தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்

.
தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.

வட்டிவீதம் 0.25 வீதத்தில் உயர்ந்துள்ளது

.
சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வட்டிவீதத்தை 4.5 யிலிருந்து 4.75 ஆக உயர்த்தியுள்ளது. அதனை தொடர்ந்து சில வங்கிகள் அதைவிட மேலதிகமாக வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் கடன் எடுத்து வீடு வாங்கியோருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆகாயத்தில் கொன்றாஸ் விமானத்தின் ஒரு இயந்திரம் வெடித்தத்தில் பிரயாணிகளின் அவலம

.


அவுஸ்திரேலியா கொன்றாஸ் விமானம் ஏ380 சிங்கப்பூரிலிருந்து சென்ற வியாழக்கிழமை சிட்னிக்கு புறப்பட்டு சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு இயந்திரம் வெடித்ததில் அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 400க்கும் மேற்பட்ட பிரயாணிகளுக்கு எந்தவிதமான காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை.  இயந்திரம் வெடித்த சத்தம் பிரயாணிகளுக்கு கேட்டதாகவும் அப்போது அந்த விமானம் அதிர்ந்ததாகவும் பிரயாணிகள் தெரிவித்தார்கள்.  கொன்றாஸ் நிறுவனம் எல்லா எயர்பஸ் ஏ380 விமானங்களையும் பாவனைக்கு அடுத்த அறிவித்தல் வரை விடப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்கள்.

அவுஸ்திரேலியா டொலர் அமெரிக்கா டொலரை விட மேலே உயர்ந்தது

.

சென்ற வியாழக்கிழமை 28 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியா டொலரின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு மேலாக 100.34 ஆக உயர்ந்திருந்தது.

கிரிக்கெட்

.
அவுஸ்திரேலியா அணி இலகுவாக இலங்கை அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.     இதில் மெல்பர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

எல்லோரையும் வியந்து மகிழவைத்த இனியதோர் அரங்கேற்றம்

.
       எல்லோரையும் வியந்து மகிழவைத்த இனியதோர் அரங்கேற்றம்
அண்மையில் மெல்பேணில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்கள் அனைவரையும் பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியின் இயக்குனரான திருமதி. நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன் திரு. ந.தர்மகுலேந்திரன் ஆகியோரின் புதல்வியான செல்வி. இளமதி தர்மகுலேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி மெல்பேணில், சவுத்மோராங் என்றுமிடத்தில் அமைந்துள்ள பிளென்ரி மாவட்டக் கலைக்கூட மண்டபத்தில் நடைபெற்றது. செல்வி இளமதி, நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியில், அவரது தாயாரான நிருத்தசொரூபியிடம், மூன்றுவயதிலிருந்தே பரதநாட்டியத்தை முறையாகக் கற்று வருபவர். இப்பொழுது பதினொரு வயது நிரம்பிய இளமதி கடந்த ஏழாண்டுகளாக பரத நாட்டியத்தில் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டீருப்பவர்.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்தியா காட்டும் அக்கறை

.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் முன்னரைப் போன்று அதிக ஆர்வம் தீவிரம் கொண்டதாக இல்லாத நிலையில் அவ்வப்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளதையே காணமுடிகின்றது. எவ்வாறெனினும் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியானதும் இறுதியானதுமான அரசியல் தீர்வு ஒன்றின் அவசியத்தையும் புறந்தள்ளிவிடமுடியாது.

"தமிழர் உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்களின்“ கவனயீர்ப்பு நிகழ்வு

.
தமிழர் உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்களின்கவனயீர்ப்பு நிகழ்வு


கடந்த புதன் கிழமை நவம்பர்  மூன்றாம் திகதி அவுஸ்திரேலியா மெல்பேனில் அவுஸ்திரேலிய, சிறிலங்கா அணி பங்குபற்றிய ஒருநாள் கிரிக்கற் போட்டியில்தமிழர் உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்களின்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஆன்மீகம்

.
குலசேகர ஆழ்வார்


கடந்த சில வாரங்களாக  முதல் ஆழ்வார்கள், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், அவரது சீடர் மதுரகவி ஆழ்வார்  பற்றி  பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அடுத்ததாக உள்ள குலசேகர ஆழ்வாரை பற்றி பார்ப்போம்.

கவிதை

.

தோட்டகார பய ஒருத்தன்
கல்லால அடிக்க,
ஒத்தக்காலு ஊனமான
ஆட்டுக்குட்டிய தோளுல
சொமந்து ஆட்டம் போட்ட
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

இராப்போசன விருந்து





தமிழ் சினிமா

.
* எனக்கும் ஜெனிலியாவுக்கும் செம பொருத்தம், கூறுகிறார் தனுஷ்
* பாடல் மூலம் அம்பு விடும் 'மன்மதன் கமல்'!
* ஒஸ்கார் பிலிம்ஸின் மருதநாயகம் அவதாரம் எடுக்கும் கமல்
* விக்ரம் படத்தில் அமலா 

வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற 14 இலங்கை அகதிகள் கைது

.
நாகப்பட்டினம், நவ. 2: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேறி, ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 14 பேர், நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் திங்கள்கிழமை இரவு பிடிபட்டனர்.

சன் சீ தமிழ் அகதிகளில் ஒருவர் கைது

.
கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்திலிருந்து கனடாவிற்கு படகு மூலம் சென்ற 492 அகதிகளுள், யுத்த குற்றம் புரிந்தவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படித்துச் சுவைத்த சிறுகதை - ஆண்பெண் போட்டி

. 
ஆண்பெண் போட்டி


‘ஆண்புத்தி பெரிசா, பெண்புத்தி பெரிசா’ என்று சாமியின் அப்பா சிறுவயதில் அவனுக்கொரு கதை சொல்வதுண்டு. கதை கேட்பதற்காகவே சாப்பிடப்படுத்தியிருக்கிறான். அது மதனகாமராஜன் கதைகளில் ஒன்று என்று அவர் சொல்வது வழக்கம். ஆனால் பெரியவனானபிறகு அப்படியொரு கதையை மதனகாமராஜன் கதைத்தொகுப்பில் அவன் படித்ததில்லை. அது இடைச்செருகலாக இருக்கலாம். அவன் பெண்களை மதிக்கவேண்டும் என்பதற்காக அவரே கதைகட்டிவிட்டிருக்கலாம். ஆண்களால் முடிவதைப் பெண்கள் செய்ய இயலாதென்று ஒப்புக்கொள்ளாத ஒருத்தியை ஒருதீவில் எந்தவிதக் கருவிகளும் இல்லாமல் தனியாக விட்டுவிடுவார்கள். அவள் அங்கே கிடைத்ததைச் சாப்பிட்டு, ஓராண்டு கெடுவிற்குள் தப்பிவந்து, அவர்கள் முகத்தில் கரியைப்பூசியதுதான் கதை. அதைப் பலமுறை அவரைச் சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறான். முதலும் முடிவும் ஒன்றுதான், ஆனால் விவரங்கள் அவர் கற்பனைக்கேற்ப மாறுபடும். மரக்கட்டைகளைச் சேர்த்து ஒரு தெப்பம் கட்டினாளா இல்லை, பல பறங்கிக்காய்களைக் காயவைத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்தினாளா என்பதுதான் சஸ்பென்ஸ். இப்போது அது நினைவுக்கு வந்தது.

மன்னார் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதி நிகழ்வு

.
மன்னார் தமிழ் செம்மொழி; மாநாட்டின் இறுதி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



நன்றி கலைக்கேசரி


வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும்

.

வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும்

வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன.


வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார்.

அதே வேளை முழங்கால் வலியுள்ள ஒரு அம்மா Diclofenac Sodium என்ற வலிநிவாரணி மாத்திரையை எந்த மருத்துவரின் சிபார்சுமின்றி மாதக்கணக்கில் தானாகவே உபயோகித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் தவற்றையே செய்கிறார்கள்.

நீரிழிவு நோயாளர்களுக்கும் மூட்டு சத்திர சிகிச்சை சாத்தியமே

.

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை எதிர்கொள்வதற்கு மனோதிடத்துடன் சற்று சமயோசிதம் தேவை என்பதே புத்திசாலிகள் மற்றும் அனுபவஸ்தர்களின் முன்மொழிபு. எதிர்பாராமல் நடக்கும் விபத்தில் பாதிக்கப்படுவோர்களை, விபத்து நடந்த தருணத்திலிருந்து குறிப்பிட்ட தருணத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர் டொக்டர் எஸ். முத்துகுமார்.