சோற்றுப்பார்சல்  தந்து  அனுப்பினார்கள்.
 மாணிக்கவாசகரின்  அண்ணன்  குமாரசாமி  கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்திய  குழுவில் இருந்தவர்.  இன்னுமொரு  குமாரசாமியும்  இருந்தார்.  அவர் பொன். குமாரசாமி. மாணிக்ஸின்  அண்ணன்  ஸி.குமாரசாமி.  அதனால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முற்போக்கு முகாமில் அவர்கள்  ஸி.கும்,  என்றும்  பி.கும்  எனவும் அழைக்கப்பட்டார்கள்.

நினைவு நல்லது வேண்டும் வெளியீட்டு விழா - யாழ் நிருபர்

.
ப.விஸ்ணுவர்த்தினியின் ‘நினைவு நல்லது வேண்டும் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா அண்மையில் அல்வாயில் உள்ள கலைஅகத்தில் நடைபெற்ற போது பிரபல எழுத்தளார் தெணியான் தலைமையுரை ஆற்றுவதையும் க.மதனாஹரன் வரவேற்புரை ஆற்றுவ தையும், நூலை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் வெளியீட்டு வைப்பதையும், நயப்புரைகளை எழுத்தளார்களான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், எஸ்.தனேஸவரி ஆகியோர்  நிகழம்துவதையும் காணலாம்



இறுதித் தேர்வு -அ.முத்துலிங்கம்

.
 காலை சரியாக ஐந்து மணிக்கு அவளுடைய செல்பேசி அலாரம் ஒலித்து அவளை  எழுப்பியது. அதை அணைத்துவிட்டு படுக்கையில் இருந்தபடியே எட்டி காப்பி மெசின் பட்டனை தட்டினாள். அது கிர் என்று சத்தத்துடன் உயிர் பெற்றது. செல்பேசியில் அன்றைய கால நிலையை பார்த்துவிட்டு முக்கியமான பத்திரிகை செய்திகளையும் படித்தாள். ஓர் இணையதளம் விலைக்கு வந்தது. அதை வாங்கி விற்றதில் 2000 டொலர் லாபம் கிடைத்தது. அதை செல்பேசி மூலம் நேரே தன் வங்கிக்கு அனுப்பினாள். அவளுடைய 19வது பிறந்தநாளுக்கு 367 வாழ்த்துக்கள் வந்திருந்தன. அவற்றிற்கெல்லாம் ’நன்றி’ என்று ஒரு வார்த்தையில் பதில் அனுப்பினாள். காப்பி, கடுதாசி குவளையில் தயாராகி பாலும் சீனியும் அளவாக கலந்து டிங் என்ற ஒலியுடன் இறங்கி நின்றது. அவள் ஒரு மிடறு பருகினாள்.

அவள் கனடியப் பெண். பெயர் அரா யாயுன். பிறந்த தேதி 31 அக்டோபர் 2011, உலக சனத்தொகை 7 பில்லியன் இலக்கத்தை தொட்ட அன்று பிறந்தாள். இன்று, 31 அக்டோபர் 2030 அவளுடைய 19வது வயதில் உலக சனத்தொகை 8.3 பில்லியனை எட்டியிருந்தது. அவளுடைய காதலன் காணொளி வாழ்த்து அனுப்பியிருந்தான். பிறந்தநாள் அன்று ஏதாவது வித்தியாசமாகச்  செய்து மகிழவேண்டும் என நினைத்தாள். 33 வருடம் பழசான டைட்டானிக் திரைப்படத்தை செல்பேசியை அமுக்கி சுவரில் ஓடவிட்டாள். ஒரு சின்ன மாற்றம். கேற்வின்ஸ்லெட் முகத்தை தன் முகமாக மாற்றினாள். லியனார்டோ டிகாப்ரியாவின் முகத்தை தன் காதலன் முகமாக மாற்றினாள். ரோஸின் தாயார் கோர்ஸெட்டை ரோஸின் வயிற்றில் இறுக்கிக் கட்டிய இடம் வந்தபோது இவளும் வயிற்றை எக்கினாள். பின்னர் வாய்விட்டு சிரித்துக்கொண்டாள்.

தமிழ் சினிமா

பட்டத்து யானை 

காரைக்குடியில் பிரபலமான சமையல்காரர் சந்தானத்திடம், அந்த ஊர் ரவுடி தன்னுடைய திருமணத்திற்கு சமையல் செய்யவேண்டுமென்று கூறுகிறார்.
ரவுடிக்கு பயந்து சந்தானத்தின் வேலையாட்கள் ஒவ்வொருவராக வேலையைவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் சமையல் செய்ய ஆள் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு, அவனது வேலையாள் ஒருவன் விஷால், ஜெகன் உள்ளிட்ட 5 பேரை சந்தானத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும்போதே பொலிஸ்காரரின் மகன் திருமணத்திற்கு சமையல் ஆர்டர் எடுத்து வருகிறார்கள். ரவுடியின் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்ட அதே திகதியிலேயே இந்த ஆர்டரும் வருகிறது.
ரவுடியை பொலிஸிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு, பொலிஸ்காரர் மகளின் திருமணத்திற்கு சென்று சமைக்கலாம் என்று விஷால் ஆலோசனை கூறுகிறார்.
அதன்படி, பொலிசில் சென்று ரவுடியை பற்றி புகார் கொடுக்கிறார்கள். பொலிசும் ரவுடியை பிடித்து உள்ளே தள்ளுகிறது.
இதனால் கோபமடைந்த ரவுடி, சந்தானம் மற்றும் விஷால் கூட்டாளிகளை போட்டுத்தள்ள முடிவெடுக்கிறான்.
இதனால், ஊரை காலி செய்து திருச்சிக்கு சென்று ஓட்டல் வைக்கலாம் என்று முடிவெடுத்து கையிலிருக்கும் ரூ.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு வருகிறார்கள்.
திருச்சிக்கு வந்தவுடன் ஐஸ்வர்யாவை பார்க்கும் விஷால், பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். ஐஸ்வர்யா திருச்சியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த காதல் மயக்கத்துடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது நாயகியால் ரூ.2 லட்சம் பணத்தை தொலைக்கின்றனர்.
இதற்கு பொறுப்பேற்ற ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவருடைய நண்பர்களை பணம் கிடைக்கும்வரை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
மறுமுனையில், திருச்சியில் கட்டப்படும் காம்ப்ளக்சில் கார் பார்க்கிங் இல்லாததால் அதை கட்டுவதற்கு தடை உத்தரவு வாங்குகிறார் ஐஸ்வர்யாவின் அப்பா, ‘பட்டிமன்றம்’ ராஜா.
இந்த கட்டிடத்தின் உரிமையாளரான மதுரை அண்ணாச்சி இந்த பிரச்சனையை தீர்த்துவைக்கவேண்டும் என்று திருச்சி ரவுடியான மன்னாவிடம் கூறுகிறார்.
இதனால் ராஜா வீட்டுக்கு சென்று தகராறு செய்கின்றார் மன்னா. அப்போது, ஐஸ்வர்யாவைப் பார்க்கும் மன்னா அவளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு அவரது பெற்றோரை மிரட்டுகிறான்.
என்னசெய்வதென்று புரியாமல் விழிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவளது பெற்றோர், விஷாலிடம் நடந்ததை விவரிக்கின்றனர். ஐஸ்வர்யா மீதுள்ள காதலால் விஸ்வரூபம் எடுத்து ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார்.
சண்டையின் இறுதியில் சமையல்காரன் நீ என்னை அடிச்சிட்டியாடா? உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தும்போது, நான் சமையல் கத்துக்கிட்டதே மதுரை ஜெயில்லதான்டா...! என்று கர்ஜிக்கிறார் விஷால்.
அதன்பின்பு, விஷால் ஜெயிலுக்கு எப்படி போனார்? என்பதற்கு பிளாஷ் பேக் விரிகிறது. இறுதியில் மன்னா-வின் கும்பல் விஷாலிடமிருந்து ஐஸ்வர்யாவை பிரித்ததா? ஐஸ்வர்யாவிடம் தன் காதலை சொல்லி அவரை விஷால் கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
விஷால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுவதும் ஸ்கோர் செய்கிறார். காதல், நட்பு, பாசம், நகைச்சுவை என்று ஒவ்வொரு இடத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை மிரட்டியிருக்கிறார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆனால், பார்ப்பதற்குத்தான் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றமாக காட்சியளிக்கிறார். மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கும் இவரை, பாவடை தாவணியில் ரசிக்க முடியவில்லை.
சந்தானம் தனது வழக்கமான பாணியில், நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஓட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா திரையரங்கில் விசில் பறக்கவைக்கிறது.
விஷாலின் நண்பர்களாக வரும் ஜெகன், சரித்திரன், ஐஸ்வர்யாவின் பெற்றோராக வரும் பட்டிமன்றம் ராஜா- சீதா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மயில்சாமி சிறிது நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.
தன்னுடைய படங்களில் வழக்கமாக அரைக்கும் மசாலாவையே இந்த படத்திலும் அரைத்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். முதல் பாதியில் கொமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல், சண்டை என்று கலந்து கொடுத்திருக்கிறார்.
தமன் இசையில் ‘என்ன ஒரு என்ன ஒரு அழகியடா’, ‘ராஜா ராஜா நான்தானே’, ‘பூசணிக்காய்’ ஆகிய பாடல்கள் தாளம் போடவைக்கின்றன.
பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் ‘பட்டத்து யானை’ - 'பட்டைய கிளப்பும்'.
நன்றி விடுப்பு