மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா
அதிலே சிலந்தி நாம் தானே
சிக்கி திறணித் தவித்து விழும்
செயலில் நிற்பதும் நாம் தானே
கங்கை நாடிச் சென்று நிற்போம்
கர்மம் அகலக் குளிக்க என்று
அங்கே தர்க்கம் தொடங்கி நிற்கும்
ஆணவம் அங்கே தலை விரிக்கும்
ஆலயம் வணங்கச் சென்று நிற்போம்
அவசரம் கொண்டு முந்தி செல்வோம்
பிழையென யாரும் சொல்லி விட்டால்
நிலையினை இழந்து கத்தி நிற்போம்