வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல்

.

வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்
கையசைக்கிறது காலம்....
தீர்ந்துபோகாத வெயில்ப்பொழுதுகள் மீது
நெடுமூச்சின் ஆவி படர
மென்மயிர்ப் பூனைபோல சிலிர்த்துக்கிடக்கிறது
மனது.....
உன் முத்தங்களின் நினைவுகள் புரையேற
தவித்தெழுகிறது ஆன்மா.....
உனக்கான என் தீராக்குரலோ
வெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....
கடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க
அள்ளித்தேக்கிவந்த நினைப்பில் ஒழுகுகிறது
பிரிவின்துயர்.....
அறையப்பட்ட சிலுவையில் மரித்துயிர்த்து
கண்ணீரின் உவர்ப்பில் மாட்டிக்கொண்ட
காயமாய் நேசம்.....
உனக்காய் சேர்த்துவைத்த புன்னகைகளில்
பழுப்பேறிக்கிடக்கின்றன எதிர்பார்ப்புகள்....
மெளனம் வந்தமர்ந்த வீட்டில்
சூரியன் குடித்த சொற்களாய்ப்போயின
நம் உரையாடல்கள்....
நம் புன்னகையின் மரணம் அறிந்து
நீர் பூக்கும் மழைக்காலங்களும்
நீலமாய் விரியும் நெடுவானமும்
ஏதுமுரைக்கா மெளனத்தில்.....
கிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது
திறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....
கடந்துபோகும் இசையில் வலுக்கத்தொடங்குகிறது
பெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...

திரும்பிப்பார்க்கின்றேன் - இலக்கியத்தோழன் இளங்கோவன். - - முருகபூபதி

.
ஆக்க   இலக்கியத்திலும்  தமிழர்  மருத்துவத்திலும் ஈடுபட்டுழைத்த   இலக்கியத்தோழன்  இளங்கோவன்.
பாரதியின்   சேவகன்  கண்ணன்  -  டானியலின்  சேவகன் இளங்கோவன்

                                            
கவியரசு  கண்ணதாசன்  பற்றி  ஒருசமயம்  கலைஞர்  கருணாநிதி கவிதை    எழுதியபொழுது "  யார்  அழைத்தாலும்  ஓடிப்போகும்  செல்லப்பிள்ளை "    என்று  வர்ணித்தார்.   எனக்கும்  இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன்  குறித்து  நினைக்கும்தோறும்  அந்த வரிகள்   நினைவுக்கு  வருவது  தவிர்க்கமுடியாதது.
கவிஞர்கள்   இயல்பிலேயே  மென்மையானவர்கள்தான்.  அதனால்  அவ்வப்பொழுது  எவருக்கும்   செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள்.
இளங்கோவனை  நான்  யாழ்ப்பாணத்தில்  சந்தித்த  காலப்பகுதியில் அவர்   சீனசார்பு  கம்யூனிஸ்ட்   கட்சியின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார்.
இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர்.

நூல் வெளியீட்டு அழைப்பு - 27 09 2015

.










ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 2-2 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

Dr.கைலாசபதி மனைவி சர்வமங்களம் குழந்தை சுமங்களாவும் பேராதனை பல்கலைக்கழக விடுமுறையை களிக்க கொழும்பில் தங்கியிருந்த காலம். ஆவர்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம் அச்சமயம் கைலாசுடன் பல விசயங்களை பற்றியும் உரையாடினேன் அவர ஆர்வமாக என்னைத் தூண்டித் தூண்டி பல கேள்விகளைக் கேட்டார் நாட்டிய வேறுபாடுகள் அரங்கக் கலை எனது இந்திய வாழ்வில் பார்த்த அரங்கப்படைப்புக்கள் குருகுல வாசம் என பலதும் பேசினோம் அப்பொழுது அவர் கூறினார் கார்த்திகா இத்தனையும் பலர் அறியNவுண்டிய விஷயங்கள் ஏன் நீங்கள் இதை எழுதக் கூடாது எழுதினால் பலரும் இவற்றை அறிய வாய்ப்புண்டு என்று என்னை எழுதத் தூண்டினார். நான் எழுதிய இரு கட்டுரைகளை தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனிடம் எடுத்துச் சென்றார் சிவகுருநாதனோ நான் அதை தொடர் கட்டுரையாக எழுதவேண்டும் எனப்பணித்தார். தினகரன் வார மஞ்சரியில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் தொடர் கட்டுரையாக 14 வாரங்கள் தொடர்ந்தது. இதுவே என்னை ஒரு ஆய்வாரள் ஆக்கியது. பத்திரிகைக்கு எழுதும்போது பல நூல்களைப் படித்து ஆராய்ந்து எனது அறிவை விருத்தி செய்தேன். வாசகருக்கு தமிழரின் ஆடற்கலையை கூறப்புகுந்த நான் நீண்ட ஆய்வில் ஈடுபடவேண்டியதாயிற்று.

மெல்பேர்னில் திலீபனின் 28ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் 26 09 15

.













தாயகத்து இளையவர்கள் திறமைகளை கண்டேன் - க பாலேந்திரா

.

எமது தமிழ் அவைக்காற்று கலைக் கழக நாடகக் குழுவினருடன் சென்று , 2013இல் இலங்கையில் நடாத்திய நாடக விழாவின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் நான் தனியாக அங்கு சென்றேன். இலங்கையில் யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, கண்டி, பதுளை, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சென்று இளையவர்களையும், முதியவர்களையும் சந்தித்து என் நாடக
அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கலைப் பயணத்தின் அனுபவங்களை  புதினம் பத்திரிகை ஊடாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
 முதலில் மட்டக்களப்பில் பேராசிரியர் மௌனகுரு தனது, அரங்க ஆய்வுக்கூட மாணவர்களுடன் ஒரு நாடக பயிற்சிப் பட்டறை நடத்த அழைத்திருந்தார். சுமார் 25 இளையவர்கள் மிக உற்சாகமாக பங்கு கொண்டார்கள். ஒரு வாரப் பயிற்சியின் பின்னர், நான் இங்கு லண்டனில் எமது நாடகப் பள்ளி மாணவர்களைக்  கொண்டு கடந்த ஜனவரி மாதம் மேடையேற்றிய பாரதியின் பாஞ்சாலி சபதம் கவிதையை அடிப்படையாகக் கொண்ட “நெட்டை மரங்கள்” மேடை நிகழ்வை , மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தில்  மேடையேற்றினோம். உலகில் நடைபெறும் அநீதிகளையும், கொடுமைகளையும் குறிக்கும் குறியீடாக பாஞ்சாலியின் துயர் காட்டப் படுகிறது.
 “நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்............”
ஆடை குலைவுற்று நிற்கிறாள் -அவள்
ஆவென்றழுது துடிக்கிறாள் -உயர்
மாடு நிகர்த்த துச்சாதனன் -அவள்
மைக் குழல் பற்றி இழுக்கிறான்


இலங்கைச் செய்திகள்


சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது

கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை

சம்­பந்­தனின் கடி­தத்­துடன் சுமந்திரன் தலை­மை­யி­லான குழு ஜெனிவா விரைவு

ரணில் - மோடி சந்தித்தனர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை

 கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

  'பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக" கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்


ஏழையின் மகன்!

.


ராக்ஃபெல்லர் என்பவர் அமெரிக்கக் கோடீஸ்வரரர்களில் ஒருவர்.
   அவர் ஒரு சமயம் ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற அவர், ஹோட்டல் நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
   பின்பு, “வசதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, மலிவான வாடகைக்கு ஒரு அறை வேண்டும்“ என்று கேட்டார்.
   ஹோட்டல் நிர்வாகி வியந்து, “ஐயா... தாங்கள் எங்கள் ஹோட்டலுக்கு வருகை புரிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் பெயரைச் சொல்லி தங்கள மகன் அடிக்கடி இங்கு வந்து தங்குவார். அவர் எப்பொழுதும் அதிக வசதிகள் நிறைந்த அதிக வாடகையுள்ள ஆடம்பர அறையையே கேட்டு வாங்கித் தங்குவார். ஆனால் உலக மகா கோடீஸ்வரரான தாங்கள் மலிவு வாடகையில் அறையைக் கேட்கிறீர்களே. இது எனக்கு வியப்பாக உள்ளது.“ என்றார்.
   அதற்கு ராக்ஃபெல்லர் புன்சிரித்தார்.
   “இதில் வியக்க ஒன்றும் இல்லை. அவனது தந்தையாகிய நான் கோடீஸ்வரன். அதனால் அவன் ஆடம்பர வாழ்க்கை வாழுகிறான். ஆனால் நானோ ஓர் ஏழையின் மகன். ஏழையின் மகனான நான் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்?“ என்றார் ராக்ஃபெல்லர்.
   அவரது தன்னடக்கத்தைக் கேட்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் ஹோட்டர் நிர்வாகி.

நன்றி : arouna-selvame.blogspot

தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் வேண்டும்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

.
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
தமிழ் இலக்கணத்தில் கீழ்க்கண்ட மாற்றங்களை கொண்டுவரலாம். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கருத்துக்களை வரவேற்கிறேன்.
1. உயிரெழுத்துக்களை இந்த வரிசையில் மாற்றி அமைக்கலாம். – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஐ, ஔ, ஃ
குறில், நெடிலாக எழுத்துக்கள் சீராக மாறி வந்து கொண்டிருக்கும்போது, திடீரென இடையில் ஒற்றை நெடில் ‘ஐ’ வரவேண்டிய அவசியமென்ன?

எம்.ஜி.ஆர் கேட்டமுற்பணம் கடன் வாங்கிய பி.ஆர். பந்துலு

.

கர்ணன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய சரித்திரப்படங்களுக்கு உயிரூட்டியது  நடிகர்திலகம் சிவாஜியின் நடிப்பு.சமூகப்படங்களில் சிவாஜியும் அரச படங்களில் எம்.ஜி.ஆரும் கொடிகட்டிப்பறந்தநேரத்தில் பி.ஆர். பந்துலுவின் கர்ணன், வீரபாண்டியகட்டப்பொம்மன் என்பன அரச படங்களில் நடிக்க சிவாஜியாலும் முடியும் என்று நிரூபித்தன.  அரச படங்களின் வெற்றியைத்தொடர்ந்து இன்னொரு அரச படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு அதில் நடிப்பதற்குநடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய ஆயத்தமாக இருந்தார் பி.ஆர். பந்துலு. திரைப்படத்து றையின் அனுபவம் மிக்க வீனஸ் கிருஸ்ணமூர்த்தியுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது த‌ன‌து புதிய படத்தின் கதையைப்பற்றிக்கூறினார் பந்துலு.    இன்றைய இயக்குனர்களைப்போன்று அன்றைய இயக்குனர்கள் தமது கதையைப்பொத்தி வைத்திருப்பதில்லை. அனுபவம் உள்ளவர்களிடம் கூறி ஆலோசனை பெற்றபின்பே படப்பிடிப்பைத்தொடங்குவார்கள். பந்துலுவின் கதையைமுழுமையாகக்கேட்ட வீன‌ஸ் கிருஸ்ண‌மூர்த்தி "இது எம்.ஜி.ஆர் நடிக்க‌வேண்டிய‌க‌தை அவ‌ர் ந‌டித்தால் தான் அருமையாக‌ இருக்கும்" என்றார்.  வீன‌ஸ் கிருஸ்ண‌மூர்த்தி கூறிய‌தைக்கேட்ட‌தும் ப‌ந்துலு திகைத்து விட்டார்.த‌மிழ்த்திரை உல‌கை எம்.ஜி.ஆர், சிவாஜி என‌ இரு துருவ‌ங்க‌ள் ஆட்சிசெய்த‌கால‌ம். சிவாஜிக்காக‌க்க‌தை எழுதி ப‌ட‌ம் த‌யாரித்து 

மலரும் முகம் பார்க்கும் காலம் 13 - தொடர் கவிதை

.
கவிதை 13  டாக்டர் எழில்வேந்தன்  இந்தியா தமிழகம்

வாராமல் அவள் ஏக்கம் வரலாறாய்ப் போய்விடுமோ
தீராமல் அவள் வடிக்கும் கண்ணீரும் ஓய்ந்திடுமோ
மீட்பன் எனஒருவன் வந்திடுவான் என்றெண்ணி
வாட்டம் மிகக்கொண்டு வடிவம் குலையாமல்
தொழுது கரங்குவித்து தோளின் வலி குன்றாமல்
அழுத உன் கண்ணீர் ஆவியாகும் படிக்கு
எழுந்து விழி உயர்த்து பாரெங்கும் பார் செந்தீக்
கொழுந்து பரவட்டும் கண்ணில்  தமிழச்சி
மலரும் முகம்பார்க்கும் காலம் எதுவென்று
புலரும் பொழுதெல்லாம் ஆதவனைப் பார்த்திருந்தால்
கழுத்தின் சுளுக்கால் கடும் வலிதான் நேரும்
இழுத்து அரவணைப்பாய் இதயத்தின் அன்பால்
எல்லா தமிழரையும் புத்தொளியை நீபாய்ச்சி
பொல்லாத்தன மெல்லாம் பொசுக்கி உணர்வூட்டி
ஒத்திருக்கும்  சிந்தையெல்லாம் ஒன்றிணைத்து ஓங்கவைப்பாய்
வித்தக வீரத்தில் முனைமழுங்காத் தமிழர்எலாம்
நித்திலமாய் புவிப்பரப்பில் இறைந்து கிடக்கின்றார்
எத்தரத்தோர் என்றாலும் இணைந்திடுவர்
சத்தியமாய் நம்தமிழர்  வெற்றியென்று ஊதுசங்கே.

ரகசிய கமரா

.

ரகசிய கமரா தலைநகரில் நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக மிளிரும் அந்த நிறுவனத்தில் சீசீரிவி  பொருத்தும் வேலை மிகமும்முரமாக நடைபெற்றபோது பொதுமுகாமையாளர் சுப்பிரமணியம் வேலையை மேற்பார்வை செய்தார்.  எங்கடை ஒப்பீசிலை ரகசிய கமரா பொருத்த வேணும். அப்பதான் சில உண்மைகளை கண்டு பிடிக்கலாம் ஒன்ப‌தும‌ணிக்கு வ‌ந்து எட்டைரை எண்டு சைன் வைக்கின‌ம். நாலேமுக்காலுக்கே அஞ்சும‌ணி எண்டு சைன் வ‌ச்சிட்டு போகின‌ம்  என எம்டிக்கு ஆலோசனை வழங்கிய பெருமையுடன் வேலையைப்பார்வையிடுகிறார். எழுபத்திரண்டு வயது முடிந்தும் வேலையைவிட மனமில்லாது ஒட்டிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம். நவீன தொழில்நுட்பம் எல்லாம் தனக்குத்தெரியும் என காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம் உள்ளவர். உயர் அதிகாரிகளுக்கு கொம்பியூற்றர் கொடுத்தபோது தனக்கும் வேண்டும் என அடம் பிடித்து வாங்கியவர்.சேவீஸ் செய்வ‌த‌ற்காக‌ அவ‌ர‌து பிசியை ஐசி டிப்பாட்ம‌ன்ற் ஊழிய‌ர் கொண்டுபோன அன்று இன்ர‌நெற்றில் செய்தி பார்த்த‌தாக‌ க‌தை விட்ட‌வ‌ர். கொம்பியூட்ட‌ர் வைர‌ஸ் ப‌ற்றி  ஆலோச‌னை செய்த‌போது கிள‌வுஸ் போட்டா வைர‌ஸ் பிடிக்காது என‌ ஆலோச‌னை கூறிய‌வ‌ர்.சீசீரிவி என‌ சொல்ல‌த்தெரியாது ர‌க‌சிய‌ க‌ம‌ரா என‌ அவ‌ர் சொன்ன‌தால்  அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் ர‌க‌சிய‌ க‌ம‌ரா என்றுதான் சொல்கிறார்க‌ள்.  அலுவ‌ல‌க‌த்தைச்சுற்றி ப‌ன்னிர‌ன்டு இட‌ங்க‌ளில் சீசீரிவி பொருத்த‌ப்ப‌ட்ட‌து.உய‌ர் அதிகாரிக‌ள் அத‌னைப்பார்க்க‌ 

உலகச் செய்திகள்


சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்

சிலியில் பூமியதிர்ச்சி, சுனாமி: 10 இலட்சம் பேர் வெளியேற்றம்

சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்

17/09/2015 சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தனது முத­லா­வது வான் தாக்­கு­தலை ஆரம்­பித்­துள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­துள்ள சர்­வ­தேச கூட்­ட­மைப்பு நாடு­களின் தாக்­கு­தல்­களில் அவுஸ்­தி­ரே­லியா பங்­கேற்­றுள்­ளது.

on a GRAND, OLD, DYNAMIC LOVER of ARTS & LETTERS .. Jesurasa

.
 ஆ. சபாரத்தினம் மாஸ்ரரின் மகள் மைத்ரேயியிற்கு எமது அலை இதழுடன் தொடர்பிருந்தது; பேராதனைப் பல்கலைக்கழக மாணவியாயிருந்த அவரின் சொந்தக் கவிதைகளுடன், மொழியாக்கக் கவிதைகளும் அலையில் வெளியாகின. பின்னர் அவர்மூலமாகவே மாஸ்ரருடனும் தொடர்பு ஏற்பட்டது.
1928 ஆம் ஆண்டு, ஐப்பசி 30 ஆம் திகதி பிறந்த சபாரத்தினம் மாஸ்ரர், மேலதிக ஆங்கில உதவி ஆசிரியராகச் சேவையில் சேர்ந்தார்; பின்னர் 1949 – 1950  ஆம் ஆண்டுகளில், மஹரகம ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். 33 ஆண்டுகள் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியராகவும், கரம்பன் சண்முகநாத வித்தியாலயத்தில் அதிபராகவும் (1984 – 1988) பணியாற்றி, ஒய்வு பெற்றுள்ளார்.
 ஆன்மிக ஈடுபாடு மிக்கவர்; பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதர் சோ. தியாகராசபிள்ளை, சைவ ஆசிரியர் கலாசாலை உப அதிபர் பொ. கைலாசபதி முதலியோருடன் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டிருந்தவர். எனினும், தமிழிலும் ஆங்கிலத்திலும் நவீன இலக்கியங்களுடனும் தொடர்பு உடையவர். முற்போக்கான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் கொண்டவர். எப்போதும் மற்றவருக்கு உதவி புரிபவராகச் செயற்படுபவர் என்பதும் குறிக்கத்தக்கது. நெருக்கடியான சூழலில் 

வணிகப் பொருளா கல்வி? - நாகூர் ரிஸ்வான்,

.

நமது நாட்டில் உயர் கல்வியை வணிகமயப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருகின்றன.'அதுதான் ஏற்கனவே மாறிவிட்டதேஎன சலிப்படையாதீர்கள். கல்வித் துறை தற்போதைய நிலையைவிட படுமோசமாக மாறவிருக்கிறது.
ஒரு கல்லூரியை நாம் எப்படி தரமதிப்பீடு செய்வோம். முதலாவதுஎன்ன பாடங்கள் அங்கே கற்றுத்தரப்படுகின்றனபிறகுகற்றுத்தரப்படும் பாடங்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதுதகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களாபாட திட்டம் தரமாக இருக்கிறதாபோன்றவற்றைக் கவனிப்போம். ஒருவேளைஇவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அதைக் களைவதற்கு நிர்வாகத்தை அணுகுவோம். பிரச்னை எல்லைமீறிப் போனால் சட்ட நடவடிக்கை எடுப்போம். 
காரணம்நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்நமது எதிர்பார்ப்புகளும் தேவைகளும்கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என்று நாம்நம்புகிறோம். நமது நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக, 'பணத்தை செலுத்திவிட்டு கல்வியை வாங்கிக்கொள். குறை நிறையெல்லாம் சொல்லக் கூடாதுஎன கல்லூரி நிர்வாகத்தில் சொல்லப்பட்டுஎவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும்! 

மலரும் முகம் பார்க்கும் காலம் 14 - தொடர் கவிதை

.
கவிதை 14 எழுதியவர்: திரு.எஸ: தேவராஜாஜேர்மனி

மலரும் முகம் பார்க்கும் காலம்
மண்ணில் நம்வாழ்க்கை கோலம்
ஒளியை காணும் போதெல்லாம்
உள்ளம் தானே மலர்வாகும்

கருவைகொண்டு    உலகைக்கண்டு
உறவைக்கண்ட வாழ்கை
உயிரைத்தந்து உலவவைத்து
மகிழ்வைக்கண்ட  அன்னை-எம்
உயர்வைக்கண்டு மலரும் அவள் முகம்தானே

விழிகள் அழகைக்கானும்போது-புது
விந்தையாய் மனம் அலைமோதும்
விந்தையின்படைப்பாய் இறைவன் எமது
சிந்தையின் பதிவைவைத்தான் பாரும்

அலையை கரையில் அலைய வைத்து
கரையும் காதல் கொள்ள-மனிதன்
மொழியின்  உரையினில் அர்த்தம் தவித்து
காதல் மொழியே கண்கள் பேச
கடவுள் தந்த விசித்திரமே
காதலர் கனவுகள்  நனவுகள் ஆகும்போது - அவர்கள்
மலரும் முகம் பார்க்கும் காலம்  மனம் மலரும்

தமிழ் சினிமா யட்சன்

.

ஹாலிவுட்டில் வெளிவரும் பல படங்கள் நாவலை அடிப்படையாக கொண்டு தான் எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தற்போது தான் வளர்ந்து வருகின்றது. இதற்கு எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, போன்றோர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததே முக்கிய காரணம்.
ஆரம்பம் வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்தன் மீண்டும் எழுத்தாளர் சுபாவுடன் கைகோர்த்து உருவாக்கியுள்ள படம் தான் யட்சன். இக்கதை தமிழகத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்தது குறிப்பிடத்தக்கது.
கதைக்களம்
தூத்துக்குடி சின்னாவாக ஆர்யா, தீவிர தல அஜித் ரசிகர், அஜித் படத்தின் டிக்கெட்டை ஒருத்தன் கிழித்துவிட்டான் என்பதற்காக அவனை யதார்த்தமாக அடிக்க, அவனோ ஒரு கம்பியில் மோதி இறக்கிறார். அதோடு பெட்டிபடுக்கையை எடுத்துக்கொண்டு சென்னை வருகிறார் ஆர்யா.
இதேபோல் பழனியில் இருக்கும் கிருஷ்ணா சினிமா மோகத்தால் சென்னை வருகிறார். ஆர்யா சென்னை வந்ததுமே தம்பி ராமையா அவரை ஒரு பெண்ணை(தீபா சன்னதி) கொலை செய்ய சொல்கிறார். இவரும் காசுக்காக அவரை கொலை செய்ய சம்மதிக்கிறார்.
ஆனால், பார்த்தவுடன் காதல், இருந்தாலும் பணம் முக்கியம் என்று அவரை கொல்ல ஒரு நாளை தேர்ந்தெடுக்க, ஆர்யா, அதே நாளில் கிருஷ்ணாவை, எஸ். ஜே.சூர்யா தன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளார்.
அன்றைய தினம், ஆர்யா ஏற வேண்டிய வண்டியில் கிருஷ்ணாவும், கிருஷ்ணா ஏற வேண்டிய வண்டியில் ஆர்யாவும் ஏற, அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்னவாகின்றது, தீபா சன்னதியை ஏன் கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகின்றது? என்பதை அறிந்தும் அறியாமலும் ஸ்டைலில் செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.
படத்தை பற்றிய அலசல்
பெரும்பாலும் நாவலை கதையாக்க வேண்டும் என்றால், மிகவும் ரிஸ்க். ஏனெனில் அத்தனை பெரிய கதையை சுருக்கி 2 மணி நேரத்தில் சொல்வது என்றால் சாதாரணமா? ஆனால், விஷ்ணுவர்தன் அதிலிருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் உருவி, லாஜிக் எல்லாம் கேட்காதீங்கப்பா...என்று தனக்கே உண்டான ஸ்டைலில் இயக்கியுள்ளார்.
ஆர்யா உண்மையாகவே இவர் ஸ்டைல் கதாபாத்திரத்தை விட லோக்கல் கதாபாத்திரம் தான் பாஸ் மார்க் வாங்குகிறார். மிக இயல்பாக எந்த சீரியஸும் இல்லாத ஜாலியான ஆர்யாவின் ரியல் கதாபாத்திரம் தான் இதிலும்.
கிருஷ்ணா, நன்றாகவே நடிக்கிறார், என்ன கொஞ்சம் அதிகமாகவே நடிக்கிறார். இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு பறிபோய் நிற்கும் இடத்தில் கூட அழுது புரலாமல், தனக்கு என்ன வருமோ அதை அழகாக செய்துள்ளார். ஸ்வாதிக்கு பெரிய கதாபாத்திரம் ஒன்றுமில்லை, கொஞ்சம் அடவாடி. தீபா சன்னதியை சுற்றி தான் கதையே நகர்கிறது. சொல்லப்போனால் படத்தில் மூன்றாவது ஹீரோவே இவர் தான்.
தம்பி ராமையா, பொன் வண்ணன் எல்லாம் தனக்கே உண்டான ஸ்டைலில் நன்றாக நடித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக படத்தில் செம்ம ஸ்கோர் செய்வது இரண்டு பேட். அந்த வில்லன் கேரக்டர் தான். மிக நிதானமாக எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்து மிரட்டியுள்ளார்.
அதேபோல் படம் டல் அடிக்கும் போது பூஸ்டாக வந்து நிற்பது RJ பாலாஜி தான். இவர் பேச ஆரம்பித்தாலே ஆடியன்ஸ் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்திற்கு என்ன கலர் தேவையோ அதை அப்படியே கொண்டு வந்துள்ளார். மிகவும் கலர்புல்லாக இருக்கின்றது. பாடல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் யுவன். ஆனால், இவரின் ஸ்பெஷலே பின்னணி இசை தான். அதில் கொஞ்சம் நம்மை ஏமாற்றிவிட்டார்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி செம்ம ஜாலியாக செல்கின்றது, ஆர்யா, கிருஷ்ணாவின் துறுதுறு நடிப்பு, யுவனின் பாடல்கள், குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் பாடல் தாளம் போட வைக்கின்றது. RJ பாலாஜியின் கவுண்டர் வசனங்கள்.
பல்ப்ஸ்
முதல் பாதி அதிலும் ஏன் சார் அந்த கார் மாறும் சீன் அத்தனை நீளம், லாஜிக் எத்தனை கிலோ என்று தான் கேட்க வேண்டும் போல, வில்லனை அத்தனை மிரட்டலாக காண்பித்து கிளைமேக்ஸில் 4 அடியாட்களுடன் காட்டுவது தான் செம்ம காமெடி.
மொத்தத்தில் யட்சன் அத்தனை பெரிய தொடரை அழுத்தமாக சொல்ல முடியவில்லை என்றாலும், இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ அதை அழகாக எந்த லாஜிக்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ரேட்டிங்- 2.75/5    நன்றி cineulagam   






திரும்பிப்பார்க்கின்றேன் - இலக்கிய உலா வந்த தருமு சிவராம். -முருகபூபதி

.
நான்  சந்திக்கத் தவறிய  பல  பெயர்களில்  இலக்கிய உலா  வந்த   தருமு  சிவராம்.
 திருகோணமலையிலிருந்து   தமிழகம்  சென்று   மறைந்த இந்த  கலை   இலக்கிய  ஆளுமைக்கு   இன்றைய தினம்   பிறந்த  மண்ணில்   நினைவரங்கு
              
 
வீரகேசரியில்   பணியிலிருந்த  காலத்தில்   எனக்கு  முன்பின்தெரியாத  ஒரு  அன்பர்  அன்று  ஒருநாள்  காலை வேளையில்   அங்கு   வந்து  என் முன்னால்  தோன்றினார்.
அருகிலிருந்த   அறையில்  வீரகேசரி  வாரவெளியீட்டு  ஆசிரியர் பொன். ராஜகோபால்   அவரை  என்னிடம்  அனுப்பியிருந்தார்.   எனக்கு முன்னாலிருந்த   ஆசனத்தில்  அவரை  அமரச்சொன்னேன்.
அவரது    கரத்தில்  முதல்நாள்  ஞாயிற்றுக்கிழமை   வெளியான வீரகேசரி  வாரவெளியீட்டின்  கிழக்கு  மாகாணப்பதிப்பு  இருந்தது. தான்  அன்றுகாலைதான்  திருகோணமலையிலிருந்து  கொழும்பு வந்ததாகவும்,    நேரே  எமது  அலுவலகத்தை  தேடிக்கண்டுபிடித்து வந்து    சேர்ந்ததாகவும்  சொன்னார்.
அவருடைய   முகத்தில்  சோகத்தின்  ரேகைகளும்   சோர்வும் தென்பட்டது.    அத்துடன்  அவரது  கண்கள்  எதனையோ தேடிவந்திருப்பதையும்    உணர்த்தியது.   நீங்கள்தானா  ரஸஞானி...? என்றுதான்  அவர் தனது  உரையாடலை   தொடங்கினார்.

எனக்கு    முன்பின்தெரியாத  ஒரு  இலக்கியவாதியாகத்தான்  அவர் இருப்பார்.    ஏதும்  செய்திகொண்டுவந்திருப்பார்  என  நினைத்து, " ஆம் நான்தான்."  என்றேன்.
" அதுதான்  உங்கள்  பெயரா...?  அல்லது  புனைபெயரா...? " என்று அடுத்தகேள்வியை  தொடுத்தார்.
"  எனது   பெயரைச்சொல்லி,   ரஸஞானி   எனது  புனைபெயர்  என்றேன்.
" அதுமட்டுமா  உங்கள்  புனைபெயர்,  மேலும்  ஏதும் வைத்திருக்கிறீர்களா...? "    என்ற  அவரது  மற்றும்  ஒரு  கேள்வி,   அவர்   என்னை   பேட்டி காணவந்துள்ளாரா...? என்ற யோசனைக்குத்தள்ளியது.