மரண அறிவித்தல்

 .                                                                      திருமதி தவமணி தவராஜா 



மட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி தவராஜா அவர்கள்,07/06/22 அன்றுஅவுஸ்திரேலியா,Central Coast ல் (சென்றல் கோஸ்ட்டில்) காலமானார்.அன்னார் காலஞ்சென்றதிரு திருமதி முத்தையா பார்பதிப்பிள்ளை அவர்களது அன்புப் புதல்வியும்,தவராஜாவின் மனைவியும்,லவன்,அகலிகா (கொழும்பு),திலீபன்(மட்டக்களப்பு)தவதீபன் ,அவுஸ்திரேலியா,ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான,தெய்வநாயகி,இராஜநாயகம்,மற்றும் ஜோதிமலர் அவுஸ்திரேலியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,யாழினி,வைத்தியலிங்கம்,அனுசூயா,ஷாமேன்,ஆகியோரின் அன்பு மாமியும்,அனோர்த்திகா, ப்றிக் ஷித்,மாதுவி,வைடூர்யா,ஜயத்ரஜித்,அனிருத்தீஷ்,அம்பாரிஷ்,ஏட்றியன்,அடலின் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்..அன்னாரது இறுதிக் கிரியை கள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.தொடர்புகளுக்கு,தவதீபன்Central coast+6140100485.

விரதங்கள்?

 












மெய்யாக வழிபடுவோர் மேனிவிதிர் விதிர்ப்பெய்ய

விழியிரண்டும் அவன்கருணை தனைவியந்து நீர்சொரியக்

கைகூப்பிச் சிவனைத்தம் இதயத்தில் நினைத்திருத்திக்

கசிந்துருகி மௌனமாய்ச் சிவத்தியானம் இயற்றிடுவர்!

 

விரதமிருக் குமன்பர்கள் மெய்யைமிக வருந்தியந்தோ

வேளையொன்றோ பலநாளோ உண்ணாது இருந்திடுவர்!

சிரமமொடு ஒருவாறு உபவாசம் கூட்டிடுவர்!

திருத்தளிக்குச் சென்றுதங்கள் பெருவிரதம் முடித்திடுவர்!


மாண்புறு நல்லாசிரியர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள்! - ஒரு நனவிடை தோய்தல் - அவுஸ்திரேலியாவிலிருந்து, சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

நடராசன் சேர் இவ்வுலகை நீத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தபோது, தாங்கொணாத் துயர் என் தொண்டையை இறுக்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டெழும்போது, அவருடன் உறவாடிய நினைவுகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நெஞ்சில் அலை மோதத் தொடங்கின.

 

என் வாழ்வில் மறக்க முடியாத அவர், எனது உயிரியல் பாட ஆசிரியர். என்னுள்ளிருந்த எழுத்து ஆற்றலை இனங்கண்டு, என்கழுத்தைப் பிடித்து எழுத்து உலகில் இழுத்துத் தள்ளிவிட்ட பெருந்தகை. தமிழை உயிராகவும், பகுத்தறிவை உணர்வாகவும் கொண்டு வாழ்ந்த விஞ்ஞான ஆசிரியர். என்னில் மிகுந்த அன்பு கொண்டு கண்காணித்து என் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர். 1980 ஆம் ஆண்டு, நாயன்மார்கட்டில், அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தபோது, தன்வீட்டில் ஒருநாள் தங்கிச் செல்லவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டு என்னைச் தங்கச் செய்து, மகிழ்வு கொண்டு என்னையும் மகிழவைத்தார். எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டபின்னர், மணப்பெண்ணுடன் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வந்தேன். அதுவே அவரை நேரிலே இறுதியாகச் சந்தித்த நாளாகிவிட்டது.  

ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக,

உன்னதமான ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தமர் அவர். மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், எட்டாம் வகுப்பில் பொதுவிஞ்ஞானத்தையும், ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்களில் (.பொ.. சாதாரண தரம்) உயிரியலையும் எங்கள் வகுப்பினருக்கு கற்பித்தார். இந்த இரண்டு பாடங்களைக் கற்பித்த ஒரே காரணத்திற்காக மட்டுமல்ல, கண்டிப்பான ஒரு தந்தையைப் போல, அன்பான ஒரு தாயைப்போல, கண்ணியமான ஒரு தமயனைப்போல, இடுக்கண் வருங்கால்,  களைகின்ற ஒரு நண்பனைப்போல எங்களை அரவணைத்து வளர்த்தெடுத்த பெருந்தகையாக அவர் விளங்கினார் என்பதாலும், மறக்கமுடியாத ஆசிரியராக அவர் எங்கள் இதயங்களில் குடிகொண்டிருந்தார்.

தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்த திருவருட் புலவர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

"இலக்கியம் என்றால் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது"


என்பதுதான் அதற்கான பொருத்தமான பொருளாகியிருக்கிறது. அந்த இலக்கு எது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்தான் மிகவும் முக்கிய நிலை யாகும். கற்பவர்க்கு இன்பத்தைப் பயப்பதுடன் அவர்களின் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதாய் இரு க்க வேண்டும் என்னும் ஒரு கருத்தும், படிக்கும் பொழுதே இன்பத்தைப் பயப்பதைத் தவிர வெறொன்றுமே இல்லை என்றும் , வேறு பயனை விளைவிக்கவும் கூடாது என்னும் கருத்தும் இருப்பதைக் காணமு டிகிறது. இவ்வாறு காணப்படும் கருத்தில் - முதலாவது கருத்தினையே தமிழ் இலக்கியங்களும், அதனைப் படைத்த ஆளுமைகளும் அகமிருத்திக் கொண்டார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இந்த நோக்கினை நன் றாகவே தனது குறிக்கோளாக்கிக் கொண்டவர்தான் " சேக்கிழார் " அவர்கள். இவரை பல கோணங்களில் பார்ப்பதும் பொருத்தமாய் அமையுமென்று கருதுகிறேன்.அந்த வகயில் இவரின் சிறப்புக் கான காரண ந்தான் என்னவாக இருக்க முடியும் ?

  " பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட " பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா?  புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாராமுதலமைச்சர்   ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறு கி ன்றாரா?புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றா ராஅல் லது  பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாராஎன்று நினைக்கத் தோன்று கிறதல்லவா ?   

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 16 மனவறையில் உருவான மணவறை ! கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார் !! முருகபூபதி


எனது ஆரம்ப பாடசாலையான அன்றைய நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) ஆறாம் தரம் வரையில்தான் படித்தேன். ஏழாம் வகுப்பிற்கு தரமுயற்றப்பட்டபோது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வந்தது. அதில் சித்தி பெற்றிருந்தமையால், யாழ். ஸ்ரான்லி கல்லூரிக்கு                              ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி ) செல்லநேர்ந்தது.

இக்காலப்பகுதியில் எமக்கு  கைவினை வகுப்பும் இடம்பெற்றது.  அதனை கைப்பணி வகுப்பு எனவும் சொல்வோம்.  நான் சரித்திர பாடத்திலும் இந்த கைவினை பாடத்திலும்தான் அதிகம் புள்ளிகள் பெறுவது வழக்கம்.

எங்கள் நீர்கொழும்பு வீட்டருகில் நின்ற வில்வம் மரத்திலிருந்து சிறிய


கிளையை ஒடித்துவந்து, சோளப்பொரியில் வண்ணம் தீட்டி, அவற்றை அந்தக் கிளையில் செருகி அழகான பூமரம் தயாரித்துவிடுவேன்.  தீப்பெட்டிகளை சேகரித்து வண்ணக்காகிதங்கள் சுற்றி,  சிறிய ஆசனங்கள், கட்டில்கள், மேசைகள் செய்து கைவினை ஆசிரியரிடம் காண்பித்து சிறந்த புள்ளிகள் பெறுவேன்.  காகிதாதிகளினால் வீடுகளும் அமைப்பேன்.

இந்த பால்யகாலத்து அனுபவம் பின்னாளில் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் உதவியது.  அந்த ஆண்டு 1989.  நண்பர் திவ்வியநாதன் அக்காலப்பகுதியில் மெல்பன் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில்  கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.  நான் Brunswick இல் இருந்தேன்.  பல்கலைக்கழகம் Park will இல் அமைந்திருக்கிறது.

எனக்கு இரவுநேர வேலை. நண்பர் திவ்வியநாதன் மதியவேளையில் நேரம் கிடைக்கும்போது என்னைப்பார்க்க வருவார். நாட்டில் குடும்பத்தை விட்டு வந்த கவலையில் எனக்கு Home sick.  சனி – ஞாயிறு விடுமுறை நாட்கள் வரும்போது என்னை Clayton இல் இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துவிடுவார். அவரது மூத்த புதல்வி ஜனனியின் வயதில் ஊரில் எனக்கு மூத்த மகள் பாரதி. அந்தக் குழந்தையை பார்த்து நான் என்னை தேற்றிக்கொள்வேன்.  அவ்வாறு எனக்கு மெல்பனில் அறிமுகமான நண்பர்களின் குழந்தைகளின் புன்சிரிப்பில் எனது Home sick ஓரளவு குறைந்தது.

படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் ! கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை முருகபூபதி

 “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம்


பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. கீழே தாங்கி நிற்பவர்கள் அனுபவம் மிகுந்தவர். அவர்களின் அனுபவம் என்ற அத்திவாரத்தில்தான் இளைய தலைமுறை நிமிர்ந்து நிற்கிறது. இவ் இருவர்களும் பிரதான மாணவர்களே. இந்த இருவரிடையேயும் வளரும்   “ கொண்டு கொடுத்தல்   “ உறவு இருவரையும் வளர்க்கும்    இவ்வாறு ஈழத்து தமிழ் அரங்கத்துறையில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும் பா. நிரோஷனின் அரங்க ஆளுமைகள் நால்வர் என்ற நேர்காணல் தொகுப்பு நூலுக்கு வாழ்த்துரை கூறியிருக்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எழுதியிருக்கும்  கூத்த யாத்திரை ( நான் கொண்டதும் கொடுத்ததும் ) கூத்தே உன் பன்மை அழகு ஆகிய இரண்டு நூல்களும், மேற்குறித்த அவரது கருத்தை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் விரிந்த தளத்தில் பேசுகின்றன.

கால ஓட்டத்தினூடே மாறிவந்த கூத்து பற்றிய அவரது கருத்தியலையும் செயற்பாடுகளையும்  பற்றிப் பேசுகிறது கூத்தே உன் பன்மை அழகு.

ஆரோக்கியமும் ஆளும் வர்க்கமும் ஆளப்படும் மக்களும் ! பணநாயகமும் ஜனநாயகமும் !! அவதானி


இலங்கையில் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களும், அதற்கு எதிரான எதிரணி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பணவசதி படைத்த செல்வந்தர்கள்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அவர்களிடமிருக்கும் பணம், சொத்து, உடமைகள் குறித்து ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வளமுடன் வாழ்பவர்கள்.

சிலர் அரசியலுக்கு வருமுன்னர் வைத்திருந்த செல்வத்தை, அரசியலுக்கு வந்த பின்னர் பெருக்கியிருப்பார்கள். வேறும் சிலர் அரசியலுக்கு வந்த பின்னரே பெரும் செல்வந்தர்களாகியிருப்பார்கள். இன்னும் சிலர் செல்வந்தர்களாவதற்கே அரசியலுக்கு வருவார்கள்.  இவர்கள் தாம் தோற்றால்,  “ பணநாயகம் வென்றது    என்பார்கள். வெற்றி பெற்றால்,  “ ஜனநாயகம் வென்றது    என்பார்கள் !

தேர்தல் காலங்களில் பெரும்பாலான அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைத்து செலவுசெய்வதன் நோக்கமே, ஆட்சிபீடமேறியவுடன், செலவழித்தவற்றை வட்டியோடு மீளப்பெற்றுக்கொள்வதற்காகத்தான்.

ஆளும்வர்க்கத்துடன் இணைந்து பதவி சுகம் பெற்றால், சாதாரண


மார்புவலி வந்தாலும் வெளிநாடு சென்று சிகிச்சை செய்வதற்கு வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.  சமகால ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவும் சிங்கப்பூருக்குச் சென்றுதான் தனக்கான இருதய சத்திர சிகிச்சை செய்துகொண்டு வந்தவர்.

அதன்பின்னரும் விசேட கவனிப்பிற்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் அங்கே அவ்வப்போது சென்று வருபவர். அவருடை பதவிக்காலத்தில் மாற்றப்பட்ட முக்கியமான அமைச்சர்களில்  சுகாதார நலத்துறை அமைச்சர்களும் அடங்குவர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராய்ச்சியின் பதவி பறிக்கப்பட்டபோது, அவர் ஊடகவியலாளர்களுக்கு சொன்ன கதையை ஏற்கனவே அவதானி இந்த பத்தியில் எழுதியிருக்கிறார்.

கோத்தா கோ கம போராட்டம் தொடங்கி ஐம்பது நாட்கள் கடந்துவிட்டன.  இக்காலப்பகுதியிலும் அதற்கு முன்னர் கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியிலும் இந்த அரசு சில அமைச்சரவை மாற்றங்களை கண்டுவிட்டது.

தற்பொழுது சுகாதார அமைச்சராகவிருக்கும் கெகலிய ரம்புக்வெலவும் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவிடத்தில் தாம் தங்கியிருந்த உல்லாச விடுதியின் மேல் மாடியிலிருந்து தவறிவிழுந்து, இங்குள்ள மருத்துவமனையில் பல நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்தான். அதன் பிறகும் விசேட மருத்துவ ஆலோசனைகளுக்காக வந்து சென்றவர்தான்.

இவ்வாறு இலங்கை அரசின் அதிபர், பிரதமர், உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வரப்பிரசாதங்களும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான்  கிடைக்கின்றன.

இலங்கைச் செய்திகள்

 சிறை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் துமிந்த

மள்வானை வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் விடுதலை

யாழ். பொதுசன நூலகம் தீயூட்டப்பட்டு 41 ஆண்டு நினைவேந்தல்



சிறை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் துமிந்த

விசாரணையின் பின் CID கையளித்தது

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியும், அவரை மீண்டும் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 30ம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஒன்பது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

 

 

 

    அறுசுவைகளுள் இனிப்புச்சுவையும் ஒன்றாகும்.இனிப்புச்சுவை


என்பது உடலுக்கு மிகவும் வேண்டிய தேயாகும்.இனிப்புச் சுவை என்றதும் இளை யவர் தொடக்கம் முதியவர்வரை தங்களை மறந்தே விடுவா ர்கள். எந்தச் சுவையினையும் விட இனிப்புச்சுவையினை யாவரும் அன்று தொடக்கம் இன்றுவரை ஏன் வாழும் காலம் வரை விரும்பிக் கொண்டேதான் இருப்பா ர்கள். அதே வேளை இனிப்புச்சுவையினை விரும்பினாலும் அதன் பக்கம் போக முடியாமல் இனிப்பினை ஒதுக்கும் நீரிழிவுக்கு ஆளாகி இருப்பவர் களும் இருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும்.இந்த நிலையில் பனையின் கொடையாக வரும் பனங்கட்டியை வைத்தியம் எப்படிப் பார் க்கிறது வைத்தியர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியமாய் இருக்கிறதல்லவா !

  புலவர்கள் போற்றிய பனங்கட்டியை வைத்தியர்களும் போற்றியே


நிற் கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டி யதேயாகும். மெத்தவே புகழ்ந்து போற்றும் வண்ணம் சித்தமருத்துவர்களால் பனங்கட்டி இருந்தி ருக்கிறது இன்றுவரை இருந்தும் வருகிறது. நம்முடைய முன்னோர்கள் உண்ணுகின்ற உணவினையே மருந்தாகக் கொண்டே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.அப்படி வாழ்ந்த காரணத்தால் ஆரோக்கியமாகவும்சுறுசுறுப்பாகவும் அவர்களின் வாழ்வு அமைந்து காணப்பட்டது. உணவுப் பழக்கவழக்கமே நல்லபடி வாழ் வதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது எனலாம்.இனிப்பில்லாமல் வாழ் க்கையும் இல்லை. இனிப்பில் லாமல் உணவும் அமையமாட்டாது. அந்த இனிப்புக்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது எதைத் தெரியுமா ? ... பனங்கட் டி யையேயாகும். பனங் கட்டி என்பது சாப்பாட்டில் இருந்த வரை இனிப்பு வியா தியான நீரிழிவு தொட்டு விடவே முடியாமல் இருந்திருக்கிறது என்பது தான் உண்மையாகும். ஆனால் காலகதியில் பனங்கட்டிக்குப் பதிலாக சீனியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால் அதன் கொடையாக இன்று நீரிழிவு என்பது இளையவர் தொடக்கம் முதியவர் வரைக்கும் கிடைத்திருக்கிறது.

  நம்முடைய வாழ்வுக்கு நல்ல நட்புதான் தேவையானது. நல்ல நண்பன் வாய்த்தால் அது நல்லதொரு வரமாகவும் அமையும் அல்லவா.பகையை யாராவது  அணைத்திடல் முறையா என்றால் இல்லை என்று தான் சொல் லல் வேண்டும். சீனி என்பது பகையாகும். பனங்கட்டிதான் நல்ல நண் பனாகும்நல்ல நண்பனை அரவணைப்பதுதான் உகந்தது என சித்தம ருத்துவமும் வலியுறுத்துகிறது.  சித்த மருத்துவர்க ளும் வலியுறுத்தி நிற்கிறார்கள். இன்று பலரும் பனங்கட்டியின் பக்கம் தங்கள் கவனத்தைச் செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது ஆரோக்கியமான நல்ல நிலையென்றுதான் கொள்ளல் வேண்டும்.

உலகச் செய்திகள்

 இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் சமூக அளவில் பரவல்

உக்ரைனின் 20 வீதமான நிலப்பகுதி ரஷ்யா வசம்

தினசரி 100 உக்ரைனிய இராணுவ வீரர்கள் பலி

அவதூறு வழக்கில் டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றில் தீர்ப்பு



இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் சமூக அளவில் பரவல்

இங்கிலாந்தில் குரங்கம்மை சமூக அளவில் பரவுவதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு, மத்திய ஆபிரிக்காவில் நிரந்தர நோயாகக் கருதப்படும் குரங்கம்மை, நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடையே பரவும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லாதவர்களிடையே நோய் பரவியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.