பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம் !







மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 

 

தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்

தளர் வகலப் போகுதடி தங்கமே தங்கம்

கை நிறையப் போகுதடி தங்கமே தங்கம்

கை யணைத்து நிற்போமே தங்கமே தங்கம் 

 

பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம்

புத்துணர்வு பெற்றிடுவோம் தங்கமே தங்கம் 

மங்கலங்கள் வரவெண்ணி தங்கமே தங்கம்

பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம் 

 


உறவுகளைக் கூட்டிடுவோம் தங்கமே தங்கம்

உவகையுடன் பொங்கிடுவோம் தங்கமே தங்கம்

அறவுணர்வை அகமிருத்தி தங்கமே தங்கம்

அனைவருமே பொங்கிடுவோம் தங்கமே தங்கம் 

 

புதுப்பானை எடுத்திடுவோம் தங்கமே தங்கம்

புத்தரிசி வாங்கிடுவோம் தங்கமே தங்கம்

அடுப்பெடுத்து வைத்திடுவோம் தங்கமே தங்கம்

அதில்பானை ஏற்றிடுவோம் தங்கமே தங்கம் 

தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


 




எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 48 “ கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் “ முருகபூபதி


அன்பார்ந்த வாசகர்களுக்கு எமது இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்.  இதேபோன்றதொரு நாளில், அதாவது இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னர்  சிட்னியில் வசித்த   இலக்கியவாதி கலாநிதி  வேந்தனார் இளங்கோ  என்னைத் தொடர்புகொண்டு, அங்கே எமது இரண்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்கான ஏற்பாடுகளை தானும் சில நண்பர்களும் மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார்.

எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் என்ற நீண்ட தொடர் என்னைப்பற்றியது மட்டுமல்ல,  என்னோடு பயணித்தவர்கள் பற்றியதுமாகும்.

அவ்வாறு பயணித்தவர்கள் பலர் இன்று உயிரோடு  இல்லை.  சிலர்


பாதி வழியில் ஒதுங்கிச் சென்றுவிட்டார்கள். பலர், தொடர்ந்தும் கூட வருகிறார்கள். 

வேந்தனார் இளங்கோ,  சிறந்த கல்விப்பின்னணி மிக்க ஒரு கலை,  இலக்கிய குடும்பத்தைச்சேர்ந்தவர்.  இவருடைய தந்தையார் வித்துவான் வேந்தனாரை நான் எனது வாழ்நாளில் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அக்காலம் 1963 ஆம் ஆண்டு.  அப்போது நான் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் ( இன்றைய  கனகரத்தினம் மத்திய கல்லூரி )  ஏழாம் தரம் படிக்கின்றேன். அந்த ஆண்டு கலைமகள் விழா வந்தபோது, வித்துவான் வேந்தனார் எங்கள் கல்லூரிக்கு வந்து சிறப்புரையாற்றினார். அச்சமயம் அவர் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

எனது பாடசாலைப் பருவத்திலேயே  பெரியோர்களின்  மேடைப் பேச்சுக்களை விரும்பிக் கேட்பேன்.  எங்கள் ஊருக்கு தமிழ்நாட்டிலிருந்து  குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் முதலானோர் வந்தபோதும் நான் மாணவன்தான்.  இவர்களின் உரைகளையும் கேட்டு வளர்ந்திருக்கும்  நான், யாழ்ப்பாணத்திற்கு படிக்கச் சென்றபோதுதான்,  வித்துவான் வேந்தனார், டொமினிக் ஜீவா ஆகியோரின் உரைகளையும் அந்த மாணவப் பருவத்தில் கேட்டேன்.

காலப்போக்கில்,  வேந்தனாரின் பிள்ளைகள் எனக்கு அறிமுகமாவார்கள் என்றோ, அவர்களுடன் உறவாடும் சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்றோ நான் அந்தப் பருவத்தில் நினைத்திருக்கமாட்டேன்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வதியும் எனது இலக்கிய நண்பர்களிடம் பேசும்போது,  நான் பெருமையோடு சொல்லும் செய்தி ஒன்றிருக்கிறது. அதனை இந்த தைத்திருநாள் காலத்தில் பதிவுசெய்துகொண்டே நகர விரும்புகின்றேன்.

 “ அவுஸ்திரேலியாவில் பல ஈழத்து மூத்த எழுத்தாளர்கள் – கலைஞர்களின் பிள்ளைகள் , பேரர்கள்  இருக்கிறார். முடிந்த வரையில் அவர்களுடன் தொடர்பிலிருக்கின்றேன்.  அவர்களுடன் உறவைப் பேணுவது, அந்த மூத்தோர்களுடன் இன்னமும் வாழும் உணர்வையே தருகிறது.   என்பேன்.

பொய்மான் - என் பார்வையில் - ச சுந்தரதாஸ் -

 .

பிறந்த நாடான இலங்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு புது வாழ்வு தேடி அகதியாய் படகு மூலம் ஆஸ்திரேலியா வருகிறான் அன்புச்செல்வன் என்ற இளைஞன்..சகல செல்வங்கள்,வசதிகள் இருந்தும் உண்மை அன்பில்லாமல் ஏங்கி தான் பிறந்த நாட்டிற்கே அனாதையாய் திரும்புகிறார் மணி என்ற முதியவர்.ஒருவருக்கு பொய்மானாகத் தெரியும் பணம் இன்னொருவனுக்கு வாழ்வாதாரமாகத் தேவைப்படுகிறது.இதனை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட படம் தான் பொய்மான்.


ஆஸ்திரேலியாவில் லாபிங்கோ லாபிங் என்ற பெயரில் மேடை நாடகங்களை நடத்திவந்த ஜே ஜெயமோகன் முதல் தடவையாக இப் படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இறங்கியுள்ளார்.தனது சோபனம் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து,கதை ,வசனம் எழுதி இயக்கியத்துடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஜெயமோகன்!

ஏற்கனவே மேடை நாடகங்களை இயக்கிய அனுபவம் படத்தை இயக்குவதற்கு அவருக்கு துணிவை கொடுத்துள்ளது.அந்த வகையில் அவர் ஒரு பொசிட்டிவ் ஆள்தான்.ஆனால் படம் முழுவதும் வசனங்களை கொண்டே காட்சிகளை அமைத்துள்ளார்.அதற்கு பதில் ஆங்காங்கே காட்சிகளை கமரா மூலமும் நகர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனாலும் வசனங்கள்இயல்பாகவும் ,அர்த்தபுஷ்டியுடனும் அமைந்திருந்தன.இடையிடையே வசனங்களில் இழையோடும் நகைச்சுவை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்தன.

அன்புசெல்வனாக நடிக்கும் ஜனார்த்தனன் குமரகுருருபரன் நடிப்பு அமர்க்களம்.கொடுத்த வேடத்தை அருமையாக செய்திருந்தார்.ஜெயமோகனிடம் சவடால் விடுவது,பிறகு பம்முவது,மதுவெறியில் தன் சோகத்தை சொல்லி கலங்குவது,காசை கண்டவுடன் மனம் தடுமாறுவது என்று பல குணாம்சங்களை வெளிப்படுத்தியிருந்தார் .ஜனாவுக்கு ஜே .மணியின் மகனாக வரும் வருணன் சரியான வில்லன்!

பொங்கல் திருநாள் புதுப்பாதை திறந்திடட்டும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா      

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

 எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று - பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற் போம்.வறுமை அகல வேண்டும். வாய்மை நிலைக்க வேண்டும். பொறுமை பொலிய வேண்டும். பொய்மை அகல வேண்டும்.அறிவு பெருக வேண்டும். ஆன்மீகம் சிறக்க வேண்டும்.அன்பு நிலைக்க வேண்டும்.அறியாமை மறைய வேண்டும்.

  பொங்கல் என்றாலே புத்துணர்வு வருகிறதல்லவா ! பொங்கல்


என்றாலே பூரிப்பு பெருகிறது அல்லவா ! பொங்கல் என்றாலே ஆனந்தம் பெருக்கெடுக்கிறது  அல்லவா ! அதனால்த்தான்“ பொங்கலோ பொங்கல் “ என்று பொங்கலை மகிழ்வாய் வரவேற்றுப் பொங்கியும் மகிழுகின்றோம். 

  உறவுகள் கூட வேண்டும்.ஒற்றுமை ஓங்க வேண்டும். பிரிவுகள் மறைய வேண்டும்.பெரியவர் வாழ்த்த வேண்டும்.இளையவர் சிறக்க வேண்டும். இன்பமே இருக்க வேண்டும். இதுதானே பொங்கலின் உட் பொரு ளாய் அமைந்திருக்கிறதல்லவா ! 

  பொங்கலின் சிறப்புகள் எங்கள் தமிழினத்தின் ஏற்றமிகு பண்பாட்டுப் பெட்டகமே ஆகும். புத்தரிசி புதுப் பானை  கோலம் மாவிலை வாழையிலை மஞ்சள் கரும்புஅது தரும் சுவையான சர்க்கரையும் வெல்லமும். வெற்றிலை பழங்கள், நிறைகுடம் குத்து விளக்குஇலக்குமியாய் எங்களின் பசுக்கள்அது அன்பாய் பொழியும் அமுதாம் பசும்பால் ,அத்தனையும்  பொங்கலுக்கு வாய்த்திட்ட பொக்கிஷங்கள் அல்லவா ! 

   இனிப்பாய் இருக்க வேண்டும். சிறப்பாய் இருக்க வேண்டும். பொறுப்பாய் உழைக்க வேண்டும். நன்றி யாய் இருக்க வேண்டும். நலிந்தோர்க்கும் நல்கவேண்டும். பொங்கிய பொங்கலை நாமும் உண்ண வேண் டும். மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழவும் வேண்டும். 

   
   உதவும் மாடுகளுக்கு நன்றி. உழைக்கும் உழைப்புக்கும் நன்றி. ஒளி கொடுக்கும் ஆதவனுக்கும் நன்றி.
மண்ணுக்கும் நன்றி. விண்ணுக்கும் நன்றி. மண்போட்ட விதை முழைக்க வைத்திட்ட மாமழைக்குக்கும் நன்றி.இத்தனைக்கும் உரித்தாய் அமைந்திருக்கும் உன்னதத் திருநாள் தான் எங்களின் “ பொங்கல்த் திரு நாள் “ . அந்தத் திருநாளைப் பற்றி அறிவதும்அகத்திருத்துவதும் அவசியம் அல்லவா ! 

தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர் ந்து வரவேண்டும் என்பதே யாவரதும் ஆசையாகும்.

" தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்               
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்                                              
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்                                     
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்                                           
குத்து விளக்கேத்தி வச்சு ( வைத்து ) தங்கமே தங்கம்                               
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் "  -  

கார்த்திகா கணேசரின் " இந்துமதத்தின் பரிணாமச் சிந்தனைகள்" ஆய்வரங்கம் - சிவா

 .


வெளிச்சம் கழகத்தினரின் முதல் நிகழ்வாக சிட்னி தமிழ் அறிவகத்தில் கார்த்திகா கணேசரின் " இந்துமதத்தின் பரிணாமச் சிந்தனைகள்" நூல் ஆய்வரங்கம் அண்மையிலே நடைபெற்றது . நூலில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு பட்டவர்களால் ஆராயப்பட்டது. இந்நிகழ்வு மெய்நிகராகவும் நடை பெற்றது.

வைத்திலிங்கம் ஈழலிக்கம் அவர்கள் நூலின் முதல் இரு கட்டுரைகளான சிந்தனா வளர்ச்சி, இருக்கு வேதம் ஆகியவை பற்றி பேசினார்.

செ .பாஸ்கரன் உடல் மெய் என்ற திருமூலர் கருத்து பற்றியும் காமசூத்திரம் பற்றியும் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். திருநந்தகுமார் அவர்கள் குருசிஷ்ய பாரம்பரியம் தசாவதாரம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். கானா பிரபா இந்துமத சிந்தனை வளர்ச்சியிலே வானியல் பற்றிய ஆய்வு மூலம் கிரகங்கள் பற்றிய அறிவை துல்லியமாக அறிந்திருந்தமையையும் அதன் வெளிபாடாக கி.மு 600 ல் வாழ்ந்த கணாதர் அதுபற்றிய அறிவின் மூல கர்த்தாவாக கருத படுகிறார் என்பதுபற்றியும் கூறினார்.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 3 : போரின் குழந்தை

 பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை


செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.

 ”உனது பெயர் லோம் தானே?”

 அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.

 “இல்லை!”

 அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

 “அப்ப உனது அப்பாவின் பெயரா அது?”

 “இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது?”

 “வான் மான் நூஜ்ஜின்.”

 “அவன் சொல்லுற எதனையும் கணக்கில் எடுக்காதே! அவன் உனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லித் தருகின்றான்.”

சிறிது நேரம் இருவருக்குமிடையில் உரையாடல் நடக்கவில்லை. பின் அவளே பேச்சைத் தொடக்கினாள். புதியதோர் அறிமுகம் அவர்களுக்கிடையே நிகழ்ந்தது.

தர்மம் தலைகாக்கும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 நள்ளிரவு நேரம்,ஒரே கும்மிருட்டு,முகம் உடல் எல்லாவற்றையும்


மூடிக் கொண்டு ஓர் உருவம் வருகிறது,அதன் இரு சப்பாத்து முனையிலும் இரண்டு சிறு விளக்குகள் எரிகின்றன, இப்படித் தொடங்குகிறது தர்மம் தலைகாக்கும் படம்.ஆங்கிலப் பட பாணியில் தொடங்கும் படத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள், அதனைத் தொடர்ந்து டாக்டர் சந்திரன் தனது மருத்துவ வேலையை விட்டு விட்டு கொலைகாரனை

வேட்டையாட புறப்படுகிறார்.அதே சமயம் சிவகாமி என்ற பெண்ணின் காதலும் , அவள் தந்தை சதானந்தத்தின் தொடர்பும் ஏற்படுகிறது.சதானந்தம் மூலம் மணி,அவன் தங்கை இருவரும் அறிமுகமாகிறார்கள்.இவர்கள் எவருக்கும் சந்திரன் கொலைகாரனை தேடி அலைவது பிடிக்கவில்லை. ஏன்,என்ன காரணம்!


தொடர்ந்து எம் ஜி ஆரின் நடிப்பில் மளமளவென்று படங்களை தயாரித்து வெளியிட்டுக்கு கொண்டிருந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் 1963ம் வருட ஆரம்பத்தில் உருவாக்கிய படம் தான் தர்மம் தலைகாக்கும்.படத்தில் டாக்டர் சந்திரனாக ராமச்சந்திரன் நடித்தார்.
பணக்கார நோயாளியிடம் மருத்துவக் கட்டணம் வாங்கி அதை ஏழை தொழிலாளிக்கு கொடுத்து உதவுவது,பெண் கேட்டு வந்த இடத்தில் நாணி கோணுவது,தேவர்,அசோகன் இருவருடனும் ஆக்ரோஷமாக மோதுவது,தர்மம் தலைகாக்கும் என்று நிரூபிப்பது, என்று பலவிதத்தில் ரசிகர்களை கவர்கிறார் அவர்.அவருக்கு ஜோடி சரோஜாதேவி,ஆடிப்பாடி ,காதலித்து ,இடையே கண்ணீர் சிந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர்களுக்கு ஈடு கொடுப்பவர் எம் ஆர் ராதா.படம் முவதும் வந்து நிறைகிறார் .வயதானவருக்கு ஏற்படும் பெண் சபலத்தை அருமையாக வெளிப்படுத்துகிறார்.அசோகன் இருக்கிறார் ஆனால் களையிழந்து காணப்படுகிறார்.இவர்களுடன் எம் வி ராஜம்மா,வி கே ராமசாமி,ஜெமினி சந்திரா,ஜெமினி பாலு,தேவர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடித்த படங்களுக்கு வழமையாக வசனம் எழுதும் ஆரூர்தாஸ் இந்த படத்துக்கு எழுதவில்லை.இதற்கு முன் தேவர் எடுத்த குடும்பத் தலைவன் படத்தின் போது ஆரூர்தாசுக்கும்,தேவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்தப் படத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சிந்துவின் தைப்பொங்கல் வாசிப்புப் பகிர்வு


தலைமை:   மைதிலி தயாநிதி

 

நூல் வாசிப்பு:      ஜெயா & நிலவன் சந்திரன்

 

கருத்துரைப்போர்:   நீதன் சண்,


                                 இனிதா சுப்பிரமணியம்

 

                                 லெ. முருகபூபதி,   


                                கோதை அமுதன்


                                இலங்கதாஸ் பத்மநாதன்


                                ஜலஜா சுவர்ணன்


                                ஒளவை விக்னேஸ்வரன்

 

Please join on Zoom: bit.ly/thaipongalbook

 

கனடா :ஜனவரி 15,  6:00pm-7:00pm

இலண்டன் :ஜனவரி 15,  11:00pm-12:00am

ஐரோப்பா: ஜனவரி 16,  12:00am-1:00am

அவுஸ்ரேலியா: ஜனவரி 16,   10:00 am-11:00am

 

 

 

ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா கண்ணே ! அவதானி


பல வருடங்களுக்கு முன்னர்,  ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்தனா ஜனாதிபதியாகவும் பிரேமதாச பிரதமராகவும் பதவி வகித்தனர்.

அப்போது பிரேமதாச,  கொழும்பு கெத்தாரமையில் ஒரு விளையாட்டுத் திடலை திறந்து வைத்துவிட்டு உதைபந்தாட்டம் ஆடினார்.

அவரது மனைவி ஹேமா பிரமேதாச,  ஒரு விளையாட்டுத் திடலில் நெட்போல் விளையாடினார்.

திருமதி அழகுராணி எனப்பெயரெடுத்திருந்த தற்போதைய கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கா  தலையிடி மாத்திரை  பெனடோல்  குறித்த  பத்திரிகை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.

இவற்றை அவதானித்த ஒரு கருத்துப்பட  ஓவியர்,    பிரேமாட்ட


ஃபுட்போல்,   ஹேமாட்ட  நெட்போல்,  ரோஸிட்ட பெனடோல், அபிட்ட பொலிடோல்  என எழுதியிருந்தார்.

அதாவது அவர்கள் மூவருக்கும்  ஃபுட்போல்,  நெட்போல், பெனடோல் இருக்கிறது. மக்களாகிய எமக்கு கிருமிநாசினியான பொலிடோல்தான் இருக்கிறது என்பதே அதன் தமிழ் அர்த்தம்.

தற்போது சமகாலத்தில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பட்டினிச்சாவையும் எதிர்நோக்கியிருக்கும்போது, ( ஒரு சிறுவன் பட்டினியால் இறந்து கிடந்த செய்தியை அறிந்திருப்பீர்கள் .  ஏராளமான மாணவர்கள்  காலை உணவின்றியே பாடசாலைகளுக்கு வருகின்றனர் ) அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் கால கட்டத்தில், பால்மா தட்டுப்பாட்டினாலும் விலையுர்வினாலும் பல ஏழைகளின் வீடுகளில் பால் தேநீரே இல்லை என்ற நிலையில்,  கொழும்பு மாநகர மேயர் திருமதி ரோஸி சேனநாயக்கா தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கிறிஸ்மஸ் – புத்தாண்டு கொண்டாட்டத்தை பல்வேறுவகையான தின் பண்டங்களுடன் ஆடம்பரமாகக் கொண்டாடியிருக்கிறார்.

இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மொட்டுக் கட்சியைச்சேர்ந்த ராஜபக்‌ஷவினர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களில் அரசியல்வாதிகள்  எவருமே பட்டினி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தவர்கள்.  நாட்டில் வறுமையை ஒழிப்போம் எனச்சொல்லிக்கொண்டு மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வந்தவர்கள்.

மீண்டும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலின்போது வாக்குப்பிச்சை கேட்டு வரப்போகிறவர்கள்.

அன்று 1980 களில்  ரோஸி சேனநாயக்கா, தலையிடிக்கு பெனடோல் உகந்தது என போஸ் கொடுத்த விளம்பரத்தை பார்த்தோம். தற்போது மக்கள் தலையிடிக்கும் பெனடோல் வாங்க வழியின்றி தவிக்கும்போது,  அவர் தடல்புடலாக விருந்து நடத்தி,  பணம் படைத்த பிரமுகர்களின்  வயிற்றுக்கு அறுசுவை உணவு விருந்து படைக்கின்றார்.

அதற்கு செலவிட்ட பணம் அவரது தனிப்பட்ட சொந்தப்பணமா, அல்லது மாநகர சபைக்கு மக்கள் செலுத்திய வரிப்பணமா…? என்பதை யார்தான் கேட்டுத் தெரிந்துகொள்வது.

எழுத்தாளர் ( அமரர் ) காவலூர் ஜெகநாதன் நினைவு சிறுகதைப்போட்டி.

 


நூல் அறிமுகம்: குழந்தைகளுக்கான எளிய நடையில் பஞ்சகல்யாணியின் அழகிய உலகம் முருகபூபதி


இலக்கியப்படைப்புகளில், குழந்தைகளுக்கான பிரதிகளை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது எனச்சொல்வார்கள்.  அதற்கு குழந்தைகளின் உளவியல் தெரிந்திருக்கவேண்டும்.

பெரும்பாலும் குழந்தை இலக்கியம் படைப்பவர்கள் பெரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாரதி முதல் அழ. வள்ளியப்பா வரையில் மாத்திரமின்றி, அதன் பிறகும் குழந்தை இலக்கியங்களை , குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் பெரியவர்கள்தான்.

இவர்கள் தமது வயதையொத்தவர்களுக்கு ஏதேனும் எழுதினாலும்,


குழந்தைகளுக்காக எழுத முன்வரும்போது, குழந்தைகளாகவே மாறிவிடவேண்டும்.

அவ்வாறுதான்  ஒரு குழந்தை இலக்கியம்படைத்திருக்கும் பஞ்சகல்யாணி என்ற மருத்துவரை அவதானிக்கின்றேன்.  இவர் எழுதி, யாழ்ப்பாணம் – அல்வாய் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள அழகிய உலகம் என்ற சிறிய நூலை  ( 56 பக்கங்கள்தான் ) அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் அவர்கள் எனக்கு படிக்கத்தந்தார்.

நாமெல்லோரும் ஒரு காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து வந்தவர்கள்தான்.  அந்தப்பருவத்தில் அனைவருக்கும் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகள் கோழி, சேவல், குருவி, காகம், புறா, கிளி,   நாய், பூனை, முயல், ஆடு, மாடு என்பவைதான்.

இவைதவிர வானத்தில் தவழும் வட்ட நிலாவும் விருப்பத்திற்குரியதாகவே இருக்கும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பிராணிகளையும் வானத்தில் ஒளிரும் நிலாவையும் காண்பித்தே உணவூட்டுவார்கள்.  உணவருந்த மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு காண்பித்து வேடிக்கையான கதைகளைச் சொல்லி உணவூட்டினால், அவர்கள் சாப்பிட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், அவ்வாறு செய்வார்கள்.

அத்தகைய குழந்தைகளின் உலகம் அழகானது. 

பஞ்சகல்யாணி, அத்தகைய உலகத்தையே இந்த நூலின் மூலம் காண்பித்திருக்கிறார்.  தற்போது இலங்கை வடமராட்சியில் மருத்துவராக பணியாற்றும் பஞ்சகல்யாணி, தனது சிறுவயதுப் பராயத்திலிருந்தே வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர் என அறிகின்றோம்.

புலோலியில் பிறந்திருக்கும் பஞ்கல்யாணி, தமது குழந்தைப்பருவத்திலேயே  மலர்கள், மரங்கள், பறவைகள், வீட்டு மிருகங்கள் மீது நேசம் கொண்டிருந்தவர். இயற்கையை ரசித்தவர். அதனால், அவரால் இத்தகைய குழந்தை இலக்கியம் படைக்க முடிந்திருக்கிறது.

பெற்றோர்களிடமிருந்து புத்தகங்களை பெற்று வாசித்து, தனது வாசிப்பு அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டிருக்கும் பஞ்சகல்யாணி, தனது பாடசாலைக்காலத்தில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி பரிசில்களும் பெற்றவர்.  பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயிலும்போது  அங்கு வெளியான நாடி என்னும் இதழில் கதைகள், கவிதைகள் படைத்திருப்பவர்.

இந்நூலில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால்,  இதற்கு முகப்பு ஓவியம் வரைந்திருப்பவர் பஞ்கல்யாணியின் ஆறுவயதான குழந்தை – செல்வ மகள் புராதனி.

தனது என்னுரையில் பஞ்சகல்யாணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

இலங்கைச் செய்திகள்

 ஐந்து தமிழ் கட்சிகளுடன் புதிய கூட்டணி உதயம்

எதிர்வரும் 25 வருடங்களுக்கான புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது சுதந்திரதினம்

வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

கோட்டாபய, மஹிந்த உள்ளிட்டோருக்கு கனடா தடை விதிப்பு

5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அறிவிப்பு; இன்று ஒப்பந்தம் கைச்சாத்து


ஐந்து தமிழ் கட்சிகளுடன் புதிய கூட்டணி உதயம்

யாழ்ப்பாணத்தில் இன்று கைச்சாத்து

பிரதான 05 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வதென முடிவு செய்துள்ளன.

இது தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று (13) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

உலகச் செய்திகள்

கொவிட் தகவலை தரும்படி சீனாவிடம் சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்து 

சர்ச்சைக்குரிய கருதினால் ஜோர்ஜ் பெல் காலமானார்

ஹரியின் சுயசரிதையினால் அரச குடும்பத்தில் சிக்கல்

பைடன் அலுவலகத்தில் இரகசிய ஆவணம் மீட்பு

ரொக் அன்ட் ரோல் பாடகரான எல்விஸ் பிரெஸ்லிறின் ஒரே மகள் மரணம்


கொவிட் தகவலை தரும்படி சீனாவிடம் சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்து 

கொவிட் தொற்று பரவல் பற்றிய தகவல்களை தரும்படி உலக சுகாதார அமைப்பு சீனாவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருப்பதோடு கொரோனா தொற்றின் புதிய திரிபுக்கு எதிராக போராடி வரும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை பாராட்டியுள்ளது.

பரமட்டா பொங்கல் - 2023

 .



எதிர் வரும் ஜனவரி மாதம் 21ம் திகதி சனிக்கிழமை பரமடடா பொங்கல் நிகழ்வு சிட்னியில் .