சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள் !

 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ….. அவுஸ்திரேலியா



       வேதத்தின்   முதல்வன் விடமுண்டன் கண்டன் 
       ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான் 
        சோதியென எழுந்தான் துடுக்கொழிய வைத்தான்  
        மாலயனின் மயக்கம் போக்கியவன் நின்றான் 

       மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
       மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென  வுரைப்பார் 
       சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி 
       விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார் 

       பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
       விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும் 
       ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
       அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 53 இயற்கையின் சீற்றத்தை 2004 சுநாமியில் கண்ட அனுபவம் ! கடல் காணாமலாக்கிய உயிர்களும் ஆயுததாரிகள் காணாமலாக்கிய உயிர்களும் ! ! முருகபூபதி


துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வினால், நாற்பத்தியைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கும் இவ்வேளையில்,  இந்தப்பதிவை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

இயற்கையை தெய்வமாக வழிபடும் மக்கள், அதன் சீற்றத்தை காணும்போது, அதற்கான காரணம் தெரியாமல் புலம்புவார்கள்.  அத்தகைய ஒரு புலம்பல் மனநிலையில் நானும் 2004 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இருந்தேன்.

எனது அம்மா, அதற்கு முதல் வருடம் மே மாதம் இறந்த செய்தியினால் வந்த அதிர்ச்சியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது,  அடுத்து வந்த ஆண்டுகளிலும் பதறவைக்கும் செய்திகளே  என்னை வந்தடைந்தன.

20-04- 2004 ஆம் திகதி என்னால் மறக்கவே முடியாத தினம், அன்றைய


பகல்பொழுதில் எனது தாயார் மறைந்து முதலாண்டு திதியை முன்னிட்டு தாயாரின்  உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி படையலிட்டு,  உணவருந்த அமர்ந்தபோது , எனது இரண்டாவது மகள் பிரியாதேவி தனது அறையிலிருந்து பதட்டத்துடன் ஓடிவந்தாள்.

அவளது கையடக்கத் தொலைபேசிக்கு வந்திருந்த சுருக்கமான செய்தி  இலக்கிய நண்பர் ராஜஶ்ரீகாந்தனின் மறைவைத் தெரிவித்தது. சகோதரி தேவகௌரி ( தினக்குரல் ) தகவல் அனுப்பியிருந்தார். அதிர்ச்சியான அச்செய்தியை அனுப்பிய அவருடனான இணைப்பு உடனடியாக கிடைக்காதமையினால், மல்லிகை இதழ் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டேன். அங்கே எழுத்தாளர் ஆப்தீன், அச்செய்தியை உறுதிப்படுத்தினார். அவர் தந்த இலக்கத்தில் தொடர்புகொண்டபோது, ராஜஶ்ரீகாந்தனின் மூத்த மகள் அபர்ணா மறுமுனையில் கதறினார்.


பின்னாளில் ராஜஶ்ரீகாந்தன் சென்றவிடத்திற்கே நண்பர் ஆப்தீனும் அபர்ணாவும் வெவ்வேறு காலப்பகுதியில்  சென்றனர் என்பது மற்றும் ஒரு தீராத சோகம்.

ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.

வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப் பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!

கவிதை - அவள்.... -மெல்போர்ன் அறவேந்தன்

 



இலங்கை தேசிய கீதத்தின் பிதா ஆனந்த சமரக்கோன் : உறைபொருளும் மறைபொருளும் ! அவதானி

 


கவிஞர்கள் மிகவும் மென்மையானவர்கள். அத்துடன் உணர்ச்சிமயமானவர்கள்.  நாம் அறிந்தமட்டில் தமிழ்நாட்டில் கவிஞர் ஆத்மநாம், இலங்கையில் சிவரமணி ஆகிய கவிஞர்கள், இந்த உலகில் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்துகொண்டவர்கள்.

 எத்தனையோ இடர்களுக்கும் நெருக்கடிக்கும் மத்தியில் வறுமையில் வாடிய  பாரதியார்,  “ வீழ்வேன் என நினைத்தாயோ,.?  “ என்றுதான் ஓங்காரமாக ஒலித்தார். வாழ்ந்தார்.

  “ வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்    என்றவர்


கவியரசு கண்ணதாசன்.  இத்தனைக்கும் அவர் கடன் தொல்லையால் பல்வேறு சிரமங்களை அனுபவித்தவர்.

இந்த குறிப்புகளுடன்தான், இலங்கை தேசிய கீதத்தை இயற்றிய கவிஞரை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

 இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்களாகிவிட்டன.  அதன்கொண்டாட்டத்தில் ஒலிப்பதுதான் தேசிய கீதம்.  அரச நிகழ்வுகள், பாடசாலை வைபவங்களிலும் ஒலிக்கும்.

 சிங்கள மொழியில் மாத்திரம்தான் பாடவேண்டும் என சிங்கள பேரினவாதிகள் - கடும்போக்காளர்கள் சொல்லிவந்தனர்.

இம்முறை காலிமுகத்திடலில் சுதந்திர தின விழாவில் முதலில்  சிங்களத்திலும் இறுதியில் தமிழிலும் இந்தக்கீதம் இசைக்கப்பட்டது.

 ஒரு காலகட்டத்தில் இலங்கையில் தியேட்டர்களில் திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது இடைவேளையில் திரையில் தேசியக்கொடியை காண்பித்து, தேசிய கீதத்தை பின்னணியில் ஒலிக்கவிட்டார்கள்.

ரசிகப்பெருமக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.  சிறிது காலத்தில் அந்த நடைமுறையை அரசு மாற்றியது.  திரைப்படம் தொடங்கு முன்னர் காண்பித்தார்கள்.

மக்கள்  காலப்போக்கில் தியேட்டர்களுக்கே செல்வதை குறைத்தபின்னர் தேசிய கீதம் காண்பிப்பதும் படிப்படியாக குறைந்தது.

 இதனை இயற்றியவர் கவிஞர் ஆனந்த சமரக்கோன்.  இவரும்  மனஉளைச்சலினால் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை உட்கொண்டு  தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அவர்  இலங்கை அரசுக்கு இயற்றிக்கொடுத்த தேசிய கீதமும் ஒரு முக்கிய காரணம் எனச்சொல்லப்படுகிறது.

 இதுதொடர்பாக எமக்கு கிடைத்த தகவல் குறிப்புகளை இங்கே தருகின்றோம்.

 அவர் பிறப்பால் கிறிஸ்தவர்.  இயற்பெயர்:  வில்பிரட் அல்விஸ் சமரகோன் 1911 இல்  தென்னிலங்கையில்  பாதுக்கையில்  பிறந்த அவர்,   1934 ஆம் ஆண்டு இலங்கை வந்த   இந்திய வங்கக் கவிஞர்  ரவீந்தரநாத் தாகூரின் படைப்பாற்றலில் ஆர்வம்கொண்டு,  இசை ,  ஓவியம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக  இந்தியா சென்று சாந்தி நிகேதனில்   தாகூர், நந்தலால் போஸ் ஆகியோரிடம் இசை மற்றும் ஓவியக்கலை  பயின்றார்.

அருங் கொடையே காதல் !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் … அவுஸ்திரேலியா
      




காதல் இல்லா வாழ்க்கை
களை இழந்த வாழ்க்கை
காதல் இல்லா வாழ்க்கை
கருத் திழந்த வாழ்க்கை 
காதல் என்னும் நினைப்பு
களிப்பு தரும் நாளும்
காதல் என்னும் உணர்வு
களிப் பளிக்கும் மருந்து   !

மனித மனம் இணைய
மருந் தாகும் காதல்
மனித குணம் சிறக்க
வழி வகுக்கும் காதல்
மனித குலம் செழிக்க
வழி சொல்லும் காதல்
வைய வாழ்வு மலர
வழித் துணையே காதல்  !

முதல் சந்திப்பு கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! முருகபூபதி

 

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு


தென்னிலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள்.  

பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது.

அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன்,  உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள்.

இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா


பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர்.

இந்தப்பெயர்களை,  அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.

தோழர் பாலாதம்பு குறிப்பிட்ட அரசியல் கைதிகளுக்காக வாதிட்டார்.  எனினும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்தனர். கிளர்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் மிதந்தன.

கதிர்காமத்தில் நடக்கும் சித்திரை புத்தாண்டு விழாக்களில் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பிரேமாவதி மனம்பேரி, அந்த புனித பிரதேசத்தில் ஒரு இராணுவ அதிகாரியினால் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தப்பெண்ணின் கதையை சித்திரிக்கும் கங்கை மகள் என்ற சிறுகதையை பின்னாளில் எழுதியிருக்கின்றேன்.

இச்சிறுகதை  “ கங்காவே துவெனிய  என்ற தலைப்பில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளது.   அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரும் இயக்கத்தில் நானும் இணைந்திருந்தேன்.

இவ்வியக்கம்,  கொழும்பில் மலேவீதியில் அன்றைய கல்வி அமைச்சிற்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கும்  அருகில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையில் தோழர் லீனஸ் திஸாநாயக்காவால் முன்னெடுக்கப்பட்டது. அந்த இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தோழர் சண்முகதாசன், வாசுதேவ நாணயக்கார, குமாரி ஜயவர்தனா,  தினேஷ் குணவர்தனா ( இன்றைய பிரதமர் ) ஆகியோருடைய பெயர்களுடன் எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நானும் சிறிது காலம் வேலை செய்தேன். அச்சங்கம் வெளியிட்ட ஆசிரியர் குரல் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தேன். தற்போது இங்கிலாந்தில் வதியும் தோழர் காதர்,  எமக்கு அரசியல் வகுப்பு நடத்தி, சுயநிர்ணய உரிமை  பற்றிய விளக்கங்கள் அளிப்பார்.

1977 ஆம் ஆண்டு  நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் படுதோல்வியடைந்து,  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக்கட்சியும் மிகக் குறைந்த  ஆசனங்களையே பெற்றது.

அதனால், தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநிதியான அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.

பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் வாழ்த்தினைப் பெற்ற கவிஞர் அம்பி “ சொல்லாத கதைகள் “ மின்னூலும் வெளியீடு




https://www.youtube.com/watch?v=P2636sMP0Oo

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 8 : கொண்டாட்டம்

 


மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.

 ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.

 வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.

 ஜோசுவா தன் கழுத்தைச் சரித்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தன் வாயைச் சுழித்தாள். அந்தச் சுழிப்பு அவன் மனதைக் கிறங்க வைக்க காரை மெதுவாகக் கிழப்பினான்.

 இந்தக் காட்சியை கார்த்தரிப்பிடத்தில் இன்னொரு காருக்குள்ளிருந்து மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான்.

 கார் ஹோட்டலை அடைந்ததும் காரைவிட்டு இறங்க மறுத்தாள் புங்.

 “நான் வரமாட்டேன். எனக்குப் பயமாக இருக்கின்றது” அடம்பிடித்தாள் புங்.

 அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அவளை இறுக அணைத்து அவளின் கன்னத்தில் ஒரு உம்மாக் கொடுத்தான் ஜோசுவா. குளிரினால் உறைந்து போயிருந்த அவள் கன்னங்கள் சில்லென்று இருந்தன. முத்துக்குளித்த முதல் சுகானுபவத்தில் மூச்சுத் திணறினான் ஜோசுவா.

 “பொறு… பொறு… விட்டால் நீ இங்கேயே விஷயத்தை முடித்துவிடுவாய்” சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கினாள் புங். ஜோசுவாவின் பின்னாலே அற நனைந்த கோழிபோல உரசிக்கொண்டு நடந்தாள்.

வாசகர் முற்றம் – அங்கம் 16 வீரகேசரி பிரசுரங்களிலிருந்து வாசிப்பு அனுபவத்தை வளர்த்துக்கொண்ட வாசகி வசுந்தரா பகீரதன் ! முருகபூபதி


நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், இரத்த உறவுகள் அவரவர் பாரம்பரியத்திலிருந்து பிறப்பார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வில்,   நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் சந்தித்த வசுந்தரா பகீரதனின் வாசிப்பு அனுபவம் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டபோது, மேற்குறிப்பிட்ட வரிகளே எனது மனதில் தோன்றியது.

தான் ஒரு இலக்கிய ஆளுமையின் உறவினர் என்பதே தெரியாமல் வளர்ந்த ஒரு தேர்ந்த வாசகிதான் இந்த வசுந்தரா !  அத்தகைய இவர் பற்றிய அறிமுகத்தைத்தான் இம்முறை எனது தொடரான வாசகர் முற்றத்தில் வழங்கவிருக்கின்றேன்.

வீரகேசரியில் நான் பணியாற்றியபோது அங்கே


வாரவெளியீட்டுப்பிரிவில் துணை ஆசிரியராகவிருந்த வசுந்தரா பகீரதன்,  என்னோடு உடன் பிறந்த சகோதரிபோன்று  பழகியவர்.

அன்று தொடங்கிய நட்பு,   சகோதர வாஞ்சையாக அவர் அவுஸ்திரேலியா சிட்னியில் குடும்பத்துடன் வசிக்கத்தொடங்கிய காலத்திலிருந்தும்  தொடருகிறது.

யாழ்ப்பாணம், நல்லூர் பிரிவிலுள்ள கொக்குவில்  கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.  பெற்றோர்:  சுப்பிரமணியம் – ஜெயமணி தம்பதியர்.

 தனது ஆரம்பக் கல்வியை  கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திலும்,  உயர்வகுப்பை  அவ்வூருக்கு மகுடமாக விளங்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.  பின்னர் யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து தொழிற்கல்வியை பெற்றார்.

வசுந்தராவிடம், வாசிப்பு பழக்கம் எவ்வாறு தோன்றியது..?  வளர்ந்தது…?  எனக்கேட்டேன்.  

வசுந்தரா:  மிகச்சிறிய வயதிலேயே வாசிப்பு பழக்கம் எனக்கு வந்துவிட்டது.  ஆரம்பக் கல்வியில் வாசிப்பு ஒரு பாடமாக இருந்துவந்தது. எனது தந்தையார்தான் வாசிப்பை எனக்கு ஊக்குவித்தவர். என்னை மட்டுமல்லாமல்,  எனது தாயார், உடன்பிறந்தவர்களையும் வாசிப்பை நேசிக்க வைத்தவர்.  அவர்தான் எங்கள் வீட்டு நுழைவாயில் கதவின் நிலையில் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்ற மில்க்வைற் வாசகத்தை ஒட்டி வைத்திருந்தார். அந்த வாசகமே வேதவாக்குப்போல் புத்தகங்களின் முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்தியது.

எமது தந்தையாருக்கு காலையில் எழுந்ததும் வீரகேசரி படிக்கின்ற பழக்கம் இருந்தது. அதனால் சிறுவயதிலேயே எங்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.  சிலவேளைகளில் அவருக்கு முன்னால் இருந்து அனைத்துச் செய்திகளையும் தனக்கு வாசித்துக் கூறும்படி கூறுவார்.  அவர் ஒரு புத்தகப்பிரியர். எங்கள் வீட்டில் சிறிய  நூலகமே இருந்தது.

சிறுவயதில்,  அம்புலிமாமாவில் தொடங்கிய வாசிப்பு அனுபவம், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் என பலவற்றையும் தேடி வாசிக்கத்தூண்டியது.   பள்ளிப் பாடப் புத்தகங்களிடையே,  இவைகளும் பாடப்புத்தகங்கள்போல் சுமக்கப்பட்டன.

புத்தகப்பிரியரான எனது தந்தையார் 70 களில் வெளிவந்த வீரகேசரிப் பிரசுரங்களை ஒன்றும் தவறவிடாமல் வாங்கி சேமித்து வைத்திருந்தார். இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக உள்ளது.

வசுந்தராவிடம்,  அவரது வாசிப்பின் தேர்வு எவ்வாறிருந்தது…? எனக்கேட்டேன்.

இதயத்தில் நீ - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் உருவான முக்தா பிலிம்ஸ்


தனது இரண்டாவது தயாரிப்பான இதயத்தில் நீ படத்தை 1963ம் வருடம் வெளியிட்டது.முதல் படமான பனித்திரையில் கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனே இந்தப் படத்திலும் நாயகனாக நடித்தார்.ஆனால் கதாநாயகி மாற்றப்பட்டு ,சரோஜாதேவிக்கு பதில் தேவிகா கதாநாயகியாக நடித்தார்.அன்றைய கால கட்டத்தில் சரோஜாதேவி கிடைக்காவிட்டால் அவருக்கு மாற்றீடாக இருந்தவர் தேவிகாதான்!


காதல்,நகைச்சுவை இந்த இரண்டையும் சமமாக கலந்து படத்துக்கு

திரைக் கதை எழுதி டைரக்ட் செய்திருந்தார் வி சீனிவாசன்.படத்தின் ஆரம்பமே கலகலப்பாக தொடங்குகிறது.வக்கீல் ஆனந்தன் பூங்காவில் நெல்லையப்பனின் பேத்தியான ராதாவை கண்டு காதல் கொள்கிறான்.இருவரிடையேயான காதல் வளர்ந்து நிச்சயதார்தத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.ஆனால் எங்கிருந்தோ திடீர் என வந்து சேரும் ராதாவின் போலிக் தந்தையான மாரிமுத்துவால் நிச்சயதார்த்தம் தடைப்படுகிறது.அதே சமயம் தனது பெற்றோர்கள் யார் என்ற ரகசியத்தையும் அறிந்து கொள்ள ஆனந்தன் துடிக்கிறான்.காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை.

காதல் ஹீரோ என்றால் ஜெமினிதான்.காதலிக்கு டாவடிப்பது,குழைத்து குழைந்து பேசுவது,காதல் தோல்வியில் உருகுவது ,பெற்றோரைத் தேடுவது என்று கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருந்தார்.அவரோடு சேர்ந்து தேவிகாவும் காதலித்து,உருகி,வருந்தி நடித்திருந்தார்.ஆரம்பத்தில் இவர்கள் அறிமுகமாகும் காட்சி சுவாரசியமாக இருந்தது.

படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்தே எம் ஆர் ராதா அறிமுகமாகிறார்.ஆனால் அவர் வந்த பின்னர்தான் படம் விறுவிறுப்பாகிறது.மனைவியையும்,மகனையும்,அல்லது மகளையும் பிரிந்து அலைந்து அவர்களை கண்டுபிடிக்கும் ரோல் ராதாவுக்கு புதிதல்ல.ஏற்கனவே சில படங்களில் செய்தது.அதையே இதிலும் செய்கிறார்.அவர் சதி செய்வதும்,அவை பிழைப்பதுமாக படம் நகர்கிறது.ஆனால் இறுதியில் அவரை அநாதரவாக விட்டிருக்க வேண்டாம்.

❤️ அற்றைத் திங்கள் அந்நிலவில்❤️

 


சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு

"புகழேந்திஎனும் பிரமாண்டமானதொரு நாடகம் 2020 ஆம் ஆண்டில் பெரும்வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்துவிதை அமைப்பின் அடுத்த பிரமாண்டப்     படைப்பு “அற்றைத் திங்கள் ந்நிலவில்” சாகசக் காட்சிகளும், இன்னிசையும்,சிறப்பாக தமிழர் ரபுக் கூத்தும் இணைந்தமுழு நீள நாடகம்

18/02/2023 யில் சிட்னியில் அரங்கேறிது


மேலதிக தொடர்புகளுக்கு

ஆதி திருநந்தகுமார் 0452553596

ஜனார்த்தன் குமாரகுருபரன் 0430911965


ஐம்பதுக்கு மேற்பட்ட திறன் வாய்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப்பிரமாண்டமான படைப்பு குறித்து வீடியோஸ்பதி தளத்துக்காக ஆதி மற்றும்ஜனார்த்தன் ஆகியோர் வழங்கிய நேர்காணலை இங்கே காணலாம்.

இலங்கைச் செய்திகள்

 

அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்

மலையகத்தில் இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் குறித்து ஆராய்வு   

 "வைக்கோல் பட்டறை நாய்" என கூறிய மாநகர சபை உறுப்பினரின் ஒரு மாத சம்பளம் இரத்து

 உலக மக்களை முட்டாளாக்கும் பழ. நெடுமாறனின் செயற்பாடு

2,000 இலங்கையருக்கு இஸ்ரேலில் தொழில்!


அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்

- ஜனாதிபதியின் மகா சிவராத்திரி செய்தி

மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு  அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.

உலகச் செய்திகள்

பைடன், ஜின்பிங் இடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்பு

நியூசிலாந்தில் பூகம்பம்

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை வீச்சு

கொவிட் தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி

சவூதியின் முதல் பெண் விண்வெளிக்குப் பயணம்

70 ரொஹிங்கிய அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சம்


 பைடன், ஜின்பிங் இடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வேவு பலூன் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய ஔிபரப்பில் 'துணிவு' சாதனை

 

அஜித்தின்   ஆக்‌ஷன் த்ரில்லர் துணிவு திரைப்படம் OTT  தளத்தில் பல சாதனை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் TOP 10 ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘நொன் இங்கிலீஷ்’ (Non - English) படப் பிரிவுகளில் உலக அளவில் TOP 10 வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது ‘துணிவு’. 4-வது இடத்தில் ‘துணிவு’ படத்தின் இந்தி வெர்ஷன் இடம்பிடித்துள்ளது. ஜனவரி 12ஆம் திகதி பொங்கலுக்கு வெளியான துணிவு,  அஜித்தின் திரைப்படத் துறையில் அதிக வசூல் செய்த படமாக ரூபா 200 கோடியை எட்டியது.

சமுத்திரக்கனி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் அஜித்தின் அற்புதமான திரை பிரசன்னத்தாலும், எச் வினோத்தின் தரமான திரை இயக்கத்தினாலும் படம் வெற்றியடைந்துள்ளது.  துணிவு அஜித்தின் ஆக்‌ஷன் என்டர்டெய்னரான இப்படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 90 கோடியை வசூலித்தது மற்றும் உலகம் முழுவதும் படத்தின் வசூல் முதல் வாரத்திற்குள் 150 கோடிகளை கடந்தது.   நன்றி தினகரன்