பரமாற்றா பொங்கல் 2025 பரமபுத்திரன்

 

உலகின் ஒளியோன் சக்தி முதல்வன் காலையை அறிவிக்கும் கதிரவனை நோக்கி நன்றி கூறி, வாழ்த்தி, வணங்கி தைமகளை வரவேற்கும் தமிழர் பெருநாள் தைப்பொங்கல் திருநாள் நிகழ்வு பரமாற்றா பொங்கல் என்ற சிறப்புப் பெயரில் பரமாற்றா நகரில் 2013ம்   ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு பரமற்றா நகரசபை ஆதரவில் அவுத்திரேலியாவின் New South Wales மாநிலத்தின் இரண்டாவது வியாபார மையம், உலக தரத்திற்கான அபிவிருத்தி காணும் பரமாற்றா நகரில் பரமாற்றா நகரசபை மண்டப நூற்றாண்டுச் சதுக்கம் அதனுடன் இணைந்த நகரசபை மண்டபத்தில்   கடந்த பெப்ரவரி  8 ஆம்  திகதி சனிக்கிழமை காலை 8:45 முதல்  பகல் 12:30 மணிவரை பிரதம அழைப்பாளராக Her Excellency Honourable Sam Mostyn AC. (Governor- General of Australia), கலந்துகொள்ள   பல்லின மக்களும் விருந்தினர்களாக இணந்துகொள்ள, சிட்னியில் வாழும் பிள்ளைகளின் பல்சுவை நிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

வாழ்வெனும் பாடம் மயக்கமாய் விரியுது !




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 



இளமையில் வறுமை பெற்றவர் பிரிவு
உற்றவர் ஒதுக்கல் உறவுகள் விலகல்
ஆனால் அவனே ஒதுங்கிடா இருந்தான் 
கிடைத்ததைக் கொண்டு எழுந்திட முயன்றான்

இரக்கம் உந்திட இணைந்த நல்லுறவால்
எடுத்தடி வைத்துமே ஏறிட முனைந்தான்
கற்பதை மட்டும் கைவிட வில்லை
கல்வியைக் கருத்தில் இருத்திட முனைந்தான்

சேர்ந்த உறவால் சோர்ந்தவன் நிமிர்ந்தான்
இடையில் வருத்தம் இணைந்தே இருந்தது
திட்டும் வாங்கினான் தெருவுக்கும் இறங்கினான்
இறந்திடும் வகைக்கும் எடுத்தான் முடிவை 

தமிழின் சொத்து சாமிநாத ஐயர்



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா       



உ. வே.சா என்றால் - உழைப்பு வேகம் ,சாதனை என்றுதான் எடுத்  துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழியின் ஏற்றத்தைப்  பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில்    முழங்கு கிறோம்.   கருத்துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். 

பல்கலைக்கழகங்களில் பலவித  ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியி டுகின்றோம். இப்படி யெல்லாம் நாங் கள் செய்வதற்கு ஆதாரமாய்  ஆணிவேராய் இருப்பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்க வே  வேண்டும். அந்தப் பேராளுமைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர்  மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்

  உ.வே.சா என்னும் மூன்று எழுத்து தமிழ் வரலாற்றில் பதிந்து விட்ட மந்திரச் சொல்லாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆரா ய்வார்க்கு ஆதார சுருதியாய் அமையும் மூல மந்திரம்  ஆகும். இம்மந்திரத்தை மறந்தால் எங்கள் தமிழன்னை கண்ணீர் வடிப் பாள். எங்கள் தமிழன்னை எங்களைத் தனது பிள்ளைகளென்றே எண்ணமாட்டாள்.

அந்த மந்திரச் சொல்லை மறப்பார் தமிழர் என்னும் நிலையில் இருக்கவே மாட்டார்கள். அப்படி அந்த மூன்றெழுத்து மந்திரம் பெற்ற முக்கியத்துவம்தான் என்ன? அந்த மந்திரமாய் விளங்கும் டாக்டர் சாமிநாத ஐயர் என்னதான் செய்துவிட்டார் ? அவர் மறை ந்து விட்டார் என்று சொல்லுகிறார். ஆனால் அவருக்கு மறைவே யில்லை. அவரென்றுமே வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பது தான் நிதர்சனமாகும். மறைந்தவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் புதிராக இருக்கிறதா ? இன்று நாம் படிக்கின்ற பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஒவ்வொரு பழந்தமிழ் இலக்கியங்களையும் தொட்டு வாசிக்கும் வேளை தமிழ்த் தாத்தாவும் உயிர்ப்புடன்தான் உலவுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !

ஊடகவியலாளர் இராசநாயகன் பாரதி நினைவுகள் ! புகலிடப் படைப்பாளிகளுக்கு சிறந்த களம் வழங்கியவரை இழந்தோம் !! முருகபூபதி


கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி எனது வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியும்  ஒரு படமும் வந்திருந்தது. அனுப்பியவர் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான நண்பர் தெய்வீகன்.

இலங்கையில் சில தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவரான இராசநாயகம் பாரதி, திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக படத்துடன் அந்தச்செய்தி கூறியது.

தற்போது இலங்கையில் நிற்கும் நண்பர் தெய்வீகனை தொடர்புகொண்டு, பாரதியின் சுக நலன் விசாரித்து, பாரதி விரைவில் நலம்பெறவேண்டுமென பிரார்த்தித்தேன்.

எமது பிரார்த்தனைகள் சில வேளைகளில் இந்த விதியின் செவிகளுக்கு எட்டுவதில்லைப்போலும் !?

கடந்த 09 ஆம் திகதி ( இரண்டு வாரங்கள் கழித்து ) பாரதி


மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வருகிறது. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவரின் உயிரை காலன், இரக்கமின்றி  பறித்துவிட்டானே என்ற கோபம்தான் எழுகிறது.

கவியரசு கண்ணதாசன், 1981 இல் அமெரிக்கா – சிக்காகோவில் திடீரென மறைந்தபோது, கவிஞர் வாலி சொன்ன கூற்றுத்தான் தற்போது நினைவுக்கு வருகிறது.

வாலி இவ்வாறு சொன்னார்:  “ எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருத்தன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துப்போட்டுவிட்டான். 

பாரதியின் இறுதி நிகழ்வுகள் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும்  திரளாக கலந்துகொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

வெகு தொலைவிலிருந்து இந்த அஞ்சலிப்பதிவை எழுதுகின்றேன்.

1997 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளியாவில் தினக்குரல் நாளிதழும் வார இதழும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே எனக்கு பாரதியின் அறிமுகமும் தொடர்பாடலும் கிடைத்தது.

அதற்கு முன்னர், பாரதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றிய காலப்பகுதியில்  நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். அக்காலப்பகுதி இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.

ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் போன்று எமது ஊடகவியலாளர்கள் சிக்குண்டிருந்தனர்.

பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்

image

 Published By: Digital Desk 7

11 Feb, 2025 | 09:19 AM

வீரகத்தி தனபாலசிங்கம் 

இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து  மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு  நடத்திய ' சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ' வழங்கும் வனப்புமிகு விழாவில்  இறுதியாக நான் பாரதியைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக அவருடன் பேசி,  மீண்டும் சந்திப்போம் என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். ஆனால், அதற்கு பிறகு ஒரு மாதமும் இரு நாட்களும் கடந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பாரதி எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்ற துயர்நிறைந்த  செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த சில வாரங்களாக பாரதி சுகவீனமுற்று வைத்தியசாலையால் சிகிச்சை பெற்று வந்தார் என்ற போதிலும், அவர் விரைவில் சுகமடைந்து விடுவார், அவரைச் சென்று பார்க்கலாம் என்று  நம்பிக்கை கொண்டிருந்தோம். உண்மையில், அவர் எம்மத்தியில் இன்று  இல்லை என்பதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. பாரதியின் 

மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த  பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது. 

முதல் சந்திப்பு: சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் பத்மா இளங்கோவன் ! ஆறுவயதில் யோகர்சுவாமியின் ஆசிபெற்றவர் ! ! முருகபூபதி


உடல் நலம் குன்றியிருந்தமையால், இந்த முதல் சந்திப்பு தொடர், கடந்த சில மாதங்களாக வெளிவரவில்லை.  எனினும் மீண்டும் எழுதப்படுவதால் உடல் நலம் சீராகிவிட்டது என்பது அர்த்தமும் அல்ல.

ஏதோ, மீண்டும் எழுத முயற்சிக்கின்றேன்.

சமகாலத்தில் எனது  பெரும்பாலான பொழுதுகள் எனது பேரக்குழந்தைகளுடன் கடந்து செல்கின்றன.  அவர்கள் தினசரி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும், சுட்டிக்கண்ணம்மா முதலான காணொளி பதிவுகளை நானும் பார்த்து ரசிக்கின்றேன்.

குழந்தைகளை கவரும் வகையில்  அத்தகைய தொலைக்காட்சி காணொளிகளை தயாரித்து இயக்குவது எத்தகைய கடின முயற்சியோ, அதுபோன்றே, குழந்தைகளுக்காக  இலக்கியம் படைப்பதும் கடினமானதுதான்.

பிரான்ஸில் வதியும் திருமதி பத்மா இளங்கோவன் இதுவரையில்


சில குழந்தை இலக்கிய நூல்களை படைத்திருக்கிறார்.  குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டவர்களினால்தான், அத்தகைய முயற்சிகளில் ஆக்கபூர்வமாக  ஈடுபட முடியும்.

பத்மாவை முதல் முதலில் 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் அவர்களது பெற்றோருடன் சந்தித்தேன். பத்மாவின் தந்தையார் ஆசிரிய பணியிலிருந்தவர் என்பது எனது அவதானம்.

அக்காலப்பகுதியில்  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.  நாம் கொழும்பில் பாரதி நூல்களின் கண்காட்சியையும், ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் ஒளிப்படக்  கண்காட்சியையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, சங்கத்தின் செயலாளர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரன், என்னை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.

அங்கே இலக்கிய நண்பர் வி. ரி. இளங்கோவனின் அழைப்பின்பேரில் கொழும்புத்துறைக்குச்சென்றேன்.  இளங்கோவன், கலை, இலக்கிய, அரசியல்  செயற்பாடுகளின் பின்னணியில் வாழ்ந்தவர். வளர்ந்தவர்.

மூத்த எழுத்தாளர்கள் நாவேந்தன், துரைசிங்கம், மற்றும்  கொழும்பு பல்கலைக்கழக  சட்ட பீடத்தின் தகைமைசார் பேராசிரியர்  தமிழ்மாறன் ஆகியோரின் சகோதரர்.

ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாம் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியில் பிளவுபட்டிருந்தது.

நண்பர் இளங்கோவன் ஊடாக யாழ். மாவட்டத்தில் அவர் அங்கம் வகித்த   இலக்கிய அமைப்பினைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஒளிப்படங்களை சேகரித்தேன்.

முயற்சிப்போரை வளர விடுங்கள் – அன்பு ஜெயா பா வகை: கழி நெடிலடி ஆசிரிய பதினொன்றாம் சீர் மண்டிலம்.

ஆற்றலில்லா மாந்தருமே ஆற்றல்தான் பெற்றிடவே

    அன்புடனே முயன்றிடுதல் ஏற்பீர் – அன்றேல்

    அவர்களையே குறைகூறல் தவிர்ப்பீர்!

ஏற்றமுடன் எல்லோரும் வாழ்ந்திடவே மாந்தரெல்லாம்

    இயன்றதொருப் பங்கினையே தாரும் – வையம்

    எல்லோர்க்கும் இன்பமென மாறும்!    (1)

 

ஏற்றமது கண்டிடவே முயல்பவரின் உழைப்பிற்கே

    இயன்றவரை உதவிதன்னைச் செய்வீர் – அன்றேல்

    ஏளனமாய்ப் பேசுவதைத் தவிர்ப்பீர்!

போற்றவொரு மனமிருந்தால் போற்றுங்கள் முயற்சியினைப்

    போரிட்டுத் தோற்றோரின் பெருமை – அதுவே

    போரிட்டோர் மீண்டெழுப்பும் திறமை!     (2)

------------------------------------------

 

 


முதன் முதலாக ஐரோப்பாவில் இசை நிகழ்வுக்காக வருகை தந்துள்ள வாகீசன் இராசையா, திசோன் விஜயமோகன், அத்வீக் உதயகுமார் ஆகியோர் நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

எனினும், பிரான்சில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முன்பு தமிழ் சமூக வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட ஒரு தாயகச் செயற்பாட்டாளரின் மீது தாக்குதல் மேற்கொண்டதற்காக பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சோனா சோதிராசா என்ற பெண்ணும், தாயகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பத்தினையும் அவதூறாக சமூக வலைதளங்களில் எழுதி வருகின்ற அம்மு ரஞ்சித் குமார் என்பவரும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த நிகழ்வு பிரான்ஸில் பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.


மேலும், இந்த நிகழ்விற்கு முதன்மை அனுசரணை வழங்குபவர்கள் பிரான்ஸில் உள்ள வன்முறை குழுக்களைச் சார்ந்தவர்கள் என்பதும், நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரும் பிரான்ஸில் செயல்படும் “விழுதுகள்” என்ற வன்முறை கும்பலைச் சேர்ந்தவராக இருப்பதாலும், நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள வாகீசன் இராசையா, திசோன் விஜயமோகன், அத்வீக் உதயகுமார் ஆகியோர் பிரான்ஸில் சட்டசிக்கல்களில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக திசோன் மற்றும் இலங்கையில் உள்ள முக்கியக் கலைஞர்கள், பிரான்சில் உள்ள தாயகச் செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசியில் விளக்கமளித்திருந்த போதும், இதுவரை ஒரு தீர்வுக்கு வராததால், ராப் சிலோன் கலைஞர்கள் நடத்தவுள்ள இந்த இசை நிகழ்வு வன்முறையாக முடிந்துவிடுமோ என்ற கவலையை பிரான்ஸ் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.


ஐரோப்பிய கலைஞர்கள் சங்கம்-பிரான்ஸ்

பின் இணைப்புகள்: சோனா சோதிராசா அவர்கள் கைதாயி இருத்த கால்ல்துறையின் ஆவணத்தில் பகுதி மற்றும், அவரன் புகைப்படம் இணைப்பட்டுள்ளது

மரபுக்கவிதை எனும் ஒப்பணையுடை மங்கை!

 சங்கர சுப்பிரமணியன் - 


மரபுக் கவிதையாய் கவிதைசொல்ல
தரவென பெரிதாயேதும் தடயமின்றி
சொந்த விதிசெய்தே நான் படைத்த
விந்தைக் கவிதையிதைக் கேட்பீரே

கூந்தலில் கொஞ்சம் எண்ணெய்பூசி
பாந்தமுடன் அழுத்தியே தலைவாறி
இறுக்கமாய் கூந்தலை பின்னலாக்கி
முறுக்கி பின்னிய கூந்தல் பின்னாட

தொங்கியாடும் அழகிய சடைமுடிவில்
அங்கே ஆடுகின்ற குஞ்சம் மிக அழகு
தலைமுடி அழகுற தனி ஆபரணங்கள்
தலை வகிட்டிலும் அழகு நெற்றிச்சூடி

முடிக்கு முடிவிலா அழகைச் சேர்க்க
அடி நுனிவரை பின்புறம் அழகூட்டி
வண்ண மலர்கள் சான்றாய் நிறைத்து
பெண்ணும் மலராய் மலர்ந்திருப்பாள்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 



ஒரு முக்கியமான மைல்கல் பற்றிய புதுப்பிப்பைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 14 பெப்ரவரி 2025 அன்று, யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிய நோய்த்தடுப்பு சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினோம். இந்த திட்டம் வன்னி ஹோப் மற்றும் பாலம் பிரிட்ஜ் டு ஹ்யூமனிட்டிக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும், இது வட மாகாணத்தில் நோய்த்தடுப்பு சிகிச்சை சேவைகளின் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் உள்ளது.

முடிந்தவுடன், நோய்த்தடுப்பு சிகிச்சைப் பிரிவு, நாள்பட்ட மற்றும் உயிரைக் கட்டுப்படுத்தும் நிலைமைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு விரிவான ஆதரவை வழங்கும், இரக்கமுள்ள மற்றும் முழுமையான பராமரிப்பு மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

வாழ்க்கைப் படகு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 இந்தியத் திரையுலகில் வெற்றி சின்னமாக விளங்கிய பட நிறுவனம் ஜெமினி


பிலிம்ஸ் . இதன் அதிபர் எஸ் எஸ் வாசன் தமிழ், ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் படம் எடுத்து சாதனை புரிந்தவர். 1961ம் ஆண்டு இரும்புத் திரை படம் எடுத்து நான்காண்டுகள் கழிந்த நிலையில் 1965ம் வருடம் மீண்டும் அவர் தயாரித்த படம் வாழ்க்கைப் படகு.

 
முதலில் ஹிந்தி மொழியில் இந்தப் படம் உருவானது. ஜிந்தகி என்ற பேரில் உருவான படத்தில் ராஜேந்திரகுமார், வைஜெயந்திமாலா, ராஜ்குமார் ஆகியோர் நடித்தனர். படத்தின் கதாநாயகி நடனப் பெண் என்பதால் அப் பாத்திரம் வைஜெயந்திமாலாவுக்கு மிக பொருந்தியது. ஆனால் தமிழில் அவர் நடிக்காததால் தேவிகா அப் பாத்திரத்தை செய்திருந்தார். 1965ல் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படம் தயாரானது. ஜெமினியில் தயாராகி ஜெமினி கணேசன் ஆனவர் ஜெமினி. இப் படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க, தெலுங்கில் என் டி ராமராவ் ஹீரோவானார். இரண்டிலும் ஹிரோயின் தேவிகா!

ஏழைப் பெண்ணான சீதா கோபாலின் நடன மன்றத்தில் நாட்டியக்காரியாக

பணியாற்றுகிறாள். அவளுடைய அழகு , குணம் என்பன கோபாலை கவர ஒரு தலையாக அவளை காதலிக்கிறான். அதே சமயம் தியேட்டர் முதலாளி கண்ணபிரானும் சீதாவை தன் இச்சைக்கு பயன் படுத்த முயற்சிக்கிறான். அவளை கடத்தி வர அவன் எடுக்கும் முயற்சி ஜமீன்தார் சொக்கநாதனின் மகன் ராஜன் மூலம் முறியடிக்கப் படுகிறது. சீதா ஒரு நடனப் பெண் என்று அறிந்தும் ராஜன் சீதாவை விரும்புகிறான். அந்தஸ்து வித்தியாசம் இன்றி இருவரிடையே காதல் மலர்கிறது. ஜமீன்தார் இவர்களின் காதலை எதிர்க்கிறார். ஆனால் ராஜனின் பிடிவாதத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஆனாலும் கோபாலுடன் எந்த தொடர்பும் சீதாவுக்கு இருக்கக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கிறார். சீதாவும் அதனை ஏற்கிறாள் .

கல்யாணத்துக்கு பிறகு கடைத்தெருவுக்கு செல்லும் சீதா திடிரென்று பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக ஓர் இரவை கோபாலின் இல்லத்தில் கழிக்கிறாள். அதே இரவு கண்ணபிரான் கொல்லப்பட அப் பழி கோபால் மீது விழுகிறது. அவனை காப்பாற்ற சீதா தான் அன்றிரவு அவன் இல்லத்தில் தங்கி இருந்ததை கோர்ட்டில் சொல்கிறாள் . கோபாலுக்கு விடுதலை கிட்டுகிறது. ஆனால் சீதா மீது களங்கம் சுமத்தப் படுகிறது. ராஜன் அவளை ஜமீனை விட்டே விரட்டி விடுகிறான். ஆனாலும் பிரிவின் வேதனை தாங்காது தவிக்கிறான். மீண்டும் ராஜன், சீதா இணைந்தார்களா என்பதே மீதி கதை.

இலங்கைச் செய்திகள்

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம் - அமைச்சர் சந்திரசேகர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை சார்ந்த இரு திட்டங்களும் உள்ளடக்கம்

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை - வடக்கு மாகாண ஆளுநர்

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்! 



ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு 

14 Feb, 2025 | 03:55 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 30ஆம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன? 

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம் தாக்கியது

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய ஆப்கானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்- 30 பேர் காயம்

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி


ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன? 

14 Feb, 2025 | 11:07 AM
image

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இன்று வெள்ளைமாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது

பிப்ரவரி 23, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் ருத்ரா அபிஷேக விழாக்களுக்கான அழைப்பு