என்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன் - கானா பிரபா

.



சிட்னியில் இருந்து சிங்கை நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் ஏறுகிறேன். இருக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்ததும் முதல்வேலையாகத் தேடியது அந்த சிங்க்ப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காண்பிக்கவிருக்கும் படங்களின் பட்டியல். தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மொக்கைப்படங்களான வேங்கை, மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்று விபரமிடப்பட்டிருந்தது. அலுத்துச் சலித்து மேலும் ஏதாவது தேறுகிறதா என்று பக்கங்களைப் புரட்டினேன். Pancham Unmixed என்ற தலைப்பில் இசைமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த விபரணச்சித்திரம் ஒன்று இருப்பதாகப் போடப்படிருந்து. சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டால் போல எதேச்சையாக நிகழ்வது போலத்தான் இதுவும். காரணம் என் பயணத்துக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஆர்.டி.பர்மன் இசையில் இறுதியாக வெளியான 1942 A Love story படத்தின் பாடலான குச் நா கஹோ பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று மனம் உந்தித் தள்ள சில பத்துத் தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன், பல வருஷங்களுக்குப் பின் கேட்கும் போது ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஆசை தீர உச்சி மோந்து கொண்டாடும் தாய்போல உணர்வு.
1995 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகப் படிப்பில் நாட்களை நெட்டித் தள்ளியவேளை, இப்போது போல அப்போதெல்லாம் இணைய வானொலிகள்,நண்பர்கள் வாசனையே இல்லாத வேளை ஒரு வட இந்திய மளிகைக்கடையில் சரக்குப் பொட்டலங்களுக்கு மேல் தூசிபடர்ந்திருந்த பொம்மையாக 1942 A Love story படத்தின் ஒலிநாடாப்பேழையைக் கண்டு, (கையில் அப்போது காசு புழங்காத நேரம் வேறு) அந்தப் படம் பற்றி அப்போது விகடனில் வந்த கவர் ஸ்டோரி கொடுத்த பின்னணியால் மட்டுமே வாங்கிக் கேட்டிருந்தேன். அப்போது தான் ஆர்.டி.பர்மன் என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருப்பதே தெரிந்திருந்தது எனக்கு. ஊரில் இருக்கும் போது இலங்கை வானொலி வர்த்தக சேவையில் "தம் மரே தம்" பாடலை இவர் தான் இசைத்திருந்தார் என்று தெரியாது கேட்டிருந்தது வேறு விஷயம். அப்போதெல்லாம் எங்களை ஆக்கிரமித்திருந்தது இளையராஜா என்ற மந்திரம். நாளாக இளையராஜாவை என்ற எல்லைக்கு அப்பாலும் இசை மேதைகள் இருக்கின்றார்கள் என்று புரியவைத்தது 1942 A Love story.

உயிர்க்கும் உண்மைகள் 1 - நோர்வே நக்கீரா

.
மதவேற்றுமைகளில் ஒற்றுமை (மதங்கள் ஒன்றே என்பதற்கான பதிவு)

அவதாரம் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வருபவர் என்று பொருள் என்றால் இறங்கி வருபவனுக்கு ஊடகம் தேவைப்படும். வானத்தில் இருந்து நேரடியாக வந்தாலும் அண்டவெளி எனும் ஊடகம் தேவைப்படும். யேசு, புத்தர், இராமர், நபி, அனைவரும் இந்திரிய, சூலகத் தொடர்புடையவர்களே. இவைவும் ஊடகமே. அப்படி என்றால் அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்பது "இறங்கி வருதல்" என்று மட்டுமே என்று தான் பொருள் கொள்ள முடியும். தன் உயர்நிலையில் இருந்து மனிதநிலைக்கு தாழ்ந்து வருதலாகும். விஸ்ணு இராமனாகவும், கர்த்தர் யேசுவாகவும், அல்லாவின் தூதனாக நபிகளையும் கருதலாம்.

அவதாரம் என்பதை வடமொழியான சமஸ்கிருதத்தில் அவ்வுத்-தார் என்னும் இருசொற்களின் இணைப்பே ஆகும். இதை வானத்தில் இருந்து அண்வெளி எனும் ஊடகத்தினூடாகவும் இறங்கி வரலாம். தாயின் சூலகத்தில் இருந்தும் இறங்கி வரலாம் என்று ஏன் கொள்ள முடியாது? தெய்வநிலையில் இருந்து மனிதராக தரமிறங்குதலை அவதாரம் எனலாம். 

இன்று பல அறிவுசார் இஸ்லாமியர்கள் பகவதம், கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளை ஒத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.  அவர்கள் கல்கி அவதாரம் என்பது நபிகள் நாயகமே என்பதை நிரூபிக்க முயல்கின்றனர்.

மகாபாரத பாண்டவர் சபையில் அடித்துக்கொல்லப்பட்ட "துணிச்சலான ரிஷி" சார்வாகன் மறைந்தார். - முருகபூபதி

.
 மகாபாரத  பாண்டவர்  சபையில்  அடித்துக்கொல்லப்பட்ட  "துணிச்சலான  ரிஷி"  சார்வாகன்  பெயரை  புனைபெயராக்கிய    இலக்கிய  ஆளுமை  மறைந்தார்.
தொழுநோயாளருக்கு  சிகிச்சையளித்த  மனிதநேய  மருத்துவர்.  மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும்  பெற்றவர்.
வணிக   இதழ்களில்  எழுதாமலேயே    இலக்கிய  உலகில்   தன்னை தக்கவைத்துக்கொண்ட  சார்வாகன்.
                                       

சமகாலத்தில்  மறைந்தவர்களின்  அறையினுள்தான்  வாழ்கின்றேனா....?
இந்தக்கேள்வியை  எனக்கு  நானே   கடந்த  ஆண்டின்  தொடக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டே  இருக்கின்றேன்.  ஆனால்,  இந்தக்கேள்விக்கு  பதில் இல்லை.   இந்த  ஆண்டின்  இறுதியும்  மறைந்தவர்களின்  அறையினுள்தான் என்னை  முடக்கிப்போட்டிருக்கிறது.   எனது  அறையிலிருக்கும்  கணினியை திறக்கும்பொழுதே   பதட்டம்தான்  வருகிறது.
துயில்  மறைந்து  பல   மாதங்கள்.   துயரம்  கப்பிய  சிந்தனைகளும்  அப்படியே  பல  மாதங்களாக  ஓடுகிறது.   முற்றுப்புள்ளியில்லாத  நீண்ட வசனங்களையே  எனது  அறையிலிருந்து  எழுதுகின்றேன்.   பழகியவர்கள் தெரிந்தவர்கள்  இலக்கியப்பாதையில்  இணைந்து  வந்தவர்கள் ஒவ்வொருவராக  விடைகொடுக்கும்பொழுதும்  அவர்களின்  படங்கள் நிரம்பியிருக்கும்   எனது  கணினியை  தினமும்  பார்க்கும்பொழுதும் நீண்டபொழுதுகள்   தினமும்  செலவிடும்  இந்த  அறை   எனக்கு மறைந்தவர்களின்   அறையாகவும்,   அவர்கள்  என்னோடு  பேசிக்கொண்டிருக்கும்    அறையாகவும்  மாறிவிட்டது.
 கடந்த  20  ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை   அவுஸ்திரேலியா  மெல்பனில் எமது  அருமை   இலக்கியச்சகோதரி  அருண். விஜயராணியை  அவருடைய இறுதிப்பயணத்தில்  வழியனுப்பிவிட்டு  மறுநாள்  21  ஆம்  திகதி  வீடு  திரும்பி  அவருடைய   இறுதி    நிகழ்வுகளை  மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கையில்  அடுத்த  செய்தி  தமிழ்நாட்டிலிருந்து தளம்  ஆசிரியரும்  மூத்த  எழுத்தாளர்  அகிலனின்  மருமகனுமான  பா. ரவியிடமிருந்து  வருகிறது.

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - 9 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
யோகினி இரத்தினசபாபதி 


எனது நாட்டிய நாடகம் “உதயம்” இலங்கை, சென்னை, சிட்னி, என பல நகரங்களிலிலே பல தடைவ மேடை ஏறி பலரின் பாராட்டையும் பெற்றது. இந்த நாட்டிய நாடகம் ஒரு சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டது.
ஒரு தடைவ கொழும்பு இராமகிருஷ்ணா மண்டபத்தில் நண்பர் பேராசிரியர் சிவத்தம்பி கேட்டதற்கிணங்க “உதயம்” மேடையேறியது. நாட்டியத்திலே வேடர்கள் மிருகங்களை ஒவ்வொன்றாக கொன்று தீர்த்தவண்ணம் இருந்தமையால் புத்திசாலியான குரங்கு தலைவன் தலைமையில் மிருகங்கள் கூட்டம் கூடுகிறது. மிருகங்கள் ஒன்று சேர்ந்து வேடனை கொல்வதென திட்டம் தீட்டப்படுகிறது.
பாடல்
“நாங்கள் வாழும் இந்தக் காட்டில்
நாடு கடந்தவன் வந்தது போல
வேடன் நம்மை கொல்லலாமா?”

மலரும் முகம் பார்க்கும் காலம் 25 - தொடர் கவிதை

.
கவிதையை எழுதியவர் மீரா குகன் ஜேர்மனி

கண் முன்னே துயர்துடைத்து மீளும்
கருத்தை கருவிலே செதுக்கி வந்தாலும் 
காத்திருந்த கணநேரத்தில் காவு கொண்ட
களத்தில் பல இன்னுயிர் பலி கொடுத்தும் 

கொண்ட கொள்கையை இன்று 
கொண்டாட நேரமின்றி காற்றில் பறக்க 
கோணல் வழிப் பாதையில்
கொக்கரிக்கும் வீண் மானிடமே 

சொந்தங்கள் தனை விலக்கி
சோதனைகள் எனும் மாயையில்
சோகம் எனும் திரைமறைவில்
சோபிக்கவும் மறந்த நிலையில் 

சுயநல போர்வையில் சுற்றத்தை மறந்து
சுயம் தனை வாழ்வோட்டத்தில் இழந்து 
சுகங்கள் ஒன்றே இன்று குறியாக
சுதந்திரத்தை நாமே பறிகொடுத்த பின்னும்  

மாயை அகலும் இறுதி நேரம் வந்தாலும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
மகத்துவம் அறிந்த அந்த ஒரு கணம்
மாந்தவர் மாயிந்தும் வாழ்வர் என்றென்றும்  


பேராசிரியர் தமிழண்ணல் மறைவு!

.

 மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள்இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன்தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றிதம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார்பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் உடல் நல்லடக்கம் வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில் மதுரையில் நடைபெற உள்ளது.

பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார்தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர்தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர்.

பிறப்பு

திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
 " நெஞ்சில்  நிலைத்த  நெஞ்சங்கள் "  தொடருக்கு  களம் தந்த   ஈழநாடு  குகநாதன்.

   நதி நடந்தே   சென்றிட    வழித்துணைதான்  தேவையா...? 


                                                                                             
பாடசாலையில்  உயிரியல்   படித்தபொழுது  ஒரு  தாவரம் உயிர்வாழ்வதற்கு  என்னவேண்டும்...?  என்று  ஆசிரியர் கே ட்டபோது,  மண்,  நீர்,  காற்று,  சூரியவெளிச்சம்  என்று  விளக்கினார்.
எங்கள்  வீட்டில்  ரோஜாச் செடிகளையும்  கத்தரி,   தக்காளிச் செடிகளையும்  பாட்டியும்   அம்மா,  அக்காவும்  வளர்த்தார்கள்.   தாத்தா ஒரு  மல்லிகைச் செடியை  வளர்த்து  அதற்கென  பந்தலும்  போட்டார்.   அத்துடன்  நந்தியாவட்டை   முதலான  பூங்கன்றுகளும் வளர்த்தார்.   அக்கா  வீட்டில்  பயன்படுத்தப்பட்ட  முட்டையின் கோதுகளையும்  தேயிலைச்சாயத்திலிருந்து  பெறப்பட்ட சக்கையையும்   ரோஜாச்செடிகளுக்கு  உரமாகப் போட்டபொழுது தாத்தா  ஒரு நாள்  என்னையும்   அழைத்துக்கொண்டு அடுத்ததெருவிலிருந்த   சுருட்டுக் கொட்டிலுக்குச்சென்று  அங்கு சுருட்டு  கோடாவுக்கு  அவிக்கப்பட்டு  கழிவாகக்கிடந்த புகையிலைக்காம்புகளை  ஒரு  சாக்குப்பையில்  எடுத்துவந்து  தான் வளர்த்த   செடிகளுக்கு  அருகில்  கிடங்குகள்  வெட்டித்தாட்டார்.
ஏன்...? என்று  கேட்டதற்கு,   இந்தச் செடி கொடிகள் மரங்களுக்கெல்லாம்  இதனைப்போட்டால்  நன்றாக  செழித்துவளரும் என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்தபின்னர்  வீட்டின் சமையலறைக்கழிவுகளை  சேமித்து  மரம்,  செடிகளுக்கு  பசளையாக போடுவதைப்பார்த்து   நானும்  அந்தப்பழக்கத்தை  தொடர்கின்றேன். இதனை   ஆங்கிலத்தில்  கொம்பஸ்   என்பார்கள்.

உலகச் செய்திகள்

பாப்பரசரின் ஆசிர்வாதத்தையடுத்து ஒரு வருடத்தில் புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்த சிறுமி 


மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி

ஐ.எஸ். தீவிரவாதிகளின் காதல் வலையில் சிக்­கிய இந்­திய விமா­னப்­படை வீரர் கைது

பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்: 4 தீவிரவாதிகள், 2 விமானப் படை வீரர்கள் பலி




இலங்கைச் செய்திகள்


பணிப்பெண்களாக 29 871 பேர் வெளிநாட்டில்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்த சில்வா அழைப்பானை

பெப்­ர­வ­ரியில் இலங்கை வரு­கிறார்

பிசராந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

நாமலிடம் விசாரணை

பணிப்பெண்களாக 29 871 பேர் வெளிநாட்டில்

28/12/2015 கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து 14871 பெண்களும், 2015ம் ஆண்டு சுமார் 15000 பணிப்பெண்களுமாக 29871 பெண்கள்  கடந்த இரு ஆண்டுகளில் மாத்திரம் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளனர்.


விடிவிளக்காய் இருக்குதன்றோ ! - ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...)

.


     கண்ணபிரான் யேசுபிரான்
         கஷ்டமதில் அவதரித்தார்
    எண்ணரிய சிந்தனைகள்
         எமக்களித்து நின்றார்கள்
    மண்ணுலகில் உள்ளவர்கள்
         மனந்திருந்த வேண்டுமென்று
    உண்மைநிறை சேதிகளை
         உவந்தளிந்து நின்றாரே !

     ஆடுமாடு கொட்டிலவர்
         அண்டிநின்ற இடமாகும்
     அன்னையது நிழலிருந்து
         அனைத்துமவர் ஆற்றினரே
      அன்புநிறை உள்ளமொடு
          அவர்தொண்டு அமைந்ததுவே
      அண்டிவந்தோர் அனைவருக்கும்
           அடைக்கலமும் ஆகினரே !

தமிழ் சினிமா



பசங்க-2

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது அரிது. அதிலும் குழந்தைகளின் பிரச்சனைகளை கூறும் படங்கள் அரிதிலும் அரிது. அந்த வகையில் பசங்க, மெரீனா படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் குழந்தைகளுக்கான ஒரு புது உலகத்தை இந்த பசங்க-2 படத்தின் மூலம் படைத்துள்ளார்.
படத்திற்கு கூடுதல் பலமாக முன்னணி நடிகர் சூர்யாவே இப்படத்தை தயாரித்து நடித்திருப்பது படத்திற்கு எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது.