ஒரு சமூகக் கடமையாளர் - சில நினைவுகள் - கன்பரா யோகன்



அமரர்  சின்னையா சிவபாதசிங்கம்

தோற்றம்: 12-11-1932    மறைவு: 2-7-2022

 

1987 நவம்பர் மாதம் என்று நினைக்கிறேன். IPKF - புலிகள் மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். இந்திய அமைதிப்படை நவாலியூரில் ரோந்து சென்ற போது புலிகளின் கைக்குண்டு தாக்குதலில் ஒரு அதிகாரி கொல்லப்பட்டதும் அந்தப் பகுதி முழுவதிலுமே கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்தது கூர்க்காப் படைகள். மக்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்திருந்த அந்தப் பகற் பொழுதில் நானும் ஆலயமொன்றில் தஞ்சமடைந்திருந்தேன்.

நவாலியின் பிரதான சாலையான ஆனைக்கோட்டை , சங்கரத்தை வீதி வெறிச்கோடியிருந்த வேளையில் , சண்டிலிப்பாய்-கட்டுடை ஊடாக காயமடைந்தவர்களை  ஏற்றிக் கொண்டு ஒரு கார்  யாழ் வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டிருக்கிறது. காரில் வந்தவர்களுக்கு நவாலியூரில் நிகழ்ந்தது  தெரிந்திருந்ததால் காரில் வெள்ளைக் கொடியொன்று  கட்டிடப்பட்டிருந்தது. இராணுவ அதிகாரிகள் காரை நிறுத்தினால் நிலைமையை புரிய வைக்கலாம் என்ற அசாத்தியத் துணிச்சலுடனேயே அந்த கார் விரைந்து கொண்டிருந்தது.  

டொமினிக் ஜீவா 95 வது பிறந்த தின உரையாடல்

 


மாநிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்கள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
   

மேனாள்  தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா
 

                          தேடிக் கண்டு கொண்டேன் - திரு
                          மாலொடு நான்முகனும்
                          தேடுத் தேடொணா தேவனை யென்னுள்ளே
                           தேடிக் கண்டு கொண்டேன் 

     என்னும் திருமுறைப் பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே

கண்டு கொண்டதாக உரைத்து நிற்கி றது.உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என் னதான் அவசியம் என்று எண்ணு கிறீர்களா
 ? கண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கி றோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந் திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப் பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படி எல் லாம்  நாங்கள்  நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன்வந்தாலும்கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே. 
    கடவுளைக் காணமுடியுமா ? என்பது உலகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெரு வினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை " கடவுள் போல வந்தீர்கள் " என்று அழைப்பது நம்வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கைகொடுக்கும் செயலைக் கடவுளின் செயலாகக் கரு துகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட  சமூகத்தில் கடவுள் வடிவிலேயே  காணும் நிலையும் காணப்ப டுகிறது.  தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம். 

எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 ) நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞாடபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! ! முருகபூபதி


தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின் புதல்வனாக அகிலாண்டம் என்ற இயற்பெயருடன் பிறந்தவர், பின்னாளில் காந்தீயவாதியாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் வளர்ந்தவரான எழுத்தாளர் அகிலன் அவர்கள் -  பிறந்த நூற்றாண்டு  இந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இலங்கையிலும் இதே திகதியில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர்தான்


டொமினிக்ஜீவா என்ற மல்லிகை ஜீவா.

1922 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அகிலன், சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், தன்வரலாறு முதலான துறைகளில் சுமார் ஐம்பது  நூல்களை வரவாக்கியவர்.

இவற்றுள் 19 நாவல்கள், 17 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் மூன்று சிறுவர் இலக்கியங்களும் அடங்கும்.

இவரது பாவை விளக்கு ,  அதே பெயரிலும் வாழ்வு எங்கே குலமகள் ராதை என்ற பெயரிலும் கயல்விழி,  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகியவை.

முதல் இரண்டு திரைப்படங்களிலும் சிவாஜிகணேசனும், மூன்றாவது திரைப்படத்தில் எம்.ஜி. ஆரும் நடித்துள்ளனர்.

அகிலனின் வேங்கையின் மைந்தன் இந்திய தேசிய சாகித்திய விருதினையும் சித்திரப்பாவை ஞானபீட விருதினையும் பெற்றன.

சித்திரப்பாவை நாவலும் தொலைக்காட்சி நாடகமாக பல வாரங்கள் ஒளிபரப்பானது. அகிலன் எழுதிய சிநேகிதி நாவலைத்தழுவி இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சாரதா என்ற திரைப்படத்தை எடுத்தார் என்று கருதிய அகிலன், தனது எழுத்துரிமைக்காக நீதிமன்றம் வரையில் சென்று போராடியவர். இதுபற்றி எழுத்தும்  வாழ்க்கையும் என்ற தனது சுயவரலாற்று நூலிலும் விரிவாக எழுதியிருக்கிறார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 20 அவலமான செய்திகளை தமிழரிடம் விட்டுச்சென்ற ஆயுததாரிகள் ! கருங்கல்லில் செதுக்கமுடிந்த சிலையும் அம்மியும் ! முருகபூபதி


தொடர்பாடல் அற்ற சமூகம் உருப்படாது என்பார்கள். ஒரு காலத்தில் பேனா நண்பர்கள் இருந்தார்கள்.  ஆனால், தற்போது, முகநூல் நண்பர்கள் பெருகியிருக்கிறார்கள்.

இதனால், பலனும் உண்டு.  பயமும் உண்டு.  அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

எனக்கு பேனா நண்பர்கள் இருந்ததில்லை. முகநூலிலும் கணக்கு இல்லை. வழக்கம்போன்று முன்னர் எனது நண்பர்களுக்கு கடிதங்கள்தான் எழுதிவந்தேன்.  மின்னஞ்சல் அறிமுகமானதும் அதன் ஊடாக தொடர்பாடல்களை வளர்த்து வருகின்றேன்.

காலை எழுந்தவுடன் முதலில் நான் விழிப்பது, எனக்கு வரும்


மின்னஞ்சல்களில்தான். ஒதுக்கவேண்டியவற்றை ஒதுக்கி, பதில் எழுதவேண்டியவர்களுக்கு சுருக்கமாகவேனும் எழுதிவிட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பேன்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் தினமும் ஒரு கடிதம் அல்லது இரண்டு கடிதம் என்ற வீதத்தில் மாதத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்துவிடுவேன், என்று இதற்கு முன்னரும் இந்தத் தொடரில் எழுதியிருக்கின்றேன்.

1988 ஆம் ஆண்டு இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை ஆரம்பித்தவுடன், பலருக்கும்  கடிதம் எழுதநேர்ந்தது.  முக்கியமாக வடக்கில் எனக்கு நன்கு தெரிந்த எழுத்தாளர்களான ஆசிரியர்கள் தெணியான், கோகிலா மகேந்திரன் ஆகியோருக்கு எமது கல்வி நிதியத்தின் நோக்கம் பற்றி தெரிவித்து,  போரிலே தந்தையை அல்லது குடும்பத்தின் மூல  உழைப்பாளியை இழந்த  மாணவரின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டு எழுதியிருந்தேன்.

தெணியான் வடமராட்சி தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் கோகிலா மகேந்திரன் தெல்லிப்பழை மகாஜனா கல்லுரியிலும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு நன்கு அறிமுகமான சட்டத்தரணியும் மருத்துவருமான சண்முகம் ஞானசேகரன் ( ஞானி ) திருகோணமலை மாவட்டம் இந்து இளைஞர் போரவையின் துணைப் பொதுச் செயலாளராகவும் கிழக்கிலங்கை புனர் வாழ்வுக்கழகத்தின் திருகோணமலைப்பிரிவின் பொதுச் செயலாளராகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார். இவருக்கும் கடிதங்கள் எழுதியிருந்தேன்.

கதிரவன் உதித்ததும்…. ……..பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 



 

 









காலைக் கதிரவன் நீலவானிற் - செங்

கதிர்கள் பரப்பி உதித்ததுமே

கோல நிலவைப் பொழிந்தநிலா அந்தோ

கூனிக்; குறுகி மறைந்திடுமே !

அகத்தியர் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழில் பக்திப் படங்கள் என்றால் நினைவுக்கு வருபவர் ஏ பி


நாகராஜன்.நடிகர் திலகம் சிவனை கணேசன் நடிப்பில் இவர் உருவாக்கிய திருவிளையாடல்,திருவருட் செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை ஆகிய படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.ஆனால் சிவாஜிக்கும் ஏ பி என்னுக்கும் இடையில் ஏற்றப்பட்ட மன வருத்தம் காரணமாக சிவாஜியை தவிர்த்து ஏனைய நடிகர்களை வைத்து படங்களை எடுக்க தொடங்கினார் ஏ பி என்.அவ்வாறு அவர் உருவாக்கிய படங்களில் ஒன்றுதான் அகத்தியர்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1972ம் வருடம் இந்தப் படம் வண்ணத்தில் தயாரானது.


தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்திய மாமுனியின் கதையை

படமாக்க தீர்மானித்ததும் அதற்கான ஆலோசனையை தமிழ் கூறும் நல்லுலகில் புகழ் பெற்ற அறிஞர்கலான திருமுருக கிருபானந்த வாரியார்,நாடகத் தந்தை டி கே சண்முகம்,சிலம்புச் செல்வர் மா பொ சிவஞானம் ஆகியோரிடம் பெற்றுக் கொண்டார் நாகராஜன்.அவர்களின் ஆலோசனைக்கு அமையவே படத்தின் கதை அமைக்கப் பட்டது.இந்த மூன்று தமிழ் மேதைகளும் ஒன்று சேர்ந்து ஆலோசனை வழங்கிய ஒரே படம் அநேகமாக இந்த அகத்தியர் படமாகவே இருக்க வேண்டும்.

அகத்தியராக நடிக்க பொருத்தமான நபரையே நாகராஜன் தேர்வு செய்தார்.பிரபல பின்னணிப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தான் அவர்.உருவம்,பேசும் பாணி,பாடும் வெண்கலக் குரல்,என்று அகத்தியர் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தினார் சீர்காழி.அவருடன் போட்டி போடுபவராக நாரதராக வருபவர் டீ ஆர் மகாலிங்கம்.இவர்கள் இருவரும் இணைந்தால் நாதத்துக்கு என்ன குறை!படம் முழுவதும் இனிமையான பாடல்களினால் நிறைந்து பரவசமூட்டின.படத்திற்கு இசை அமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.படத்தில் எல்லாமாக பதின்னொரு பாடல்கள்.ஆனால் கேட்கக் கூடியவை.

எரியும் பிரச்சினையாக மாறியுள்ள எரிபொருள் ! தெரியாமல் மறைந்துள்ள அநாவசிய செலவீனங்கள் !! அவதானி


இலங்கை ஜனாதிபதி  பதவியேற்ற காலத்திலிருந்து,  நாட்டில் ஏற்பட்ட மிக மிக முக்கிய மாற்றம், அவர் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் அமைச்சரவைதான்.  தனது சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவை அமெரிக்காவிலிருந்து அழைத்து நிதியமைச்சர் பதவியை வழங்கினால், அவர் எதிர்நோக்கப்பட்ட  பொருளாதார பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டுவிடுவார் என நம்பினார்.

அவர் வந்தும் இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றி இங்கே


விபரிக்கவேண்டிய அவசியம் இல்லை.  புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையிலிருக்கும் அமைச்சர்கள் ஏற்கனவே வேறு ஒரு துறையில் அமைச்சராகவிருந்திருப்பார். சதுரங்க விளையாட்டில் காய் நகர்த்துவது போன்று இந்த அமைச்சர்களும் ஜனாதிபதி இழுக்கும் திசைக்கெல்லாம் சென்று திரும்பி வருகின்றனர்.


எனினும்,  நாட்டின் எதிர்காலம் குறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான அறிகுறியையும் இந்த அமைச்சர்கள் காண்பிக்கவில்லை. ஆனால், தொடர்ந்தும் அபாயச் சங்கினைத்தான் ஊதிவருகின்றனர்.

சுருக்கமாகச் சொல்வதாயின் இந்த அமைச்சர்கள் கையாலாகதவர்களாகவே தென்படுகின்றனர். கடந்த வாரம் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை  அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே  எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும், அதனால், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் எனவும்  தற்போதைய  போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடும் அத்தியாவசியத்தில் கல்வி காணாமல் போய்விட்டது. இத்தனைக்கும் பந்துல குணவர்தனா முன்னர் கல்வி அமைச்சராகவுமிருந்தவர்.

திருவாதவூரரைச் சிந்தையில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .....அவுஸ்திரேலியா


 

     தேனை நாடி வண்டுகள் ஓடும்.தேனைச் சுவைப்பதில்


வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற்றைய வண்டுகள் போன்றதன்று.இவ்வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடிநிற்க - வாதவூர் வண்டு
வேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உயரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் - தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும்.சொல்லச் சொல்ல இனிக்கும் சொற்களால்
  ஆனதுதான் அந்த வாசகம் " திருவாசகம் ".  இதனால்த்தான் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் " என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.

   திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர்
என்றும் 
மணிமணியான வார்த்தைகளை வழங்கியதால் மணிவாசகர் என்றும் அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும் தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என்றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.

  அந்தணகுலத்தில் பிறந்து பேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின்றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் - அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி " தென்னவன் பிரம்மராயன் " என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான்.மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை

 

தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்

மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக

மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு

மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன் 

 

இலங்கைச் செய்திகள்

ஜப்பான் தூதுவர் வடக்கில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்

அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு

20 மில்.டொலர் வழங்கிய அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதிக்கு கோட்டாபய நன்றி தெரிவிப்பு

3 ஆண்டுகளின் பின் யாழ். நல்லைக் கந்தன் மஹோற்சவம்

மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு சேவை

21ஆவது திருத்தம் தோல்வி 22ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

முற்பதிவின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் இந்திய வீசா சேவை


ஜப்பான் தூதுவர் வடக்கில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகச் செய்திகள்

சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக ஜி7 நாடுகளின் திட்டம் அறிமுகம்

ஜோர்தானில் நச்சு வாயு கசிவு: 13 பேர் பலி

உக்ரைனிய கடைத்தொகுதியில் ரஷ்யா தாக்குதல்: 16 பேர் பலி

சுவீடன், பின்லாந்தின் நேட்டோ விண்ணப்பத்திற்கு துருக்கி ஆதரவு

அமைதிக்கான நோபல் வென்ற ரெசாவின் ஊடகத்துக்கு பூட்டு

பின்லாந்து, சுவீடனை எச்சரிக்கிறார் புட்டின்

ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா

ஹொங்கொங்கின் ஆட்சி முறையை தொடர்வதற்கு சீன ஜனாதிபதி உறுதி


சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக ஜி7 நாடுகளின் திட்டம் அறிமுகம்

சீனாவின் “பெல்ட் அன்ட் ரோட்” திட்டத்துடன் போட்டியிடும் வகையில் சர்வதேச உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை ஜி7 உறுப்பு நாடுகள் அறிமுகம் செய்துள்ளன.

முகேஷ் அம்பானியின் மாதாந்த வருமானம்

 Sunday, July 3, 2022 - 12:10pm

பணம் பணத்தோடுதான் சேரும் என்பார்கள். அதேபோலத்தான் கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர் ஆகிக் கொண்டே செல்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை கடந்த கொரோனா காலத்திலேயே காண முடிந்தது. சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து, அடிப்படை தேவைகளுக்கே கூட கஷ்டப்பட்டனர். ஆனால் இந்த காலகட்டத்திலும் பில்லியனர்கள் சொத்து பெரும் ஏற்றம் கண்டதாக கடந்த ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது.

ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் (SVT) - சிவன் கோவிலில் பாலாலயத்துடன் மகா கும்பாபிஷேக பணிகள் ஆரம்பம்!

 

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia



மஹா கும்பாபிஷேகத்தின் ஒரு பகுதியாக, பக்தர்களுக்கு மேம்பட்ட மற்றும் மிகவும் இனிமையான மற்றும் திருப்திகரமான  அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்து வழிகளிலும் கோயிலின் பழுது, புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்த செயல்முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டமான பாலாலயம் விரைவில் தொடங்கும்.

வரலாற்றுத் தொன்மைமிகு திருக்கேதீச்சரநாதர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா

 Thursday, June 30, 2022 - 9:30am

கம்பர் இராமாயணத்தில் இலங்கையை 'பொன் கொண்டு இழைத்த பூமி' என்று வர்ணிக்கின்றார். இலங்கை சிவபூமி என்பது திருமூல நாயனாரின் கருத்தாகும்.இலங்கைக்கும், பாரத நாட்டின் மேருமலைக்கும் இடைப்பட்ட பூமி பிரதேசம் முழுவதையும் 'சிவபூமி' என்று இன்றைக்கு 8000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலநாயனார் திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். இலங்கையையும், மேருமலையையும் இணைத்து செல்லும் நடுக்கோடு தில்லைச்சிற்றம்பலத்துக்கும், பொதிமலைக்கூடாகவும் செல்கின்றது. இதனாலேயே மேருவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பூமியை சிவபூமி என்றார் திருமூலர்.

இலங்கை தொண்டீஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீச்சரம் என பஞ்சசிவ ஈஸ்வரங்களைக் கொண்ட திவ்விய பூமியாகும். இலங்கைக்கூடாக விராட்புருடனின் நாடி செல்வதாக ஞானிகள் இயம்பியுள்ளார்கள்.  

இளம் தென்றல் 2022 - அன்பாலயம் - 09/07/2022