துர்க்கை அம்மன் ஆலய சமய அறிவுத்திறன் போட்டி

.
இன்று 31.03.2019 துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய அறிவுத்திறன் போட்டியில் இருந்து ஒரு பகுதியை இங்கு காணலாம்



நாம் அழித்தல் முறையாமோ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


                மானத்தை மறைக்க அன்று 
                    மரவுரி தரித்து வாழ்ந்தான்
               வாழ்ந்த அக்கால மெல்லாம்
                      மரமதை அண்டி நின்றான் 
image1.JPG               வீரத்தை காட்டி நிற்க 
                      மரத்தையே துணையாய் கொண்டான் 
               ஈரமே இல்லா இப்போ 
                        இருக்கிறான் மனிதன் இன்று 

                காட்டிலே வாழ்ந்த போது 
                     கல்வியை கண்டான் இல்லை
                காட்டிலே வாழ்ந்த போது
                        காசினை நினைத்தான் இல்லை
                காட்டினை விட்டு விட்டு
                         வாழ்க்கையை கண்ட போது
                காட்டினை வெட்டி வெட்டி
                         கருணையை அழித்தே விட்டான் 

                   வளர்த்து நின்ற கடா 
                       மார்பினில் உதைத்தாற் போல 
                  வாழ் வளித்த காடதனை
                         மனம் விரும்பி அழிக்கின்றான் 
                   மரம் என்னும் வரமதனை
                          மண்ணை விட்டே அழிக்கின்ற
                    மனிதனது மனம் நினைக்க
                          மரம் மெளனம் ஆகிறது 

Discourses by Swami Ramana Swaroopananda at Perth Bala Murugan Temple 05 - 07/04/2019





இளம் தென்றல் - 06/04/2019


யாருக்கு? பிச்சினிக்காடு - இளங்கோ

தொடக்க்ம: (25.2.2019)


அன்று
அந்தவீட்டீல்
பணியின் நிமித்தமாய்…

தோட்டமும் துரவும்
உள்ள வீடு

அங்கே
புன்னகையைப்
பூவாக்கிய தாவரங்கள்

கிளைகளால்
இலைகளால்
நிழல்விரிக்கும்
உயிர்க்குடைகள்

உயிர்க்குடைகளில்
ஒட்டிக்கொண்டு வாழும்
பறவைக்கூடென்னும்
ஒட்டுண்ணிகள்

இப்படித்
தாவரமுகங்களோடு
வரவேற்கும் வீட்டில்தான்
எங்கள் பணி

காலையில்
பணிமலரும்வேளையில்தான்
“காபி வேண்டுமா?”
ஒருகுரல்

அஞ்சலிக்குறிப்பு: அமரர் செல்லப்பா சதானந்தன் (1940 -2019) நினைவுகள் - முருகபூபதி


இம்மாதம் 1 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை, இலங்கையில் பருத்தித்துறையில் இறங்கினேன். முதல் நாள் இரவு 10.45 மணிக்கு தனியார் துறையைச்சேர்ந்த அந்த பஸ்வண்டி நீர்கொழும்பு - பெரியமுல்லை என்ற இடத்திலிருந்து புறப்பட்டது.
கொழும்பிலிருந்தே அது தாமதமாக வந்தது. இலங்கைக்கு அவ்வப்போது சென்றுவரும் எனக்கு இந்த தாமதங்கள் உவப்பானது அல்ல. அதிலும் பெப்ரவரி மாதம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களை விழுங்கிவிடும்.
அந்த நாட்களையும் இழுத்துப்பிடிப்பதென்றால் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழுந்து கடமைகளை கவனிக்கவேண்டும். அவ்வாறு ஒரு அதிகாலையில் எழுந்து, இலங்கையில் நிற்கவிருக்கும் நாட்களில் என்ன என்ன செய்யவேண்டும்? யார் யாரைப்பார்க்கவேண்டும்? என்று ஒரு பட்டியலை எழுதினேன்.
வடமராட்சியில் வதியும் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் சுகவீனமுற்றிருப்பதாக அறிந்திருந்தேன். அவர்களில் எனது பார்வையில் மும்மூர்த்திகள் என தீர்மானிக்கப்பட்ட மூவர் மனக்கண்ணில் தோன்றினார்கள். அவர்கள்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். கலை இலக்கிய ஆர்வலர்கள் இராசேந்திரம், சதானந்தன்.
இவர்கள் மூவரையும் 1974 ஆம் ஆண்டு முதல் நன்கறிவேன். வடமராட்சியில் அக்காலப்பகுதியில் இவர்கள் மூவரும் இணைந்துதான் எந்தவொரு சமூகப்பணிகளிலும்  ஈடுபடுவார்கள்.
1974 இல், எங்கள் நீர்கொழும்பூரில் தெணியானின் விடிவைநோக்கி நாவலுக்கு அறிமுகவிழா நடத்துவதற்கு நாள் குறித்து, அழைப்பிதழும் அனுப்பியபோது தெணியான் தன்னுடன் அழைத்துவந்தவர்கள்தான் சதானந்தன் மாஸ்டரும் கிளாக்கர் அய்யா என அழைக்கப்பட்ட இராசேந்திரமும்.
அன்றுதான் முதல் முதலில் தெணியானையும் மற்றும் இருவரையும் பார்த்தேன். அன்று முதல் எனது பாசத்திற்குரிய நண்பர்கள்.
இவர்கள் சுகவீனமுற்றிருந்தமையால், இம்முறை பயணத்தில் இவர்களை பார்த்துவிடவேண்டும் என்று எனது பயண நிகழ்ச்சி நிரலில் தீர்மானித்திருந்தேன்.

Tamil Women’s Development Group

.

   “Journey to Wellbeing”

Call to the South Asian Community in Sydney to join the important conversation about mental wellbeing.






March 2019

Tamil Women’s Development Group (TWDG) together with Haathi in the Room (HIR) are calling on the South Asian community in Sydney to join an important conversation about mental health on Saturday 4 May at the Parramatta RSL from 1.00-5.00 pm.

"Journey to Wellbeing” is a unique mental health promotion initiative, the second of such collaborations by TWDG and HIR, designed to address issues specific to the local South Asian community. Through art, story-telling and literature “Journey to Wellbeing” aims to raise awareness of mental health, reduce stigma, share knowledge and improve outcomes for our community. Join us and be a part of this important conversation to promote the health and wellbeing of the South Asian community in Sydney. 


Event highlights include, “Portraits of Recovery” by Joe Lander Artist in Residence, Macquarie University, Centre for Emotional Health, Department of Psychology showcasing a series of portraits of male subjects who are on the road to recovery and will further demonstrate that there is a light at the end of the tunnel for those who suffer from mental illness. Through the artworks we hope to start the conversation about the attitude to mental health amongst males in the South Asian community that often gets overlooked. The event will also present a lived experience story promoting the de-stigmatising of mental health in culturally and linguistically diverse (CALD) communities by a woman ambassador of Beyond Blue aimed at both men and women. Journey to Wellbeing” will feature a Wesley Mission Workshop useful to all, on Resilience and Stress Management in the Workplace with the aim of promoting self-care. There will be time for networking and light refreshments with music for relaxation and meditation.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன் - முருகபூபதி


எழுபதுகளில் இலங்கையில் அரசியல் சமூக பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.

அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த டட்லி சேனா நாயக்காவின் தலைமையில் இயங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசு தேர்தலில் தோல்வி கண்டதனால், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக்கட்சியும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தன.

அதனால் ஏற்பட்ட பல முற்போக்கான மாற்றங்களுடன், தென்னிலங்கை சிங்கள இளைஞர்களும் வட இலங்கை தமிழ் இளைஞர்களும் தமது எதிர்காலம் குறித்து மேற்கொண்ட  தீவிர நிலைப்பாடுகளும் இலங்கை அரசியலில் அதிர்வுகளை சந்தித்தன.

இலங்கையில் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கத்தையும் கலை, இலக்கியத்துறையில் மாற்றத்தையும் தரவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குத்தோன்றியது.

உள்நாட்டு திரைப்படங்களை  ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனமும் தோன்றியதுடன் கலை – இலக்கியத்தின் மேம்பாட்டிற்காக தென்னிந்திய வணிக இதழ்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளும் உருவாகின.

இக்காலப்பகுதியிலேயே நானும் இலக்கியப்பிரவேசம் கண்டேன். இலங்கையில் பல கலை – இலக்கிய சிற்றிதழ்கள் தோன்றின.

கொழும்பில் பாமன்கடையிலிருந்து மாணிக்கம் என்ற மாத இதழ் வெளிவரத்தொடங்கியது. எனது சிறுகதைகளை  அடுத்தடுத்து  மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம் முதலான இதழ்களில் கண்ணுற்ற அந்த இளைஞர் ஒருநாள் கொழும்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் என்னைச்சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அவர்தான் இணுவையூர் இரகுபதி பாலஶ்ரீதரன்.

அவர் அச்சமயம் கொழும்பு – 12 இல் நீதிமன்றங்கள் இயங்கிய பிரதேசத்தில் இருந்த இலங்கை வங்கிக் கிளையில் பணியிலிருந்தார்.

கடலுக்கு அப்பாலும் வாழும் கன்னித் தமிழ்! திருமதி: செளந்தர நாயகி வயிரவன், சிங்கப்பூர்

.

கடலுக்கு அப்பாலும் சிங்கப்பூரில் கன்னி தமிழை கரிசனத்துடன், அரசாங்க உதவியுடன் சிங்கப்பூர் தமிழர்கள் வளர்ப்பதால், ஏப்ரல் மாதம் முழுவதும், அவள் விழாக் கோலம் பூண்டு இருக்கிறாள்.
சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு குட்டித்தீவு. பார்க்கும் இடமெல்லாம் பசுமையும், தூய்மையும் நிறைந்த சிங்கப்பூர் ஒரு நவநாகரீக நாடு. மூர்த்தி சிறிதானலும் கீர்த்தி பெரிது. நாடு சிறியது என்றாலும், சிறந்த திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்தியும், உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும், சிறப்பாக செயல்படும் நாடு சிங்கப்பூர்.
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில், தமிழும் ஒன்று. தாய் நாடு, அண்டை நாடு என எந்த நாட்டிலும் இல்லாத அளவு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவுகிறது.
சிங்கப்பூரில், விண்ணிலும் (விமானம்) மண்ணிலும் (நாடாளுமன்றம்) தமிழைக் கேட்கலாம்; பாலர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியைக் கற்க வாய்ப்பு உண்டு; முதுகலைப் பட்டம் மட்டும் அல்ல, முனைவர் பட்டமும் பெற முடியும்; தீபாவளி பண்டிகைக்கு இங்கு அரசு விடுமுறை. தமிழ் கவிதை வாசிக்கலாம், தமிழ் கலையையும் கற்கலாம்; சிங்கப்பூர் நாணயம், அரசாங்க அறிவிப்பு, பொது இடங்களில் தமிழ் மொழியில் எழுதியிருப்பதைக் காணலாம்.




பிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்தியாசாகரின் தலைமையில் 'புறப்படு பெண்ணே பொங்கியெழு..' சம்மாந்துறையில் களைகட்டிய கவியரங்கம்!


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ்  ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் 'புறப்படு பெண்ணே பொங்கியெழு' எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர்  எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் வித்தியாசாகர்  தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.


இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா சிறப்பு அதிதிகளாக கதை சொல்லி டாக்டர் எம்.எம்.நௌஷாத் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ்அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம். ரி.எம். ரிம்சான் பிரபல ஊடக வியலாளர் வி.ரி. சகாதேவராஜா  இலக்கிய ஆளுமைகள் சமூக சேவை மகளிர் அமைப்புக்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 
இக்கவியரங்கில்  கவிஞர் திருமதி. றியாசா வாஹிர்  கவிஞர் செல்வி. றிப்னா றியாஸ்  கவிஞர் திரு. ஆசுகவி அன்புடீன் கவிஞர் திருமதி. யுகதாரிணி  கவிஞர் திரு. எம்.எச்.அலியார் கவிஞர் செல்வி. மு.ஸாஹிரா பானு  கவிஞர் திரு.கே.எம்.ஏ. அசிஸ்  கவிஞர் திரு. அருளானந்தம் சுதர்சன் ஆகியோர்களின் கவிதைகள் அரங்கேற்றப்பட்டன.

உலகறிந்த தென்னிந்தியாவின் பன்முக ஆளுமைக்கவிஞர் பாடலாசிரியர் எழுத்தாளர் வித்யாசாகர் அங்கு உரையாற்றுகையில்:

ஈழத்து தமிழ்மண் தமிழ்இலக்கியத்தை இனநல்லிணக்கத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியத்தமிழ் ஒற்றுமையை விதைக்கும் இலக்கிய விவசாயிகள் நீங்கள். இது போற்றுதற்குரியது. தமிழ் மொழியால் இணைந்துள்ளோம். இந்தியாவிலிருந்த என்னை புகழ்பூத்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி பிறந்த சம்மாந்துறை மண்ணுக்கு அழைத்தது இந்த தமிழ். தமிழுக்கு சாதிமத பேதமில்லை. வள்ளுவர் கூறிய வாழ்வியல் தத்துவத்தை விடவா?

பெண்கள் அடக்கமாக இருக்கவேண்டும். அடக்கம் என்பது அடக்குதல் அல்ல இணைந்து போதல் அடக்கமாக ஒன்றித்தல் என்று பேராசிரியர் றமீஸ்அப்துல்லா சொன்னார்கள். அது உண்மை. அருமையான வாசகம்.

ஒரு தடவை மலேசியாவில் இலக்கியக்கூட்டம் நடைபெற்றுகே கொண்டிருக்கையில் டாக்டர் சொக்கலிங்கம் என்பவர் இப்படிச்சொன்னார். அதாவது பார்வையாளர்கள் கைதட்டுங்கள். கைதட்டினால் ஆயள்கூடுகிறது. இதயம் நன்றாக வேலை செய்கிறது. என்றார்.

இலங்கைச் செய்திகள்


"காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி"

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் 54 இலங்கை அகதிகள்

 "கடத்தப்பட்ட 11 பேருக்கு என்ன ஆனது என்பதை கரன்னாகொட அறிந்திருந்தார்"

யாழ். மாவட்டத்தில் 50 மாணவிகளுக்கு “ 9 ஏ ” சித்தி

திருகேதீஸ்வர விவகாரம் ; வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்த பிக்குவுக்கு புற்றுநோய் ;  தீர்ப்பு ஒத்திவைப்பு


"காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி"

25/03/2019 காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உலகச் செய்திகள்


‘மிஷன் சக்தி’ சோதனையில் இந்தியா சாதனை:பிரதமர் மோடி

 மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணி மேற்கொள்ள  இராணுவத்துக்கு அனுமதி 

அமெரிக்க படையினரின் வான்வழித்தாக்குதல்:ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலி



‘மிஷன் சக்தி’ சோதனையில் இந்தியா சாதனை:பிரதமர் மோடி

27/03/2019 விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நாடாத்தியுள்ளதாக பிரதமர் மோடி இன்று மக்கள் மத்தியில் இடம்பெற்ற உரையாடலில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திருமிகு சண்முகதிருவரங்கயயாதி அவர்களின் சொல்லோவியம் - சிட்னி முருகன் கோவில் - 02/04/2019









தமிழ் சினிமா - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்


ஹரிஷ் கல்யாண், காளி பட புகழ் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். படத்தின் தலைப்பை பார்த்தே இது காதல் கதை என அனைவருக்கும் விளங்கியிருக்கும். படம் எப்படி வாருங்கள் பார்ப்போம்.
கதை:
கவுதம் (ஹரிஷ் கல்யாண்) சின்ன வயதிலேயே தன் அம்மா வேறொருவருடன் ஓடிப்போவதால்
பெரிய ஏமாற்றமடைந்து கோபத்துடனேயே வாழ்கிறார். எந்த விஷயத்தையும் பொறுமையாக ஹண்டில் செய்ய தெரியாதவர். அடுத்த உடனேயே அடி தான்.
தாரா (ஷில்பா மஞ்சுநாத்) பெரிய இடத்து பெண். இவர்கள் இருவருக்கும் நடுவில் தமிழ்சினிமா வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து பின்னர் காதலில் முடிகிறது.
கவுதம்-தாரா இடையிலான காதல், மோதல், பிரிவு, குடும்பத்தின் எதிர்ப்பு தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம்.
உருகி உருகி காதலிக்கும் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனைகள் வர துவங்குகிறது. தன் அம்மாவை போல இவளும் நம்மை விட்டு விட்டு போய்விடுவாளோ என்கிற குழப்பம் ஹரிஷ் கல்யாணுக்கு, இவனை நம்பி போகலாமா என்ற குழப்பம் ஹீரோயினுக்கு. இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் ஆகும் தருவாயிலும் முடிவெடுக்க தயங்குகிறார். ஹரிஷ் கல்யாண் கோபத்தில் செய்யும் சில விஷயங்கள் தான் அதற்கு காரணம். இவர்கள் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்:
ஹரிஷ் கல்யாண் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் வித்யாசமான ரோல். எப்போதும் கோபத்துடனேயே இருக்கும் இளைஞர் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தாலும் படத்தில் அவரது குரல் சில சமயங்களில் படத்திற்கு செட் ஆகாத பீல் தான் கிடைக்கிறது. ஹீரோயின் ரோலும் ரொம்ப மெச்சூராகத்தான் வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்த்தவுடன் காதலிக்காமல் பொறுமையாக நான்கைந்து முறை யோசித்து முடிவெடுப்பதில் இருந்து அவன் தன்னை துன்புறுத்தும்போது 'திஸ் ஐஸ் த எண்டு' என அரை மனதோடு சொல்வது வரைஅனைத்திலும் ஈர்க்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக நடித்துள்ள பாலசரவணன், மகபா ஆனந்த் காமெடியில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்:
ஒரு சாதாரண காதல் கதை, அதில் சில ஏற்ற இறக்கங்களை கொடுத்து வித்யாசமான கிளைமாக்ஸுடன் படத்தை முடித்த இயக்குனர், இன்னும் சில மாற்றங்களை செய்திருந்தால் படம் இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்காமல் இருந்திருக்கும்.
முதல் பாதியில் போர் அடிக்காமல் சொல்லவந்ததை கச்சிதமாக காட்டியிருந்த இயக்குனர், இரண்டாம் பாதியில் பெரிய தடுமாற்றம் அடைந்துள்ளார்.
பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் சாம் சி எஸ்சின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. கவின் ராஜின் ஒளிப்பதிவு பெர்பெக்ட்.
பல்ப்ஸ்:
- பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி படம்.
- படம் பார்ப்பவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. ஹரிஷ் கல்யாணுக்கு அந்த பெண் பின்னாடி சுத்துவதை தவிர வேறு வேலையே உலகத்தில் இல்லை என்பது போல காட்டியிருப்பது. மொத்த படத்தையும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக எடுத்திருந்தாலும் சில விஷயங்களில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார்.
மொத்தத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நாம் நிஜ வாழ்விலேயே பலமுறை பார்த்துள்ள ஒரு சாதாரண காதல் கதையாக இருந்தாலும், நிச்சயம் அனைத்து இளைஞர்களுக்கும் கனெக்ட் ஆகும்.   நன்றி CineUlagam