மீண்டும் தொடங்கும் மிடுக்கு ............... பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.

வண்டமிழ் அறிஞர் வாழ்ந்த நவாலியில்

வரதன் என்னுமோர் வாலிபன் வாழ்ந்தான்

கண்டவர் மதித்திடக் கடமை உணர்வுடன்

கமம்செய விரும்பியோர்; காணியும்; தேடினான்

வாங்க முடிந்ததே பெரிதென நினைத்தான்

முயற்சி என்றும் திருவினை யாக்கும்

முதுமொழி நினைந்து செயற்பட விழைந்தான்

பத்துப் பரப்புக் காணியை அவனும்

பதப்ப டுத்தப் பெரும்பா டுபட்டான்

மெத்தப் பொறுமையாய்ப் பாறைகள் பிழந்து

வேண்டாக் கற்களால் மதில்தனை அமைத்தான்

தெளிவது வருவ தில்லை மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா




மேகங் கறுத்தாலும் மின்ன லடித்தாலும்                                      
வானம் பொழிவ தில்லை                                                      
ஆசை எழுந்தாலும் கோபம் மிகுந்தாலும்                                 
ஆவது எதுவும் இல்லை

தானம் கொடுத்தாலும் தவமும் இருந்தாலும்                                
தலைமை வருவ தில்லை                                               
ஞானம் பிறந்தாலும் மோனம் கலைந்தாலும்                               
நமக் கெது மாவதில்லை  

கள்ளம் மிகுந்தாலும் கசடு மிகுந்தாலும்                                      
கருணை குறை வதில்லை                                                 
உள்ளம் உடைந்தாலும் உண்மை குலைந்தாலும்                             
உணர்வு அழிவ தில்லை

செல்வம் குறைந்தாலும் சிறப்பு இழந்தாலும்                              
உள்ளம் மெலிவ தில்லை                                              
கல்வி மிகுந்தாலும் கடமை மிகுந்தாலும்                                         
கண்ணியம் குறைவ தில்லை

தெய்வம் இருந்தாலும் தெரிசனம் கிடைத்தாலும்                               
தெளிவது வருவ தில்லை                                                  
தேவை மிகுந்தாலும் தெரிவு குறைந்தாலும்                           
தெளிவது வருவ தில்லை    


சுற்றிக் கொண்டே நகர் வதனால் புவியே எதையும் மாற்றிப் போடும் - பரமபுத்திரன்

எங்கே  இருந்தீர்  இவ்வளவு நாளும்

எடுத்தடி வைத்ததும் குழம்புது சிங்களம்

தோசைக் குச்சம்பல் தொடுவது போல  

முள்ளி வாய்க்கால் நினைவுக்கு மட்டுமே  

முக்கி  யத்துவம் தேவையே இல்லை

இழந்தவர் மட்டும் பொங்கி வெம்ப  

உள்ளூர் அல்ல உலகம் முழுவதும்

அதுக்கொரு நாள்  அத்துடன் நிறுத்தி

அடுத்து நம்வேலை அதுதான் வழமை

அழிந்த மக்களை நெஞ்சினில் நிறுத்தி

நீதிக்கு வணங்கும் பொறுப்புடை மனிதனாய்

இருப்போர் மனதில் சிந்தனை விதைத்தாய்

அளித்தாய்  அவர்கள் சாவுக்கும் மதிப்பு

ஆளுமை அற்ற அறிவிலித்  தலைமை

அவரால் பயனேதும் இங்கில்லை  என்றே

பழுத்துப் புழுத்த பழங்கதை பேசும்

பலபேர் அடுக்கிய கதைகள் படித்தேன்

உள்ளே புகுந்து கட்சிகள்  உடைத்து

பிரிவினை கொடுத்த கொடியவன் நீராம்  

சேர்ந்த உடனே தகர்க்கும் வகையில்

கண்ணாடி போல ஒட்டிய  இணைப்புகள்

உடைந்தே போகலாம் தப்பே இல்லை  

பிரணாப் முகர்ஜியின் நிறைவேறாத கனவு

 Wednesday, September 2, 2020 - 8:36am

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் காலமாகி விட்டார். ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் குடியரசுத் தலைவராக உயர்ந்த பிரணாப் முகர்ஜி, 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சட்டப் படிப்புகள் படித்த பிரணாப் முகர்ஜி ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1957ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிரதமர் பதவியைத் தவிர்த்து அரசியலில் உச்சம் தொட்ட பிரணாப் முகர்ஜி, இந்திய வங்கிகளின் பல குழுக்களிலும் பங்கு வகித்துள்ளார். உலக வங்கியின் பணிப்பாளர் குழு உறுப்பினராகவும் பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார். அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் பிரணாப் இருந்துள்ளார். அவரை குறிப்பிட்ட ஒரு பிரிவில் சேர்ப்பது கடினம். 

பெரும்பான்மை மக்களின் உள்ளங்களை வென்ற தமிழ் பிரதிநிதி அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம்

Thursday, September 3, 2020 - 6:00am

யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 35வது சிரார்த்ததினம் நேற்றுமுன்தினமாகும். (02-.09-.2020) அது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற போது...

இலங்கை தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் குறிப்பிடத்தக்கவராவார். இவரிடம் மூன்று முக்கிய பண்புகள் காணப்பட்டன. அவற்றுள் முதலாவது அவர் மக்களிடம் வைத்திருந்த நம்பிக்கை. இந்நம்பிக்கை அவரை காட்சிக்கு எளியராக மனம் திறந்து உரையாடதக்கவராக வைத்திருந்தது. சர்வதேச மட்டத்தில் அவர் சமதர்ம நாடுகளின் நண்பனாகவும் சோஷலிச போராட்டங்களின் ஆதரவாளனாகவும் விளங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னர் சமூக சமத்துவம், சமூக சீர்திருத்தம், கூட்டுறவுத்துறை, கிராம அபிவிருத்தி, உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றில் ஈடுபட்டு தம்மைப் பக்குவப்படுத்தி கொண்ட அவரது நேர்மையும், தியாகமும் அவரை முன்னணித் தமிழ் தலைவர்களில் ஒருவராகத் திகழ வழிவகுத்தது.

காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்

 Monday, August 31, 2020 - 12:40pm

காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்-New Faces in 9th Parliament

தமிழ் தேசியத்தின் கடும், மென் போக்குகளில் எது கைகூடும்?

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்படும் பல புதிய முகங்கள் வீதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் புலப்படுத்துகின்றன. மிகப் பெரிய பழந்தலைமைகளை வீழ்த்தி, சிறிய தலைமைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதை அவதானித்தால், தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றி முழு அளவில் திறமையில் தங்கியிருக்கவும் இல்லை. இதையும் இத்தேர்தல் எமக்குச் சொல்கிறது. நாட்டின் முதலாவது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை இம்முறை பாராளுமன்றத்திற்கு வராமலாக்கிய தேர்தல் முறையல்லவா இது! இத்தனைக்கும் இக்கட்சிதான் இத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. முன்னாள் எம்.பிக்கள் 81 பேரைத் தோற்கடித்ததும் இத்தேர்தல் முறைதான். இப்போது புதிதாக 81 பேருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தொடர்ந்தும் இது வாய்க்கப் பெறுவது இவர்களின் திறைமைகளால் மாத்திரமல்ல. அதிர்ஷ்டமும் பலரின் வெற்றிக்குப் பங்களிக்கிறது.இவ்வாறு இவ்வீதாசாரத் தேர்தல் முறையால் வந்த பலரின் வருகைகளில் வடக்குப் பிரதிநிதிகள் சிலரின் வருகையும் அவர்களது கன்னி உரைகளும் தென்னிலங்கையின் கண்களுக்குள் தீப்பொறியைத் தீர்த்தியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதில் கடும்போக்கர்களுக்கு இருந்த மகிழ்ச்சியைத் தவிடுபொடியாக்கியதும் இந்தக் கன்னி உரைகளில் சிலவைதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பது புலிகளின் சிந்தனைகளை அல்லது புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்களின் செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கு நிகரென நினைத்த தென்னிலங்கைப் பெருந்தேசியம், இந்த உடைவில் எழும்பும் புதிய கோபுரங்கள் ஈழ தேசத்துக்கான அத்திவாரமென அச்சப்படுகிறது. இதனால் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் உரையை பாராளுமன்றப் பதிவுப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் கோரப்படுகிறது. அவ்வாறு என்னதான் பேசினார் விக்னேஸ்வரன்? "உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்". வேறு எவர் பேசியிருந்தாலும் இது பிரச்சினையாகி இருக்காது.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -07 நெஞ்சிலிட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை ! வாழ்வின் தரிசனங்களே செய்தியும் படைப்பு இலக்கியமும் !! முருகபூபதி

 


இலங்கையில்  1970 ஆம் ஆண்டு,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் லங்கா சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும்  இணைந்து  கூட்டரசாங்கம் அமைத்தபோது, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இரட்டைக் கலாநிதி எனவும் தங்கமூளை எனவும் அறியப்பட்ட நிதியமைச்சர் என். எம். பெரேரா,  இரவோடு இரவாக நூறு ரூபா , ஐம்பது ரூபா நாணயத்தாள்களை தடைசெய்துவிட்டு,  புதிய நாணயத்தாள்களை அறிமுகப்படுத்தினார்.

   

இதனால், மக்கள் அதிகாலையே எழுந்து வங்கிகளின் முன்னால் வரிசையில் நின்று  பழைய நாணயத்தாள்களை கொடுத்து,  புதியதை வாங்கநேர்ந்தது.

செல்வந்தர்களிடம் பதுங்கியிருந்த கறுப்புப்பணத்தை வெளியே எடுப்பதற்கான அந்த தங்கமூளையின் திட்டம் வெற்றிபெற்றது.  எனினும் பல கோடீஸ்வரர்கள்,  தாம் பதுக்கிய நாணயத்தாள்களை இரகசியமாக எரித்துவிட்ட செய்திகளும் கசிந்தன.

அரிசி பதுக்கல்காரர்களை பிடிப்பதற்காகவும்  அன்றைய அந்த அரசு பல திட்டங்களை அறிவித்தது. கோதுமை மாவின் விலையும் உயர்ந்தது. சீனிக்கும் தட்டுப்பாடு வந்தது.

சமதர்ம ஆட்சியை அமுலுக்கு கொண்டுவருவதற்கு அந்த அரசு மேற்கொண்ட  முயற்சிகளினால், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும் மத்தியதர வர்க்கத்தினரும்தான்.

மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கியவாறு  தேநீர், கோப்பியை அருந்தினர்.  அதனால் எதிராணி ஐக்கிய தேசியக்கட்சியினர் அதற்கு எதிர்வினையாற்றி, தங்கள் கரங்களிலிருந்த ரேகைகளும் அழிந்துவிட்டதாக எள்ளிநகையாடினர்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 30 – சூரிய வளைவு/சந்திர வளைவு – சரவண பிரபு ராமமூர்த்தி

 சூரிய வளைவு/சந்திர வளைவு – தோற்கருவிகள்

 


பன்னெடுங்காலம் தொட்டே தமிழர்கள் பல தோலிசைக் இசைக் கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். தோலிசைக் கருவிகளின் ஆதார பொருளாக இருப்பது விலங்குகளின் தோல். பெரும்பாலும் ஆட்டுத்தோல், மாட்டுத் தோல் அல்லது எருமைத் தோல் போன்ற தோல்களை பயன்படுத்தித்தான் தமிழகத்திலும் இந்தியாவிலும் இசைக்கப்படும் பல கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுவும் ஆண் விலங்குகளின் தோல் இசைக்கு ஏற்றது அல்ல என்கிறார்கள் இசைக்கருவி தயாரிப்பாளர்கள். பெண் விலங்குகளின் தோல் தான் விரிந்து சுருங்கும் தன்மையை உடையது. இது தான் இசைக்கு உகந்தது. இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வைத்து பலர் மத அரசியல் செய்கிறார்கள். ஆனால் கோவில்களில் இசைக்கப்படும் பெரும்பாலான இசைக்கருவிகள் மாட்டைக் கொன்று தான் செய்யப்படுகிறது. அதுவும் சில கருவிகளுக்கு கன்றுகுட்டியின் தோல் தான். இறந்த மாட்டின் தோலைக் கொண்டு இசைக்கருவிகள் செய்யப்படுவது இல்லை. காரணம் இறந்த மாட்டின் ரத்தம் அதன் தோல்களில் உறைந்து அது இசைக்கு ஏற்றதாக இருப்பதில்லை. மாடுகளைக் கொன்று அந்த தோலைத்தான் இசைக் கருவிகளுக்கு தமிழர்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள். சபாக்களில் “சுதி சேரலையோன்னோ” என்பவர்கள் முதல் ”போட்றா அடியை” என்னும் விளிம்பு நிலை இசைக்கலைஞன் வரை பயன்படுத்தும் இசைக்கருவிகள் விலங்குகளைக் கொன்று செய்யப்படுபவை தான். இசைக்கருவிகள் பாவ புண்ணியம் பார்த்து செய்யப்படுவதில்லை. வேட்டை சமூக மக்களின் தொடர்நிலை பண்பாடு தான் தோலிசைக் கருவிகள்.

 


உலகச் செய்திகள்

 சவூதியின் அதிகாரிகள் பலர் திடீர் பணி நீக்கம்

லெபனானின் புதிய பிரதமர் தேர்வு

தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மற்றொரு கறுப்பினத்தவர் பொலிஸார் பிடியில் பலி

இஸ்ரேல் விமானங்களுக்கு சவூதி அரேபியா அனுமதி

6000 கால்நடைகள், 40 பேருடன் சூறாவளியில் சிக்கி கப்பல் மாயம்

MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்ன?

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு பொலிஸாரும்; இடைநிறுத்தம்

ஹமாஸ் தலைவர் லெபனான் விஜயம்


சவூதியின் அதிகாரிகள் பலர் திடீர் பணி நீக்கம்

அரச குடும்பத்தின் இரு உறுப்பினர்கள் உட்பட பல சவூதி அரேபிய அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சவூதி தலைமையிலான யெமன் கூட்டணியின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள இளவரசர் பஹத் பின் துர்கி தமது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு மன்னர் சல்மானின் அரச ஆணை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

அவரது மகனான அப்துல் அஸிஸ் பின் பாஹத் பிரதி ஆளுநர் பதவி ஒன்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தில் அவருடன் மேலும் நால்வர் விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இலங்கைச் செய்திகள்

இலங்கையின் உயரமான கட்டடங்களில் ஒன்றான Altair ஐ பார்வையிட்ட ஜனாதிபதி 

இலங்கையில் முதல் தடவையாக எம்.பி. பதவிக்கு நாணயச் சுழற்சி?

10 புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு நடவடிக்கை

உயிரைப் பணயம் வைத்து போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

இலங்கையில் பதிவாகும் நில அதிர்வுகள்

20ஐ அமுலாக்க முன் இன, மத, அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல் அவசியம்


இலங்கையின் உயரமான கட்டடங்களில் ஒன்றான Altair ஐ பார்வையிட்ட ஜனாதிபதி 

இலங்கையின் உயரமான கட்டடங்களில் ஒன்றான Altair ஐ பார்வையிட்ட ஜனாதிபதி-President Made an Observation Visit to Altair Building Site

பேர வாவிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டு வரும் Altair வதிவிட மற்றும் வர்த்தக கட்டடத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (31) பார்வையிட்டார்.

இக்கட்டடத்தின் பணிகள் நிறைவுபெற்றதும் கொழும்பில் உள்ள உயர்ந்த கட்டடங்களுள் ஒன்றாக Altair கட்டடமும் அமையும்.

கவிஞர் அம்பியின் சொல்லாத கதைகள் - அங்கம் 29 ஈசன் பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த கதை அறிவீர் ! மணப்பெண்ணுக்கு பன்றியை பரிசளிக்கும் கதை அறிவீரோ…?

எனது சொல்லாத கதைகளின் அங்கம் 29 ஐ எழுத ஆரம்பிக்கின்றேன்.  அச்சமயம்  ஒரு தொலைபேசி அழைப்பு என்னை தொடர்ந்தும் எழுதவிடாமல் தடுக்கிறது.

எடுத்துப்பேசுகிறேன். மறுமுனையில் எனது நீண்டகால நண்பர் திரு. குலம் சண்முகம்.

அவர் சொல்கிறார்:   “ நீங்கள் பாப்புவா நியூகினி சென்று கல்விப்பணியாற்றி, அதன்மூலம் வருமானம் பெற்று உங்கள் பிள்ளைகளையும் படிக்கவைத்து ஆளாக்கினீர்கள். அதனைப்பற்றி  உங்கள் சொல்லாத கதைகளில் ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள்.  ஆனால், அந்த நாட்டைப்பற்றியோ, அம்மக்கள் பற்றியோ,  அங்கே உங்கள் வாழ்வியல் அனுபவம் தொடர்பாகவோ எதுவும் சொல்லவில்லையே…? ஏன்..? !  “

 “ மொரிஷியஸ் வாழ் மக்களிடம் படிப்படியாக தமிழ் அகன்றுவிட்டதை வேதனையுடன் சொல்லியிருந்தீர்கள்.  அவர்கள் தாய்மொழி தமிழை பேணவில்லை என்றும் மனக்குறை பட்டிருந்தீர்கள்.  அதுபோன்று பாப்புவா நியூகினி நாட்டைப்பற்றியும் நீங்கள் ஏதும் சொன்னால்தான் உங்களது தொடர் முழுமை பெறும்.  “

ஆம்,  நண்பர் குலம். சண்முகத்தின் ஆதங்கம் நியாயமானதுதான்.

அந்த நாட்டுக்குச்செல்ல விரும்புபவர்கள், அந்த நாட்டைப்பற்றி அறியவிரும்புவதும்  சரிதானே..? அதனால், இந்த அங்கத்தில் நான் எழுதத் தீர்மானித்த விடயத்தை அடுத்த அங்கத்திற்கு ஒத்திவைத்துவிட்டு,   குலம். சண்முகம் அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை எழுதுகின்றேன்.

இந்த நண்பரும் அங்கே சிறிதுகாலம் பணியாற்றியவர்தான். எனது இந்தத்  தொடரை கணினியில் பதிவுசெய்துவரும் எனது நண்பர் முருகபூபதியும் கடந்த ஆண்டின் இறுதியில் கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது.

அவருக்கும் அந்த நாட்டைச்சென்று பார்க்கவேண்டும் என நீண்டகாலமாக விருப்பம் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.   இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்ததும் செல்லவும் தீர்மானித்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையடுத்து, அவரது பயணமும் தடைப்பட்டுவிட்டது.

தொடர்ந்தும் உடல் உபாதைகளுடன்தான் இந்தத் தொடரை எழுதிவருகின்றேன்.  எம்பெருமான் முருகன் துணையிருப்பார் என்ற நம்பிக்கையில் கந்தசஷ்டி கவசத்தை படித்துவிட்டு எழுதுகின்றேன்.

 “ கைகள் இரண்டும் கருணைவேல் காக்க…”

எம்பெருமான் முருகனை நெற்றிக்கண்ணால் படைத்த ஈசன்  பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த கதையை எங்கள் புராணத்தில் படித்திருப்பீர்கள்.

அவள் அப்படித்தான் ( சிறுகதை ) முருகபூபதி

ம்மா மீண்டும் அவளது திருமணப்பேச்சை ஆரம்பித்தமையால் அன்றைய காலைப்பொழுது அந்த வீட்டில் கோபத்துடன் விடிந்தது. இருவருக்கும் கோபம்.

அம்மா தனது கோபத்தை  சமையலறையில் காண்பித்தார். அவள் குளியலறையில் காண்பித்தாள்.

சாப்பாட்டு மேசையில் மெதுவாக வைக்கவேண்டிய கண்ணாடிப்பாத்திரம் வெடிப்பு கண்டது. குளியலறை பிளாஸ்ரிக் வாளி தண்ணீரோடு சரிந்தது.

 அவள் வேலைக்குப்புறப்படும்  வேளையில்,  தனது திருமணப்பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை அம்மாவிடம்  சொன்னாலும் அம்மாவின் பெற்றமனம் பித்துத்தான்.

அம்மா, மகள் பிரபாலினிக்கான மதிய உணவைத்தயாரித்து எவர்சில்வர் கரியரில் வைத்து மூடி, அருகே ஒரு சிறிய தண்ணீர்போத்தலும் வைத்தார்.

        

                                              " இன்றைக்கு அவர்கள் வருகிறார்கள். நீ நல்லதொரு முடிவாகச்சொல்லவேண்டும். சாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போகிறாய்...? "

" ஏய்... மிஸிஸ் குசலாம்பிகை வேல்முருகு... உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா...?"

பிரபாலினிக்கு அம்மாவிடத்தில் நேசம் அதிகரித்தாலும் கோபம் அதிகரித்தாலும் இவ்வாறு ஒருமையில்தான் அழைப்பாள். அம்மா என அழைப்பது அபூர்வம்.

மகள் இயல்பு தெரிந்தமையால் எந்தச்சலனமும் இன்றி, நேசத்தையும் கோபத்தையும் பெற்றமனம் சகித்து தாங்கிக்கொள்கிறது.

பிரபாலினி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

அவளுக்கு   அம்மா பேசும் வரன்கள்  விருப்பமில்லை.

கைநீட்டி அடிக்காத,  தாழ்வுச்சிக்கல்  இல்லாத  கணவன் வேண்டும்.  தன்னோடு  நட்பாக இணக்கமாக உறவாடவேண்டும்.   இந்த விதிமுறைகளுக்குட்படும்  துணையைத்தான் அவள் தேடுகிறாள்.   அந்தத் தெரிவுக்குள் இதுவரையில் எவரும் வரவில்லை.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் – 51 முருகபூபதி

ரண்டு நாட்களில் திரும்பிவிடுவதாக சொல்லிவிட்டுச்சென்ற 
ஜீவிகா, மூன்று நாட்களின் பின்னர் வந்தாள்.
 

ஒரு நாள் மேலும் தாமதமானதற்கும் காரணங்கள் சொன்னாள்.

ஜீவிகா, தன்னிடம் அதனையெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லையே.., எதற்காகச் சொல்லவேண்டும்…?  அபிதா,  பதிலுக்கு எதுவும் சொல்லாமல், “   ம்… அப்படியா…? ஓ…. சரி… “   என்று  அக்கறையற்று  தலையை ஆட்டினாள்.

காதலனுடன் நாட்களை செலவிடச்சென்றவள், அதற்காக நிறைய காரணங்களை வைத்திருக்கலாம்.

  

வீடு திரும்பிய ஜீவிகா,  அறைகளை எட்டிப்பார்த்து திருப்தியடைந்தவளாக, “  அபிதா… இந்த இரண்டு மூன்று நாட்களும் உங்களுக்கு எப்படி பொழுது போனது…?    மஞ்சு, சுபா, கற்பகம் ரீச்சரிடம் இருந்து ஏதும் தகவல் இருக்கிறதா..?  “ எனக்கேட்டுவிட்டே,  அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு பற்றியும்  ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவற்றில் ஆர்வமற்ற அபிதா, லண்டன் பெரியப்பா தொடர்புகொண்டதை நினைவுபடுத்தினாள்.