பதிந்த காட்சி விரிந்து நிக்குது !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா





மலர்ந்த பூவினில் வண்ட மர்ந்தது
உறைந்த தேனை உள்ளே யிழுத்தது
பறந்து சென்றது பலமலர் நாடியே
விழுந்து புரண்டது மேலெழு களிப்பினால்

துள்ளி எழுந்தது கயலது வோடையில்
தூங்கி இருந்தது கொக்கது கரையினில்
வாளை மீனது நீரினில் வந்தது
வேளை பார்த்துமே கொக்குமே விளித்தது 

குதூகலம் கொண்டுமே குஞ்சுகள் நின்றன
கோழியும் கூடவே காவலாய்  சென்றது
விருந்தினைக் கண்டுமே பருந்துமே மகிழ்ந்தது
குதூகலம் மறைந்தது குஞ்சுகள் சிதறின

மல்லிகை ஜீவாவின் (1927 -2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் -03 கீரிமலை கேணியில் துக்கி வீசப்பட்டார் ! பாதுகை எழுதியவர் பாதுகையும் ஏந்தினார் !! வேட்டியை மடித்து சண்டிக்கட்டு கட்டினார் !!! முருகபூபதி


மல்லிகை ஜீவாவுக்கு  கலை, இலக்கியம், மற்றும்  பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களுடன் தோழமை நீடித்திருந்தது.

சாதாரண பாமர மக்கள் முதல்  படித்த வர்க்கம் வரையில் அவரது நட்பு வட்டம் பெரியது.

ஜீவா மது அருந்தமாட்டார்.  ஆனால்,  மதுப்பிரியர்களான


எழுத்தாளர்களுடன் அமர்ந்து அவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருப்பார்.

யாழ்ப்பாணம்  முற்றவெளிக்கு அருகாமையிலிருந்த பிரீமியர் கஃபேயில் பெரும்பாலும் மாலைவேளைகளில் அவர்கள் கூடுவது வழக்கம். உள்நாட்டு அரசியல் உலக அரசியல் இலக்கியம் சமூகம் என்ற ரீதியில் அவர்களின்  கலந்துரையாடல் நீளும்.  எஸ். பொன்னுத்துரை,  அழகு சுப்பிரமணியம்,  ஏ.ஜே. கனகரட்ணா ஆகியோரும்  அதில் அடக்கம்.

ஜீவா தனக்கு ஏதும் குளிர்பானம் அல்லது பிளேயின் சோடா வரவழைத்து அருந்துவார்.  மற்றவர்கள் மதுவில் இரண்டறக்கலப்பார்கள்.

அவர்களில் ஒருவர் வேண்டுமென்றே ஜீவாவுக்கு முன்பாக ஒரு கிளாஸில் சாராயத்தை வார்த்து வைப்பார்.  யாராவது அந்தக்காட்சியை பார்த்துவிட்டால், ஜீவாவும் இந்தக்கூட்டத்துடன் சேர்ந்து  “  தண்ணி  “ அடிக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வெளியேபோய்ச்சொல்லட்டும்  என்ற உள்நோக்கம்தான் அந்த நண்பருக்கு !

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு 20-02-2021 சனிக்கிழமை-

 .


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய                     கலைச்சங்கத்தின்

    இணையவழி நினைவரங்கு

           20-02-2021 சனிக்கிழமை   

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரையில்

வுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், சங்கத்தின் தலைவர் மருத்துவர் வஜ்னா இரஃபீக் தலைமையில்  எதிர்வரும் 20 ஆம் திகதி  20-02-2021 ) சனிக்கிழமை ( அவுஸ்திரேலியா நேரம் )  இரவு 7.00 மணி முதல் 9.00 மணிவரையில்  இணையவழி நினைவரங்கு  நடைபெறும்



அவுஸ்திரேலியாவில்  கடந்த காலங்களில் மறைந்த கலை, இலக்கிய, கல்வித்துறை மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில் அயராமல் உழைத்து மறைந்த ஆளுமைகள்  சிலர் இந்த அரங்கில் நினைவுகூரப்படுவர்.

இந்த நினைவரங்குத் தொடரின்  முதலாவது நிகழ்ச்சியே இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்ச்சி பின்னர் நடைபெறும்.


இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள அரங்கில்,  பேராசிரியர் சிவஶ்ரீ கா. கைலாசநாதக்குருக்கள் பற்றிய நினைவுரையை  மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா  நிகழ்த்துவார்.

கலாநிதி ஆ. கந்தையா பற்றிய நினைவுரையை   நொயல் நடேசனும் -  பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் பற்றிய நினைவுரையை திருநந்தகுமாரும்  - எஸ். பொன்னுத்துரை பற்றிய நினைவுரையை   பாடும்மீன் சு. சிறிகந்தராசாவும்,  -காவலூர் இராஜதுரை பற்றிய நினைவுரையை  கானா. பிரபாவும் -  கலாநிதி வேந்தனார் இளங்கோ பற்றிய நினைவுரையை   செ. பாஸ்கரனும் -  தெ. நித்தியகீர்த்தி பற்றிய நினைவுரையை ஆவூரான் சந்திரனும்   நிகழ்த்துவார்கள்.




நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முருகபூபதி

மறைந்த ஆளுமைகளின் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் மாணவர்களையும்  கலை இலக்கிய ஆர்வலர்களையும்  இந்த அரங்கில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும்.ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை.இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம் கேட்டேன்

அதற்கு அவர் நான் அவர்களைக் கொன்றேன் என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் விசேட தூதுவராக இருந்த ஸ்டிபன் ஜே.ராப் இவ்வாறு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திருக்குறளை நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் கொண்டு சேர்த்துள்ளது ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகம்,

 .


திருக்குறளை நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் கொண்டு சேர்த்துள்ளது ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகம், தமிழ் வளர்ச்சி மன்றத்தின் மூலமாக . தமிழ் வளர்ச்சி மன்றத்தின் வளர்ச்சியில் வள்ளுவன் வகித்த பாகம் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. 2019 இல் சிட்னிப் பல்கலைக் கழகத்துடன் தொடங்கியது வள்ளுவனுடனான பயணம். 2020 இணயத்தில் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் திருக்குறளை ஒலிக்கச் செய்ய முடிந்தது பெரும் பேறாகும். அத்தோடு ஆண்டு தோறும் நாடாளுமன்றத்தில் இன் நிகழ்வு நடக்கும் என மதிப்பிற்குரிய நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூயூ மக்டர்மட் , நாடாளுமன்ற உறுப்பினர் , தமிழ் வளர்ச்சி மன்றத்திற்கு உறுதியளித்துள்ளார். இனி இது தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சிறப்பு ஆண்டு நிகழ்வாக அமையும்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக "திருவள்ளுவர் தினம்" கொண்டாடப்பட்டது. அதனோடு சேர்த்து தமிழர் தினமும், தாய்மொழி தினமும் கொண்டாடப்பட்டது. 

இயற்கை --- 3


 பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 


காலைக் கதிரவன் நீலத்திரையிற் – செங்


கதிர்கள் பரப்பி உதிக்கையிலே

கோல நிலவைப் பொழிந்தநிலா - எங்கோ

கூனிக் குறுகி மறைந்திடுமே!

 

சோலைக் குயில்களும் கூவிடுமே – பேடை

சொக்கிட ஆண்மயில் ஆடிடுமே

பாலைப் பொழிந்த பசுக்களுமே – கூடிப்

பசும்புல் மேய்ந்திடச் சென்றிடுமே!

 


விட்டுவி லகிடும் காரிருளே - பூவின்

மொட்டு விரிந்து மலர்ந்திடுமே

சிட்டுக ளோடுதே னீக்களுமே – தேடித்

தேனினை மாந்தி மயங்கிடுமே!

 

'கா!கா!' வெனக்கரிக் காகங்களும் - சும்மா

கரைந்தே கூட்டமும் கூட்டிடுமே  

தாத்தா வுடன்பாட்டி முதலாக – வீட்டிற்

சகலரை யுந்துயில் எழுப்பிடுமே!

 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 28 வட்டிக்குப்பணம் பெற்று குடும்ப செலவுகளை சமாளித்த காலம் ! சம்பள உயர்வுகோரி நடந்த சுவரொட்டி போராட்டம் ! ! நடுநிசியில் நடுவழியில் அந்தச் சம்பவம் !!! முருகபூபதி


சந்தர்ப்பங்கள் மனிதர்களை உருவாக்கும் என்பார்கள். மனித வாழ்வையும் சந்தர்ப்பங்கள் திசை திருப்பிவிடும்.

மெளனியாக வாழ்ந்தால்,  சுற்றியிருப்பவர்கள் எச்சரிக்கையோடு அவதானிப்பார்கள்.  மனம்விட்டுப்பேசினால், நெருங்கிவருவார்கள்.

இதில் நான் இரண்டாவது ரகம்.

அதனால் தொல்லைகளும் அதிகம்.  அந்தத் தொல்லைகளையும் அனுபவமாக ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதும் எனது இயல்பு.

வீரகேசரியில் என்னை நன்கு இனம்கண்டுகொண்ட துணை


ஆசிரியர் கார்மேகம்,  தான்  முக்கிய பொறுப்பிலிருந்த வீரகேசரி நலன்புரிச்சங்கத்தின் செயற்குழுவில்  இணைத்துவிட்டார்.

அச்சங்கத்தின் தலைவராக  பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம்  இயங்கினார்.   ஊழியர்கள் அனைவரும்  அச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.  அதில் இணைந்திருக்க மாதாந்த சந்தாப்பணமும் எமது மாத சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

அச்சங்கத்தினால் ஊழியர்கள் பல நன்மைகளையும் பெற்றனர்.  அவர்களின் குடும்ப உறவு ( தாய் – தந்தை ) இறந்தால்,  மரண சகாய நிதியிலிருந்து மரணச்சடங்கிற்கான செலவுக்கும் உதவி கிடைக்கும்.

சைக்கிள்  வாங்குவதற்கும் கடனுதவி பெறலாம். அவ்வாறு கடனுதவி பெற்று நானும் ஒரு சைக்கிள் வாங்கினேன்.

அதனைப்பெற்றுக்கொண்டு இரண்டு மணிநேரத்தில் கொழும்பிலிருந்து  நீர்கொழும்புக்கு வந்தேன். அவ்வாறு நீண்ட தூரம் சைக்கிள் சவாரி சென்றது அதுதான் முதலும் இறுதியுமாகும் !

அந்தச் சைக்கிளுக்கு வாய் இருந்தால், அதுவும் என்னைப்போன்று  பல கதைகளை பேசியிருக்கும். 

மருந்துகளும் மாத்திரைகளும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .



’விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு’ என்பது எமது முதுமொழி.

விருந்து எப்படியோ மருந்து என்பது இப்பொழுது மூன்று நாட்களுக்கு அல்ல. 365 நாட்களுக்குமே வேண்டி உள்ளது. இருதயநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், போன்ற சில நோய்களுக்கு 365 நாட்களும் மருந்துகளை அருந்துவதால் தான் அந் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவ்வாறாக நாளாந்தம் மருந்துகளைப் பருகா விட்டால் எப்பொழுதோ பரலோகம் போயிருப்போம்.

இது ஒரு கசப்பான உண்மைதானே?

அண்மையிலே வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது. செய்தி இது தான். வலிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கொடுக்கப்பட்ட vioxx என்னும் மருந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளை வரவழைக்கக் கூடிய பக்கவிளைவுகளைத் தருவதாக கண்டறியப்பட்டது. இதனால் இந்த மருந்து வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டிருக்கிறது. இந்த மருந்தை ஒழுங்காகப் பாவித்த நோயாளிகளிடம் இது திகிலை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு வலிநிவாரணம் அளிக்கும் மருந்தே எனக்கு யமனாகி விட முடியுமா? மேற்கொண்டு மற்றய மருந்துகள் குறித்த நம்பகத் தன்மை என்ன அவைகளும் மேலதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தத் தக்கவை தானா என்ற கேள்விகள் எல்லாம் எழத்தான் செய்கின்றன.

அவுஸ்திரேலியாவில் நோய் நிவாரணமாகக் கொடுக்கும் மருந்துகளுக்குப் பொறுப்பானவர்கள் Australia's Therapeutic goods & Administration. பலவகையான நோய் தீர்க்கும் மருந்துகள் முதலிலே பரீட்சார்த்தமாக மிருகங்களுக்குக் கொடுத்து அதன் பின் பல ஆயிரம் மக்களில் பரிசோதித்த பின்பே சந்தப்படுத்தப் படுகிறது.

மருந்து கண்டுபிடித்த நாளில் இருந்து சுமார் 5 வருடத்தால் தான் இதை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம் என்ற அத்தாட்சிப்பத்திரம் பெற்றுஅதன் பின் தான் அவை சந்தைக்கு வரவேண்டும் என்பது அரச விதி முறை.  இப்படி வரும் மருந்துகளில் பலவருடங்களுக்கு ஒருமுறை ஒன்றோ அல்லது இரண்டோ மருந்துகள் ஆபத்தானவை என நிறுத்தப்படலாம். அதனால் சகல மருந்துகளுமே ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறிவிட முடியாது.

அலோபதி வைத்தியம்; அது தான் சாதாரண பேச்சுவழக்கில் கூறுவதானால் Western Treatment க்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளால் பக்கவிளைவுகள் சிறிது ஏற்படத்தான் செய்யும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதற்காக நான் மருந்து சாப்பிடாமல் இருங்கோ எனச் சொல்ல வரவில்லை. இந்த மருந்துகள் தாம் எம்மை நோயில் இருந்து காப்பாற்றி நீண்ட நாட்கள் வாழ வைப்பவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பேர்த் பாலமுருகன் கோவில்

 


கபிலதேவர் அருளிச் செய்த கபிலரகவல்

 .

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0261.html

    நான்முகன் படைத்த நானா வகையுலகில்
    ஆன்றசிறப்பி னரும்பொருள் கூறுங்கால்
    ஆண்முதிதோ? பெண்முதிதோ? வன்றியலிமுதிதோ
    நாண்முதிதோ? கோண்முதிதோ? நல்வினைமுதிதோ?
          தீவினைமுதிதோ?
    செல்வஞ்சிறப்போ? கல்விசிறப்போ? அல்லதுலகின்
          அறிவுசிறப்போ? 5
    தொல்லைமாஞாலந் தோற்றமோ? படைப்போ?
    எல்லாப்பிறப்பு மியற்கையோ? செயற்கையோ?
    காலத்தாற்சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?
    நஞ்சுறுதீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
    துஞ்சும்போதந்தப் பஞ்சேந்திரியம் 10
    என்செயா நிற்குமோ? எவ்விடத்தேகுமோ?
    ஆற்றலுடையீர் அருந்தவம் புரிந்தால்
    வேற்றுடம்பாகுமோ? தமதுடம்பாகுமோ?
    உண்டியை யுண்குவது உடலோ? உயிரோ?
    கண்டின் புறுவது கண்னணோ கருத்தோ? 15
    உலகத்தீரே யுலகத்தீரே !
    நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து
    சாற்றக்கேண்மின் சாற்றக்கேண்மின்
    மனிதர்க்கு வயது நூறல்லதில்லை
    ஐம்பது இரவில் அகலும் துயிலினால் 20
    ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும்
    ஆக்கை யிளமையி ல் ஐம்மூன்று நீங்கும்
    எழுபது போகநீக்கி இருப்பனமுப்பதே


    (அவற்றுள்) இன்புறுநாளும் சிலவே அதாஅன்று
    துன்புறுநாளுஞ் சிலவேயாதலால்

                                                                                                                   
    25
    பெருக்காறு ஒத்தது செல்வம்பெருக்காற்று
    இடிகரையொத்தது இளமை இடிகரை
    வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
    ஒன்றேசெய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
    நன்றேசெய்யவும் வேண்டும் அந்நன்றும் 30
    இன்றேசெய்யவும் வேண்டும் அவ்வின்றும்
    இன்னேசெய்யவும் வேண்டும் அவ்வின்னும்
    நாளைநாளை யென்பீ ராகில்
    நம்னுடை முறைநாள் ஆவதுமறியீர்
    நமமுடை முறைநாள் ஆவதுமறியீர் 35
    எப்போது ஆயினுங் கூற்றுவன் வருவான்
    அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்
    போற்றவும் போகான் பொருளொடும் போகான்
    சாற்றவும் போகான் தமரொடும் போகான்
    நல்லா ரென்னான் நல்குரவறியான்
     
       

காதலை யாவரும் கருத்தினில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மெல்பேண் ... அவுஸ்திரேலியா




இனிமையும் மென்மையும்
        இணைந்ததே காதல் 
தனிமையும் தழுவலும்
        தருவதே காதல் 
பனிவிழும் மலரென
       மலர்வதே காதல்
பாரினில் காதல்தான்
       பலருக்கும் மகிழ்வே  !

வானத்தின் வரமாய் 
    மழைமண்ணில் வீழும்
மண்ணது நிறமாய்
   மாறிடும் நீரும்
அன்புடை அகத்தில்
    அமர்ந்திடும் காதல்
ஆனந்த பரவசம்
     அளித்துமே நிற்கும் !


இருமனம் இணைந்தால்
     எழில்பெறும் காதல்
மதமதும் பாரா
     இனமதும் பாரா 
துணிவுடன் எழுந்து
      துளிர்த்திடும் காதல்
நிலமதன் மீதில்
      நிமிர்ந்துமே நிற்கும்  !

ஸ்வீட் சிக்ஸ்டி 3- பாவமன்னிப்பு - ச சுந்தரதாஸ்

. .



தமிழில் ஏராளமான படங்கள் வந்துள்ள போதிலும் முஸ்லிம் கதாபாத்திரத்தை முன்னிலைப் படுத்தி வெளிவந்துள்ள படங்கள் குறைவே. அவ்வாறு வெளிவந்த படங்களும் பெரும்பாலும் சரித்திரப் படங்களாகவே இருக்கும். ஆனால் 1961 ஆம் ஆண்டு முஸ்லிம் கதாநாயகனை முன்னிறுத்தி சமூக படம் ஒன்று உருவாகி மாபெரும் வெற்றி கண்டது. அந்தப் படம் தான் புத்தா பிக்சர்ஸ் இன் பாவமன்னிப்பு .

இந்துக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை சந்தர்ப்ப சூழலால் ஒரு முஸ்லீம் பெரியவரால் வளர்க்கப்படுகிறது. முஸ்லிமாக வளரும் அந்த இளைஞனை கிறிஸ்தவ பெண் ஒருத்தி காதலிக்கிறாள். இந்தக் கதையை எழுதியவர் ஜே பி சந்திரபாபு. தான் எழுதிய கதையை இயக்குனர் பீம்சிங் கிடம் சொல்லி அவரின் இயக்கத்தில் சந்திரபாபு முஸ்லிமாக நடித்தார். படத் தயாரிப்பு தொடர்பாக ஏவிஎம் அவர்களை அணுகிய பீம்சிங் அவரிடம் படத்தின் கதையை சொன்னார். ஏவிஎம்மை கதை கவர்ந்துவிட்டது. இந்தக் கதையை நல்ல முறையில் படம் ஆக்குவோம் ஆனால் இதற்கு சந்திரபாபு சரி வர மாட்டார் சிவாஜியை நடிக்க வைப்போம் என்று கூறினார்.

பீம்சிங் மூலம் சந்திரபாபுவுக்கு தகவல் தரப்பட்டது. சந்திரபாபுவும் படத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள முஸ்லிம் இளைஞன் வேடத்தை சிவாஜி ஏற்றார். அவரின் இந்து தந்தையாக எம் ஆர் ராதாவும் தாயாக எம் வி ராஜம்மாவும், கிறிஸ்துவ காதலியாக தேவிகாவும் நடித்தனர். அவரின் கிறிஸ்துவ தந்தையாக பரோபகாரியாக எஸ் வி சுப்பையாவும் நடித்தார்.

இலங்கைச் செய்திகள்

நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம்

குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க வடிவ இடிபாடு மீட்பு

நீதிமன்ற தடையுத்தரவை மீறிய எம்.பிக்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிதைவு பல்லவர் காலத்தை ஒத்துள்ளது

ஜனாதிபதி ஆணைக்குழு செயலாளராக சிவஞானசோதி

முரளியிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைப்பு


 நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம்

நல்லடக்கம் தொடர்பான பிரதமரின் உறுதிமொழியை வரவேற்கிறோம்-Pakistan PM Imran Khan Welcomes PM Mahinda Rajapaksa's Assurance of the Burial of COVID19 Victims

- இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

கொவிட்-19 தொடர்பில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவது தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழியை வரவேற்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

மியன்மாரில் 7ஆவது நாளாகவும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

தடைகளை நீக்க ஈரானுக்கு அமெரிக்கா புது நிபந்தனை

சீனா தலைவருடன் பைடன் முதல் முறையாக உரையாடல்

உளவுக் குற்றச்சாட்டு: ஆஸி. செய்தியாளர் சீனாவில் கைது

மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவு

 

மியன்மாரில் 7ஆவது நாளாகவும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கும் நிலையில் அந்நாட்டில் ஏழாவது நாளாகவும் நேற்று ஆர்ப்பட்டாங்கள் இடம்பெற்றன.

“தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருவுருவ ஓவியம் திறப்பு விழா நவாலி அட்டகிரி கோயிலிலே அரங்கேறியது.


 ……………
... பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்


 

நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது!


தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் திருவுருவ ஓவியம் ஒன்றை நீண்ட நாள் நிலைத்திருக்க கூடியவகையில் பெரிதாக வரைய வேண்டும் என்ற விருப்பம் இன்று நிறைவேறியது.

சிங்கைத் தமிழார்வலர் திரு. கோபால் மோகன்ராசு அவர்களின் முழுநிதிப்பங்களிப்பில ஓவியர் சு.ராஜன்அவர்களால பதினையாயிரம் செய்யுள்களுக்கு மேல் பாடிய ஒப்பற்ற இந்த மண்ணின் புலவருக்கு வரையப்பெற்ற ஓவியத்தை வலி. தென் மேற்கின் பிரதேச செயலாளர் அவர்களும் இருபத்துமூன்று ஆண்டுகளாக நவாலிவடக்கின் கிராம அலுவலராக கடமையாற்றி ஓய்வுபெற்ற திரு. அ.தனபாலரத்தினம் அவர்களும் இணைந்து

புலவர் பிறந்த போது

எந்த ஆலயத்தின் மணிகள் தானாகவே ஒலித்தனவோ அந்த ஆலயமாகிய அட்டகிரிமுருகன் ஆலயத்தில் திறந்து வைத்தனர்.

எனது பிரிவில் உள்ள புலவரின் வீடும் வளாகமும் அவரது நினைவாலயமாக மாற்றப்பட வேண்டும் என்பதும் அவரது பாடல்களும் எழுத்துக்களும் அதைத்தளமாக வைத்து அடுத்த தலைமுறைக்குகையளிக்கப்படவேண்டும் என்பதுமே அனைவரது பெருங்கனவாகவும் உள்ளதுஇப்படி நவாலி கிராம அதிகாரியாகக் கடமையாற்றும் திரு சஜீவன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

 

காலி மாநகரசபையில் தமிழ் !


இலங்கை காலி மாநகர சபையில் தமிழ்  மொழியில் உரையாடவும், ஆவணங்களை தமிழில் மொழி

பெயர்க்கவும் போராடி வெற்றி பெற்றுள்ளார்

திருமதி .ரிஹானா_மஹ்ரூப்.!

 

150 ஆண்டு பழைமையான காலி மாநகர சபையில் சிங்கள மொழி மட்டுமே உரையாடலில் இருந்து வந்தது, அங்கு தமிழை தாய்மொழியாக கொண்ட இரண்டாவது முஸ்லீம் பெண் உறுப்பினரால் தற்போது தமிழ் அங்கு ஒலிக்கத் தொடங்கியுள்ளது.!

கப்புசீனோ காதல்- குறும்படம் (சில குறிப்புகள்)


கன்பரா யோகன்


ஒரு கதையொன்றை திரைப்படமாக தயாரிப்பதிலும்,  குறும்


படமாக எடுப்பதிலும்  உள்ள பல சவால்களைத் தாண்டி சில  முயற்சிகள் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளன. இந்தப் பின்னணியில் அண்மையில் வெளிவந்த சோபனம் ட்ராமா கிரீயேஷன்ஸ் சார்பாக டொக்டர் ஜெயமோகன் அவர்கள் எழுதி தயாரித்த  குறும்படமான 'கப்புச்சீனோ காதல்' என்ற குறும்படத்தைப் பற்றி சில எண்ணங்களைப் பகிரலாம் என நினைத்தேன்.  (இதைப்பற்றிய ஒரு தகவல் முன்னரும் தமிழ் முரசில் வெளியாகியிருந்தது.)

 

இந்தக் குறும்பட கதையின் கருவைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் அவர் அநேகமான திருமண வயது பிள்ளைகளின்  பெற்றோரின்(தமிழ்) அங்கலாய்ப்புகளை பிரதிபலிக்க விரும்பி இதை தயாரித்திருக்கிறார் என்பது  தெரிகிறது. உண்மையில் இது பல பெற்றோருக்கு நடுக்கடலில் தத்தளித்து நிற்பது போன்ற நிலையை புலம் பெயர்ந்த பல நாடுகளில் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.  ஒரு வேளை  அவர்களுக்கு இந்த  குறும்படம் ஆறுதலை கொடுக்கலாம், அல்லது நம்பிக்கையைக் கொடுக்கலாம்.

பாரிஸ் ஜெயராஜ் திரைவிமர்சனம்


ந்தானத்தின் திரைவாழ்வில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ஏ 1. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த குழு இயக்கி வெளியிட்டிருக்கும் திரைப்படம் தான் பாரிஸ் ஜெயராஜ். ஏ 1 திரைப்படம் போலவே மக்களின் எதிர்பார்ப்பை பாரிஸ் ஜெயராஜ் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

கானா பாடகராக பாரீஸ் பகுதியில் வசித்து வருபவர் தான் ஜெயராஜ் (சந்தானம்). ஜெயராஜின் முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட, அந்த தருணத்தில் அறிமுகமாகும் கதாநாயகி திவ்யாவை (அனைகா) காதலிக்க ஆரம்பிக்கிறார்.

முதலில் இந்த காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயராஜின் தந்தை (பிருத்விராஜ்), பிறகு மிகவும் கடுமையான தனது எதிர்ப்பை தெரிவிக்க, அதே போல் திவ்யாவின் தந்தையும் இந்த இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.இதன்பின் ஜெயராஜின் காதலை முதலில் ஆதரித்த தந்தை, பிறகு ஏன் எதிர்க்கிறார், இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம், இந்த அணைத்து எதிர்ப்புகளை மீறி ஜெயராஜ் மற்றும் திவ்யா காதல் ஜோடி இணைந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

'ஏ 1' படத்தில் இருந்த நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்து சென்றால் சற்று ஏமாற்றம் தான். அதற்கு முக்கியமான காரணம், படத்தின் முதல் பாதியில் எவ்வளவோ முயற்சித்தும் காமெடி பெரிய அளவுக்கு ஒர்கவுட் ஆகவில்லை என்பது தான்.

ஆனால், படத்தின் இரண்டாம் பாகம் இதனை சரி செய்திருக்கின்றனர். இடைவேளைக்கு பிறகு நகைச்சுவை காட்சிகளும் திரைக்கதையும் நம்மை சிரிப்பில் மூழ்கடிக்க செய்கிறது.

படத்தில் கதாநாயகன் ஜெயராஜ் கானா பாடகர் என்பதால் எல்லா பாடல்களுமே அதே பாணியில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகன் சந்தானம் தான் என்றாலும் அவரது தந்தையாக வரும் பாத்திரத்திற்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது.

அந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், அதற்கேற்றபடி நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் - பழைய ஜோக் தங்கதுரை வரும் காட்சிகள் பிரதான கதையிலிருந்து சற்று விலகியிருந்தாலும், சிரிக்க வைக்கின்றனர்.

க்ளாப்ஸ்

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தானத்தின் கலகலப்பான நடிப்பு

வில்சன் ஒளிப்பதிவு

பிருத்விராஜ் நடிப்பு

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி

சில இடத்தில் ஒர்கவுட் ஆகாத நகைச்சுவை

மொத்தத்தில் படத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் மீண்டும் ஒரு 'ஏ 1' கிடைத்திருக்கும். ஆனாலும் நல்ல நகைச்சுவை விருந்திற்கான படைப்பு தான் பாரிஸ் ஜெயராஜ். 

 நன்றி