நத்தாரின் சிறப்பு செய்தி
பெத்தலேகம் எனும் சிற்றூரில் ஏழ்மையையும் எளிமையையும் தேர்ந்தெடுத்து நம் இயேசு கிறிஸ்து மனிதம் மாண்பு பெற இறைமனிதனானார். மானிட விடுதலையையும், மானுடம் காக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் போதித்தும் வாழ்ந்தும் காட்டினார்.
அந்த மெய்யான தெய்வமாம் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமே 'கிறிஸ்மஸ்' தினமாக மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகின்றது. உலகின் பெரும்பாலான மக்களால் நினைவு கூரப்படுகிற ஒரே பண்டிகையாகவும் 'கிறிஸ்மஸ்' திகழ்கின்றது.