உன்னை நீ நம்பு வெற்றி வசமாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




உன்னை அறிந்தால் உலகத்தில் 

வாழலாம்
உன்னை அறிந்தால் உண்மையை
உணரலாம்
உன்னை உணர்ந்தால் உள்ளொளி 
பெருகிடும்
உன்னையே தேடிடு வெற்றிகள்
வசமாகும் !

ஆணவம் என்பது அன்னியம் 
இல்லை
அதிகாரம் தருவதும் அயலவர் 
இல்லை
ஆசைகள் என்பதும் பேரலை 
ஆகும்
அடக்கிட முனைந்தால் வெற்றிகள்
வசமே !

கிடத்ததை மகிழ்வாய் எடுத்திடல்


சிறப்பே
முடிந்ததை எண்ணி இருப்பது
 தவறே
நாளதை எண்ணி நடப்பது 
முறையே
நம்பியே இருந்தால் வெற்றிகள் 
வசமே !

அஞ்சலிக்குறிப்பு: பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற கர்மயோகி சொக்கநாதன் யோகநாதன் முருகபூபதி

லகெங்கும்  கடந்த ஒன்றரை வருடகாலத்திற்கும்  மேலாகப் பரவி,  அச்சுறுத்திக்கொண்டு  மனித உயிர்களை பலியெடுத்துவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ வைரஸ், தற்போது தனது மற்றும் ஒரு தம்பியையும் டெல்டா என்ற பெயரில் அழைத்து வந்துள்ள வேளையில்,   எமது நீண்டகால நண்பரும் தனது வாழ்நாளில் பெரும்பாலான பொழுதுகளை சமூகப் பணிகளுக்காகவே அர்ப்பணித்த பெருமகனுமான  சொக்கநாதன் யோகநாதன் அவர்களையும் இழந்துவிட்டோம்.

இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து  இனவிடுதலைப் போராட்டமாக பரிணாமம் அடைந்த வேளையில் , அதனால் பாதிக்கப்படக்கூடிய அப்பாவிப்பொதுமக்களின்  நலன்களுக்காகவும் அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் தமது பொழுதுகளை அர்ப்பணித்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சொக்கநாதன் யோகநாதன்.

கடந்த  05 ஆம் திகதி  திங்கட்கிழமை அதிகாலை 3-30 மணியளவில் அவர் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொவிட் தொற்று சிகிச்சை நிலையத்தில் மறைந்தார் என்ற செய்தி என்னை  வந்தடைந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

இந்தத்  துயரச் செய்தி கிடைக்கும்போது நீண்ட தூரப்பயணத்திலிருந்தேன்.  எனது காரை வீதியோரமாக நிறுத்திவிட்டு,  யாழ்ப்பாணம் அரியாலையில் கண்டிவீதியில் அமைந்திருக்கும், அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனைக்கு தொடர்புகொண்டேன்.

அரங்கேற்றங்கள் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

 .



இன்று தமிழர்கள் வாழும் நகரங்கள் அனைத்திலும் அரங்கேற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழரின் கவின் கலைகள் எனப் போற்றப்படும் நடனம், வாய்ப்பாட்டு, வாத்தியங்களான புல்லாங்குழல், மிருதங்கம், வீணை போன்றவற்றைக் கற்றுக் கொண்ட இளைஞர்கள், யுவதிகள் தனித்து ஒருவராக மேடையேறி தமது திறமையை வெளிப்படுத்துவது அரங்கேற்றமாகிறது.


அரங்கேற்றம் என்ற சொல் அரங்கத்தில் ஏறுவது எனப் பொருள் படும். ஒரு கலைஞர் தனித்து இயங்கக் கூடிய திறமையைப் பெற்றதும் அத் திறமையைச் சபையோருக்கு எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றமாகிறது. ஆக மொத்தத்தில் ஒரு கலைஞன் உருவாகி இருப்பதை எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றம் என்ற சடங்காகும்.

இந்தமாதிரியான அரங்கேற்றங்கள் எமது தந்தையர் காலத்திலோ அல்லது எமது பாட்டனார் காலத்திலோ நடைபெற்றதாக நாம் அறியவில்லை. ஆமாம், இந்த வளர்ந்து வரும்; மாறிவரும் நாகரிகத்தின் ஓர் அங்கமே அரங்கேற்றம்.

முன்பெல்லாம் தொழில்கள் யாவும் ஜாதி அடிப்படையிலே நடந்து வந்தன. ஆடல் மற்றும் இசைத்தொழிலும் இவ்வாறே ஜாதி அடிப்படையில் நடந்தது. இந்தக் கவின் கலைகளை வளர்ப்பதற்கு இசை வேளாளர் என ஒரு சமூகத்தினர் இருந்தார்கள். இவர்களே இந்தத் தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தனர். இவர்களை ஊர் வழக்கில்நட்டுவர்என அழைத்தனர். இலங்கையைப் பொறுத்தளவில் இவர்கள் நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியத்தை வாசித்து வந்தார்கள்.

ஆனால் எமது கலைகளின் இருப்பிடமான தென்னிந்தியாவிலே இசை வேளாளர் பரம்பரையில் சிலர் நாதஸ்வரக் கலையை வளர்த்தனர். வேறு சில குடும்பங்கள் நாட்டியத்திலே சிறந்து விளங்கினார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்ட காலம் வரை இந்த நட நங்கையர் கோயில்களிலே ஆடி வந்தார்கள். இவர்களுக்குக் கோயில்களிலே பல்வேறு கடமைகள் இருந்தன. கொடிஸ்தம்பத்தின் முன் ஆடுவது, சுவாமி புறப்பாட்டின் போது ஆடுவது, சுவாமி ஊர்வலம் வரும் போது ஆடி வருவது போன்ற பல கடமைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. இவர்கள் தேவ தாஸிகள் என அழைக்கப்பட்டனர்.( தேவ = இறைவன், தாஸி= அடிமை. ) நாதஸ்வரக் கலைஞர்களின் கடமைகள் போன்றே அன்றும் இவைகள் நடனத்துக்குக் கடமைகளாக விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஓதுவார்கள் தேவாரங்களைப் பாடி இறைவனின் புகழைப் பாடுவார்கள். ஆடல் நங்கையரோ இறைவனின் மேன்மைகளை ஆடல் மூலம் வெளிப்படுத்தினர். அதற்காகக் கோயில் இவர்களுக்கு மானியம் கொடுத்து வந்தது.

எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் – 49 எட்டயபுரம் பாரதி பிறந்த மண்ணில் கண்ட காட்சிகள் ! ஏழை மக்களுக்கு குடிதண்ணீர் கிணறு அமைத்துக்கொடுத்த நடிகையர் திலகம் ! முருகபூபதி



எனது அப்பாவின் பூர்வீகம்  பாளையங்கோட்டை. அவரது உறவினர்கள் அங்கும் திருநெல்வேலி, மதுரை, சாத்தூர், தூத்துக்குடி, ஶ்ரீவைகுண்டம், சென்னை முதலான நகரங்களிலும் வசிக்கிறார்கள். 

இந்தத் தகவல்களை எனது தாத்த முறையான எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதன் சொன்னார். சென்னையிலிருந்து நான் திருநெல்வேலி சென்று அங்கிருந்து அவர் குறிப்பிட்ட ஊர்களிலிருக்கும் உறவினர்களையும் பார்த்துவிட்டு,  இறுதியாக மதுரை வந்து அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று ராமானுஜம் கப்பல் ஏறி,  தாயகம் திரும்புவதுதான் எனது பயண ஒழுங்கு.

ரகுநாதன் அதற்கேற்றவாறு நான் செல்லவிருக்கும் ஊர்களின் தொலைவு பற்றியும் பயண ஒழுங்கை எவ்வாறு


மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார்.

அண்ணா நகரிலிருந்து சாத்தூரில் வதியும் எனது மைத்துனர் முறையான ஆண்டபெருமாள் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.  அவரும் தாமதிக்காமல், தான் வந்து அழைத்துச்செல்வதாக பதில் எழுதியிருந்தார்.

இன்றுபோல் அப்போது கைத்தொலைபேசி – மின்னஞ்சல் வசதிகள் இல்லை. நண்பர்கள் காவலூர் ஜெகநாதன்,                             மு. கனகராசன் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவ நண்பர்களுக்கும் பயணம் சொல்லிவிட்டு மைத்துனருடன் புறப்பட்டேன்.

அவர் இரண்டு தடவைகள் இலங்கை வந்திருப்பவர்.  இறுதியாக அவர் வந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். மேல் வகுப்புக்கு வந்த பின்னர் நானும் அக்காவும் அவருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவோம். அவர் சாத்தூரில் ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியர். அவர் கத்தோலிக்க மதத்தைச்சேர்ந்த ராஜாமணி என்பவரை காதலித்து மணம் முடித்து அந்த மதத்திலும் சேர்ந்துவிட்டிருந்தார்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நினைவில் பத்தாண்டுகள் - கானா பிரபா

 


இன்று (06.07.2011) எங்கள் ஈழத்துக் கல்விச் சமூகத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழ் உலகத்துக்குமான புலமைச் சொத்து பேராசிர்யர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நம்மை விட்டு உடலால் நீங்கிய பத்தாண்டுகள்.

 

இன்று அவரின் நினைவில் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு ஒன்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

 

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது எழுபத்தைந்தாவது அகவைக்காக ஒரு வானொலிப் பேட்ட நிகழ்ச்சியை 2007 ஆம் ஆண்டு செய்த போது பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் வழங்கியதை அப்படியே ஒப்புவிக்கின்றேன்,

 

பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராகவிமர்சகராககவிஞராகசிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.

புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம் ஆயிஷா அமீன் ( பேராதனை பல்கலைக்கழகம் )


ழத்தமிழரின் புலப்பெயர்வு ஆரம்ப காலங்களில் இருந்தே பல்வேறு தேவைகளுக்காக  இடம்பெற்று வந்திருக்கின்றது. என்றாலும் இலங்கையில் 1970 களின் பின்னர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட  இன ஒழிப்பு நடவடிக்கைகள் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட ஆயுதக் கலாசார முறைமை என்பன காரணமாகத் தமிழ்ச் சமுதாயம் நிலை குலைந்தது.

சொந்த நாட்டில் மனித இருப்புப் பற்றிய கேள்விகள் குத்தல்கள் அம்மக்களை கடல் கடந்த நாடுகள் வரை துரத்தியது. இந்நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்  ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா முதலான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.

உயிர்ப்பாதுகாப்பை முன்னிறுத்திய இப்புலப்பெயர்வில் பொருளீட்டுதல் என்ற முயற்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. புகலிடம் குறித்த எதிர்பார்ப்புக்கள் பலவாக  இருந்தாலும்,  அவர்களது  அவ்வாழ்க்கை  அவலம்  மிகுந்ததாகவே காணப்பட்டது.  தாயக  வாழ்வில்  இருந்து  முற்றிலும்  வேறுபட்ட  அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழலை எதிர்க்கொண்டதன் விளைவாக,  பல  வாழ்வியல் ரீதியான  பிரச்சினைகளுக்கு  முகங்கொடுக்க நேரிட்டனர்.

ஈழத்துத் தமிழ் இலக்கிய பரப்பின் தொடர் வளர்ச்சியாக ‘புலம்பெயர் இலக்கியம் விளங்குகின்றது.  இது ஆங்கிலத்தில் Diaspora literature என அழைக்கப்படுகிறது. இவ்விலக்கிய வடிவமானது புலம்பெயர்ந்தோர்  இலக்கியம், புகலிட இலக்கியம், அலைவு இலக்கியம், புலச்சிதறல் இலக்கியம் எனப்படும் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆனாலும், புலம்பெயர்வு இலக்கியம் என்ற சொல்லே நிலைபேறாக்கம் பெற்றிருக்கிறது.

மண்ணின் அடையாளக் கலைஞன்: நாதஸ்வர இளவரசன் பஞ்சமூர்த்தி குமரன்

 Wednesday, July 7, 2021 - 5:28pm

கலையும் வாழ்வும் பின்னிப் பிணைந்த ஒரு மனிதனின் வாழ்வு எப்போதும் வரப்பிரசானமானது எனலாம். அந்தக் கலை எல்லோருக்குள்ளும் ஊற்றெடுத்தாலும் ஒரு சிலர் மூலம் அது பிராந்தியங்களைக் கடந்தும் உலகத்தையே பார்வையிடச் செய்துவிடும். இந்தப் பொதுத்தளத்தில் மேற்குறித்தது போல கலை மூலம் தன்னை உலகமே வியந்து பார்க்குமளவிற்குத் தன் துறை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் தான் நாதஸ்வர இளவரசன் பஞ்சமூர்த்தி குமரன். கலை மலிந்த கோண்டாவில் மண்ணைச் சேர்ந்த குமரன்  ஒரு கலைப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் சொத்து என்லாம். ஈழ மண்ணில் நாதஸ்வர கலை வரலாற்றில் ஒரு காலத்தில் நாதஸ்வர இசைமூலம் உலகையே வலம் வந்த நாதஸ்வர சகோதரர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் மூத்த கலைப் பொக்கிஷம் பஞ்சமூர்த்தியின் இளைய புத்திரரான குமரன் சிறுவயது முதலேயே கலைஞானம் இயல்பாக கைவரப் பெற்றவர். தன் தந்தை வழியாக நாதஸ்வரத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் சிறுவயது முதலேயே கற்றுக்கொண்ட இவர் நாதஸ்வரத்துடன் இணைந்து பல ஆசிரியர்கள் ஊடாக கற்றுக் கொண்ட சங்கீதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்து சிறுவயதிலேயே தன் தந்தையோடு இணைந்து ஆலயங்கள், கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

வடக்கும் தெற்கும் - சிறுகதை கே.எஸ்.சுதாகர்



நேரம் இரவு எட்டுமணி. சுமோக்கோவிற்கான மணி அடித்தது. Smoko என்பது அவுஸ்திரேலியாவில் வேலை செய்யுமிடங்களில் விடும் சிறு இடைவேளையைக் குறிக்கும்.

 

“உப்பாலி.... உம்மோடை ஒரு கதை இருக்கு” கொன்வேயருக்கு எதிராக வேலை செய்துகொண்டிருந்த சிவராஜா, தன் சிங்களநண்பன் உப்பாலியைப் பார்த்துக் கத்தினான். கார்கள் வரிசையாக கொன்வேயரில் அணிவகுத்து நின்றதால், சிவராஜாவின் முகம் உப்பாலிக்குச் சரிவரத் தெரியவில்லை. சத்தம் மாத்திரம் கேட்டது. கொன்வேயரைக் கவனமாகத் தாண்டி மறுபக்கம் சென்றான் உபாலி.

 

அவர்களுக்கிடையேயான உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது.

 

“ஹலோ உப்பாலி. எனக்கொரு உதவி செய்யவேணும். நீ எனது நண்பன். ஒன்றாகப் பத்துவருடங்களுக்கும் மேல் வேலை செய்கின்றோம். கேட்பதற்கும் தயக்கமா இருக்கு.”

 

“அதனாலென்ன! ரீயைக் குடித்துக்கொண்டே கதைப்போமே!”

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - சபதம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 6


நல்லவனாக தன்னை காட்டிக் கொண்டு பொதுவாழ்வில் வேஷம் போடும் பலர் தனி வாழ்வில் அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் செய்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டும் இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 1971-ஆம் ஆண்டு உருவான படம்தான் சபதம். வித்தியாசமான கதை அமைப்பையும் திருப்பங்களையும் கொண்ட படமாக சபதம் அமைந்தது.

தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த கேஆர்விஜயா கதாநாயகியாக நடித்த இப்படத்தை அவரின் கணவர் வேலாயுதம் நாயர் தெய்வநாயகி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரித்தார். திரைக்கு வருவதற்கு முன் கே ஆர் விஜயா வின் இயற்பெயர் தெய்வநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரளவு சர்ச்சைக்குரிய இப்படத்தின் பிரதான கதாபாத்திரமான செல்வநாயகம் வேடம் கபடத்தனம் நிறைந்தது. வெளி உலகில் வள்ளலாகவும் அந்தரங்க உலகில் பசுத்தோல் போர்த்திய புலியாகவும் காட்சியளிப்பவராவார். பகலிலே அபலைப் பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவராகவும் இரவில் அதே கரத்தால் அவர்களை துகில் உரிப்பவராகவும் நடமாடுவார். ஆனால் எப்போதும் சிரித்த முகமாகவும் சாந்தமாகவும் காட்சியளிப்பவர்.

கே.பாலசந்தர் 91-வது பிறந்தாள்: மேடையின் ‘சிகரம்’

 .

எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதி 1964-ல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கே.பி. அதன்பின்னர் 2006-ல் வெளியான ‘பொய்’ திரைப்படம் வரை 105 திரைப்படங்களில் அவருடைய படைப்பாக்க மேதமை வெளிப்பட்டிருக்கிறது. 1990-ல் தூர்தர்ஷன் அலைவரிசைக்காக இயக்கிய ‘ரயில் சினேகம்’ குறுந்தொடரில் தொடங்கி, 2011-ல் ஜெயா தொலைக்காட்சியில் வெளியான ‘சாந்தி நிலையம்’ மெகா தொடர் வரை 19 வெற்றிகரமான தொடர்களை இயக்கி, சின்னத்திரையிலும் தான் சிகரம் என்பதை நிரூபித்தார். ஆனால், இந்தச் சாதனையாளரின் தாய் வீடு நாடக மேடை.

கே.பியின் மேடை நாடகங்கள் சமகாலச் சமூகத்தில் மலிந்த முரண்பாடுகளைக் கண்ணாடிபோல் பிரதிபலித்தன. பெண்களுக்காகவும் சாமானிய மனிதர்களுக்காவும் பரிந்து பேசின. 60-களில் அவருடைய நாடகங்கள் சென்னையில் மட்டுமே அதிகமாக நிகழ்த்தபட்டன. அவற்றுக்கு பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களைப் படித்துவிட்டு, அவற்றைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் சென்னைக்கு வந்து சென்றார்கள். நாடகம் தொடங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாகவே அரங்கு நிறைந்துவிடும். காட்சிக்குக் காட்சி கரவொலி, உருக்கமான தருணங்களில் கண்ணீர் வடிப்பது என அவரது நாடகங்களோடு ரசிகர்கள் ஒன்றிப் போனார்கள். அவரது புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படங்களாக வெளிவந்தபோது, அவற்றைப் பார்க்க மறுத்துவிட்ட கே.பியின் தீவிர நாடக ரசிகர்கள் உண்டு.

டாக்டர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா திரையிசைப் பாடகர் | இசையமைப்பாளர் - கானா பிரபா

 


இன்று ஈழத்து நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மஞ்சத்திருவிழா! முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்!!!

(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)
இந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று
.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.
கலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஷ்ணா பாடிய "தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை... திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ!! யாரறிவார்.

இலங்கைச் செய்திகள்

 பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி

மணல் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 4 STF வீரர்கள் காயம்

எஸ்ட்ரா செனகா முதல் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 02 ஆவதாக பைஸர்

கொவிட் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்

எரிபொருள் விலை குறைப்பு, நிவாரணம் வழங்க முயற்சி


பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி

பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி-Basil Rajapaksa's Name Gazetted as SLPP National List MP

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, பசில் ராஜபக்‌ஷவின் பெயர் குறிக்கப்பட்ட அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தேசியப் பட்டியில் எம்.பியாக இருந்த ஜயந்த கெட்டகொட நேற்றையதினம் (06) அப்பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருந்தார்.

​உலகச் செய்திகள்

 ஹொங்கொங்கை அவர்களே நிர்வகிக்க அனுமதி; சீன ஜனாதிபதி அறிவிப்பு

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை; மனைவி வைத்தியசாலையில்

சிறுவர்களுக்கு ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி பரிசோதனை

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி; டிரம்ப் இணைய வாய்ப்பு

சீன போர் விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசம்


ஹொங்கொங்கை அவர்களே நிர்வகிக்க அனுமதி; சீன ஜனாதிபதி அறிவிப்பு

ஒரே நாடு இரண்டு வகையான ஆட்சிமுறை என்ற சீனாவின் தீர்மானம் தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என்றும் சீனாவின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவாறு ஹொங்கொங்கை ஹொங்கொங் வாசிகளும் மகாவோவை மகாவோ வாசிகளும் நிர்வகிக்க அனுமதிக்கப்படும் என்று சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

“சாந்தனின் எழுத்துலகம்”



 இலக்கியவெளி  சஞ்சிகை

 இணைய வழி  கலந்துரையாடல் - அரங்கு 9

 “சாந்தனின் எழுத்துலகம்”

நாள்:  சனிக்கிழமை 31-07-2021

நேரம்:  

 இந்திய நேரம் -   மாலை 7.00      

இலங்கை நேரம் - மாலை 7.00    

கனடா நேரம் -    காலை 9.30         

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:     ZOOM செயலி, Facebook வழியாக        

 

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 Facebook livehttps://www.facebook.com/ilakkiyavelicom/

 மேலதிக விபரங்களுக்கு: - அகில்  - 001416-822-6316

தருமை ஆதீனம் நிகழ்த்தும் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூசை விழா 2021 - திருவாசகம் முற்றோதல்

13/07/2021 செவ்வாய் காலை 10:00 மணி முதல் மலை 5:00 வரை - முழு விபரங்கட்கு இணைப்பினை பார்க்கவும்

 



Zoom ID: 7657012318 Password:657687

You Tube: Dharmapuram Adheenam, Thiruvaiyaru.in

Facebook: Dharmapuram Adheenam

தருமை ஆதீன வானொலிhttps://dharumai.radioca.st/stream