தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன் !

 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 





ஆதியு மில்லா அந்தமு மில்லா
சோதியாய் சுடராய் இருப்பது இறையே
வாதிட முடியா வண்ணமா யிருப்பது
ஆதியா யிருக்கும் அரும் பொருளாகும் 

ஆணவ மிருப்பார் காணவு மாட்டா
அஞ்ஞான மில்லா மெஞ்ஞானப் பொருளே
வாய்மையும் தூய்மையும் வாய்த்த நற்பொருளே
விண்ணாய் மண்ணாய் வியாபிக்கும் பொருளே

அப்பொருள் சிவனே அதுவே முதலே
எப்பொரு ளுள்ளும் இருப்பது மதுவே
நிற்பதும் நடப்பதும் நினைத்திடு மனைத்தும்
நிறைந்திடு பொருளாய் இருப்பது சிவமே 

சிவனை நினைவார் சிந்தை சிறக்கும் 
சிந்தை சிறந்தால் சிவனே தெரிவார்
சிவனை நினைக்கச் சிவ ராத்திரியே
சிறப்புடை நாளாய் அமைந்துமே இருக்கு

சைவசமயத்தின் மேன்மை!

 

இயற்றியவர் - சிவஞானச் சுடர்

கலாநிதி பாரதி இளமுருகனார்

வாழ்நாள் சாதனையாளர்



வையத்தில் வழங்கிவரும்  வாழ்க்கைநெறி பலவற்றில்

உய்யும்வகை உணர்த்திநின்று மன்பதையை உயர்த்துவதில் 

மெய்யான சமயமெங்கள் விடைக்கொடியன் முழுமுதலாய்ப்

பெய்வளையாள் உமையோடு பேரருள்செய்; சைவமன்றோ?

 















முறைமைமிகு சமயமென்று மூத்தமொழி தமிழ்கொண்டு

அறைகூவி மகிழ்ந்திடுவேன்! அற்பன்யா னென்றாலும்

இறையோம்பி ஏற்றநெறி இதுவென்றே போற்றுகின்றேன்!

நிறைவாகப் பிறசமய நெறிகளையும் வரவேற்பேன்!   

 

சிந்தைகவர் சைவமதம் சிறந்ததெனச் சொல்வதற்கு  விந்தையம்மா!  சான்றுகளோ வேண்டுமட்டும் உண்டுகாண்பீர்!

அந்திரனாய்  அநாதனென அநிமிடனாய் அநங்கனாய்

முந்தியென்றும் சூல்காணாப்பிறப்பிலிதான் சிவபெருமான்!

 

கருவாகி உருவெடுத்தோர்; ஐயிரண்டு மாதமதில்

உருவாகிப் பிறப்போரை உண்மையான கடவுளென ஒருபோதும் சைவமதம் ஒல்லையென ஏற்பதில்லை!

அருபையென அநாதியான அனலாடி நம்கடவுள்!

இந்துமதம் - ஒரு வாழும் நெறி !


 [ மகா சிவராத்திரிப் புனித நன்னாளை  மனமிருத்தி இக்கட்டுரை அமைகிறது ]



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

   


வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை யாவருக்கும் காட்டுகின்ற நெறி முறை கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என எண்ணுபவர்களையும், " இப்படித்தான் வாழவேண்டும் " என அன்புடனும், அரவனைப்புடனும் அணுகி அவர்கள் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான வற்றைக் காட்டி நிற்பதால் இந்துமதம் -" என்றும் வாழும் நெறியாக " இருந்து வருகிறது எனலாம்.நெகிழ்ச்சியும் , சகிப்புத்தன்மையும், சுதந்திரமும் , கொண்ட தாக இந்துமதம் திகழ்கின்றமையாலும் அதனை- ஒரு வாழும் நெறி என்று குறிப்பிட லாம்.               

  உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் - தொடங்கியவர்கள்     தொடங்கியகாலம் என ஒரு வரையறை காணப்படுகிறது.ஆனால் இந்துமதத்தை யார்   தொடக்கினார்கள் ? எப்பொழுது தொடங்கப்பட்டது ? என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை.ஆதியும் அந்தமும் அற்ற மதமாக இந்துமதம் விளங்குவதைக் காண் கின்றோம்.இதனால்த்தான் இந்துமதத்தை " சனாதன் தர்மம் " என்று குறிப்பிட்டனர்.' சனாதன' என்றால் நிலையானது என்று பொருளாகும்.அதாவது நித்தியமானது அழிவில் லாதது என்பதாகும். இதனாலும் இதனை வாழும் நெறி என்று அழைக்கலாம்.                                       

   குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறப்பட்டு வந்ததை நாமனைவரும் கேட்டி ருக்கின்றோம்.அதற்கு எடுத்துக்காட்டாக' மனமொரு குரங்கு ' என்று ஒரு உதாரணம்காட் டப்படுவது நோக்கத்தக்கது.                                    

   விலங்காக இருந்த மனித சிந்தனை, செயற்பாடு . யாவும் சற்று மாறுதலடைந்து       சிந்திக்கதக்க மனிதனாக மாற்றம் அடைந்ததற்குக் காரணம் மனிதவாழ்விலேற்பட்ட  படிப்படியான மாற்றங்களேயாகும்.

  மாற்றம்மடைந்த மனிதனிடம் விலங்கின் தன்மைகள் முழுமையாக விட்டு நீங்க வில்லை என்பதைத் தக்க சமயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.உணர்ச்சி மேலிட்டு நிற்கின்ற பொழுது மனிதனால் செய்யப்படுகின்ற ஆக்ரோஷமான நடவடிக்கைகள் - இன்னும் மனிதனிடமிருந்து மிருக இயல்புகள் மறையவில்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்.

  அந்த இயல்புகளை மாற்றி மனிதனை மனிதனாகவும் _ அந்த மனிதனைப் புனிதனா கவும் மாற்றும் தன்மைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் திகழ்வ தால் அது   " ஒரு வாழும் நெறியாக " விளங்குகிறது எனலாம்.                                    

 மதங்களும் -மதங்கள் வகுத்த கடவுள் கோட்பாடுகளும் மனிதனைப் புனிதம்மிக்கவனாக மாற்றுவதற்கே அன்றி -அவனை அடக்கி ,ஒடுக்கி, வைப்பதற்கு அல்ல. மதங்களும். அவற் றின் கொள்கைகளும்- மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் கொள்ளவும்- அவனுள் தூய் மையை ஏற்படுத்தவுமே அமைந்தன.ஆனால்- சில மதங்கள் - மனித சமுதாயத்தை அட க்கி ,ஒடுக்கி, வைக்க முனைகின்றன.சர்வாதிகாரப் போக்குடையயனவாகவும் காணப் படுகின்றன.செய் அல்லது செத்துமடி என்னும் இராணுவத் தோரணை கொண்டனவாகவும் இருகின்றன. சமயமாக இல்லாமல் சர்வாதிகாரம் கொண்டனவாக மாற முற்படுகின்றன.                      

  இவற்றுக்கு மத்தியில் இந்துமதமோ மாறுபட்டு, வேறுபட்டு நிற்கிறது. பூரண சுதந்திரம் கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது.இந்து மதத்தவர்கள் அம்மதத்தை விட்டுச் சென் றாலும் சரி - வேறு மதத்தவர்கள் இந்துமதத்தில் இணைந்தாலும் சரி அதையிட்டு இந்தும தம் கண்டு கொள்ளுவதேயில்லை.

கவிதை..."முழுமதி ஜோதி"... மெல்போர்ன் அறவேந்தன்




சிவராத்திரியின் ஆன்மீகப் பொருள்

 சிவராத்திரி பல்வேறு அர்த்தங்களை உடையது. ‘ராத்திரி’ என்பது பொதுவாக இருளை குறிப்பதாகும். ஆனால் ‘சிவராத்திரி’ என்பது வெறும் இருளை மட்டும் குறிக்காது; இந்த இரவின் சிறப்பு புனிதத்தையும் மங்களத்தையும் உணர்த்துகிறது. ஆம், இந்த இரவிலும் இருள் இருக்கிறது. ஆனால் அந்த இருள் மங்களத்தால் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்குக் காரணம், பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தசி நாளில் (பௌர்ணமிக்குப் பின் 14ஆம் நாள்), மனதின் அதிபதியான சந்திரன் தனது பதினாறு கலைகளில் பதினைந்து கலைகளை இழந்திருக்கிறான் என்பது ஆகும். இந்த நிலை, மனிதன் மனஅலைச்சல்கள் குறைந்து, இறைவனுக்கு அருகாமையில் நிலைபெறுவதற்கான மங்களமான தருணமாகக் கருதப்படுகிறது. எனவே, சிவராத்திரி என்பது தெய்வீகத்தை அணுகுவதற்கான மிகப் புனிதமான இரவாகப் போற்றப்படுகிறது.

“நல்லவர்கள் ஒன்று கூடி இறைவனை தியானிக்கும் நாட்களும், உறவினர்கள் இல்லத்தில் அன்புடன் கூடும் நாட்களும், அந்நியர்களுக்கு அதிதி சத்த்காரம் செய்யப்படும் நாட்களும், தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்யப்படும் நாட்களும் தான் உண்மையான நாட்கள்; மற்ற எல்லா நாட்களும் உண்மையில் துக்க நாட்களே” என்று ஒரு தெலுங்கு பாடல் கூறுகிறது. இவ்வாறு, மனிதன் தன் வாழ்க்கையை தெய்வநினைவுடனும் தர்மச்செயல்களுடனும் நிரப்பும் நாட்களே உண்மையான புனித நாட்களாகக் கருதப்படுகின்றன.

மேற்கத்திய தத்துவஞானி பிளேட்டோ, சத்தியம், நன்மை, அழகு ஆகியவற்றைத் தெய்வீகத்தின் பண்புகளாகக் கருதினார். உபநிஷத்துகள் இதையே ‘சத்யம், சிவம், சுந்தரம்’ என்று குறிப்பிடுகின்றன. இதில் ‘சிவம்’ என்பது மங்களத்தின் தத்துவத்தை உணர்த்துகிறது. அது ஒரு புறம் சத்தியத்துடனும், மறுபுறம் சுந்தரத்துடனும் இணைந்துள்ளது.

பண்டைய முனிவர்கள் சிவராத்திரியை மிகப் புனிதமான நாளாகக் கருதி வழிபட்டனர். அது வெறும் ஒரு திருநாள் அல்ல; மனம் தெய்வீகத்தை நோக்கி திரும்பி, சத்தியம், மங்களம், அழகு ஆகிய உயர்ந்த தத்துவங்களில் நிலைபெறும் ஆன்மீக வாய்ப்பாகும்.

மனிதனின் மாற்றமே உலகின் மாற்றம்

 மனிதன் என்பது உடலால் மட்டும் வரையறுக்கப்படுபவன் அல்ல. அவனுக்கு மனம், புத்தி மற்றும் ஆத்மா ஆகிய மூன்று ஆழ்ந்த பரிமாணங்களும் உள்ளன. இந்த நான்கு கூறுகளின் ஒருங்கிணைந்த அமைப்பே உண்மையான மனிதத் தன்மையாகும். உடல், மனம், புத்தி, ஆத்மா ஆகியவற்றுக்கிடையே சமநிலை நிலைத்திருக்கும்போது மனித வாழ்க்கை சீராகவும் செழிப்பாகவும் அமையும். ஆனால் இந்த சமநிலை குலைந்துவிட்டால், மனிதன் துன்பங்களிலும் குழப்பங்களிலும் சிக்கிக்கொள்கிறான்.

ஒரு மனிதனின் வாழ்க்கை மாற்றம் அவன் மனத்தின் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. மனம் சுத்தமாகவும் உயர்ந்த சிந்தனைகளால் நிரம்பியதாகவும் இருந்தால், மனிதனின் நடத்தை உயர்வடையும். மனிதர்கள் உயர்ந்த சிந்தனையுடன் வாழத் தொடங்கினால், நாடு முன்னேறும். நாடுகள் நல்வழியில் மாற்றமடைந்தால், உலகமே அமைதி மற்றும் ஒற்றுமையின் பாதையில் பயணிக்கும். ஆகையால் உலக மாற்றம் தனிநபர் மன மாற்றத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

மனித மனம் மிக அதிசயமான ஒரு சக்தியாகும். அது ஞானத்தால் நிரம்பியிருக்கும்போது, மனிதனை முனிவனாக உயர்த்துகிறது. அதே மனம் அறியாமையுடன் இணைந்துவிட்டால், அது மனிதனை வீழ்ச்சியடையச் செய்கிறது. இதனால் மனிதனின் பந்தத்திற்கும் விடுதலைக்கும் காரணம் மனமே எனப் பாரம்பரிய ஞானம் வலியுறுத்துகிறது.

கல்வி, சமூக அமைப்பு, அரசியல் மற்றும் பிற துறைகளில் மாற்றம் வேண்டும் எனில், முதலில் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். அன்பு, கருணை, ஞானம் ஆகியவற்றால் நிரம்பிய மனமே உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாக்கும். எனவே, ஒவ்வொருவரும் தமது மனதை சுத்தப்படுத்தி உயர்த்திக் கொள்ளும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவே மனிதனின் உண்மையான முன்னேற்றமும், உலகின் நிலையான மாற்றமும் ஆகும்.

தங்க மாம்பழம்!


…..சங்கர சுப்பிரமணியன்.


உயிரோடிருக்கு இருக்கும்போது தாய் கேட்டும் ஒரு மாம்பழம் வாங்கிக் கொடுக்காதவன் தாயை இழந்தபின் தங்க மாம்பழம் தானம் கொடுத்தானாம். இது கிட்டத்தட்ட கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்பது போல் இருந்தாலும் இடத்தைப் பொருத்து மாறுபடும்.

அதைப்போலவே முதலில் சொல்லப்பட்டது வட்டாரத்தைப் பொருத்து மாறலாம். இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் தளவாய்பட்டி தாமோதரன் செய்த செயல்தான் என்னை சொல்லவைத்தது. அவர் அப்படி என்ன செய்தார்? அவரது அப்பாவின் நினைவு நாளன்று அன்னதானம் போட்டு ஏழைகளுக்கு ஆடைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

இதனால் பலன் பெற்றோர் அனைவரும் நல்ல மனுசன் ஆண்டு தோறும் இதைவிடாமல் செய்கிறார் இந்த மவராசன் நல்லா இருக்க வேண்டும் என்று வாயார வாழ்த்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த பெரியவர் இதை ஆண்டுதோறும் செய்கிறீர்களே ஏதாவது முதன்மையான காரணம் இருக்கிறதா? என்றார்.

அவர் அப்படிக்கேட்டதும் கண்கலங்கிய அவர் தன்னையும் மீறி கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே,

“ஐயா, எனக்கு பதினொரு வயதிருக்கும். எனது அப்பா நண்பரால் ஏமாற்றப்பட்டு வீடு வாசலை இழந்தார். நோயுற்றார். அவரை குளிக்கவைக்க கிணற்றடிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அவர் சொன்னவை இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது” என்று சொல்லி நிறுத்தவும் மீண்டும் கண்களில் கண்ணீர் கொட்டியது.

“சரிங்க, வேண்டாம். உங்கள் மனதை இந்ந அளவுக்கு பாதித்த விசயத்தை சொல்ல வேண்டாம். விடுங்கள்.” என்றார் பெரியவர்.

“அப்படியெல்லாம் இல்லை. உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிடுகிறேன். சொல்லாது போனல் அது மனதில் அழுத்திக் கொண்டிருக்கும்.”

“…………….”

“உன்னை ஒன்றுமில்லாமல் நடுத்தெருவில் விட்டுச் சென்றுவிடுவேன் போல் தெரிகிறது என்று சொல்லி கண்கலங்கினார். அதன் பின் ஒருமாதமே இருந்தவர் அவர் சொன்னபடியே என்னைத் திண்டாட வைத்துவிட்டு இறந்து போனார்” என்று சொல்லி, வந்த விம்மலை அடக்கினார்.

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம் - 4


….. சங்கர சுப்பிரமணியன்.





வாழ்க்கையில் காதல்
வருவதும் உண்டு
வந்த பின் அதுவும்
மறைவதும் உண்டு

வாழ்க்கையில் காதல்
வருவதும் உண்டு
வந்த பின் அதுவும்
மறைவதும் உண்டு

ஆண்புறா பெண்ணை
அழைத்திடும் நேரம்
பெண்புறா அதனுடன்
கூடியே வாழும்

ஆண்புறா பெண்ணை
அழைத்திடும் நேரம்
பெண்புறா அதனுடன்
கூடியே வாழும்

சத்சங்கத்தின் உண்மையான பொருள்

 சத்சங்கம் என்பது தவம் செய்வதையும், தீர்த்தயாத்திரை மேற்கொள்வதையும், தியானம் செய்வதையும் விட அதிகப் பயன் அளிக்கும் ஒரு உயர்ந்த ஆன்மீக சாதனையாகும். பொதுவாக மக்கள், சத்சங்கம் என்றால் நல்லவர்களின் கூட்டத்தில் இருப்பதும், அவர்களின் உபதேசங்களை கேட்பதும் என எண்ணுகின்றனர். ஆனால், அது சத்சங்கத்தின் முழுமையான அல்லது உண்மையான அர்த்தம் அல்ல.

‘சத்’ என்பது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் மாற்றமின்றி நிலைத்திருப்பதைக் குறிக்கிறது. “திரிகாலாபாத்யம் சத்யம்” — மூன்று காலங்களாலும் பாதிக்கப்படாமல் எப்போதும் ஒரேபோல் இருப்பதே சத்தியம். அந்தச் சத்தியத்தை வரலாறோ, காலப்போக்கோ அழிக்கவும் மறைக்கவும் முடியாது. அந்த மாற்றமற்ற சத்தியமே தெய்வீகம் ஆகும்.

தெய்வீகத்தின் விழிப்புணர்வில் நிலைத்திருந்து வாழ்வதே சத்சங்கம் எனப்படும். ‘சத்’ என்பதே ‘தத்’ என்றும் குறிப்பிடப்படுகிறது; ‘தத்’ என்பது தெய்வீகத்தை உணர்த்தும் சொல். ஆகவே, சத்சங்கம் என்பது மாற்றமற்ற, குணங்களற்ற, ரூபமற்ற, மரணமற்ற, அளவற்ற, எப்போதும் ஒன்றாய் நிலைத்திருக்கும், ஒரே தனித்துவமான பரம தெய்வீகத்தில் நிலைபெற்று வாழ்வதைக் குறிக்கிறது.

எப்போதும் தெய்வ சித்தத்தில், தெய்வ உணர்வில் வாழ்வதே சத்சங்கத்தின் உண்மையான பொருள். அது வெளிப்புறச் செயல்களில் மட்டுப்படுவது அல்ல; அது உள்ளார்ந்த ஆன்மீக நிலை. அந்த நிலையை அடைந்தபோது மனிதன் வாழ்க்கையின் உயர்ந்த அர்த்தத்தை உணர்கிறான்.

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! நிறைவுத்தொடர்- 15…..சங்கர சுப்பிரமணியன்.

வாடகை வாகனத்தை அழைக்க சிலமுறை முயன்றும் பயனளிக்காததால் கையை அசைத்து வாகனத்தை கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ஒருசில வாகனங்கள் வந்தன. செயலி மூலம் மொழிமாற்றம் செய்து செல்லுவேண்டிய இடத்தைச் சொன்னேன். வெளிநாட்டினர் என்பதை புரிந்து கொண்டு நாங்கள் வரும்போது கொடுத்த பணத்தைப் போன்று மும்மடங்கு கேட்டனர். எல்லா இடங்களிலும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஆனால் அந்த வாடகை வாகன ஓட்டுனர் எப்படிப்பட்ட கடும் உழைப்பாளி என்பதையும் கண்டு கொண்டேன். சீனாவில் கால் வைத்ததும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த வாகன ஓட்டுனர் முதன் முதலிலிலேயே சீனர்பால் நேர்மையின் காரணமாக நன் மதிப்பை ஏற்படுத்தினார். ஆனால் நான் கடைசியாக சந்தித்த வாடகை வாகன ஓட்டுனர் என் எண்ணத்தை மாசுபடுத்தும்படி நடந்தார்.

சரி இனிமேல் இந்த வழி கதைக்கு உதவாது என்று மாற்று வழி

ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன். நினைத்தேன் வந்தாய் நூறுவயது என்பதைப் போன்று ஒரு வழி நினைவில் வந்தது. அது என்ன வழி என்றால் ஏதாவது ஒரு கடைக்குள் நுழைவது அங்கு சில தேவையான பொருட்களை வாங்குவது. மாற்றுவழிக்கும் கடையில் பொருள் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களில் சிலர் நினைப்பது புரிகிறது.

உங்கள் நினைப்புக்கு பதில் சொல்கிறேன். பொருள் வாங்குவது மட்டுமல்லாமல் நம் பண்பாட்டுக் கதைகள் சொல்லிக் கொடுத்த வித்தையை களமிறக்குவதையும் செய்தேன். குழம்பாதீர்கள் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைத்ததைத்தான் சொல்கிறேன். உடனே நீங்கள் பணம் கொடுத்ததால் பொருள் கொடுத்தார் இதற்கு எப்படி வரம் கொடுத்ததை ஒப்பிடலாம் என்று கேட்காதீர்கள்.

வரம் என்ன சும்மாவா கொடுத்தார்? தவமிருந்ததால்தானே கொடுத்தார். அதுவும் கடுந்தவம். நானும் ஒரு பொருள் மட்டும் வாங்கவில்லை பலபொருட்களை பணம் கொடுத்து வாங்கினேன். வரம் பெற்றவன் வரம்கொடுத்தவர் தலையில் கைவைக்க முயன்றதும் ஓடினார். ஆனால் இங்கு கடைக்காரர் கடையைவிட்டு வெளிவந்து வாசல்வரை வந்தார்.


வாசல்வரை வந்ததோடு மட்டுமின்றி வாகனத்தில் நாங்கள் அமரும்வரை காத்திருந்து வழியனுப்பி வைத்தார். நான் கடைக்காரர் தலையில் கைவைத்த கதையைச் சொல்கிறேன். கடையில் வியாபாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் கடைமுன் நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது கடை தூங்கி வழிந்து கொண்டிருந்தது.

நாங்கள் நுழைந்தபின்னும் பொருட்களை வாங்கிய பின்னரும் அதே நிலைதான். நாங்கள் உதவிகேட்க ஆரம்பித்ததும் எங்களுக்கு உதவவிடாமல் ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களுக்கு பொருட்களை கொடுப்பாரா எங்களுக்கு உதவ செய்வாரா? நம்ம ஊராய் இருந்தால் போ போ முன்னுக்கு போப்பா என்று சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

எதற்கும் ஒரு முகராசி வேண்டும். என் முகராசி அந்த கடைக்காரரிடம் ஒர்க் அவுட் ஆனதை என் மனைவியிடம் பெருமையாக சொன்னேன். கடையில் பொருட்கள் வாங்காவிட்டால் உங்க முகராசி தெரிந்திருக்கும். கூடுதலாக அவருக்கும் மூடநம்பிக்கை இருந்திருக்கும். மவராசன் கடையில் கால் வைத்ததும் வியாபாரம் சூடுபிடிக்கிறது என்றும் நினைத்திருக்கலாம் என்ற பதில் மனைவியிடமிருந்து வந்தது.

முகராசி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 முருகனின் அருளாசியையும், எம் ஜி ஆரின் முகராசியையும் மட்டும்


நம்பி படம் எடுத்து பணம் பார்த்தவர் சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர். அந்த தேவர் 1966 எடுத்த படம் முகராசி . யாருக்கு கால்ஷீட் கொடுப்பதில் சுணக்கம் காட்டினாலும் தேவருக்கு மட்டும் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடும் எம் ஜி ஆர் இந்தப் படத்துக்கும் கால்ஷீட்டை வாரி வழங்கி விட 17 நாட்களில் மள மளவென்று படத்தைத் தயாரித்து வெளியிட்டு விட்டார் தேவர். 



படத்தில் இரண்டு நட்சத்திர நடிகர்கள். முதன் முறையாக எம் ஜி ஆருடன் இந்தப் படத்தில் சேர்ந்து நடித்தார் ஜெமினி. காதல் மன்னன் என்ற போதும் இதில் அவருக்கு ஜோடி இல்லை. பாடலும் இல்லை. அவற்றை எல்லாம் எம் ஜி ஆரே பார்த்துக் கொண்டார். குணச்சித்திர நடிகராகவே படம் முழுக்க வருகிறார் ஜெமினி. ஒரு கால் இழந்தவராக வரும் அவர் சில காட்சிகளில் உருக்கமாகவும், சில காட்சிகளில் மூர்க்கமாகவும் நடித்து ரசிகர்களை கவருகிறார். 


படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடி ஜெயலலிதா. அவரிடம் இருந்து

பெரியளவில் நடிப்பை எதிர் பார்க்காத தேவர் அவரின் கவர்ச்சியை படத்தில் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தண்ணீரில் நனைந்து ஈர உடையில் ஆடிப் படுகிறார், முழங்காலுக்கு மேல் காற்சட்டை அணிந்து வாத்தியரிடம் சிலம்பம் கற்கிறார், மூன்று டூயட் பாடுகிறார் , பாதி படத்துக்கு மேல் சேலை அணிந்து வருகிறார். அத்துடன் அவர் வேலை முடிந்தது. 



நம்பியார் வில்லன் . அடிக்கடி கழுத்தை சுளிக்கி ஒரு மேனரிசம் காட்டுகிறார். அவரின் கையாள் அசோகன். எம் ஜி ஆருடன் பிரமாதமாக சண்டை போடுகிறார். ஜெமினியை இதில் நடிக்க வைத்த தேவர் , பட வாய்ப்புகள் இன்றி இருந்த ஸ்ரீராமுக்கும் இப் படத்தில் வில்லன் வேடம் தந்தார். 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

20 - 02 - 2026 Friசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில்  திருவிழா ஆரம்பம்

21 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்

28 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா

01 - 03 - 2026 Sunசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா

02 - 03 - 2026 Monசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

23 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் கொடியேற்றம்

30 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் சப்பரத் திருவிழா

31 - 03 - 2026 Tueசிட்னி முருகன்  திருக்கோயில் தேர்த் திருவிழா

01 - 04 - 2026 Wedசிட்னி முருகன்  திருக்கோயில் தீர்த்தத் திருவிழா

இலங்கைச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல்

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியது ; மலையகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4 பிக்குகள் உட்பட 10 பேருக்கும் நிபந்தனையின்கீழ் பிணை



வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

10 Feb, 2026 | 06:45 PM

(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு

 பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்

எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

எப்ஸ்டீன் இரகசிய ஆவணங்களில் 1,005 முறை இடம்பெற்றுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெயர்

நோபல் பரிசு பெற்ற ஈரான் பெண்ணுக்கு மேலும் 07 ஆண்டுகள் சிறை




அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

Published By: Digital Desk 3

11 Feb, 2026 | 05:09 PM

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர்.

லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது.

இலக்கியவெளியின் ராஜம் கிருஷ்ணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வு


ஒருங்கிணைப்பு:  எம்.எம்.ஜெயசீலன்

நாள்:  சனிக்கிழமை 07-03-2026

நேரம்:

இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 8.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

வழி: ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245...

உரையாளர்கள்:

பேராசிரியர் இரா. காமராசு

பேராசிரியர் பா. இரவிக்குமார்

எம். அப்துல் றஸாக்

மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

இலக்கியவெளி நடத்திய “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் நூற்றாண்டு நிகழ்வு உரைகள்"

 




சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா 2026 : 20/02/2026 - 04/03/2026


 









அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா 07/03/2026

 


👉 சிட்னி முருகன் கோவில் திருவிழா 22/03/2026 - 02/04/2026